நாடு முழுவதும் வை-பை சேவையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!!

wi-fi-logo

நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச ‘வை பை’ இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நடவடிக்கை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச ‘வை – பை’ இணைப்புக்கள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் இரண்டாம் கட்ட பணிகள் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 750 இடங்களுக்கு இலவச ‘வை-பை’ இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

வவுனியா வடக்கில் அதிபர், ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும் பாடசாலை!!

chool

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் மாணவர்கள் இருந்தும் அதிபரும், ஆசிரியர்களும் இல்லாமல் கரப்புக்குத்தி அ.த.க.பாடசாலை இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமாகிவிட்டதையடுத்து, இப்பாடசாலை இவ்வாறு இயங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமை தொடர்பாக வடமாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளருக்கு தெரிவித்தும், இன்றுவரை அதிபரோ, ஆசிரியரோ நியமிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் மரணமடைந்ததும் புதிய அதிபரை நியமிப்பதற்கான வழிமுறைகளை வலயக் கல்விப் பணிப்பாளர் கைவிட்டு விட்டு, இம்முறை தரம்.5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விண்ணப்பத்தை அருகில் உள்ள பாடசலைக்கூடாக அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மாங்குளத்தில் 1300 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலை : சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

Sathiyalingam

போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களிற்கு 1300 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, அம் மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இம் மாகாணத்தில் 2014ம் ஆண்டிற்கான சிறந்த சுகாதார சேவைக்கான விருது வழங்கும் நிகழ்வு யாழில் நேற்று நடைபெற்றது. இதன்போது விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சத்தியலிங்கம் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வௌியிடுகையில்,

வடக்கு மாகாணத்தில் இன்றும் அதிகளவான தேவைகள் இருக்கின்றன. எனினும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய வளங்கள் பற்றாக்குறையாக உள்ளன. வடக்கில் கடந்த காலத்தில் நடைபெற்ற போரின் காரணமாக இங்குள்ள மக்கள் சொத்து மற்றும் உயிரிழப்புக்களை எதிர்நோக்கியிருந்தனர்.

அத்தோடு இந்தப் போரின் போது அவயங்களை இழந்த, பெற்றோர்களை இழந்த சிறுவர்களும் பெரியவர்களும் தற்போதும் பெரும் சிரமங்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் நாட்டிலுள்ள 9 மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் விசேட தேவையுடையோர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் சுகாதாரத் தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறையினர் ஏனைய மாகாணங்களை விட அதிகமாக உழைக்க வேண்டிய தேவை நிறையவே உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்றாலும் வடக்கு மாகாணத்தின் சுகாதாரக் குறிகாட்டி ஏனைய மாகாணங்களுக்கு நிகராகவே உள்ளது. வடக்கு மாகாணத்தின் விசேட தேவைகளை ஆராய்ந்து ஐந்து வருடத்திற்கான சுகாதாரத் திட்டமொன்றினை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

எமது மாகாணத்தைப் பொறுத்த வரையில் சுகாதாரத்துறையில் ஆளணிப் பற்றாக்குறை நிறையவே காணப்படுகிறது. குறிப்பாக மாகாணத்திலுள்ள 101 வைத்தியசாலைகள் உள்ளன. இவற்றில் 37 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையே இருக்கின்றது.

இந்த நிலைமையானது நாட்டிலுள்ள மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் மட்டுமே காணப்படுகின்ற பிரதான குறைபாடாகும் என குறிப்பிட்டா

பெண்களுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியவர் கைது!!

SMS

பெண்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு ஆபாச குறுத்தகவல்களை அனுப்பிய சம்பவம் தொடர்பில் கடுபொத – நெலும்கணுவ பிரதேசத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே, இவர் கைதாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் வசமிருந்து, இவ்வாறு குறுந்தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்பட்ட மூன்று கையடக்கத் தொலைபேசிகள், சிம்கள் நான்கு மற்றும் பிரிதொரு நபரின் தேசிய அடையாள அட்டையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவரை கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போட் சிட்டி திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!!

Fort city

சீனாவால் முன்னெடுக்கப்பட்ட ​கொழும்பு போட் சிட்டி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை கருத்தில் கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதி வௌிவிவகார அமைச்சர் அஜீத் பீ பெரரா தெரிவித்தார்.

