இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்திப்பு!

modi_tna_001
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அக்குழுவில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் இன்று மாலை கொழும்பு தாஜ் ஹோட்டலில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, இலங்கையின் புதிய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள இனப்பிரச்சினை தீர்வு, காணிப் பிரச்சினை, கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் பிரச்சினை உள்ளிட்டவைகள் குறித்து இந்திய பிரதமருக்கு தெளிவுபடுத்தியதாக சந்திப்பில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள இந்த விடயங்களை செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுத்து கூட்டமைப்புக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என இந்திய பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார்.

அதற்கு பதில் அளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதிய அரசாங்கம் அந்த விடயங்களை செய்து முடிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துமாறும் கூறியதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மேலும் எல்லாவற்றையும் உடனடியாக செய்து முடிக்கலாம் என நம்ப வேண்டாம் எனவும் படிப்படியாக செய்து முடிக்கப்படும்வரை பொறுமை காக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியதாக செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

(அததெரணவிலிருந்து )

நான் பழைய மாதிரி இல்லை இப்போது மாறி விட்டேன் : அஞ்சலி!!

Anjali

அஞ்சலி கடைசியாக தமிழில் வத்திக்குச்சி படத்தில் நடித்தார். இப்படம் 2012ல் வந்தது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. குடும்ப பிரச்சனையால் சினிமாவை விட்டு ஒதுங்கி ஐதராபாத்தில் தங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். ஜெயம்ரவியுடன் அப்பாடக்கர், விமலுடன் மாப்ளசிங்கம் படங்களில் நடிக்கிறார். அஞ்சலி கூறியதாவது..

சினிமா என்னை நிறைய மாற்றி விட்டது. முதல் படத்தில் அறிமுகமாகும் போது என்னிடம் சில தனிப்பட்ட குணாதிசயங்கள் இருந்தன. அந்த குணங்கள் பிறகு இல்லாமல் போய்விட்டது. சூழ்நிலைகள் என்னை மாற்றி விட்டன.

பழைய அஞ்சலியாக இப்போது இல்லை ரொம்ப மாறிவிட்டேன். முன்பெல்லாம் படம் வெற்றி பெற்றால் சந்தோஷப்படுவேன். தோற்றால் வேதனைப்படுவேன்.

இன்று அப்படி இல்லை. வெற்றி, தோல்வி இரண்டையுமே சமமாக பார்க்கிறேன். அந்த அளவுக்கு பக்குவப்பட்டு விட்டேன். முன்பை விட இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

இனிமேல் தொடர்ந்து படங்களில் நடிப்பேன். என் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் நடந்தது. அதற்கு நான் பொறுப்பு இல்லை. பார்ட்டிகளுக்கு போவது எனக்கு பிடிக்காது என்று அஞ்சலி கூறினார்.

தன்னம்பிக்கை தமிழனான டி.ஆர் அவர்களை புண்படுத்த வேண்டாம் : ஜெயம் ரவி!!

TR

ஜெயம் ரவி தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். நீண்ட நாட்களாக படம் வெளிவராததால் இவரின் மார்க்கெட் குறைந்து விட்டது என்று கூறியிருந்தவர்கள் வாய் அடைத்து போகும் படி ரோமியோ ஜுலியட் படத்தின் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக ‘டண்டனக்கா’ பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகிறது. ஆனால், இப்பாடலில் டி.ஆர் அவர்களை புண்படுத்தியதாக கூறப்பட்டது. இது குறித்து நேற்று விளக்கம் அளித்த ஜெயம் ரவி ‘இப்படத்தில் நான் டி,ஆர் அவர்களின் ரசிகனாக நடித்துள்ளேன், எந்த ஒரு விஷயத்திலும் முயற்சி இருந்தால் போதும் வெற்றி பெறலாம், என்று அவரை இன்ஸ்ப்ரேஷனாக எடுத்துக்கொண்டு இப்படத்தில் நடித்துள்ளேன்.தயவு செய்து இதை ரீமேக் செய்து தன்னம்பிக்கை தமிழனான டி.ஆர் அவர்களை புண்படுத்த வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

87 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 15 வயதுச் சிறுவன்!!

Boy

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை ஒட்டியுள்ள ஹெமெட் பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்துக்குள் புகுந்த இரு பள்ளி மாணவர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 87 வயது பாட்டியை முரட்டுத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.

