வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறந்துவைப்பு!!

வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும் மற்றும் ஊடக மையமும் நேற்று (15.07) மாலை 4 மணிக்கு சிரேஸ்ட ஊடகவியலாளரும் சங்கத்தின் தலைவருமான பி.மாணிக்கவாசகம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

செய்தியாளர் மாநாடு மற்றும் செய்தியாளர் சந்திப்புக்களை நடத்துவதற்கான ஒரு மத்திய நிலையமாக வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமானது இயங்கவுள்ளது.

அந்தவகையில் அலுவலகத்திற்கான மத அனுஸ்டான நிகழ்வுகள் ஸ்ரீ பிரபாகர குருக்கள் தலைமையில் நடைபெற்று சிரேஸ்ட ஊடகவியலாளர்களான பி.மாணிக்கவாசகம் மற்றும் டி.ரத்துகமகே ஆகியோரால் ஊடக மையமானது வைபரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

அக வணக்கத்தை தொடர்ந்து அதிதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் அலுவலக திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இவ் அலுவலக திறப்பு விழாவிற்கு வவுனியா நகரத்தின் பிரபல வர்த்தகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் உதவியுள்ளதுடன் நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம்,

சமூக வலைத்தளங்கள் பெருகியதன் காரணமாக ஊடகங்கள் நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளன. ஊடகவியலாளர்கள் ஒரு சங்கமாக ஒன்றிணைந்து செயல்ப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஊடகவியலாளர்கள் தொழில் ரீதியாக தங்கள் திறமைகளை வளர்த்து கொள்வதற்கும் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதற்கும் இந்த சங்கம் அவசியமானதாக இருக்கிறது என தெரிவித்தார்.

திருமணமான 13 நாளில் புதுப்பெண் பலி : கணவர் கண்முன்னே நடந்த சோகம்!!

தமிழகத்தில் கடையநல்லூர் அருகே பேருந்து- மோட்டார் சைக்கிளுடன் மோதிக் கொண்ட விபத்தில் அண்ணன்- தங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் செல்வராஜ், சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் இவருக்கும், ஹேமலதா என்பவருக்கு கடந்த 1ம் திகதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் புதுமண தம்பதியினர் நேற்று காலை மோட்டார்சைக்கிளில் இலத்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்.

இவர்களுடன் ஹேமலதாவின் தந்தை மற்றும் அண்ணனும் சென்றனர், கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது மங்களாபுரம் விலக்கு அருகே எதிரே வந்த அரசு பேருந்துடன் பைக் மோதியது.

இதில் ஹேமலதா மற்றும் அவரது அண்ணன் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர், தங்கள் கண்முன்னே நடந்த விபத்தை பார்த்து செல்வராஜ் மற்றும் ஹேமலதாவின் தந்தை கதறி அழுதனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள், இருவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கிய பெண் : உருக்கமான கடிதம் சிக்கியது!!

மதுரையில் தன் பிள்ளைகளை கொன்று விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது.

மதுரை டிவிஎஸ் நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா, மினி லொறி டிரைவர்.

இவரது மனைவி மைக்கேல்ஜீவா, இவர்களுக்கு ஹரிதா(வயது 4), ஹரிகிஷோர் குமார்(வயது 3) என இரு குழந்தைகள் உள்ளனர்.

இருவரும் காதல் திருமணம் செய்தாலும், மைக்கேல்ஜீவாவின் நடத்தையில் ராஜாவுக்கு சந்தேகம் வந்தது.

இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு எழ மன உளைச்சலில் இருந்துள்ளார் ஜீவா. பிரச்சனை தொடர்ந்து கொண்டே செல்ல, இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

இதன்படி நேற்று குழந்தைகளின் முகத்தில் பிளாஸ்டிக் பையை கட்டிவிட்டு, தூக்கி மாட்டி தற்கொலை செய்தார். இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ராஜாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் சோதனையிட்டதில் மைக்கேல்ஜீவா எழுதிய இரண்டு கடிதங்கள் இருந்தன.

ஒன்றில், நான் போடும் உயிர் பிச்சை, யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை, எனக்கு செய்த துரோகத்துக்கு நீ அனுபவிப்பாய்.

அதையும் நான் பார்க்கத்தான் போகிறேன், என்னையும், என் குழந்தைகளையும் தவறாக பேசியதால் நொறுங்கி விட்டேன்.