துறைமுக நகரத் திட்டத்தால் ஏற்பட்டதாக கூறப்படும் சூழலியல் பிரச்சினைகள், அந்த இடத்திற்கான உரிமம் தொடர்பான பிரச்சினைகள், தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உப குழுவின் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு, பிரதமர் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளார்.

இதற்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அஜித் பீ பெரரா மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!!

இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய ஆசிரியர்களின் உபயத்தில் இடம்பெற்ற வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள் வீடியோ)!! 

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் ஏழாவது மகோற்சவ பெருவிழாவில் இன்றைய தினம் 04.03.2015 புதன்கிழமை தீர்த்த  திருவிழா இடம்பெற்றது.

வவுனியா இறம்பைக்குளம் மகளீர்கல்லூரியின் இந்துமாமன்ற ஆசிரியர்களின் உபயத்தில்  தீர்த்த உற்சவம் காலை எழுமணியளவில்  ஆரம்பமானது. மேற்படி உற்சவத்தில் கல்லூரியின் ஆசிர்யர்கள் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர் . சுண்ணம் இடித்து கிரியைகள் இடம்பெற்று காலை பத்து  மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று காலை பதினோரு  மணியளவில் ஆலயத்தின் தீர்த்த கிணற்றடியில் கருமாரி நாகபூசணி சாமுண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள்   ஆலயத்தின் இரண்டாம் வெளிவீதி ஊடாக வந்தடைந்தனர்.

அங்கு தீர்தோற்சவம் இடம்பெற்று பெற்று அர்ச்சனைகள்  இடம்பெற்று பின்னர் மதியம் பன்னிரண்டு மணியளவில் யாகம் கலைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தீர்த்த உற்சவம் நிறைவு பெற்றது .மீண்டும் மாலை நாலரை மணியளவில் கொடியிறக்க உற்சவங்கள் ஆரம்பமாகி இரவு எட்டரை மணியளவில் கொடியிறக்கபட்டது.

படங்கள் :கஜன் 

8944_971320719554548_6938097614209422595_n 480556_971325326220754_7051688298875555134_n 996121_971325229554097_4763692137469689345_n 1908410_971324042887549_8000589049358318498_n 10167993_971321902887763_7689271750160285813_n 10313038_971323839554236_5959665819817198791_n (1) 10313038_971323839554236_5959665819817198791_n 10422455_971326489553971_4239180546340049803_n 10428659_971324956220791_7766678079472812651_n 10430898_971325989554021_1478871318349162050_n 10455194_971325279554092_5780503728418079874_n 10557198_971322546221032_7481153911601661749_n 10610532_971321429554477_6818830051030062916_n 10917816_971326729553947_4792708885597732992_n 10995380_971322186221068_7304593735101317919_n 11006467_971323009554319_3897392652846751389_n 11010596_971325189554101_5947391359413267_n 11017831_971325906220696_6435364751422642577_n 11018095_971325529554067_2608978426306613588_n 11018660_971325586220728_8672684329573314684_n 11034186_971321612887792_8707405718369592451_n 11039201_971321052887848_962023150884796668_n 11046819_971321679554452_8211269587839749215_n 11050300_971323992887554_758652779826448504_n 11053057_971320386221248_4893886090928480303_n

வவுனியாவில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!!

minnal

வவுனியா, மடுக்கந்தைப் பகுதியில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று(04.03) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வயல் ஒன்றில் வேலை செய்துவிட்டு மண்வெட்டியுடன் வீடு நோக்கி சென்றவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் மரணமடைந்துள்ளார். ஹமித சிரந்த (19) என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். இவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் தங்கத்தை கொள்ளையிட்ட நபர் கைது!!

Arrest

வவுனியா கூமாங்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து ஒரு தொகை தங்கநகைகளை கொள்ளையடித்தார் என சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொள்ளை சம்பவம் நேற்று(03.03) இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்கநகை கொள்ளை தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைபாட்டினையடுத்தே குறித்த நபர் கைது செய்யபப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கூரிய ஆயுதம் ஒன்றினை காட்டி வீட்டாரை பயமுறுத்தியுள்ளார் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய கூமாங்குளம் பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் இவ்வாறான பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் 16 வயது மாணவி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை!!(படங்கள்)

வவுனியா கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தை சேர்ந்த க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா (16) கடந்த 27.02.2015 அன்று காடையர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

சரணிகாவின் குடும்பத்தினரை வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் 03.03.2015 அன்று நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததோடு, கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கும் சென்று, மாணவியின் மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்து சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.

