பிரித்தானியாவில் மகனின் புகைப்படத்தில் தோன்றிய ஆவி : தூக்கம் தொலைத்த தாய்!!

பிரித்தானியாவின் Northumberlandஇல் பார்க்குக்கு சென்றபோது எடுக்கப்பட்ட தனது மகனின் புகைப்படங்களை பார்வையிட்ட Laura Watson தனது மகனான Byrin Watsonஇன் பின்னால் நின்ற ஆவியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதுவும் ஒரு குழந்தையின் உருவம், அது Byrin Watsonஇன் தோள் மீது கை வைத்துக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டு இருப்பது புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

இதற்கு முன் இது போன்ற விடயங்களில் நம்பிக்கை இல்லாத Lauraவுக்கு இந்த புகைப்படத்தைப் பார்த்ததும் பயம் பிடித்துக் கொண்டது.

இரவுகளில் தன்னால் தூங்க முடியவில்லை என்றும் தனது மகனின் பின்னாலேயே அந்த ஆவி வீட்டுக்கு வந்திருக்குமோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது கணவர் வேறு நைட் டியூட்டியில் இருக்க பயந்து சாகிறார் Laura. இந்த செய்தி வெளியானதும் சிலர் இது போட்டோ ஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்று விமர்சித்திருந்தனர்.

தனக்கு தொழில்நுட்பம் குறித்து எதுவும் தெரியாது என்று கூறியுள்ள Laura அதேபோல் தாங்கள் பார்க்குக்கு சென்றபோது வேறு யாரும் அங்கில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார்.

பல மாதங்களுக்குமுன் ஒரு சிறுவன் பார்க் அருகில் உள்ள ஏரி ஒன்றில் மூழ்கி இறந்து விட்டதாக ஒரு செய்தி உலவுவதாகவும் அது உண்மையா இல்லையா என்று தனக்கு தெரியாது என்றும் கூறும் Laura அச்சத்துடன் நாட்களைக் கழிக்க பலர் சமூக வலைத்தளங்களில் அவருக்காக பிராத்தனை செய்வதாக கூறியுள்ளார்கள்.

தமிழகத்தில் அதிக கவனம் பெற்ற மணப்பெண்ணின் 10 கட்டளைகள்!!

தமிழகத்தில் எட்வின் என்பவருக்கும் பெனிலா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் பத்து கட்டளைகள் தான் முக்கியத்துவம்பெற்றுள்ளன.இதற்கு மணமகனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

திருமண பேனரில் வைக்கப்பட்டுள்ள மணப்பெண்ணின் பத்து கட்டளைகள் தமிழகத்தில் அதிகம் கவனம் பெற்றுள்ளது.

1.உன்னுடைய மனைவி நானாகிறேன், மற்றொரு காதலி உனக்கு இருக்க கூடாது, 2. கண்டவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது. அவளுடைய அழகை குறித்து வர்ணிக்க கூடாது. 3. இரவு 8.30 மணிக்கு கிச்சன் க்ளோஸ்,
4. இரவு 9.30 மணிக்கு பெட்ரூம் க்ளோஸ் க்ளோஸ், 5. தேங்காய் எண்ணை. ஷாம்பு, சோப்பு துண்டு சொந்தமாய் எடுத்துக்கொண்டு போய் குளிக்க வேண்டும். அதற்காக தொந்தரவு செய்யக்கூடாது,

6.ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி பழைய சாப்பாடானாலும் வீட்டில் சாப்பிட வேண்டும், 7.தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும், 8.சாயங்காலம் 6.30 முதல் 9.30 வரை சீரியல் டைம், கூப்பிட்டு தொந்தரவு செய்யக்கூடாது. பச்ச தண்ணி கூட கிடையாது, 9. உறக்கத்தில் குறட்டை விடவோ, சத்தம் போடவோ கூடாது, 10.மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சண்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.என்று இடம்பெற்றுள்ளது.

2 வயதுக் குழந்தையை கடித்துத் தின்ற தெரு நாய்கள்!!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றை தெரு நாய்க் கூட்டம் சேர்ந்து தின்று தீர்த்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள பீம் நகர் குடியிருப்பு பகுதியில் திங்கள் இரவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையை சூழ்ந்து கொண்ட தெரு நாய்கள் கூட்டம், அதைக் கடித்து அருகில் உள்ள கரும்பு வயல் ஒன்றுக்கு இழுத்துச் சென்றுள்ளது.