அவரை அதோடு விட்டுவிடாமல், அங்கிருந்த 2 பாட்டில் பிளீச்சிங் பவுடர் கலந்த கரைசலை வாயில் ஊற்றி அவரை கொல்ல முயற்சித்து தப்பியோடி விட்டனர். அறைக்குள் இருந்த அபாய அறிவிப்பு பொத்தானை அந்தப் பாட்டி அழுத்தியதால் ஓடோடிவந்த காவலாளிகள் அவரை காப்பாற்றினர்.

இந்த சம்பவத்தால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பாட்டி நடமாட முடியாத முடக்குவாத நோய்க்குள்ளானார். தற்போது, சக்கர நாற்காலியின் துணையுடன் உலவிவரும் அந்த பாட்டியை இந்த நிலைக்கு ஆளாக்கிய மாணவர்கள் ரூபன் ஜோஸ் மெலன்சன்(15), ரேமன்ட் மைக்கேல் மிரிண்டா(14) ஆகியோரை கைது செய்த பொலிஸார் அவர்கள் மீது இரண்டாண்டுக்கு முன்னர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 18 வயது நிறைவடையும் வரை சிறார்கள் காப்பகத்திலும், 18 வயதுக்கு பின்னர் இதர கைதிகளுக்கான சராசரி சிறையிலும் இந்த 30 ஆண்டு தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் ஆஜரான அந்த பாட்டி, ‘நீங்கள் எனக்கு செய்துள்ள தீங்கு என்ன? என்பதை எனது முகத்தை ஒரு முறை பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். எனது சுதந்திரத்தை பறித்த நீங்கள் கட்டாயம் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும்’ என குற்றவாளிகளிடம் கண்ணீர் மல்கக் கூறியது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இரு தலைகளை கொண்ட மாடு ஏலத்தில் விற்பனை!!

Cow

அவுஸ்­தி­ரே­லி­யாவில் வட குயீன்ஸ்­லாந்தில் இரு தலை­க­ளுடன் பிறந்த மாடொன்று 400 அமெ­ரிக்க டொலர் விலைக்கு ஏலத்தில் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது.

அந்த மாட்டின் இரண்­டா­வது முகத்தில் ஒரு கண்ணும் ஒரு பல்லும் செயற்­படும் நாசித் துவா­ரங்­களும் உள்­ளன. பரம்­பரை ரீதி­யான பாதிப்­புக் ­கா­ர­ண­மாக இவ்­வாறு மாறு­பட்ட தோற்­றத்தில் பிறந்த மேற்­படி மாடு, இறைச்சி வெட்டும் நிலை­ய­மொன்­றுக்கு விற்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் பாரதியின் பாடலை பாராளுமன்றத்தில் கூறிய மோடி!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார். அவரை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வரவேற்றார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடுவார்.

இந்த பாராளுமன்றம் ஆசியாவின் பழமையான பாராளுமன்றங்களில் ஒன்று. இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சார பரிமாற்றம் இருப்பது பெருமை அளிக்கிறது.

இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட்டால் இலக்கை விரைந்து அடைய முடியும். என இந்தியப் பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

தெற்காசியாவில் இலங்கை வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இலங்கையில் நடைபெற்ற தேர்தல் ஜனநாயகத்தின் கொண்டாட்டம்.

அண்டை நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பதை இலங்கைதான் முடிவு செய்ய வேண்டும்.

கடுமையான தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொண்டு சமாளித்து வருகின்றோம். இந்திய ரிசர்வ் வங்கி 1.5. பில்லியன் டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது.

இலங்கையின் ரயில்வே திட்டத்திற்கு 350 பில்லியன் டொலர்களை இந்தியா வழங்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அணு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது இரு நாடுகளின் பொறுப்பாகும்.

இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதனை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். இலங்கை – இந்திய உறவிற்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்.

இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு முதல் வெளிநாட்டு விஜயமாக வருகை தந்தமை பெருமை அளிக்கின்றது. நாளை தலைமன்னாருக்கு விஜயம் செய்ய உள்ளேன்.

இந்தியாவின் தேசிய கவிஞரான சுப்ரமணியபாரதி சிங்கள தீவினுக்கோர் பலம் அமைப்போம் என படினார் சமய, மொழி, கலாசாரம் போன்றவற்றால், இந்தியாவுக்கு இலங்கைக்கும் நெருக்கமான நீடித்த உறவுகள் இருந்து வருகிறது. என தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

11 13.3.20 13.3.21 13.3.22

பகீரதி விடுதலை பிணையில் : வெளிநாடு செல்லத் தடை!!

bakeerathi

கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என கருதப்படும் முருகேசு பகீரதி கொழும்பு நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதி தனது எட்டு வயது மகளுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஆனால் அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதன்படி பகீரதியை 2 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டார். அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் தான் வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை செல்லுமாறு நீதவான் பணித்துள்ளார்.

