8 வயது பெறாமகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது!!

Abuse

புத்தளம் வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 25 வயதான நபரை வண்ணாத்துவில்லு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வண்ணாத்துவில்லு – கரைத்தீவு பொம்மறிப்பு பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சிறுமியின் தாயாரின் மூத்த சகோதரியின் கணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய்க்கும் பணம் தருவதாக சிறுமியை ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ள சந்தேக நபர் அங்கு சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறுமிக்கு நேர்ந்த சம்பவத்தை அறிந்து கொண்ட தாய், சம்பவம் குறித்து வண்ணாத்துவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

வவுனியா தமிழ் மாமன்றம் இரண்டாவது முறையாக பெருமையுடன் நடாத்தும் “தமிழ் மாருதம் 2015” முத்தமிழ் விழா!!

Tamil mandam

வவுனியா இளைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவான தமிழ் மாமன்றம் வன்னிப் பாடசாலை மாணவர்களிடையே அவர்களின் கலை இலக்கியத் திறனை வளர்க்கும்முகமாக பல்வேறுபட்ட பயிற்சி மற்றும் போட்டி நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றது.

இம் மன்றம் கடந்தவருடம் வவுனியா மண்ணில் “முத்தமிழ் விழா” எனும் வரலாற்று நிகழ்வை முதல்முறையாக அரங்கேற்றி சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக இவ் வருடம் “தமிழ் மாருதம் 2015” எனும் நிகழ்வை நடாத்தவுள்ளது. இது தொடர்பாக தமிழ் மாமன்றத்தினர் விடுத்த ஊடக அறிக்கை வருமாறு..

எமது பிரதேச கலை இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மாமன்றம் மூலம், எதிர்காலத்தில் எமது பிரதேச மாணவர்களின் திறன்விருத்திக்கு எம்மால் முடிந்தவரை பங்களிப்பதுடன் எமது ஆர்வத்துக்கும் வெளிப்பட்டுக்கும் எம்மாலேயே களம் அமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்.

அந்தவகையில் கடந்த வருடத்தில் இயல் விழா எனும் மாபெரும் விழாவினை நடத்தி அதில் வெற்றியும் கண்டோம். இந்தமுறை இயல் இசை நாடகம் எனும் முத்தமிழையும் பிரதிபலிக்கும் வகையில் “தமிழ் மாருதம் 2015” நடைபெறவுள்ளது.

சித்திரை மாதம் பன்னிரெண்டாம் திகதி காலை மற்றும் மாலை எனும் இரு அமர்வுகளாக வவுனியா கலாசார மண்டபத்திலே நடைபெறவுள்ளது, உங்கள் அனைவரின் வருகையினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

நன்றி
ந.கிருத்திகன்
ஊடக இணைப்பாளர்
தமிழ் மாமன்றம்..

தாயிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்!!

Amma

நம்மைப் படைத்த கடவுளால் எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும், ஒரே உருவத்தில் நம்முடன் இருக்க முடியாது என்பதால், தாயை அவர் படைத்ததாக ஒரு பழமொழி உண்டு. அத்தகைய தாயை மதித்து நேசிக்காதவர்கள் வாழ்க்கையை நேசிக்கத் தெரியாதவர்கள் என்றுதான் கூறவேண்டும்.

தாய்ப்பாசத்திற்கு நிகராக வேறு எதையும் சொல்ல முடியாது. பலவீனமாக உள்ள எண்ணற்ற நேரங்களில் நம் வாழ்வில் அவள் துணையாக இருக்கிறாள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை செலுத்தும் தாய், தன்னுடைய சொந்த தேவைகள் எதையும் நினைப்பதில்லை.

தாயால் ஒரே நேரத்தில் தோழியாகவும் ஆசிரியராகவும் இருக்க முடியும். அத்தகைய மேன்மை மிக்க தாய்மார்களிடம் இருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன.

பொறுமையின் மதிப்பு..

