மும்பையில் பிரபல தொகுப்பாளினி மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கோரி அவரது சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார்.
மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அர்பிதா திவாரி(24), பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான அவர், தனது காதலருடன் சேர்ந்து மானவ்ஸ்தல் ஹைட்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்புக்கு நண்பரை சந்திக்க சென்றுள்ளார்.
அங்கு நடந்த பார்ட்டிக்கு பின்னர், அதிகாலை 4 மணிக்கு அனைவரும் தூங்கியுள்ளனர். ஆனால், காலை 7 மணிக்கு எழுந்த ஜாதவ், குளியலறைக்குச் சென்று பார்த்தபோது உள்பக்கமாக பூட்டியிருந்ததால், அவர் மீண்டும் வந்து படுத்து தூங்கிவிட்டார்.
மறுபடியும் எழுந்து வந்தபோதும் குளியறை பூட்டியிருந்ததால் சாவி போட்டு திறந்து பார்த்துள்ளார். உள்ளே இருந்த ஜன்னலின் கண்ணாடி தரையில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், அர்பிதாவை காணவில்லை.
இதனிடையே அர்பிதா 2வது மாடியின் குழாயில் அரை நிர்வாணமாக பிணமாகத் தொங்கியது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அங்கு இருந்த அர்பிதாவின் நண்பர்கள், அவர் குளியலறை ஜன்னல் வழியே குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று கூறினர்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கொலையாக இருக்கும் என அர்பிதாவின் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். அர்பிதாவின் சகோதரி சுவேதா சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.
அவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன்னர் அர்பிதா தன்னிடம் பேசும் போது எதிர்கால திட்டங்கள் குறித்து பேசியதாகவும், தங்கத்தில் முதலீடு செய்வது குறித்து தனக்கு ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அர்பிதாவின் நண்பர் லக்கி சர்மா, அர்பிதாவுக்கும், அவரது காதலருக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்ததாகவும், அதுவே இறப்புக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை பணிகள் குறித்து கடலூரில் ஆய்வு மேற்கொண்டபோது தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளார்.
கடலூர் வண்டிப்பாளையம் பகுதிக்கு சென்று அங்குள்ள கழிவறைகளை ஆய்வு செய்தபோது, அங்கிருந்த கீற்று மறைப்பில் பெண் ஒருவர் குளித்துக்கொண்டிருந்துள்ளார். இதனை கவனிக்காத ஆளுநர், கீற்று மறைப்பிற்குள் நுழைந்துள்ளார், இதனால் அப்பெண் கத்தி கூச்சலிட்டதையடுத்து ஆளுநர் அங்கிருந்து அழைத்துசெல்லப்பட்டார்.
இந்நிலையில், தாம் குளிக்கும் போது ஆளுநர் அத்துமீறி நுழைந்து பார்த்துவிட்டதாக அந்த இளம்பெண் புகார் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் புகாரால் இச்சம்பவத்தில் ஆளுநர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் காவல்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.
கனடாவில் மனைவியை காயப்படுத்தி கொலை செய்த தமிழரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள மால்வெர்ன் நகரில் வசித்து வருபவர் கதிர்காமநாத சுப்பையா (45). இவர் மனைவி ஜெயந்தி சீவரத்னம் (46). ஜெயந்தி நேற்று நகரில் உள்ள எம்பிர்ங்கம் பகுதியில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.
இதை பார்த்த அவசர உதவி குழுவினர் ஜெயந்தியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜெயந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த ஜெயந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அதிகளவில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து ஜெயந்தியை கொலை செய்ததாக அவரின் கணவர் சுப்பையாவை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈராக்கில் கொலை குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சன்னி போராளிகள் 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெற்கு ஈராக்கில் உள்ள நஸ்ரியா நகரின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்த தீவிரவாத கும்பலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் சிறைச்சாலையில் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஒரே நாளில் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சன்னி போராளிகள் 42 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின் இன்று ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி, தனது காதலியான இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை இத்தாலியில் வைத்து கரம் பிடித்தார்.
அடுத்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி 21ஆம் திகதி டெல்லியிலும், 26ஆம் திகதி மும்பையிலும் நடக்கிறது. வரவேற்பு பத்திரிகையை வழங்குவதில் இருவரும் புதுமையை கடைபிடித்துள்ளனர்.
