வவுனியா – புளியங்குளத்தில் இன்று (02.12.2019 ) அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே ப லியாகியுள்ளார்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரு இளைஞர்கள் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஏ9 வீதியில் வைத்து குறித்த மோட்டார்சைக்கிள் மாடொன்றுடன் மோதிய நிலையில் தூ க்கி வீ சப்பட்ட இரு இளைஞர்களும் எதிரில் வந்த பேருந்துடன் மோ தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வத்தளையை சேர்ந்த 21 வயதுடைய கிருபாகரன் துஸ்யந்தன் என்பவரே ப லியாகியுள்ளதுடன், அவருடன் பயணித்த ரஞ்சித் குமார் ப டுகா யமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இளைஞர்களின் மோட்டார் சைக்கிளில் மோதுண்ட மாடும் ப லியாகியுள்ளது.
நாடளாவீய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் டிசம்பர் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
இம்முறை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பரீட்சாத்திகள் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ளனர்.
இதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள எந்தவொரு பரீட்சை நிலையங்களிலும் பரீட்சைக்கு தோற்றலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வவுனியா மாவட்டத்திலிலுள்ள பரீட்சை நிலையங்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காலை 7.30 மணியளவிலேயே அதிகளவான மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்குள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள வவுனியா மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பரீட்சை நிலையங்கள் தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணை மறுப்பு தெரிவித்துள்ளது.
வவுனியா, அண்ணாநகர் பகுதியில் சகோதரர்களுடன் இணைந்து வீட்டில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாணவன் சிறைச்சாலையில் இருந்து பரீட்சை எழுதுவதற்கு வவுனியா பதில் நீதவான் ஆருரன் அனுமதி வழங்கியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, அண்ணாநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதையல் தோண்டியதாக மூன்று சகோதரர்களை வவுனியா பொலிசார் நேற்று (01.12.2019) காலை கைது செய்திருந்தனர். அதில் ஒருவர் இம்முறை கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயது மாணவன் ஆவார்.
இந்நிலையில் குறித்த மூவரையும் வவுனியா பதில் நீதவான் ஆருரனின் இல்லத்தில் முற்படுத்திய போது குறித்த மாணவன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மாணவன் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளதால் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு பதில் நீதவானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
குறித்த வழக்கினை கவனத்தில எடுத்த பதில் நீதவான் பிணை விண்ணப்பத்தை நிராகரித்ததுடன், சிறைச்சாலையில் இருந்து பாடசாலைக்கு சென்று பரீட்சை எழுத அனுமதி வழங்கினார். அதனடிப்படையில் குறித்த மாணவன் இன்று பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
ஒரு ப யங்கரமான கொ லை வ ழக்கில் த ப்பிய கு ற்றவாளியை, திருமணம் செய்வதாக கூறி பெண் பொலிஸ் ஒருவர் சாமர்த்தியமாக கை து செய்துள்ளார்.
பால்கிஷன் சோபே (28) என்கிற கு ற்றவாளி மத்திய பிரதேச – உத்திரபிரதேச எல்லைகளில் கொ லை, கொ ள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக கு ண்டர் சட்டம் பாய்ந்து 15க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அவர் ம றைந்திருக்கும் இடத்தை கண்டறிந்து, பொலிஸார் கைது செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் தொடர் தோல்வியையே சந்தித்துள்ளன.
இதனால் பால்கிஷன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10000 சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதற்கிடையில் பால்கிஷனுக்கு பெண் தேடிக்கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பெண் ஆய்வாளர் மாத்வி அக்னிஹோத்ரி, புது செல்போன் எண்ணில் பால்கிஷனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மூன்றே நாட்களில் மாத்வியின் குரலில் ம யங்கிய பால்கிஷன் திருமணம் செய்துகொள்வதாக சம்மதம் தெரிவித்துள்ளார். அதற்கு முன் ஒருமுறை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனையடுத்து இருவரும் கிராமத்தில் உள்ள ஒரு சிறிய கோவிலில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பால்கிஷன் எப்போதும் கையில் து ப்பாக்கியுடன் இருப்பான் என்பதால், மாத்வியும் தன்னுடைய கைப்பையில் ஒரு து ப்பாக்கியுடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் மாத்விவை சந்திப்பதற்காக பால்கிஷன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்துள்ளான்.
