105 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!!

 

இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை வரலாற்றில் நூற்றுக்கும் அதிக ஆண்டுகளுக்கு பின்னர் மிக குறைந்த வெப்ப நிலை நேற்று நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதற்கமைய அந்த காலப்பகுதியினுள் நுவரெலியாவில் 4.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பொதுவாக வெப்பநிலையை விடவும் 5 செல்சியஸ் குறைவான வெப்பமாக பதிவாகியுள்ளது.

1914 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30ஆம் திகதி இறுதியாக நுவரெலியாவில் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அது 3.7 செல்சியஸ் ஆகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த மாதம் இறுதி வரை நாட்டின் பல பிரதேசங்களில் வரட்சியான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய எதிர்வரும் 7 நாட்களுக்கும் நாட்டில் காலை மற்றும் இரவு வேளையில் அதிக குளிரான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் 23ஆம் திகதியில் இருந்து சற்று குளிர் குறைவாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக இன்று காலை நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனித்துளிகள் விழுந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதி கூடிய வெப்பநிலையாக 33.2 செல்சியஸ் ஹம்பாந்தோட்டையில் பதிவாகியுள்ளது. அது சாதாரண வெப்பநிலையை விட 3 செல்யஸ் அதிகமாக குறிப்பிடப்படுகுின்றது.

கொழும்பில் வீடு இல்லாதவர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்டம்!!

 

அதிர்ஷ்டம்

கொழும்பில் வருமானம் குறைந்த நிலையில் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு சொந்தமாக வீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக சமகால அரசாங்கத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் கிடைத்தது முதல் 2015ஆம் ஆண்டு வரையில் கொழும்பு நகர மக்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் மாத்திரம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

டொரிங்டன் மாவத்தை இலக்கம் 189ஆவது தோட்டத்தில் பழைமையான வீடுகளில் இருந்த மக்களை வெளியேற்றி புதிதாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரச நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் தற்போது இதற்கான அடிப்படைப் பணிகள் மாத்திரமே இடம்பெற்றிருப்பதாக பொதுமக்கள் இந்த நிகழ்வின் போது சுட்டிக்காட்டினார்கள். இதற்குப் பதிலளித்த அமைச்சர், மிக விரைவில் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார்.

உலகிலேயே அதிக காளைகள் பங்கேற்பு : கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு!!

 

சாதனை படைத்த ஜல்லிக்கட்டு

தமிழகத்தின் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி உலகிலேயே மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் 1,353 காளைகள் இங்கு அவிழ்த்துவிடப்பட்டன. இதன்மூலம் இந்தப் போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதாவது உலகிலேயே அதிக காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு இதுதான்.

இதற்கு முன்பு பாலமேடு ஜல்லிக்கட்டில் 988 காளைகள் திறந்துவிடப்பட்டதே சாதனையாக இருந்தது. இந்தப் போட்டியை காண சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்தனர். முன்னதாக, விராலிமலை ஜல்லிக்கட்டில் 2000 காளைகள் களமிறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் செல்பி எடுக்கும்போது உயிரிழந்த இளம் தம்பதி : அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!!

 

உயிரிழந்த இளம் தம்பதி

அமெரிக்காவில் சுற்றுலாதளத்தில் செல்பி எடுத்த போது கீழே விழுந்து உயிரிழந்த கேரள தம்பதி மது அருந்தியிருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் விஷ்ணு விஸ்வநாத் (29). இவர் மனைவி மீனாட்சி மூர்த்தி. இளம் தம்பதிகளான இவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு சென்றிருந்தார்கள்.

இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் Yosemite Valley என்னும் சுற்றுலா பகுதிக்கு இருவரும் சென்ற நிலையில் 3500 அடி உயரத்தில் உள்ள இடத்தில் நின்று கொண்டு செல்பி எடுத்தார்கள்.

அப்போது விஷ்ணுவும், மீனாட்சியும் கீழே விழுந்த நிலையில் இருவருக்கும் தலை, மார்பு மற்றும் வயிற்று பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தடய நோயியல் நிபுணர் வெளியிட்ட அறிக்கையில் இருவர் உடலிலும் போதை வஸ்துகள் இல்லை என தெரிவித்திருந்தார்.

ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு பிரேத பரிசோதனையில் இருவரும் மது அருந்திருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் எந்தளவுக்கு அவர்கள் மது அருந்தியிருந்தார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

இலங்கை வந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட முன்னணி தமிழ் சினிமா நடிகை!!

