அதிரடியாக அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து : போராடித் தோற்ற மேற்கிந்திய தீவுகள்!!

NZ

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுக்கு முன்னேறியுள்ளது.

நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவதும் இறுதியுமான காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று மோதின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குப்டில், உலகக்கிண்ணத் தொடரில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார். இது உலகக்கிண்ணத் தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது இரட்டைச் சதமாகும்.

இதற்கு முன் மேற்கிந்திய தீவுகளின் கெய்ல் (215), சிம்பாவே அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்த சாதனை படைத்தார். தவிர, ஒருநாள் அரங்கில் அடிக்கப்பட்ட 6வது இரட்டைச் சதமாகும்.

நியூசிலாந்து அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 349 ஓட்டங்கள் எடுத்தது. குப்டில் 163 பந்துகளில் 237 ஓட்டங்களுடனும் விட்டோரி 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் சார்பில், ஜிரோம் டெய்லர் 3, அண்ரூ ரசல் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 30.3 ஓவர்களிள் 250 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

அதிரடியாக ஆடிய கிரிஸ் கெய்ல்ஸ் 31 பந்துகளில் 61 ஓட்டங்களையும், ஹோல்டர் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதன் மூலம் 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரையிறுதியில் நுழைந்தது.

நியூசிலாந்து சார்பாக, போல்ட் 4, சவுத்தி 2, விட்டோரி 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

நடுவீதியில் கொத்துக் கொத்தாய் விழுந்த மீன்கள் : அலைமோதிய மக்கள் கூட்டம்!! (வீடியோ)

சீன நெடுஞ்சாலையில் கெளுத்தி மீன்கள் கொட்டி கிடந்ததால் அதை அள்ளுவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.

சீனாவில் உள்ள குய்ழோ மாகாணத்தின் கைலி நெடுஞ்சாலை வழியாக மீன்களை ஏற்றிச்சென்ற ஒரு லொறி சாலைத்தடையில் ஏறி இறங்கியபோது பின்புறக் கதவு தானாக திறந்து கொண்டது.

இதனால் உள்ளே இருந்த சுமார் 7 ஆயிரம் கிலோ கெளுத்தி மீன்கள் வீதி முழுவதும் கொட்டி சிதறியுள்ளது.

அதற்குள் வீதியில் குவிந்து கிடந்த மீன்களை அக்கம்பக்கத்து பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வாளிகளில் அள்ளிச் சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் அந்த மீன்களை பொறுக்கி எடுத்து, சாலையோரமாக குவித்தனர்.

இதனால் அப்பகுதி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து தடை ஏற்பட்டது. தற்போது, இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக பரவி வருகின்றது.

1 2 3

மார்புக்கு வெளியே இதயத்துடன் பிறந்த அதிசய பெண் குழந்தையைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரம்!!

Baby

மத்தியப்பிரதேசத்தில் பிறந்த பெண் குழந்தை ஒன்றுக்கு மார்புக்கு வெளியே இதயம் இடம் பெற்றுள்ளதால் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள லட்கோன் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு கடந்த புதன்கிழமையன்று, பசந்த பட்மாகர் என்பவரின் மனைவியான சுஷ்மாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் பிறந்த அந்த குழந்தைக்கு இதயம் மார்புக்குள் இல்லாமல், மார்புக்கு வெளியே காணப்படுவதாக மருத்துவர் ஜி.கே சமத் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தையின் இதயம் நன்றாக துடிப்பதாக கூறிய மருத்துவர், ஆனாலும் குழந்தையின் இதயத்தை மார்புக்கு உள்ளே வைத்து அதன் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்காக ஜபல்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அக்குழந்தை அனுப்பப்பட்டு தற்போது அறுவை சிகிச்சைக்காக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பெண் குழந்தையின் தந்தை பட்மாகர் கூறுகையில், கடவுள் குழந்தையுடன் எங்களை ஆசிர்வாதித்துள்ளார். ஆனால் அது ஆசிர்வாதமா அல்லது சாபமா என்பது எனக்கு தெரியவில்லை.

