யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி வடமாகாண அமைச்சா்களைச் சந்தித்து சம்பிரதாயபூா்வமாக மாத்திரமே கலந்துரையாடியதாகவும்,
இதனால் தமது பிரச்சினைகளை முழுமையாக எடுத்துக் கூற முடியவில்லை எனவும் வடமாகாண விவசாய அமைச்சா் பொ.ஐங்கரநேசன் தொிவித்தாா்.
யாழ் பொது நுாலக கேட்போா் கூடத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் அதற்கான எதிா்பாா்ப்புக்களுடன் அமைச்சா்கள் சென்றிருந்ததாகவும், தமது கோாிக்கைகளை முன் வைத்து கலந்துரையாடுவதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் போதாததனால் தமது கோாிக்கைகளை மகஜராக பிரதமா் மோடியிடம் கையளித்ததாகவும் தொிவித்தாா்.
மகஜரைப் பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமா் தமிழ் மக்கள் நலன் தொடா்பில் தான் மேலும் அக்கறை செலுத்துவதாக தொிவித்தாா் என அமைச்சா் ஐங்கரநேசன் மேலும் தொிவித்தாா்.
பிரித்தானியாவில் இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரித்தானியாவின் மன்செஸ்ட்டர் நகரில் ஜெரிமி ஓகெட்ச்(30) என்ற நபர் மருந்துக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளான். கடந்த 2013ம் ஆண்டு தனது வீட்டிற்கு அருகில் வசித்த வந்த 2 வயது குழந்தையை அவன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான்.
மருந்துக்கடை வைத்திருந்ததால் அவனிடன் ஏராளமான வயாகரா மாத்திரைகள் இருந்துள்ளது. அதில் ஒன்றை விழுங்கிய பிறகு, அழைத்து வந்திருந்த பிஞ்சு குழந்தையை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான்.
சுமார் 55 நிமிடங்கள் குழந்தையை சித்ரவதை செய்த அவன் அதை ஒரு கமராவில் வீடியோவாக பதிவு செய்துள்ளான்.
இந்நிலையில், அவனது வீட்டிற்கு வந்த அவனது காதலி, அவன் அறையில் இல்லாதபோது கணனியில் பதிவாகியிருந்த அந்த காட்சிகளை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை பொலிசாருக்கு தெரியபடுத்தியதும் இக் கொடூரனை பொலிசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த வழக்கறிஞர்கள், நீதிபதி அந்த கொடூர வீடியோவை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து நீதிபதி ஹிலாரி மேன்லிக்கு அந்த வீடியோ போட்டு காட்டப்பட்டது.
வீடியோ முழுவதையும் பார்த்த நீதிபதி கண் கலங்கி மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளார். மேலும் இதுபோன்ற ஒரு கொடூரத்தை தான் இதுவரை பார்த்தது இல்லை என மன வேதனையுடன் கூறியுள்ளார்
தனக்கு என்ன நடக்கிறது என்பதை கூட புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ள அந்த குழந்தையை கொடூரமாக பாலியல் சித்ரவதை செய்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆகிறது எனக்கூறிய நீதிபதி குற்றவாளிக்கு 15 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மென்பொருட்களைத் தயாரிப்பதற்கான Tools, Application Programming Interfaces (APIs), மற்றும் தொழில்நுட்ப வளங்களை கூகுள் நிறுவனம் வழங்கி வந்தது.
2006ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவையை தற்போது முற்றிலுமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இம்மாதம் 12ம் திகதி முதல் புதிய திட்டம் ஒன்றில் மும்முரமாக களமிறங்கியுள்ளதன் காரணமாக Google Code சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி முதல் இச்சேவை நிறுத்தப்படவுள்ளது.
16 வயது பாடசாலை மாணவி வவுனியா, கனகராயன்குளத்தில் குழுவாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு காயமடைந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஊடக செய்திகள், இணையத்தள மனு என்பன இந்த சம்பவம் தொடர்பாக சுட்டிக்காட்டியதை தொடர்ந்து அதிகாரிகள் சம்பவம் பற்றிய விசாரணை செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
இது குறித்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் கருத்திட்டுள்ள சிறுவர் நல விவகார ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மற்றும் அதிகார சபையின் பொலிஸ் அதிகாரி ஆகியோர் சம்பவம் குறித்து ஆராய மாங்குளம் பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அவர்கள், சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாலியல் வல்லுறவு காரணமாக சிறுமி உளவியல் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தாக மருத்துவர் கூறியதாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கிய மாணவியின் பாட்டி தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கு பின்னரான பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என ராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பொலிஸார் வழங்கிய அறிக்கையில் மரணம் இயற்கையான மரணம் என கூறப்பட்டிருந்தது. மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. மேலதிக விசாரணைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
கனகராயன்குளம் பொலிஸார் நேற்று நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததுடன், உடலை கொழும்புக்கு அனுப்பி முழுமையான பிரேத பரிசோதனைகளை நடத்தி, மார்ச் மாதம் 30 ஆம் திகதி அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம், பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
வவுனியா கலைஞர்களின் முயற்சியில் “பள்ளிப் பட்டாம் பூச்சிகள்” எனும் பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.
புவிகரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள இப் பாடலுக்கு விமல்ராஜ் இசையமைத்துள்ளார், உதயரூபன் பாடியுள்ள இப் பாடல் கலிஸ்ரஸ்ஸின் ஒலிப்பதிவிலும், துசியந்தனின் ஒளித்தொகுப்பிலும் வெளிவரவுள்ளது பாடலுக்கான வரிகளை புவிகரன் எழுதியுள்ளார்.
வவுனியா கலைஞர்கள் மேற்கொண்டுள்ள இம் முயற்சி வெற்றிபெற வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
யாழ் நூலகத்தில் யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதன்போது அவர் கூறியதாவது,
யாழ்ப்பாணம் புதிய அடையாளத்தை காட்டுகின்றது. இலங்கையும் இந்தியாவும் பௌதீகமான தொடர்புகள் மட்டுமின்றி, கலாச்சாசர ரீதியான விடயங்களிலும் ஒன்றுபட்டுள்ளன என்பதை எல்லோரும் அறிவார்கள்.
யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்திற்கான நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். குறித்த காலப்பகுதிக்குள் யாழ் கலாசார நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.
யாழில் நிர்மாணித்து கொடுக்கப்படும் கலாச்சார நிலையம் மிகவும் புராதன நுட்பம் வாய்ந்த கலாச்சார விடயங்களை அடையாளப்படுத்த போகிறது.
யாழ்ப்பாணத்தில் இருந்த நூலகம் உலகத்தின் மிகப் பெரிய நூலகமாக இருந்துடன் அதில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன.
பின்னாளில் அது எரிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட புத்தங்களை நாங்கள் வழங்குவோம். மிகவும் பிரசித்தமான மற்றும் முக்கியமான புத்தகங்களை வழங்குவோம்.
ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய சகோதரத்துவம், சொந்த அர்ப்பணிப்பு என்பன தேவை. இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும், நான் என்றும் உங்களுடன் இருப்பேன் என மோடி கூறினார்.
வடமாகாணத்திற்கு இன்று விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வுகளை அடுத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்றது.
இலங்கையிலிருந்து டுபாய் நோக்கிப் பயணித்த விமானத்தில் 13 வயது சிறுமி மீது பாலியல் குற்றம் புரிந்த வர்த்தகர் ஒருவருக்கு (45) ஓராண்டு காலம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்ற குற்றம் தொடர்பில் விசாரணைகளின் பின்னர் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து பயணித்துள்ள வர்த்தகருக்கு அருகில் அமர்ந்து குறித்த சிறுமி பயணித்துள்ளார். விமானத்தில் விளக்குகள் அணைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் வர்த்தகர் சிறுமி மீது பாலியல் குற்றம் புரிய முயற்சித்துள்ளார். உடனடியாக சிறுமி விமான பணியாளர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.
இதன்போது சிறுமியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ள நபர் மன்னிப்புக் கோரியுள்ளார். எனினும் மீண்டும் விளக்குகள் அணைக்கப்பட்டபோது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமி சத்தமிட்டு பயணிகள் அனைவருக்கும் இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
விமானம் டுபாயை சென்றடைந்தவுடன் வர்த்தகரை கைது செய்த அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ம் திகதிக்கு பின்னர் இந்தியா செல்லும் இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு வருகைதரு விசா (ஒன் அரைவல் விசா) வழங்கப்படும் என இலங்கை வந்த பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி சிறிசேனவுடனான இருதரப்பு சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்தார். இந்திய பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்..
மக்களே எமது உறவின் இதயம். எனவே இரண்டு நாடுகளுக்கிடையில் மக்கள் தொடர்பை அதிகரிப்பதற்கு பல தீர்மானங்களை நாம் எடுத்துள்ளோம்.
சுற்றுலாத்துறை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த வகையில் இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் சுற்றுலாப்பயணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ம் திகதிக்கு பின்னர் இந்திய விமான நிலையத்துக்கு வந்த பின்னர் வீசா பெறுதல் சலுகையை ( ஒன் அரைவல் வீசா) அனுபவிக்கலாம்.
அதாவது இலங்கையிலிருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் இந்திய விமான நிலையத்திலிருந்து விசா பெற்றுக்கொண்டால் போதுமானது.
இதனை எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டு காலத்திலிருந்து அமுல்படுத்தவுள்ளோம்.
