நம் முன்னோர்கள் மணிக்கணக்காக, நாட்கணக்காக,மாதக்கணக்காக, வருடக்கணக்காக வானத்தை பார்த்திருந்து கிரகங்களின் அசைவுகளை கண்டறிகிறார்கள். அவர்கள் தந்த அற்புத அறிவியலை,ஒரு சில மூடர்கள் முட நம்பிக்கை என்று சொல்லி, மக்களை முட்டளாக்கினர். இந்த நாத்திகர்கள் மூக்கை நுழைக்காமல் இருந்திருந்தால், நாம் இன்று அறிவியலின் தந்தையர்களாக இருந்திருப்போம்.
தோஷங்கள் பற்றி சோதிடம் சொல்வதை விட, அறிவியல் ரீதியாக, விஞ்ஞான ரீதியாக சிந்திப்பதே சிறந்தது என்று சோதிட கலாநிதி P.H.சர்மா கூறுகிறார். இருக்கும் பல தோஷங்களில் ஒன்றான செவ்வாய் தோஷத்தை எடுத்துக் கொள்வோம். தஞ்சையில் உள்ள ஒரு முதியவரான மருத்துவர், ஓலைச்சுவடிகளை புரட்டி விட்டு, “இரத்தப் பிரிவுகளைப் பற்றி எனக்குத் தெரியாது.
ஆனால் ஒவ்வொரு மனிதனின் இரத்தக் கூறுகள் வேறுபடுகின்றன. இந்த இரத்த வேறுபாட்டை கைநாடியை வைத்து கண்டறிய முடியும். சில ஆண்களின் இரத்தம் சில பெண்களின் இரத்ததுடன் ஒத்துப் போவதில்லை. இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கும் தாய்க்கும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் குறையுடனும் அல்லது இறக்கவும் செய்கிறது.
நம் காலத்தில் திருமணத்திற்கு முன்னர் இவற்றை பார்ப்பதில்லை. திருமணத்தின் பின்னர் ஏற்படும் சிக்கல்களை அறிந்த பின் பொருந்தாத இரத்தக் கூறு என்பதை வைத்தியர் கண்டறிகிறார். அதற்கு சிக்கிச்சையும் செய்கிறார். ஆனால் நாமோ அந்த மருத்துவ உண்மையை அறியாமல் சோதிடத்திற்குள், தோஷம் என்ற பெயரில் சேர்த்துக் கொள்கிறோம்”, என்று கூறுகிறார்.
இன்றைய மருத்துவ உலகு என்ன சொல்கிறது, எமது இரத்தப்பிரிவு A,B,AB,O என்பது நீங்கள் அறிந்ததே. இதில் 85 வீதமானோர் Rh + உடையவர்களாகவும், மிகுதி 15 வீதம் Rh- உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.இதில் விசேடம் என்னவென்றால் Rh- உள்ளவர்கள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் மிகக் குறைவாகவும், அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் கூடுதலாகவும் உள்ளனர் என்பது தான்.
ஒருவேளை எம் நாட்டு சோதிடர்களைக் கண்டு எல்லா செவ்வாய் தோஷங்களும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓடி விட்டனவா? இரத்தத்தில் Rhesusfactor – உள்ள பெண் திருமணம் செய்யு முன் மருத்துவரின் அறிவுரையை பெற்றுக் கொள்வது சிறந்தது.
HIV போன்ற நோய்களுக்காக மட்டுமல்லாது, RH பிரிவு பற்றியும் அறிந்து, கருத்தரித்த காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வும் காணலாம். Rh – உள்ள பெண்ணின் குழந்தை Rh+ ஆக இருக்குமிடத்து பல பிரச்சனைகளை உருவாக்கும். அநேகமாக முதல் முறை கருத்தரித்த காலத்தில் தாய்க்கு பிரச்சனைகளை தராத போதும், பின்னர் கருத்தரிக்கும் காலத்தில் தாய்க்கோ,பிள்ளைக்கோ ஆபத்து ஏற்படலாம்.கூடவே Rh நோயையும் குழந்தைக்கு ஏற்படுத்தலாம்.
சுருக்கமாக, சரியாக கணிக்கப்பட்ட ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இருப்பின் அவரின் குருதி வகை பெரும்பான்மையாக நெகட்டிவ் ( _ ) ஆகவே இருக்கும்.