அங்கு வைத்து குழந்தையை அனைத்து நாய்களும் சேர்ந்து தின்று தீர்த்துள்ளன. பின்னர் சம்பவம் பற்றித் தகவல் அறிந்த பகுதிவாசிகள் ஒன்று கூடி. மோடிநகர் நகராட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதன்படி பல நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், மோடி நகர் மண்டல துணை நீதிபதி பவன் அகர்வால் தெரிவித்துள்ளார்.

வன்னி விளான்குளம் பகுதியில் வாகன விபத்து : இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி!!

வன்னி விளான்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.

மல்லாவியில் இருந்து மாங்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். இதன்போது வன்னி விளான்குளம் வீதி வளைவில் பாலத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

20 வயதான முருகன் நளின் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியாவில் பின்வரும் பகுதிகளில் இன்று மின்தடை!!

புனரமைப்பு மற்றும் நிர்மான பணிகள் காரணமாக வடமாகாணத்தின் பல இடங்களில் இன்றய தினம் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் இதனை தெரிவித்துள்ளார். அந்த வகையில், இன்று காலை 8.30 மணிமுதல் மாலை ஐந்து மணி வரையில் யாழ். மாவட்டத்தில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேலணையின் ஒரு பகுதி, மண்கும்பான், மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்டைதீவு இலங்கை கடற்படை முகாம், மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, மண்கும்பான் கடற்படை முகாம், சோளாவத்தை ஆகிய பகுதியில் மின் தடைப்பட்டிருக்கும்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின், அறிவியல் நகர், யுனிச்செலா, பொறியியல் பீடம், விவசாய பீடம், Mas Active, Farm House, North Cargill’s Agri Foods ஆகிய பகுதிகளில் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரையிலும், மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

அத்துடன், வவுனியா மாவட்டத்தின் சிதம்பரபுரம், கற்குளம், ஆசிக்குளம், ஆச்சிபுரம், எல்லப்பர் மருதங்குளம், கூமரசங்குளம், குடாகச்ச கொடிய, குடாகச்ச கொடிய கல் உடைக்கும் ஆலை, மகா மயிலங்குளம், துட்டுவாகை பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

இந்த பகுதியிலும் காலை எட்டு மணிமுதல் மாலை ஐந்து மணி வரைக்கு மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து வந்த பெண் கொழும்பில் பாரிய மோசடி : பொலிஸார் வெளிப்படுத்திய உண்மைகள்!!

கனடாவில் வாழ்வதாக கூறி கொழும்பில் பாரிய மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான தேவகே இஷாரா தினெக்ஷி என்ற பெண்னே கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக கூறி பெண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கும் குறித்த பெண்ணை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரான இந்த பெண் கொழும்பு மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளில் தங்கம் மற்றும் பணம் கொள்ளையடித்த குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த பெண், குழுக்களுடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் கனடாவில் தங்கியிருப்பதாக கூறியே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளார். தான் அரச சார்பற்ற அமைப்பில் சேவை செய்வதாக தெரிவித்து தம்புள்ளை இனாமழுவ பிரதேசத்தில் பெண் ஒருவரை ஏமாற்றி அவரிடம் பணம் மற்றும் நகைகளை திருடியுள்ளார்.

கனடாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நிதி அமைப்பின் தலைவரை சந்திப்பதற்காக கூறி அழைத்து சென்றே அவரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடம் இருந்து மோசடியான முறையில் பெற்றுக் கொண்ட தங்க சங்கிலியை அடகு வைத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெற்றோரை பார்க்க இலங்கை வர தயாரான இளைஞன் வெளிநாட்டில் திடீரென மரணம்!!

பெற்றோரை பார்ப்பதற்காக இலங்கை வர தயாரான இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஜப்பான், நகானோ, UEDA, nagano வர்த்தக கல்லூரியில் கல்வி கற்ற சினேத் ஷான் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நுரையீரலில் இரத்த உறைவு ஏற்பட்டமையினால் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது மாரடைப்பு ஏற்பட்டமையினால் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளார்.

