போருக்கு தயாராகுங்கள் : சீன ஜனாதிபதியின் பேச்சால் உலக நாடுகளிடையே பரபரப்பு!!

தென்சீனக்கடல் விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் தொடர்ந்து மோதி வரும் நிலையில் போருக்கு தயாராகுங்கள் என சீன அதிபர் அறிவித்துள்ள உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர நாடு என்று பிரகடனப்படுத்திக் கொண்ட தைவானை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவான் சீன ஆளுகைக்கு உள்பட்ட ஒரு பகுதியே என்று சமீபத்தில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் பேசியிருந்தார். மேலும், தைவானை மீண்டும் சீனா உடன் இணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால், சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தைவானின் பாதுாப்புக்கு ஒத்துழைப்பு தரும் ஒப்பந்தந்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் கையெழுத்திட்டார்.

இதனால், சீனா – அமெரிக்கா நாடுகளுக்கிடையே பிரச்சனை தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் இந்த கையெழுத்து சீனாவை கோபப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ராணுவ கமிஷன் கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஜின் பிங், மிக வேகமாக நவீனமாகி வரும் சீன ராணுவம், போருக்கும், எத்தகையதொரு நெருக்கடியையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்கவேண்டும். சீன கம்யூனிஸ்ட் இடும் கட்டளைகளை உறுதிபட நிறைவேற்றவேண்டும் என கூறியுள்ளார்.

சீன அதிபரின் இந்த கருத்துக்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் புகையிரதக் கடவையை தகர்த்துக் கொண்டு உள்நுழைந்த பேரூந்து : மயிரிழையில் உயிர்தப்பிய பயணிகள்!!

மயிரிழையில் உயிர்தப்பிய பயணிகள்

வவுனியா – மன்னார் வீதியில் காமினி வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள புகையிரதக் கடவையை உடைத்துக் கொண்டு இ.போ.சபை பேரூந்து உள்நுழைந்த நிலையில் புகையிரத மற்றும் பேரூந்து சாரதிகளின் விரைவான செயற்பாட்டால் சுமார் 50 வரையிலான பயணிகள் தப்பியுள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பேரூந்து ஒன்று சென்றுள்ளது. குறித்த பேரூந்து வவுனியா – மன்னார் வீதியில் உள்ள காமினி வித்தியாலத்திற்கு அண்மையில் பயணித்த போது யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்திற்காக அப்பகுதியில் இருந்த புகையிரதக் கடவை மூடப்பட்டுள்ளது. எனினும் மூடப்பட்டதை அவதானிக்காத இ.போ.சபை பேரூந்து பாதுகாப்பு கடவை ஒன்றினை உடைத்துக் கொண்டு புகையிரதப் பாதைக்குள் நுழைந்தது.

இதனை அவதானித்த புகையிரத சாரதி புகையிரதத்தின் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்த அதேவேளை, சுதாகரித்த இ.போ.சபை பேரூந்து சாரதி உடனடியாக பேரூந்தை பின்பக்கமாக செலுத்தி விபத்தில் இருந்து பேரூந்தை காப்பாற்றியுள்ளார்.

இதன் போது பேரூந்தில் இருந்த 50 வரைலயிலான பயணிகளும் கூச்சலிட்டு பதறியடித்து பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். இதன்பின் குறித்த புகையிரதம் தொடர்ந்தும் பயணித்தது.

குறித்த குழப்ப நிலை தணிவதற்குள், மற்றொரு புகையிரதம் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி அதே வழித்தடத்தில் வந்துள்ளது. இதன்போது புகையித கடவைக் காப்பாளர் புகையிரத பாதுகாப்பு கேற்றை மூடாது அசமந்தமாக இருந்துள்ளார். பயணிகள் புகையிரத கடவையை கடந்து சென்று கொண்டிருந்ததுடன், வாகனங்களும் பயணித்துள்ளன.