12 3 4 5 6

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் வட மாகாண கல்வித்திணைக்களத்தின் அணுசரணையுடன் பௌர்ணமி விழா!!

Rambaikulam

வட மாகாண கல்வித்திணைக்களத்தின் அணுசரணையுடன் நடத்தப்படும். பௌர்ணமி விழா வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய அக்குவன்ஸ் கேட்போர் கூடத்தில் நாளை(05.03) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வவுனியா தெற்கு வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி செ.அன்ரன் சோமராஜா தலைமையில் இந்த விழா இடம்பெற உள்ளது . இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்விப்பணிப்பாளர் ஆ.இராஜேந்திரன் மற்றும் சிறப்பு விருந்தினராக திருமதி பராசக்தி கணேசலிங்கம் ஆகியோர் கலந்து கொள்வர். இந்நிகழ்வில் விசேட தேவை உடையோரின் கலை நிகழ்வுகள் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற உள்ளன.

129 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி!!

PAK

உலக கிண்ண போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும் இன்று மோதிக்கொண்டன. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி சார்பாக அஹ்மத் ஷேசாத் 93 ஓட்டங்களையும் ஹரிஸ் சொஹைல் 70 ஓட்டங்களையும் மிஸ்பா-அல்-ஹக் 65 ஓட்டங்களையும் பெற்றனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களை குவித்தது. பந்துவீச்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சார்பாக மஞ்சுள குருகே 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

வெற்றிக்கு 340 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிலையில் 8 விக்கெட்டுக்களை இழந்து 210 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன் அடிப்படையில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!!(படங்கள்)

வவுனியா மகாறம்பைக்குளம் பிஸ்சி ஒழுங்கையில் இன்று (04.03) புதன்கிழமை காலை துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் ஆணொருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஆணொருவரின் சடலம் உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலத்தை மீட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது வவுனியா வைரவபுளியங்குளம் பிரதேசத்தில் உணவகமொன்றினை நடத்திவருபவரான வடிவேல் (45) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 7ற்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளையும் இப்பகுதியில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

மரணமானவர் முன்னர் வவுனியா நகரில் சன் ரீ.வி மீள் ஒளிபரப்பு நிலையத்தை நடத்தி வந்தவர் என்பதுடன் கடந்த 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின்(TELO) சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்குகளினால் தோல்வியை தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பான வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

21 22

வவுனியா கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண கிரிக்கெட் போட்டி!!(படங்கள்)

வவுனியா கூமாங்குளம் சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர் சின்னராசா சுதர்சன் நினைவுக் கிண்ண 2015ம் ஆண்டுக்கான போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதன் இறுதிப் போட்டிகள் கடந்த 01.03.2015 அன்று சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் செவ்வானம் அணியை எதிர்த்து ஸ்டலியன் அணி விளையாடியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் செவ்வானம் அணி வெற்றிபெற்று வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. வெற்றிபெற்றோருக்கான வெற்றிக் கிண்ணத்தை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண மீன்பிடி அமைச்சின் இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன் வழங்கினார்.

1 2 34 5 6 7 8 9

இசையின் படுதோல்வி : சுப்பர் சிங்கர் ஜுனியர் தொடர் நான்கின் முடிவுகள் தொடர்பான வாசகர் கட்டுரை!!

VIjay

கடந்த சில வருடங்களாக விஜய் தொலைகாட்சியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை தவறாது பார்த்து வருகின்றேன். இந்த வருடத்து சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் (2014-2015) இசை தோற்றுப் போனதையிட்டு மிகவும் மனவருத்தம் அடைகின்றேன்.

மிகச்சிறந்த பாடகர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதிலிருந்து முதல் மூன்று இடங்களுக்கு வருவதுவரை மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளது.