உங்கள் குழந்தை பருவத்தை மீண்டும் நினைத்து பாருங்கள். பள்ளிப் பருவத்தில் உங்கள் வீட்டுப் பாடங்கள் செய்வதற்கு உதவி செய்யும்போது, உங்கள் மீது அம்மா ஒருபோதும் எரிச்சல் அடைந்தது இல்லை என்பது நினைவில் இருக்கிறதா? நீங்கள் இளமைப் பருவத்தில் பிடிவாதம் செய்தபோது அதனை அன்னை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. நீங்கள் அவளுடன் வாதிடும்போது கூட, உங்கள் மனம் புண்படும்படி அவள் எதையுமே செய்ததில்லை.

கருணையின் முக்கியத்துவம்..

நண்பர்கள், எதிரிகள், நாய்கள், பூனைகள் மற்றும் வீட்டில் உள்ள எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று தாய்மார்கள் நினைப்பதுண்டு. ஒரு தாயின் கருணை வீட்டில் அனைவரிடத்திலும் பரவலாக இருக்கும். இதனை தனது வீட்டிற்கு வரும் யாராக இருந்தாலும் அவள் உபசரிக்கும் பக்குவத்தில் புரிந்துகொள்ளலாம். நம்மைவிட துர்பாக்கியசாலிகள் மீது கருணை காட்ட வேண்டும் என்பதை நமக்கு தனது செயல்களின் மூலம் உணர்த்தியவள் ஒரு தாயைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.

சுயநலமின்மை எனும் பெருங்குணம் ஒரு தாய்க்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. தங்களது குடும்பத்தினரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதில் எந்த மறுசிந்தனைக்கும் அவர்கள் இடமளிப்பதில்லை.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்!!

Blood

வவுனியா இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டினை அடுத்து, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நாளை 21.03.2015 சனிக்கிழமை காலை 08.30 மணிமுதல் 12.30 மணிவரை வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இரத்ததானம் செய்ய விரும்பிய கொடையாளர்கள் நாளைய தினம் (21.03.2015) இரத்ததான முகாமில் கலந்து கொள்ளமுடியும். தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் அண்மையில் யாழ் மாவட்டத்திலும் இரத்த தான முகாம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரத்ததானம் செய்ய விரும்பியவர்கள் ஒழுங்கமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள – 076 664 4059, 077 453 9678 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்.

சித்தர்கள் மலையில் தவம் செய்வது ஏன் என்று தெரியுமா?

meditation

நமது புராணங்களும், வேதங்களும் கைலாய மலையை சிவனின் வாசஸ் தலமாக சொல்கிறது. அதே போன்றே திருமாலின் அம்சமாக திருமலை கருதப்படுகிறது. திருவண்ணாமலை ஊரில் உள்ள ஒவ்வொரு துளி மண் கூட சிவலிங்கமாக மதிக்கப்படுகிறது.

ஒரு வைணவ பெரியவர் கால்களால் மிதிக்காமல் முழங்காலிட்டே திருமலை ஏறியுள்ளார். காரைக்கால் அம்மையாரும் தலையால் ஊர்ந்தே கைலாச மலையை அடைந்துள்ளார்.

திருநாவுக்கரசரும் திருவண்ணாமலையை கால்களால் தீண்டுவது பெரும் பாவம் என அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வர் ஆலயத்திலிருந்தே அண்ணாமலையை தரிசித்துள்ளார்.

அன்னை ஆதிபராசக்திக்கு விந்தியா சல நிவாசினி என்று ஒரு பெயர் உள்ளது. அதன் பொருள் என்னவென்றால் விந்திய மலையில் வாசம் புரிபவள் என்பதாகும்.

உச்சி பிள்ளையாரும், ஐயப்பனும் மலையிலேயே இருக்கிறார்கள். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என வழிபடப்படுகிறது.

பராம்பரியமான சந்நியாசகளின் ஒரு பிரிவினருக்கு கிரி என்ற மலை பெயரே சந்நியாச நாமமாக கொடுக்கப்படுகிறது. இவை எல்லாம் இந்து பராம்பயத்தில் மலைக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும்.

ஏசுநாதர் கூட கொல்கொதா மலையில் தான் முதல் பிரசங்கத்தை துவங்கினார். கல்வாரி மலையில் தான் சிலுவையில் அறையப்பட்டார்.