பத்திரிகையுடன் இணைத்து ஒரு மரக்கன்றையும் கொடுத்து வருகிறார்கள். மும்பையில் ஏராளமான பிரபலங்களுக்கு இந்த மாதிரியே அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே, தனக்கு திருமண வாழ்த்து கூறிய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் விராட் கோலி, ‘டுவிட்டர்’ மூலம் தனித்தனியே நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் மக்களுக்கு வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இரு பெண்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்த இரு பெண்கள், தமது பணப் பையை தொலைத்துள்ளனர். எனினும் இதனை கண்டெடுத்தவர் உரிய பெண்களிடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து நாட்டு மக்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வெரோனிக்கா என்பவரும் இத்தாலி நாட்டை சேர்ந்த வியானா என்பவரும் கடந்த முதலாம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். சுற்றுலா வழிக்காட்டியுடன் குறித்த இருவரும் 14ஆம் திகதி மாலை தம்புள்ளைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பின்னர் சீகிரியாவுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது தம்புள்ளை நகர மத்தியில் அமைந்துள்ள கடைக்கு சென்ற போது ஸ்பெயின் நாட்டு பெண்ணின் பணப்பை கீழே விழுந்துள்ளது. இந்த பணப்பையை அவதானித்த நபர் ஒருவர், அதனை கடை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார். பணப் பையை பரிசோதித்த போது இலங்கை பணம், அமெரிக்க டொலர், அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் மற்றும் வங்கி அட்டைகள் போன்றவைகள் காணப்பட்டுள்ளன.
பணப் பையை கொடுக்கும் நோக்கில் அதன் உரிமையாளரை அந்தப் பகுதியினர் தேடியுள்ளனர். இதன்போது இரு வெளிநாட்டு பெண்கள் தங்கள் பையை தேடுவதனை அவதானித்துள்ளனர். அதற்கமைய கிடைத்த பையை அவர்களிடம் ஒப்படைக்க ஆயத்தமாகியுள்ளார்.
அதன் பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அதனை பொலிஸார் முன்னிலையில் அவர் ஒப்படைத்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு தான் இதயபூர்வமான நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், இலங்கையர்களின் இந்த செயற்பாட்டினை தான் மதிப்பதாகவும் வெளிநாட்டு பெண்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் வன்முறை வெடித்ததிலிருந்து ஒரு மாதத்தில் குறைந்தது 6,700 ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது.
மியான்மர் அரசு 400 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது ஒப்பிடத்தக்கது. மியான்மர் அதிகாரிகளால் நடத்தப்பட்ட “பரவலான வன்முறையின் தெளிவான அறிகுறி” எனவும் எம்.எஸ்.எஃப் குறிப்பிட்டுள்ளது.
இது “தீவிரவாதிகளின்” தாக்குதல் எனக்கூறிய மியான்மர் இராணுவம், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
கடந்த ஆகஸ்டிலிருந்து 6 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிஞ்சாக்கள் பங்களாதேஷூக்கு தப்பியுள்ளதாகவும் எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 25ஆம் திகதியில் இருந்து செம்டம்பர் 24 ஆம் திகதி வரை 9,000 ரோஹிஞ்சாக்கள் மியான்மரில் உயிரிழந்துள்ளதாக உதவிக்குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது.
மிகவும் குறைத்து மதிப்பிட்டாலும்கூட ஐந்து வயதுக்கு உட்பட்ட 730 குழந்தைகள் உட்பட சுமார் 6,700 பேர் அங்கு நடைபெற்ற வன்முறை காரணமாக உயிரிழந்ததாக எம்.எஸ்.எஃப் கூறுகிறது.
முன்னதாக, பெரும்பாலான முஸ்லிம் தீவிரவாதிகள் என்று கூறப்பட்டவர்களை உள்ளடக்கிய 400 பேர் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்திருந்தது.
செய்தியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், அகதிகளுடன் எடுத்த நேர்காணல்களின் அடிப்படையிலான விரிவான அறிக்கைகள் ஏராளமாக உள்ளன. இது பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களை மறுக்க முடியாததாக ஆக்கியுள்ளது.