யசிக்காவிற்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் யசிக்காவிற்கு முதலிடம் வழங்காமல் விஜய் ரி.வி மோசடி செய்து விட்டதாகவும் இலங்கைத் தமிழர்சார் இணையங்கள் பிரச்சாரம் செய்து வருவது இன்னமும் வேதனையை அதிகரிக்க செய்துள்ளது.

யசிக்காவிற்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகளை அளிக்கப்பட்டது என்பது உண்மையானால் இந்த பெருந்தொகையான (உலகெங்கிலும் ஏறத்தாள ஏழு கோடி அல்லது ஆகக்கூடிப்போனால் எட்டுக் கோடி தமிழர்களே வாழ்கின்றார்கள் என்று பார்த்தால், ஒரு கோடி வாக்குகள் என்பது ஒருவருக்கு கிடைப்பது என்பது பெருந்தொகையே) வாக்குகளை வைத்து பார்க்கும் போது, யசிக்காவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு சிறந்த தமிழ் இசை அல்லது சிறந்த தமிழ்ப்பாடகர் முதலிடத்திற்கு வருவதைக்காட்டிலும், வேறு ஏதோ காரணங்களுக்காக யசிக்கா என்பவர் முதலிடத்திற்கு வரவேண்டுமென்ற முனைப்பே அல்லது தீவிர எண்ணமே மேலோங்கி நின்றுள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இறுதி நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் மாத்திரம்தான் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள் என்றால் உண்மையிலேயே யசிக்காவிற்குதான் முதலிடம் அளித்திருக்க வேண்டும்.

ஆனால் அப்படி நிகழ்ந்திருந்தால், மிகவும் மோசமான முறையில் இசை படுதோல்வி அடைந்திருக்கும். போட்டியாளருக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையிலும் நடுவர்களின் தீர்ப்பின் அடிப்படையிலுமே யசிக்கா இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டார். இதுகூட இசைக்கு கிடைத்த படுதோல்வியே.

இசைத் திறமையின் அடிப்படையிலும், சுப்பர் சிங்கர் ஜுனியர் நாலாவதில் பங்குபற்றிய ஏனைய போட்டியாளர்களின் பாடும் திறமைகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது, யசிக்கா முதல் பத்து இடங்களுக்கு வருவதற்கே தகுதியற்றவர் என்பது என்னைப்போன்ற இசைபற்றி அதிகம் ஆழ்ந்த ஞானம் இல்லாதவர்களுக்கு சாதாரணமாக புரியும்.

இந்த புரிதல் எனக்கு எனது காதுகள் வழியாக மாத்திரம் வரவில்லை, பாடகர்களின் பாடல்கள் தொடர்பாக நடுவர்கள் தெரிவித்த விமர்சனங்கள், பாராட்டுதல்கள் என்பவற்றை கேட்டதாலும் வந்ததே. எனினும் மிகவும் திறமையுள்ளவர்களாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பிரவஸ்தி, அனல் ஆகாஸ், சிவானி போன்ற பாடகர்களை முதலிலே கழட்டி விட்டதற்கு நடுவர்களின் தீர்ப்பே காரணம்.

இவர்களுக்கு வைல் கார்ட்டில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது மீண்டும் இவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். அப்படியிருந்தும் வைல் கார்ட்டில் தெரிவு செய்யப்பட்டவர்களில் யசிக்கா முதலாவதாக இருந்தது மாத்திரமன்றி, இறுதிப்போட்டியில் இரண்டாமிடத்திற்கு முன்தள்ளிவிடப்பட்டார்.

யசிக்கா இரண்டாமிடத்திற்கும், யசிக்காவை விடவும் திறமையுள்ள ஹரிப்பிரியா மூன்றாமிடத்திற்கும், அதேபோன்று ஸ்ரீஷா, பரத், அனுஷ்சியா போன்ற சிறந்த பாடகர்கள் கடைசி மூன்று இடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டதின் காரணம் என்ன?

முதலாவது காரணம், விஜய் தொலைக்காட்சி வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தமிழர்களின் சந்தையை இழக்க விரும்பவில்லை. இவர்கள் தங்களது தொலைக்காட்சியில் விஜய் தொலைகாட்சியைப் பார்ப்பதற்காக வருடாவருடம் சந்தாப்பணம் செலுத்த வேண்டும். இந்த சந்தாப்பணம் மூலமாகவும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்களது நிறுவனங்களின் விளம்பரங்கள் மூலமாகவும் விஜய் தொலைகாட்சிக்கு பெருந்தொகையான வருமானம் கிடைக்கின்றது.