அறிவியல் சொல்லும் முன்பே இதனை கணித்த நம் முன்னோர்களின் அறிவை எப்படி பாரட்டுவது, இன்னும் எத்தனை விடயம் நாம் அறியாமல் இருகிறோம்.
இந்திய கிரிக்கெட் அணியின் துணை தலைவர் விராத் கோலி, இரண்டு நாட்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு திரும்புகையில் அங்கு இருந்த ஆங்கில நாளிதழின் நிருபரை பார்த்து திடீரென கண்டபடி தகாத வார்த்தையால் வசைபாடினார்.
விராத் கோலியின் காதலியான இந்தி நடிகை அனுஷ்கா சர்மா குறித்து அந்த ஆங்கில பத்திரிகையில் வெளியான கட்டுரையை சம்பந்தப்பட்ட நிருபர் தான் எழுதினார் என்று கருதி விராத் கோலி நிதானம் இழந்து இவ்வாறு நடந்துள்ளார்.
ஆனால் கட்டுரைக்கும், வசைமொழிக்குள்ளான நிருபருக்கும் சம்பந்தம் இல்லை என்பது பின்னர் தெரியவந்ததும் விராத் கோலி, நடந்த சம்பவத்துக்காக வேறு நிருபர் மூலம் வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அந்த பிரச்சினை ஓய்ந்து விடாமல் விஸ்வரூபம் எடுத்தது.
வருங்கால தலைவராக உருவாகி வரும் விராத் கோலி பொது இடத்தில் நிருபரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட விதம் ரசிகர்களை மட்டுமின்றி முன்னாள் வீரர்களையும் முகம் சுழிக்க வைத்தது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் சபையும், அணி நிர்வாகமும் விராத் கோலி தகாத வார்த்தை எதுவும் பயன்படுத்தவில்லை.
தவறான புரிந்து கொள்ளுதல் காரணமாக இந்த சம்பவம் நடந்து விட்டது என்று விராத் கோலிக்கு ஆதரவாகவே ஒத்து ஊதியது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத நிலையில் விராத் கோலியால் அவமதிக்கப்பட்ட அந்த நிருபர் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் டால்மியாவுக்கு புகார் கடிதம் எழுதினார்.
அத்துடன் சர்வதேச கிரிக்கெட் சபையின் கவனத்துக்கும் கொண்டு சென்றதால் இந்த பிரச்சினை மேலும் வலுத்தது. அதோடு அங்குள்ள சட்டவிதிப்படி விராத் கோலி மீது வழக்கு தொடர வழிமுறை உள்ளதா என்றும் அந்த நிருபர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய இந்திய கிரிக்கெட் சபை, விராத் கோலி தவறாக நடந்து கொண்டது தெரியவந்ததால் அவரை எச்சரிக்கை செய்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் செயலாளர் அனுராக் தாகூர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
இரண்டு நாட்களுக்கு பிறகு பேர்த்தில் நடந்த சம்பவம் குறித்து சபையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சம்பந்தப்பட்ட வீரர் (விராத் கோலி) இந்திய அணியின் கண்ணியத்தையும், மாண்பையும் கட்டி காக்கும் வகையில் எல்லா நேரங்களிலும் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபை, இந்திய அணி நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளது. இதுபோன்ற சம்பவம் வருங்காலத்தில் மீண்டும் நடக்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிரிக்கெட் செய்திகளை சேகரிப்பதிலும், கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதிலும் ஊடகங்களின் பங்களிப்பை இந்திய கிரிக்கெட் சபை மதிக்கிறது.
ஊடகங்களின் ஆதரவையும் வரவேற்கிறோம். சம்பந்தப்பட்ட அனைவரும் பிரச்சினையை மறந்து உலக கிண்ண போட்டி தொடரில் இந்திய அணியின் அடுத்தடுத்த போட்டிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விராத் கோலியின் மோசமான செயலுக்கு இந்திய அணியின் முன்னாள் தலைவர் கவாஸ்கர், அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ஸ்டீவ் வோ, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரையன் லாரா, இந்திய முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விராத் கோலி கொஞ்சம் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடந்த சம்பவத்துக்காக சம்பந்தப்பட்ட நிருபரிடம் அவர் வருத்தம் தெரிவிப்பது தான் பிரச்சினைக்கு சரியான தீர்வு என்றும் கூறியுள்ளனர்.