ஆனால் பெரும்பாலான இந்த அறிக்கைகள், மோசமான உதாரணங்களை கணக்கில் எடுத்துக்கொள்கின்றன, பெரும்பாலான ஊடகங்கள் துலா தொலி என்ற ஒரு கிராமத்தில் நிகழ்ந்த படுகொலைகைள் குறித்து செய்திகளை வெளியிட்டன. நான் ஒருவரை நேர்காணல் எடுக்கையில், தாங்கள் வன்முறைக்கு பயந்து தப்பி ஓடியதாகவும், ஆனால் உண்மையில் அதை அனுபவித்திருக்கவில்லை என்றும் அந்த ரோஹிஞ்சா தெரிவித்தார்.
மனித நேயத்துக்கு எதிராக இராணுவம் செய்த இந்தச் செயல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்காக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு கொடுமையானது என எம்.எஸ்.எஃப்பின் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்துக்கு மியான்மர் ஒப்புதல் அளிக்காததால் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பது ஓர் பிரச்சினை. மேலும் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகளின் ஒப்புதல் தேவை. ஆனால் மியான்மர் அரசு இந்த சிக்கலைக் கையாளும் விதத்துக்கு நிரந்தர உறுப்பு நாடான சீனா ஆதரவு அளித்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி ரோஹிஞ்சா போராளிகள், 30 பொலிஸ் சாவடிகளைத் தாக்கியதை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது.
உள்நாட்டு விசாரணைக்கு பிறகு, நெருக்கடி குறித்த அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் மியான்மர் இராணுவம் தங்களை விடுவித்து கொண்டது.
பொதுமக்களை கொன்றது, கிராமங்களை எரித்தது, பெண்கள் மற்றும் சிறுமிகளை வன்புணர்வு செய்தது, மற்றும் உடைமைகளை களவாடியது போன்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மறுத்தனர்.
பங்களாதேஷில் இருந்து வந்து குடியேறியவர்கள் எனக்கூறி, முஸ்லிம் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மியான்மர் மறுத்து வந்தது. ரோஹிஞ்சாக்கள் என்று குறிப்பிடாத அந்நாட்டு அரசு அவர்களை பங்களாதேஷ் முஸ்லிம்கள் என்று அழைக்கிறது.
மியான்மர் அரசின் வலியுறுத்தல்கள் பிபிசி செய்தியாளர்கள் பார்த்த ஆதாரங்களுக்கு முரணாக உள்ளது.
மேலும், “மியான்மரில் நடப்பது இன அழிப்புக்கான மிகச்சரியான எடுத்துக்காட்டு” என ஐ.நா மனித உரிமை ஆணையர் தெரிவித்துள்ளார்.
“வன்முறை காரணமாக தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்ததாக பலர் கூறியதையும், மேலும் அவர்கள் கொலை செய்யப்பட்டது மற்றும் படுகாயமடைந்த கொடூரமான முறைகளை நாங்கள் வெளிப்படுத்தியது அதிர்ச்சியளிக்கும் ஒன்று” என எம்.எஸ்.எஃப்பின் மருத்துவ இயக்குனர் சிட்னி வாங் தெரிவித்தார்.
எம்.எஸ்.எஃப் கூற்றுப்படி, வன்முறை தொடர்பான உயிரிழப்புகள் 69% துப்பாக்கிச்சூடு மூலம் நிகழ்ந்துள்ளன. வீடுகளுக்கு தீ வைத்ததினால் உயிரிழந்தவர்கள் 9% பேர். அடித்துக் கொல்லப்பட்டவர்கள் 5% பேர்.
ஐந்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதில் 59% பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 15% பேர் எரிக்கப்பட்டதாகவும், 7% பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கண்ணி வெடிகளால் 2% பேர் கொள்ளப்பட்டுள்ளதாகவும் எம்.எஸ்.எஃப் கூறுகிறது.
“பங்களாதேஷில் குடியேறியுள்ள அனைத்து அகதி முகாம்களிலும் கணக்கெடுக்கவில்லை மற்றும் மியான்மரில் இருந்து வெளிவராத குடும்பங்களும் இக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதால் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மதிப்பிடப்படுவதைவிட அதிகமாக இருக்கலாம்,” என்றும் வாங் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம், லட்சக் கணக்கான அகதிகளை திருப்பி அனுப்ப மியான்மர் நாட்டுடன் ஒரு உடன்படிக்கையில் பங்களாதேஷ் கையெழுத்திட்டது.
மக்கள் இன்னும் மியான்மரிலிருந்து தப்பி வருவதாலும், சமீப வாரங்களில்கூட வன்முறை குறித்த செய்திகள் வந்து கொண்டிருப்பதாலும் இந்த உடன்படிக்கை காலம் கனியும் முன்பே போடப்பட்டதாக எம்.எஸ்.எஃப் கூறியது.
