இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டி இன்று : நம்பிக்கை விதைக்குமா இலங்கை அணி?

இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான மூன்று போட்டிகள் கொண்ட இரு­ப­துக்கு T20 தொடரின் இரண்­டா­வது போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

முதல் போட்­டியில் அடைந்த தோல்­விக்கு பதி­லடி கொடுத்து தொடரை இழக்­காமல் இருக்க இன்­றைய போட்­டியில் இலங்கை அணி நிச்­சயம் வென்­றாக வேண்­டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்­தி­யாவின் கட்டக் நகரில் நேற்­று­முன்­தினம் இரவு நடை­பெற்ற இலங்­கைக்கு எதி­ரான முத­லா­வது T20 போட்டியில் 93 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் இந்­திய அணி அபார வெற்றி பெற்­றது.

இலங்­கைக்கு எதி­ராக 93 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் பெற்ற வெற்­றி­யா­னது இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் வர­லாற்றில் இந்­தியா பெற்ற மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும்.

இதே­போல இலங்கை அணி சந்­தித்த மோச­மான தோல்­வியும் இதுதான். இதற்கு முன்பு கடந்த ஆண்டு அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக பல்­லே­கலை மைதா­னத்தில் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்­றதே மோச­மான நிலை­யாக இருந்­தது.

செவ்வாயில் உறிஞ்சப்பட்ட நிலையில் நீர் : புதிய ஆய்வில் தகவல்!!

செவ்­வாய்க்­கி­ர­கத்தின் மேற்­ப­ரப்பில் கடல் பஞ்சால் உறிஞ்­சப்­பட்­டது போன்று நீர் உறிஞ்­சப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­வ­தாக புதிய ஆய்­வொன்று உரிமை கோரு­கி­றது.

அந்தக் கிர­கத்­தி­லுள்ள பாறை­களில் எரி­மலைச் செயற்­பா­டுகள் கார­ண­மாக வெளித்­தள்­ளப்­பட்ட கனி­யுப்­புகள் படிந்­தி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்தக் கனி­யுப்­புகள் பூமி­யி­லுள்ள நீரை விடவும் 25 சத­வீ­தத்­திலும் அதி­க­மான நீரை உறிஞ்சி வைத்­தி­ருக்கக் கூடி­யவை எனவும் பிரித்­தா­னிய ஒக்ஸ்போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பூமி விஞ்­ஞான பிரிவைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் கூறு­கின்­றனர்.

ஆனால் அந்த நீர் செவ்­வாயின் மேற்­ப­ரப்பில் எவ்­வி­டங்­களில் உறிஞ்­சப்­பட்­டுள்­ளது என்பது தொடர்ந்து மர்மமாகவுள்ளதாக அவர்கள் தெரிவிக் கின்றனர்.

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற இலங்கை இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

மாலைதீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட இலங்கை இளைஞன் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படகு சவாரியில் ஈடுபட்ட போது அவருக்கு ஏற்பட்ட இதய நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த முறை இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தில் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய பிரதான நபர்களில் ஒருவராக செயற்பட்ட 33 வயதுடைய இளைஞரே உயிரிழந்தவராகும்.

இலங்கையில் பல புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகும் கடவுச்சீட்டு!!

இலங்கையில் சர்வதேச ரீதியான பல புதிய அம்சங்கள் அடங்கிய கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்தின்படி சர்வதேச அங்கீகாரம் கொண்ட புதிய கடவுச்சீட்டு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஜெனரல் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டின் இறுதியில் புதிய கடவுச்சீட்டு மக்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் டிலாரு என்ற பிரித்தானிய நிறுவனம் புதிய கடவுச்சீட்டினை அச்சிடவுள்ளது. புதிய கடவுச்சீட்டு வெளியிடுவதற்கான அறிக்கைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த அனைத்து மாற்றங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கட்டுப்பாட்டு ஜெனரல் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது வழங்கப்படுகின்ற கடவுச்சீட்டு பற்றிய பொதுவான தகவல்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதியில் இருந்து சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் ஐ.சி.ஏயின் தரநிலை தரத்திற்கு இணங்க ஒரு டிஜிட்டல் புகைப்படம் மற்றும் உயிரியியல் தரவுகளாக கைரேகையை திணைக்களத்திற்கு வழங்க வேண்டும்.

இந்த புகைப்படங்கள் எங்களுடைய திணைக்களத்தினால் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டூடியோ அல்லது புகைப்பட தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் இருந்து பெற்றுகொள்ள முடியும்.

கைரேகைகளை எங்கள் திணைக்களத்தின் பிரதான அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் வருகைத்தந்து வழங்குவது அவசியமாகும்.

