பிரான்சில் இணையதளம் மூலமாக சொந்த மகளுக்கே தந்தை ஒருவர் காதல் வலை வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் பொபினி பகுதியைச் சேர்ந்த நபர் தந்தை ஒருவர் காதலர்களை தேடும் சமூகவலைதளம் மூலம் தன்னுடைய சொந்த மகளுக்கு காதல் வலை வீசியுள்ளார்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, மகளுக்கு அவர் பல முறை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார், அந்த நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த நபரின் மனைவி, மகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை தான் என்று கூறியுள்ளார். இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பெயர் மற்றும் தகவல்களை பொலிசார் தெரிவிக்கவில்லை, முழு விசாரணைக்கு பின் அனைத்து தகவல்கள் தெரிய வரும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெளியான திருமணம் பற்றி செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி தனக்கும் தனது காதலிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கூறியுள்ளார்.
ஆபிரிக்காவின் உயரமான சிகரமான கிளிமாஞ்சாரோ மலையில் வைத்து, தனது காதலி டட்யானா ஜயரத்னவிடம் தனது திருமண யோசனையை முன்வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். தானும், தனது காதலியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் ரோஹித்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். வாராந்த பத்திரிகை ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரோஹித்த ராஜபக்சவுக்கும் அவரது காதலி டட்யானா ஜயரத்னவுக்கும் ஜனவரி 24ஆம் திகதி திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. தங்காலை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த திருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் வெளியாகிய இந்த செய்தியில் உண்மையில்லை என ரோஹித்த ராஜபக்ச கூறியிருந்தார். எனினும் தற்போது தனக்கு திருமணம் நடக்கவிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார்
இந்தியாவை ஆண்ட மன்னர்களில் மிகவும் முக்கியமானவர் சந்திர குப்த மௌரியர். அவரை மன்னராக ஆக்கியதும், அவரின் ராஜ்ஜியம் வளமாய் இருக்கவும் காரணமாக அமைந்தது அவரின் தலைமை அமைச்சர் சாணக்கியர் ஆவார். சந்திர குப்தருக்கு மட்டுமின்றி சாணக்கியரின் அறிவுரைகள் அனைத்து மக்களுக்கும் உபயோகமானதும், பொதுவானதுமாகும்.
வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சாணக்கியர் தன் நூல்களில் கூறியுள்ளார். ஒருவர் வாழக்கையில் பெற என்ன செய்ய வேண்டும் என்று கூறியுள்ள சாணக்கியர், என்ன செய்யக்கூடாது என்பதையும் தெளிவாக கூறியுள்ளார். அதன்படி உங்கள் வாழ்கையில் வெற்றிபெற வேண்டுமெனில் என்னென்னெ செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நிதி பிரச்சினைகள் : பணம் எப்பொழுதும் கட்டுப்பாட்டின் அடையாளமாகும். எனவே உங்கள் பணம் தொடர்பான பிரச்சினைகளை தேவையில்லாத சூழ்நிலைகளில் ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களின் பணப்பிரச்சினைகளை அவ்வாறு பகிர்ந்து கொள்ளும்போது உங்கள் நண்பர்களை நீங்கள் இழக்க நேரிடலாம்.
குரு மந்திரங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள் : உங்களது குரு உங்களுக்கு கூறிய அறிவுரையையோ அல்லது மந்திரத்தையோ ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். புனித தன்மை வாய்ந்த இந்த மந்திரங்கள் பகிரப்படும் போது அதன் புனித தன்மையை இழப்பதோடு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்கள் குடும்ப சண்டைகளை வெளியே சொல்லாதீர்கள் : அனைத்து குடும்பத்திலுமே உயர்ந்த குணங்கள், சில மோசமான குணங்கள், மோதல்கள் என அனைத்தும் இருக்கும். ஆனால் அவற்றை பொதுவெளியில் வெளியிடுவது உங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுறத்துவதோடு உங்களை கேலிக்கும் உள்ளாக்கும்.
தெரியாமல் தானம் செய்வது : ஞானமுள்ள மனிதன் எப்பொழுதும் தான் செய்த தானத்தையோ, நன்கொடையை பற்றியோ வெளியே கூறமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் கடவுளால் மதிக்கப்படுவார்கள். ஆனால் தற்பெருமைக்காக இதனை வெளியே சொல்வதோ அல்லது பிறர் அறியும்படி செய்வதோ உங்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்தாது.