இந்நிலையில் அந்த வழித்தடத்தில் வந்த புகையிரம் ஒலிச் சமிஞ்ஞை ஒலித்தபடி வேகத்தை கட்டுப்படுத்தி புகையிரதத்தை நிறுத்தியமையால் மீண்டும் ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. இச் சம்பவங்கள் தொடர்பில் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இ.போ.சபை பேரூந்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

வவுனியாவில் மரத்தில் தீப்பற்றியமையால் பதற்றம்!!

 

மரத்தில் தீ

வவுனியா சிவபுரம் பகுதியில் இன்று (05.01) இரவு 8.30 மணியளவில் மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தமையால் பதற்றமான சூழ்நிலை ஏற்ப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

சிவபுரம் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் உள்ள ஆலமரத்திற்கு அக்காணியில் வசிப்போர் வழைமைபோல விளக்கு ஏற்றி வந்துள்ளனர். இந்நிலையில் ஏற்றபட்ட விளக்கின் மூலம் மரத்தில் தீப்பற்றியுள்ளது.

இதனால் மரத்தின் ஒருபகுதி பற்றிஎரிந்து முறிந்து விழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு பூவரசங்குளம் பொலிசாரால் தெரியபடுத்தபட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் மரதன் ஓட்டப்போட்டி!!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முதலாம் வருட ஆசிரிய மாணவர்களுக்காக வருடா வருடம் இடம்பெறும் மரதன் ஓட்டப்போட்டி நேற்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கதிரேசன் சுவரணராஜா தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலாம் வருட ஆசிரிய மாணவர்களில் 50 ஆண்களும் 223 பெண்களும் போட்டியில் பங்குபற்றினர்.

இப்போட்டியில் ஆண்ஆசிரிய மாணவர்களில் உடற்கல்வி பாடத்துறையைச் சேர்ந்த செலவன் எஸ்.விதுசன் முதலாம் இடத்தினையும் விவசாயத்துறையினைச் சேர்ந்த எம்.பூவரசன் இரண்டாம் இடத்தினையும் உடற்கல்வி துறையினைச் சேர்ந்த எ.கிரியோன் குரூஸ் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

பெண் ஆசிரிய மாணவர்கள் சார்பாக உடற்கல்வித் துறையினைச் சேர்ந்த செல்வி பி.சோபனா முதலாம் இடத்தினையும் இந்துசமய துறையினைச் சேர்ந்த கே.கயல்விழி இரண்டாம் இடத்தினையும் உடற்கல்வித் துறையினைச் சேர்ந்த செல்வி எ.யூஜினா மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வு பெற்ற பீடாதிபதி கு.சிதம்பரநாதன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீர்ர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.

வவுனியா புதூர் பகுதியில் ஆயுதம் மீட்பு தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணை!!

 

பொலிசார் தீவிர விசாரணை

வவுனியா புதூர் பகுதியில் பிஸ்ரல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 2 ஆம் திகதி புளியங்குளம், புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் பொலிசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதிக்கு சிவில் உடையில் நான்கு பொலிசார் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது அவ்வீதியில் சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தனது கையில் வைத்திருந்த மர்மப் பொதியை தூக்கி எறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார்.

தாம் அவரைத் துரத்திச் சென்றபோதும் அவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர். மறுநாள் காலையில் இருந்து மதியம் வரை இராணுவம் பொலிசார் இணைந்து அப்பகுதியில் சுற்றி வளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடத்திய போதும் எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் குறித்த பொதியை பொலிசார் பார்வையிட்டபோது அதனுள் கைத்துப்பாக்கி அதற்குரிய ரவைகள், கைக்குண்டுகள் நான்கு, ஸ்மாட் கைத்தொலைபேசிகள் 2 அதற்குரிய மின்கலத்துடனான மின் வழங்கி என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிசார் குறித்த தொலைபேசி முன்னாள் போராளி ஒருவரினுடையது எனவும், அவர் வவுனியாவில் வசித்து வருவதாகவும் தெரிவித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையை உலுக்கிய கோரவிபத்து : இருவர் பரிதாபமாக பலி!!