கடவுச்சீட்டு தொடர்பான முக்கிய தகவல்கள்

வயது பேதம் இன்றி அனைத்து கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களும் “K RV 35A”வடிவ விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களினதும் கைரேகை பிரதான அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கை ரேகை மற்றும் டிஜிட்டல் புகைப்படம் வழங்காமல் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முடியும்.

பெற்றோரின் கடவுச்சீட்டுக்காக பிள்ளைகளை அனுமதிப்பது இனிமேலும் செல்லுப்படியாகாது. பிள்ளைகளுக்காக தனியாக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

60 வயதுக்கு குறைவான எந்தவொரு நபருக்கும் அவசர சான்றிதழ்கள் வெளியிடப்படாது.

கடவுச்சீட்டுக்கான புகைப்படங்களை திணைக்களத்திற்கு வழங்கும் முறை

திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களில் உங்கள் புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் புகைப்படங்கள், புகைப்பட நிலையங்கள் மூலம் எங்கள் திணைக்களத்தின் தரவுத்தளத்திற்கு அனுப்பப்படுகின்ற நிலையில், அங்கு ஒரு ரசீது உங்களுக்கு வழங்கப்படும். கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான அச்சிடப்பட்ட புகைப்படங்கள் தேவையில்லை.

இந்த ரசீது, கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் அல்லது கிளை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுகொள்வதற்கு 1962 அல்லது 011 532 9200 / 001 532 9175 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கையின் குடிமக்கள் எவரும் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிப்பு : சிலர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை!!

வவுனியா வடக்கிற்கான சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் சில அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் சீரான ஆவணங்களை சமர்ப்பிக்காமையால் அந்தந்த வட்டாரங்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்தார்.

வேட்பு மனு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த மாதம் 18ஆம் திகதியில் இருந்து 21ஆம் திகதி வரை வேட்பு மனு காலம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் 12 கட்சிகளும், 5 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இதனடிப்படையில் வவுனியா நகரசபைக்கு 10 அரசியல் கட்சிகள் மாத்திரமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு 9 அரசியல் கட்சியும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு 4 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும், வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன.

வெண்கல செட்டிக்குளம் பிரதேசசபைக்கு 8 அரசியற் கட்சிகள் மாத்திரமே வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தன. இதனடிப்படையில் 45 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒரேயொரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சில வேட்புமனுக்களில் வேட்பாளர்களது ஆவணங்கள் சரியாக சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் கட்சிகள் நிராகரிக்கப்படா விட்டாலும் அந்த வட்டாரங்களிற்குரிய வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.” எனவும் தெரிவித்தார்.

திடீரென கறுப்பு நிறமாக மாறிய ஆற்று நீர்!!

 
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் கொண்டு செல்லும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயாவின் நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கெசல்கமுவ ஓயா ஆற்றில் செல்லும் நீர் இன்று காலை திடீரென கறுப்பு நிறத்தில் செல்வதை பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கெசல்கமுவ ஒயா ஆற்று நீரின் நிறம் திடீரென மாறியது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை தேயிலை தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் கலந்ததால் இந்த நிறமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன் காரனமாக பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை அமைக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களை பொலிஸார் சோதனை செய்து வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மக­ளை­யும் கொன்று தாயும் தற்கொலை : யாழில் நடந்த துயர சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில் தாயொருவர் தனது பிள்ளையை கொலை செய்து தானும் தற்கொலை நேற்று செய்துள்ளார். யாழ்ப்பாணம், அராலி பகுதியை சேர்ந்த 26 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இந்த கொடூர செயலை செய்துள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தாயின் தவறான முடிவால் 6 வயதான பாலகி பரிதாபமாக உயிரிழந்தார். மற்றைய குழந்தையையும் கொல்வதற்குத் தாய் முயன்றபோதும் அவர் தப்பியோடி அயலவர்களுக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவம் வெளியே தெரியவந்தது.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட சண்டையே அந்தப் பெண் இப்படித் தவறான முடிவெடுப்பதற்குக் காரணம் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையில் நேற்றைய தினம் சண்டை முற்றிய நிலையில் மாலையில் தாயார் தானும் பிள்ளைகளும் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

ஒரு மகள் வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த நிலையில், கடைசி மகளைத் தூக்கிலிட்டுவிட்டு மற்றைய மகளையும் தூக்கிலிட முயன்றிருக்கிறார். பயந்து போய் தாயிடமிருந்து தப்பித்து ஓடிய அந்தப் பிள்ளை அயலவர்களிடம் தகவல் சொல்லியுள்ளார்.

அயலவர்கள் வந்து பார்த்தபோது தாயும் பிள்ளையும் தூக்கில் தொங்கியபடி இருந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்து விரைந்தனர். எனினும் தாயார் ஏற்கனவே இறந்திருந்தார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்படும் போது உயிருடன் இருந்த சிறுமி 4 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார். இருவரது சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சியை சேர்ந்த 30 வயதான ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடமிருந்து 3 கிலோ 570 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் சாத்தியம்!!