2005ம் ஆண்டில் பிரான்ஸ் சென்றிருந்த பகீரதி, தனது 8 வயது மகளுடன் இலங்கை வந்து கிளிநொச்சியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாத விடுமுறையை கழித்துவிட்டு, பிரான்ஸ் திரும்பும் வழியிலேயே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

பங்களாதேஷுடன் போராடி வென்றது நியூசிலாந்து அணி : காலிறுதியில் இந்திய அணியை சந்திக்கும் பங்களாதேஷ்!!

NZ

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இன்று இடம்பெற்ற ஏ பிரிவு 37வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை 3 விக்கெட்களால் போராடி வென்றுள்ளது.

ஹெமில்டன் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஸ் சார்பில் கடந்த இங்கிலாந்து அணியுடனான போட்டியில் சதம் அடித்த மஹுமுல்லா இப்போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்களைப் பெற்றார். சௌமிய சர்கார் 51 ஓட்டங்களையும் சபிர் ரஹிம் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் போல்ட், அன்டர்ஸன், எலைட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு 289 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் சிறப்பாக ஆடியபோதும் இடைநடுவில் விக்கெட்டுக்களை பறிகொடுத்ததால் போராட்டத்திற்கு மத்தியில் 48.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டிது.

நியூசிலாந்து சார்பில் மார்டின் கப்டில் 105 ஓட்டங்களையும் ரொஸ் டெய்லர் 56 ஓட்டங்களையும் பெற்றனர். இதன்படி நியூசிலாந்து அணி இந்த உலகக் கிண்ணத்தில் தொடர்ச்சியான தமது ஆறாவது வெற்றியை பதிவு செய்து ஏ பிரிவில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

வவுனியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியினர் பங்கேற்கவில்லை : மக்கள் கவலை!!

Capture

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி பாதிக்கப்பட்ட மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வீட்டுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை கண்டித்தும் வீட்டுத் திட்டம் கோரியும் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்றைய தினம் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை நடத்தியிருந்தனர்.

இதில் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகார்களும் கலந்து குரல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வவுனியா மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் தமது ஆர்ப்பாட்டத்திற்கும் தமது நியாயமான கோரிக்கைகளுக்கும் வலுச் சேர்க்கும் வகையில் கலந்து கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் நடைபெறும் விழாக்களில் வலம் வரும் இவர்கள் மக்கள் நலன்சார் போராட்டங்களில் கலந்து கொள்ளாமை வருத்தமளிக்கின்றது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, வவுனியாவில் இறுதியாக நடைபெற்ற காணாமல் போனோர் உறவுகளின் ஆர்ப்பாட்டத்திலும் தமிழரசுக் கட்சி உறுப்பினர் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணை மூடியதும் உறங்க வேண்டுமா : இவற்றை செய்து பாருங்கள்!!

Spleeping

எதை எடுத்தாலும் அதில் வேகத்தை எதிர்பார்க்கும் நமது எண்ணத்தின் வெளிப்பாடினால் ஏனோ, தூக்கம் மட்டும் படுத்ததும் வேகமாக வருவதில்லை. பலருக்கு வருவதேயில்லை.

அப்போது உடனே நமது ஆட்கள் மருத்துவரை அணுகி ஏதோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை போல இதற்கு ஏதாவது மருந்து உண்டா, சிகிச்சை உண்டா என கேட்பார்கள். இதில் தூங்குவதற்கு அதை சாப்பிடுங்கள், இதை சாப்பிடாதீர்கள் என இணையத்தில் உலாவும் போலி வல்லுனர்கள் வேறு அவர்களது விரலுக்கு வந்ததை எல்லாம் எழுதிவிடுவார்கள்.

அதை படித்துவிட்டு உள்ளூர் சந்தையில் கிடைக்காததை இணையத்தில் வாங்கி சாப்பிடுவார்கள் அதனால் ஒரு பயனும் இல்லை என்பதை யாரும் அவர்களுக்கு சொல்வதில்லை. தூங்கும் நிலையை வைத்தே சந்தோஷமான தம்பதிகளாக என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

உண்மையிலேயே தூக்கம் என்பது நமது மனதும், மூளையும் சார்ந்த விஷயம். உங்களுக்கு எவ்வளவு மன நிம்மதி இருக்கிறதோ, அந்த அளவு தான் தூக்கம் வரும். என்ன உணவும் சாப்பிட்டாலும், உங்கள் மனநிலை சரியில்லை எனில் தூக்கம் வராது என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு நல்ல தூக்கம் வேண்டுமெனில் உங்கள் மனநிலையும், சுற்றுப்புற சூழ்நிலையும் அமைதியாக இருந்தாலே போதும், தூக்கம் கண்ணை மூடியதுமே உங்களை தொற்றிக் கொள்ளும்.