 

இலங்கையை உலுக்கிய கோரவிபத்து

ஜா- எல – வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 2.15 மணியளவில் கொள்கலன் பார ஊர்தி வீதியை விட்டு விகியதால் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி அதிக வேகத்தில் பயணித்தபோது வீதியின் அருகில் இருந்த உணவகத்திற்குள் புகுந்த கொள்கலன், அருகில் இருந்த முச்சக்கரவண்டி ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த பார ஊர்தி ஒரு வீட்டின் மதிலை உடைத்துச்சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதி வீட்டின் முன் பகுதியை உடைத்து கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாரஊர்தியின் உதவியாளர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பார ஊர்தியின் சாரதி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வீதியில் நின்ற மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியாவில் 90 வருட பாடசாலை வரலாற்றை மாற்றி அமைத்த வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலய மாணவி!!

 

அல்- இக்பால் மகாவித்தியாலய மாணவி

வவுனியா அல்- இக்பால் மகா வித்தியாலயத்தின் 90 வருட வரலாற்றை மாற்றியமைத்து சாதனை பெறுபேற்றினை முஹமட் லெப்பை பாத்திமா றிப்னா என்ற மாணவி பெற்றுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இதில் வர்த்தகப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்ற மாணவி முஹமட் லெப்பை பாத்திமா றிப்னா மாவட்ட மட்டத்தில் 9 ஆவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வவுனியா, சூடுவெந்தபுலவு அல்- இக்பால் மகா வித்தியாலயம் ஆரம்பமாகி 90 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் தோற்றிய குறித்த மாணவி பாடசாலை வரலாற்றும் முதன் முதலாக வர்த்தகப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டடத்தில் 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அத்துடன் கலைப்பிரிவில் ஜகுபர் பஸ்லிஹா என்ற மாணவி ஏ2பி சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 26 ஆவது நிலையைப் பெற்றுள்ளார். பின்தங்கிய குறித்த பாடசாலை மாணவிகளின் பெறுபேற்றினால் அப்பாடசாலை மட்டுமன்றி அக்கிராம மக்களும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

அண்டார்டிக்காவில் நடக்கும் மர்மம் : இறுதியாக ஏலியன்களின் ரகசிய ராணுவதளம் கண்டுப்பிடிப்பு : பரபரப்புத் தகவல்!!

 

பரபரப்புத் தகவல்

அண்டார்டிக்காவில் ஏலியன்களின் ரகசிய ராணுவதளம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்டார்டிக்காவில் பல மர்மங்கள் இன்று வரையுலும் புதைந்து கிடக்கின்றது.

அந்தவகையில் அண்டார்டிக்காவில் கூகுள் மேப் உதவியுடன் இரவு நேரங்களில் வினோத உருவங்கள் நடமாடுவது இது ஏலியன்கள் தான் என்று சொல்லப்பட்டது. ஆனால் பல்வேறு கட்ட ஆய்வின் அடிப்படையில், அவைகள் நீர் வாழ் உயிரினங்கள் என்று கூறுகின்றனர்.

இதையும் தாண்டி அங்கு மர்ம உருவம் நடமாடுகின்றனர் என்று கூறப்படுகின்றது. ஏலியன்கள் பற்றிய சர்சைகள் இன்றளவிலும் பல உலக நாடுகள் பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. 2ம் உலக போரில் போது, நாசீஸ்கள் இந்த ஏலியன்கள் அமைத்து இருந்த ராணுவ தளத்தை கண்டுபிடித்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.

இந்நிலையில் ஏலியன்கள் ரகசியமாக அண்டார்டிக்காவில் ராணுவ தளம் அமைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கூகுள் எர்த் மேப் உதவியுடன் பல்வேறு விடயங்களும் கிடைத்துள்ளன.