உங்கள் வயதை வெளிப்படுத்தாதீர்கள் : வயதிற்கும் உங்கள் திறமைக்கும், முயற்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே யாரும் கேட்காத வரை உங்கள் வயதை வெளிப்படுத்த வேண்டும். புத்திசாலித்தனமான இளமை உணர்வை உணரும் வாய்ப்பின் மீது, உங்கள் மனம் அதிசயங்களை உண்டாக்கி அற்புத பலன்களை அளிக்கும்.
உங்கள் பாலியல் வாழ்க்கையை ரகசியமாக வைத்திருங்கள் : உங்களின் பாலியல் வாழ்க்கை என்பது உங்களின் தனிப்பட்ட விஷயமாகும், அதை மற்றவர்கள் தெரிந்து கொள்ள எந்த அவசியமும், உரிமையும் இல்லை. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளிப்படையாக கூறும்போது மற்றவர்கள் உங்களை பற்றி எளிதில் எடை போட்டுவிடுவார்கள்.
அதிகார துஸ்பிரயோகம் : ஒருவேளை நீங்கள் அலுவலகத்திலோ அல்லது சமூகத்திலோ பெரிய பொறுப்பிலே இருந்தால் அந்த அதிகார போதை உங்கள் தலைக்கேறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்கள் நிலை கண்டு பொறாமை கொள்ளலாம், அதேபோல நீங்களும் உங்களின் தனிப்பட்ட விருப்ப, வெறுப்புகளை அதிகாரத்தின் மூலம் பணியில் திணிக்கக்கூடாது.
உங்கள் சொந்த அவமானங்களைப் பற்றி கேலி செய்யாதீர்கள் : உங்களின் முட்டாள்த்தனத்தை எண்ணி எப்போதாவது நீங்களே சிரித்திருப்பீர்கள். அதனை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். இதை வெளிய சொன்னால் மற்றவர்கள் இதனை பயன்படுத்தி உங்களை அவமானப்படுத்த நேரிடலாம். சிலசமயம் உங்களின் வருங்காலம் கூட இதனால் பாதிக்கப்படலாம்.
வவுனியா சின்னப்புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத்தூபியில் ஒளவையாரின் நினைவு தினம் இன்று(20.01) காலை 9 மணியளவில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகர சபைத்தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்றது.
ஒளவையாரின் நினைவுப் பேருரையை வவுனியா தெற்கு கல்வி வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி நிறைமதி நிகழ்த்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து வருகைதந்த பிரதிநிதிகள் ஒளவையாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், சு.கண்டீபன், சமந்தா செபநேசராணி, பாஸ்கரன் ஜெயவதனி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், சமூக ஆர்வலர் விக்னா நகரசபை ஊழியர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இந்தோனேஷியாவில் 190 கிலோ எடை கொண்ட சிறுவன் தற்போது கடும் உணவுக் கட்டுப்பாட்டு மற்றும் உடற்பயிற்சியால் பாதி எடை குறைந்து சாதித்து காட்டியுள்ளான். இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவாவில் இருக்கும் சிபுர்வசரி குக்கிராமத்தை சேர்ந்த தம்பதி அதி சோமந்திரி (47)-ரொகாயா (37).
இந்த் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் ஆர்யா பெர்மனா என்ற சிறுவன் தன்னுடைய பத்து வயதில் 190.5 கிலோ எடை கொண்டிருந்தான். இதனால் இந்தோனேசியாவில் அதிக எடை கொண்ட சிறுவன் என்று அதிகளவில் பேசப்பட்டான். சிறுவன் நாள் ஒன்றிற்கு 5 வேளை சாப்பிடுவான்.
சாதம், மீன், மாட்டிறைச்சி, காய்கறி சூப் என்று எல்லாவற்றையும் சாப்பிடுவான். அதுவும் 2 ஆண்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுவார்களோ, அந்தளவுக்கு சாப்பிடும் பழக்கம் உள்ளவன். இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால், உடல் எடை அதிகரித்தது. உடல் எடை அதிகரிப்பின் காரணமாக சிறுவன் நிற்க முடியாமல் தரையில் தான் படுத்து கிடந்தான்.
இவர் பிறக்கும் போது சாதரண குழந்தை போன்று தான் இருந்துள்ளான். 2 வயதிற்கு மேல் சென்றவுடன் இவனின் எடை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது. இப்படி உடல் எடை அதிகரித்து கொண்டே சென்றதால், அவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அவனது பெற்றோர்கள், கிராமத்தில் இருக்கும் மருத்துவர்களை எல்லாம் அழைத்து வந்து பார்த்துள்ளார்.
