வவுனியாவில் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து செவிப்புலனற்றோர் விழிப்புணர்வுப் பேரணி!!(படங்கள்)

ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து செவிப்புலனற்றோர் இன்று (12.03) வவுனியாவில் விழிப்புணர்வு பேரணியொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது பேச்சு மற்றும் கேட்டல் சிரமமுடைய மாணவர்கள் சாதாரண பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தரக் கல்வியை கற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளல், அரச வேலைவாய்ப்பில் விசேட தேவையுடையோர் உள்வாங்கப்பட வேண்டும், பொது வைத்தியசாலை, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் ஆகியவற்றில் சைகை மொழி தெரிந்தவர்கள் மொழிபெயர்ப்பாளர்களாக பணிக்கு அமர்த்தப்படவேண்டும்,

பொருத்தமான விசேட தேவைக்குட்பட்டோருக்கு பொருத்தமான சாரதி அனுமதி பத்திரத்தை வழங்குதல் வேண்டும், தேவைக்குட்பட்டோருக்கான 3000 ரூபா கொடுப்பனவை அனைத்து விசேட தேவையுடையோருக்கும் வழங்குதல் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்னிருந்து பேரணியாக சென்றவர்கள், இது குறித்த மகஜரை வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.

இதனையடுத்து வவுனியா அரசாங்க அதிபர் சாரதி அனுமதிப்பத்திர முறைமைக்கு தற்போது தீர்வினை பெற முடியாது எனவும், ஏனைய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்திருந்ததுடன் பேரணியில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

11 12 151314

வவுனியாவில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்!!(படங்கள்)

உலக சிறுநீரக தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று (12.03) வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து ஆரம்பமான ஊர்வலம், வவுனியா நகரசபை மண்டபம் வரை சென்று அங்கு விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் நிறைவு பெற்றிருந்தது. இதன்போது சிறுநீரக நோய்கள் ஏற்படுவதற்கான காரணிகளை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கியவாறு மக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றிருந்தனர்.

குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி, வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, வவுனியா நகரசபை செயலாளர் க.சத்திசீலன் உட்பட பாடசாலை மாணவர்கள், சுகாதார திணைக்களம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தேசிய கல்வியியல் கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

1 2 3 4

தென்னாபிரிக்க அணி 146 ஓட்டங்களால் வெற்றி!!

SA

உலகக் கிண்ணப் போட்டியில் 36வது லீக் ஆட்டம் தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் நகரில் நடைபெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தென்னாபிரிக்காவை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 341 ஓட்டங்களை பெற்றது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் டி வில்லர்ஸ் 99 ஓட்டங்களையும் பார்ஹான் பெஹர்டீன் ஆட்டழிழக்காது 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்படி 342 என்ற கடினமான இலக்குடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் களம் இறங்கியது. வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராஜ்ஜியம் சார்பாக பட்டில் ஆட்டழிழக்காது 57 ஓட்டங்களை பெற்றனர்.

நிறைவில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் 47.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 195 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் தென்னாபிரிக்க அணி 146 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

குவைத்தில் உயிரிழந்த மட்டக்களப்பு யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை!!

குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) எனும் யுவதியே குவைத் உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த யுவதி கடந்த நான்கு மாதத்திற்கு முதல் குவைத் நாட்டிற்கு சென்றிருந்தார்.

இந்த யுவதியை காத்தான்குடியைச் சேர்ந்த உப முகவர் ஒருவரின் ஊடாக, கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் குவைத்துக்கு அனுப்பியிருந்தார்.

இந்த யுவதி கடந்த 01.03.2015 அன்று அவர் வேலை செய்த வீட்டில் உயிரிழந்துள்ளார்.
இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் இந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த யுவதியின் குடும்ப உறவினர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் அதன் அலுவலகத்திற்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்தே யுவதி உயிரிழந்தமை தெரியவந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த யுவதிக்கு நான்கு வயதுடைய குழந்தை உண்டு எனவும் இவரது கணவர் மரணித்து விட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

1 2

வினாயகர் வடிவில் அதிசய தேங்காய்!!

coconut

நாவிதன்வெளி 7 ஆம் கிரமத்தில் வசிக்கும் சிவசிறி ரி.சிவாக் குருக்களின் வீட்டு வழவுக்குள் இருந்த தென்னை மரத்தில் இருந்து நேற்று விழுந்த தேங்காய் வினாயகரின் உருவத்தினை ஒத்ததாக காணப்படுகின்றது.