பனிப்பாறைகளுக்கு நடுவே அமைந்துள்ள பனிமலைகளுக்கு நடுவே அடைந்துள்ள பிரமாண்ட குகைகள் நுழைவாயிலை கண்டுபிடித்துள்ளனர். அங்கு தான் ஏலியன்கள் ஏலியன்கள் ரகசியமாக ராணுவ தளங்கள் அமைத்து இருக்கலாம் என்று கூற்று உள்ளது.

அங்கு ஏராளமான மர்மான வேற்று கிரக பொருட்களும் ஏராளமான தொழில் நுட்ப பொருட்களையும் கண்டுபிடித்துள்ளனர். யுஎப்ஓ என்படும் அடையாளம் கண்டு உணராத பறக்கும் விமானம், ஏலியன்களின் டெக்னாலஜி மெஷின்களும் இருப்பதாக ஆய்வாளர்களும் கருதுகின்றனர். மேலும் அண்டார்டிக்காவில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதாகவும் இன்று வரை பல்வேறு அதிர வைக்கும் ஆய்வு முடிவுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

35,000 அடி உயரத்தில் ஒரு காதல் : நடுவானில் கலங்கிய பெண்!!

 

நடுவானில் கலங்கிய பெண்

இத்தாலியிலிருந்து துபாய் நோக்கி சென்று கொண்டிருந்து விமானத்தில் பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் வித்தியாசமான முறையில் காதலை பரிமாறிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஸ்டிபானோ, இவரது தோழி விக்டோரியா. இருவரும் நெடுகாலமாக நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் ஸ்டிபானோ விக்டோரியாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். விக்டோரியா விமான பணிப்பெண்ணாக இருந்ததால் அவரிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்த நினைத்த ஸ்டிபானோ, நடுவானில் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

விமானத்தினுள் சென்றதும் பயணிகளிடம் தான் ஒரு பணிப்பெண்ணை காதலிப்பதாகவும் அதை வெளிப்படுத்த அனைவரும் உதவுமாறும் கேட்டு கொண்டுள்ளார். இதை கண்டு அனைத்து பயணிகளும் உதவ முன்வந்தனர்.

விமானத்தினுள் பல பிரிவுகள் இருக்கும் என்பதால் விக்டோரியா மற்றொரு பிரிவில் இருக்கும் போது, ஸ்டிபானோ தான் இருக்கும் பகுதியில் அனைவரிடமும் இதயவடிவிலான அலாங்கார பொருட்கள் மலர்கள், புகைப்படங்கள் வழங்கினார்.

தொடர்ந்து அனைவரும் வாழ்த்த அவர் தன் காதலை முழங்காலிட்டு வெளிப்படுத்த, முதலில் அதிர்ந்து போன விக்டோரியா பின் அழுதவாறே காதலை ஏற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட தரையிலிருந்து 35,000 அடிக்கு மேல் இருவரும் நிச்சயம் செய்து கொண்டுள்ளனர். தற்போது அந்த விமான நிறுவனம் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

52 வயதில் 16வது குழந்தை பெற்றெடுக்க தயாராகும் தாய் : எச்சரிக்கும் மகள்!!

 

எச்சரிக்கும் மகள்

பிரித்தானியாவைச் சேர்ந்த வாடகை தாய் தன்னுடைய 52 வயதிலும் 16-வது குழந்தை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளதால், பலரும் இது ஆபத்தான முடிவு என்று கூறி வருகின்றனர்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Carole Horlock. 52 வயதான இவர் இது வரை 15 குழந்தைகள் பெற்றெடுத்துள்ளார். அதில் இவருக்கு இரண்டு சொந்த குழந்தைகள், மற்ற 13 மூன்று வேறொரு தம்பதிக்கு பெற்றெடுத்து கொடுத்துள்ளார். இதில் இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளன.

