செவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்ற அடையாளங்கள் : நாசா தகவல்!!

உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றது.

இந்நிலையில் அவ்வப்போது உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் போன்ற புகைப்படங்கள் வெளியாகி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு சிலந்திகள் ஊர்ந்து சென்றதற்கான அடையாளங்கள் காணப்படுவது போன்ற படத்தினை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் செயற்கைக் கோளின் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்திலேயே இவ்வாறான தோற்றம் தென்பட்டுள்ளது.

எனினும் இப் புகைப்படத்தில் காணப்படம் ஆதாரம் தொடர்பில் நாசா விண்வெளி ஆய்வு மையம் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

யூடியூப் வீடியோக்களை இனி களவாட முடியாது!!

யூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீடியோக்களுக்கான காப்புரிமை பெற்றிருப்பார்கள்.

இவ்வாறான வீடியோக்களை திருடி மீண்டும் தரவேற்றம் செய்யும்போது அவ் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் அழித்துவிடும்.

ஆனால் காப்புரிமை பெறாத ஏனைய சில பயனர்களுக்கு அவர்களின் வீடியோக்கள் களவாடப்படும்போது எச்சரிக்கை செய்யும் வசதியினை யூடியூப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இரு வேறு பயனர்களால் தரவேற்றம் செய்யும் வீடியோக்கள் மிகவும் ஒன்றை ஒன்று ஒத்ததாக இருக்கும் சந்தர்ப்பத்திலும் இவ் எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.

எவ்வாறெனினும் இவ் வசதியானது 100,000 மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூடியூப் சேனல்களுக்கு மாத்திரமே தற்போது கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

13 பிள்ளைகள் பெற்றும் தெருவில் அனாதையாக பிச்சையெடுத்த தாய் : பரிதாப சம்பவம்!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அந்தோனி அம்மாள் என்ற மூதாட்டி 13 பிள்ளைகள் பெற்றெடுத்தும் கோயில் தெருவில் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக வேலூர் விண்ணரசி மாதா கோயிலில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். பிச்சை எடுக்கும் பணத்தையும் தனது மகள் வாங்கி சென்றதாகவும் அந்தோனி அம்மாள் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார் அந்தோனி அம்மாள். எனக்கு 13 பிள்ளைகளும் பேரன்களும் இருந்தும் அனாதையாக உள்ளேன். எனது கணவர் கேரளாவில் உள்ள அவரது தம்பி வீட்டில் உள்ளார். நான் மட்டும் இப்படி கஷ்டத்தை அனுபவித்து வருகிறேன்.

எனக்கு அந்த ஆண்டவர் மட்டுமே துணை என்றும் நான் இறக்கும் வரை என்னை பாதுகாத்து எனக்கு உணவு வழங்கினால் போதும். கால் உடைந்திருப்பதால் என்னால் நடக்கக் கூடிய முடியவில்லை என்றும் கண்ணீர் மல்க கூறினார். மேலும் நான் இறந்தாலும் என்னை எனது உறவுகள் யாரும் பார்க்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

சமூக ஆர்வலர் மணிமாறன் கூறும் போது, 95 வயதான் மூதாட்டி நிலை குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததும் அவரை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து வந்து மனு கொடுத்துள்ளோம். மூதாட்டியை கைவிட்ட அவரது வாரிசுகள் மீது முதியோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும் அவருக்கான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் மாவட்ட சமுக நலத்துறை சார்பில் தொண்டு நிறுவன முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும் அவரின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட தமிழ் நடிகை விவகாரம் : பொலிசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!!

பிரபல திரைப்படை நடிகையான ஜெயலட்சுமி வாட்ஸ் அப் மூலம் சிலர் தனக்கு தொல்லை தருவதாகவும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் டேட்டிங் சென்றால் 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று அழைப்புவிடுக்கப்பட்டதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதன் பின் இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கவியரசு மற்றும் முருகப்பெருமாள் என்ற இரண்டு புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், பிடிபட்ட கவியரசு மற்றும் முருகப்பெருமாள் ஆகியோர் முதலில் வெளிமாநில அழகிகளை வைத்து ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர்.