பெற்றோரை பார்ப்பதற்காக இன்றயதினம் இலங்கைக்கு வருவதற்கு டிக்கட் ஒதுக்கியிருந்தார். இந்நிலையில் சினேத் ஷான் உயிரிழந்தமை குறித்து அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இலங்கை நண்பர்கள் பலரின் மனதை வென்ற இந்த இளைஞரின் சடலம் தற்போது ஜப்பான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சினேத் ஷானின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்றைய நாள் உங்களிற்கு எப்படி தெரியுமா : 31.05.2018 – வியாழக்கிழமை!!

மேஷம் பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். புதியபொருள் சேர்க்கை குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். நல்விருந்து, சுகபோகம் மிகுந்திருக்கும். உறவுகள், நட்பு அனுசரணையாக இருப்பார்கள்.

ரிஷபம் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் அனுகூலமாகும். பணவரவுகள் மகிழச்சி தரும். கடன் சுமைகள் குறையும். மனக்குறை நீங்கும். தேக ஆரோக்யம் பலமாகும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும். பயண காரியம் அனுகூலமாகும்.

மிதுனம் சுபகாரிய முயற்சி அனுகூலமாகும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர் வகையில் எச்சரிக்கை தேவை. செய்யும் தொழிலில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். திட்டமிடல் அவசியம்.

கடகம் இன்று உங்கள் செயல்பாடுகளில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். இனம்புரியாத மனக்கவலை சோர்வு தரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும். போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவை.

சிம்மம் செய்யும் தொழிலில் சாதகமான சூழ்நிலைகள் முன்னேற்றம் தரும். தேக ஆரோக்யத்தில் சிறு சிறு தொல்லை வரும். குடும்பத்தில் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். ஆன்மிகப் பயணம், சுற்றுலா போன்ற மனதுக்கு இதமான சூழ்நிலை வரும்.

கன்னி குடும்ப பிரச்னைகள் தீரும். நீங்கள் முயற்சி செய்யும் காரியம் அனுகூலமாகும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்னைகள் தீரும். ஆன்மிக ஈடுபாடு நற்பலன் தரும்.

துலாம் உங்கள் செல்வாக்கு உயரும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். இதுவரை சிரமப்படுத்தி கொண்டிருந்த கடன் சுமை குறையும். முக்கியமான காரியத்தில் சிறுதடை சிரமம் தரும். குடும்ப விஷயங்கள் சுமுகமாக இருக்கும். சுகபோகம் மிகுந்திருக்கும்.

விருச்சிகம் பணவரவினங்கள் உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும். மன நிம்மதி கிட்டும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். இறையருள் உங்களுக்கு நற்பலன்கள் தரும். நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் தள்ளிப்போகும்.

தனுசு வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். எதிர்பாராத பணவரவு உங்களை பதட்டப்பட வைக்கும். அவசரப்படாமல் திட்டமிட்டு செயல்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும். உறவுகள், நண்பர்கள் அனுசரணை உண்டு.

மகரம் இன்று நீங்கள் துணிச்சலாக எடுக்கும் முடிவு, செயல்படும் விஷயம் அனுகூலமாகும். தேக ஆரோக்யத்தில் முன்னேற்றம் இருக்கும். அயன சயன போகம் உண்டு. பயணத்தில் முன்னெச்சரிக்கை தேவை. குடும்பப் பிரச்னைகளில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம்.

கும்பம் துணிச்சலாக செயல்படுவீர்கள். பணவரவுகள் மனதிருப்தி தரும். குடும்பத்தில் அனுசரணையான போக்கு மகிழ்ச்சி தரும். நம்பிக்கைக்கு உரியவர்களால் ஏமாற்றமடைவீர்கள். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும்.

மீனம் நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் தள்ளிப்போகும். அரசு காரியம் அனுகூலமாகும். குடும்பத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தர்மகாரியம் செய்யும் வகையில் சூழ்நிலை இருக்கும்.

துபாய் செல்லும் முன்பு ஸ்ரீதேவி செய்த செயல் : முதல் முறையாக மனம் திறந்த மகள் ஜான்வி!!

துபாய்க்கு கிளம்பும் முன்பு ஸ்ரீதேவி செய்த ஒரு விஷயம் பற்றி ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.

அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள முதல் படமான தடக் விரைவில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் ஜான்வி தனது அம்மா பற்றி முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,

நான் நடிகையாவதை என் அம்மா விரும்பவில்லை. என் தங்கை குஷி நடிகையானால் ஓகே என்று இருந்தார் அம்மா. நான் ரொம்ப அப்பாவி என்பதால் திரையுலகம் வேண்டாம் என்று நினைத்தார்.