உடல்நிலை

உங்கள் உடல் இறுக்கமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். யோகா செய்வது உங்கள் மனம் மற்றும் உடலை இலகுவாக செய்யும். தூங்குவதற்கு முன் இதமான நீரில் குளித்துவிட்டு வந்து படுத்தால் கூட நல்லது, இதுவும் உங்களது உடலை இறுக்கமின்றி இருக்க உதவும்.

எழுதுங்கள்

நீங்கள் இரவு நேரங்களில் ஏதாவது எழுதிக் கொண்டிருந்தால் தூக்கம் வந்துவிடுமாம். மாணவர்கள் மட்டுமல்ல சில சமயம் கவிஞர்கள் கூட எழுதிக் கொண்டிருக்கும் போதே உறங்கிவிடுவார்களாம். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்.

வெப்பநிலை

நீங்கள் தூங்கும் அறையின் வெப்பநிலையை சரியான அளவில் வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் சூடாகவும் இருக்ககூடாது மற்றும் மிகவும் குளிராகவும் இருக்கக்கூடாது. ஏனெனில் இது உங்கள் உடல் பாகங்களை தொந்தரவு செய்யும். அதனால் உங்கள் அறையின் தட்பவெட்ப நிலையை சரியான அளவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மன அமைதி

இன்றைய நாளில் உங்களுக்கு மனநிலை சந்தோசமாக இருந்தாலும் சரி, வேதனையாக இருந்தாலும் சரி தூங்கும் முன் அனைத்தையும் மறந்து ரிலாக்ஸாக இருங்கள். யோகா செய்வதனால் உங்கள் மனம் விரைவில் ரிலாக்ஸ் ஆகும். இது உங்களுக்கு நல்ல உறக்கத்தை தரும்.

கீதை கூறும் மற்றவர்களிடம் சொல்லக்கூடாத 9 விடயங்கள்!!

Keethai

மற்றவர்களிடம் சொல்லக் கூடாதவை என்று ஒன்பது விடயங்களை கீதாபதோசம் சொல்கிறது. அவை..

1. ஒருவனுருடைய வயது
2. வருமானம் அல்லது செல்வம்
3. தனது குடும்பத்தில் ஏற்படும் தனிப்பட்ட சோகங்கள்
4. தனக்கு வந்த அதிர்ஷ்டம்
5. உடலில் ஏற்பட்டுள்ள நோய்
6. பிறரை வெட்கப்பட வைக்கும் தகவல்கள்
7. செய்த தர்மம்
8. மேற்கொள்ளும் தவம்
9. தனக்குள்ள வறுமை

இவற்றையெல்லாம் மற்றவர்களிடம் கூறுவதை விட இறப்பதே மேல் என்று கீதை கூறுகிறது .

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!! (படங்கள்)

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று வியாழக்கிழமை (12.03) பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பப்பாடசாலை அதிபர் திருமதி.கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை நிகழ்ச்சி , பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

இந் நிகழ்வில் அண்மையில் ஓய்வுபெற்ற முன்னாள் வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.பராசக்தி கணேசலிங்கம் அவர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அவர் சமூகமளிக்க முடியவில்லை, அவர் சார்பாக முன்னாள் இலங்கை வங்கி நகர் கிளை முகாமையாளர் திரு.றோய் ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.பராசக்தி கணேசலிங்கம், கௌரவ விருந்தினர்களாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.எம்.பி.நடராஜ், முன்னாள் நகரசபை உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் செல்வி.உமா இராசையா, உதவிக்கல்விப்பணிப்பாளர் ஜானப் சுபைர், நகரசபை செயலாளர் திரு.க.சத்தியசீலன் மற்றும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

IMG_7623 IMG_7624 IMG_7625 IMG_7626 IMG_7631 IMG_7632 IMG_7637 IMG_7648 IMG_7654 IMG_7662 IMG_7664 IMG_7680 IMG_7684 IMG_7687

வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் வெள்ளி விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி!!(படங்கள்)