அப்போது வாடிக்கையாளர்கள் இளம் நடிகைகள் இருந்தால் கூறுங்கள், நாங்கள் நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதனால் பணத்தின் மீது ஆசை கொண்ட அவர்கள், பிரபல திரைப்பட நடிகைகள், சின்னத்திரை நடிகைகளில் தற்போது வாய்ப்பு குறைந்துள்ளவர்களின் பட்டியலை எடுத்து, அவர்களின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து செல்போன் எண்களை எடுத்துள்ளனர்.

அதன் பின் சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு நள்ளிரவு நேரத்தில் அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி, நடிகைகளின் மன நிலையை அறிந்து கொண்டு, குறுஞ்செய்திக்கு மறுப்பு தெரிவிக்காத நடிகைகளுக்கு விருப்பம் இருந்தால் டேட்டிங் மூலம் சில ஆயிரங்கள் முதல் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இந்த விடயம் யாருக்கும் தெரியாது, ரகசியமாக காக்கப்படும் என்று உத்திரவாதமும் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து தங்கள் வலையில் சிக்கிய நடிகைகள் மூலம் பிற நடிகைகளின் செல்போன் எண்களை பெற்றுக் கொண்டு பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதில் தொழிலதிபர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர். இவை அனைத்தும் நட்சத்திர ஹோட்டலிலே நடந்துள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக ரிலேசன்ஷிப் டேட்டிங் சர்வீஸ் என்ற குரூப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தங்கள் வாடிக்கையார்களுக்கு நடிகைகளின் விவரங்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு பணம் போன்றவைகள் எல்லாம் அனுப்பியுள்ளனர்.

அப்படி தான் நடிகை ஜெயலட்சுமிக்கும் வலை வீசியுள்ளனர். ஆனால் அவர் பொலிசாரிடம் புகார் கொடுத்துவிட்டதால் இவர்கள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதன் பின்னணியில் நடிகைகள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இருப்பதால், இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டால் அவர்களையும் கைது செய்ய நேரிடும் என்பதால் இந்த இரண்டு புரோக்கர்களை வைத்தே பொலிசார் வழக்கை முடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை : கொலை செய்த காதலனை மணமுடித்த காதலி!!

அமெரிக்காவில் தன்னுடைய குழந்தையை கொன்ற காதலனை திருமணம் செய்துள்ளார் Valerie என்ற பெண்.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தை சேர்ந்தவர் Justin T. Layne(வயது 21), இவரது காதலி Valerie. இவருக்கு ஏற்கனவே வேறு ஒருவர் மூலம் ஆறு மாத குழந்தை உள்ளது, இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் 25ம் திகதி வீடு திரும்பிய Valerieக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மிக ஆபத்தான நிலையில் ரத்த காயங்களுடன் குழந்தை கிடந்தது, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி நான்கு நாட்கள் கழித்து குழந்தை இறந்தது.

இதுதொடர்பான வழக்கில் Valerie-ன் தற்போதைய காதலனை பொலிசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.

சம்பவம் நடந்த 10 நாட்களுக்கு பின்னர் காதலனை திருமணம் செய்த Valerie, ஆதரவாக பேசி வருகிறார்.

அவர் கூறுகையில், எந்தவொரு பெற்றோரும் குழந்தை இழக்க விரும்பமாட்டார்கள்.

நான் என் கணவருக்கு ஆதரவாக இருப்பேன், வேண்டுமென்றே அவர் இதை செய்திருக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இன்னும் பதில்களை தேடிக்கொண்டிருப்பதாகவும், எட்டு மாதங்களாக பொலிசார் தாமதித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ள நிலையில், 20ம் திகதி வழக்கு நீதிமன்றத்துக்கு வரவுள்ளது.

தொடர்ந்தும் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறக்குமதியாளர்களின் டொலர் தேவை அதிகரித்த காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதி பலவீனமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய தினம் 159 ரூபாய் 55 – 70 சதமாக பதிவாகியுள்ளது.

இந்த வருடத்தில் ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 3.9 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் இதுவொரு தனித்துவமான நிகழ்வு அல்ல என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை அடுத்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

துரிதமான வேலைத்திட்டத்தினால் மிக விரைவாக அடையாள அட்டைகளை வழங்க கூடியதாக இருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய அறிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐயாயிரத்து 12 என்றும் தற்போது இந்த மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மூன்று பிரதேச அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படும் எனவும் ஹர்ஷ இலுப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தாலிக் கொடியை அறுத்த திருடன் : பொது மக்களை அச்சுறுத்திய பொலிஸார்!!

கிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் நேற்று மாலை பெண் ஒருவருடைய தாலிக் கொடியை அறுக்க முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தபோதும் பொலிஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முறிகண்டி அக்கராயன் வீதியில் தொடர்ச்சியாக பெண்களின் நகைகள் அறுத்து செல்லப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இம்மாதமும் இரு பெண்களிடம் நகைகள் அறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்தபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அக்கராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குடும்பஸ்தருடைய மனைவியின் தாலிக் கொடியை அறுக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்களும், குறித்த குடும்பஸ்தரும் இணைந்து திருடர்களை பிடித்து அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாட்டை பதிவு செய்ய அக்கராயன் பொலிஸார் மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர். பின்னர் பொதுமக்கள் திரண்டு பொலிஸாருடன் வாய்தர்க்கப்பட்ட நிலையில் திருடர்களை மடக்கி பிடித்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக பொலிஸார் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸாருடைய பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை?

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு சமையல் எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் கூடிய வாழ்க்கைச் செலவுக் குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 29 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்தது. இருப்பினும், உலக சந்தையிலுள்ள விலை மட்டத்தை நோக்கும் போது சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அந்நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இருப்பினும், இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினர் குறிப்பிடுகையில்,

வாயளவில் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், எழுத்து மூலமான கோரிக்கைகள் எதுவும் இதுவரையில் எந்தவொரு நிறுவனத்தினாலும் முன்வைக்கப்படவில்லையென குறிப்பிட்டுள்ளது.

எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே இது தொடர்பில் கருத்தில் கொள்ளப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் கூறியுள்ளது.

மைத்திரியின் முடிவினை வரவேற்றுள்ள கிரிக்கெட் வீரர்!!

போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் முடிவு முன்னரே எடுத்திருக்கப்பட வேண்டும் என கிரிக்கெட் வீரர் திலகரட்ன தில்சான் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து அதிகரித்துவருவதுடன், ஜனாதிபதியும் இது தொடர்பாக ஆராய்ந்துவருகின்றார். இந்நிலையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் முடிவு வரவேற்கத்தக்கது.

இந்த தீர்மானத்தை நீண்ட காலத்திற்கு முன்னர் எடுத்திருக்கவேண்டும். போதைப்பொருள் குற்றங்களிற்கு மாத்திரமல்ல சிறுவர் துஸ்பிரயோகங்கள் போன்றவற்றிற்கும் மரண தண்டனையை நிறைவேற்றவேண்டும்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் சிறுவர் துஸ்பிரயோகமும் அச்சப்படும் விதத்தில் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மரண தண்டனையை நிறைவேற்றுவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை விவகாரம் : பல நடிகைகள் சிக்கியது அம்பலம்!!

வட்ஸ் அப் மூலம் தமிழ் சீரியல் நடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் வலை வீசப்பட்ட நிலையில் மேலும் பல நடிகைகள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வட்ஸ் அப் மூலம் பாலியல் தொழிலுக்கு வலை வீசுவதாக நடிகை ஜெயலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் ஜெயலட்சுமிக்கு வலை வீசிய பொலிசார் இதில் தொடர்புடைய கவியரசன், முருகபெருமாள் ஆகிய இருவரை அண்ணா நகரில் உள்ள காபி ஷாப்பிற்கு நைசாக வரவழைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரிலேசன்ஷிப் சர்வீஸ் என்ற பெயரில் குழு அமைத்து, நடிகைகளுக்கு பாலியல் வலை வீசி முக்கிய பிரமுகர்களுக்கு இந்த கும்பல் விருந்து படைத்துள்ளது தெரியவந்துள்ளது.

அரசியல் பிரமுகர்கள், விஐபி-க்கள் என பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

6 மணி நேரம், 12 மணி நேரம், வெளிமாநிலங்களுக்கு சென்றால் ஒரு தொகை என லட்சக்கணக்கில் பேரம் பேசி நடிகைகளை தங்களது வலைக்குள் சிக்க வைக்கிறது இந்த கும்பல்.

இப்படி பல நடிகைகளை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளதும் தெரியவந்துள்ளது.

பிடிபட்ட இருவரிடமும் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இருட்டு அறையில் வைத்து கணவன் செய்த கொடுமை : துடிதுடித்து இறந்த இளம் மனைவி!!