இந்நிலையில் இவர் 14-வது குழந்தை (மொத்தம் 16 குழந்தைகள்) ஒன்றை பெற்றெடுக்க தயாராக இருப்பதாக பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் குட்மார்னிங் பிரிட்டன் என்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

ஆனால் இது அவருடைய மகள் ஒருவருக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் வயது அதிகரித்து செல்கிறது. இதற்கு மேலும் குழந்தை பெற்றெடுத்தால் அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். இதே போன்று மருத்துவர்களும் இந்த வயதிற்கு மேல் குழந்தை என்பது சற்று ஆபத்தானது என்று கூறியுள்ளனர்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவரிடம் கர்ப்பமாவதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டீர்களா என்று கேட்ட போது, அவரோ இல்லை இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரசிக்கிறேன், அனுபவிக்கிறேன் உண்மையாக சொல்லப்போனால் நான் காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அவருடைய மகள் மேகன் கூறுகையில், அவர் தொடர்ந்து கர்ப்பமாவது எனக்கு பிடிக்கவில்லை, இவர் எனக்கு ஒரு அம்மா மட்டுமில்லை, நல்ல ஒரு நண்பர், அவர் எந்த ஒரு ரிஸ்கையும் நான் எடுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இணையவாசிர்கள் பலரும் இது ஒரு ஆபத்தான முடிவு என்று கூற, ஒரு சிலர் கர்ப்பம் என்பது நமக்கு கடவுள் கொடுத்த வரம் அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். Carole Horlock-வோ என்னுடைய உடல்நிலை நன்றாகவே இருக்கிறது . எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். இப்படி குழந்தை பெற்றெடுத்த போது Carole Horlock அறுவை சிகிச்சைகள் எல்லாம் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது மாடியிலிருந்து வீசியெறியப்பட்ட இளம்பெண் : அவர் மீதே குற்றம் சாட்டிய நீதிமன்றம்!!

 

இளம்பெண்

பிரான்சில் தனது கணவரால் இரண்டாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக வீசியெறியப்பட்டதால் கழுத்துக்குக் கீழ் செயல்படாமல் போன ஒரு பெண் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, அவர்மீதும் தவறு இருப்பதாகக் கூறி அவருக்கு வழங்கப்பட இருந்த இழப்பீட்டை பாதியாக குறைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் அந்தப் பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Aida (31) என்று அழைக்கப்படும் அந்தப் பெண்ணை அவளது கணவர் தாக்குவது வழக்கம். ஒரு நாள் அவளது கணவர் Aidaவின் முன்னிலைமையிலேயே அவர்களது வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவரை தாக்க, அங்கு வந்த பொலிசார், Aida இனி அந்த வீட்டில் தங்குவது பாதுகாப்பு இல்லை என்று கூறி அவரை அங்கிருந்து போகச் சொல்லியுள்ளனர். ஆனால் Aida அங்கிருந்து செல்லவில்லை.

பின்னர் Aidaவுக்கும் அவரது கணவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையில் அவரது கணவர் Aidaவை ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார். இரண்டாவது மாடியிலிருந்து விழுந்த Aida சுயநினைவின்றிக் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பொலிசாரை அழைக்க, பொலிசார் அவரது கணவரைக் கைது செய்ததோடு Aidaவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

கீழே வீசியெறியப்பட்டதில் Aidaவுக்கு கழுத்துக்கு கீழே செயல்படாமல் போய்விட்டது. அவரது கணவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, Aida சார்பில் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது.

அவருக்கு 90000 யூரோக்கள் இழப்பீடு வழங்குவதாக முடிவு செய்யப்பட்ட நிலையில் Aidaவின் வழக்கறிஞர்கள் அந்த தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினர்.

அந்த நேரத்தில் மற்றொரு நீதிபதி குறுக்கிட்டு Aidaவுக்கு வழங்குவதாக முடிவு செய்யப்பட்ட தொகையில் பாதி தொகையைதான் வழங்க முடியும் என்று கூறிவிட்டார்.

