உலக கிண்ண கிரிக்கெட்டில் 2வது காலிறுதி ஆட்டம் மெல்போர்னில் 19ம் திகதி நடைபெறவுள்ளது. இதில் நடப்பு சம்பியன் இந்தியாவும், பங்காளதேஷூம் மோதுகின்றன.
இந்த போட்டி குறித்து பங்காளதேஷ் அணி பயிற்சியாளர் ஹதுருசிங்க கூறியபோது, இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது என்பதை அறிவோம். அவர்கள் துடுப்பாட்ட வரிசை வலுவாக இருக்கிறது. மேலும் அவர்களது வேகப்பந்து வீச்சும் நன்றாக இருக்கிறது. இதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு ஆட்டத்துடன் பங்காளதேஷ் வீரர்கள் திறமையை வளர்த்து வருகிறார்கள். அனைத்து வீரர்களும் சிறந்த நிலையில் இருக்கிறார்கள். இது தான் எங்களது பலம்.
பங்காளதேஷ் அணி திறமையை வெளிபடுத்தி விளையாடினால் இந்தியாவை வீழ்த்தி சாதிக்கும். அது நடக்கும் என நம்புகிறேன். பங்காளதேஷ் அணி தலைவர் மொர்தாசா களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய கிரிக்கெட் ரசிகை ஒருவர் ரெய்னாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனக் கோரி இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே தவமிருந்துள்ளார்.
உலகக்கிண்ண லீக் போட்டியில் சிம்பாவே அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் அதிரடியில் மிரட்டிய ரெய்னா சதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
இவரது ஆட்டத்தை பார்த்து அசந்து போன வைஷ்னவி என்ற இந்திய கிரிக்கெட் ரசிகையொருவர் அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு செற்று வெளியில் காத்திருந்துள்ளார்.
இதேவேளை, குறித்த ரசிகை கையில் `Raina, make me your dulhaniya’ என்று எழுதிய ஒரு சுலோக அட்டையுடன் இந்திய வீரர்கள் தங்கி இருக்கும் ஹொட்டலுக்கு வெளியே ரெய்னாவின் வருகைக்காக தவமிருந்துள்ளார். இது குறித்து ரசிகையான வைஷ்னவி தெரிவிக்கையில்,
நான் 2 மணி நேரமாக ஹோட்டலுக்கு வெளியில் ரெய்னாவின் வருகைக்காக காத்திருக்கிறேன். காவலாளியிடம் அவர் எப்போது வருவார் என்று கேட்டுப்பார்தேன். அவர் என்னை உள்ளே விட மறுத்து விட்டார் .
மேலும் எனது ஆதரவு எப்போதும் ரெய்னாவிற்கு உண்டு என்றும், இந்திய அணி கண்டிப்பாக இறுதிப் போட்டியில் விளையாடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியில் மண்ணெண்ணெயை குடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒன்றறை வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
தாய் விளக்குக்கு ஊற்றுவதற்காக கொண்டு வந்த மண்ணெண்ணெயை சிறுமி குடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது சிகிச்சைக்காக சிறுமி யாழ். வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
எனினும் இவர் பலியாகியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வல்வெட்டிதுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிவனொளிபாத மலைக்கு வழிபாடுக்கு சென்ற சிங்கப்பூா் பிரஜை ஒருவர் நேற்று (16.03) திங்கட்கிழமை இரவு திடீரென உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
55 வயதுடைய டொன் ஏன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், தற்போது அவருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சிங்கப்பபூர் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் சிவனொலிபாத மலைக்கு நேற்று மாலை 6 மணியளவில் விஜயம் செய்திருந்த நிலையில் இந்திகட்டுப்பான என்ற இடத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபா் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனா். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா செட்டிக்குளம் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி நேற்று (16.03) செட்டிகுளம் மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய கோட்டக்கல்விப் பணிப்பாளர்..