மேலும், நாங்கள் நாளொன்றுக்கு இரு வேளை உணவுகளை மட்டுமே உண்ணும் ஏழைகள். தற்போதைய சூழலில் எங்கள் குழந்தையை காப்பாற்ற உதவியற்றவர்களாக இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ரோஹித் ஷர்மாவிற்கு சாதகமாக செயல்பட்ட நடுவர் : ஐ.சி.சி. தலைவர் பதவி ராஜினாமா?

Capture

ரோஹித் ஷர்மாவிற்கு நடுவர்கள் சாதகமாக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள வங்கதேசத்தை சேர்ந்த ஐ.சி.சி. தலைவர் முஸ்தபா கமால் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர் ரோஹித் சர்மா 90 ஓட்டங்கள் எடுத்து ஆடிக் கொண்டிருந்தார்.

அப்போது வங்கதேச பந்துவீச்சாளர் ருபெல் ஹூசைன் நேரடியாக வீசிய பந்தில் ரோஹித் சர்மா பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அந்தப் பந்து இடுப்புக்கு மேலாக வந்தது என கருதி பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் முறையற்ற பந்து என்று உடனடியாக அறிவித்தார்.

பின்னர் சக நடுவர் இயன் கவுல்டும் அவரது முடிவை ஏற்றுக் கொண்டார். இதனால் தொடர்ந்து விளையாடி ரோஹித் சர்மா சதம் அடித்தார்.

இதைத் தொடர்ந்து டி.வி. ரீப்ளேயில் பார்த்த போது, அந்தப் பந்து இடுப்புக்கு கீழாக வந்தது தெரியவந்தது. இதையடுத்து நடுவரின் தவறான தீர்ப்பால் தான் தோல்வி ஏற்பட்டதாக வங்கதேச ரசிகர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக உள்ள வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபா கமாலும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இது குறித்து முஸ்தபா கமால் கூறுகையில், நான் பார்த்தவரைக்கும் நடுவரின் தீர்ப்பு மிகமோசமாக இருந்தது.

முன்கூட்டியே திட்டமிட்டு இவ்வாறு நடந்து கொண்டது போல் தோன்றுகிறது. வேண்டுமென்றே இவ்வாறு தீர்ப்பு வழங்கினார்களா என்பது பற்றி ஐ.சி.சி. தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அடுத்த கூட்டத்தில் ஐ.சி.சி. தலைவராக இந்த விடயங்களை நிச்சயம் பேசுவேன் என்றும், இந்த விவகாரத்தில் நான் பதவியை ராஜினாமா செய்வதற்கும் வாய்ப்புள்ளது எனவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கிடையே ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், முஸ்தபா கமாலின் கருத்து துரதிர்ஷ்டவசமானது. ஐ.சி.சி. தலைவராக முஸ்தபா கமால் தனது கருத்துகளை நன்கு யோசித்து பொறுப்புடன் சொல்லியிருக்க வேண்டும்.

நடுவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு குறித்து கேள்வி எழுப்ப முடியாது என்றும், எது எப்படி என்றாலும் நடுவரின் தீர்ப்பே இறுதியானது, அதற்கு எல்லோரும் மதிப்பு கொடுத்தாக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான கொடுப்பனவுகள் இன்று முதல்!!

Pregnancy

கர்ப்பிணி தாய்மாருக்கு உணவு கொடுப்பனவாக 20,000 ரூபாவினை இன்று முதல் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று பொலனறுவையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படும்.

