நேருக்கு நேர் மோதிய விமானங்கள் : மயிரிழையில் உயிர் தப்பிய விமானிகள் (வீடியோ)

மலேசியாவில் நடைபெற்ற விமான பயிற்சியில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மலேசியாவில் Langkawi International Maritime and Aerospace என்ற கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் இடம்பெறுவதற்காக மலேசியா மற்றும் இந்தோனிஷியாவை சேர்ந்த விமானங்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

விமானங்கள் லாவகமாக பறந்து பல சாகசங்களை நிகழ்த்தி கொண்டிருக்கும்போது இந்தோனேஷியாவின் Jupiter Aerobatic அணியை சேர்ந்த இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகின.

நொடிப்பொழுதில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரண்டு விமானங்களும் தீப்பற்றி எரிந்துக்கொண்டே தரையை நோக்கி வேகமாக சென்றுள்ளன.

ஆபத்தை உணர்ந்த இரண்டு விமானிகளும் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் பாராசூட்டுகளை இயக்கி விமானத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இரண்டு விமானங்களும் தரையில் விழுந்து நொருங்குவதற்கு சில விநாடிகளே இருந்த நிலையில், விமானங்களை இயக்கிய 4 விமானிகளும் வெளியேறி உயிர் தப்பியுள்ளனர்.

விமானங்கள் கீழே விழுந்ததில் எந்த உயிர் சேதமும் ஏற்படாதபோதும், அதிலிருந்து வெளியான தீப்பொறிகளால் கார் மற்றும் ஒரு வீடு எரிந்து பாதிப்புக்குள்ளானது.

பாதுகாப்பாக தரை இறங்கிய 4 விமானிகளும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவமனையில் விமானிகளை சந்தித்த மலேசிய நாட்டு பாதுகாப்பு மந்திரி விமானிகள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

F1 F2

வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்!!

Radhakrishnan

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், எதிர்வரும் 28ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐக்கிய தேசியக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் இந்திரன் சஜீந்திரா தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இவர், வவுனியா மாவட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடங்களை திறந்து வைக்கவுள்ளதுடன், வவுனியா மாவட்ட கல்வி நிலை தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, தேசிய பாடசாலைகளின் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் அபிவிருத்தி குழுக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதுடன், வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீட்டையும் வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் இருந்து சேமமடுவிற்கு பஸ் சேவை ஆரம்பம்!!

Semamadu

இலங்கைப் போகுவரத்துச் சபை வவுனியாவில் இருந்து சேமமடு பகுதிக்கு புதிய பஸ் சேவைகளை இன்று ஆரம்பித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வவுனியா பஸ் நிலையத்தில் இந் நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது.

வவுனியாவில் இருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சேமமடு பிரதேசத்திற்கு நீண்டகாலமாக பஸ் சேவை இடம்பெற்றிருக்கவில்லை. இதனால் மக்கள் பல்வேறு போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இதன் காரணமாக தற்போது சேமமடுவுக்கு புதிய பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இளமருதங்குளம், அலைகல்லுப் போட்டகுளம், சேமமடு உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெறவுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துவ பண்டாரவினால் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா டிப்போவுக்கு 8 பஸ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூம்புகார் கிராமக் காணிகளை அபகரிக்க வன இலாகா திணைக்களம் முயற்சி : மக்கள் கவலை!!(படங்கள்)

வவுனியா பூம்புகார் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை வனஇலாகா திணைக்களத்துக்கு உரிய காணிகள் என்று அடையாளம் இட்டு அக்காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை வனஇலாகா அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அச்சமும் கவலையும் அடைந்துள்ள கிராம மக்கள், கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் முறையிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற பூம்புகார் கண்ணகி விளையாட்டுக்கழக விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஆனந்தன் எம்.பியிடம் கிராம மக்கள் தெரிவித்ததாவது,

1977ஆம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டு, அங்கிருந்து இடம்பெயர்ந்துவந்து வவுனியா பூம்புகார் கிராமத்தில் குடியேறி வசித்து வந்த நிலையில், தொடர் போர்ச்சூழல் காரணமாக நான்கு தடவைகள் (1990, 1994, 1996, 2003 ஆண்டுகள்) இடம்பெயர்ந்து, மடு, தட்சணாமருதமடு, முள்ளிக்குளம், கனகராயன்குளம், முள்ளிவாய்க்கால் வரை சென்றோம்.

