கிளிநொச்சியில் உயிரிழந்த பெண் தொடர்பில் வெளிவந்த மேலும் சில தகவல்கள்!!

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உடனடியாக செயற்பட்டு குறித்த யுவதி யார் என தெரிந்துகொள்வதற்கு கடும் முயற்சி செய்திருந்தனர்.

இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற தடயப்பொருட்களை அடிப்படையாக வைத்து மிகவும் சாதுரியமாக செயற்பட்ட ஊடகவியலாளரும், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் உயிரிழந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்திருந்தனர்.

அந்த வகையில் “முல்லைத்தீவு – முறுகண்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய கறுப்பையா நித்தியகலா” என்பவரே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

எனினும் குறித்த பெண் தொடர்பில் தற்போது மேலும் சில தகவல்கள் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கணவரால் கைவிடப்பட்டவர் என தெரியவந்துள்ளது. மேலும், இவருடைய பிள்ளை தொடர்பாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய பிள்ளை மாற்றுத்திறனாளியான 5 வயதுடைய பெண் பிள்ளை என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இவர் 28ஆம் திகதி மாலை 7.15 மணியளவில் ஆடைத்தொழிற்சாலையில் தனது கடமைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார் என அறியமுடிகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த பெண்ணின் சடலத்தை சிறிய குட்டை ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவரே முதலில் கண்டு கிளிநொச்சி பொலிஸாருக்கும், கிராம அலுவலருக்கும் தகவல் வழங்கியுள்ளார்.

வவுனியாவில் சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வடமாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று (30.08.2018) காலை 9 மணியளவில் எதிர்ப்பு போராட்ட ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.

தாயாகப் போற்றப்படும் பெண்கள் இன்று கேவலமாக இழிவுபடுத்தப்படுகின்றார்கள். இவ்வாறு கேவலப்படுத்தி வருகின்ற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .

தங்களுடைய நிர்வாணப்படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு வரும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்றும் பாடசாலை மாணவர்களிடையே நிலவும் போதைப்பொருள் மற்றும் கைத்தொலைபேசி, மாலைநேர வகுப்புக்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.

வருங்கால சமூகம் பாதிப்பிற்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபைக்கு முன்பாக ஆரம்பமான போராட்டமானது ஏ9 வீதியூடாக வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தினை சென்றடைந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இணையத்தளங்களில் பெண்கள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வதை தடை செய்யவேண்டும், மீண்டும் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனில் மக்களாகிய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி மாலைநேர வகுப்புக்களை தடை செய்ய வேண்டும், தமது லீலைகளை வெளியிடுவதால் ஏனைய பெண்களின் நிலை?, பாடசாலை மாணவர்களின் போதை பாவனையை முற்றிலும் தடுப்போம் என்ற பல்வேறு பாதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.

மகஜரினை பெற்றுக்கொண்ட வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாகவும் , உரிய தரப்பினருக்கு தகவலை வழங்கி தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

இணையத்தில் புயலை ஏற்படுத்திய 5 வயது இளவரசி : அப்படி என்ன செய்தார் தெரியுமா?

 

இஸ்ரேயலை சேர்ந்த 5 வயது சிறுமி தன்னுடைய நீளமான கூந்தலால் இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறார்.

இஸ்ரேயலை சேர்ந்த 5 வயது சிறுமியான மியா அவ்லாளோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 50ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர்.

அவருடைய நீளமான கூந்தலும், அழகான கண்களும் அவருக்கு இன்னும் அழகை கூட்டுவதாக, உலகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

இஸ்ரேயல் நாட்டின் மிகவும் பிரபலமான முடி ஒப்பனையாளர் Sagi Dahari தான் ஒருமுறை, பிரித்தானியாவின் புகழ்பெற்ற இதழ் ஒன்றிற்காக சிறுமியை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அன்று முதல் மிகப்பெரிய நட்சத்திரமாக சிறுமி வளர்ந்துவிட்டார்.

இதுகுறித்து Sagi பேசுகையில், மியாவுடன் வேலை செய்வது மிகவும் எளிதானது. பொறுமையாக சிரித்துக்கொண்டே அமர்ந்திருப்பார் என தெரிவித்துள்ளார். அதேசமயம் தான் மியாவை எப்பொழுதும் “இளவரசி மியா” என்று தான் அழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மியாவின் முடி என்னுடைய முடியை விட அழகாக இருப்பது எனக்கு பெரிய வருத்தத்தை தருகிறது என பெண் ஒருவர் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபோன்று மியாவிற்கு ஆதரவாக ஏராளமானோர் கருத்து தெரிவித்தாலும், எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு சிலர் கருத்து பதிவிட்டுள்ளார்.