நானும், தங்கையும் எந்தவித டென்ஷனும் இல்லாமல் அமைதியாக வாழ வேண்டும் என்று அம்மா விரும்பினார். பெற்றோருடன் பயணம் செய்து கொண்டே இருந்ததாால் பள்ளிக்கு சரியாக சென்றது இல்லை. படித்து முடித்த பிறகு நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அம்மாவின் மறைவுக்கு பிறகு அர்ஜுன் அண்ணாவும், அன்ஷுலா அக்காவும் எங்களுடன் ஒன்று சேர்ந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அம்மாவை இழந்த துக்கத்தில் இருந்து வெளியே வர முடியாது என்று நினைக்கிறேன்.

நான் வளர்ந்துவிட்டாலும் அம்மாவுக்கு என்றுமே சிறு குழந்தை தான். காலையில் எழுந்தவுடன் அம்மாவை தான் தேடுவேன். சில நேரம் எனக்கு உணவு ஊட்டிவிடுவார். அம்மா தட்டிக் கொடுத்து தூங்க வைப்பார்.

அவர் துபாய் செல்வதற்கு முதல் நாள் தூக்கம் வரவில்லை தூங்க வைங்க என்றேன். அம்மா பேக் செய்வதில் பிசியாக இருந்தார். அதன் பிறகு பாதி தூக்கத்தில் இருந்த என்னை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார் என்றார் ஜான்வி.

 

சிறுமியுடன் ஓட்டம் பிடிக்க முயன்ற மகன் : விலங்கிட்டு சிறை வைத்த தந்தை!!

மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மகனின் கை, கால்களில் பெற்ற தந்தையே விலங்கிட்டு சிறை வைத்த சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை தெருவை சார்ந்தவர் சுப்பையா. இவரது மகன் கருப்பசாமி, 21. இவர் அதே பகுதியை சார்ந்த தன்னுடைய உறவுக்கார பெண்ணை நீண்ட காலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இருவரும் வீட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சி செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர் நேற்றைய தினம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் கருப்பசாமி மீது புகார் செய்தனர்.

அதன்பேரில் உடனடியாக விசாரணையை துவக்கியது காவல்துறை. அப்போது பெண்ணின் திருமண வயது பூர்த்தியாகாததும் அவருக்கு வயது 17 என்பதும் தெரியவந்ததையடுத்து இருவரையும் எச்சரிக்கை செய்து தனித் தனியே பெற்றோர்களிடம் ஒப்படைத்தது.

இதனையடுத்து, நேற்று இரவு மீண்டும் தன் காதலி வீட்டிற்கு சென்று கருப்பசாமி, காதலியை கூட்டிட்டு ஓட முயற்சித்தார். இதனை கருப்பசாமியின் தந்தை பார்த்துவிட்டார். அதனால் ஆத்திரடைந்த அவர் மகனை கண்டித்தார்.

ஆனால், கருப்பசாமியோ தந்தை கண்டித்ததால், அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இதனால் தந்தை தன் மகனின் கை கால்களில் விலங்கிட்டு வீட்டில் அடைத்து வைத்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பானது. மேலும் இதுகுறித்து கடையநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் பரிமளா விசாரணை செய்து வருகிறார்.

வவுனியாவில் உலக சுற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்பட்டது!!

உலக சுற்றாடல் தினம் வவுனியாவில் இன்று (30.05) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா மத்திய சுற்றாடல் அதிகாரசபை, நகரசபை மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்நிகழ்வானது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலிருந்து ஆரம்பமாகி,

விழிப்புணர்வுப் பேரணியாக மணிக்கூட்டு சந்திவழியாக வைரவப்புளியங்குளத்தை வந்தடைந்து, அங்கு வீடு வீடாக பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் கழிவுப்பொருட்களை வகையறாகப் பிரித்து அதனை சுத்திகரிப்பது தொடர்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந் நிகழ்வில் கூமாங்குளம் சித்திவினாயகர் பாடசாலை, இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை, சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