 

தமிழ் சினிமா நடிகை

முக்கிய சுற்றுலாத்தலமான இலங்கைக்கு விடுமுறைக்கு பலரும் வருகின்றனர். அதில் சினிமா துறை பிரபலங்களும் அடக்கம்.

சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை எமி ஜாக்சன் தற்போது இலங்கைக்கு வந்துள்ளார். அவர் ஊர் சுற்ற ஆட்டோவையே பயன்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் ஒரு பிரபல காசினோவுக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம் : கடைசியாக எழுதிய கடிதம் சிக்கியது!!

 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் அந்தோணிதாஸ் என்பவர் தன் மனைவி ஷோபனா, குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா மற்றும் தனது அம்மா புவனேஸ்வரி ஆகிய நால்வருக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அந்தோணிதாஸ் கடைசியாக எழுதிவைத்துள்ள கடிதத்தில், 12 வருடங்களாக முதுகு வலியால் அவதிப்படுகிறேன், இந்த உலகத்தில் எனது குடும்பத்தினரை தனியாக விட்டு செல்வதற்கு மனம் இல்லாத காரணத்தால், அவர்களையும் அழைத்து செல்கிறேன்.

இப்படி ஒரு முடிவை எடுத்த காரணத்திற்காக அனைவரும் என்னை மன்னியுங்கள், நாங்கள் ஆவியாக வந்து யாருக்கும் தொந்தரவு தரமாட்டோம் என எழுதியுள்ளார். அந்தோணிதாஸ் எழுதிய கடிதத்தையும், 5 பேர் உடல்களையும் கைப்பற்றியிருக்கும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், திலகாவின் கணவர் தீபன் உயிருடன் இருக்கும்போதே குமாருக்கும், திலகாவுக்கும் 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது. குமாருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இந்த விவகாரம் அறிந்த குமாரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்த குமாரிடம், இனிகுடும்ப செலவுக்கு நீதான் பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் உன் வீட்டுக்கே வந்துவிடுவேன் என்று கூறினார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட குமார், திலகாவுக்கு 2 தூக்க மாத்திரைகள் கொடுத்து, அவர் மயங்கியதும் ரிப்பனால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றார். பின்னர் பொலிஸ் தேடுவதை அறிந்த குமார், தானே வந்து சரணடைந்தது தெரியவந்துள்ளது.

முல்லைத்தீவில் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு சென்ற இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி, 4பேர் படுகாயம்!!

இராணுவ வாகனம் விபத்து

முல்லைத்தீவு தட்டாமலைப்பகுதியில் இன்று மதியம் 1 மணியளவில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

முல்லைத்தீவுக்கு ஜனாதிபதி இன்று வருகை தந்திருந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கோமாண்டோ படையணியே பாதுகாப்பு பணியை நிறைவு செய்து வவுனியா பகுதி நோக்கி பயணித்த வேளையில் இவ் விபத்தில் சிக்கியுள்ளது.

தட்டாலை பகுதியில் உள்ள வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்காகியுள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டிகளில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

எனினும் விபத்தில் காயம்மடைந்தவர்களில் இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று வானில் தோன்றும் அதிசய நிகழ்வு!!

 

அதிசய நிகழ்வு

வானில் இன்றும், நாளையும் தோன்றும் சந்திர கிரகணம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனவரி மாதத்தில் வரும் முதல் சந்திர கிரகணம் Super Moon அல்லது Wolf Moon என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 20, 21ஆம் திகதிகளில் இந்த சந்திர கிரகணம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் காற்றில் கலந்திருக்கும் அதிக மாசு தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே இன்று தோன்றும் இந்த சந்திர கிரகணத்திற்கு Super Blood Wolf Moon என்று அழைக்கப்படுகிறது.

இந்த சந்திரகணம் அமெரிக்காவில் உள்ள சில பகுதிகளில் தெரியும் என்றும் இந்தியா, அவுஸ்திரேலியா நாடுகளில் இந்த சிவப்பு நிலவை பார்க்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த அதிசய நிகழ்வு விண்ணில் 62 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வை காண எந்த விதமான சிவப்பு கண்ணாடிகளும் தேவையில்லை எனவும், விண்ணில் தோன்றும் இந்த சிவப்பு நிலவினால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ள இலங்கைத் தமிழ் இளைஞன்!!