சிறுவயதில் குழந்தைகளை விளையாட விட வேண்டும். உங்களுடைய ஆசைக்காக குழந்தையை இப்படி மொடலிங் செய்ய விடக்கூடாது. எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் நான் இப்படி செய்திருக்க மாட்டேன் என சில பெண்கள் பதிவிட்டுள்ளனர்.

மகனாக பார்த்தோம் உன்னை….இப்படி சீரழித்துவிட்டாயே : ஒரு தாயின் கதறல்!!

சென்னையில் மகனாக பார்த்த நபர் தங்கள் மகளின் வாழ்க்கையை சீரழித்ததை தாங்கிகொள்ள முடியாத தாய் கண்ணீர் சிந்தியுள்ளார்.

மாரியம்மாள் என்பவரின் மகள் மகள் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துவருகிறார்.

மாரியம்மாள், வீட்டு வேலை செய்கிறார். அவரின் கணவர், அந்தப் பகுதியில் உள்ள புதிதாகக் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணியாற்றுகிறார்.

மாரியம்மாளின் கணவர் வேலைபார்க்கும் இடத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் எலெக்ட்ரீஷியனாக வேலைபார்த்தார். இதனால் இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டது.

26 வயதாகும் ராஜசேகருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில், அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்க அடுக்குமாடி குடியிருப்புக்கு அடிக்கடி சென்றுள்ளார் அந்தச் சிறுமி. அப்போது ராஜசேகருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்குச் சென்றுள்ளார் ராஜசேகர். இருவரும் நெருங்கிப் பழகினர். இதில், சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

ஆனால், அந்தத் தகவலை பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. 5 மாதங்கள் கடந்ததால், அவரின் உடலில் மாற்றம் தெரிந்தது. அதைக் கவனித்த மாரியம்மாள், மகளிடம் விசாரித்தார். முதலில் எந்தத் தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு, கர்ப்பமாக இருக்கும் தகவலை சிறுமி தெரிவித்தார்.

அதைக் கேட்ட மாரியம்மாள், அவரின் கணவர் அதிர்ச்சியடைந்தனர். மகளின் கர்ப்பத்துக்கு ராஜசேகர்தான் காரணம் என்ற தகவலைக் கேட்டு மாரியம்மாளும் அவரின் கணவரும் ஆத்திரமடைந்தனர்.

`மகன் போலதான் அவனைக் கருதினோம். ஆனால், அவன் என் மகளின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டானே’ என்று இருவரும் கதறினர். இதையடுத்து மாரியம்மாள், அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் கர்ப்பத்துக்கு ராஜசேகர்தான் காரணம் என்று தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ராஜசேகரை பொலிசார் கைதுசெய்தனர்.

மகள் இறந்த சோகம் தாளாமல் உயிரிழந்த தந்தை!!

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்டு இறந்த மகளின் துக்கம் தாளாமல், நீண்ட நாட்களாக தனிமையில் போராடிய தந்தை தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின் Lanarkshire பகுதியை சேர்ந்த குத்துசண்டை வீரர் Jon Bothwell (37). இவர் தன்னுடைய மகள் Paige Doherty (15) மீதி அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

மகளுக்கு 2 வயது நடக்கும் போதே தன்னுடைய மனைவி Pamela Munro-வால் விவாகரத்து செய்யப்பட்டு தனித்து விடப்பட்டார். இதனையடுத்து Pamela, Andy Munro என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

பிரிந்து இருந்தாலும் Jon அடிக்கடி தன்னுடைய மகளை சந்திக்கும் வழக்கத்தினை கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு John Leathem (34) என்ற குழந்தை கொலையாளியால், 15 வயதான Paige கொடூரமாக 61 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

அன்றிலிருந்தே சோகமாக யாருடனும் பேசாமல் இருந்து வந்த Jon அதிகமாக கனவுகள் காண ஆரம்பித்துள்ளார். அந்த கனவுகளில் மகள் தன்னுடைய படுக்கைக்கு கீழே இருப்பதை போலவும், தன்னையும் அங்கு அழைப்பதை போலவும் கனவு கண்டுள்ளார்.

இதனால் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு சுயநினைவின்றி அறையில் கிடந்த Jon-ஐ மீட்டு, கடந்த 25-ம் திகதியன்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு கோமா நிலைக்கு சென்ற Jon, அடுத்த சில மணிநேரங்களில் உயிரிழந்தார்.