சுகப் பிரசவ திட்டத்தின் கீழ் கர்ப்பணித் தாய்மாருக்கு 20,000 ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் போது அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் அரசாங்க மருத்துவமனைகளில் தம்மை பதிவு செய்து கொள்ளும் கர்ப்பிணித் தாய்மார் கிரமமாக பரிசோதனைக்கு செல்வதுடன், மருத்துவரின் ஆலோசனைக்கு அமைய இந்த விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பான கொடுப்பனவுகள் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு வழங்கப்படும் என சிறுவர் விவகார அமைச்சர் ரோசி சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

விபூசிகாவுக்கு தாயாருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி மறுப்பு!!

vipoosika-Mother

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்ட ப.ஜெயக்­கு­மா­ரியின் மக­ளான விபூ­சி­காவை தாயா­ருடன் செல்­வ­தற்கு கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றம் அனு­மதி மறுத்­துள்­ளது.

தமி­ழீழ விடு­தலைப் புலி­களை மீளக் கட்டியெழுப்­பு­வ­தற்கு முயற்­சித்­தார் என்ற குற்றச்­சாட்டில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட ஜெயக்­கு­மாரி பிணையில் விடு­விக்­கப்­பட்ட போதும் அவ­ரது மக­ளான விபு­சிகா நீதி­மன்ற உத்­த­ர­விற்கு அமைய கிளி­நொச்­சியில் இயங்கி வரும் மகாதேவா சைவச்­சி­றுவர் இல்­லத்தில் தங்கவைக்­கப்­பட்­டி­ருந்தார்.

விபு­சி­காவை சிறுவர் இல்­லத்தில் இருந்து பொறுப்­பேற்­ப­தற்கு அவ­ரது தாயான ஜெயக்குமாரி கண்­டா­வளை பிர­தேச சிறுவர் நன்­ன­டத்தை அதி­காரி ஊடாக விண்ணப்பித்திருந்தார்.

இந்­நி­லையில் இம்­மனு மீதான விசா­ரணை நேற்­றைய தினம் கிளி­நொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நீதவான் எம்.ஐ.வகாப்தீன் முன்னி­லையில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.
இதன்­போது கண்­டா­வளை பிர­தேச சிறுவர் நன்ன­டத்தை அதி­கா­ரி­யுடன் விபு­சிகா மற்றும் அவ­ரது தாயார் ஆகியோர் ஆஜராகி இருந்தார்.

ஜெயக்­கு­மாரி சார்­பாக ஆஜ­ரான சட்டத்தரணிகளான திரு­மதி.எஸ்.விஜ­ய­ராணி, ம.கிறே­சியன், சுந்­த­ரே­ச­சர்மா, துசி­யந்தி, றைகான், ஆகியோர் ஆய­ராகி குறித்த சிறுமியை பெற்­றோ­ருடன் செல்­வ­தற்கு நீதிமன்றம் அனு­ம­திக்க வேண்டும் என கோரியி­ருந்­தனர்.

அதன்­போது ஜெயக்­கு­மா­ரியும் அவ­ரது மக­ளான விபு­சி­காவும் பயங்­க­ர­வாத தடுப்­புச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என பயங்கரவாத புல­னாய்­வுப்­பி­ரி­வி­னரால் சுட்டிக்காட்­டப்­பட்­டது. அத்­துடன் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ளதாலேயே குறித்த சிறுமி சிறுவர் இல்­லத்தில் தங்க வைக்­கப்­பட்­ட­தா­கவும் கூறப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து விபு­சிகா குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரே தயாரிடம் இணைவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கும் என நீதிவான் எம்.ஐ.வகாப்தீன் குறிப்பிட்டதுடன் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த குப்டில் : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 393 ஓட்டங்கள் குவித்த நியூசிலாந்து!!

Guptil

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண கடைசி காலிறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 393 ஓட்டங்களை குவித்துள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவதும் இறுதியுமான காலிறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகின்றன.

இந்தப் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் போட்டி நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மெக்குல்லம் மற்றும் குப்டில் ஆகியோர் களமிறங்கினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குப்டில், உலகக்கிண்ணத் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக சதம் அடித்தார்.