இந்தியாவில் மனைவியை ஒரு மாதத்துக்கும் மேலாக இருட்டறையில் அடைத்து வைத்து கணவன் கொடுமைப்படுத்திய நிலையில் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நஹீம்கான். இவர் மனைவி ரசியா. ரசியாவை சில காலமாக நஹீம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் மார்ச் மாதத்தில் டெல்லிக்கு சென்ற நஹீம் அங்கிருந்தபடியே போனில் மூன்று முறை முத்தலாக் கூறி மனைவி ரசியாவை பிரிந்துள்ளார்.

பின்னர் கடந்த ஏப்ரலில் தான் மனம் மாறிவிட்டதாக கூறி மீண்டும் ரசியாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் மனம் மாறாத நஹீம், ரசியாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், ஒரு மாதத்துக்கும் மேல் இருட்டறையில் எப்போதாவது மட்டும் உணவு கொடுத்து பட்டினி போட்டு அடைத்து வைத்துள்ளார்.

இதையடுத்து ரசியாவின் குடும்பத்தார் நஹீம் வீட்டுக்கு வந்து ரசியாவை மீட்டனர்.

உடல் நலம் குன்றிபோன ரசியா கணவர் கொடுமையால் நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் ரசியா தற்போது உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து நஹீம் செய்த கொடுமைகள் குறித்து ரசியா குடும்பத்தார் பொலிசில் புகார் கொடுத்தனர்.

அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் டெல்லியில் உள்ள நஹீமை கைது செய்ய தனிப்படையை விரைவில் அனுப்புவோம் என தெரிவித்துள்ளனர்.

கணவனை தண்டிப்பதற்காக மனைவி செய்த அதிர்ச்சி செயல் : பரிதாபமாக இறந்த இரண்டு குழந்தைகள்!!

தமிழகத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பூமலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். முன்னாள் ஊராட்சி தலைவரான இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும் 5 வயதில் மகனும் 8 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளனர்.

செந்தில் மற்றும் சிவரஞ்சனிக்கு தம்பதிக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தின் போது, உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு செந்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சிவரஞ்சினி மகன் அர்சத் மற்றும் 8 மாத குழந்தை ஹர்சிதா இருவரையும் தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசி விட்டு, அதன் பின் தன் மீது மண்ணென்ணெய் ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு குழந்தைகளை வீசிய தொட்டியிலே இவரும் குதித்துள்ளார்.

உடலில் தீயை பற்றிக் கொண்டு குதித்த போது, சிவரஞ்சனி அலறியதால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து குழந்தைகள் மற்றும் சிவரஞ்சனியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் குழந்தை இறந்தவிட்ட நிலையில் சிவரஞ்சனிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தவறு செய்த கணவன் செந்திலை தண்டிப்பதாக நினைத்து மனைவி சிவரஞ்சனி இப்படி ஒரு துணிகர காரியத்தை செய்துவிட்டதாக உறவினர்கள் வேதனையடைந்துள்ளனர்.

நவீனுடன் திருமணம் : காரணம் முதல் மனைவி திவ்யா தான் : பரபரப்புப் பேட்டி!!

 

தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக பிரபல தொலைக்காட்சி புகழ் நவீன் மீது குற்றம்சாட்டினார் திவ்யலட்சுமி. நவீனுக்கு நடக்கவிருந்த திருமணத்தையும் அதிரடியாக நிறுத்தினார்.

இந்நிலையில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டிவர, கிருஷ்ணகுமாரி தன்னிடம் உள்ள ஆதாரங்களை வெளிக்காட்டவுள்ளதாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் பிறந்தது மலேசியா, அப்பா லாரி டிரைவர், அம்மா குடும்பத்தலைவி. நானும், என் அக்காவும் சம்பாதிச்சு தான் குடும்பத்தை காப்பாத்திட்டு இருக்கோம், சான்டி மாஸ்டர் மூலம் நவீனின் அறிமுகம் கிடைத்தது, நான் ஏற்கனவே நவீனின் மிகப்பெரிய ரசிகை.

என் அக்கா திருமணத்தின் போது நவீனின் குடும்பம் மலேசியாவுக்கு வந்தது, அப்போது தான் அவர்கள் எங்களது உறவுக்காரர்கள் என்றே தெரியவந்தது.