அப்போது அங்கு மறைந்திருந்த பொலிஸார், சட்டென்று அவனை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவன் கையில் வைத்திருந்த து ப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தியாவில் பிரியங்காவின் ம ரணத்தை தொடர்ந்து 35 வயது பெண் ஒருவரின் ச டலம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், அவரின் ம ரணம் குறித்து பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற இளம் பெண் கடந்த வெள்ளிக் கிழமை நான்கு பேர் கொண்ட நபர்களால் பா லியல் து ஷ்பிர யோகம் செய்யப்பட்டு, கொ டூரமான முறையில் எ ரித்து கொ லை செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் உச்சகட்ட த ண்டனையாக ம ரண த ண்டனை கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர், இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பிரியங்கா ரெட்டி இறந்து கிடந்த தொலைவில் இருந்து சற்று தூரம் Shamshabad பகுதியில் 35 வயது பெண் ஒருவர் எ ரிந்த நிலையில் ச டலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
ஒரே நாளில் இரண்டு பெண்கள் உடல் கருகி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பிரியங்கா ரெட்டி விவகாரம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் இப்படி ஒரு பெ ண்ணின் ச டலம் கண்டுபிடிக்கப்பட்டதால், பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர், அங்கிருந்த சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்தனர்.
அப்போது இ றந்ததாக புடவை கட்டிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட பெண், அதே புடவையில் அங்கிருக்கும் கோவிலுக்கு சென்றுவிட்டு, திரும்பிய அந்த பெண்ணின் கையில் ஒரு பிளாஸ்டிக் பை, மண்ணெண்ணய் பாட்டில் ஒன்றும் இருந்துள்ளது.
அதன் பின் அப்பெண் தன்னைத் தானே தீ யிட்டு கொ ளுத்தி த ற்கொ லை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமின்றி அப்பெண்ணை கோவிலில் பார்த்த நபர், அவர் கோவிலின் உள்ளே உட்கார்ந்து அழுது கொண்டிருந்ததாக கூறியுள்ளார். அப்பெண் மன உ ளைச்சலுக்கு ஆளாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் பொலிசார் இது த ற்கொ லை என்று தெரிவித்திருப்பதாகவும், இருப்பினும் அப்பெண்ணின் பி ரேத ப ரிசோதனை அறிக்கை வந்த பின்னர் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
22 அடி உயர பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 19 பயணிகள் உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொஸ்கோவிலிருந்து கிழக்கே 3,930 மைல் தொலைவில் உள்ள குயங்கா ஆற்றில், ஓட்டுநர் உட்பட 43 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து 22 அடி உயரத்தில் இருந்து தவறி ஆற்றில் விழுந்துள்ளது.
ஆறு ஆழமற்றதாகவும், அதன் முழு ஆழமும் உறைந்திருந்ததாலும், பேருந்து பனிக்கு அடியில் மூழ்கவில்லை. விபத்திற்கு காரணம் பேருந்தின் டயர் பழுதானதாகவும், மற்றொன்று பாலத்திலிருந்து நழுவியதாகவும் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இருட்டிற்குப் பிறகும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பவத்தை நேரில் பார்வையிட்ட பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் ஒசிபோவ், 19 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் பல்வேறு காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
20 வருட அனுபவம் வாய்ந்த, மிகவும் கவனத்துடன் பேருந்தை இயக்கக்கூடிய டிரைவர், செர்ஜி குபசோவ் (43) இந்த விபத்தில் கொ ல்லப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து குறித்து கு ற்றவியல் வி சாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் வி பத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 9 பேர் ப லியாகியுள்ளனர். தெற்கு டகோட்டா மாகாணத்திலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
12 பேர் பயணித்த பிலடஸ் பிசி -12 விமானம் மதியம் 12:30 மணியளவில் சேம்பர்லினிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சியோக்ஸ் நீர்வீழ்ச்சிக்கு மேற்கே 140 மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது என தேசிய போக்குவரத்து வாரிய அதிகாரி பீட்டர் நுட்சன் கூறினார்.