இந்த சோக சம்பவம் குறித்து அவருடைய தாய் Bothwell (77) கூறுகையில், மகள் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவன் நொறுங்கிய ஒரு இதயத்துடன் வாழ்ந்து வந்தான். மகளின் இறுதிச் சடங்கில் கூட, யாரோ ஒருவன் போல அவன் தனித்து விடப்பட்டிருந்தான் என வேதனை தெரிவித்துள்ளார்.

நோயாளி இறந்த விரக்தியில் பல் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!

ஒடிசா மாநிலத்தில் சிகிச்சைக்கு வந்த நோயாளி இறந்ததால், விரக்தி அடைந்த மருத்துவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் Bargarh பகுதியில் சிறிய பல் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருபவர் Subodh Sahu (40).

கடந்த சில நாட்களாகவே பல் வலியால் அவதிப்பட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த Labanga Sahu (35) என்ற பெண் சிகிச்சைக்காக அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு சிகிச்சை மேற்கொண்ட Subodh,வலி கொடுக்கும் பல்லை பிடிங்கிவிட்டால் சரியாகிவிடும் என கூறிவிட்டு இரண்டு ஊசிகளை போட்டுள்ளார். ஊசி போட்ட அடுத்த நிமிடங்களிலேயே அந்த பெண் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அந்த பெனின் கணவர் Saheba (40)-வை அழைத்து, மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதனை கேட்டு அவரது கணவரும் அந்த பெண்ணின் உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், Labanga ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மருத்துவர் Subodh, உடனடியாக, ஆபரேஷன் செய்யப் பயன்படும் கத்தியை கொண்டு தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் அறிந்த அவரது வீட்டார் உடனடியாக மீது தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், Subodh தற்போது கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நிலையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், மருத்துவர் Subodh-ன் சான்றிதழ்களை சரிபார்க்கும்போது அவை அனைத்தும் போலியானவை என்பதை கண்டறிந்தனர்.

ஆனால் Subodh, தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக மருத்துவருக்கு மூன்று ஆண்டுகள் படித்திருந்தார் என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இதுகுறித்து பொலிஸார் விரிவான விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

காதலித்த பெண்ணை ராக்கி கட்ட வற்புறுத்திய ஆசிரியர்கள் : மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

இந்தியாவில் தான் காதலித்த பெண்ணை ராக்கி கட்ட ஆசிரியர்கள் வற்புறுத்தியதால், பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை முயன்றதில் கவலைக்கிடமாக உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவர் திலீப்குமார் ஷா. இவர் அதே பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த விடயம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்த நிலையில், இதுகுறித்து பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியரிடம் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் திலீப் மற்றும் குறித்த மாணவியை அழைத்துள்ளனர். பின்னர், மாணவியை திலீப்பின் கையில் ராக்கி கயிறு கட்டுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இதனால், மாணவர் திலீப்குமார் விரக்தி அடைந்து பள்ளி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். பின்னர் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவனின் பெற்றோர் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்!!

வங்கதேசத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வரும் பெண் பத்திரிக்கையாளர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தின் பாப்னா மாவட்டத்தில் இருக்கும் ராதாநகரில் தன்னுடைய 9 வயது மகளுடன் வசித்தது வருபவர் சுபர்ணா (32). இவர் ஆனந்தா டிவி என்கின்ற தனியார் செய்தி நிறுவனத்துக்கும், ஜக்ரோதா பங்களா என்கின்ற செய்தி தாளுக்கும் வேலை பார்த்து வருகிறார்.

தன்னுடைய கணவரிடம் இருந்து சமீபத்தில் தான் விவாகரத்து கோரியுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை 10.45 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 10 முதல் 15 பேர் சுபர்ணாவின் வீட்டு கதவை தட்டியுள்ளனர். உடனே வீட்டின் கதவை சுபர்ணா திறந்த வேகத்தில், கத்தி மற்றும் அரிவாளுடன் வந்த நபர்கள் கண்மூடித்தனமாக சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கியபடி சுபர்ணா சுருண்டு விழுந்தார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டார்கள் உடனடியாக சுபர்ணாவை, மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சுபர்ணா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலையாளிகளைப் பிடிக்க காவல்துறை தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தான் நான் செய்த தவறா : தீக்குளித்து துடி துடிக்க இறந்த பெண் பகீர் வாக்குமூலம்!!

தமிழகத்தின் திருவேற்காடு பகுதியில் காவல் நிலையம் முன்பு நர்ஸ் ஒருவர் தீக்குளித்த சம்பவம் தொடர்பில் அவர் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. செவிலியரான இவர் தனது வீட்டின் அருகே கழிவறை ஒன்றை கட்டி வந்தார்.