கணவனின் மூர்க்க குணம் தெரிந்து பொலிசார் Aidaவை வீட்டை விட்டு செல்லுமாறு கோரியும் அவர் செல்லாமலிருந்தது அவரது குற்றம் என்று கூறியுள்ள நீதிபதி, அதனால் அவருக்கு பாதி தொகைதான் இழப்பீடாக வழங்கப்படும் என்று கூறிவிட்டார்.

அந்த இரவு நேரத்தில் ரயிலைப் பிடிக்கவோ, தனது நண்பர்கள் வீட்டுக்கோ அல்லது அரசு காப்பகங்களுக்கோ செல்ல முடியாத சூழல் இருந்ததாலேயே தங்கள் கட்சிக்காரர் அவரது கணவர் வீட்டில் தங்கியதாக கூறி மேல் முறையீடு செய்துள்ளனர் Aidaவின்வழக்கறிஞர்கள்.

14 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் பெண் கர்ப்பம் : அதிர்ச்சியில் வைத்தியர்கள்!!

 

அதிர்ச்சியில் வைத்தியர்கள்

அமெரிக்காவின் தென்மேற்கு மாகாணமான அரிசோனாவில் 14 ஆண்டுகளாக கோமாவில் படுத்திருந்த பெண் ஒருவர் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண்மணி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் பிள்ளை பெறும் வரை இந்த விவகாரம் தொடர்பில் எந்த தகவலும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் பெயர் வெளியிடப்படாத குறித்த பெண்மணி கடந்த 14 ஆண்டுகளாக கோமா நிலையில் படுத்திருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி அவர் பிள்ளை பெற்றுள்ளார். இந்த விவகாரத்தில் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் பலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், குறித்த பெண்மணி பிள்ளை பெறும் வரை அந்த மருத்துவமனை ஊழியர்கள் எவருக்கும் இத்தகவல் தெரியவில்லை என தெரியவந்துள்ளது. நீண்ட பல ஆண்டுகளாக கோமாவில் இருந்தவர் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், அப்பகுதி மக்கள் பலர் கூட்டமாக சென்று குறித்த பெண்மணியை பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் குறித்த மருத்துவமனையில் பெண் நோயாளிகளின் அறைக்கு ஆண் ஊழியர்கள் கண்டிப்பாக ஒரு பெண் ஊழியருடன் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதிமுறையும் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவ சேவையில் ஈடுபட்டுவரும் குறித்த மருத்துவமனையில் இதுபோன்ற ஒரு செயல் அரங்கேறுவது இதுவே முதன்முறை என தெரிவித்துள்ள நிர்வாகம், பொலிஸ் விசாரணை நடைபெற்றுவருவதால் குறித்த விவகராம் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காதலனுடன் தான் வாழ்வேன் என அழுது புரண்ட காதலி : பெண் பொலிசார் செய்த தில்லு முல்லு அம்பலம்!!

 

அழுது புரண்ட காதலி

தமிழகத்தில் காதல் கணவனுடன் சேர்த்து வைக்க கோரி போராடிய பெண்ணை பொலிசார் பெற்றொருடன் அனுப்பி வைக்க முயன்றதால், அந்த பெண் அழுது புரண்டு இறுதியில் காதலனுடன் சேர்த்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ்(35). மீன்பிடி தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான டயானா என்பவரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பொருளாதாரத்தில் டயானா குடும்பத்தைவிட விஜயராஜ் மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதால், டயானாவின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒருவரை ஒருவர் ரகசியமாக பார்த்து பேசிக் கொண்டு காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த தகவலும் டயானாவின் வீட்டிற்கு தெரியவந்ததால், இதற்கு மேல் விட்டால் சரிபட்டு வராது என்று கூறி, வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதில் தீவிரம் காட்டியுள்ளனர். இதை அறிந்த விஜயராஜ் மற்றும் டயானா கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரள மாநிலம் ஒட்டசேகர மங்கலம் பகுதிக்குச் சென்று ரகசியமாகப் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

அவர்கள் திருமணம் செய்துகொண்டதை மறைத்துவிட்டு தங்கள் வீடுகளில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விஜயராஜ் டயானாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதை அறிந்த டயானாவின் தந்தை சூசையா, டயானாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று வீட்டு சிறையில் வைத்துள்ளார்.