 

ஜீனு மகாதேவன்

உலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இலங்கை தமிழரான இளைஞனும் உள்ளடக்கப்பட்டுள்ளார். இலங்கை பெற்றோருக்கு நோர்வேயின் ஒஸ்லோ நகரில் பிறந்த ஜீனு மகாதேவன் என்ற இளைஞரே ஆடை அலங்கார துறையில் பிரபல நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

20 வயதான அவர், லண்டன், பாரிஸ், மிலான் மற்றும் நியூயோர்க் உட்பட உலகில் புகழ்பெற்ற ஆடை அலங்கார கண்காட்சிகளில் முக்கியமான பிரபலமாக திகழ்ந்து வருகிறார். அவரது உடல் நிறமே இதற்கு பிரதான காரணம் எனவும் கூறப்படுகிறது. மாநிறமான மகாதேவன், ஆடை அலங்கார உலகில், தெற்காசியாவை சேர்ந்த நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார்.

தனது உடல் நிறம் குறித்து தான் பெருமை கொண்டாலும் ஆசியாவை சேர்ந்த பலர் இன்னும் வெள்ளை நிற தோலை எதிர்பார்ப்பதாக மகாதேவன் கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரி விஜயம் செய்யும் பகுதியில் பதற்றம்!!

முல்லைத்தீவு, முள்ளியவளையில் காணமல்போனோரின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முள்ளியவளை, வித்தியானந்தா கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் இருந்து முல்லைத்தீவிற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது காணாமல் போனோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் ஜனாதிபதியே எங்களை ஏன் கைவிட்டீர்கள்? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? என போராட்டக்காரர்களினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?, போராட்டமே தமிழினத்தின் வாழ்வா, 10 வருட மௌனம் போதும் நீதி வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பிய வண்ணம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதுடன் போராட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் விசேட பாதுகாப்பு பொலிஸ் படையினர் ஈடுபட்டதாக தெரியவருகிறது.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : காருக்குள் சிக்கிய வெளிநாட்டு துப்பாக்கியால் சர்ச்சை!!

கொழும்பு – சிலாபம் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளது.

வென்னப்புவ, நைனமடம பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான மோட்டார் வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

8 மில்லி மீற்றர் தோட்டாக்கள் பயன்படுத்தக் கூடிய துப்பாக்கியே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இத்தாலியில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கியில் 8 தோட்டக்கள் நிரப்பப்பட்டு, குறித்த மோட்டார் வாகனத்திக் கதவினுள் மறைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த துப்பாக்கி என்ன காரணத்திற்காக கொண்டு செல்லப்பட்டதென இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் காலி மற்றும் வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 24 மற்றும் 36 வயதுடைய 6 பேர் என குறிப்பிடப்படுகின்றது.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி எவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னணி குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்பா இறந்துவிட்டார்.. அம்மா ஓடி போய்விட்டார்…சோகமே உருவான சிறுமிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி!!

 

சோகமே உருவான சிறுமி

தமிழகத்தில் பெற்றோர் இல்லாமல் வளரும் நான்காம் வகுப்பு மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் காதணி விழா நடத்திய நிலையில் சிறுமியின் வாழ்க்கை சோகம் நிறைந்தது என தெரியவந்துள்ளது. கோவையை அடுத்த ராமசெட்டிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவி வினோதினிக்கு பெற்றோர்கள் இல்லை. அவர் தனது பாட்டியிடம் வளர்ந்து வருகிறார். வினோதினிக்கு கம்மல் அணிந்து பள்ளிக்கு செல்லவேண்டும் என்பது நீண்டநாள் கனவு.

ஆனால் அவள் பள்ளிக்கு அனுப்பப்படுவதே பெருங்கொடுப்பினை என்றெண்ணுகிற வீட்டுச் சூழல். பிறகு, எங்கிருந்து கம்மல் குத்துவது? காதணி விழா நடத்துவது? ஒருநாள் தன் பள்ளித் தோழிகளிடம் இது குறித்து வருந்தியிருக்கிறார். அதை அவர்கள் ஆசிரியைகளிடம் சொல்ல, கடந்த வாரம் பள்ளிக்கூடத்திலேயே வினோதினிக்கு காதணி விழா நடத்தி முடித்திருக்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரிய பெருமக்கள்.