பாடசாலை அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் நிதியுதவி நேற்று வியாழக்கிழமை (12.03) வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிதியுதவியை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கனடாக் கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிதியுதவியை வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் பாடசாலை அதிபர் திருமதி.பத்மநாதன் அவர்களிடம் கையளித்தார். தொடர்ந்து மாணவர்களின் கல்வி நிலை, கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள், பாடசாலையின் பௌதீக வளங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவரும் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பாடசாலை அதிபர், ஆசரியர்கள், மாணவர்கள், கிராம முக்கியஸ்தர் துரை, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் ஸ்ரீ.கேசவன், உறுப்பினர் ர.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG_7587 IMG_7588 IMG_7589 IMG_7600 IMG_7606 IMG_7607 IMG_7608 IMG_7611 IMG_7613 IMG_7618

இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை 5.30அளவில் இலங்கையை வந்தடைந்தார். அவரை ஏற்றி வந்த விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. பிரதமர் மோடியை இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார்.

இந்தநிலையில் மோடி, பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்படுகிறார்.
கொழும்பில் இன்று அவர் முற்பகலில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.

இதனையடுத்து மாலையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
அத்துடன் பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதனையடுத்து நாளை அவர் வடக்குக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

1987 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை வந்துள்ள முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

1 2 3

வவுனியா செட்டிகுளம் கல்வி பேரவைக்கு தமிழ் விருட்சம் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கிய இளந்தளிர்!!(படங்கள்)

வவுனியா செட்டிகுளம் பிரதேச கல்வி பேரவைக்கு தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் செட்டிகுளம் இணைப்பாளர் தயானின் வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி, சமூக அறவாரியம் வழங்கிய ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் நேற்று (12.03) செட்டிகுளம் பிரதேசசெயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் ந.கமலதாசனிடம் தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), உறுப்பினர் சர்மிலன் ஆகியோரால் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் திரு ந.கமலதாசன் எமது செட்டிகுளம் பிரதேசத்தில் வறுமையின் காரணமாக கற்றல் உபகரணங்களை வாங்க முடியாமல் பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களை அதிபர்கள் ஊடாக இனம் கண்டு அவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி கல்வி கற்க வைப்பதே எமது கல்வி பேரவையும் குறிக்கோள் ஆகும். அதன் நிமித்தம் உங்கள் உதவி மிக சிறந்தது அதற்காக தமிழ் விருட்சம் ஆகிய உங்களுக்கும், வழங்கிய இளந்தளிர் கல்வி, சமூக அறவாரியதுக்கும் எமது செட்டிகுளம் கல்வி பேரவையினதும்,இணைதலைவர் ஆகிய எனதும் மனமார்ந்த நன்றிகள் என்றார்.

DSCN5110 DSCN5114 DSCN5115 DSCN5117 DSCN5119 DSCN5122 DSCN5124

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின்  வருடாந்த பரிசளிப்பு விழா -2015(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின்  வருடாந்த பரிசளிப்பு வைபவம் 2012இல்  உயர்தரத்தை நிறைவு செய்த மாணவர்களின் அனுசரணையில் இன்று(12.03.2015 வியாழக்கிழமை ) காலை கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் அதிபர் திருமதி.ஜீ.நடராசா தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய பரிசளிப்பு வைபவத்தில் வன்னிபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பிரதம விருந்தினராகவும் எஸ் .அரியரட்ணம் (அதிபர் கொழும்பு சென்மேரீஸ் கல்லூரி )சிறப்பு விருந்தினராகவும் வவுனியா இந்துக்கலூரியில் சேவையாற்றி ஓய்வுபெற்ற  ஆசிரியைகளான திருமதி செ .பரமசிவராஜா மற்றும் திருமதி.எம்.ஐ.செபஸ்டியாம்பிள்ளை ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். கல்வியில் சிறப்பான பெறுபேறுகளை பெற்றமாணவர்கள் மற்றும் விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்த மாணவர்களும் இன்றையதினம் பரிசுகள் வழங்கி கௌரவிக்கபட்டனர்.

11043245_928236307221220_422984796243882415_n 11042953_928268980551286_2206439336565050667_n 11057458_928234840554700_7683153318992933977_n 11058484_928250830553101_9212585678667841084_n 11070515_928235983887919_8767273328869085705_n

10690019_928235373887980_1129256527460745521_n 10403007_928295933881924_5886931110471913040_n 1558559_928234737221377_6789182226528705276_n 1510916_928295637215287_7995898141362047655_n 19305_928250703886447_5335426886925507849_n 14216_928235420554642_583982660424932234_n