ஆனால் மருத்துவர்களால் அவனிடம் எந்த ஒரு குறைப்பாட்டையும் பார்க்க முடியவில்லை. சிறுவனின் எடை தொடர்ந்து அதிகரித்த படி இருந்ததால், மருத்துவர்கள் குழப்பமடைந்தனர். இறுதியில் மருத்துவர்கள், உணவியல் வல்லுநர்களின் அறிவுரைப்படி இனிப்பு, இனிப்பு கலந்த குளிர்பானங்கள், சர்க்கரை சேர்த்த உணவு வகைகளை ஆர்யாவுக்கு தவிர்க்கும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து கடும் உடற்பயிச்சி எப்படி மேற்கொள்வது என்று சொல்லிக் கொடுத்துள்ளனர். தற்போது ஆர்யா பெர்மனாவுக்கு வயது 12. இரண்டு ஆண்டு கடும் போராட்டம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் தற்போது 95 கிலோ எடையைக் குறைத்து சாதித்துவிட்டான்.
கடந்த ஏப்ரல் மாதம் எடை குறைப்பு அறுவை சிகிச்சையும் ஆர்யாவுக்கு செய்யப்பட்டது. அதன்பிறகு 3 வாரங்களில் அவனது எடை கணிசமாகக் குறைந்தது. தற்போது நன்றாக நடக்கிறான். நன்றாக படித்து வந்த ஆர்யா, எடை அதிகரிப்பால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தற்போது 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல தொடங்கிவிட்டான்.
சுறுசுறுப்பாக இருக்கிறான், நண்பர்களுடன் பேட்மின்டன், கால்பந்து ஆடுகிறான். தினமும் 3 கி.மீற்றர் தூரம் நடை பயிற்சி மேற்கொள்கிறான். பழைய டி ஷர்ட்டை அணிந்து கொள்கிறான். மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகிக் கொண்டான்.
இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நடக்கிறேன், விளையாடுகிறேன். கால்பந்தாட்டம் தான் எனது விருப்பம். தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக வரவேண்டும் என்பதுதான் எனது ஆசை. லிவர்பூல் எப்சி கிளப்தான் எனக்கு பிடித்தமானது. ராபர்ட்டோ பிர்மினோதான் எனக்கு பிடித்த கால்பந்தாட்ட வீரர். அவரை போல நான் விளையாட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஆர்யாவின் எடை குறைப்புக்குப் பின்னால் அவனது தாயும் தந்தையும் பட்ட கஷ்டங்கள் அதிகம். அக்கம் பக்கத்தினர், உறவினர்களிடம் எல்லாம் கடன் வாங்கி, ஆர்யாவைக் காப்பாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா இம்முறை புதிதாக உருவாக்கப்பட்ட சித்தரத்தேர் பவனி இன்று(20.01) காலை இடம்பெற்றது.
சுமார் 100 வருடங்கள் பழமைவாய்ந்த கந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக 2 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட பிரமண்டமான 24 அடி உயரமும் 9 அங்குலமும் கொண்ட திராவிட மரத்தேர் நேற்றைய தினம் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முருகப்பெருமான் பிரதான வீதியூடாக பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார். இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தத்தை காணக்கூடியதாக இருந்தது.
இந்தியாவில் ஒரே நேரத்தில் தந்தையும், மகனும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள கக்ரா பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள்.
அப்படி, ராம்லால் முண்டா என்ற நபரும் ஷகோரி என்ற பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 30 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் மகன் ஜித்தீஷ்வர் என்பவரும் கடந்த இரண்டாண்டுகளாக அருணா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமலேயே அவருடன் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் NIMMITA என்ற தொண்டு நிறுவனம் இந்த பகுதியில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் தம்பதிகளுக்கு இலவசமாக திருமணம் நடந்த முடிவு செய்தது. அதன்படி ஒரே நேரத்தில் 132 பழங்குடி தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
இதில் ராம்லால் – ஷகோரி தம்பதி மற்றும் அவர்களின் மகன் ஜித்தீஷ்வர் – அருணா திருமணமும் அடக்கம். இதன்மூலம் தந்தையும், மகனும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.இது குறித்து ஜித்தீஷ்வர் கூறுகையில், நிதி பிரச்சனையால் தான் என் தந்தை எனது தாயை திருமணம் செய்து கொள்ளவில்லை, நானும் அதனால் தான் அருணாவுடன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்தேன்.
தற்போது திருமணம் நடந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதை செய்து கொடுத்த தொண்டு நிறுவனத்துக்கு நன்றி என கூறியுள்ளார்.
தற்போது மோசடியான முறையில் பரிமாறப்படும் மின்னஞ்சல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தின் பெயரில் போலியான மின்னஞ்சல் பரிமாற்றல்கள் இடம்பெற்று வருவதகாக வங்கி அறிவித்துள்ளது.