இதனால் அவரின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அமிர்தவள்ளிக்கும் ரேணுகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து அமிர்தவள்ளி திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் இரு தரப்பினரையும் பொலிஸார் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் அ.தி.மு.க பிரமுகர்கள் சிலரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அமிர்தவள்ளிக்கு ஆதரவாகப் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ரேணுகா மனம் உடைந்தார். உடனே அவர், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு காவல் நிலையத்திலேயே தீவைத்துக்கொண்டார்.

இதில் அதிர்ச்சியடைந்த பொலிசார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரேணுகா மரணமடைந்துள்ளார். இந்த நிலையில், பொலிஸார் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசுவதால்தான் தான் தற்கொலை செய்துகொண்டதாக இறப்பதற்கு முன் அவரது உரையாடல் வெளியாகியுள்ளது.

இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், நர்ஸ் ரேணுகா இறப்பதற்கு முன், நடந்த சம்பவத்தை முழுமையாகப் பதிவு செய்துள்ளார்.

அந்த வாக்குமூலம் அடிப்படையில்தான் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. பிரமுகர்களின் சிபாரிசு, லஞ்சம் காரணமாகத்தான் பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர் என்றனர்.

தற்கொலைக்கு முன் நர்ஸ் பேசிய ஒடியோவில் நான் கழிவறைக் கட்டியது தவறா என்று மனம் உடைந்து கண்ணீர்மல்க கூறியுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும், காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் ரேணுகாவை சிலர் மிரட்டியுள்ளனர். இதனால்தான் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்றனர்.

கடல் கடந்து வந்து தமிழ் மாப்பிளையை கரம்பிடித்த ஜேர்மனி மணமகள்!!

ஜேர்மனி நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு திண்டுக்கலில் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

தமிழகத்தின் திண்டுக்கலை சேர்ந்த நவீன் சேகரன், ஜேர்மனியில் பணியாற்றி வருகிறார். அவருக்கு அந்த நாட்டை சேர்ந்த தெரசா ஹாபர்ள் என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது.

இதைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து, திண்டுகல்லில் அவர்களுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. தமிழக பராம்பரிய முறைப்படி நடந்த திருமணத்தில் மணப்பெண்ணின் தந்தை, தாய், உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில் பங்கேற்ற ஜேர்மனி நாட்டினர் தமிழக பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலைகளை அணிந்திருந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.

சொந்த அக்காவை கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்ற தம்பி : பதறவைக்கும் காரணம்!!

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் உறங்கும் போது தொலைபேசியில் தொடர்ந்து பேசியதால், அக்காவை தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவி, தனது நண்பருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதாவது பிற்பகல் தொடங்கி, இரவு வரை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் உறங்கச் சென்ற அவரது 16 வயதான தம்பிக்கு மிகவும் தொந்தரவாக இருந்துள்ளது.

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த திங்கள் அன்று நடந்த சண்டையில், அக்காவின் கழுத்தை தம்பி நெரித்துள்ளான். இதில் மூச்சுத் திணறி அக்கா உயிரிழந்துள்ளார். உடனே தனது நண்பர்களை அழைத்து, உடலை அப்புறப்படுத்தியுள்ளான்.

இதனை அருகில் இருந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் கவனித்துள்ளனர். உடனே பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுவனை கைது செய்தனர்.

அவன் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302 மற்றும் 201 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த கணவன் : இளம் மனைவியை பார்த்து கதறிய சம்பவம்!!

தமிழ்நாட்டில் இளம் பெண்ணை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த நேரு – லாவண்யா (23) தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

நேரு சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். லாவண்யா உள்ளூரில் உள்ள வயல்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து லாவண்யா வெளியே வரவில்லை.

இதையடுத்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் லாவண்யா வீட்டுக்குள் சென்று பார்த்த போது அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அப்போது வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிமணிகள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த பணமும், லாவண்யா அணிந்திருந்த நகைகளும் மாயமானது தெரியவந்தது.

பொலிசார் கூறுகையில், லாவண்யா நகைகளை கொடுக்க மறுத்து போராடவே ஆத்திரத்தில் மர்மநபர்கள் அவரை அடித்து கொன்று விட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம்.

லாவண்யா கொலை செய்யப்பட்டது குறித்து வெளிநாட்டில் உள்ள அவரது கணவர் நேருவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை வந்து விட்டார்.

கொலையாளிகளை தேடும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கியுள்ளோம் என கூறியுள்ளனர்.