தொடர்ந்து அசத்திய குப்டில், தனது 152வது பந்தில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது உலகக்கிண்ணத் தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது இரட்டை சதம்.

இதற்கு முன் மேற்கிந்திய தீவுகளின் கெய்ல் (215), சிம்பாவே அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்த சாதனை படைத்தார். தவிர, ஒருநாள் அரங்கில் அடிக்கப்பட்ட 6வது இரட்டை சதம்.

இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 349 ஓட்டங்கள் எடுத்தது. குப்டில் (237), விட்டோரி (8) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

காதலிக்கும் பெண்கள் திருமணத்திற்கு நோ சொல்ல காரணம் என்ன!!

Love11

பெரும்பாலுமான பெண்களும், பெண்வீட்டாரும் காதல் கல்யாணத்திற்கு நோ சொல்வதற்கு காரணமாய் இருப்பது சாதி, மதம். வேறு சாதி, வேறு மதம் என தெரிந்திருந்தும் பின் விரும்பியது எதற்கு. காதலிக்கும் போது வராத சாதி, மதம் திருமணம் என்றவுடன் வருவது ஏன். பெற்றோர் அவர்களது கெளரவம் பாதிக்கும் என்ற காரணத்தாலேயே காதல் கல்யாணத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

இதெல்லாம் ஏனோ காதலிக்கும் முன் பெண்கள் யோசிப்பதே இல்லை. காதல் திருமணம் செய்ய வேண்டும் என பெண்கள் கூறியவுடன் பெற்றோர் கூறும் முதல் வார்த்தை தற்கொலை செய்து கொள்வேன் என்பதைத்தான்.

தாய், தந்தை குடும்பத்துடன் இறந்துவிடுவேன் என்று கூறுகிறார்கள் நமது சந்தோஷத்திற்காக அவர்களை ஏன் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் மனதில் வருவதால் அவர்கள் திருமணம் என்று வரும்போது ஒதுங்கி விடுகிறார்கள்.

எனக்கு பிறகு எனது அக்காவும், தங்கையும் இருக்கின்றனர். நாம் திருமணம் செய்துக் கொள்வதன் மூலம், அவர்களது திருமண வாழ்க்கை பாதித்துவிடுமோ என பயமாக இருக்கிறது என்று கூறுவார்கள். காதலிக்கும் போது அக்கா, தங்கை எங்கே போனார்கள். இதை பெண்கள் காதலிக்கும் முன்பே யோசிக்க மாட்டார்கள்.

காதல் கல்யாணத்திற்கு ஒட்டுமொத்த பெண் வீட்டாரும் கூறும் ஒரு மிக பெரிய காரணம் ஜாதகம் சரிவரவில்லை என்பது தான். இதற்காக பத்து பொருத்தம் பார்த்தா மனம் ஒருவர் மீது காதல்கொள்ளும். காதலில் ஜாதகம் தடையை வருவது இல்லை. காதலையே தடை செய்ய தான் ஜாதகம் உட்புகுத்தப்படுகிறது.

சீகிரிய குன்றில் கிறுக்கிய தமிழ் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை!!

sikiriya

சீகிரிய குன்றின் சித்திரங்கள் மீது கிறுக்கிய யுவதிக்கு பொதுமன்னிப்பை வழங்குவது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதியமைச்சிடம் கேட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி, சீகிரிய ஓவியங்கள் மீது கிறுக்கியிருந்தார்.

இந்தக் குற்றத்துக்காக குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடுழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அகழ்வாராச்சி பொருட்களை பாதுகாக்கும் அதேநேரம் அறியாமை காரணமாக உதயசிறி செய்த தவறை உணர வேண்டும் என்று ஏற்கனவே வெளியுறவுத்துறையின் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்திருந்தார்.

இதேவேளை தமது மகளின் அறியாமையை உணர்ந்து அவளை மன்னிக்குமாறு உதயசிறியின் 74 வயது தாயும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

22 பாஸ்போட்கள், 8 அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது!!