இலங்கையில் காணாமல்போன உறவுகளையும், சிறையிலுள்ள அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
காணாமல் போன உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக அடையாள உண்ணா விரதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி வடக்கில் புதிய கட்சியொன்று நேற்று உருவாக்கப்பட்டுள்ளது.
ந.தேவகிருஸ்ணனை செயலாளர் நாயகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்சிக்கு தொழிலாளர், விவசாயிகள் வாழ்வுரிமைக்கட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வும் செய்தியாளர் சந்திப்பும் வவுனியாவில் நேற்று நடைபெற்றது.
கட்சியின் கொள்கைகள் பற்றி இந்த கட்சி ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.
மிகவும் பதற்றத்துடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி நிறைவேறியது. அதிகாரத்தின் சுவையை அனுபவித்து தனக்கு நிகர்தானே என்ற அகந்தையுடன் இருந்த மக்கள் விரோத மகிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டார். இதன் மூலம் அவரது எல்லையற்ற குடும்ப அதிகாரம் முடிவுக்கு வந்தது.
ஆனால் அவர்கள் ஆண்ட காலத்தில் நாட்டுக்கும், நாட்டுமக்களுக்கும் பாதகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், திட்டங்கள், ஆக்கிரமிப்புகள் எதுவும் முடிவுக்கு வரவோ அல்லது அகற்றப்படவோ இல்லை.
சர்வாதிகாரப் போக்கில் இராணுவ காட்டாட்சியில் நிலங்கள், இயற்கை வளங்கள், மனித உழைப்புகள் என்பவற்றை சுரண்டி பல்தேசிய கம்பனிகளுக்கு தாரைவார்த்து கொள்ளை இலாபங்களைப் பெற்ற மக்கள் விரோத மகிந்த அரசின் செயற்பாடுகள் தற்போதும் புதிய அரசாங்கம் என்ற வேறு முகமூடியுடன் உலாவத்தொடங்கி விட்டன. (உதாரணம்: அண்மையில் மைத்திரி – மோடி அணுப்பரம்பல் ஒப்பந்தம்) உலக மயமாக்கள் என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமைகள் பறிக்கப்பட்டு அடிமைத்தனத்தை நோக்கி பயணிக்கின்றது.
மக்களுக்கு வாழ்வதற்கான உரிமை உண்டு, ஆரோக்கியமான நல்லதொரு போசாக்கு நிறைந்த உணவை பெற்றுக் கொள்வதற்கான உரிமை உண்டு என்ற வகையில் நாட்டின் உற்பத்தி, ஏற்றுமதிவிற்பனை மற்றும் நுகர்வு சம்பந்தமான விடயங்கள் நாட்டு மக்களின் மேற்குறிப்பிட்ட உரிமைகளை பாதுகாக்கும் படி இருத்தல் வேண்டும். இயன்றளவு இறக்குமதி செய்யப்பட்ட உணப்பொருட்களில் தங்கியிராமல் நாட்டுக்கு தேவையான உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் நோக்கிலும், கல்வி வளர்ச்சியிலும், சுகாதாரத்தைப் பேணுவதிலும் அக்கறையுள்ள பொருளாதாரக் கொள்கைகள் திட்டமிடப்படல் வேண்டும்.
ஆனால் இன்று எமக்கு என்ன நடக்கிறது?
உணவுக்கு பதிலாக எமக்கு உட்கொள்ள கிடைப்பது நச்சு பொருட்களே ஆகும். நாம் உட்கொள்ளும் உணவே நோய்களை நோக்கி எம்மை இட்டுச் செல்கிறது. நாட்டு மக்கள் நோயாளிகளாவே மாறிவருகிறார்கள். நாளுக்கு நாள் விலையுயர்ந்து வரும் உணவுப் பொருட்கள் மூலம் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் மக்கள் ஒரு புறம் அவ்வுணவுப் பொருட்களை விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் கம்பனிகள் மறுபுறம் என மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். இதைவிடக் கொடுமை நாட்டு மக்கள் போசாக்கின்மை, நீரிழிவு, இருதயநோய், இரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள் போன்ற கொடிய நோய்களுக்கு இரசாயனங்ளைப் பயன்படுத்தி விளைவிக்கும் உணவுகளே காரணமாக அமைகின்றது.