இந்தியாவின் எயார் இந்தியா விமான நிலையம் கொழும்புக்கும், புதுடில்லிக்குமிடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
விரைவில் இலங்கையில் இந்தியத் திருவிழா ஒன்றை நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அதில் பௌத்த பாரம்பரிய விடயங்கள் உள்ளடக்கியிருக்கும் என்றார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையை முன்னிட்டு யாழ் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று காலை 10 மணியளவில் யாழ் நகரில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வலியுறுத்தியே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டமானது யாழ் நகரிலே ஆரம்பமாகி நடை பவனியாக இந்தியத் துணைத்தூதரகத்தைச் சென்றடைந்தது. போராட்டகாரர்களால் இந்தியத் துணைத்தூதரகத்தில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அவ் மகஜரிலே குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தங்களின் வருகையின் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு துன்பங்களுக்கு விடிவு கிட்டுமென்று நாம் நம்புகின்றோம்.
இலங்கை அரசாங்கத்திற்கு தாங்கள் அழுத்தம் கொடுத்து தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் அத்துடன் தாங்கள் நேரடி கவனம் எடுத்து தீர்க்க வேண்டிய பிரச்சனைகளும் உண்டு என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகின்றோம்.
நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் தீர்க்க்படாத பிரச்சினையாக தமிழ் மக்களின் அரசியல்ப் பிரச்சினையாக இருந்து வருகின்றது.
இவ்அரசியல்ப் பிரச்சினை காரணமாக நாட்டில் எற்பட்ட போர்ச்சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் அந்த போர்ச்சூழலுக்குள்ளும் பொருளாதார நெருக்கடிக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை தாங்கள் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதே தங்களின் வருகையை முன்னிட்டு நாம் எதிர்பார்க்கும் விடயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் மோடி தலைமன்னாருக்கு விஜயம் செய்து, மன்னார்- தலைமன்னாருக்கு இடையிலான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் இன்று காலை வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
அதற்கமைய தலைமன்னார் பகுதிக்கு இந்திய விமானப்படையினரின் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த மோடி தலைமன்னார் ரயில் நிலையத்தை திறந்து வைத்ததுடன் மடுவுக்கான ரயில் சேவையினையும் ஆரம்பித்து வைத்துள்ளார். தலைமன்னாரில் மோடிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிம்பாவே அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கிண்ண போட்டித்தொடரின் 39வது லீக் போட்டியில் இன்று இந்தியா- சிம்பாவே அணிகள் ஒக்லாந்தில் விளையாடியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்களை குவித்தது.
சிம்பாவே அணி சார்பாக பிரைண்டன் டைலர் 110 பந்துகளில் 138 ஓட்டங்களையும் வில்லியம்ஸ் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்திய அணி சார்பாக முகமட் சமி, உமேஷ் யாதவ், மொஹிட் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.
சற்று கடின இலக்கை நோக்கி களமிங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (16), ஷிகர் தவான் (4) மோசமான தொடக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த ரஹானே (19), விராத் கோலி (38) ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 92ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது
இன் நிலையில் 5ம் விக்கட்டுக்கு ஜோடி சேர்ந்த சுரேஷ் ரைனா மற்றும் டோனி பிரிக்கப்படாத 196 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தனர்.
48.4 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கட்டுகளை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக சுரேஷ் ரைனா தெரிவுசெய்யப்பட்டார்.
இந்திய அணி விளையாடிய 6 போட்டிகளிலும் பெற்றிபெற்று ப குழுவில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா சிறையில் இருந்து மேலும் 43 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 22ம் திகதி நடுக்கடலில் மீன் பிடித்த 86 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. 86 மீனவர்களில் 29 பேர் நாகையைச் சேர்ந்தவர்கள். 57 பேர் காரைக்காலைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டனர். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 86 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார்.
ஜனாதிபதியின் உத்தரவு மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட பகுதியின் அனுப்பப்பட்டது.இதையடுத்து ஏற்கனவே யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 43 மீனவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மேலும் 43 மீனவர்களையும் விடுதலை செய்ய திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.
விடுதலையான 86 மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியை தமிழகத்தின் பிரபல இணையத்தளங்கள் பிரசுரித்துள்ளன.
வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையட்டுபோட்டி நேற்றைய தினம் 11.03.2015 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் கல்லூரியின் மைதானத்தில் அதிபர் திரேசம்மா சில்வாவின் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபர் எஸ்.தர்மரட்ணம் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டார் .அத்துடன் பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள் பழையமாணவர் சங்கத்தினர் கல்விவலய உத்தியோகத்தர்கள் மற்றும் அயல்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு துறை அலுவலகர்கள் பெற்றோர் என பல்வேறு பட்ட அமைப்பினரும் கலந்துகொண்டனர்.