இதில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் குடும்ப அங்கத்தவர்களை இழந்து, பெரும் சொத்தழிவுகளை சந்தித்து, எவ்வித வாழ்வாதார உதவிகளும் இன்றி மீளக்குடியேறியிருக்கும் நிலையில், தற்சமயம் நாம் குடியிருக்கும் காணிகளையும், மேட்டுக்காணிகளையும் சுவீகரிப்பதற்கு வனஇலாகாவினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். இவற்றில் கடந்த கால அசாதாரண சூழல்கள் காரணமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்று இன்றுவரை நாடு திரும்ப முடியாதுள்ள 22 குடும்பங்களுக்குரிய காணிகளும் உள்ளடங்குகின்றன.

மேலும் வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட எல்.டி.ஓ அனுமதி பத்திரங்கள், பற்றுச்சீட்டுகள் உள்ள காணிகளும் அடங்குகின்றன. தமக்கு சொந்தமான காணிகளில் தாம் குடியிருப்பதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தும் வனஇலாகா அதிகாரிகள், தமது பிரச்சினையை காது கொடுத்துக் கேட்பதாயில்லை என்று கவலை தெரிவித்த கிராம மக்கள், தமது கிராமத்துக்கு அண்மையாக உள்ள பாழடைந்துள்ள குளத்தை புனரமைத்து தந்தால், அக்குளநீர் தமது வாழ்வாதாரத்தொழிலான விவசாய செய்கைகளுக்கு பெரிதும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தனர்.

வன்னி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் கணக்கான காடுகளை அழித்து பெறுமதிமிக்க பயன்தரும் மரங்களை பாதுகாப்பு தரப்பினரும், வன்னி அமைச்சரும் விற்று இலாபம் ஈட்டி வருவதை கைகட்டி வாய்கட்டி நின்று வேடிக்கை பார்க்கும் வனஇலாகாவினர், தினக்கூலிக்கு தமது அன்றாட வாழ்க்கை சீவியத்தை நடத்தும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயல்வது அநீதியான செயலாகும் என்று தெரிவித்துள்ள ஆனந்தன் எம்.பி, இனக்கலவரங்கள், போர்ச்சூழல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த புதிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய தீர்வை பெற்றுத்தருவோம் என்றும் தெரிவித்தார்.

பூம்புகார் கண்ணகி விளையாட்டுக்கழக தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோரும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் பரமேஸ்வரன் (பாபு), கல்மடு பாடசாலை அதிபர் திரு.செல்வதேவன், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஜெகதீபன், பொருளாளர் ராம்குமார், கழக உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

1 2 3 6

புத்தளத்தில் பிடிபட்ட அரிய வகை மீன்!!

Fish

அரிய வகை மீன் இனம் ஒன்று புத்தளம் வாவியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.

மீன் பிடிப்பதற்காக சென்ற மீனவர்களின் வலையிலேயே பாரிய பாம்பினைப் போன்ற வடிவிலான இந்த மீன் பிடிபட்டுள்ளது.

‘குழுவி’ என அழைக்கப்படும் இந்த மீன் இனம் மிக அரிதாகவே காணப்படுவதாகவும் , இந்த மீன் வகையினை ‘சேனைப் பாம்பு’ என மறு பெயர் கொண்டும் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பாடசாலை மாணவியைக் கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய உறவினர் : அதிர்ச்சித் தகவல்!!

Abuse5

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவி நேற்றுமுன்தினம் பாடசாலையில் நடக்கவுள்ள விளையாட்டுப் போட்டிக்காகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இதன்பின்னர் குறித்த மாணவியை அவரது ஒன்று விட்ட சகோதரன் ஒருவர் முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றதாகவும் அதனையடுத்து மாணவி தொடர்பாக எந்த தகவல் எதுவும் தெரியாத நிலை காணப்பட்டதாவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த மாணவி மயக்கமடைந்து அநாதரவாக யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையான வீதியில் கிடந்துள்ளார். அவ்வாறு கிடந்த மாணவியை அப்பகுதிக்கு சென்றவர்கள் கண்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

வைத்திய பரிசோதனைகளில் அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரிய வந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள மானிப்பாய் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து, சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லை மீறும் மீனவர்களை சுடும் அதிகாரம் கடற்படைக்கு உண்டு : ரணில் மீண்டும் சர்ச்சையில்!!