ஒரு காலத்தில் பேரபிமானத்துடன் வாழ்ந்து வந்த விவசாயிகள் இன்று சிறுநீரக வியாதியால் பீடிக்கப்பட்டு வருகின்றனர். (நாட்டில் ஒரு நாளுக்கு சாராசரியாக 13 பேர் சிறுநீரக நோயால் மரணிக்கின்றார்கள். 200,000 க்கும் அதிகமான மக்கள் மரணப் பிடியில் சிக்கியுள்ளார்கள்.) இவ்வாறான சூழ்நிலையில் வாழ்வுரிமையைக் கேட்டு வீதிக்கு இறங்கும் தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்களுக்கு திருப்பிக் கிடைப்பது துப்பாக்கி வேட்டுக்களும், சிறைதண்டனைகளுமே ஆகும்.
பாதுகாப்பு வலயங்கள், உல்லாசப் பிரயாண வலயங்கள் மற்றும் பாரிய தொழிற்சாலை வலயங்கள் என்ற பெயரில் விவசாயிகளின் காணிகள், மீனவர்களின் கடற்கரைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகின்றது. தனியார் மயப்படுத்தல் என்ற பெயரில் விதை உரிமை, நீர் வள உரிமை, இயற்கை வள உரிமைகள் கம்பனிகளுக்கு விற்கப்பட்டுள்ளன.
விற்பதற்கு திட்டமிடப்பட்டும் வருகின்றன. பரம்பரை பரம்பரையாக வியர்வை சிந்தி உழைத்த மலையக தோட்டத் தொழிலாளிகள் தாம் பிறந்த இந்த நாட்டில் வாழ்வுரிமைகள் அற்ற அந்நிய மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில் மாறிமாறி வரும் அரசாங்கங்கள் மக்களை அடிமைத் தொழிலாளி ஆக்குவதிலும், நாட்டை விற்பனை செய்வதிலும் பல்தேசிய கம்பனிகளுக்கு தரகர்களாகவே செயற்பட்டு வருகிறார்கள்.
நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சாதகமானதாகக் காட்டிக் கொண்டு இறுதியில் உலகமயமாக்கல் என்ற பெயரில் சுரண்டலுக்கு வழிசமைப்பதற்காவே வடிவமைக்கப்படுகின்றது. காலம் காலமாக நிகழும் இக் கொடுமையில் சிக்குண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர்கள் தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்களே ஆகும்.
கடந்த காலங்களில் நாம் வாழ்வுரிமைக்காக உதிரிகளாக பல போராட்டங்களை நடாத்தி வந்தோம். அவற்றில் சில வெற்றியடைந்தன பல தோல்வியடைந்தன. அதற்கு காரணம் எமது போராட்டம் அடையாளப்படுத்தப்பட்ட மக்கள் பேரியக்கமாக இல்லாமையே ஆகும். எனவே நாம் அடையாளப்படுத்தப்பட்ட அமைப்பு ரீதியாக செயற்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்.
இன்றும் கிராமப்புற மக்களுக்கு அடிப்படைக்கல்வி உரிமை, போக்குவரத்து உரிமை, சுகாதார உரிமை, வளப் பங்கீட்டு உரிமை என முற்றாக மறுக்கப்பட்டே வருகிறது. கிராமப்புற சமூக கட்டமைப்புக்கள் சிதைவுக்குள்ளாகியுள்ளன. முதலாளித்துவ நிதி நிறுவனங்களின் கடுமையான சுரண்டல்களுக்கு ஆளாகி நிற்கதியான நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு ஒரு நவீன கொத்தடிமைத்தனத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
எனவே இவ் அடிமை தனத்தை உடைத்தெறிந்து மக்களின் வாழ்வுரிமையை மீட்பதற்கு.
01. உணவு பொருளாதார தன்னாதீக்கத்தை ஏற்படுத்தல்.
02. விதைகளுக்கான ஏகபோக உரிமையை விவசாயிக்கே உரித்தாக செய்தல்.
03. மக்களின் வாழ்வாதாரத்திற்கான காட்டு வளத்தை பாதுகாத்தல்.
04. தண்ணீரை விற்பனை பண்டமாக்காமல் தடுத்து நிறுத்தல்.
05. நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தல்.