மிருகமாக மாறிய தந்தை : ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி மற்றும் 2 மகள்கள்!!

டெல்லியில் மகளின் திருமணத்திற்கு பணம் சேர்க்க முடியாததால், மனைவி மற்றும் ரிலாண்டு மகள்களை தந்தையே கொடூரமாக இரும்பு ராடால் அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சங்கம் விஹார் பகுதியை சேர்ந்தவர் நந்த கிசோர் (55). இவருக்கு 3 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது.

சைக்கிள் கடை வைத்து வீட்டின் வருமானத்தை கவனித்து வந்த கிசோரால், அடுத்த இரண்டு மகள்களின் திருமணத்திற்கு போதுமான அளவு பணம் சேர்க்க முடியவில்லை.

இதனால் பெரும் மனஉளைச்சலில் இருந்த கிசோர் நேற்று இரவு, அவருடைய மனைவி வித்யாவதி(50), மகள்கள் கவிதா (22) மற்றும் சுமன் (24) உறங்கிக்கொண்டிருந்த அறைக்கு இரும்பு கம்பியுடன் சென்றுள்ளார். அங்கு உறங்கிக்கொண்டிருந்த மூன்று பேரையும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் மூன்று பேரும் சத்தமிட்டவாறே மயங்கி விழுந்தனர்.

இதற்கிடையில் கதறும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அவரது மூத்த மகன் ராகுல், வேகமாக அம்மாவின் அறைக்கு சென்று பார்த்துள்ளார்.

அங்கு ரத்தம் வெள்ளத்தில் அம்மாவும், தங்கைகளும் கிடக்க, கையில் இரும்பு கம்பியுடன் அறையின் மூலையில் கிசோர் அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக தன்னுடடைய தம்பிகள் ரவி மற்றும் மொஹித்தை எழுப்பி விட்டு ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமாகியுள்ளது. பின்னர் ஒரு வழியாக அவர்களை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். அங்கு கவிதா அடுத்த சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தற்போது கிசோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எவ்வளவு தைரியம் இருந்தா என் மகனை காதலிப்பாய் : மிரட்டிய தாயால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் காதலனின் தாய் மிரட்டியதால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத்து.

நெல்லூரை சேர்ந்தவர் மஸ்தன். இவர் மகள் வல்லிப்பு மமதா (16) மாணவியாவார். மமதா விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்தார் மமதா. வீட்டில் மமதா தனியாக இருந்த நிலையில், அவர் காதலித்த இளைஞரின் தாய் அங்கு வந்துள்ளார்.

பின்னர் எவ்வளவு தைரியம் இருந்தால் என் மகனை காதலிப்பாய் என மமதாவை மிரட்டியுள்ளார். இதையடுத்து மனமுடைந்த மமதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்!!

நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற ஏறாவூர் மதரஸாவில் கல்வி பயிலும் மணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் ஜெயந்தியாவ பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் தக்காப் கிராமத்தினைச் சேர்ந்த 23 வயதுடைய முகமட் அனஸ் முகமட் சாகீர் என்பவரும் அவரது நண்பரான மிச்சி நகர் ஏறாவூரைச் சேர்ந்த, 22 வயதுடைய முகம்மது அசனார் முகம்மது சாதீக் என்ற இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு பேரும் ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் வைத்தியசாலைக்கு எதிரில் உள்ள மர்கஸ் மத்ரசாவில் இறுதியாண்டில் கல்விபயிலும் மாணவர்கள் ஆவர். குறித்த நால்வரில் இருவரை பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியை உலுக்கிய கொலை தொடர்பில் வெளிவந்த உண்மை தகவல் : விசாரணைகள் தீவிரம்!!

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – முறுகண்டி பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 32 வயதுடைய கறுப்பையா நித்தியகலா என்பவரே பன்னங்கண்டி பகுதியிலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் கண்டுப்பிடிக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சடலத்தின் அருகிலிருந்து சிவில் பாதுகாப்பு படையாளிகள் அணியும் இடுப்புப்பட்டி மற்றும் பேனை என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்புப் பட்டி என்பதால் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்ட எமது பிராந்திய செய்தியாளர் மற்றும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் சேர்ந்து கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தொடர்பான தகவல்களையும் திரட்டியுள்ளனர்.

நிறுவனங்களுக்கு சென்று இன்று வருகைத்தராத பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் யார் என்றும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண் உத்தியோகத்தர் வரவில்லை என்ற தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று அவர்களிடம் விசாரித்ததன் பின்னர் அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து சென்று சடலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளரினால் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும் தகவல் வழங்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின் –