இது குறித்து விஜயராஜ் கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் திகதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் தன் மனைவியை அவரது அப்பா வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டுக் கொடுக்கும் படியும் கூறியுள்ளார். இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் டயானாவின் தந்தை சூசையா குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 3-ஆம் திகதி புகார் அளித்தார்.

அதில், போலி ஆவணங்கள் மூலம் தன் மகளை விஜயராஜ் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும் விஜயராஜ் தன் மகளை மிரட்டி வருவதால், அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால் இது குறித்து உண்மை நிலையை அறிய வேண்டும் என்பதற்காக பொலிசார் இரு வீட்டாரையும் வரவழைத்துள்ளனர்.

அப்போது டயானா, நான் விஜராஜுடன் வாழ்க்கை நடத்தியது உண்மை, நான் மேஜர் அவருடன் செல்வேன் என்று பொலிசாரிடம் உறுதியாக கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த டயானாவின் தந்தை, தன் மகளை தன்னுடன் திரும்ப அனுப்பி வைக்குமாறு காவல்துறையிடம் கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்த பெண் பொலிசார் டயானாவை தனியாக அழைத்துச் சென்று பெற்றோருடன் செல்ல கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே டயானாவை குண்டுகட்டாக காரில் ஏற்றிப் பெற்றோருடன் அனுப்பி வைக்க அவர்கள் முயற்சி செய்துள்ளனர்.

அந்த நேரத்தில் டயானா சத்தம் போட்டு காரில் ஏற மறுத்து அங்கு அழுது உரண்டு புரண்டுள்ளார். சத்தம்கேட்டு பொதுமக்களும் அப்பகுதியில் திரண்டனர். சுதாகரித்துக் கொண்ட பொலிசார் டயானாவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக் அறிவுறுத்தலின் பேரில் டயானாவை அவரின் காதலன் விஜயராஜுடன் காவலர்கள் அனுப்பி வைத்தனர்.

இலங்கை தமிழ் இளைஞன் கொலை வழக்கு : காதலியின் தம்பி சிறை செல்வாரா?

 

இலங்கை தமிழ் இளைஞன் கொலை வழக்கு

இலங்கை தமிழ் வம்சாவளியினரான ஒரு இளைஞர் தனது ரகசிய காதலியின் வீட்டிலிருக்கும்போது அந்த பெண்ணின் தம்பி அவரை கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் அவன் சிறைக்கு செல்வாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.

பிரித்தானியாவின் Watfordஇல் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் பிள்ளைகள் மீது மிகவும் கட்டுப்பாடுகள் விதித்திருந்த நிலையில், வீட்டுக்கு நண்பர்களை அழைத்து வருவதற்கும் பிள்ளைகளுக்கு அனுமதியளித்திருக்கவில்லை.

இந்நிலையில் வெளிநாடு செல்ல வேண்டி வந்ததால் தங்கள் உறவினர்களிடம் பிள்ளைகளை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளுமாறு கூறியிருந்தனர். அந்த குடும்பத்தின் மூத்த பெண்ணான 19 வயது இளம்பெண்ணுக்கு இலங்கை தமிழ் வம்சாவளியினரான Risaan Udayakumar (18) என்னும் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு நாள் வீட்டில் தனது தம்பி இல்லாத நேரத்தில் தனது ரகசிய காதலனான Risaanஐ வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள் அந்த பெண். அரை மணி நேரம் அவர்கள் படுக்கையறையில் சேர்ந்து இருந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவே, பயந்துபோன அந்த பெண், Risaanஐ வீட்டின் பின்னால் ஒளித்து வைத்துவிட்டு கதவைத் திறந்திருக்கிறாள்.