இவ்வாறு தெய்வ உருவம் கொண்டு காணப்படும் குறித்த தேங்காய் பிரதேச மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுதோடு நூற்று கணக்கானோர் வந்து பார்வையிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கேலிக்கூத்தாகும் “கவிஞர்” பட்டங்கள்!!

Poem

தமிழ் இலக்கிய வரலாற்றில், சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த காலத்திலிருந்து இன்று வரை தமிழ் இலக்கியத்துறை பல்வேறு வடிவங்களில் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் கவிதைக்கென்று தனியிடமும் இருக்கிறது.

பேச்சு மொழிக் காலத்திலையே ஓரு வகை சந்த அசைவுகள் இருந்திருக்கென்பது ஆய்வுகளின் மூலம் நிருபிக்கப்பட்டிருக்கிறது. பின் வந்த எழுத்து மொழி வளர்ச்சியடையும் காலத்தில் இலக்கியமானது தனது முதல் வடிவமாக கவிதையினை எடுத்துக் கொண்டது என்கின்றனர்.

எனவே தமிழ் இலக்கியத் துறையின் ஆரம்ப வடிவம் கவிதையே. சங்கத்தமிழ் காலத்தில் கவிதை பாடிய பாணர்களே பின்னர் புலவர்களாகவும் கவிஞர்களாகவும் விளங்கியிருக்கின்றனர் என்கிறது ஓர் இலக்கிய ஆய்வு.

அக்காலத்தில் பொருள் தேட வேண்டிய தேவையும்.. வறுமையும்.. புகழின் மீதான விருப்பும்.. மன்னர்களை நல்வழிப்படுத்த வேண்டிய தேவையும் இருந்ததினால் புலவர்கள் அகம் மற்றும் புறம்சார் ஏராளமான இலக்கியங்களை படைத்திருக்கிறார்கள்.

இப்பண்புகள் காலம் கடந்தும் மருபியகாலம், சோழ மற்றும் நாயக்க காலங்கள் மட்டுமன்றி பின்வந்த காலங்களினூடே இன்றும் காணப்படுகின்றன. கவிஞர்களின் வறுமை மற்றும் சமூக சீர்ப்படுத்தல் கருத்துக்கள் என்பவற்றைக் கடந்து இன்று வெறும் புகழ்களுக்காக தங்களுக்குத் தாங்களே பல்வேறு பட்டங்களை இட்டு இலக்கியங்களை ஏனோ தானோவெனப் படைக்கும் போக்கே அதிகம் காணப்படுகிறது.

பட்டங்கள் விருதுகள் என்பவை சமூக அந்தஸ்துடையவை. அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்கள், துறை சார் பாண்டித்தேயமுடைய நபர்கள் அல்லது நிறுவனங்கள் என்பவற்றினாலையே அவை வழங்கப்படுவதுண்டு.

அப்படி வழங்கப்படும் பட்டங்களே செல்லுபடியாவதுடன் மரியாதைக்குரியதாகவும் கணிக்கப்படும். அதனை வைத்திருப்பவரும் பெறுமதியாகக் பார்க்கப்படுவார். பட்டங்களை வழங்கும் நபரோ அல்லது அமைப்போ சமூகரீதியில் ஒத்துவராத பட்சத்தில் அதனால் வழங்கப்படும் பட்டங்களும், நபர்களும் எள்ளி நகையாடப்படுவார்கள்.

இது ஒரு புறம் இருக்க நேற்றுப் பெய்த மழைக்கு வெளித்தெரிந்த நிறையக் காளான்கள், முகநூல் பக்கத்தில் தங்களுக்குத்தாங்களே ”கவிஞர்” எனவும் ”கவிதாயினி” எனவும் பட்டங்களை வைத்துக் கொண்டு உலாவுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

உண்மையில் கவிஞர் பட்டமென்பது.. கவித்துவமுடையவர்கள் மற்றும் கற்பனைத்திறன் உடையவர்களுக்கு, அவர்களின் அறிவு, ஆற்றல், அனுபவம் என்பவற்றைக் கருத்திற்கொண்டே வழங்கப்படுவதுண்டு. ஆனால் எவ்வளவுதான் கற்பனைத்திறன் இருந்தாலும் அவர்களால் ஆக்கபுர்வமான பல்துறைசார் படைப்புக்களும் படைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

அடிப்படையில் இலக்கியத்தை நேசிப்பதுடன் மற்றவரை மதிக்கத் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு பட்டம் பெறுபவன் அச்சமூகத்தை ஏதோ ஒரு வடிவத்தில் நெறிப்படுத்துபவனாகவே இருத்தல் வேண்டும்.