Arrest

பல்வேறு நபர்களின் பாஸ்போட் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உடப்பில் இருந்து சிலாபம் நோக்கி பஸ்ஸில் பயணித்த போதே சந்தேகநபர் இவ்வாறு கைதாகியுள்ளார்.

பொலிஸ் அவசரப் பிரிவினருக்கு வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இவர் வசம் இருந்து பாஸ்போட்கள் 22 மற்றும் அடையாள அட்டைகள் 8ம் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, இவரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2015 (படங்கள் ,வீடியோ)

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள்  நிறைந்தஇலங்கா தீபத்தின்  வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருகோவிலில் இன்று (20.03.2015)வெள்ளிக்கிழமை கொடிஏறியது .

இன்று மதியம்   12.20மணியளவில் மகோற்சவ குரு சிவாகம திலகம் சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் (ஒட்டுசுட்டான் தான்தோன்றிஈஸ்வரர் ஆலயம் ) கொடியேற்றி மகோற்சவத்தை ஆரம்பித்து வைத்தார் . தொடர்ந்து கொடிதம்ப பூஜை இடம்பெற்று அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் மற்றும் வினாயகபெருமான் ஆகியோர்   ரிஷப வாகனத்தில் உள்வீதி வெளி வீதி எழுந்தருளி செய்தனர் .

மீண்டும் மாலை  நாலரை மணிக்கு விநாயகர் யாகம் இடம்பெற்று  மூலஸ்தான பூஜை  கொடிதம்ப பூஜை என்பன இடம்பெற்று  மாலை  ஆறரை  மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  மற்றும் வினாயகபெருமான் ஆகியோர்   ரிசப  வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது. மேற்படி நிகழ்வுகள் யாவும்  வவுனியா நெற் இணையதளத்தின்   ஊடக அனுசரணையுடன் இடம்பெறுகிறது. தொடர்ந்தும் வவுனியா நெற்ருடன் இணைந்திருங்கள் ….

படங்கள் :கஜன்

18210_517114078429164_7362422864521367100_n 18723_517127445094494_5560184529247481536_n 19121_517123661761539_644981345546872085_n 1512405_517124695094769_2221157400884731949_n 1604942_517130338427538_5033273302929628468_n  10348601_517114595095779_8025941990636420116_n 10389471_517114491762456_4710109750403353489_n 10429481_517115008429071_6726613494854877081_n 10647120_517128221761083_6385370266007206794_n 10906054_517113695095869_6391696550798881922_n 10929019_517127118427860_2657778819499773475_n 11000047_517114921762413_3540332448828388351_n 11007739_517127715094467_8390725252197264654_n 11052479_517127761761129_4133800258730935753_n 11070259_517124788428093_3625541534491895538_n 11070533_517128701761035_2627429937936389364_n 11074511_517124055094833_3777376420068038187_n 11076175_517131198427452_2952421376192332856_n 11080986_517124268428145_4599171040948803756_n 11081173_517127708427801_3917946973730340151_n 11083672_517131108427461_8787965444859917586_n 11083900_517131068427465_1437659733796436453_n 11084256_517113448429227_8194061733178979225_n 11084262_517131955094043_4702792488057698201_n

100 கோடி ரூபா சம்பளம் வாங்கும் சூர்யா!!

Surya

இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அந்த வகையில் சூர்யாவின் சம்பளம் கிட்டத்தட்ட ரஜினியை நெருங்கி விட்டது.

தற்போது இவர் நடித்து வரும் மாஸ் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இதைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்கள் ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிக்கவிருக்கின்றாராம்.

ஆக மொத்தம் இந்த மூன்று படங்களின் சம்பளத்தை சேர்த்தால், இந்த வருடத்தில் மட்டும் சூர்யாவின் சம்பளம் 100 கோடியை தொடுகிறது.

பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அவுஸ்திரேலிய அணி!!