Ranil

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்படுவதாகவும் ஆனால் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் எவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை கடற்படையினருக்கு அதிகாரம் உள்ளதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ´NDTV´ ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியாவின் தந்தி ஊடகத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய நேர்காணலில் இந்த கருத்தை தெரிவித்ததால் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் பாரிய எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் மோடி இலங்கை மக்களை வெற்றிகொண்டுள்ளதாகவும் மக்களுக்கும் மோடிக்கு பதிலளித்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் எல்லா பகுதிகளிலும் உள்ள கடற்பரப்பில் அத்துமீறுவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிகாரம் இலங்கை கடற்படையினருக்கு உள்ளதாகவும் அதுவொன்றும் புதிதல்ல என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டலை தடுக்க வேண்டும் என கூறியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இந்தியா வடக்கு பகுதியை மாத்திரம் கவனத்தில் கொள்ளாது முழு இலங்கையையும் கவனத்தில் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

-அத தெரண-

சட்டவிரோதமாக இந்தியா சென்ற இலங்கை எயிட்ஸ் தொற்று நோயாளர் கைது!!

Arrest

மண்டபம் மேற்கு கடற்கரையில் சுற்றித்திரிந்த இலங்கையர் ஒருவர் மண்டபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளத்தைச் சேர்ந்த 45 வயதுடைய கஜேந்திரன் என்பரே கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இவர் ஒரு எயிட்ஸ் தொற்று நோயாளி என்றும் தமிழகத்தில் உள்ள அவரது மனைவியை பார்க்கவே வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து 500 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் வெள்ளிமுத்து, சமயன், நைனா முகம்மது, ஆறுமுகம் ஆகிய 4 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு பிளாஸ்டிக் படகு ஒன்று வந்துள்ளது.

அதில் இருந்த ஒருவர் மற்றுமொரு நபரை மீனவர்கள் படகில் ஏற்றிவிட்டு அவரை மண்டபத்தில் இறக்கிவிடும்படியும் மறுத்தால் மீன்பிடிக்க விடமாட்டோம் என்றும் மிரட்டியதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனை அடுத்து அச்சமடைந்த மீனவர்கள் குறித்த நபரை மண்டபம் கடற்கரையில் இறக்கிவிட்டு மண்டபம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரான க​ஜேந்திரனை கைது செய்துள்ளனர்.

கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து மண்டபம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-மாலைமலர்-

பண்டாரவளையில் நிலச்சரிவு :17 குடும்பங்கள் இடம்பெயர்வு!!

Bandarawella

பண்டாரவளை – அம்பதன்டேகம – கலஹிட்டியாவ பகுதியில் இடம்பெற்ற நிலச்சரிவு காரணமாக 17 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. 25 அடி உயரமுடைய பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய, அப்பகுதியில் வாழ்ந்த 17 குடும்பங்கள் அகற்றப்பட்டுள்ளதுடன் அவர்கள் தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இந்த நிலச்சரிவினால் தெய்வாதீனமாக உயிர், சொத்துச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம்?

Morning

காலையில் எழுந்தவுடன் கோப்பி, பால்த் தேனீர் குடித்தால்தான் பலருக்கும் பொழுதே விடிகின்றது. ஆனால் இது ஆரோக்கியமானதுதானா என்ற கேள்வி பலரது மனதிலும் எழும்.

நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகின்றது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகின்றோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டும்.

தண்ணீர்..

ஒருநாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் காற்பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணிநேரத்துக்குள் குடிக்க வேண்டும். வெந்நீரை விட குளிர்ந்த நீரை குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம். வெறும் தண்ணீருக்கு பதிலாக வெந்தயத் தண்ணீர் கூட அருந்தலாம்.

வெந்தயத்தை முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது.

ஆரோக்கியம் தரும் சாறுகள்..

அல்சர் நோயாளிகளுக்கு ஏற்ற பானம் அருகம்புல் சாறு தான், ஆனால் பக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் தூள் நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.

வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணிச் சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும்.

இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும்.

தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும்.

இதில் அன்டி அக்சிடன்ட்ஸ் அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்று நோய்களுக்கும் மிகவும் சிறந்தது.

இளநீர்..