செட்டிக்குளம் கோட்டத்தில் இயங்கி வந்த 43 பாடசாலைகளில் கடந்தகால போர்ச்சூழல்கள் காரணமாக 8 பாடசாலைகள் மூடப்பட்டு விட்டன. தற்சமயம் 35 பாடசாலைகள் மட்டுமே கல்வி போதிக்கின்றன. 5,290 மாணவர்கள் – 360 ஆசிரியர்கள் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
செட்டிக்குளம் கோட்ட அலுவலகம் மின்சாரம், குடிநீர், மலசலகூடம், தளவாடம் இவ்வாறு அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வருகின்றது.
துட்டுவாகையில் ஆரம்ப பாடசாலை ஒன்று அவசரமும் அவசியமுமாக புதிதாக அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
செட்டிக்குளம் கோட்ட பாடசாலைகளில் 39 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் (பற்றாக்குறை) காணப்படுகின்றது.
இறாலை தலை வால் நீக்கி கோதுகளைக் கழற்றி சுத்தம் செய்யுங்கள்.
உடம்பின் மேற்புறத்தைக் கீறி, சாப்பாட்டுக் குடலை எடுத்துவிடுங்கள். நன்கு கழுவி, நீர் வடியவிட்டு கோப்பையில் எடுங்கள்.
எண்ணையில் சோம்பு, வெந்தயம், பூண்டு வதக்கி, பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதங்க விடுங்கள்.
ரம்பை, கறிவேற்பிலை சேருங்கள். இறால் சேர்த்து உப்புப் போட்டு கிளறி, சிறிது பொரிய விடுங்கள். மிளகாய்தூள், மஞ்சள்தூள் , மல்லித் தூள் சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வதக்குங்கள்.
புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்க விடுங்கள். இறுதியாக தேங்காய்பால் ஊற்றி பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றி விடுங்கள்.
வவுனியா செட்டிக்குளம் கோட்டத்துக்குட்பட்ட 35 பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி செட்டிக்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் செட்டிக்குளம் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.யேசுதாசன் தலைமையில் நேற்று (16.03) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முத்தலிப்பாவா பாறூக், வடமாகாணசபை உறுப்பினர் எம்.தியாகராசா ஆகியோரும்,
இவர்களுடன் செட்டிக்குளம் பிரதேசசபை தவிசாளர் அந்தோனி, உறுப்பினர் ஜெகதீஸ்வரன், செட்டிக்குளம் மக்கள் வங்கி முகாமையாளர் ஜனாப் அறூஸ், உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் ஜனாப் சுபைர், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் யுட் பரதமாறன்,
அருட்தந்தை அலெக்ஸ்சாண்டர் வெனோ, ரங்கநாத குருக்கள் , கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதிய தலைவர் திரு.அன்ரனிற்றோ, செட்டிக்குளம் மகாவித்தியாலய பழைய மாணவன் எட்வின் இருதயராஜ் ஆகியோரும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தனது ஆறு வயது மகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தந்தை ஒருவரை (வயது29) சிலாபம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்கப்பள்ளி தெமட்டபிட்டிய எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் வைத்தே இக்குற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த தொலைபேசித் தகவல் ஒன்றினையடுத்து சந்தேக நபரான தந்தையைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட பரிசோதனைகளின் மூலம் குற்றம் புரியப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் கால் இறுதிப் போட்டிகளில் முதல் முறையாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 4 சார்க் நாடுகள் இடம்பெற்றுள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2015ம் ஆண்டு போட்டிகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் முறையாக கால் இறுதிப் போட்டிகளில் அதிக அளவில் 4 சார்க் நாடுகள் மோதுகின்றன.
இதற்கு முன்னர் 1996ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் காலிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடம்பெற்றிருந்தன. உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
மேலும் சார்க் பிராந்திய மக்களை இந்த உலகக் கோப்பை ஒருங்கிணைக்கட்டும் என்றும் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். கிரிக்கெட் போட்டிகள் மூலமாக இப்பிராந்திய நாடுகளிடையே நல்லுறவை ஏற்படுத்த முடியும் என்பது மோடியின் ஆவல்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சார்க் நாடுகள் தற்போதுதான் இப்படி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பொதுவாக சர்வதேச அமைப்புகளைப் பொறுத்தவரையில் சார்க் (தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) என்பது பலவீனமான அமைப்புதான்.