AUS

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3வது காலிறுதி போட்டி அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இன்று இடையே அடிலைட்டில் நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஹ் அல் ஹக் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இதன்படி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பாக ஹரிஸ் சொஹைல் அதிகூடிய ஓட்டங்களாக 41 ஓட்டங்களையும் அணியின் தலைவர் மிஸ்பாஹ் அல் ஹக் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக கசல்வூட் 4 விக்கெட்டுக்களையும் மக்ஸ்வெல் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.

இதன் அடிப்படையில் இன்றைய காலிறுதி போட்டியில் 214 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி 33.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக ஸ்மித் 65 ஓட்டங்களையும் வட்சன் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணி அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும்.

சரியான கைகளில் இலங்கை அணி : சாத்தியமில்லா தேவதைக் கதைகள் : சங்கக்கார உருக்கம்!!

Vav

உலகக்கிண்ண தொடரை விட்டு இலங்கை அணி விலகினாலும், அந்த அணி சிறந்த வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான காலிறுதிப் போட்டி சங்கக்காரவின் கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது. ஆனாலும், டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்களிப்பு சில காலங்கள் தொடரும் என்று அவரே கூறியுள்ளார்.

இந்நிலையில் தென்னாபிரிக்க அணியுடன் அடைந்த தோல்வி தொடர்பாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்கார கூறுகையில், இலங்கை அணிக்காக கடந்த 16-17 ஆண்டுகளாக பல்வேறு விதங்களில் பங்களிப்பு செய்துள்ள மஹேல ஜெயவர்த்தன இந்த உலகக்கிண்ணத்தில் சோபிக்கவில்லை. ஆனால் விளையாட்டில் இதெல்லாம் சகஜம்.

தேவதைக் கதைபோன்ற முடிவுகள் எப்போதும் சாத்தியமில்லை. உலகக்கிண்ணத்தில் எவ்வளவு உச்சத்தில் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அது நடக்காது, அது நடக்கவில்லை. அதற்காக ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய அவசியமில்லை.

எங்கள் இருவரிடையே நல்ல நட்பு இருந்தது. பகைமை என்பது அறவே இல்லை. நான் அணியில் நுழையும் போது மஹேல ஏற்கெனவே 2 ஆண்டுகள் அணியில் இருந்தார். துணைத்தலைவராகவும் அவர் இருந்தார். எங்கள் இருவருக்கும் ஒரே வயது. இதனாலேயே வெகு விரைவில் நண்பர்களானோம்.

களத்தில் இருவரும் சேர்ந்து துடுப்பாட்டம் செய்யும் போது, அவர் எப்போதும் ஆதிக்கம் செலுத்த விரும்புவார். நான் அவருடன் இன்னிங்ஸை நகர்த்திச் செல்பவனாக திகழ்ந்தேன்.

அவர் அதிரடியாக ஓட்டங்கள் குவிப்பில் செல்லும் போது நான் அடக்கி வாசிப்பேன். அவருடன் சேர்ந்து விளையாடுவது எனக்கு மிகப்பெரிய அனுபவமே.

இலங்கை அணி சிறந்த கைகளில் உள்ளது. அஞ்சலோ மத்யூஸ் தலைமைத்துவத்தில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். இன்னும் இவர்கள் கற்றுக் கொள்வார்கள், இலங்கைக்காக மேலும் பங்களிப்பு செய்வார்கள் என்று நினைக்கும் போது உற்சாகமாகவே உள்ளது.

தோல்வியடைந்தது ஏமாற்றமே. குறிப்பாக காலிறுதியில் தோல்வி தழுவியது. ஆனால் தென்னாபிரிக்கா போன்ற ஒர் அணியுடன் வெற்றி பெற சிறப்பாக ஆட வேண்டும் என்பதே உண்மை.

என்னுடன் விளையாடியதையும், எனக்கு எதிராக விளையாடியதையும் மகிழ்ச்சியான தருணங்களாக யாராவது கூறினால் நான் அதிக மகிழ்ச்சியடைவேன்.