ஏற்கனவே தனது அக்காவுக்கும் Risaanக்கும் தொடர்பு இருக்கலாம் என்னும் சந்தேகத்திலிருந்த 16 வயதுள்ள அவளது தம்பி, படுக்கையறைக்குள் வந்து யாராவது இருக்கிறார்களா என்று தேடியிருக்கிறான். அங்கு யாரும் இல்லை என்றதும், வீடு முழுவதிலும், வீட்டிற்கு வெளியேயும் தேடிய அவன், வீட்டின் பின்னால் ஒளிந்திருந்த Risaanஐக் கண்டதும், ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியிருக்கிறான்.

Risaan அலறிய சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த வழிப்போக்கர் ஒருவர் அவசர உதவி எண்ணை அழைக்க, பொலிசாரும் மருத்துவ உதவிக் குழுவினரும் விரைந்து வந்துள்ளனர். பொலிசார் கத்தியால் குத்திய நபரைக் கைது செய்ய, கத்தியால் குத்தப்பட்ட Risaan மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட Risaan சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். பொலிஸ் விசாரணையில் தான் Risaanஐ தாக்கியது உண்மைதான் என்றும் ஆனால் கொலை செய்யவில்லை என்றும் அந்த பெண்ணின் தம்பி கூறியிருக்கிறான். இன்றும் வழக்கு தொடரும் நிலையில், அவன் சிறைக்கு செல்வானா என்பது இன்னமும் முடிவாகவில்லை.

-தமிழ்வின்-

கருவுற்றிருந்த மனைவியை  அலட்சியப்படுத்திய கணவன் : விடிந்ததும் பார்த்தால் கணவன் வயிற்றில் குழந்தை!!

 

கணவன் வயிற்றில் குழந்தை

பெண்ணுக்கு கடவுள் வழங்கியிருக்கும் மகத்தான வரம். தாய்மை. ஒரு கரு உருவான நிமிடத்தில் இருந்து, குழந்தையைப் பிரசவிக்கும் நிமிடம் வரையிலான காலம் உண்மையிலேயே ஒரு தாய்க்குக் கிடைக்கும் ஆனந்த அனுபவம்.

ஆனால் சில ஆண்கள் இதை உணருவதில்லை. எப்போதும் போலவே அலட்சியமாக பேசுவார்கள். அவ்வாறு இந்த காணொளியில் ஒருவர் கருவுற்றிருக்கும் தன் மனைவியை எப்படி நடத்துகிறார் என்று பாருங்கள்.

இதே நிலைமை ஆண்களுக்கு வந்தால் பெண்கள் எப்படி கவனித்து கொள்வார்கள் என்பதை எடுத்துரைக்கின்றது இந்த காணொளி. ஆண்கள் கர்ப்பமானால் இது தான் கதி.

தூங்கும் போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் கன்னத்தை கிள்ளிய நடிகை திரிஷா!!

 

நடிகை திரிஷா

சினிமாவில் வாரிசு நடிகர்கள் நுழைவது புதிய விஷயம் கிடையாது. மற்ற மொழிகளை விட பாலிவுட்டில் அப்படி நடிக்க வரும் பிரபலங்களை பார்க்கலாம்.

இப்போது தமிழ் சினிமாவில் எடுத்துக் கொண்டால் சியான் விக்ரமின் மகன் துருவ் வர்மா என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது, படமும் அடுத்த மாதம் வெளியாகிறது.

பட புரொமோஷனுக்காக துருவ் பேட்டிகள் கொடுத்து வருகிறார். அதில் ஒன்றில் உங்களுக்கு பிடித்த நாயகி யார் என கேட்க அதற்கு அவர், எனக்கு சின்ன வயதில் இருந்தே திரிஷாவை பிடிக்கும், ஆனால் சந்தித்தது இல்லை.

ஒருமுறை பிரிவியூ தியேட்டரில் இருந்தபோது நான் தூங்கிவிட்டேன், அப்போது அவர் வந்து என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளார்.