இலங்கையின் மொனராகலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், சில கடற்கரை பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும், மொனராகலை, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுகிறது. அத்துடன், காங்கேசன்துறையில் இருந்து புத்தளம் வழியாக கொழும்பு வரையிலும், காலியிலிருந்து மாத்தறை வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதியில் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்வதற்காக சாத்தியமும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமாக மரணம்!!

வவுனியா மருக்காரம்பளை கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சிவகுமார் கஜந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மர்மமாக மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் நேற்று இரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் திடீரென தன் தந்தையை அழைத்து தான் விஷம் அருந்தியுள்ளதாக கூறியதையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதித்ததும் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருடைய மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.‌

இலங்கை இந்திய ரசிகர் நட்பு : நெகிழ்ச்சியான சம்பவம்!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் விளையாடும் பொழுது பார்வையாளர் அரங்கில் சில ரசிகர்களை தனித்துவமாக இனங்காண முடியும்.

அவர்கள் தங்களது வித்தியாசமான நடையுடை பாவனைகளால் விளையாட்டின் சூழலை வேறொரு பரிமாணத்திற்குக் கொண்டு செல்வார்கள்.

அந்தவகையில் இந்தியாவின் சுதீர் சௌத்ரி, பாகிஸ்தானின் அப்துல் ஜலில், இலங்கையின் பேர்ஸி அபேசேகர போன்றவர்களை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும்.

இவர்கள் உள்நாட்டில் மாத்திரமில்லாமல் வெளிநாட்டில் நடைபெறுகின்ற போட்டிகளில் கூட தமது சொந்தப்பணத்திலும் கிரிக்கெட் சபைகள் மற்றும் விளையாடும் வீரர்களின் தயவிலும் ஒவ்வொரு போட்டியையும் கண்டு களித்து வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருவார்கள்.

இந்நிலையில் இந்தியாவின் சுதீர் சௌத்ரி குறித்தும் இலங்கை அணியின் இன்னொரு தீவிர ரசிகரான கஜன் சேனநாயக்க குறித்தும் செய்தி ஒன்று கடந்தவாரம் வெளியாகியுள்ளது.

தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்காக இலங்கையில் இருந்து வருகை தந்த கஜன் சேனநாயக்கவின் விமானப்பயணச் செலவு, விசா கட்டணம், தங்குமிடச் செலவு, பிரயாணச் செலவு ஆகியவற்றை சுதீர் சௌத்ரி ஏற்றுள்ளார் என்பது தான் அது.

இது குறித்து சுதீர் சௌத்ரி கூறுகையில் ‘ நான் 2012 ஆம் ஆண்டு இருதடவைகளும், 2015 ஆம் ஆண்டு ஒருதடவையும், இந்தவருடம் ஒருதடவையும் இந்தியாவின் போட்டிகளை இலங்கையில் பார்வையிடச் சென்ற போது என்னுடைய செலவுகள் அனைத்தையும் கஜன் சேனநாயக்கவே ஏற்றுள்ளார்.

ஆதலால் அவர் இம்முறை இந்தியாவுக்குப் போட்டியைப் பார்வையிட வரும்பொழுது அவரது செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள நான் விரும்பினேன் என்று கூறியுள்ளார்.

இவ்விருவரும் எதிரெதிர் அணிகளைச் சேர்ந்த ரசிகர்களாக இருந்தாலும் விளையாட்டையும் மதித்து நட்பையும் பேணிக்கொள்ளும் இவர்கள் உண்மையில் பல ரசிகர்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகின்றார்கள்.

புதிய மைல்கல்லை எட்டியது பேஸ்புக் மெசஞ்சர் லைட்!!

பேஸ்புக் வலைத்தள சேவையை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான விசேட அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றமை தெரிந்ததே.

அவற்றுள் பிரபல்யமானது பேஸ்புக் மெசஞ்சர் லைட் ஆகும் இது குறைந்த கோப்பு அளவினைக் கொண்டிருப்பதுடன் குறைந்த இணைய வேகத்திலும் செயற்படக்கூடியது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட இந்த அப்பிளிக்கேஷனை இதுவரை 100 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமே 50 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளங்கை அளவில் உயிருக்கு போராடிய குழந்தையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

 
பெண் என்பவள் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள் என கூறுவார்கள், ஒரு பெண் தாயாகும் போது, குழந்தையை கையில் ஏந்தும் அவள் படும் சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

அப்படி சந்தோஷமான தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்த Jeremy தம்பதியினருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி, இரட்டை குழந்தையை சுமந்த Jeremy-யின் மனைவி Leslie-க்கு 22 வாரத்திலேயே அதாவது கடந்தாண்டு நவம்பர் 20ம் திகதியே குழந்தை பிறந்துவிட்டது.