‘உயிரிகளின் உயிர் நாடியான ஈர நிலங்களை காப்பது எமது கடமை’ எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந் நிகழ்வில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன், உப தலைவர் எஸ்.குமாரசாமி, அதிபர் எஸ்.அமிர்தலிங்கம், தெற்கு வலயத்தின் பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியாவில் இடமாற்றம் செய்யப்பட்ட இரு அரச ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா தபாலகத்தில் பணியாற்றும் இரு ஊழியர்கள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வவனியா பொது வைத்தியசாலையில் உயர்குருதி அழுத்ததினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா தபாலகத்திலிருந்து கட்டாய இடமாற்றத்தில் நெடுங்கேணிக்கு இரு பெண்களை தபாலகத்திற்கு செல்வதற்கு தபாலகத்தின் பொறுப்பதிகாரி பணித்துள்ளார். இதனை குறித்த பெண்கள் நிராகரித்துள்ளனர்.

இதையடுத்து தபாலக பொறுப்பதிகாரி இடமாற்றத்திற்கு செல்லாவிட்டால் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்வதாக தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த பெண்களுக்கு உயர்குருதி அழுத்தம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த இரு பெண்களும் கடந்த ஐந்து வருடகாலமாக நேரியகுளம், நெடுங்கேணி பகுதிகளில் தபாலகத்தில் பணிபுரிந்துள்ளனர் என்பதுடன் தற்போது நிரந்தர இடமாற்றம் பெற்று வவனியா தபாலகத்தில் பணியாற்றி வந்தனர். இதில் ஒரு பெண் ஊழியர் நிரந்தர இடமாற்றம் பெற்று ஒரு மாத காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட தபால் நிலைய அத்தியட்சகரிடம் வினவியபோது, நெடுங்கேணியிலுள்ள தபாலகம் மூடவேண்டிய நிலையிலுள்ளதால் அதனைத்தடுக்கும் நோக்குடன் வவுனியாவில் பணியாற்றிய இரு ஊழியர்களை அப்பகுதிக்கு இடமாற்றம் செய்யுமாறு தபால் நிலையப் பொறுப்பதிகாரியிடம் நான் கூறியதையடுத்து குறித்த அதிகாரி இவ் இரு பெண்களையும் தெரிவு செய்திருந்தார்.

இத் தெரிவில் முறைகேடுகள் இருப்பதனை அறிந்து இது தொடர்பாக மீள் பரிசீலனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

இதேவேளை வவனியா தபால் நிலையத்தில் 10 வருடங்களுக்கு மேல் இடமாற்றம் பெற்றுக்கொள்ளாமல் பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளரின் இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்யக்கோரி இன்று (30.05.2018) பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட விவசாயப் பணிமனையிலிருந்து பேரணி ஆரம்மாகி மணிக்கூட்டு வீதி வழியாக புதிய பேருந்து நிலையம் சென்று அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராகவும் வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். வவுனியாவில் கடமையாற்றிய மாவட்ட விவசாயப் பணிப்பாளரை அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராகவே இன்றைய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் விவசாயிகள் மூங்கில் செய்கையினால் எதிர்கொள்ளும் விளைவுகளை சித்தரிக்கும் வீதி நாடகமும் இடம்பெற்றது.

இப்போராட்டத்தில் டெலோ அமைப்பின் நகரசபை உறுப்பினர் சந்திரபத்மன், புளெட் அமைப்பின் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் சிவம், அமுதம் விவசாய அமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தேசிய அரச பொது ஊழியர்கள் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களை திருமணம் செய்த இளம் பெண்!!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் பெண் தங்கள் கலாச்சார வழக்கப்படி உயிரிழந்த கணவரின் சகோதரரை திருமணம் செய்த நிலையில் தாலிபான் தீவிரவாதிகளிடம் இரண்டு கணவர்களை இழந்துள்ளார்.

கடீஜா (18) என்ற இளம் பெண்ணுக்கு ஆறு வயது இருக்கும் போதும் அவர் குடும்பத்தார் அவரை விட 15 வயது மூத்தவரான ஹக் என்பதை திருமணம் செய்து வைத்தனர்.

ஊரில் மரவேலை செய்து வந்த ஹக் அங்குள்ள தாலிபான் தீவிரவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்டார். இதையடுத்து அந்த இயக்கத்தில் உளவாளியாக சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 2010-ல் நடந்த தாக்குதலில் ஹக் உயிரிழந்தார்.