நீயும் சரி, உன் குடும்பமும் சரி அனுபவிப்பீங்க என எழுதப்பட்டிருந்தது. மற்றொரு கடிதத்தில், அம்மாவை பார்த்துக்கோங்க அக்கா, அனாதை போல் எங்களை எரித்துவிடவும், கணவர் கொள்ளி போடக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ராஜாவை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

துப்பாக்கி முனையில் மொடல் அழகி சிறைபிடிப்பு : அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் துப்பாக்கி காட்டி இளம் மொடலை மிரட்டி காதலிக்க ஒப்புக்கொள்ள வைத்த முரட்டு இளைஞன் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில், மிஸ்ராட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் மொடல் ஒருவர் வசித்து வந்தார்.

இவரது குடியிருப்புக்கு நேற்று அதிகாலை அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையில் மொடலின் பெற்றோரை ஓர் அறையிலும் மற்றொரு அறையில் மொடலையும் சிறை வைத்தார்.

மட்டுமின்றி குறித்த மொடலை அடித்து துன்புறுத்தியதுடன் கத்திரியாலும் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் உள்ளே வந்தால் துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்வேன் என்று அந்த இளைஞர் மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொலிசார், மொடலை சிறை வைத்திருப்பதன் காரணம் குறித்து விசாரித்தனர்.

அப்போது அந்த இளைஞர், தனது பெயர் ரோகித் என்கிற ரீகல் சிங் எனவும் தாமும் குறித்த மொடலும் மும்பையில் வசித்தபோது காதலித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் போபால் திரும்பிய பின்னர் தமது காதலை நிராகரித்து வருவதாகவும், அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதுதான் இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் தன்னை காதலிக்க வேண்டும். அதை பத்திரத்தில் எழுதி தரவேண்டும். இல்லையென்றால் விட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் உணவு மற்றும் தேவையானவற்றை பொலிசார் செய்து தந்துள்ளனர்.

நள்ளிரவு வரை நடந்த இந்தப் போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது. காதலுக்கும் திருமணத்துக்கும் அவர் சம்மதித்துவிட்டதாகவும் அது தொடர்பாக முத்திரைத்தாளில் எழுதிய வாங்கியதாகவும் ரோகித் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ரோகித் கதவைத் திறந்தார். உடனடியாக பொலிசாரும் சட்டத்துறை அதிகாரிகளும் உள்ளே சென்று அந்தப் பெண்ணை பார்த்தனர்.

மொடலின் உடலில் ரத்தக் காயம் இருந்தது. ரோகித்தின் கைகளிலும் ரத்தம் வடிந்திருந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

காதலும் காதலியும் கிடைத்த மகிழ்ச்சியில் ரோகித் இருக்க, திடீரென்று அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டு கதறினார், அந்த மாடல்.

“என்னை எப்படியாவது காப்பாத்துங்க. வேறு வழியில்லாமல் அவனிடமிருந்து தப்பிக்க, காதலிப்பதாக எழுதி கொடுத்துவிட்டேன். அதைத் தவிர வேறு வழியில்லை. அவனை எனக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை. அவனை காதலிக்கவும் இல்லை” என்று அதிகாரிகள் முன்பு கண்ணிர் மல்கக் கூறியுள்ளார் அந்த மொடல்.

இதனையடுத்து ரோகித்தை கைது செய்த பொலிசார் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியை உலுக்கிய 11 பேர் மரணம் : கடைசி நேரத்தில் உயிர்தப்ப முயன்ற மூவர் : திடுக்கிடும் தகவல்!!

டெல்லி புராரி வழக்கில் கடைசி நேரத்தில் உயிர் தப்ப 3 பேர் முயன்றதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லியில் புராரி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர்.

தகவலறிந்த பொலிசார் சம்பவயிடத்திற்கு சென்று உடல்களை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குடியிருப்பில் பணம், நகை என பொருட்கள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் 11 பேரும் எந்தவித போராட்டமுமின்றி உயிரிழந்ததும் தெரியவந்தது.

எனவே இது தற்கொலைதான் என்று விசாரணை அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்து அமானுஷ்ய கடிதம் மற்றும் டைரிகள் பொலிசாரிடம் சிக்கியது.

