மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுக்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவதும் இறுதியுமான காலிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இன்று மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குப்டில், உலகக்கிண்ணத் தொடரில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார். இது உலகக்கிண்ணத் தொடரில் அடிக்கப்பட்ட இரண்டாவது இரட்டைச் சதமாகும்.
இதற்கு முன் மேற்கிந்திய தீவுகளின் கெய்ல் (215), சிம்பாவே அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்த சாதனை படைத்தார். தவிர, ஒருநாள் அரங்கில் அடிக்கப்பட்ட 6வது இரட்டைச் சதமாகும்.
நியூசிலாந்து அணி 50 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 349 ஓட்டங்கள் எடுத்தது. குப்டில் 163 பந்துகளில் 237 ஓட்டங்களுடனும் விட்டோரி 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் சார்பில், ஜிரோம் டெய்லர் 3, அண்ரூ ரசல் 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 30.3 ஓவர்களிள் 250 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
அதிரடியாக ஆடிய கிரிஸ் கெய்ல்ஸ் 31 பந்துகளில் 61 ஓட்டங்களையும், ஹோல்டர் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதன் மூலம் 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரையிறுதியில் நுழைந்தது.
நியூசிலாந்து சார்பாக, போல்ட் 4, சவுத்தி 2, விட்டோரி 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.