அவருக்கு திருமணமாகி விவாகரத்து வழக்கு நடப்பது வரை எனக்கு தெரியும், ரெண்டு பேரும் நண்பர்களாக பழகினோம், நான் தமிழ்நாட்டு வந்தபோது சான்டியின் திருமணம் நடந்தது. அப்போது எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்டேன், அதை பார்த்து திவ்யா மெசேஜ் பண்ணிரார்.

காலையில் எழுந்தா என்னையும், நவீனையும் பற்றி தவறாக போட்டிருந்தாங்க, அதைப்பார்த்து என் சொந்தக்காரரங்க கேவலமா பேச ஆரம்பிச்சிட்டாங்க, நவீன் என் அப்பா, அம்மாகிட்ட பேசி கல்யாணம் செய்துகிறதா சொன்னார், வேறு வழியே இல்லாம தான் கல்யாணம் செய்ய முடிவெடுத்தோம்.

நவீனை மாதிரி ஒரு நல்ல பையனை பார்த்தது இல்லை, திவ்யாவுக்கு தான் நன்றி சொல்லணும், என்ன பிரச்சனை வந்தாலும் நவீனை கல்யாணம் செய்வது உறுதி என தெரிவித்துள்ளார்.

எங்களுக்கும் குடும்பம் உள்ளது : 3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகை பேட்டி!!

தவறான மெசேஜ்களைப் பார்த்து அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டாம் என்று நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகையான ஜெயலட்சுமிக்கு வாட்ச் அப்பில் பாலியல் தொழில் செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என ஒரு மெசேஜ் வந்தது.

இது குறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் கவியரசன், முருகப்பெருமாள் ஆகிய இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய ஜெயலட்சுமி, இவ்வளவு தைரியமாக மெசேஜ் அனுப்பியவர்களுக்கு எந்தவித பயமும் இல்லை.

நான் கொடுத்த புகாரின் பேரில் கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்.

நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கிறது. நடிப்பு என்பது எங்களுடைய தொழில் மட்டும்தான். சாதாரண மக்களைப் போல போராட்டமும் இருக்கிறது.

எல்லா நடிகைகளையும் ஒரே மாதிரியாக சிலர் பார்க்கின்றனர். எனவே நடிகைகளே, இந்தப் பிரச்னைகளுக்கு இனி அமைதியாக இருக்காதீர்கள்

நமக்கு உதவிசெய்ய பொலிஸ், நண்பர்கள் இருக்கிறார்கள். நடிப்பு என்பது நமக்குத் தொழில் என்பதை சமுதாயத்துக்குத் தெரியப்படுத்துவோம்.

எல்லா நடிகர்கள், நடிகைகள் சொகுசாக வாழவில்லை. எனக்கு நடிப்பு மூலம் போதிய வருமானம் இல்லை என்பதால் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக உள்ளேன். அதோடு, ஜூனியர் அட்வகேட்டாகவும் பணியாற்றுகிறேன் என கூறியுள்ளார்.

பலம்வாய்ந்த தென்னாபிரிக்காவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற இலங்கை அணி!!

தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 278 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றியை தனதாக்கியது.

இலங்கை அணியின் பிரபல வீரர்களான டில்ருவான் பெரேரா மற்றும் ரங்கன ஹேரத்தின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இலங்கை அணி வெற்றியை தனதாக்கியது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு 352 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இருந்த நிலையில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இனிங்சில் 73 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இனிங்சில் 287 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், திமுத் கருணாரத்ன 158 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இந்நிலையில், தென் ஆப்ரிக்க அணி முதல் இனிங்சில் 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 190 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதற்கமைய, தென் ஆப்ரிக்கா அணிக்கு 352 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இருந்த நிலையில், 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்ட நிலையில், இலங்கை அணி 278 ஓட்டங்களினால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியை தனதாக்கியது.

டில்ருவான் பெரேரா 06 விக்கட்களையும், ரங்கன ஹேரத் 03 விக்கட்களையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றிக்கு வழவகுத்தமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் கைப்பற்றிய மூன்று விக்கெட்டுக்களோடு இப்போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுக்களை சாய்த்த ரங்கன ஹேரத் டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அதிகூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் மொத்தமாக 423 விக்கெட்டுக்களுடன் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய திமுத் கருணாரத்னவுக்கு வழங்கப்பட்டது.

தமது விருந்தினர்களை முதல் டெஸ்ட் போட்டியில் தோற்கடித்திருக்கும் இலங்கை, கொழும்பில் நடைபெறவுள்ள தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (20) மோதுகின்றது.