உயிரிழந்த நாராயணியின் மகன் லலித் பாட்டியா 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையை போல் நடந்து கொள்வதாகவும் கடவுளை தரிசிக்க 11 பேரும் தூக்கில் ஆலமரம் விழுதுகளை போல் தொங்க வேண்டும் என்றும் லலித் மற்றவர்களை மூளைச் சலவை செய்திருந்ததாக தெரிய வந்தது.

தூக்கிட்டு கொள்ளும் எண்ணம் இருந்த இவர்கள் மறுநாள் சிற்றுண்டிக்காக கடலை பருப்பை நீரில் ஊறவைத்திருந்தனர்.

பாலை தயிராக்கும் முறையையும் செய்திருந்தனர். மேலும் அக்குடும்பத்தை சேர்ந்த பிரியங்கா என்பவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது.

இந்த சூழலில் அவர்கள் தற்கொலை செய்ய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. கடவுளை தரிசிக்க தூக்கிட்டு கொண்டால் கடவுளும் இறந்த தந்தையும் தங்களை காப்பாற்றுவர் என்ற மூடநம்பிக்கையை அந்த குடும்பத்தினர் கொண்டிருந்தனர்.

மேலும் கடவுளை தரிசிப்பது எப்படி என்பது தொடர்பாக 2015-ஆம் ஆண்டு முதல் அக்குடும்பத்தினர் டைரியில் குறிப்புகளை எழுதி வந்தனர்.

ஏராளமான மர்மங்கள் நிறைந்துள்ள இந்த மரணத்தில் 3 பேர் தப்பிக்க முயன்றனர் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி 11 பேரில் குறிப்பிட்ட 3 பேரின் கைகட்டுகள் அவிழ்ந்து இருந்தது தெரியவந்துள்ளது. எனவே இவர்கள் மூவரும் இந்த தூக்கில் இருந்து தப்பிக்க நினைத்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

4 மாதங்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த முக்கிய தகவல்!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிசாருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள முண்டக்கயம் பகுதியில் இருந்து ஜெஸ்னா மரியா என்ற 19 வயது மாணவி கடந்த மார்ச் 22 ஆம் திகதியில் இருந்து மாயமாகியுள்ளார்.

சிறப்பு குழு அமைத்து பொலிசார் தீவிரமாக தேடியும் குறித்த இளம்பெண் உயிருடன் உள்ளாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற தகவல் இதுவரை இல்லை.

சம்பவத்தன்று பேருந்து ஒன்றில் ஏறிச்செல்லும் மாணவி குறித்த கண்காணிப்பு கமெரா காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

மட்டுமின்றி முண்டக்கயம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் கடந்து செல்லும் கமெரா காட்சிகளையும் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தினர்.

இருப்பினும் மாயமான மாணவி தொடர்பில் எந்த தகவலும் இன்றி பொலிசார் விழிபிதுங்கியுள்ள நிலையில், மாயமான மாணவியை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள விமான நிலையத்தில் கண்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மே மாதம் 5 ஆம் திகதி கிடைத்த இந்த தகவலின் அடிப்படையில் பெங்களூரு சென்ற பொலிசாருக்கு அந்த தகவலில் உண்மை இல்லை என தெரியவந்தது.

தற்போது மீண்டும் கர்நாடகாவில் உள்ள மடிவாளா பகுதியில் ஜெஸ்னா என்ற அந்த மாணவியை கண்டுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஜெஸ்னா மாயமாவதற்கு முன்னர் தமது ஆண் நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் பலமுறை அழைத்ததாகவும், அவருக்கு அனுப்பிய கடைசி குறுஞ்செய்தியில் தாம் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த ஆண் நண்பரை பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியும், இந்த வழக்கு தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

மட்டுமின்றி விசாரணைக்கு உட்படுத்திய கமெரா காட்சிகளில் அந்த ஆண் நண்பர் இல்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரோடு எரித்து கொல்லப்பட்ட அழகிய இளம்பெண் : கணவர் குடும்பத்தார் வெறிச்செயல்!!

இந்தியாவில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம் பெண் கணவர் குடும்பத்தாரால் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தெபஷிஸ். இவர் மனைவி சந்திரகாந்தி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணமானது முதலேயே சந்திரகாந்தியை அவர் கணவரும், மாமியாரான மனோரமாவும், மாமனாரான ரவீந்திராவும் 50,000 பணம் மற்றும் பைக்கை வரதட்சணையாக கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர்.