எவ்வளவோ பெரிய வீரர்கள் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் ஆட்டம் தொடர்ந்து போய்க்கொண்டு தான் இருக்கிறது. ரசிகர்கள் எப்போதும் மிகை உணர்ச்சிகளுக்கு ஆட்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

சதி செய்த பாகிஸ்தான் நடுவரால் சதம் அடித்த ரோஹித் ஷர்மா : வங்கதேசத்தில் வெடிக்கும் போராட்டம்!!(வீடியோ)

1

உலகக்கிண்ண காலிறுதியில் நடுவர்களின் சதி காரணமாகவே வங்கதேசம் தோல்வி அடையநேரிட்டதாக கூறி அந்நாட்டில் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளன.

உலகக்கிண்ண காலிறுதியில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதின. இதில் இந்தியா 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் இந்த தோல்வியை வங்கதேச ரசிகர்களால் ஏற்க முடியவில்லை. தங்கள் நாட்டு அணிக்கு எதிராக நடுவர்கள் சதி செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்தியாவின் ரோஹித் சர்மா 90 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவர் பிடி கொடுத்தார். ஆனால் அந்த பந்தை முறையற்ற பாத்து என்று நடுவர் அறிவித்துவிட்டார். ஆனால், ரீப்ளேயில் அது சரியான பந்து போன்றுதான் தெரிந்தது.

முறையற்ற பந்து என்று அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கிரிக்கெட் சபை, நடுவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் நடுவர் இவான் கெளல்ட்டும், பாகிஸ்தான் நடுவர் அலீம் தாரும் சேர்ந்துதான் இந்த சதியை செய்துவிட்டதாகவும் அவர்கள் கொந்தளிக்கின்றனர்.

போட்டியில் இந்தியாவிற்கு சாதகமாக நடந்துக் கொண்டதாக கூறி பாகிஸ்தான் நடுவர் அலீம் தாரின் உருவபொம்மையை வங்கதேச ரசிகர்கள் எரித்தனர்.

இது குறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில், இந்தியா வெல்ல வேண்டும் என்பதற்காக ஐ.சி.சி.யே சதி செய்துவிட்டது என்றும், நாங்கள் மோசமான முடிவுக்கு எதிராகவே போராடுகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

2

இலங்கை அகதியை நாடுகடத்தும் திட்டத்திற்கு இறுதி நேரத்தில் தற்காலிகத் தடை!!

ref

பிரித்தானியாவில் இருந்து அகதி ஒருவரை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்தும் திட்டம் இறுதி நிமிடத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கண்ணன் காளிமுத்து எனும் 36 வயதான இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் உறுப்பினராவார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் குடும்ப உறவுகளைப் பிரிந்த இவர், அரசாங்கப் படையினரிடம் சரணடைந்ததாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.

பின்னர் இங்கிலாந்துக்கு கன்னண் காளிமுத்து தப்பிச் செல்லும் முன்னர் பல்வேறு சித்திரவதைகளுக்கும் உட்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உயர் பாதுகாப்புடைய பிரித்தானிய குடிவரவு அகற்றுதல் மையத்தில் முன்னதாக இவர் இரண்டு முறைகள் தற்கொலை முயன்றதாகவும் தெரியவந்துள்ளது.

நாடுகடத்தும் செயற்பாடு அவரது மனநிலையை மேலும் பாதிக்கும் எனவும் அவர் தற்கொலைக்கு மீண்டும் முயல வாய்ப்புள்ளதாகவும் உளவியலாளர் ஒருவர் எச்சரித்திருந்தார்.

இந்தநிலையில் காளிமுத்துவின் வழக்கறிஞர் இந்த நாடுகடத்தும் செயற்பாட்டுக்கு எதிராக அவசரத் தடையுத்தரவை பெற்றுக் கொண்டுள்ளார்.

-அத தெரண-