என்ற விடயங்களை முன்நிறுத்தி மக்களை விழிப்புறச் செய்து மக்கள் பேரியக்கத்தை உருவாக்கும் நோக்கில் தொழிலாளர், விவசாயிகள் வாழ்வுரிமைக் கட்சியை நாம் ஆரம்பித்துள்ளோம். கடந்த காலங்களில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து நாம் செயற்பட்டது போன்று ஒன்றிணைந்து கட்சி ரீதியாக வீரியமான செயற்பாடுகளை முன்னெடுத்து தொழிலாளர், விவசாயிகளின் வாழ்வுரிமையை உறுதி செய்ய தொடர்ந்து போராடுவோம்.
நகம், தலைமுடி போன்றவற்றை பெரியதாக வளர்ப்பவர்களே தங்கள் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதை சாதனையாக நினைக்கும் நேரத்தில், ஒரு அங்குலத்தை தாண்டி வளர்வதற்கு வாய்ப்பே இல்லாத இமை ரோமங்களை மிகவும் சிரமப்பட்டு சுமார் 3 அங்குலம் நீளத்துக்கு வளர்த்ததன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் ஒருவர் ஆவலுடன் காத்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டை சேர்ந்த வேலரி ஸ்மேக்லி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக டயட் எடுக்க ஆரம்பித்தார்.
அதனால் அவரது உடல் கட்டுக்கோப்பாக மாறியதோ இல்லையோ இமை ரோமங்கள் மளமளவென வளர ஆரம்பித்தது. இதனால் ஆச்சர்யமடைந்த வேலரிக்கு தொடக்கத்தில் பொது இடங்களில் போகும்போது தன்னை எல்லோரும் வெறித்து பார்ப்பது சங்கடமாயிருந்தது.
ஆனால் நாளடைவில் வீதியில் அழகான பெண்கள் அவரை மறித்து எப்படி உங்கள் இமை ரோமங்கள் எப்படி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று கேட்டதும் புல்லரித்தது.
இதற்கு பிறகு இமை ரோமத்தை வளர்ப்பதற்காகவே டயட் எடுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், ரோமத்தின் எடை தாங்க முடியாமல் இமை சோர்வுற ஆரம்பித்தது. பார்வையும் சரியாக தெரியவில்லை. இதனால் தனது இமை ரோமங்களை வெட்டிக்கொள்ள முடிவு செய்தார்.
செய்யும் முன்னர் கின்னஸ் புத்தகத்திற்காக தனது இமை ரோமத்தை அளந்து கொடுத்துள்ளார். அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவாரா இல்லையா என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.
ஆனால், இமை ரோமத்தை வெட்டினாலும், இன்னும் அந்த டயட் இரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் வேலரி.
தியாகி அறகொடை நிதியத்தின் பிரதான அனுசரணையுடன் வவுனியா பொது வைத்தியசாலைக்கு ரூபா 37 லட்சம் பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு 25.02..2015 அன்று வடமாகாண முதலமைச்சர் கௌரவ வி.விக்னேஸ்வரன் அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அத்துடன் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும் மற்றும் விதவைகளுக்கும் சிறிய பண உதவியும் அன்பளிப்பாக தியாகி அறகொடை நிதியத்தால் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் கௌரவ க.வி. விக்னேஸ்வரன் , வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், சுகாதார அமைச்சின் செயலாளர், வைத்திசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் சுகாதார துறைசார் உயர் அதிகாரிகள் , வைத்திய நிபுணர்கள் , ஊழியர்கள்,வைத்தியசாலை அபிவிருத்திகுழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வு சாதாரணமானது அல்ல சுவிஸ் நாட்டில் வசிக்கும் எமது உறவான தியாகி அறகொடை நிதியஸ்தாபகர் திரு வி.தியாகேந்திரன் அவர்கள் யாழ்பாணம் நல்லூரில் தியாகி அறகொடை நிதியம் என்னும் அமைப்பை நிறுவி பல உதவிகளை மக்களுக்கு செய்து வரும் நிலையில் வவுனியா வைத்தியாசாலைக்கு தானே முன் வந்து இந்த உதவிகளை செய்து உள்ளார் ,மனிதருள் மாணிக்கமான இவரை வவுனியா மக்கள் சார்பாக தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு மனமார வாழ்த்துகிறது.
வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ்-பல்கலைக்கழக 34ம் அணி மருத்துவபீட மாணவர்களால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
வவுனியா மாவட்டத்தில் விழிப்புணர்வின் முதல்நாள் நிகழ்வின் ஒருபகுதி வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தின் 08 பாடசாலைகளைச் சேர்ந்த 80 மாணவர்கள் ககலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு 02ம் திகதியன்று முற்பகல் 9.00 மணியளவில் 34 ஆம் அணி மருத்துவபீட மாணவன் யயந்தின் அறிமுக உரையுடன் ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து ஓமந்தை மத்திய கல்லூரி அதிபரின் உரை இடம்பெற்றது. அதன் பின் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸாரால் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் மாணவர்களுக்கு கருத்தரங்குகளும் முதலுதவிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 34ம் அணி மருத்துவபீட மாணவர்களால் தயாரக்கப்பட்ட காணொளியொன்றும் காண்பிக்கப்பட்டது.
மாணவர்கள் அனைவருக்கும் வீதி ஒழுங்குமுறைகள் தொடர்பாகவும் முதலுதவி தொடர்பாகவும் வினாகொத்துக்கள் வழங்கப்பட்டு அவர்களின் அடைவு மட்டம் மருத்துவபீட மாணவர்களால் ஆராயப்பட்டது.
இந்நிகழ்வின் மற்றய பகுதிகள் வவுனியா காமினி மகாவித்தியாலயத்திலும் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வவுனியா வைத்தியசாலையின் உளமருத்துவ நிபுணர் சுதாகரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
நோர்வே தமிழ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதே போல் இந்த வருடம் 6வது திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி பிரமாண்டமாக தொடங்கவிருக்கிறது.
கடந்த 5 வருடங்களாக தமிழ் மொழியில் வெளிவந்த முழு நீளப்படம், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசைப்பாடல் காணொளி, அனிமேஷன் ஆகியவற்றோடு தமிழர்களின் முழு நீளப்படங்களுக்கான போட்டிகள் நடைபெற்று அதில் 30 வகையான பிரிவுகளில் தொடர்ந்து தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஓர் புதிய பிரிவாக உலக நாடுகளின் சினிமாவுக்கான குறும்படம், ஆவணப்படம், முழு நீளப்படம் ஆகியவற்றிற்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இந்த ஆண்டு சிறப்பு திரையிடலாக, சீனாவின் VINCENT என்னும் குறும்படமும், TAKAO DANCER என்னும் முழு நீளப்படமும், சரஜெவோவின் FINDING FAMILY என்னும் ஆவணப்படமும், ரஷ்யாவின் MY GURU என்னும் ஆவணப்படமும், டென்மார்க்கின் INLUSIO என்னும் குறும்படமும் திரையிடவிருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட படங்களின் விவரங்கள்..
NTFF 2015 முழுநீளத் திரைப்படங்கள் – தமிழ்நாட்டில் இருந்து தெரிவானவை
சிகரம் தொடு – இயக்குனர் கௌரவ்
ஜிகர்தண்டா – இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்
கயல் – இயக்குனர் பிரபு சாலமன்
குக்கூ – இயக்குனர் ராஜு முருகன்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – இயக்குனர் ரா.பார்த்தீபன்
ராமானுஜன் – இயக்குனர் ஞானசேகரன்
நான் தான் பாலா – இயக்குனர் ர.கண்ணன்
தேன்கூடு – இயக்குனர் இகோர்
காவிய தலைவன் – இயக்குனர் வசந்தபாலன்
தெகிடி – இயக்குனர் பி.ரமேஷ்
காடு – இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம்
குற்றம் கடிதல் – இயக்குனர் பிரம்ம.ஜி
முழுநீளத் திரைப்படங்கள் – உலக தமிழ் சினிமா (புலம்பெயர் தேசம்)
ஒஸ்லோ (நோர்வே) – இயக்குனர் ஸ்டீபன்
உயிர்வரை இனித்தாய்(டென்மார்க்) – கே.எஸ்.துரை
சிவ சேனை (லண்டன்) – என். ராதா
குறும்படம்/ஆவணப் படம்/முழுநீளத் திரைப்படம் – உலக சினிமா அனைத்து மொழி
வின்சென்ட் – (குறும்படம் – சீனா ) -இயக்குனர் வென் -சிங் ஹோ & ஹ்வாங் ஔசுல்