இது குறித்து தனது தந்தையிடம் சந்திரகாந்தி கூறிய போதும் ஏழ்மை நிலை காரணமாக அவரால் அதை தர முடியவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் சந்திகாந்திக்கு வரதட்சணை கொடுமை நடந்துள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த அவரின் கணவர் மற்றும் மாமியார், மாமனார் சந்திரகாந்தி மீது மண்ணெணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளனர்.

வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சந்திரகாந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள மூவரையும் தேடி வருகிறார்கள்.

தினமும் பப்பாளிப் பழத்தை சாப்பிடுங்கள் : கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!!

பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சீரண மண்டலம் ஆரோக்கியம் பெறுவதுடன் பல நன்மைகளும் உடலுக்கு கிடைக்கும்.

பப்பாளி பழம் நீண்ட நாட்கள் இளமையாக இருப்பதற்கு உதவுகிறது. மேலும், பப்பாளி பழத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.

அழகு
உடலுக்கு ஆரோக்கியம் தரும் பப்பாளி பழம் சருமத்திற்கும், வடிவத்திற்கும் உதவுகிறது. அத்துடன் அழகை மெருகேற்றுவதுடன், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள்
பப்பாளி பழத்தில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை உடலை ஆரோக்கியத்துடனும், கட்டுக்கோப்புடனும் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன.

மேலும், பப்பாளியில் உள்ள கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, பொட்டசியம், கால்சியம், வைட்டமின் சி, பி, ஏ, மக்னீசியம், என்சைம்கள், காரோட்டீனாய்டு, ப்ளோனாய்டுகள் போன்ற ஏராளமான சத்துக்களும் நிறைந்துள்ளன.

உடல் எடை குறைதல்
பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்தானது நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது. இதன் காரணமாக உடல் எடை குறையும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி
பப்பாளி நோய் எதிர்ப்பு சக்திகளை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள வைட்டமின் சி, ப்ளோனாய்டுகள், ஆண்டி-ஆக்ஸிடண்ட்கள் மற்றும் கரோட்டீனாய்டுகள் ஆகியவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுபெற செய்யும்.

கண்களின் ஆரோக்கியம்
பப்பாளி பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, கண்ணுக்கு தேவையான ஆரோக்கியத்திற்கு வெகுவாக உதவுகிறது. இது மக்குலார் டிஜெனரேஷன் போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படாமல் தடுக்கிறது.

எலும்பு வலிமை
பப்பாளியை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் எலும்புகள் வலிமை பெறும். எலும்புகளில் அழற்சி பண்பை போக்க பப்பாளி உதவுகிறது. மேலும், பப்பாளியில் உள்ள வைட்டமின் சி ஆர்த்ரிட்டீஸ் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

சீரண சக்தி
பப்பாளி பழத்தில் உள்ள பாப்பைன் என்ற என்சைம், சீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே இந்த பழத்தை தினசரி டயட்டில் சேர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

செவ்வாய் கிரகத்தில் சிலந்திகள் ஊர்ந்து சென்ற அடையாளங்கள் : நாசா தகவல்!!

உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றது.

இந்நிலையில் அவ்வப்போது உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் போன்ற புகைப்படங்கள் வெளியாகி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு சிலந்திகள் ஊர்ந்து சென்றதற்கான அடையாளங்கள் காணப்படுவது போன்ற படத்தினை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் செயற்கைக் கோளின் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்திலேயே இவ்வாறான தோற்றம் தென்பட்டுள்ளது.

எனினும் இப் புகைப்படத்தில் காணப்படம் ஆதாரம் தொடர்பில் நாசா விண்வெளி ஆய்வு மையம் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

யூடியூப் வீடியோக்களை இனி களவாட முடியாது!!

யூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீடியோக்களுக்கான காப்புரிமை பெற்றிருப்பார்கள்.

இவ்வாறான வீடியோக்களை திருடி மீண்டும் தரவேற்றம் செய்யும்போது அவ் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் அழித்துவிடும்.

ஆனால் காப்புரிமை பெறாத ஏனைய சில பயனர்களுக்கு அவர்களின் வீடியோக்கள் களவாடப்படும்போது எச்சரிக்கை செய்யும் வசதியினை யூடியூப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இரு வேறு பயனர்களால் தரவேற்றம் செய்யும் வீடியோக்கள் மிகவும் ஒன்றை ஒன்று ஒத்ததாக இருக்கும் சந்தர்ப்பத்திலும் இவ் எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.