ஆகவே மலைகளுக்கும் ஆன்மீக உணர்விற்கும் மிக நெருக்கமான உறவு உலகம் முழுவதும் இருந்து வருகிறது. அதற்கு காரணம் என்ன? மலைகள் மனிதனால் அதிகமாக சஞ்சாரம் செய்யாத பகுதி ஆகும்.

மனித மனதிலிருந்து உற்பத்தியாகும் பல வகையான எண்ண அலைகள் மலை பகுதிகளில் குறைவாகவே இருக்கும்.

இதனால் தவம் புரிவதற்கும், தியானம் செய்வதற்கும் மலைகள் பேருதவி புரிகின்றன. இதனாலேயே கடவுள் அம்சமாக மலை கருதப்படுகிறது.

பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற, கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் வதந்திகள் பரப்பப்படுகின்றது : புளொட் தலைவர் த.சித்தார்த்தன்!!

Sithar

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் எந்த மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பது, மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு புளொட் அமைப்பு தீர்மானிக்குமே தவிர, மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது என கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சித்தார்த்தனை வன்னி மாவட்டத்தில் போட்டியிடுமாறு கூட்டமைப்பில் உள்ள தனிநபர் தரப்புக்களால் வலியுறுத்தப்படுவதாக வெளியாகி வருகின்ற செய்திகள் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் தொடர்பில் எந்தவிதமான கலந்துரையாடல்களோ, தீர்மானங்களோ கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற வதந்திகள் கூட்டமைப்பில் போட்டியிட விரும்பும் சில தனிப்பட்ட நபர்களினால் மேற்கொள்ளப்படும் தந்திரோபாய நடவடிக்கை என்றே நான் கருதுகிறேன்.

பொதுத்தேர்தல் தொடர்பில் தேசிய கட்சிகளே பல்வேறு அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றன. ஆகையால் பொதுத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பதே தெளிவாகவில்லை.

ஆனால் பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற,கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. அவற்றை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்தார்.

மேலும், மாகாணசபை உறுப்பினர்களுக்கு இம்முறை பொதுதேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என்று சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்து தெரிவித்த சித்தார்த்தன், ‘இவ்வாறான செய்திகளும் வெளியாகின்ற போதிலும், கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் இதனை தெரிவிக்கவில்லை.

மாறாக ஒரு சிலர் தங்களது தேவைகளுக்காக இவ்வாறு பேசி வருகின்றனர். இது கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும், எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமானதாக இருக்காது’ என்றும் தெரிவித்தார்.

பால்தேநீர், தேநீர் மற்றும் அப்பத்திற்கு நிர்ணய விலை!!

Tea

நுகர்வோர் அதிகார சபையால் பால்தேநீர், தேநீர் மற்றும் அப்பம் ஆகியவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பால் தேநீர் 25 ரூபா , தேநீர் 10 ரூபா, அப்பம் 10 ரூபாவாக விற்பதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கல்வாரி பாதயாத்திரிகர்களுக்கு வவுனியா பிரதேசசெயலகம் வரவேற்பு!!(படங்கள்)

தவக்காலத்தை முன்னிட்டு மன்னாரில் இருந்து வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலம் நோக்கி சென்ற பாத யாத்திரிகர்களை இன்று (19.03) வவுனியா பிரதேச செயலக ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.

நேற்று மன்னார் புனித செபஸ்ரியார் ஆலையத்தில் குரு முதல்வர் அருட்திரு விக்ரர்சோசை தலைமையில் ஆரம்பமான இந்த தவக்கால பாத யாத்திரை இன்று வவுனியாவை வந்தடைந்து.

வவுனியா புனித அந்தோனியார் ஆலையத்தில் ஈடுபட்டு நாளை கல்வாரி திருதலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் முடிவடையும்.
இப்பாதயாத்திரையில் சுமார் 2000 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.

12 34 7586

சிம்பு, சூர்யாவை கிண்டல் செய்த பவர் ஸ்டார்!!

Power

பவர் ஸ்டார் ஒரு இடத்தில் இருந்தாலே கேலி, கிண்டல்களுக்கு அங்கு பஞ்சமில்லை. அந்த வகையில் அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், சூர்யா மற்றும் சிம்புவை கிண்டல் செய்துள்ளார்.