ஆவணப்படம் – பொஸ்னியா – இயக்குனர் ச்ரிஸ் லெஸ்லி
மை குரு – (ஆவணப்படம் – ரஷ்யா ) – விக்டர் க்ரிபேர்மன்
டகோ டான்சர் – (முழுநீளத் திரைப்படம் – சீனா இயக்குனர் வென் -சிங் ஹோ & ஹ்வாங் ஔசுல்
இன்லுசியோ – (குறும்படம் – டென்மார்க்) – வில்லியம் ருட்பெக் லிந்தர்ட்ட்
தமிழ் குறும்படங்கள்
தழும்பு – இயக்குனர் மதிசுதா
சாணி யூத்தம் – இயக்குனர் கௌசிக் ரங்கநாதன்
புத்தாண்டு பரிசு – வ.கௌதமன்
வேட்டி – வ.கௌதமன்
மௌன விழித்துளிகள் – இயக்குனர் ராம் இளங்கோ
அப்பால் – இயக்குனர் மாதவன் மகேஸ்வரன்
உறவுகள் – தஸ்லீம் கான்
ஆழி – இயக்குனர் எஸ்.எ.நிலான்
தி செகண்ட் வின்னர்
கிராம வழி
அழை
பசி
தெய்வா
தமிழ்
தற்கொலை
NTFF 2015 தமிழ் ஆவணப்படங்கள்
கரகம் – மதிசுதா
கண்ணாடி பொம்மைகள் – இயக்குனர் வெங்கடேஷ் குமார்
குதியம் கவே – இயக்குனர் ரமேஷ் யந்த்ரா
சல்மா – கிம் லோங்கிநோட்டோ
NTFF 2015 தமிழ் இசைப்பாடல் காணொளி
மழை நிலா(விசேட திரையிடல்) – தி ப்ரியந்தன்
நீ தந்த காயங்கள் – தி ப்ரியந்தன்
எங்க வீதி அழகி – எஸ்.எ .நிலான்
பிரெஞ்சு பூக்கள் – இயக்குனர் ஈஸ்வரகுமார்
என் உயிரை – தி சதீஷ்காந்த்
NTFF 2015 தமிழ் அனிமேஷன்
பார்க்க முடியாததில் இருந்து பார்க்ககூடியது
அலைபேசி
தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா.இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இவர் படப்பிடிப்பின் போது, முகத்தில் மாஸ்க் அணிந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும், அவர் தற்போது பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
தனக்கு பன்றிக்காய்ச்சல் ஏதும் இல்லையென்றும், தான் நலமாக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் திரிஷா தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பிரபல இந்தி நடிகை சோனம் கபூர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண தொடரில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவிருக்கும் இலங்கை அணி அதற்கான தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது.
முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவினாலும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி இலங்கை அணி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் வரும் 8ம் திகதி சிட்னியில் உலகக்கிண்ணத் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் அவுஸ்திரேலிய அணியுடன் இலங்கை அணி மோதவுள்ளது.
இதனையடுத்து இலங்கை வீரர்கள் தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளனர். ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி 6 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கிறது.
நிர்வாணப்பபடங்களை வெளியிடுவது பலாத்காரத்தை விட மோசமானது என்று நடிகை ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஹன்சிகாவின் குளியல் வீடியோ என்ற பெயரில் வெளியான சில நிமிட ஆபாசப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வீடியோ குறித்து அவர் கூறுகையில், இந்த மாதிரி வீடியோக்கள் வெளியாவது மிகவும் வருத்தப்பட வேண்டிய விடயம் இது.
சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. 365 நாட்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களைச் சந்தோஷமாக வைக்கிறோம். ஆனால் எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை. இது, பலாத்காரத்தை விட கொடுமையானது.
எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன காயம் காரணமாக உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வௌியேறியுள்ளார்.
இன்றைய தினம் பயிற்சியில் ஈடுபட்ட போது, அவரது இடது கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய கூறியுள்ளார்.