ஆனால் இங்கு நடப்பதோ வேறாக இருக்கிறது. தாமே ஓர் சமூக விமர்சனத்திற்கு உட்பட்டவர்களாக இருந்து கொண்டு, சமூக அந்தஸ்துடைய ”கவிஞர்” பட்டங்களை தமக்குத் தாமே வைத்துக் கொண்டு, இலக்கிய உலகில் கண்களை மூடிக்கொண்டு பால் குடிப்பதனைச் சுற்றம் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறது.

எம் தமிழ் இலக்கியப்பாதையில் எத்தனையோ கவிஞர்கள், எண்ணில்லா படைப்புக்களை வெளியிட்டும் படைத்தும் இருக்கின்றனர். ஆனால்அத்தனைபேரும் தங்களைத்தாங்களே கவிஞர்கள் என அழைத்தது இல்லை.

ஈழத்து இலக்கியப்பாதையில் எட்டுப் பத்துக் கோணத்தில் படைப்புக்களை வெளியிட்டு தேசிய விருதுகளைப் பெற்ற மூத்த எழுத்தாளர்கள் பலர், அங்கீகரிக்கப்பட்ட பட்டங்கள் இருந்தும் இன்று கூட தம்மைத்தாம் கவிஞர்கள் என அழைப்பதில்லை. தமது படைப்புக்களிற்கும் தமது வாழ்விற்குமிடையே இடைவெளியை அவர்கள் வைத்திருந்ததும் இல்லை.

அவ்வாறான நிறைகுடங்கள் எங்களுக்குள்ளேயே இருக்கும் போது, இந்த சில் வண்டுகள் ஆர்வக் கோளாறினாலும் அவசர புத்தியினாலும் செயற்படும் விதமானது ஒட்டுமொத்த கவிஞர் வட்டத்தினையும் கேலிக்குரியதாக மாற்றியிருக்கிறது.

கவிஞர் எனும் பதத்திற்குரிய பெறுமதியே அற்றுப்போயிருக்கிறது. இக் ”கிலுசுத்தனமான கவிஞர்” களை முகநூலில் ஏராளமாகக் காணலாம். அப்பொழுது மட்டுமல்ல இப்பொழுதும் கூட, பெயருக்காகவும் புகழுக்காகவும் பட்டங்களை இரந்து கேட்கும் நபர்களையும் காசு கொடுத்தாவது பட்டங்களைப் பெறவேண்டும் என நினைக்கும் நபர்களையும், நெறி தவறாத இலக்கிய உலகம் தூக்கி எறிந்தே வந்திருக்கிறது.

அப்படியானவர்களை தயங்காமல் விமர்சித்தே வந்திருக்கிறது. சில பட்டங்களை மீளப் பெற்றும் இருக்கிறது. அப்படியான ஓர் தூய இலக்கியப்பரப்பு இருக்கின்ற வேளை.. தங்களுக்குத் தாங்களே ”கவிஞர்” எனப் பட்டம் இட்டுக்கொள்ளும் தற்புகழ்ச்சிக்காரர்களை விட்டுவைக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

அண்மையில் வன்னியிலிருந்து பலர் ஆக்ரோஸமாக, வேகமாக வெடித்தெழுந்திருக்கிறார்கள். வன்னி என்பதற்கு ”வீரம்” என்றும் ”வணங்கா மண்” என்றும் பொருள் கொள்ளலாம். இதைவிட ”வதைபட்ட மண்” எனவும் பொருள் கொள்ளலாம். எனவே இவ் வன்னியின் நாமம் தாங்கி எழுதுகிறவர்கள் அதன் தன்மை கெடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிறு பிள்ளைத்தனமாக, கட்டுரைகளுக்கு ”சரித்திரம்” எனப் பெயரிட்டு சரித்திரத்தின் தன்மையை சிதைக்கவும் கூடாது. எனவே எந்த ஒரு விடயத்தினையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களுக்கே சொல்லிக் கொண்டிருக்க முடியும். ஏற்றுக் கொள்ளாதவிடத்து பொது வெளியே சிறந்ததாகும்.

நன்மை பயப்பின் நாலு பேருடன் பகைப்பது பெரிதல்ல. ஆகவே இக்கட்டுரை எவர் மனதையும் நோகடிப்பதற்காக வரையப்பட்டதல்ல. மாறாக விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் சமூகத்தாலேயே ஆரோக்கியமான படைப்புக்களை பிரசவிக்க முடியும் எனும் நப்பாசையினால் வரையப்பட்டதாகும்.

– தமிழின்பன்-

வவுனியா குருமன்காட்டில் நூதன முறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு!!

