நாரஹென்பிட்டியில் மீட்கப்பட்ட விமானம் யோஷித்தவினுடையதல்ல : நீதிமன்றம் தீர்ப்பு!!

Flight

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ஷவின் விமானம் என கூறி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் அவருடையதல்ல என உறுதியாகியுள்ளது.

குறித்த விமானத்தை விஜேவர்தனவின் மகள் அனோமா விஜேவர்தனவிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

யோசித்த ராஜபக்ச மற்றும் ரே.விஜேவர்தன ஆகியோரின் உரிமைகளுக்காக போராடிய சட்டதரணிகள் மற்றும் கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை ஆராயுமாறு உத்தரவிடப்பட்டுள்ளன.

குறித்த விமானம் ரே.விஜேவர்தனவினால் ஒன்றினைக்கப்பட்ட உற்பத்தி என்பது பரிசோனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவு சுட்டிகாட்டியுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பிறந்த குழந்தையை கொன்ற இலங்கை பெண்ணுக்கு மூன்று வருட சிறை!!

Jail

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பிறந்த குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் தண்டனை காலம் முடிந்த பின் பெண்ணை நாடு கடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்லப்பட்ட குழந்தையின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிறந்த குழந்தையை கொன்று பிளாஸ்டிக் பையில் திணித்து குப்பை பெட்டியில் வீசியதாக பெண்ணின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா சென்ற ஜீப் தீக்கிரையானது!!

Ranga

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா பயணித்த வாகனம் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளை – மாத்தளை வீதியில் நாவுல பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாது மரத்தில் மோதிய வாகனம் பின்னர் தீப்பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரங்காவிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தால்  வெற்றி!!

Ind

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று ஹேமில்டனில் நடைபெற்ற 34 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களம் இறங்கிய அயர்லாந்து அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களை பெற்றது.

அயர்லாந்து அணி சார்பாக ஓ ப்ரைன் 75 ஓட்டங்களையும் ஒர்டெர்பிஎல்ட் 67 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக முஹம்மட் ஷமி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 260 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான தவான் 100 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

36.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களை பெற்று இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

வவுனியா முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் பணிப்பு : சாரதிகள் விசனம்!!

auto

வவுனியாவில் உள்ள முச்சக்கரவண்டிகளின் சாரதிகளை நீளக்காற்சட்டை அணியுமாறு கோரி முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக முச்சக்கர வண்டியின் சாரதிகள் சிலர் எமது இணையத்திடம் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது வயது முதிர்ந்த சாரதிகள் மற்றும் தொடர்ச்சியாக வேட்டி சாரம் அணிந்து பழக்கபட்ட சாரதிகள் தம்மால் நீளக்காற்சட்டை அணிய முடியாது எனவும் அது தமக்கு பொருத்தமற்ற ஆடைவகை என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சங்கமோ தம்மை அதை அணியுமாறு தெரிவிக்கின்றது என வருத்ததுடன் கூறியுள்ளனர்.

அரச தனியார் துறை வேறுபாடின்றி எல்லாத் துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களும் தற்போது தமக்கு தமக்கென சீருடைகளை அறிமுகபடுத்தியுள்ளமையால் முச்சக்கர வண்டிகள் சங்கமும் அவ்வாறானதொரு சீருடையை அறிமுகபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 30 பேர் பலி!!

Attack

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சிரியாவில் உள்ள சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை கைப்பற்றி உள்ள தீவிரவாதிகள், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளின் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

சிரியாவில் துர்கிஷ் எல்லைப்பகுதியில் தெல் அப்யாட் நகரின் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதன் மீது அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று முன்தினம் போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 30 பேர் பலியாகினர். இதுகுறித்து அமெரிக்க கூட்டுப்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘எண்ணெய்க் கிணற்றை குறி வைத்து நடத்தப்பட்டதில் பலர் உயிரிழந்து உள்ளனர். ஆனால் பலியானோர் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. கணக்கிடும் பணி நடந்து வருகிறது’ என்று தெரிவித்தார்.

ஜெயக்குமாரி உள்ளிட்ட எண்மர் பிணையில் விடுதலை!!

Jeyakumari

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளமைக்க முயற்சித்த கோபி என்பவருக்கு ஆதரவு அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் பாலேந்திரன் ஜெயக்குமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்ட ஜெயக்குமாரி இரண்டு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வெளிநாடு செல்ல ஜெயக்குமாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை தான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒப்பமிடுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜூலை மாதம் 7ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

-அத தெரண-

ரயில்களில் அசௌகரியங்களை ஏற்படுத்தும் யாசகர்களை கைது செய்ய நடவடிக்கை!!