நாட்டின் முதன்மை நிதி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, இந்த மோசடி இடம்பெற்று வருகிறது. ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தால், அவ்வாறான எவ்வித அறிவிப்புக்களும் வழங்கப்படவில்லை என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்தப் போலி மின்னஞ்ஞல் சம்பந்தமாக, அனைத்து நிதி நிறுவனங்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய திணைக்களத்தின் அறிவித்தல் எனத் தெரிவித்து மின்னஞ்சல் ஏதும் கிடைத்தால், அந்த மின்னஞ்சலை திறந்துப் பார்க்க வேண்டாம் என்றும் இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடமும் நிதி நிறுவனங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
போலியான மின்னஞ்சல் ஊடாக தீங்கிழைக்கும் இணைத்தளங்கள் இணைக்கப்படுவதுடன் தீங்கிழைக்கும் மென்பொருளை தரவிறக்கம் செய்யுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் மற்றும் நிறுவனங்கள் நடைபெறுகின்ற திருட்டு முயற்சி பற்றி அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத்தின் அறிவிப்பு (Notice From Central Bank of Sri Lanka EPF) எனும் தலைப்பிலான சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களை திறப்பதனையும் அல்லது அதனுள் காணப்படுகின்ற இணைப்புக்களை (Attachments) திறப்பதனையும் அல்லது அதில் காணப்படுகின்ற தொடர்புகளை(Links) அழுத்துவதனையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
அண்மையில் புத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெருமளவு வெடிபொருட்களின் பின்னணியில் புதிய ஆயுத குழுவின் உருவாக்கம் உள்ளதாக என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வண்ணாத்திவில்லு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள் புதிதாக உருவாகிவரும் தீவிரவாத குழு ஒன்றின் ஆயுதங்களா? என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரமபிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
80 ஏக்கர் தென்னந்தோட்டம் ஒன்றில் இருந்து இந்த ஆயுதங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பில் சந்தேகிக்கப்படும் 7 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன.
தேடுதலின் போது 100 கிலோகிராம் சி4 வெடிப்பொருட்கள், 75 கிலோகிராம் அலுமினியம், 20 லீற்றர் நைற்றிக் அசிட் போன்றவை கண்டுப்பிடிக்கப்பட்டன.
இந்தப் பொருட்கள் ஆயுதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுவை என்பது குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா உத்தரவிட்டார்.
வான்எல, ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பதினான்கு வயதுடைய சிறுமியை ஏழு மாத காலமாக துஷ்பிரயோகத்ற்குட்படுத்தி வந்துள்ளதாகவும், தற்போது நான்கு மாத கர்ப்பிணியாகியுள்ளதாகவும் வான்எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தாய் வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளதோடு, தந்தையின் அரவணைப்பில் சிறுமி இருந்துள்ளதாகவும் தந்தை வீட்டில் இருப்பதில்யெனவும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சந்தேக நபர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சிறுமி கந்தளாய் தள வைத்திய சாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நபரொருவர் தனது மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய பின்னர் தானும் உடம்பில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் மாத்தறை – கம்புறுபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறே இந்த கொலைக்கு காரணமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் கம்புறுபிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்த நபர் 42 வயதுடையவர் எனவும், மனைவி 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறையில் உணவுக்குள் போதைப்பொருளை ஒழித்து எடுத்துச் சென்ற முன்னாள் கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். ஹேரோயின் போதைப்பொருள் பக்கட்டுகளை ரோல்ஸிற்குள் மறைத்து, சிறைச்சாலையில் இருக்கும் கைதிக்கு கொடுக்க முயற்சித்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை தலைமை பொலிஸ் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கே போதைப்பொருள் கொடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் மாத்தறை, திஹகொட பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான முன்னாள் கடற்படை சிப்பாய் என தெரியவந்துள்ளது.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நபரை பார்க்க செல்வதற்கு குறித்த கடற்படை சிப்பாய் சென்றுள்ளார்.
சீனிச் சம்பல் பாண் மற்றும் ரோல்ஸ் ஒன்றையும் கொண்டு வந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டு சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது 500 கிராம் போதைப்பொருள் பக்கட் ஒன்று கிடைத்துள்ளது. பின்னர் சந்தேகத்தில் கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு-சிலாபம் வீதியில் வென்னப்புவ பகுதியில் லொரி ஒன்றுடன் சொகுசு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் சென்ற 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கோர விபத்து அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான மோட்டார் வாகனத்தில் 9 பேர் பயணித்துள்ளனர். அதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாலையில் மீன் ஏற்றிச் சென்ற லொறியின் பின்பக்கத்தில் மோட்டார் வாகனம் மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகிலுள்ள கோட்டக்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் மதியழகன் (30)., இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தை சார்ந்தவர் பொன்னி (24).