MC

வவுனியா, குருமன்காடு புகையிரத பாதையருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (10.03) இரவு மோட்டர் சைக்கிளை புகையிரத பாதையருகில் நிறுத்திவிட்டு சென்றவர் மீண்டும் வந்து பார்த்த போது அவ்விடத்தில் மோட்டர் சைக்கிளை காணவில்லை. சூட்சுமமான முறையில் பூட்டை உடைத்து குறித்த மோட்டர் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.

இதனையடுத்து நேற்றைய தினம் இது தொடர்பில் மோட்டர் சைக்கிள் உரிமையாளரால் தம்மிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

-தமிழ் CNN-

புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல்!

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகமான புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் இரண்டு பேர் அலுவலகத்தின் மீது குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர். இந்தச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குண்டுகள் வீசப்பட்டமை தொடர்பாக சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அக்காணொயில் இருக்கும் நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சில தினங்களுக்கு முன், அத்தொலைக்காட்சி தாலி பெண்களைப் பெருமைப்படுத்துகிறதா அல்லது சிறுமைப்படுத்துகிறதா என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருந்தது.

இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என சில அமைப்புக்களை சேர்ந்தவர்கள் அந்த தொலைக்காட்சி அலுவலகத்தின் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று இருசக்கர வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்கள் 2 வெடி குண்டுகளை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கண்காணிப்புக் கமெராவில் பதிவாகியுள்ள காட்சியின்படி பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

1 2 3 4

மூன்று வேளையும் சாப்பிடும் நாம், எப்படி சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்!!

Eating

நாம் அன்றாடம் செய்யும் செயல்களின் ஒன்றுதான் சாப்பிடுவது. மூன்று வேளையும் சாப்பிடும் நாம், எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து சாப்பிடக் கற்றுக்கொள்வது நல்லது.

ஆனால் எப்படி சாப்பிட்டாலும், உணவு நன்றாக மெல்லப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம்.

சிலர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவர். இன்னும் சிலர் ஒவ்வொரு வேளையும் சுமார் முக்கால் மணி நேரம் சாப்பிடுவர். சைவ உணவை விரைவாக சாப்பிட்டு முடித்து விடலாம். அசைவ உணவு சாப்பிடும்போது கொஞ்சம் தாமதமாகத்தான் செய்யும்.

குறைந்தது சுமார் 5 நிமிடங்களும், கூடுதலாக சுமார் பதினைந்து நிமிடங்களும் சாப்பிடுவதற்காக ஒதுக்குவது நல்லது. ஐந்து நிமிடங்களுக்கு குறைவாகச் சாப்பிடுவது நல்லதல்ல. பதினைந்து நிமிடங்களுக்கு அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதும் நல்லதல்ல.

இரவில் எட்டு மணிக்குள்ளாக சாப்பிட்டு முடித்துவிடுங்கள். அதுவும் மிதமாக உண்பதே நல்லது. எந்த உணவை நாம் சாப்பிட்டாலும் கடித்துச் சுவைத்து அதன்பின்தான் விழுங்க வேண்டும்.

நாம் சாப்பிடும் உணவு சமிபாடு ஆவதற்கு வாயிலுள்ள உமிழ்நீர் முக்கியப்பங்கு வகிக்கிறது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று சோடி உமிழ்நீர்ச் சுரப்பிகள் இருக்கின்றன.

அவை, பரோட்டிட் சுரப்பி, சப்மேன்டிபுலார் சுரப்பி, சப்லிங்குவல் சுரப்பி. இந்த மூன்று சுரப்பிகளிலிருந்தும் வரும் குழாய்கள் வாயினுள் வந்துதான் திறக்கின்றன.

பரோட்டிட் சுரப்பிதான் இந்த மூன்றில் மிகப் பெரியது. அடுத்ததாக உள்ள சப்மேன்டிபுலார் சுரப்பியே 70 சதவீத உமிழ்நீரை சுரக்கிறது. ஐந்து சதவீத உமிழ்நீர், மூன்றாவதாக உள்ள சப்லிங்குவல் சுரப்பியிலிருந்து சுரக்கிறது.

உணவைப் பார்த்தவுடன், உணவை நினைத்தவுடன், உணவின் வாசனையை நுகர்ந்தவுடன் உமிழ்நீர் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. ஒரு நாளைக்கு சுமார் 1 முதல் 2 லிட்டர் உமிழ் நீர் வாயிலிருந்து வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது. அதனால் நாம் உயிர் வாழ்வதற்காக உண்ணும் உணவை நன்றாக சாப்பிட வேண்டும்.

இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்!!