இதையடுத்து விதவையான கடீஜா மறுமணம் செய்ய வேண்டும் என குடும்பத்தார் வலியுறுத்தினார்கள்.

அவர்கள் ஊர் வழக்கப்படி பெண்ணின் கணவர் இறந்தால், கணவரின் சகோதரரை அப்பெண் மறுமணம் செய்ய வேண்டும். அதன்படி பொலிஸ் பணியில் இருந்த ஹக்கின் சகோதரரான அமினுல்லாவை கடீஜா திருமணம் செய்தார். இதையடுத்து கர்ப்பமான கடீஜா பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

கடந்த 2014-ல் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொலிசான அமினுல்லா கொலை செய்யப்பட்டார். இதனால் கை குழந்தையுடன் இடிந்து போய் உட்கார்ந்தாவுக்கு அமினுல்லாவின் சகோதரர் சம்சுதின் கடந்த 2015-ல் வாழ்க்கை கொடுத்தார்.

சம்சுதின் ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பை நடத்தி வருபவர் ஆவார், குறைந்த வருமானம் வந்தாலும் தனது மனைவி கடீஜாவை அவர் நன்றாக பார்த்து கொள்கிறார்.

விரைவில் பொலிஸ் வேலையில் சேரும் எண்ணமும் அவருக்கு உள்ளது, ஆனால் தனது சகோதரர்கள் உயிர் இழந்தது போல தனக்கும் எதாவது ஆகிவிட்டால் குடும்பம் என்னாவது என்ற கவலை மட்டும் அவருக்கு உள்ளது.

கடீஜா கூறுகையில், சிறுவயதிலிருந்து நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டேன், என் கணவர் சம்சுதினும் தாலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்படக்கூடாது என்பதே என் எண்ணம் என கூறியுள்ளார்.

மட்டக்களப்பை உலுக்கிய தற்கொலைகள் : முன்னனுக்குபின் முரணான தகவல்கள்!!

மட்டக்களப்பு – ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை யுவதிகள் இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் நிஸாந்தினி (வயது 19) என்பவரின் சடலம் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது.

தாயின் கண்டிப்பை பொறுத்துக்கொள்ளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, எனினும் காதல் விவகாரமாக இருக்கலாம் எனவும் இன்னொரு தகவல் தெரிவிக்கின்றது

இதேவேளை மட்டக்களப்பு – பதுளை வீதி கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கனித்தீவு கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் வினோதினி (வயது 19) என்பவரின் சடலமும் அவரது மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தான் விரும்பியிருந்த காதலனின் பெற்றோரிடம், தன்னைப்பற்றி பிறர் மோசமாக கதைகட்டி சொல்லிக்கொடுத்ததால், தன்னோடு பேசுவதை அவர் நிறுத்தியதால் மனஉளைச்சலுக்குள்ளாகி “அலரி விதை “உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது

மேலும் இவ்விரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பட்டதா என்றும் நுன்கடனால் பல பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையில் இவ்விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தல்காரர்கள் துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி சிறுமி பலியான பரிதாபம்!!

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுமி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் டேர்பன் நகரில் சாட்ஸ்வொர்த் பகுதியில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியை சேர்ந்த சிறுமி சாடியா சுக்ராஜ்(வயது 9), நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தனது தந்தையுடன் சாடியா காரில் சென்று கொண்டிருந்த போது, துப்பாக்கி ஏந்திய 3 நபர்கள் காரை வழிமறித்து சண்டையிட்டுள்ளனர்.

காரை அபகரிக்கும் முயற்சி தோற்றுப் போனதுடன், பொதுமக்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இதற்கிடையே அவர்கள் காரில் தப்பிச் செல்ல முயலவே, விபத்தில் சிக்கியுள்ளது. அப்போது கடத்தல்காரர்களில் ஒருவரை பொலிசார் மடக்கி பிடித்தனர், ஒருவர் இறந்து கிடக்க மற்றொருவர் துப்பாக்கியால் சுட சாடியா மீது குண்டு பாய்ந்தது.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிறுமி பரிதாபமாக பலியானார். இதனை தொடர்ந்து சாட்ஸ்வொர்த் பொலிஸ் நிலையம் முன் ஆயிரக்கணக்கானர் போராட்டத்தில் ஈடுபட்டனர், பொலிசாரும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதாக பெரும் பரபரப்பு நிலவியது.