Beggers

புகையிரதங்களில் யாசகம் செய்யும் யாசகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புகையிரதங்களில் யாசகம் செய்பவர்களினால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும், பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரயில்வே பாதுகாப்பு பிரிவினரையே யாசகர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்திய உயர்தர மாணவர்களுக்கான கவிதை தொடர்பான கருத்தாடல்க்களம்!!(படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட, தெரிவு செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான கவிதை தொடர்பான கருத்தாடல்க்களம் ஒன்று நேற்று முன்தினம் (08.03) நடைபெற்றது.

இதனை வவுனியா தமிழ் மாமன்றம் ஏற்பாடு செய்திருந்தது. கவிதை எழுதும் முறைகள் மற்றும் கவிதைக்கான தேவைகள் என மேலும் பல விடயங்கள் எடுத்துக்காட்டப்பட்டிருந்தன.

வவுனியா தமிழ் மாமன்ற அங்கத்துவர்களால் நகர்த்தப்பட்ட இந் நிகழ்விற்கு கவிஞர்களான முல்லைத்தீபன், ஜெகன், மற்றும் மைதிலி தயாபரன், அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களினூடாகவும் கவிதைகளின் வகைகள், எழுதும் முறைகள் என்பன எடுத்துக்காட்டப் பட்டிருந்தன. மேலும் பல்வேறு ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் நயக்கப்பட்டு மாணவர்களுக்கு விளக்கங்களும் வழங்கப்பட்டன.

1 2 34 5 6 7 8

வவுனியா ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா!!(படங்கள்)

வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள ஜீனியஸ் பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்று (09.02) மாலை 02.00 மணியளவில் திருமதி. கலைவாணி மனோகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அவர் சமூகமளிக்க முடியவில்லை. சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), முன்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கோ.தர்மபாலன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக உக்குளாங்குளம் சிவன் கோவில் பிரதம குரு தியாகஸ்ரீ சத்திதர குருக்கள்,

வைத்திய கலாநிதி எம்.மதிதரன், உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.சத்தியநாதன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.ஜெயக்கெனடி, மித்ரா மன்ற பணிப்பாளர் அரவிந்தன்,முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி.அருள்வேல்நாயகி, பண்டாரிக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி திரு.ஜெயதிலக்க மற்றும் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், என பலர் கலந்து கொண்டனர்.

மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள், வினோத உடை நிகழ்ச்சி , பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.

IMG_7365 IMG_7383 IMG_7393 IMG_7381IMG_7397 IMG_7407 IMG_7417 IMG_7428 IMG_7431IMG_7436 IMG_7439 IMG_7441 IMG_7442 IMG_7444IMG_7454 IMG_7477 IMG_7480 IMG_7484 IMG_7486

விராத் கோலி, டிவில்லியர்ஸ் போன்றோரை விட எதிரணியினரை அச்சுறுந்தும் சங்கக்கார தான் சிறந்த வீரர் : முத்தையா முரளிதரன்!!

Sanga

தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ், இந்தியாவின் கோலியை விட இலங்கையின் சங்கக்கார மிக ஆபத்தான துடுப்பாட்ட வீரர் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் குமார் சங்கக்கார அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் சதமடித்து, புதிய சாதனை படைத்தார்.

இதுகுறித்து முத்தையா முரளிதரன் கூறியபொது அவுஸ்திரேலிய அணியுடன் இலங்கை தோற்றிருந்தாலும் விளையாடிய விதம் கவர்வதாக உள்ளது.

பந்துவீச்சாளர்கள் அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தாலும், துடுப்பாட்ட வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். தற்போது உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்றால் அது குமார் சங்கக்கார தான்.

நீங்கள் வீராத் கோலி, டிவில்லியர்ஸ், மக்ஸ்வெல் பற்றி என்னதான் பெருமையாக பேசினாலும் தற்போதைய சிறந்த வீரர் சங்கக்காரதான்.

மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும், ஒரு வீரரை பார்த்து பிற அணிகள் அச்சப்படுகின்றன என்றால், அது சங்ககாரவை பார்த்துதான்.

இந்த உலகக் கிண்ணப் போட்டிகளுடன் ஓய்வு பெறும் முடிவில் இருப்பதால் தன்னுடைய முழுத் திறனையும் வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி வருகிறார் என தெரிவித்துள்ளார்.

வவுனியா வீடமைப்பு திட்டம் பற்றி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆய்வு!!