இவ்விபத்தில் இரண்டு குழந்தைகள், விமானி உட்பட 9 பேர் உ யிரிழந்தனர் என உறுதிப்படுத்திய ப்ரூல் கவுண்டியின் மாநில வழக்கறிஞர் தெரசா மவுல் ரோஸ்ஸோ, உயிர் தப்பிய மூன்று பேர் சியோக்ஸ் நீர்வீழ்ச்சியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என கூறினார்.
தீவிர வானிலை நிலைமைகளில் பாதிக்கப்பட்டவர்களை மீ ட்பதற்கான, சட்ட அமலாக்க ஆண்கள், பெண்கள், பொலிஸ், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களின் வீர நடவடிக்கைகளில் பாராட்டப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், விபத்துக்குள்ளான நேரத்தில் ‘பலத்த காற்று மற்றும் பனி’ என மோசமான காலநிலை இருந்ததாக மவுல் ரோஸ்ஸோ குறிப்பிட்டார்.
மத்திய விமான போக்குவரத்து நிர்வாகத்தின் படி, விமானம் தெற்கு டகோட்டாவின் சேம்பர்லினில் இருந்து நண்பகலுக்கு சற்று முன்னதாக புறப்பட்டு, அங்கிருந்து தென்மேற்கே ஒரு மைல் தொலைவில் விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
பு லனாய்வாளர்கள் அந்த இடத்திற்கு பயணம் செய்கிறார்கள், மேலும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.எஸ்.பி விசாரணையை நிர்வகிக்கும் என தெரிவித்துள்ளனர்.
வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் பெற்றோர் தின விழாவும், கலைவிழா நிகழ்வும் முன்பள்ளி முகாமைத்துவ குழுவின் தலைவர் ப.ரவிசங்கர் தலைமையில் இன்றயதினம் இடம்பெற்றது.
பூந்தோட்டம் லஷ்மி சமேத நரசிங்கர் ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக வைத்தியர் எஸ்.பஞ்சலிங்கம், சனசமூக நிலைய செயலாளர் ந.கருணாநிதி, மயான அபிவிருத்திச் சங்கத் தலைவர் இ.பாஸ்கரன், முன்பள்ளி ஆசிரியர் சி.ராகினி பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
முன்னதாக விருந்தினர்கள் மாலையிடப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து ஏனைய கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வில் விசேடமாக மாணவர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களிற்கு சான்றிதழ்களும், வெற்றிகிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
பெங்களூரில் வேலை செய்து வந்த கேரளா காதல் ஜோடியின் ச டலம் சி தைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் மோகன் (25) மற்றும் ஸ்ரீலட்சுமி (21) என்கிற காதல் ஜோடி, பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் தனித்தனி விடுதியில் தங்கி பணிபுரிந்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் பலத்த எ திர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் பொறுமையாக பேசி வீட்டில் பெற்றோர்களை சம்மதிக்க வைக்கலாம் என முயற்சித்தாலும், ஸ்ரீலட்சுமியின் மாமா கடும் எ திர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் இருவரும் கடந்த அக்டோபர் 9ம் திகதியன்று தங்களுடைய செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, விடுதியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து ஸ்ரீலட்சுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், பல முயற்சிகள் செய்தும் காதல் ஜோடி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
நவம்பர் 23ம் திகதியன்று தன்னுடைய மாமாவிற்கு போன் செய்த ஸ்ரீலட்சுமி, ‘இதுவரை எங்களுக்கு தொ ல்லை கொடுத்ததற்கு நன்றி. இனிமேல் எங்களால் உங்களுக்கு தொல்லை இருக்காது’ எனக்கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார்.