மேலும், ரக்கைன் மாகாணத்தில் இன்னும் மிகக் குறைந்த அளவிலேயே உதவிக் குழுக்கள் அணுக முடிவதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ரோஹிஞ்சாக்கள், நீண்ட காலங்களாக மியான்மரில் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும் முஸ்லிம் சிறுபான்மையினர் ஆவர்.
கமல்ஹாசனின் தசாவதாரம் மற்றும் சிம்புவின் ஒஸ்தி போன்ற தமிழ் படங்களில் தோன்றியிருப்பவர் பொலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்.
இவர் தன் காதலர் Cyrille Auxenfansவுடன் பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஒரு அபார்ட்மெண்டில் தாங்கிவந்துள்ளார். அதற்கு வாடகை 80,000 யூரோ (62 லட்சம் ரூபாய்) செலுத்தாமல் இருந்துள்ளார். அதனால் அந்த அபார்ட்மெண்டின் உரிமையாளர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் என செய்திகள் பரவியது.
அதற்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ள நடிகை, “எனக்கு பாரிஸில் வீடு உள்ளது என்பது உங்கள் செய்தியை பார்த்துதான் தெரிகிறது. அட்ரஸ் இருந்தால் அனுப்பிவிடுங்கள்” என தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளால் மூடப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தெரிவித்தார்
கடந்த நவம்பர் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளை யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்குள் கொண்டாடிய தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து வவுனியா வளாகம் காலவரையரையின்றி மூடப்பட்டிருந்ததுடன் விடுதிகளில் இருந்த மாணவர்களும் உடனயாக வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து வவுனியா வளாகம் காலவரையரையின்றி மூடப்பட்டிருந்ததுடன் விடுதிகளில் இருந்த மாணவர்களும் உடனயாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வயாகத்தின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 13ஆம் திகதியில் இருந்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விடுதிகளில் தங்குவதற்கு தகுதிபெற்றவர்கள் கடந்த 13அம் திகதியில் இருந்து தங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் வியாபார கற்கைகள் பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் யாவும் 2.1.2018 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வளாக முதல்வர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று (15.12.2017) மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளருமான ப.சத்தியலிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வுவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா சந்திரகுலசிங்கம் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது மூன்று கட்சிகளின் கூட்டாக இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறது. வவுனியா ஒரு எல்லைப்புற மாவட்டமாகும். அதில் வவுனியா வடக்கு பிரதேசமானது தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த தமிழர்களின் பூர்வீக பிரதேசமாகும்.
எனினும் கடந்த ஆட்சியில் நெடுங்கேணி பிரதேசத்தின் தெற்கு எல்லையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் கபளீகரம்செய்யப்பட்டு நாசூக்காக திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தக்குடியேற்றங்கள் கடந்த அரசில் இராணுவத்தின் பிரசன்னத்துடன் இருந்தமையினால் பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தி நன்கு திட்டமிட்ட வகையில் குடியேற்றங்கள் நடந்தேறியுள்ளது.
இதனால் தமிழ் மக்கள் வாழும் வட்டாரங்களில் வாக்குகள் சிதறிக்கப்பட்டால் பெரும்பான்மை கட்சிகள் வடக்கு பிரதேச சபையை கைப்பற்றும் நிலை ஏற்படும். எனவே தமிழ் மக்கள் தமது பேதங்களை மறந்து ஒற்றுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டுமென தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக இவ்வருடம் 8,500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
இதற்கிணங்க சிறுவர்களின் கட்டாய கல்வியை தடுத்தல் தொடர்பாக 1298 முறைப்பாடுகளும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 481 முறைப்பாடுகளும், தீவிர பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 284 முறைப்பாடுகளும், 14 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் மீதான வன்புணர்வு தொடர்பாக 322 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தை மற்றும் இளைஞர் கட்டளை சட்டத்தின் கீழ் சிறுவர் புறக்கணிப்பு தொடர்பான முறைப்பாடுகள் 358 கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக ஆகக்கூடிய முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் படி கொழும்பில் 1232 முறைப்பாடுகளும், கம்பஹா மாவட்டத்தில் 925 முறைப்பாடுகளும், களுத்துறை மாவட்டத்தில் 550 முறைப்பாடுகளும், காலி மாவட்டத்தில் 647 முறைப்பாடுகளும், குருணாகல் மாவட்டத்தில் 654 முறைப்பாடுகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 490 முறைப்பாடுகளும், யாழ்ப்பாணத்தில் 925 முறைப்பாடுகளும், வவுனியா மாவட்டத்தில் 122 முறைப்பாடுகளும், மட்டக்களப்பில் 170 முறைப்பாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 125 முறைப்பாடுகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 117 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பெறப்பட்டு அவை தொடர்பான தகவல்கள் விசேடமாக பேணப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர் சட்ட அமுலாக்கல் பிரிவு, அவை தொடர்பான கட்சிகள் மற்றும் தொழிலாளர் திணைக்களம் குறிப்பாக பொலிஸ், கல்வி திணைக்களம் ஆகியவற்றுக்கும் அறிவிக்கப்படவுள்ளன.