இயற்கை தந்த வரப்பிரசாதங்களில் ஒன்று இளநீர், உடலுக்கு நன்மை தந்தாலும் வெறும் வயிற்றில் குடிக்க கூடாது. ஏனெனில் இதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், வயிற்றில் புண்கள் ஏற்படலாம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கூட அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

மேலும் வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம்.

நீராகாரம்..

காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவதை இன்றளவும் கூட கிராமங்களில் பார்க்கலாம். இதன் மூலம் உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான காபோகைதரைட் சத்தும் கிடைக்கிறது.

ஒரு கோடி ரூபா பெறுமதியான 20 தங்க பிஸ்கட்கள் விமான நிலையத்தில் மீட்பு!!

Gold

ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் குறித்த தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன.

எச்.சி 782 பயணிக்கவிருந்த இரண்டு பயணிகளின் பயணப் பையை சோதனை செய்தபோது 2 கிலோ 521 கிராம் நிறையுடைய 20 தங்க பிஸ்கட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி ஒரு கோடி 30 லட்சத்திற்கும் அதிகம் என சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தங்க பிஸ்கட்களை வைத்திருந்த மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 39, 40 வயதுடைய இருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக மீட்கப்பட்ட தங்கத்துடன் இரு சந்தேகநபர்களும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா செட்டிகுளம் அடப்பங்குளத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

settikulam

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அடப்பங்குளம் கிராமத்தில் மக்கள் ஒன்றுதிரண்டு நேற்று(15.03) ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் தமது பிரதேசத்தில் பொது கட்டிடத்தில் உள்ள இராணுவம் வெளியேற வேண்டும், சமுர்த்தி முத்திரை வழங்கலில் பாரபட்சம் உள்ளதாகவும் தெரிவித்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரியகுளத்தில் இருந்து ஊர்வலமாக சென்றவர்கள் அடப்பங்குளம் வரை சென்று அங்கு கிராம அபிவிருத்தி சங்தக்தின் தலைவரிடம் மகஜரை கையளித்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவத்த பொது மக்கள் தமது கிராம பொது கட்டிடத்தை மீட்டுத்தாருங்கள், ஆலய வீதியை புனரமைப்பு செய்து தாருங்கள் உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

சுமார் இரு மணி நேரமாக இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டம் மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்திருந்தது.

வவுனியா குளவிசுட்டான் அ.த.க.பாடசாலையின் மெய்வல்லுநர் போட்டி!!

வவுனியா குளவிசுட்டான் அரச தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் திரு.சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் திரு.மு.பாலசுப்பிரமணியம், அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு அதிபர் மற்றும் சமூகம் தந்திருந்த விருந்தினர்களினால் பரிசில்களும் சின்னங்களும் வழங்கப்பட்டன.

11 12 13 14

வவுனியா பூவரசு ஆரம்ப பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!!(படங்கள்)

வவுனியா பூவரசு ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி பாடசாலையின் அதிபர் திரு.ரவிச்சந்திரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, ஐ.தே.கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் றோகண கமகே, இந்திரன்ஸ் விடுதி உரிமையாளர் திரு.சஜீந்திரன், கிராம உத்தியோகத்தர், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இப்பாடசாலை காணியில் 2010ஆம் ஆண்டிலிருந்து முகாம் இட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் அண்மையில் வெளியேறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலை அனைத்து பௌதீக வளங்களையும் ஆரம்பத்திலிருந்து கட்டமைக்க வேண்டியுள்ளமையால் புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்களிடமும், நலன்விரும்பிகளிடமிருந்தும் உதவிகளை கல்விச்சமுகத்தினர் எதிர்பார்த்திருக்கின்றனர்.

1 4 2 3

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 7ம் திகதிக்கு முன்னதாக வெளியாகும் : பரீட்சைகள் திணைக்களம்!!

OL

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இவ்வாறு வெளியிடப்பட உள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2013ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பெறுபேறுகள் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள், மழை வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மதிப்பீட்டுப் பணிகள் இரண்டு வார காலம் தாமதிக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் பரீட்சை ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

காலிறுதியில் நுழைந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஸ்கைப் மூலம் ஜனாதிபதி வாழ்த்து!!

இலங்கை கிரிக்கெட் அணி சிறந்த எட்டு அணிகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை அணிக்கு ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

1 2 3