திருமணமான சில மாதத்தில் ஏரியில் சடலமாக கிடந்த புதுமாப்பிள்ளை : மனைவி செய்த செயல்!!

தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் அருகே ஏரிக்கரையில் புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (32). இவருடைய மனைவி புனிதா (26). இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

புஷ்பராஜ் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 20-ந் திகதி வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் காஞ்சீபுரம் அருகில் உள்ள ஏரிக்கரையில் புஷ்பராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் பின்னர் அவர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். புஷ்பராஜ் சடலத்தை பார்த்து புனிதா கதறி அழுதார்.

இதையடுத்து புஷ்பராஜை கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி புஷ்பராஜ் சடலத்தை வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் பொலிசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

அய்யோ…என்னை காப்பாற்றுங்கள் என கதறிய  பெண் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

இயற்கை பேரிடர் கேரளாவைப் புரட்டிப்போட்டது மட்டுமல்லாமல் மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாகப் பல சம்பவங்களும் நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், கால்களை இழந்த மாற்றுதிறனாளி நபர் வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றிய நிமிடங்களை அவரே விவரித்துள்ளார்.

செங்கன்னூர் மாவட்டம், அரட்டுப்புழா ஊரைச் சேர்ந்தவர் சின்னத்துரை (46). மாற்றுத் திறனாளியான இவர், கால்களால் நடக்க இயலாதவர். இந்த நிலையிலும் வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண் ஒருவரைக் காப்பாற்றியுள்ளார்.

செங்கன்னூர் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து கொண்டிருந்தது. அப்போது, என்னைக் காப்பாற்றுங்கள் என்ற சத்தம் கேட்டது.
அந்த தருணத்தில் என்னைப் பார்த்த அப்பெண், தன்னைக் காப்பாற்ற இவரால் முடியாது என்று நிச்சயம் நினைத்திருப்பார். ஏன் என்றால் எனக்குத்தான் கால்கள் சரியாக இல்லையே.

ஆனால், உயிருக்குப் போராடிய பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என் மனதிலிருந்தது. உடனடியாக, வாழைமரம் மற்றும் மரப் பட்டை அமைக்கப்பட்ட தற்காலிக படகுபோல் ஒன்றைச் செய்தேன். அதன் மூலம் அவரைக் காப்பாற்றினேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும், இப்பெண்ணின் கணவரும் இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரால் தனது மனைவியுடன் சேர்ந்து வெள்ளத்தில் நீந்தி செல்ல இயலவில்லை. இதனால் தனது மனைவியை காப்பாற்றிய மாற்றுதிறனாளி முதியவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திருமணம் நிச்சயம் ஆன நிலையில் கேரளா வெள்ளத்தில் மூழ்கிய மணப்பெண்ணின் வீடு : அடுத்து நடந்த ஆச்சரியம்!!

கேரளாவின் மலப்புரத்தில் உள்ள நிவாரண முகாமில் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில் அந்த நிவாரண முகாமிலேயே அவருக்கு திருமணம் நடைபெற்றது.

கேரளத்தில் மழை வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளையும் தங்கள் உடைமைகளையும் இழந்துவிட்டனர். இதையடுத்து லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மலப்புரத்தைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண்ணின் வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் நிவாரண முகாமில் தங்கியிருந்தார். அவருக்கு ஏற்கெனவே ஷாய்ஜூ என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனால் திடீர் மழை வெள்ளத்தால் அஞ்சுவின் திருமணம் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் திரிபுராந்தகா கோயில் அறக்கட்டளை இவரது திருமணத்தை நடத்த முன்வந்தது.

இதையடுத்து அஞ்சு தங்கியிருந்த நிவாரண முகாமிலேயே அவருக்கு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது.

வெள்ளத்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நடத்த முடியாமல் போய்விடுமோ என்று வேதனையில் இருந்த அஞ்சு குடும்பத்தினர் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

மனைவிக்காக கோவில் அர்ச்சகரை கொலை செய்த கணவன் : பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

தமிழகத்தில் மனைவியைப் பற்றி தவறாகப் பேசியதால், அர்ச்சகரை அம்மிக்கல்லை போட்டு கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையின் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவர் அதே பகுதியில் கோவில் அர்ச்சகராகவும், ஆட்டோ டிரைவராகவும் இருந்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கார்த்திக் ராஜா நேற்றிரவு வீட்டிற்கு வெளியே தூங்கியிருந்த நிலையில், இன்று அதிகாலை ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் கார்த்திக் ராஜாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் கார்த்திக் ராஜாவின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் ரத்தம் படிந்த கத்தியுடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அப்போது பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரம்ஜான் பேகம் என்ற பெண்ணை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கார்திக் ராஜா தன்னை சந்தித்து, தன்னுடைய நண்பரின் தங்கை திருமணத்தை நடத்தி வைக்கும்படி கூறினார்.