அதுவும் சார்க் அமைப்பில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கருத்து வேறுபாடுகள் மேலும் பலவீனத்தையே எற்படுத்தி வந்தது. இந்நிலையில் பிரதமராக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற விழாவில் அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களையும் அழைத்து நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினார்.
அதன் பின்னர் நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கும் உடனடியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார். தற்போதைய நிலையில் கிரிக்கெட் போட்டிகள்தான் சார்க் அமைப்புகளிடையே நெருக்கமான உறவை வலுப்படுத்தக் கூடிய ஒரு களமாக இருந்து வருகிறது.
இதனை மெய்ப்பிக்கும் வகையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 4 சார்க் நாடுகள் காலிறுதியில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலமாக தென்னாசியாவின் கிரிக்கெட் ரசிகர்கள் பெருமகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ஒருவேளை கால் இறுதியிப் போட்டியில் இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ தோல்வி அடைந்தாலும் இந்த 2 நாடுகளின் ரசிகர்கள் இலங்கைப் பக்கம் சாயக்கூடும். 1992ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்திய போது பரம வைரியாக இருந்த இந்திய ரசிகர்களும் கூட அந்நாட்டை ஆதரித்ததையும் நினைவில் கொள்வோம்.
இதுதான் தென்னாசியா மக்களிடையேயான நல்லெண்ண வெளிப்பாடு. அத்துடன் சார்க் அமைப்பைச் சேர்ந்த ஒரு நாடு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்றால் நிச்சயம் இந்த பிராந்திய நாடுகள் அனைத்துமே தங்களுடைய வெற்றியாகக் கொண்டாடும். அதுவும் சார்க் நாடுகளிடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கலாம்
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் காணப்பட்டிருந்த மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பகுதியில் 80க்கும் அதிகமான மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதன் பின்னர் அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு, கண்டெடுக்கப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இதனையடுத்து, இந்தப் பிரதேசத்தில் அகழ்வு வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று காணாமல் போனவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தோன்றி வாதிட்ட சட்டத்தரணிகளில் ஒருவராகிய விவேகானந்தன் புவிதரன் தெரிவித்தார்.
அதேவேளை, முன்னர் அகழ்வு வேலைகள் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட பாழடைந்த கிணறு ஒன்று முழுமையாக மூடப்பட்டுள்ளதாகவும், அந்தக் கிணற்றின் உள்ளேயும் மனித எலும்புக் கூடுகள் இருக்கலாம் என்ற சந்தேகம் தெரிவிக்கப்பட்டு, அந்தக் கிணறு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அதனையும் தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காணாமல் போயுள்ளவர்களின் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.
இதனையடுத்து அந்தக் கிணறு இருந்த இடத்தைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது, அத்துடன் இந்தக் கிணறு சம்பந்தமாக கோரிக்கை விடுத்திருந்த சட்டத்தரணிகளும் அந்த இடத்தைச் சென்று பார்வையிடுவதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இதனையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற சட்டத்தரணிகளினால் அந்தக் கிணறு இருக்குமிடத்தைக் கண்டறிய முடியாதிருந்ததாகவும் அங்கு மழை வெள்ளம் தேங்கியிருந்ததனால், கோடை காலத்தில் அதனைக் கண்டு பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் சட்டத்தரணி விவேகானந்தன் புவிதரன் தெரிவித்தார்.