இதன் காரணமாக திமுத் கருணாரத்னவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், நான்கு வாரங்களுக்கு விளையாட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் நாடு திரும்பவுள்ள திமுத் கருணாரத்னவுக்கு பதிலான சுழல் பந்து வீச்சாளர் சீக்குகே பிரசன்னவை விளையாட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காயமடைந்த இலங்கை அணி வீரர் ரங்கன ஹேரத்துக்கு பதிலாக தயார்நிலை வீரராக சீக்குகே பிரசன்ன அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த திமுத் கருணாரத்னவுக்கு பதிலாக குஷல் ஜனித் பெரேரா தயார் நிலை வீரராக அவுஸ்திரேலியா புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
வவுனியாவில் அறநெறிப்பாடசாலைகளை சீராக இயக்குவதற்கும் அவற்றை கண்காணிப்பதற்கும் ஏற்ற ஒழுங்குகளை செய்யுமாறு வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் உப தவிசாளர் த.சந்திரமோகன் வட மாகாண முதலமைச்சருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
இந்து அறநெறி ஆசிரியர்களுக்கு இதுவரை ஒரு முறையான வேதனமோ அல்லது ஊக்குவிப்பு கொடுப்பனவோ வழங்கப்படவில்லை. வவுனியாவில் சுமார் எழுபதிற்கும் மேற்பட்ட அறநெறிப் பாடசாலைகள் இயங்குகின்றன.
கலாச்சார சீரழிவுகள், போதைவஸ்து பாவனை என்பனவற்றிற்கு அடிமையாகி இளம்பருவத்தினர் பாதை மாறிச் செல்கின்ற இக் காலப்பகுதியில் அவர்களை ஒழுக்கசீலர்களாகவும் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை கடைப்பிடிப்பவர்களாகவும் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக வளர்ப்பதற்கும் அறநெறிப்பாடசாலைக் கல்வி பெரிதும் உதவுகின்றது.
வெறுமனே பாடசாலைக்கல்வி மட்டும் இவர்களை நற்பண்போடு வாழ போதுமானதல்ல. ஆகவே அறநெறிப்பாடசாலைகள் சீராக இயங்குவதற்கும் அவற்றை கண்கானிப்பதற்கும் ஏற்ற ஒழுங்குகளை செய்வதோடு இதுவரை காலமும் சமய சமூக பணியாக கல்வி கற்பிக்கும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாதாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு வட மாகாணசபை முன்வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் பௌர்ணமி கலை விழாவும் 17 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வும் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று(04.03) வியாழக்கிழமை இடம்பெற்றது.
கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாருதம் சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றிருந்தது. இதேவேளை வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றிய மூத்த கலைஞர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில், கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்தின் நெல்சன் நகரில், வங்கதேசம், ஸ்கொட்லாந்து அணிகள் மோதிய உலகக்கிண்ணத்திற்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வங்கதேச அணித்தலைவர் மொர்டசா, களத்தடுப்பை தெரிவு செய்தார்.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி சார்பாக மட் மக்கான் 35 ஓட்டங்களையும், அணித்தலைவர் மம்சன் 39 ஓட்டங்களையும், அபாரமாக ஆடிய தொடக்க வீரர் கைல் கோட்ஜெர், ஒருநாள் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். இவர், 134 பந்தில் 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
ஸ்கொட்லாந்து அணி 50 ஓவரில் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 318 ஓட்டங்கள் குவித்தது. வங்கதேசம் சார்பில் டஸ்கின் அகமட் 3 விக்கெட்டுகளையும், நசிர் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து 319 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு பொறுப்பாக ஆடிய தமிம் இக்பால் 95 ஓட்டங்களையும் , மகமதுல்லா 62 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹிம் 60 ஓட்டங்களையும், சகிப் அல் ஹசன் ஆட்டமிழகாமல் 52 ஓட்டங்களையும் , சபீர் ரஹீம் ஆட்டமிழகாமல் 42 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர்.
வங்கதேசத்தின் பொறுமையான ஆட்டத்தால் அந்த அணி 48.1 ஓவர்களிலே இலக்கை எட்டி 322 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.
ஸ்கொட்லாந்து அணி சார்பில் ஜோஷ் டாவே 2 விக்கெட்டுகளையும், வர்ட்லா, அலாஸ்டர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 156 ஓட்டங்கள் குவித்த கோட்ஜெர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது நீண்டநாள் காதலியான நடிகை கீதா பஸ்ராவை திருமணம் செய்துகொள்ளவுள்ளார். கீதா பஸ்ரா சில ஹிந்தி மற்றும் பஞ்சாபி திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹர்பஜன்சிங், கீதாவும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வந்த போதிலும் அதனை இருவருமே மறுத்து வந்தனர்.
இருப்பினும் ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்பஜன் சிங் விளையாடும் போது கீதாவும் போட்டிகளை பார்வையிட வருவார்.
இந்நிலையில் இருவரும் இம்மாத இறுதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.