Mathews1

இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் உபாதை காரணமாக அவதிப்படுவதாக தெரிய வருகிறது.

ஸ்காட்லாந்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் விளாசிய மத்யூஸ் உபாதைக்குள்ளானார். இதனால் அவர் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. இது குறித்த மத்யூஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அணி நிர்வாகம் மற்றும் வைத்தியர்களின் அறிவுறுத்தலின் பேரில் களத்தடுப்பிற்கு வரவில்லை. காயத்தன்மையை அறிவதற்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அடுத்த சில தினங்களுக்கு காயம் எந்தளவுக்கு சரியாகிறது என்பதை பார்க்க வேண்டும். உலக கிண்ண தொடரிலிருந்து விலக வேண்டி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை’ என்றார்.

எனினும் மெத்யூஸ் கால்இறுதியில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. காயம் காரணமாக இலங்கை அணியில் இதுவரை 5 வீரர்கள் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதனைகளின் புதிய பெயர் சங்கக்கார : கிரிக்கெட் உலகமே வியந்து வாழ்த்தும் சாதனை நாயகன் பற்றிய சிறப்புப் பார்வை!!

Sangakkaara

நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம், ‘சங்கா கிண்ணம்’ என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம் தொடர்கின்றது.

4ஆவது தொடர்ச்சியான சதத்தை நேற்று ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெற்ற குமார் சங்கக்கார, உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டுமன்றி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே யாரும் நிகழ்த்தாத ஒரு சாதனையை, முழு கிரிக்கெட் உலகமே வியந்து வாழ்த்தும் அளவுக்குப் படைத்திருக்கிறார்.

3 சதங்களை சங்கக்கார பெற்றிருந்த போதே, அதற்கு முதல் பலர் அவ்வாறு 3 சதங்களைத் தொடர்ச்சியாகப் பெற்றிருந்தாலும், உலகக்கிண்ணத்தில் மூன்று சதங்களை அடுத்தடுத்துப் பெற்ற முதல்வராக சங்கக்கார பெருமை பெற்றார். நேற்று நான்காவது.

அத்துடன் ஒரே உலகக்கிண்ணத் தொடரில் 3 சதங்களைப் பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. மத்தியூ ஹெய்டன் (2007), சௌரவ் கங்குலி (2003), மார்க் வோ (1996) – 3
அதையும் சங்கக்கார முறியடித்துள்ளார்.

S5

சச்சின் டெண்டுல்கர் வசமுள்ள இன்னும் இரு உலகக்கிண்ண சாதனைகளும், சங்கக்காரவின் இந்த அபார ஓட்டக்குவிப்பால் உடையக்கூடிய அபாயத்தில் உள்ளன.

1.உலகக்கிண்ணங்களில் பெறப்பட்ட கூடிய சதங்கள். சச்சின் பெற்றது 6. சங்கக்கார இப்போது ரிக்கி பொன்டிங்கை சமன் செய்து 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

2.ஓர் உலகக்கிண்ணத் தொடரில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள். சச்சின் 2003 தொடரில் ​11 போட்டிகள், 11 இன்னிங்ஸ்களில் 673 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவருக்கு அடுத்தபடியாக 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவின் மத்தியூ ஹெய்டன் 11 போட்டிகள், 10 இன்னிங்ஸ்களில் 659 ஓட்டங்கள்.

இலங்கை சார்பாக இதுவரை ஓர் உலகக்கிண்ணத் தொடரில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்றவர் மஹேல ஜெயவர்த்தன. 2007ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில்​ 548 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

குமார் சங்கக்கார இப்போதைக்கு இந்த உலகக்கிண்ணத்தில் 6 போட்டிகள், 6 இன்னிங்ஸ்களில் 4 சதங்களோடு ​496 ஓட்டங்கள். இலங்கை இறுதிப் போட்டி வரை பயணித்தால், (இன்னும் மூன்று போட்டிகள் இருக்கும்) இது சாத்தியமாகும் வாய்ப்பு இருக்கிறது.

SSSSS

சங்கக்காரவும் மஹெலவும் உலக T20 வெற்றிகளோடு T20​ போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதைப் போல, உலகக்கிண்ண வெற்றியுடன் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுவதையும், ​சங்கக்கார சாதனைகளுடன் விடைபெறுவதையும் சாத்தியமாக்க இலங்கை அணி இன்னும் கடுமையாக போராடவேண்டும்.