மாணவ மாணவிகள் சீர்வரிசைத் தட்டுகளை ஏந்திவர, ஆசிரியைகள் மடியில் வினோதினிக்கு நடத்தப்பட்ட காதணி விழாவுக்குத் பாராட்டுகள் குவிகின்றன. வினோதினியின் பெற்றோருக்கு என்ன ஆனது என்பது குறித்து அவரே கூறினார். அவர் கூறுகையில், அப்பா செத்துட்டாரு, அம்மா எங்கே ன்னு தெரியலை. பாட்டிதான் என்னை வளர்க்குறாங்க என்றார்.

வினோதியின் பாட்டி கூறுகையில், நாலு பசங்க, மூணு பொண்ணுங்க ன்னு ஏழுபேரை பெத்து வளர்த்தவ நான். இது மூத்தவன் பொண்ணு. அவனுக்கு ரெண்டு பொண்ணுங்க. மொத பொண்ணு பிறந்த கொஞ்ச நாள்லயே அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தக் கோவத்தில் இவங்க அம்மா அவங்க வீட்டுக்குக் குழந்தையைத் தூக்கிட்டுப் போயிட்டா.

ரெண்டாவது சம்சாரத்துக்கு ரெண்டு குழந்தைங்க பொறந்துச்சு. என்ன சண்டையோ சச்சரவோ தெரியலை அவளும் கோவிச்சு தன் பிள்ளைகளைத் தூக்கிக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா. அதுக்குப் பிறகு, முதல் சம்சாரத்தை சமாதானம் பண்ணி அழைச்சுட்டு வந்து வாழ்ந்தான். முதல் குழந்தையைத் தன் அம்மாவீட்லயே படிக்க வெச்சிருந்தா.

இங்கே வந்து நல்லா வாழ்ந்தாங்க, அப்போதான் வினோதினி பொறந்தா. இவளுக்கு ஒரு வயசுகூட ஆகலை. அவங்க அப்பன் உடம்புக்கு முடியாமல் செத்துப் போய்ட்டான். இவ அம்மா மனசில் என்ன நினைச்சாலோ தெரியலை. இந்தக் குழந்தையை இங்கேயே போட்டுவிட்டு இன்னொரு வாழ்க்கையைத் தேடிப் ஓடி போயிட்டா.

இதெல்லாம் என் மகன் பண்ணின பாவம். அதை நான்தானே கழுவணும். மத்த பிள்ளைகளோட ஆதரவும் இல்லை. இந்தப் பிள்ளையை எப்படியாவது வளர்த்து ஆளாக்கிரணும் என்பது தான் ஆசை என கூறியுள்ளார்.

2 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றிலிருந்து வெளியில் எடுத்த நபர் : அதிரவைத்த சம்பவம்!!

மலைபாம்பு வயிற்றை மிதித்து உள்ளே இருந்து கோழியை வெளியே எடுத்த வனத்துறை ஊழியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் வனத்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

கேரள மாநிலத்தின் கட்டாஞ்சல் என்ற இடத்தில் கடந்த ஜூன் மாதம் வீட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பு இரு கோழிகளை விழுங்கியது.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்ட நிலையில், பகுதி நேர ஊழியரான முகமது என்ற பாம்பு பிடிப்பவர் சம்பவ இடத்துக்கு வந்து மலைப்பாம்பைப் பிடித்தார்.

அப்போது, மலைப்பாம்பின் வயிற்றை மிதித்து உள்ளேயிருந்த இரு கோழிகளையும் வெளியே கக்க வைத்தார்.

இரு கோழிகளும் இறந்த நிலையில் பாம்பின் வயிற்றில் இருந்து வெளியே விழுந்தன. பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

முகமது பாம்பின் வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுக்கும் வீடியோ வைரலானது.

இதைத் தொடர்ந்து வனவிலங்கு ஆர்வலர் ஏஞ்சல் நாயர் என்பவர் பாம்பை கொடுமைப்படுத்தியாக முகமது மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள வனத்துறைக்குப் புகார் அளித்தார்.

ஆனால் இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர்ந்து, கேரள உயர்நீதிமன்றத்தில் ஏஞ்சல் நாயர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாம்பைக் கொடுமைப்படுத்திய முகமது மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேரள வனத்துறைக்குக் கேள்வி எழுப்பியதோடு விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை : 3,807 பேர் கைது!!