இந்த நிலையில் 29ம் திகதியன்று கிராமப்புறம் அருகே உள்ள மரம் ஒன்றில், இருவரின் ச டலமும் சி தைந்த நிலையில், தூ க்கு க யிற்றில் தொ ங்கியுள்ளது. அப்பகுதி வழியாக சென்ற ஒருவர் இதனை பார்த்து அ திர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், உ டல்களை மீட்டு பி ரேத ப ரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இன்று காலை நடத்தப்பட்ட து ப்பாக்கிசூ ட்டில் 11 பேர் கா யமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நியூ ஆர்லியன்ஸின் French Quarter பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எல்லைக்குட்பட்ட கால்வாய் தெருவில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.21 மணியளவில் ம ர்ம நபர் ஒருவர் சரமாரியாக து ப்பாக்கி சூ டு நடத்தியுள்ளார்.
இதில் 11 பேர் கா யமடைந்திருப்பதாகவும், இருவர் மட்டும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரியங்கா ரெட்டி கொ லை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவனான சின்ன கேசவலுவின் தாய், தனது மகனை எ ரித்து கொ ல்லுங்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலா த்காரம் செய்யப்பட்டு எ ரித்து கொ லை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஷிவா மற்றும் கேஷவலு ஆகியோர் 18 வயது பூர்த்தியாகாத சி றுவர்கள் என தெரியவருகிறது.
இந்நிலையில் சின்ன கேசவலு குறித்து அவன் தாய் அளித்த பேட்டியில், என்னுடைய மகன் கு ற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால், அந்த பெண் போலவே அவனையும் எ ரித்து கொ லை செய்யுங்கள்.
அல்லது சு ட்டுக் கொ ல்லுங்கள். இல்லை என்றால் அவனை தூ க்கில் போ டுங்கள். அவன் ஒரு மிருகம் என்னுடைய மகன் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு தாயின் மகள் இல்லையா? நான் இன்று மிகவும் கஷ்டப்படுகிறேன். அந்த பெண்ணின் தாயார் மனநிலையை என்னால் உணர முடிகிறது என கூறியுள்ளார்.
பிரியங்கா ரெட்டி கொ ல்லப்பட்ட பின்னர் ப லாத்கா ரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) ப லாத்காரம் செய்யப்பட்டு எ ரித்து கொ லை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஷிவா மற்றும் சின்ன கேசவலு ஆகிய இருவரும் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் ஆவர்.
நால்வரும் காவல் நிலையத்தில் இருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் புதிய திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரியங்காவின் இருசக்கர வாகனம் பஞ்சரான நிலையில் அதை நான்கு கு ற்றவாளிகளில் ஒருவரான 17 வயது சிறுவன் ஷிவா எடுத்து கொண்டு பஞ்சர் ஓட்ட எடுத்து சென்றான்.
இந்த நிலையில் தான் பிரியங்காவை அந்த கொ டூரர்கள் ஒரு அறைக்கு தூக்கி சென்று வ லுக்கட் டாயமாக வாயில் ம துவை ஊற்றி சீ ரழித்துள்ளனர்.
பின்னர் அவரை கொ லை செய்துள்ளனர், அந்த சமயத்தில் பஞ்சர் ஒட்டிவிட்டு ஷிவா வந்தான். அப்போது ச டலமாக கிடந்த பிரியங்காவை ஷிவா வன்பு ணர்வு செய்துள்ளான். இதன் பின்னரே பிரியங்கா பெ ட்ரோல் ஊற்றி எ ரிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
வவுனியாவின் நகரை அழகுபடுத்தும் முயற்சியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் வவுனியா வர்த்தக சங்கத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகள் வவுனியா நகரசபையினரின் அசமந்தபோக்கினால் வீணாகிப் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வவுனியா நகரின் அழகை மெருகூட்டும் முயற்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தினை சூழவுள்ள பகுதியில் அழகுற யப்பான் ரோஸ் எனப்படும் அழகிய செடியினை நாட்டி பராமரித்து வந்தனர். அச் செடியின் மீது இரவு நேரங்களில் கட்டாக்காளி மாடுகள் படுத்து உறங்கி அவற்றினை சேதமாக்கியது.