எனினும் சச்சின் டெண்டுல்கரின் 96 அரைச் சதங்கள் என்ற சாதனை, சங்காவின் சதங்கள் குவிக்கும் அபார ஓட்டங்களால் முறியடிக்கப்பட முடியாமலே போகலாம்.
இப்போது சங்கக்கார பெற்றுள்ள 25 ஒருநாள் சதங்களுடன், இந்த வருடத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்துவகைப் போட்டிகளிலும் (​ஒருநாள் + டெஸ்ட் + T20​) ​1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் சங்கக்கார பெற்றுக்கொண்டார்.

நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 900 ஓட்டங்களுடன் அடுத்த இடத்தில் இருக்கிறார்.
விக்கெட் காப்பிலும் நேற்று சங்கா புதிய சாதனைகளைப் படைத்திருந்தார்.

500 ஆட்டமிழப்புக்களை செய்த முதல் வீரர் என்பதுடன், உலகக்கிண்ணத்தில் அதிக ஆட்டமிழப்புக்களை செய்திருந்த (52) அடம் கில்க்ரிஸ்ட்டின் சாதனையையும் தாண்டினார் சங்கக்கார.

SSSS

S6

இந்த சாதனை இப்போதைக்கு யாராலும் முறியடிக்கப்பட இயலாத ஒன்று என்பது உறுதி. பட்டியலைப் பாருங்கள் புரியும். நேற்றும் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதைத் தனதாக்கிய சங்கா, சர்வதேசப் போட்டிகளில் பெற்ற 50ஆவது போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதாகும்.

​அதேபோல அவு​ஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் சங்கக்காரா 2,038 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். வெளிநாட்டு வீரர் ஒருவர் ​அவுஸ்திரேலியாவில் ​பெற்ற மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள் இவையாகும்.

மேற்கிந்திய தீவுகளின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 3,067 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், விவ் ரிச்சர்ட்ஸ் 2,769 ஓட்டங்களுடன் 2ஆம் இடத்தில் உள்ள ​நிலையில் சங்கா ​இப்போது ​3ஆம் இடத்தைப்​ பெற்றுள்ளார்.

​இலங்கை அணியின் மூன்றாம் இலக்கம் என்றால் துடுப்பாட்ட முதுகெலும்பாகவே மாறி நிற்கும் சங்கா, இந்த உலகக்கிண்ணம் முழுவதுமே ​2ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக ஓட்ட மழையைப் பொழிவதன் முக்கிய காரணமாக நிற்கிறார்.

டில்ஷானுடன் 210, 195 மற்றும் 130, திரிமன்னேயுடன் 212 என்று இணைப்பாட்டங்களும் சங்காவின் சாதனைகள் பேசும்.

​நாடுகள் தாண்டி, வயது வரம்பு தாண்டி எல்லா கிரிக்கெட் ரசிகர் மட்டுமன்றி, முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களுமே ‘சங்கா, சங்கா’ என்று ஒரு புதிய கிரிக்கெட் கடவுளாகவே சங்கக்காரவை ​ஏற்றி உயர்த்தி வழிபட்டாலும், சங்கக்கார அதே பணிவோடு அணி உலகக்கிண்ணம் கைப்பற்றவேண்டும், அது தான் முதல் நோக்கம் என்கிறார்.

GilchristonSanga S3

ஆனால் ரசிகர்களின் ஆதங்கம் எல்லாம், இந்தத் தொடரே தனது இறுதி ஒருநாள் தொடர் என்று அறிவித்துள்ள சங்கக்கார ஏன் அந்த முடிவை மட்டும் மீள் பரிசீலனை செய்யக்கூடாது என்பதே.

ரசிகர்கள் மட்டுமன்றி இலங்கை அணித் தலைவர் மத்தியூசின் நிலையும் அதே… “காலில் விழாக்குறையாக சங்காவை ஓய்வு பெறவேண்டாம் என்று கேட்டுவிட்டேன்” என்று சொல்கிறார் அஞ்சலோ மத்தியூஸ்.

இன்னும் சங்கா குவிக்கவுள்ள ஓட்ட மழை, சதங்களின் குவியல், சாதனைகளின் பட்டியல்கள் என்பவற்றுக்காகவும் வாழ்த்துக்களோடு காத்திருப்போம்.
கூடவே 29ஆம் திகதி இறுதிப் போட்டியில் இலங்கை விளையாடுமா என்று பார்க்கவும், சங்கக்கார தனது ஓய்வு முடிவை இத்தனை ஆயிரம் ரசிகர்களுக்காகவும் தனது சக வீரர்களுக்காகவும் மறு பரிசீலனை செய்வாரா என்று அறிந்துகொள்ளவும்.

சங்கக்கார ஓய்வுபெறக்கூடாது என வலுக்கும் குரல்கள் : மண்டியிட்டுக் கேட்டுக்கொண்ட மத்யூஸ்!!