அப்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் என் மனைவியைப் பற்றி தவறாக பேசினார்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த நான், அவர் தூங்கிக் கொண்டிருந்த போது கத்தியால் குத்தினேன், ஆனால் அவரது உயிர் போகவில்லை, அதனாலே அருகில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

மனிதனையே விழுங்கும் மலைப்பாம்பு : உயிரை பணயம் வைத்து விரட்டிய தில்லான கேரள பெண்!!

கேரளாவில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மலைப்பாம்பை பெண் ஒருவர் மாப் ஸ்டிக்கை வைத்து விரட்டுவது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேரளாவில் வெள்ளத்தின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதால், மக்கள் படிப் படியாக தங்களுடை அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பல பகுதிகளில் வீடுகள் முழுமையாக மூழ்கியிருந்தது தற்போது பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் இந்த வெள்ளம் காரணமாக காடுகளிலிருந்து பாம்புகள், முதலைகள் போன்ற மிருகங்கள் அடித்து வரப்பட்டன. அவை வெள்ள நீரோடு சேர்ந்து வீட்டிற்குள் புகுந்தன. அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து தற்போது ஒரு மலைப்பாம்பு கேரளாவின் குடியிருப்பு பகுதிக்குள் அடித்து வரப்பட்டது. மிகவும் நீளமாக இருக்கும் அந்த பாம்பு ஒரு ஆளையே விழுங்கும் அளவிற்கு வல்லமை கொண்டதாக உள்ளது.

அந்த பாம்பை, தனது இல்லத்திற்குள் நுழைய விடாமல் தனது உயிரைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல் வெரும் மாப் ஸ்டிக்கை வைத்து பெண் ஒருவர் விரட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தூக்கில் சடலமாக தொங்கிய நடிகர் : உருக்கமான கடிதம் சிக்கியது!!

பிரபல நடிகரும், நடன கலைஞருமான அபிஜித் ஷிண்டே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் எழுதிய கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தி திரையுலகை சேர்ந்த அபிஜித் நேற்று முன் தினம் தனது வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அபிஜித் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

சம்பவம் குறித்து விசாரித்து வரும் பொலிசார் கூறுகையில், மனைவியுடன் அபிஜித்துக்கு சண்டை ஏற்பட்ட நிலையில் மூன்று மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

இதையடுத்து மனையிடம் உள்ள தனது குழந்தையை பார்க்க அபிஜித் அனுமதி கேட்டும் மனைவி அதற்கு மறுத்துள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த அபிஜித் இம்முடிவை எடுத்துள்ளார் என கூறியுள்ளனர்.

இதனிடையில் அபிஜித் எழுதி வைத்துள்ள கடிதத்தில், தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை தனது குழந்தை பெயரில் மாற்றிவிடுமாறு கோரியுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ரத்தம் சொட்ட கிழிந்த ஆடையுடன் 9 வயதுச் சிறுமி : கழிப்பறைக்கு சென்றபோது நேர்ந்த பயங்கரம்!!

இந்தியாவின் டெல்லியில் சிறுநீர் கழிக்க கழிப்பறைக்கு சென்ற 9 வயது சிறுமியை சிலர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வசண்ட் குஞ்ச் பகுதியில் கடை வைத்திருக்கும் நபரின் 9 வயது மகள் நான்காம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு கடையில் தந்தைக்கு உதவியாக இருந்த சிறுமி பொது கழிப்பறைக்கு சென்று சிறுநீர் கழிக்க சென்றுள்ளார்.

அந்த இடத்தில் இருந்த சில மர்ம நபர்கள் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். பின்னர் உடலில் இரத்தம் சொட்ட கிழந்த உடையுடன் அழுது கொண்டே சிறுமி வந்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் நடந்தவற்றை சிறுமி கூறிய பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சில ஆண்களை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

பெற்றோரை கண்கலங்க வைத்த தமிழ் சிறுமி : அப்படியென்ன செய்தார்?