தற்போது சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக செய்யப்படும் முறைப்பாடுகள் அவை சட்ட அமுலாக்கல் பிரிவினால் மேற்பார்வை செய்யப்ப ட்டு உடனுக்குடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலை வர் தெரிவித்துள்ளார். மேலும் இவை தொடர்பான துரித விசாரணைகளை வலுப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் விசேட பொலிஸ் பிரிவு, சட்ட அமுலாக்கல் பிரிவு மற்றும் உளவியல் பிரிவு என்பனவும் அமைக்கப்பட்டு ள்ளன. இதன்மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான உடனடி தீர்வொன்றை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக் கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவோருக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுப்பதோடு, பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீண் டும் இலகுவாக சமூகத்திற்கு முகம் கொடுக்கச் செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவும் முக்கியமானதாகும். எனவே மக்கள் இதற்கு உதவ முன்வர வேண்டும் என அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை தொடர்பான எந்த விதமான முறைப்பாடுகளையும் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் உடனுக்குடன் தெரிவிக்க முடியும். 24 மணி த்தியாலங்களும் இத்தொலைபேசி சேவை பாவ னையிலிருக்கும் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லுனுகம மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக தோற்றியிருந்த இரண்டு மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பரீட்சைக்கு தோற்றும் இரண்டு மாணவர்கள் பரீட்சை சுட்டிலக்கங்களை மாற்றிக் கொண்டு ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதாக குறித்த பரீட்சை நிலையத்தின் பொறுப்பதிகாரியினால் லுனுகம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 17 வயது மற்றும் 18 வயதுடைய இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களும் இன்று பதுளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் வட மாகாண சபை உறுப்பினருமாகிய ப.சத்தியலிங்கத்தை ஊவா மாகாண சபையின் அமைச்சர் செந்தில் தொண்டமான் நேற்றிரவு (14.12.2017) வவுனியாவில் சந்தித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் எதிர்க்கட்சி தலைவரை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதன் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு நடைபெற்றது.
இச் சந்திப்பின் போது வவுனியா மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மலையக மக்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த ப.சத்தியலிங்கம்,
ஏற்கனவே இது தொடர்பில் தாங்கள் கவனமெடுத்திருப்பதாகவும் பிரதேச சபைகளில் மலையக சமூகத்தினருக்கு வாய்ப்புகள் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் மலையக தமிழர் என்ற வர்க்க வேறுபாடுகளின்றி வடக்கில் வாழும் தமிழர்கள் என்ற ரீதியிலேயே அனைவரும் ஒற்றுமையுடன் வாழுவதாகவும்,
தமிழர்களுக்கான இன விடுதலை உரிமைப்போராட்டத்தில் மலையக தமிழ் மக்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியததெனவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் செந்தில் தொண்டமான், சுதந்திரத்திற்கு பின்னர் உருவாக்கப்பட்ட தமிழ் தலைமைகளுடன் இணைந்து பணியாற்றியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களாகிய வடகிழக்கு தமிழ் மக்களும் மலைய மக்களும் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதனூடாகவே அரசியல் உரிமைகளை வென்றெடுக்கமுடியுமெனவும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு இன்று மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.
வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (EPRLF) மத்திய குழு உறுப்பினர் க.அருந்தவராசா, முன்னாள் நகரசபை உறுப்பினர் சிவகுமார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பரமேஸ்வரன், தர்மலிங்கம், மாவட்ட பிரஜைகள் குழுவின் ஸ்தாபகத் தலைவர் தேவராசா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.