455 கிராம் எடையுடன் உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய குழந்தைக்கு Grayson Barnett என பெயரிட்டனர், மருத்துவர்களும் குழந்தை உயிர்பிழைத்து வாழ்வது கடினம் என்றனர்.

ஏற்கனவே பெண் குழந்தையை இழந்த சோகத்தில் இருந்த Jeremy-க்கு என்ன செய்தென்றே தெரியவில்லை, ஒருவழியாக ஆண் குழந்தையை காப்பாற்ற வேண்டிய சூழலில் Seattle Children’s Hospital-ன் Neonatal Intensive Care Unit இன்குபெட்டரில் வைத்து வளர்த்தனர்.

தோல்களும் மிக மெலிதான, சின்னஞ்சிறு உறுப்புகளுடன் பத்திரமாக பாதுகாக்கப்பட்டான் Grayson Barnett, ஒரு ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸை கொண்டாட தயாராகிவிட்டான்.

ஒவ்வொரு நிமிடமும் கொடூரமாக இருந்தாக கூறும் Jeremy, மிகவும் அதிர்ஷ்டசாலி என பெருமை கொள்கிறார்.

சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் அரிய பொக்கிஷத்துடன் கரை ஒதுங்கியது!!

 
ஜப்பான் சுனாமியால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அடித்துச் செல்லப்பட்ட கப்பல் ஒன்று அரிய வகை பொக்கிஷங்களுடன் அமெரிக்காவில் கரை ஒதுங்கியுள்ளது.

உரிமையாளர் தொடர்பாக எந்த தகவலும் இல்லாத குறித்த கப்பலில் goose barnacles எனப்படும் அரியவகை கடல் உயிரனங்கள் நிறைந்திருந்துள்ளது.

கடலில் நீண்ட ஆறு ஆண்டுகள் பயணப்பட்ட அந்த உடைந்து நொறுங்கிய கப்பலில் goose barnacles குவிந்திருப்பதை மக்கள் வியப்புடன் பார்வையிட்டு வருகின்றனர்.

அதிக விலைக்கு விற்கப்படும் குறித்த கடல் உணவானது கிடைப்பதற்கு அரியது எனவும், மிகுந்த போராட்டங்களுக்கு பின்னரே உரிய மக்கள் தேடி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

2011 சுனாமியில் சிக்கிய குறித்த கப்பலானது உடைந்த பின்னர் 6 முதல் 8 மாதங்களுக்கு முன்னர் ஹவாய் தீவுகளில் கரை சேர்ந்திருக்கலாம் எனவும், பின்னர் சுமார் 14 மாதங்களில் பயணப்பட்டு அமெரிக்காவின் வடமேற்கு கடற்கரை பகுதியில் ஒதுங்கியிருக்கலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டாரின் எல்லையை மூடிய சவுதி அரேபியா!!

தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறி கட்டார் நாட்டின் நிலவழி எல்லைப் பகுதியை சவுதி அரேபியா நிரந்தரமாக மூடியுள்ளது.

தீவிரவாதத்திற்கு கட்டார் ஆதரவு அளிப்பதாக குற்றஞ்சாட்டி, அந்த நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் துண்டித்தன.

இதன் விளைவாக கட்டார் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் கட்டார் உடனான நிலப்புற எல்லைப் பகுதியை, சவுதி அரேபியா இரண்டு வாரங்கள் மூடியது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை கட்டாரின் எல்லைப் பகுதியான சால்வாவை, சவுதி அரேபியா நிரந்தரமாக மூடியுள்ளது. இந்த தகவலை சவுதியின் சுங்க வரித்துறை நிர்வாகம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இலங்கையர்களை குறிவைத்து பேஸ்புக்கில் புதிய மோசடி!!

வெளிநாட்டிலிருந்து பரிசுப்பொதியை அனுப்புவதாககூறி, பேஸ்புக் மூலம் இலங்கையர்களிடம் வெளிநாட்டவர்கள் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சில பேஸ்புக் பாவனையாளர்கள், இது தொடர்பான முறைப்பாடுகளை செய்துள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2017ஆம் ஆண்டில் பேஸ்புக் தொடர்பில் 3 ஆயிரத்து 400 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் புகைப்படங்களை மாற்றுவது தொடர்பிலேயே பெரும்பாலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பேஸ்புக் ஊடாக தொடர்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்கள், அறிமுகமாகிய ஒரு மாத காலத்தில், பரிசுப் பொதியொன்றை இலங்கைக்கு அனுப்புவதாகவும், அதனை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கப்படுவதாக முறைப்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
எனினும், தமக்கு பரிசுப் பொதி கிடைக்கவில்லை என்றும், தாம் செலுத்திய பணமும் இல்லாமல் போயுள்ளதாகவும் முறைப்பாட்டாளர்கள் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இவ்வாறான நிலைமைகள் தொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த தெரிவித்துள்ளார்.