எவ்வாறெனினும் இவ் வசதியானது 100,000 மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூடியூப் சேனல்களுக்கு மாத்திரமே தற்போது கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

13 பிள்ளைகள் பெற்றும் தெருவில் அனாதையாக பிச்சையெடுத்த தாய் : பரிதாப சம்பவம்!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அந்தோனி அம்மாள் என்ற மூதாட்டி 13 பிள்ளைகள் பெற்றெடுத்தும் கோயில் தெருவில் பிச்சையெடுத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக வேலூர் விண்ணரசி மாதா கோயிலில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். பிச்சை எடுக்கும் பணத்தையும் தனது மகள் வாங்கி சென்றதாகவும் அந்தோனி அம்மாள் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார் அந்தோனி அம்மாள். எனக்கு 13 பிள்ளைகளும் பேரன்களும் இருந்தும் அனாதையாக உள்ளேன். எனது கணவர் கேரளாவில் உள்ள அவரது தம்பி வீட்டில் உள்ளார். நான் மட்டும் இப்படி கஷ்டத்தை அனுபவித்து வருகிறேன்.

எனக்கு அந்த ஆண்டவர் மட்டுமே துணை என்றும் நான் இறக்கும் வரை என்னை பாதுகாத்து எனக்கு உணவு வழங்கினால் போதும். கால் உடைந்திருப்பதால் என்னால் நடக்கக் கூடிய முடியவில்லை என்றும் கண்ணீர் மல்க கூறினார். மேலும் நான் இறந்தாலும் என்னை எனது உறவுகள் யாரும் பார்க்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

சமூக ஆர்வலர் மணிமாறன் கூறும் போது, 95 வயதான் மூதாட்டி நிலை குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததும் அவரை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து வந்து மனு கொடுத்துள்ளோம். மூதாட்டியை கைவிட்ட அவரது வாரிசுகள் மீது முதியோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும் அவருக்கான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் மாவட்ட சமுக நலத்துறை சார்பில் தொண்டு நிறுவன முதியோர் காப்பகத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும் அவரின் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

3 லட்சத்துக்கு அழைக்கப்பட்ட தமிழ் நடிகை விவகாரம் : பொலிசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!!

பிரபல திரைப்படை நடிகையான ஜெயலட்சுமி வாட்ஸ் அப் மூலம் சிலர் தனக்கு தொல்லை தருவதாகவும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் டேட்டிங் சென்றால் 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று அழைப்புவிடுக்கப்பட்டதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதன் பின் இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கவியரசு மற்றும் முருகப்பெருமாள் என்ற இரண்டு புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், பிடிபட்ட கவியரசு மற்றும் முருகப்பெருமாள் ஆகியோர் முதலில் வெளிமாநில அழகிகளை வைத்து ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர்.

அப்போது வாடிக்கையாளர்கள் இளம் நடிகைகள் இருந்தால் கூறுங்கள், நாங்கள் நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

இதனால் பணத்தின் மீது ஆசை கொண்ட அவர்கள், பிரபல திரைப்பட நடிகைகள், சின்னத்திரை நடிகைகளில் தற்போது வாய்ப்பு குறைந்துள்ளவர்களின் பட்டியலை எடுத்து, அவர்களின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்து செல்போன் எண்களை எடுத்துள்ளனர்.

அதன் பின் சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு நள்ளிரவு நேரத்தில் அவர்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி, நடிகைகளின் மன நிலையை அறிந்து கொண்டு, குறுஞ்செய்திக்கு மறுப்பு தெரிவிக்காத நடிகைகளுக்கு விருப்பம் இருந்தால் டேட்டிங் மூலம் சில ஆயிரங்கள் முதல் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இந்த விடயம் யாருக்கும் தெரியாது, ரகசியமாக காக்கப்படும் என்று உத்திரவாதமும் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து தங்கள் வலையில் சிக்கிய நடிகைகள் மூலம் பிற நடிகைகளின் செல்போன் எண்களை பெற்றுக் கொண்டு பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதில் தொழிலதிபர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர். இவை அனைத்தும் நட்சத்திர ஹோட்டலிலே நடந்துள்ளது என்பதையும் உறுதி செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக ரிலேசன்ஷிப் டேட்டிங் சர்வீஸ் என்ற குரூப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தங்கள் வாடிக்கையார்களுக்கு நடிகைகளின் விவரங்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு பணம் போன்றவைகள் எல்லாம் அனுப்பியுள்ளனர்.