தமிழகத்தின் மதுரையை சேர்ந்த ஐந்தாவது படிக்கும் சிறுமி தமது உயர் படிப்புக்காக சேமித்து வைத்திருக்கும் பணத்தை கேர வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

கேரளா பெருவெள்ளம், உலகெங்கும் இருக்கிற மனிதத்தை உயிர்ப்பிக்கச்செய்துள்ளது. கேரளாவுக்கான உதவிகள், பல பகுதிகளிலிருந்தும் குவிந்தவண்ணம் உள்ளது.

இதில், நெகிழ்ச்சியடைய வைக்கும் பல சம்பவங்கள் நாட்டின் பல பாகங்களில் நடந்துள்ளன. விழுப்புரம் சிறுமி, சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கேரளா வெள்ள நிவாரணத்துக்கு வழங்கியது அதில் ஒன்று.

தற்போது, மதுரையைச் சேர்ந்த விக்ரமன் என்பவருடைய மகள் ஹெப்ரான் ஜோன்னா என்ற ஐந்தாவது படிக்கும் சிறுமி, தன்னுடைய உயர் படிப்புக்காக சேமித்துவைத்திருந்த 52 ஆயிரம் ரூபாயை கேரளா வெள்ள நிவாரணத்துக்காக வழங்கியிருக்கிறார்.

ஹெப்ரானுடைய குடும்பத்தினர், கேரளா வெள்ள நிவாரணத்துக்குப் பல உதவிகளையும் செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்த ஹெப்ரான், தானும் உதவி செய்தாக வேண்டுமென்று முடிவுசெய்து, சேமித்த மொத்த பணத்தையும் வழங்கியிருக்கிறார். இதற்கு அவர் பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சையெடுத்த பணத்தினை கேரளாவுக்கு கொடுத்த பிச்சைக்காரர், தொழுநோயாளிகள்!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய, மாநில அரசுகள், பிரபலங்கள், நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், என்றுபோய் தனி நபரும் உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் உதவிய தனிநபர்களும் உண்டு. அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் தொழுநோயாளிகள். மற்றொருவர் பிச்சைக்காரர். மல்லவாடியில் தொழுநோய் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 2 சிறுவர்கள் இல்லாமல், வயதானவர்கள் மட்டும் 36 பேர் உள்ளனர்.

இவர்கள்தான் கேரள மக்களுக்கு நிவாரண உதவியை தந்துள்ளனர். தாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்த 1035 ரூபாயை, கேரள நிவாரண உதவியாக தந்துள்ளனர். அதேபோல், ஏழுமலை என்பவருக்கு 2 கைகள், ஒரு கால் கிடையாது.

பிச்சை எடுத்துதான் பிழைப்பு ஓட்டிக் கொண்டிருக்கிறார். தான் ஒருநாளில் பிச்சையெடுத்த வசூல் தொகை 100 ரூபாயை நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.

தொழுநோயாளிகள் கொடுத்த 1035 ரூபாயும் பிச்சைக்காரர் ஏழுமலை கொடுத்த 100 ரூபாயும் சேர்த்து 1135 ரூபாயாக கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேரள வெள்ளத்தில் சிக்கிய சபரி மலை ஐயப்பன் கோவில் : உயிரை பணயம் வைத்து கிறிஸ்துவ இளைஞர்கள் செய்த செயல்!!

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலை பம்பா நதியில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஐயப்பன் கோவிலில் சில சடங்குகள் நடத்த இயலாமல் போகுமோ என்ற நிலை முதல் முறையாக கடந்த வாரம் ஏற்பட்டது.

நிரபுத்தரி என்னும் ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் ஒரு சடங்கிற்கு, நெல் அறுவடை செய்யப்படுவதற்கு முன், யாரும் எடுப்பதற்கு முன் அறுக்கப்படும் நெற்கதிர் பூஜையில் சமர்ப்பிக்கப் பட வேண்டும். ஆனால் இந்த வெள்ளம் காரணமாக கோவிலுக்கு செல்வதற்கான அனைத்து வழிகளும் பாதிக்கப்பட்டன.