இதில் சிம்புவிடம் ’தம்பி நீங்க வாலு படத்தோட டைட்டிலை தல அப்படின்னு மாற்றினால் படம் வெளிவர வாய்ப்புள்ளது’ என கூறியுள்ளார். மேலும் சூர்யாவிடம் ‘ நீங்கள் டுவிட்டர் வந்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள், ஆனால், நான் உங்களை பாலோ செய்வேன் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்’ என கூறியுள்ளார்.

இனி எந்த நட்புக்கும் படம் கிடையாது : சிவகார்த்திகேயன் முடிவு!!

Siva

நடித்த 5 படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வெற்றி நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்ப காலத்தில் பலருக்கு நட்புக்காக படத்தில் நடிக்க சம்மதித்தார்.ஆனால், தற்போது ஒரு தனி ஹீரோவாக உச்சத்தை தொட்டு விட்டார்.

அதிலும், சமீபத்தில் வந்த காக்கிசட்டை ரூ 50 கோடி கிளப்பில் இணைந்தது. இதனால், இனி இது போன்ற சோலோ ஹீரோ படங்களில் தான் நடிப்பேன், நட்புக்காக நடிக்க சம்மதிக்க கூடாது என சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளாராம்.

தடம்புரளும் ரயிலின் அதிர்ச்சிக் காணொளி!!(வீடியோ)

Capture

சுமார் மணிக்கு 91 மைல் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டி ஒன்றில் காணப்பட்ட 22 பெட்டிகளில் 21 பெட்டிகள் தடம்புரண்ட சம்பவம் செக்குடியரசில் இடம்பெற்றுள்ளது.

 

வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி!!

IND

உலகக்கிண்ண காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்னாபிரிக்க அணி இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இன்று வங்கதேச அணியுடன் மோதியது
இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்திய அணி சார்பாக ரோகித் ஷர்மா சதம் 137 ஓட்டங்களையும், சுரேஷ் ரைனா 65 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். டஸ்கின் அஹமட் 3 விக்கடுகளைப் கைப்பற்றினார்.

50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 302 ஓட்டங்கள் குவித்தது. இதனையடுத்து வங்கதேச அணி 303 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கியது.

வதொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 193 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆரம்பம் முதல் இந்திய பந்துவீச்சில் வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கட்டுகளை பறிகொடுத்து. 45 ஓவர்களில் வங்கதேச அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனால் இந்திய அணி 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

என்னை பலாத்காரம் செய்ய துணிச்சல் உள்ளதா : கேள்வியால் அதிர வைத்த ரோஜா!!(வீடியோ)

Roja

நடிகையும், வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரோஜா, தன்னை பலாத்காரம் செய்ய துணிச்சல் இருக்கிறதா என்று பத்திரிக்கையாளர் ஒருவரை கேட்டுள்ளார்.

வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஜா ஆந்திர மாநில சட்டசபையில் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அவர் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பேசுகையில், மூத்த தெலுங்குதேச தலைவரான சந்திரபாபு நாயுடு மற்றும் போண்டா உமா உள்ளிட்டோர் எங்களுக்கு எதிராக சில்லரைத்தனமாக நடந்து கொள்கின்றனர்.

அவரகள் எங்களை பற்றிய வீடியோக்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும், அவர்களால் என்னை காயப்படுத்த என்னை கொலை செய்ய தான் முடியும். என்னை பாலியல் பலாத்காரம் செய்ய அவர்களுக்கு துணிச்சல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட நிருபர் அதிர்ச்சியடைந்து, என்ன இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட போது, ரோஜா அந்த பத்திரிக்கையாளரை பார்த்து, என்னை பலாத்காரம் செய்ய உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா என்று கேட்டுள்ளார்.

பெண்கள் ஆபாச செல்பி எடுத்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை : தாய்லாந்து அரசு அதிரடி உத்தரவு!!

thai-selfie

தாய்லாந்தில் பெண்கள் ஆபாச செல்பி எடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. செல்போனில் எடுக்கப்படும் ‘செல்பி’ புகைப்படங்களை மற்ற செல்போன்களுக்கு அனுப்பப்படுவதால் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன.