அதன் பின்னர் வவுனியா வர்த்தக சங்கத்தினர் கடந்த மாதம் 28ம் திகதி வவுனியா நகரை அழகுபடுத்தி ஏனைய நகரங்களுக்கு முன்மாதிரியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் வவுனியா நகரசபையினருடன் இணைந்து (மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே) வவுனியா நகரின் வீதியின் நடுவே அழகிய மரங்களை நாட்டி வைத்திருந்தனர்.
எனினும் அம மரங்களையும் இரவு நேரங்களில் மாடுகள் சேதப்படுத்தியுள்ளது. இரு மரங்களில் முற்றிலிலும் சேதமடைந்துள்ளதுடன் ஏனைய மரங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் தினசரி பல விபத்துக்கள் இடம்பெறுவதுடன் இன்று (01.12.2019) எமது கமராவில் பதிவாகின காட்சிகளே இவை.
வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கட்டாக்காலி மாடுகளை கட்டுப்பட்டுத்துமாறு பல தடவைகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போதிலும் நகரசபையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மெக்ஸிக்கோவில் பிரித்தானியா சிறுமியை இரண்டு டொல்பின்கள் கடலுக்கு அடியில் இழுத்துச்சென்று தா க்கிய சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியது.
கேன்கன் நகரத்தில் பென் கடற்கரையில் இடம்பெற்ற டால்பின்களுடனான நிகழ்விலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. 10 வயதான பிரித்தானியா சிறுமி லேக்ஸி குடும்பத்துடன் மெக்ஸிக்கோவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு கேன்கன் நகரத்தில் இடம்பெற்ற டால்பின் நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர். இதன்போது, இரண்டு டால்பின்கள் லேக்ஸியை கடலுக்குள் இழுத்துச்சென்று தா க்கியுள்ளது.
இதைக்கண்ட லேக்ஸியின் தாய் லாரா-ஜேன் யியோ அ திர்ச்சியில் உறைந்துள்ளார். பயிற்சியாளர்களிடமிருந்து வேண்டுகோள் விடுத்த போதிலும் டால்பின்கள் தா க்குவதை நிறுத்தவில்லையாம், ஆனால் லேக்ஸி வைத்திருந்த பாடிபோர்டின் மூலம் சமாளித்து தப்பியுள்ளார்.
இதில், டால்பின்கள் க டித்து தா க்கியதால் கொ டூரமான கா யங்களுடன் லேக்ஸி உ யிர் தப்பியுள்ளார். மோசமான கடல் நிலைமைகளுக்கு உட்பட்டதால் து ன்பப்பட்ட டால்பின்கள் இவ்வாறு நடந்துக்கொண்டதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காதல் கடிதம் எழுதியதற்காக கைகால்களை ஒரே கயிற்றில் கட்டி வைத்து மாணவர்களுக்கு தண்டனை கொடுத்த ஆசிரியை பெரும் ச ர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆந்திரா மாநிலத்தன் அனந்த்பூர் மாவட்ட அரசு பள்ளியில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் நேற்று இணையத்தில் வைரலாக பரவின.
இரண்டு மாணவர்களின் கைகால்களை இருக்கையுடன் சேர்த்து கயிற்றால் கட்டி மி ருகத்தனமாக பள்ளி ஆசிரியை த ண்டனை கொடுத்துள்ளார். அதில், மூன்றாம் வகுப்பு மாணவன் காதல் கடிதம் எழுதியதற்காகவும், ஐந்தாம் வகுப்பு வகுப்பு மாணவன் தோழனின் பொருளை தி ருடியதற்காகவும் த ண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவமானது இணையத்தில் வைரலானதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் சிலர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு எ திராக வழக்கு பதிவு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் இந்த கு ற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தலைமை ஆசிரியர், “சிறார்களை நான் த ண்டிக்கவில்லை, அவர்களுடைய பெற்றோர்கள்தான் த ண்டித்தனர்” என கூறியுள்ளார். இருப்பினும், பள்ளி வளாகத்திற்குள் இந்த சம்பவம் ஏன் நடந்தது என்பதை அவர் விளக்கவில்லை.