காட்டாற்று வெள்ளமாக ஓடும் பம்பா நதியைக் கடப்பது கடினம் என்பதாலும், மலைப் பிரதேசமாகையால் பல நில சரிவுகள் , மற்றும் மரங்கள் சாய்ந்ததால் அனைத்து வழிகள் மறித்ததாலும், காட்டு வழியில் இந்த மழையில், வெள்ளத்தில் நெற்கதிர்களை கொண்டு வரவேண்டும் என்பது போன்ற காரணங்களால், இந்த சடங்கு தடை படுமோ என்ற அச்சம் நிலவியது.

ஆனால் இந்த பொறுப்பை கிறிஸ்துவ இளைஞர்களான ஜொபின், குருப், சந்தோஷ், ஜோபி ஏற்றுக் கொண்டனர்.

பல அணைகள் நிரம்பி வழிந்து, பாலங்கள் மூழ்கடித்து, அடங்காமல் ஆர்ப்பரித்து ஓடும் பம்பை ஆற்றில், யாராலும் நீந்தி கடக்க முடியாது என்ற நிலையில் இருந்த பம்பை ஆற்றை எதிர் நீச்சலடித்து, சாக்கு மூட்டையில் கட்டிய நெல் கதிர்களை சுமந்து சென்று உரிய நேரத்தில் கோவிலுக்கு கொண்டு சேர்த்தனர்.

கிருஸ்துவ இளைஞர்கள் 4 பேர் தங்கள் உயிரை பணயம் வைத்து மற்ற மதத்தின் தெய்வம் என பார்க்காமல் தெய்வ நம்பிக்கையை சாஸ்தர சம்பரதாயத்தையும் மதித்து இப்படி ஒரு செயலை செய்திருக்கும் சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை : நடந்தது என்ன?

கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழையால் 364 பேர் இறந்துள்ள நிலையில், தற்போது கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டயத்தை சேர்ந்த பிஜூ- மனு தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பிஜூ இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார்.பிஜூவுடன் அவரது தாய் பொன்னம்மாள் (65) என்பவரும் வசித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் பிஜூ வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்ததும் இரவு 11 மணிக்கு வீடு திரும்பினார்.

வீட்டிற்கு வந்து பார்த்தபோது விளக்கு ஏற்றாமல் இருட்டில் இருந்ததால் சந்தேகம் அடைந்த பிஜூ கதவை திறந்து பார்த்தார். அப்போது தாய், மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் ஆகியோர் இறந்து கிடந்தனர்.

குழந்தைகளை வி‌ஷ ஊசி போட்டு கொன்றுவிட்டு அதே ஊசி மூலம் மனுவும், பொன்னம்மாளும் தற்கொலை செய்தது தெரியவந்தது.

கந்துவட்டி கொடுமையின் காரணமாக இவர்கள் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. நேற்று பிஜூ வேலைக்கு சென்றபின்னர், கந்துவட்டி கும்பல் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்துள்ளனர். இதன் காரணமாகவே, இவர்கள் நான்குபேரும் இப்படி ஒரு சோகமுடிவை எடுத்துள்ளனர்.

4 பேர் மரணத்துக்கு காரணமானவர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.

வவுனியாவில் கடந்த 6 மாத காலத்தினுள் 30க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை!!

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆறு மாத பகுதிக்குள் 30க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளதாக நேற்றையதினம் (24.08.2018) வவுனியா பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளில் ஸ்ரிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு நிகழ்வின் போது வவுனியா பொலிஸ் நிலையத்தின் பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சில மாதங்களில் தற்கொலை செய்வது அதிகரித்து காணப்படுகின்றது. தற்கொலை செய்வதினை தடுத்து நிறுத்தும் முகமாகவே விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கோடு ‘மனிதனை நம்பாதே தற்கொலை செய்யாதே’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை முச்சக்கரவண்டிகளில் ஒட்டியுள்ளோம்.

வவுனியா பிரதேசத்தில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 30க்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் அதிகளவானவர்கள் தூக்கில் தொங்கியே தற்கொலை செய்துள்ளனர்.

தற்கொலையினை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே முச்சக்கரவண்டியில் ஆரம்ப கட்டமாக தற்கொலையினை தடுக்கும் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுகின்றோம் என தெரிவித்தார்.

வவுனியாவில் 22 வயது யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை!!

வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில் நேற்றிரவு (23.08.2018) இரவு 7 மணியளவில் 22 வயதுடைய யுவதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

சாம்பல் தோட்டம் ஐயப்பர் வீதியில் வசித்து வரும் 22 வயதுடைய வி.விந்தியா என்ற யுவதியே நேற்றிரவு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த யுவதி கொழும்பில் உள்ள ஆடை தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லுவதற்கு குடும்பதாரிடம் அனுமதி கோரியுள்ளார். கொழும்பு செல்வதற்கு குடும்பத்தினர் மறுத்த சமயத்தில் வீட்டின் அறை ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியாவில் தற்கொலைகளை தடுக்க பொலிசாரினால் விழிப்புணர்வு நிகழ்வு!!

வவுனியாவில் அதிகரித்துவரும் தற்கொலைகளை தடுப்பதற்கு ‘மனிதனை நம்பாதே தற்கொலை செய்யாதே’ எனும் தொனிப்பொருளில் வவுனியா பொலிசாரினால் ஏற்பாடு செய்யப்பட்டு முச்சக்கர வண்டிகளில் ஸ்ரிக்கர் ஒட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று (23.08.2018) நடைபெற்றது.

ஈசி மிசன் சுவிசேச சபையின் தலைமை போதகர் ராஜசிங்கம் தலைமையில் 400 முச்சக்கர வண்டிகளுக்கு தற்கொலைகளை தடுக்கும் ஸ்ரிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.எஸ்.தென்னக்கோன், பொலிஸ் நிலையத்தின் பிரதி பொலிஸ் பொறுப்பதிகாரி குமாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

வெளிநாட்டுக்கு இளைஞர்களை அனுப்புவதாக கூறி பெண் செய்த மோசமான செயல்!!

நியூசிலாந்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பல இளைஞர்களை ஏமாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை பிரதேசத்தில் வாழும் 70 வயதுடைய பெண்ணே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் நாட்டின் பல பிரதேசங்களில் மத தலைவர்களுடன் நுட்பமான முறையில் நட்புறவு ஏற்படுத்தி தான் நியூசிலாந்து குடியுரிமை பெற்றவர் என கூறி வந்துள்ளார்.

மத வழிபாட்டு தலங்களுக்கு வரும் மக்களுக்கு நியூசிலாந்தில் தொழில் பெற்றுக் கொடுக்க முடியும் என கூறி தனது மோசடியை ஆரம்பித்துள்ளார்.

அண்மையில் இந்த பெண் நுவரெலியா, பூண்டுலோயா பிரதேசத்தில் உள்ள விகாரையின் தேரர் ஊடாக 16 இளைஞர்களிடம் 56 லட்சம் ரூபா மோசடி செய்துள்ளார்.

தான் சிங்கப்பூரில் 8 வருடங்கள் இருந்ததாகவும், நியூசிலாந்தில் 8 வருடங்கள் இருந்ததாகவும், அவர் கூறியுள்ளார். தனது வாழ் நாள் முழுவதும் உலகம் சுற்றி வந்துள்ளதாகவும், இதனாலேயே பயமின்றி தான் இவ்வாறு தொழில் பெற்றுக் கொடுப்பதாகவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டுடன் தலா 3 லட்சம் பணத்தை பூண்டுலோயாவிலுள்ள இளைஞர்களிடம், குறித்த பெண் பெற்றுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல நீதிமன்றங்களில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் விசேட சுற்றி வளைப்பின் போது மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவனின் செயல்!!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கீரி கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மாணவனின் செயற்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கீரி கடற்கரையில் அதிகளவான பிளாஸ்ரிக் கழிவுகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால் அப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்ததுடன், கடற்கரை சூழலும் மாசடைந்திருந்தது.

இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் 4ஆம் ஆண்டு மாணவன் ஆர்.றொக்சன் இது தொடர்பில் கள ஆய்வினை மேற்கொள்வதற்காக நேற்று மாலை கீரி கடற்கரைக்கு சென்றுள்ளார்.

இதன்போது கீரி கடற்கரை பகுதியில் கரையொதுங்கி காணப்பட்ட கழிவுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்களை சேகரித்து ஒரு இடத்தில் குவித்துள்ளார்.

பின்னர் மன்னார் நகரசபையுடன் தொடர்பு கொண்டு தான் சேகரித்த கழிவுப் பொருட்களை எடுத்துச் செல்லுமாறும் கோரியுள்ளார்.

கீரி கடற்கரையில் இவ்வாறான கழிவுப்பொருட்கள் காணப்படுகின்றமையினால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.