இந்த வழக்கில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் உள்ளிட்ட சட்டத்தரணிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
தமிழ் மக்களுக்கு நாங்கள் ஒருபோதும் எதிரானவர்கள் அல்லர். பயங்கரவாதமானது எம் இரு சமுதாயத்தினரையும் அழிவை நோக்கி இட்டுச் சென்றதாலேயே அதனை தோல்வியடையச் செய்வதற்கு நாம் முயற்சித்தோம். பௌத்த பிக்குமார் என்ற வகையில் எம் மனதில் ஒரு காலமும் தமிழருக்கெதிரான மனோநிலை இருந்ததில்லை, என்று ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற சிங்கள பௌத்த கலாசார விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்..
வடக்கு யுத்தத்தில் தமிழ் மக்கள் பெருமளவு துயரத்துக்குள்ளானார்கள். சிங்கள மக்களின் விகிதாசார அடிப்படையில் தமிழ் மக்களின் இழப்பு அதிகம். தமிழ்ச் சமுதாயம் கடந்த தசாப்தத்தில் சிங்களவர்களுக்கு எதிராக போர் புரிவதாகவே நினைத்தது. தமிழ், சிங்கள சமுதாயங்கள் மிகத் தெளிவாகப் பார்க்கவில்லை. தமிழ், சிங்கள அரசியல்வாதிகளின் பிழையான அரசியல் கொள்கையே இந்த சமூகக் கிளர்ச்சிக்கு அடிப்படையானது.
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நோக்கத்தின் அடிப்படை யில் ஆகும். சிங்களவர்களின் எதிரி தமிழர்களோ தமிழர்களின் எதிரி சிங்களவர்களோ இல்லை. வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த யுத்தம் இந்தளவுக்கு வீரியமடைவதற்கு காரணம் வெளிநாட்டவர்களின் தலையீடாகும்.
எமது அரசியல் தலைவர்கள் பிழையான வெளிநாட்டுக் கொள்கைகளை பின்பற்றினர். நாங்கள் அமெரிக்கர்களில் தங்கியிருந்த வேளை இந்தியா சோவியத் தேசத்தின் பாதையில் சிந்தித்தது. சோவியத் தேசம் இன்று இல்லாததனால் உலகச் சந்தை தொடர்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போட்டி இடம்பெறுகின்றது.
நாங்கள் பொம்மலாட்டக்காரர்களாக இருப்பதால் விபரீதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. விவசாயப் பொருட்களில் இரசாயன பாவனையால் ரஜரட்ட பிரதேசத்தின் நீர் உவர்நீராக மாற்றமடைந்து அங்கு சிறுநீரக நோய் பரவியுள்ளது.
ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறான நிலையில் வடமாகாண சபை இரசாயனமற்ற விவசாயக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்தலாம்.
யாழ்ப்பாணம் எதிர்காலத்தில் கடல் நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது. அதிகப்படியான காபனீரொட்சைட்டு வாயு காரணமாக கடல்நீர்மட்டம் அதிகரிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபை இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை சூழல் ரீதியாக அழிவடையாத நாடு. அதனை பாதுகாக்கவேண்டும்.
மது, போதைப்பொருள் பாவனை, விபசாரம் என்பன தமிழ், சிங்கள சமூகத்தில் அதிகரித்துள்ளது. இவற்றிலிருந்து சமுதாயத்தை மீட்டெ டுக்கவேண்டும். எமது நாடு தற்போது பெரும் கலாசாரச் சீரழிவுகளை எதிர்நோக் கியுள்ளது. கொழும்பிலிருந்து போதைப் பொருள் பாவனை தற்போது வடக்குக்கும் பரவி வருகின்றது. வடக்கு, தெற்கு என்ற பாகுபாடின்றி எமது கலாசாரங்களை பாது காக்க குரல் கொடுக்கவேண்டும் என்றார்.
நயினாதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்; கொண்ட திருமதி சாந்தலிங்கம் பூம்பாவை அவர்கள் 14.03.2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
இவர் காலஞ்சென்ற சாந்தலிங்கம் (முன்னாள் அதிபர் நயினாதீவு கணேசா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்; காலஞ்சென்ற ஆறுமுகம் வடிவாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ர புத்திரியும், குமாரசாமி செல்லம்மர் தம்பதிகளின் அன்பு மருமகளும், தியாகராசா(ஓய்வுபெற்ற முன்னாள் உதவி அரசாங்க அதிபர் வேலணை ,தலைவர் நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம் ), உமாதேவி, நவரட்ணராசா(செயலாளர்-வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில்) , உமாதேவன்(உரிமையாளர் நியூசண் அரிசி ஆலை வவுனியா) , அஸ்தநாயகி, சுவாதிநாயகி(ஆசிரியை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), மற்றும் காலஞ்சென்றவர்களான நடராசா, சாந்தநாயகி, வாகீஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரியும், நல்லம்மா, காலஞ்சென்ற சரவணமுத்து, சரஸ்வதி, தேவிகா(உதவி திட்டமிடல் பணிப்பாளர் வவுனியா வடக்கு கல்வி வலயம்), ஸ்ரீபதிநாதன்(உரிமையாளர் வரதன் அரிசி ஆலை வவுனியா) , சுதாகரன்(உரிமையாளர் கிருஷ்ண பவான் வவுனியா); நாகலட்சுமி(லண்டன்), சண்முகரட்ணம்(கனடா), இந்திரா(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், இராமச்சந்திரன், சொர்ணம்மா, தனலட்சுமி ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, வன்னியசிங்கம், கமலாம்பிகை மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் சகலர் சகலியும், சதானந்தன்(ஜேர்மன்), திருமகள்(ஆசிரியை வவுனியா மூன்றுமுறிப்பு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை), கலைமகள்(உதவி திட்டமிடல் பணிப்பாளர்வவுனியா பிரதேச செயலகம் ), கணேசானந்தன்(இலண்டன்), மலைமகள், குலமகள்(யூனியன் அஷ்யூரன்ஸ் வவுனியா), முருகானந்தன்(ஜேர்மன்), விபுலானந்தன், தமிழரசி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், சந்திரராஜினி(ஜேர்மன்), சண்முகதாஸ்(சிற்றி கோர்பரேஷன் வவுனியா ), மணிவண்ணன்(இத்தாலி), இந்திரவதனி(இலண்டன்), குணவண்ணன்(ஐங்கரன் சவுண்ட் சர்வீஸ் வவுனியா), சாரங்கன், மலைமகள், கேதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் மற்றும் ஜான்சன், ஜான்சி, பிரகணன், தனஞ்சயன், வித்யா, ஸாகின்யா, ஹாயித்யா, நஜனி, ஜானவி, திவ்யா, ஐங்கரன், கோபியா, ஜோதிஷா, வந்தனா, யுவிதா, கிரிஷ், ஆரத்யா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நயினாதீவு 5ம் வட்டாரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 18-03-2015 புதன்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்று பிற்பகல் 2.00 மணிக்கு; நயினாதீவு சல்லிபரவை மயானத்தில் தகனக்கிரிகைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.
சுவிஸ் ஜுரா தேசிய மாநில ஐஸ் ஹொக்கி கழகத்தில் மினி டொப் பிரிவில் பந்து காப்பாளராக 13 வயதான அஸ்வின் சிவசுப்பிரமணியம் விளையாடி வருகிறார்.
இவர் பெப்ரவரி 9 முதல் 17 வரை Canada Bantiam Granby யில் நடைபெற்ற சர்வதேச Ice Hockey U 14 பிரிவு போட்டியில் Team Swiss அணி பந்துக் காப்பாளராக விளையாடியுள்ளார்.
இதில் Swiss team champions கிண்ணத்தையும், நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அஸ்வின் இரண்டாவது சிறந்த பந்து காப்பாளர் என்ற பட்டத்தையும் வென்று அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
அஸ்வின் team Swiss அணிக்காக விளையாடுவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் Swiss இல் முன்னணி கழகங்களின் ஒன்றான EHC Bienne (LNA) mini top வழி பிரிவில் பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார்.