எனவே, தாய்லாந்து அரசு ‘செல்பி’ எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி செல்பியில் அந்நாட்டு பெண்கள் மார்பு பகுதியில் இறக்கமாக புகைப்படம் எடுக்கக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காதலனுடன் சுற்றிய இளம்பெண்ணைத் தாக்கிய கும்பல்: பரபரப்புக் காணொளி!!

Girl

இந்திய உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதல் ஜோடியை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கிய வீடியோ ஒன்று வட்ஸ் அப்பில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மேற்கு பகுதியில் உள்ள ஹத்ராஸ் என்னும் நகரில் ஒரு இளம்பெண்ணும் அவரது நண்பரும் பைக்கில் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவர்களை பைக்கில் துரத்திய 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, இருவரையும் சுற்றி வளைத்து புறநகர் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு வைத்து அவர்களை தாக்கியதோடு அதனை வீடியோவாக எடுத்து வட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், அந்த பெண்ணையும் வாலிபரையும் தடியால் தாக்கும்போது, அந்த பெண் அவர்களை அண்ணா என அழைப்பதோடு,தங்களை விட்டுவிடும்படி மன்றாடுகிறார்.

மேலும் அந்த பெண், அந்த பையனை தனக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை என்றும் அவன் தனது பள்ளி தோழன் என்றும் கூறுகிறார்.

அந்த இளம் பெண்ணிடம் இந்த விஷயத்தை குடும்பத்தாரிடம் கூறக்கூடாது என அந்த கும்பல் மிரட்டி வீடியோ எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்த வீடியோவை வட்ஸ் அப்பில் பார்த்த இளம் பெண்ணின் உறவினர் ஒருவர் பொலிசில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், நானும் அந்த வாலிபனும் தவறாக நடந்து கொண்டதாக கூறி இருவரையும் அவர்கள் அடித்தார்கள்.

மேலும், நான் அவர்களிடம் எங்களை விட்டு விடும்படி கெஞ்சிய போதும் அவர்கள் எங்களை அடித்து துன்புறுத்தினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இப்படியும் ஒரு சாரதி!!

பஸ்ஸில் விட்டுச்சென்ற பணப்பையை, நேர்மையாக நடந்துகொண்ட அந்த பஸ் சாரதியின் உதவியுடன் மாணவியொருவர் மீளப்பெற்றுக்கொண்ட சம்பவமொன்று அட்டன் நோர்வூட் பகுதியில் நேற்று (18.03) புதன்கிழமை இடம்பெற்றது.

பொகவந்தலாவை – கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.சதாநந்தனி என்ற பாடசாலை மாணவி ஒருவர், மஸ்கெலியாவில் உள்ள தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது 7,200 ரூபாய் பணம், அடையாள அட்டை ஆகியன அடங்கிய பணப்பையை பஸ்ஸிலேயே மறந்து விட்டு சென்றுள்ளார்.

பணப்பையை பஸ்ஸில் வைத்துவிட்டு இறங்கியதை உணர்ந்த அம்மாணவி, உடனடியாக நோர்வூட் பொலிஸில் அது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாணவியின் தகவல்களை கருத்திற்கொண்டு பஸ்ஸை அடையாளம் கண்டுகொண்ட பொலிஸார், மேற்படி பஸ்ஸின் சாரதிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பொலிஸார் அழைப்பை மேற்கொண்ட போது அட்டன் நகரை பஸ் அடைந்திருந்த போதிலும், உடனடியாக அந்த பஸ்ஸை திருப்பிக்கொண்டு நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற கே.பி.சாந்த புஷ்ப குமார என்ற சாரதி, மேற்படி மாணவியின் பணப்பையை நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க விஜயசிங்கவிடம் ஒப்படைத்தார்.

பணப்பையை தேடிக்கொடுத்த பொலிஸாருக்கும் ஒப்படைத்த சாரதிக்கும் நன்றி தெரிவித்து பணப்பையை பெற்றுக்கொண்டு சந்தோஷத்துடன் வீடு திரும்பினார் மாணவி எஸ்.சதாநந்தனி.

2 1 4