இவர்கள் இருவரும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணமும் செய்து கொண்டு., தற்போது இரண்டரை வயதுடைய பிரதீப் ராஜ் என்ற மகனும், பிறந்து நான்கு மாதங்கள் ஆன பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில்., மது பழக்கத்திற்கு ஆளான மதியழகன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த தகராறு செய்யும் வழக்கத்தை வைத்துள்ளார். இதன் காரணமாக சில நாட்கள் வேலைக்கு செல்வதும், சில நாட்கள் வீட்டில் படுத்துறங்கும் பழக்கத்தை வைத்துள்ளார். இதன் கரமாக இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த சமயத்தில், கடந்த மூன்று நாட்களாக பொங்கல் பண்டிகை என்பதன் காரணமாக மதியழகன் பணிக்கு செல்லவில்லை, நேற்று இரவு இல்லத்திற்கு வந்த மதியழகனிற்கும் – பொன்னிக்கும் இடையே வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மதியழகன் தொட்டிலில் உறங்கிக்கொண்டு இருந்த குழந்தை மீராவை சுவற்றில் ஓங்கி அடித்தார்.
குழந்தையை சுவற்றில் அடித்தவுடன் குழந்தையின் தலையில் இருந்து இரத்தம் ஒழுகவே., இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மதியழகன் வீட்டில் இருந்து தப்பியோடினர், இந்நிலையில், உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த பொன்னி மற்றும் அவரது உறவினர்கள், குழந்தையை மருத்துவர்கள் சோதித்த பின்னர், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்ட பொன்னி மற்றும் அவரது உறவினர்கள் கதறியளவே, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில்., காணும் பொங்கலன்று நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த விரும்பி., மனைவியிடம் சென்று பணம் கேட்டேன், மனைவி பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் குழந்தையை தூக்கி சுவற்றில் வீசினேன். இரத்த வெள்ளத்தில் துடித்த குழந்தையை கண்டு அதிர்ச்சிடைந்து அங்கிருந்து தப்பி சென்றேன் என்று தெரிவித்துள்ளார்.
தாயின் உடலை சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்
இந்தியாவின், ஒடிசா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணின் இறுதிச் சடங்குக்கு யாரும் வராத நிலையில் அவரது மகன் தனது இறந்த தாயின் சடலத்தை சைக்கிளில் வைத்து சென்று அடக்கம் செய் சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில், ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கர்பாபஹால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா என்பவர். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனது 17வயது மகனுடன் அவர் தனியாக அந்த கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் அந்த பெண் வீட்டுக்கு அருகில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது கால் தவறி விழுந்த அவர், அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஜானகியின் இறுதிச் சடங்கை செய்ய கிராமத்தினர் சாதியை காரணம்’ காட்டி கலந்து கொள்ள மறுத்துள்ளனர்.
இதையடுத்து, யாரும் உதவிக்கு முன் வராததால் தனியொருவராக இறுதிச் சடங்குகளைச் செய்த மகன் சரோஜ், தனது தாயின் சடலத்தை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரையில் தனிநபராக சைக்கிளில் வைத்து நடந்து சென்று காட்டுப் பகுதியில் அடக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் கேட்போரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுளத்தியுள்ளது.
பொங்கல் ஸ்பெஷலாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியானது. இப்படத்திற்கு நல்ல வசூலும் வரவேற்பும் இருந்து வருகின்றது. அதே வேளையில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்துடன் இப்படம் மோதியது. பேட்ட படத்தில் சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
அஜித், விஜய் என முக்கிய நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்த சிம்ரன் திருமணத்திற்கு பிறகும் தமிழ் சினிமாவுக்கு இப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தார். இதில் இவரை மிக அழகாக நடுத்தர வயது பெண் போல காட்டியிருந்தார்கள். இது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
சிம்ரன் தெலுங்கு படங்களிலும் நடித்தவர். பேட்ட படம் தெலுங்கிலும் வெளியானது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு தியேட்டர் கிடைக்காத திண்டாட்டம் இருந்தாலும் பின்னர் வரவேற்பு கூடியது.
இந்நிலையில் பேட்ட படத்தால் சிம்ரனுக்கு அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் அம்மாவாக நடிக்க வாய்ப்பு தேடிவந்துள்ளதாம். சூப்பர் ஹீரோயினாக வலம் வந்த சிம்ரன் இதனால் என்ன செய்வது என யோசனையில் இருக்கிறாராம்.