 

திடீர் சோதனை

நாடு முழுவதும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது வெவ்வேறு காரணங்களுக்காக 3,807 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபாவனையில் வாகனம் செலுத்தியோர் 1,066 பேரும், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் 851 பேரும், வெவ்வேறு குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 823 பேரும் மற்றும் ஹெரோய்ன் மற்றும் போதைப் பொருள் தம்வசம் வைத்திருந்தவர்களென 967 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு சாரதி அனுமதிப்பத்திரமின்றியும், பிரபல இடங்களில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் 99 பேரும், அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்தவர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீதி ஒழுங்கு விதிகளை மீறிய வாகனங்கள் மீதான வழக்குகள் 5,215 பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அரைநிர்வாணமாக கிடந்த சிறுமியின் சடலம் : தூக்கில் தொங்கிய மர்ம நபர் : பெரும் குழப்பத்தில் பொலிஸார்!!

 

தூக்கில் தொங்கிய மர்ம நபர்

அர்ஜென்டினாவில் காரில் ஏறி சென்ற இளம்பெண் அரைநிர்வாணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அர்ஜென்டினாவை சேர்ந்த 17 வயதான Agustina Imvinkelried என்கிற இளம்பெண், அரைநிர்வாணமாக சாண்டா ஃபே பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படவில்லை எனவும், உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய முகத்தில் மோசமான காயங்கள் இருந்ததால், பலாத்காரம் செய்ய முயற்சிக்கும்போது தடுக்க நினைத்திருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்ற Agustina, அங்கிருந்து ஒரு காரில் ஏறி புறப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

அதன்பேரில் காரை ஒட்டிய 39 வயதான பப்லோ ட்ரியோன்ஃபினி என்பவரின் வீட்டிற்கு பொலிஸார் சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் பொலிஸார் பெரிதும் குழப்பத்துடன் விசாரணையை துவக்கியுள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலி தாங்கமுடியவில்லை : 12வது பிறந்தநாளில் இறக்க விரும்பும் சிறுமி : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

 

நெஞ்சை உருக்கும் சம்பவம்

பிரித்தானியாவில் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி, தன்னுடைய 12வது பிறந்தநாளில் வாழ விரும்பவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவை சேர்ந்த Imarni Chowdhury என்கிற 11 வயது குழந்தை சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது the Diana, Princess of Wales மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அங்கு பணிபுரியும் மருத்துவர் கூறுகையில், சிறுமி சிறுநீர் கழிப்பதற்கு கூட அதிக அளவிலானா மருந்தை உட்கொண்டு வருகிறார்.

இந்த நோயால் லின்கோல்ன்ஷையரில் பாதிக்கப்பட்ட ஒரே நபர் இவர் மட்டும் தான் என கூறியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முறையான சிகிச்சை பெற சிறுமியின் குடும்பத்தார் திணறி வருகின்றனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை ரஹ்மான் பேசுகையில், என்னுடைய மகள் ஒரு சிறுமி அனுபவிக்க கூடிய மகிழ்ச்சி எதையும் அனுபவிக்க முடியவில்லை.

அவளுடைய வலியை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வலி மூன்றாம் கட்ட தீக்காயங்கள் அல்லது நான்காவது நிலை புற்றுநோய் வலியை போல இருக்கிறது. அதிலிருந்து திசை திருப்ப கார்ட்டூன் படங்களை டிவிகளில் போட்டு காண்பித்து வருகிறோம்.

அடுத்த வாரம் கொண்டாடவிருக்கும் 12 வது பிறந்தநாளில் என்ன பரிசு வேண்டும் என கேட்டபொழுது, உயிருடன் இருக்க விரும்பவில்லை என கூறுவதாக வேதனை தெரிவித்திருக்கிறார். மேலும் பேசுகையில், நாங்கள் சிகிச்சைக்காக திணறி வருகிறோம். மருத்துவர்கள் ஏன் சிகிச்சை கொடுக்க மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

என்னுடைய மகளை காப்பாற்ற உறவினர்களிடம் பிச்சை எடுக்க கூட நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய எலும்புகள் தேயும் வரை நான் வேலை செய்து பணத்தடை சேமிப்பேன் என கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஷெஃபீல்ட் குழந்தை சிறுநீரக மருத்துவரும், NHS குழந்தைகள் அறக்கட்டளை ஆலோசகருமான பேராசிரியர் பிரசாத் கோட்கோபில், சிறுமிக்கு உதவுவதற்கான வேளைகளில் விரைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார்.