அப்படி தான் நடிகை ஜெயலட்சுமிக்கும் வலை வீசியுள்ளனர். ஆனால் அவர் பொலிசாரிடம் புகார் கொடுத்துவிட்டதால் இவர்கள் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதன் பின்னணியில் நடிகைகள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இருப்பதால், இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டால் அவர்களையும் கைது செய்ய நேரிடும் என்பதால் இந்த இரண்டு புரோக்கர்களை வைத்தே பொலிசார் வழக்கை முடிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை : கொலை செய்த காதலனை மணமுடித்த காதலி!!

அமெரிக்காவில் தன்னுடைய குழந்தையை கொன்ற காதலனை திருமணம் செய்துள்ளார் Valerie என்ற பெண்.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தை சேர்ந்தவர் Justin T. Layne(வயது 21), இவரது காதலி Valerie. இவருக்கு ஏற்கனவே வேறு ஒருவர் மூலம் ஆறு மாத குழந்தை உள்ளது, இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் 25ம் திகதி வீடு திரும்பிய Valerieக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மிக ஆபத்தான நிலையில் ரத்த காயங்களுடன் குழந்தை கிடந்தது, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி நான்கு நாட்கள் கழித்து குழந்தை இறந்தது.

இதுதொடர்பான வழக்கில் Valerie-ன் தற்போதைய காதலனை பொலிசார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.

சம்பவம் நடந்த 10 நாட்களுக்கு பின்னர் காதலனை திருமணம் செய்த Valerie, ஆதரவாக பேசி வருகிறார்.

அவர் கூறுகையில், எந்தவொரு பெற்றோரும் குழந்தை இழக்க விரும்பமாட்டார்கள்.

நான் என் கணவருக்கு ஆதரவாக இருப்பேன், வேண்டுமென்றே அவர் இதை செய்திருக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் தான் இன்னும் பதில்களை தேடிக்கொண்டிருப்பதாகவும், எட்டு மாதங்களாக பொலிசார் தாமதித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ள நிலையில், 20ம் திகதி வழக்கு நீதிமன்றத்துக்கு வரவுள்ளது.

தொடர்ந்தும் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறக்குமதியாளர்களின் டொலர் தேவை அதிகரித்த காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதி பலவீனமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய தினம் 159 ரூபாய் 55 – 70 சதமாக பதிவாகியுள்ளது.

இந்த வருடத்தில் ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 3.9 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் இதுவொரு தனித்துவமான நிகழ்வு அல்ல என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை அடுத்த மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

துரிதமான வேலைத்திட்டத்தினால் மிக விரைவாக அடையாள அட்டைகளை வழங்க கூடியதாக இருப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய அறிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐயாயிரத்து 12 என்றும் தற்போது இந்த மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மூன்று பிரதேச அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்படும் எனவும் ஹர்ஷ இலுப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

தாலிக் கொடியை அறுத்த திருடன் : பொது மக்களை அச்சுறுத்திய பொலிஸார்!!

கிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் நேற்று மாலை பெண் ஒருவருடைய தாலிக் கொடியை அறுக்க முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தபோதும் பொலிஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முறிகண்டி அக்கராயன் வீதியில் தொடர்ச்சியாக பெண்களின் நகைகள் அறுத்து செல்லப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இம்மாதமும் இரு பெண்களிடம் நகைகள் அறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்தபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அக்கராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குடும்பஸ்தருடைய மனைவியின் தாலிக் கொடியை அறுக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த பகுதியில் உள்ளவர்களும், குறித்த குடும்பஸ்தரும் இணைந்து திருடர்களை பிடித்து அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாட்டை பதிவு செய்ய அக்கராயன் பொலிஸார் மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர். பின்னர் பொதுமக்கள் திரண்டு பொலிஸாருடன் வாய்தர்க்கப்பட்ட நிலையில் திருடர்களை மடக்கி பிடித்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக பொலிஸார் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸாருடைய பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.