Risad

மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பிலும், பிரதேசத்தின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

அண்மையில் வவுனியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் சூடுவெந்தபிளவு கிராம மக்களின் தேவைகள், தொடர்புகள் பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வவுனியா நகரை அண்டிய கிராமங்களில் சூடுவெந்தபிளவு பழமை வாய்ந்த கிராமமாகும்.
இந்த கிராம மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அசாதாரண சூழ் நிலையில் வாழ்ந்து வந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அமைச்சர் றிசாத் பதியுதீனின் செயற்றிட்டங்களுக்கு அமைய இந்த பிரதேசத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது.

இருந்தபோதும் இன்னும் பொது மக்களின் வீடில்லாப் பிரச்சினையை நிவர்த்திக்கும் படி அமைச்சரின் கவனத்தை ஈர்க்குமாறு அந்த பிரதேச மக்கள் கோரிக்கைவிடுத்தனர்.

இதனையடுத்து நேற்று அமைச்சர் றிசாத் பதியுதீன் இக்கிராமத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

வவுனியாவில் மாகாணசபையால் திறக்கப்பட்ட பேக்கரி திறந்த தினமே மூடப்பட்டது!!

Backery

வவுனியா, பிரமனாலங்குளம் பகுதியில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் திறக்கப்பட்ட பேக்கரி அன்றைய தினமே மூடப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின், வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் ரூபா செலவில் வவுனியா, செட்டிகுளம், பிரமணாலங்குளம் பகுதியில் பேக்கரி ஒன்று அமைக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை (06.02) திறந்து வைக்கப்பட்டது.

திறக்கப்பட்ட பேக்கரி அன்று மாலை முதலே மூடப்பட்டுள்ளது. திறப்பதற்காக மட்டுமே பேக்கரியில் ஒருநாள் உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றது. இது தொடர்பில் அப்பகுதி மக்களை கேட்ட போது..

இக் கிராமத்தைச் சோந்த 5 பேருக்கு வெதுப்பகம் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்கள் தற்போது இங்கு தான் உள்ளார்கள். ஆனால் இந்த பேக்கரியை 5 பேரிடமும் கொடுப்பதா அல்லது எவ்வாறு யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் நடத்தி வருமானத்தைப் பெறுவது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை.

இதன் காரணமாகவே பேக்கரி மூடப்பட்டுள்ளது. திட்டமிடப்படாத நடவடிக்கையே இதற்குக் காரணம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புபட்ட செய்தி : வவுனியா பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வெதுப்பகம் திறந்து வைப்பு!!(படங்கள்)

தொடர்ச்சியாக உபாதைக்குள்ளாகும் இலங்கை வீரர்கள் : கித்ருவான், கௌசல் ஆகியோர் அவுஸ்திரேலியா அனுப்பி வைப்பு!!

Santhimal

இலங்கை கிரிக்கெட் அணியின் கித்ருவான் வித்தானகே மற்றும் பிஎச்ரி.கௌசல் ஆகிய வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உபாதைக்கு உள்ளாகிய தினேஸ் சந்திமால் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரின் வெற்றிடங்களை நிரப்பவே இவர்கள் அவுஸ்திரேலியா அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பங்களாதேஷிடம் தோற்ற இங்கிலாந்து அணி காலிறுதி வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியது!!

BAN

உலக கிண்ண போட்டியின் 33வது லீக் ஆட்டம் இன்று இங்கிலாந்து, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதையடுத்து பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் இம்ருள் கயிஸ் களம் இறங்கினர். எனினும் இருவரும் 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி முகமதுல்லா 103 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி சார்பாக பெற்றார்.

நிறைவில் 50 ஓவர் முடிவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களை குவித்தது. இதனை தொடர்ந்து வெற்றிக்கு 276 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணி விளையாடியது.

இங்கிலாந்து அணி சார்பாக பெல் 63 ஓட்டங்களையும் பட்ளர் 65 ஓட்டங்களையும் பெற்றனர். இந்நிலையில் 48.3 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து அணி 260 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பந்துவீச்சில் ருபெல் ஹசன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன் அடிப்படையில் பங்களாதேஷ் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நடைபெற்று முடிந்த 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி காலிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்து பரிதாமாக உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது.

குழு A இல் இருந்து நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் காலிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை உறுதி செய்தன.

முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய விதிக்கப்பட்ட தடை வாபஸ்!!

helmet-newsfirst

முகத்தை முழுமையாக மறைத்து தலைக்கவசம் அணிய விதிக்கப்பட்ட தடை அறிவிப்பை அரசாங்கம் மீளப் பெற்றுக் கொண்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் எதிர்வரும் 21ம் திகதி முதல் முகத்தை முழுமையாக மூடி தலைக்கவசம் அணிய தடை விதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த அறிவிப்பை மீளப் பெற்றுக் கொள்வதாக பொது மக்கள் அமைதி, கிறிஸ்தவ அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.