Sangakkaara

இலங்கை கிரிக்கெட் அணியில் பல சாதனைகளை படைத்ததுவரும் சங்கக்கார ஓய்வு பெறக்கூடாது என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சேலோ மத்யூஸ் மண்டியிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.

2015 உலகக்கிண்ண போட்டி முடிந்த பின்னர் சங்கக்கார ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர், விக்கெட் காப்பாளர் என்ற பெயர்களுக்கு சொந்தக்காரர் சங்கக்கார. கிரிக்கட்டில் இவர் படைத்த சாதனைகள் ஏராளம். மேலும், கிரிக்கெட் ஆட்டத்தின் சிறந்த தூதர் சங்கக்கார என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது ஓய்வு குறித்து இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் கூறியதாவது, நான் அவரிடம் மண்டியிட்டு கேட்டுக் கொள்கிறேன் ஓய்வு பெற வேண்டாம் என்று, ஆனாலும் அவரது ஆசையையும், முடிவையும் பெரிதும் மதிக்கிறேன். நாட்டுக்காக அவர் ஒவ்வொரு முறை சிறப்பாக ஆடியதற்கு அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தனது முடிவில் மாற்றமில்லை என்று கூறிய சங்கக்கார, “ஓய்வு பெறுவது என்பது ஒருவரது உடல்நிலை தொடர்பான விடயமல்ல. சரியான உணர்வு மற்றும் கால நேரமே ஓய்வை தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.

நடைபெற்றுவரும் உலகக் கிண்ண ஆட்டத்தில் சங்கக்காரவின் துடுப்பாட்டம் என்றுமில்லாதவாறு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக 100 ஓட்டங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் சங்கக்கார.

இன் நிலையில் சங்கக்கார ஓய்வுபெறக்கூடாது என்றும் தொடர்ந்து சில வருடங்களுக்கு விளையாட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சட்ட விரோதமாக தங்கியிருந்த 74 இந்திய பிரஜைகள் நாடு கடத்தல்!!

Indian

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர்கள் சிலரை நாடு கடத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

மத்துகம பிரதேச தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 74 பேரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.

சுற்றுலா விசாவில் வந்த இந்தியர்கள் சிலர் குறித்து தொழிற்சாலையில் பணியாற்றுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, விசாரணை நடத்திய குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவு குறித்த இந்தியர்களின் கடவுச்சீட்டுகளை பறித்துள்ளது.

பருப்புக்குள் மறைந்த இளைஞன் பரிதாபமாக மரணம்!!

Dead

களனி – பட்டிவல பிரதேச தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் காணாமல் போயிருந்த 24 வயது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பருப்பு பிரித்தெடுக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

பருப்பு களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 90 அடி உயரமான தடுப்பு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்ததுடன் மற்றுமொருவர் பருப்புக்குள் மறைந்து காணாமல் போயிருந்தார்.

எனினும் இன்று (12.03) அதிகாலை குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 23க்கு பின்னர் தேர்தலுக்கு செல்வதற்கு ஐ.தே.க. தீர்மானம்!!

UNP

நடை­மு­றையில் இருந்­து­வரும் விகி­தா­சாரத் தேர்தல் முறை­மையின் பிர­கா­ரமே அடுத்து நடைபெற­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கும் முகம்­கொ­டுப்­பது என்றும், இதன்­படி ஏப்ரல் மாதம் 23ஆம் திக­திக்குப் பின்னர் பொதுத்­தேர்­த­லுக்கு செல்­வ­தென்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு நேற்றுப் புதன்­கி­ழமை ஏக­ம­ன­தாக தீர்­மானம் நிறை­வேற்­றி­யுள்­ளது.

100 நாள் வேலைத்திட்­டத்­திற்­கென ஏற்­ப­டுத்­தப்­பட்ட தேசிய அர­சாங்­கத்தை ஏப்ரல் மாதம் 23ஆம் திக­திக்குப் பின்­னரும் நீடிக்கச் செய்­வ­தற்கு நேற்­றைய செயற்­குழுக் கூட்­டத்தின் போது பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் இணக்கம் தெரி­விக்­க­வில்லை என்றும் தெரி­ய­வந்­துள்­ளது. நீண்­ட­நேர வாத விவா­தங்கள், கருத்துப் பரி­மா­று­தல்­க­ளுக்குப் பின்­னரே மேற்­கண்­ட­வாறு அனை­வ­ரி­னது இணக்­கப்­பாட்­டுடன் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­ட­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இதே­வேளை ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு கூட்டம் நிறை­வ­டைந்­ததன் பின்னர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­வித்த அக்­கட்­சியின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான அகி­ல­விராஜ் காரி­ய­வசம் செயற்­கு­ழுவின் தீர்­மா­னத்தை உறு­திப்­ப­டுத்­தினார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்டம் நேற்றுப் புதன்­கி­ழமை கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் தேசியத் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கூடி­யது. இதன்­போதே மேற்­படி தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. மேற்­படி கூட்­டத்தில் அடுத்து வரும் பொதுத் தேர்­தலை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது தொடர்­பான விட­யமே பிர­தான கருப்­பொ­ரு­ளாகக் கொண்டு நேற்று பேசப்­பட்­டுள்­ளது.

இதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட கட்­சியின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான அகி­ல­விராஜ் காரி­ய­வசம் மேலும் கூறு­கையில்,

அடுத்­த­தாக நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத் தேர்­த­லா­னது புதிய முறை­மையின் அதா­வது தொகு­தி­வாரி முறை­மையின் நடத்­தப்­பட வேண்­டு­மெனில் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்டும் என்றும் 100 நாள் வேலைத்­திட்­டத்­திற்­குள்­ளான காலப்­ப­குதி அதற்குப் போது­தா­ன­தல்ல என்றும் தேர்­தல்கள் ஆணை­யாளர் தெரி­வித்­துள்ளார்.

அவ­ரது கூற்று இன்­றைய (நேற்று) செயற்­குழுக் கூட்­டத்தில் விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­வ­தாயின் சில மாதங்கள் செல்­லலாம் என்றும் உட­ன­டி­யா­கவே அதனை மேற்­கொள்ள முடி­யாது என்­ப­தாலும் அடுத்து நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத் தேர்­தலை தற்­போது நடை­மு­றையில் இருந்­து­வரும் விகி­தா­சார முறை­மையின் பிர­கா­ரமே பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தென்றும் அதனை எதிர்­கொள்­வ­தென்றும் செயற்­கு­ழுவில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அது­மாத்­தி­ர­மன்றி தற்­போது இருந்து வரும் தேசிய அர­சாங்கம் 100 நாள் வேலைத்­திட்­டத்­திற்கு மாத்­தி­ரமே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே 100 நாட்­களின் பின்னர் நாம் தேர்­த­லுக்கு செல்ல வேண்­டிய கட்­டா­யத்தில் உள்ளோம். அந்த வகையில் நாம் ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­த­தன்­படி ஏப்ரல் மாதம் 23 ஆம் திக­தியின் பின்னர் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்­த­லுக்கு செல்­வ­தென்றும் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதன் பிர­காரம் ஏப்ரல் 23ஆம் திக­திக்குப் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்­கொள்­வ­தற்கு தயா­ரா­கி­யுள்­ளது.

சமுர்த்தி சலு­கைக்கு குழு நிய­மனம்

இதே­வேளை சமுர்த்தி பெறு­வோரின் எண்­ணிக்­கையை மேலும் அதி­க­ரிப்­ப­தற்­கான யோசனை முன்­வைக்­கப்­பட்­டது. அந்த யோசனை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதன் பிர­காரம் சமுர்த்தி பய­னா­ளர்கள் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­ப­தென்றும் அது தொடர்­பான வேலைத் திட்­டங்­களை விரை­வாக முன்­னெ­டுப்­பது என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
இதற்­கென விசேட குழுவும் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதன்படி அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் சமந்த கருணாரத்ன உள்ளிட்டோர் இக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

300 இலட்சம்

இது இவ்வாறிருக்க நாட்டின் வீதி அபிவிருத்தி செயற்றிட்டங்களை கருத்திற்கொண்டு ஒவ்வொரு தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுக்கும் தலா 300 இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

யுவனால், ஐஸ்வர்யா தனுஷிற்கு வந்த தலைவலி!!

Yuvan

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் எப்போதும் குறைவு தான். அந்த வகையில் ஐஸ்வர்யா தனுஷ் தான் இயக்கிய முதல் படமான 3 படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இவரின் அடுத்த படமான வை ராஜா வை ஏப்ரல் மாதல் வரவிருக்கிறது. இப்படம் முன்பே வரவேண்டியதாம். ஆனால், யுவன் பின்னணி இசையமைக்க நேரம் எடுத்து கொண்டதால் தான் இந்த தாமதமாம்.தற்போது ஏப்ரல் மாதத்தில் உத்தம வில்லன், நண்பேண்டா, ஓ காதல் கண்மணி ஆகிய பெரிய படங்கள் வருவது வை ராஜா வை குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.