இரண்டாவது காரணம், விஜய் தொலைக்காட்சியும் நடுவர்களாக உள்ளவர்களும் அவ்வப்போது வெளிநாடுகளிலுள்ள இலங்கைத்தமிழர்கள் ஒழுங்கு செய்யும் இசை நிகழ்ச்சிகளுக்கு வந்து பணம் சம்பாதிக்க முடியாமல் போய்விடும். அனந்த் வைத்தியநாதன் அவர்களை இந்த வியாபாரத்தில் உள்ளடக்க முடியாது.

யசிக்கா இலங்கையை பூர்விகமாக கொண்டவரென்பதும், தமிழர்களின் அதிதீவிரவாத தேசிய உணர்ச்சியை தட்டியெழுப்பும் பாடலொன்றை (விடை கொடு எங்கள் நாடே) பாடியவர் என்பதாலுமே யசிக்காவிற்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.

சரியான புள்ளி விபரங்கள் எதுவுமில்லாவிடினும் கடந்த 32 ஆண்டுகளில் ஏறத்தாள 5 இலட்சம் இலங்கைத்தமிழர்களே (தமிழ்நாட்டிலுள்ளவர்களை தவிர்த்து) வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பதை திட்டவட்டமாக கூறலாம். (இதில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த விருத்திக்காக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து, ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டு, இலங்iகையில் பயங்கரவாதத்தை விதைத்துக் கொண்டிருப்பவர்கள்) இவர்களில் எல்லோரும் வருடாவருடம் சந்தாப்பணம் செலுத்தி தமிழ் ரி.வியினை பார்ப்பபதில்லை.

அப்படி தமிழ் ரி.வியினை பார்ப்பவர்களில் விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சிகளை கண்டு களிப்பவர்கள் ஒரு சிறு பகுதியினரே. இதுதவிர சுப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சிகளை இணையத்தினூடாவும் கண்டு களிப்பவர்கள் கணிசமானோர் உள்ளனர் எனபதை மறுப்பதற்கில்லை.

எனினும் ஒருவர் 500 வாக்குகளை அளிக்கலாம் என்பதை பயன்படுத்தி, ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகளை யசிக்காவிற்கு அளிப்பதில் ஈடுபட்டவர்கள் 5000 ஆயிரத்திற்கு மேற்படாத இலங்கைத்தமிழர்களே என்பதை உறுதியாக கூறமுடியும். ஒருவர் 500 வாக்குகளை அளிப்பதற்கு எவ்வளவு நேரம் செலவிடப்பட வேண்டுமென்பது தெரியுமா? இலங்கைத் தமிழர்களுக்கே உரிய இந்த அதிதீவிர மனோபாவம், விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் நிகழ்சிகளை பார்த்து இரசிக்கும் ஏனைய தமிழ் பார்வையாளர்களில் பெரும்பான்மையோருக்கு இல்லை என்பது தமிழ் இசை உலகுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விடயம்.

கடந்த 65 வருடங்களாக இலங்கை அரசியலிலும் எப்போதுமே பிழையானவர்களுக்கே ஆதரவளித்தும் வாக்களித்தும் (ஜனவரி 8ந் திகதி இலங்கைளில் நடந்து முடிந்த ஜனாதிபதித்தேர்தல் இதற்கு சிறந்த உதாரணம்) பழகிப்போன இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இலங்கைத்தமிழர்களிடம், இசைத்துறையில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் என்ன செய்வார்கள்?

இலங்கைத்தமிழர் என்பதால் திறமை குறைந்தவரை, திறமை வாய்ந்தவர்களை மீறி முன்னுக்கு தள்ளுவதா? நடுவர்கள் எவரெவரை அதிகம் பாராட்டுகின்றார்கள், எவரெவருக்கு எழுந்து நின்று கைதட்டுகிறார்கள் போன்றவற்றினை கவனித்தாவது யசிக்காவிற்கு வாக்களிப்பது குறிப்பது இலங்கையர்கள் தங்கள் மனச்சாட்சிக்குள் கேள்விகளை எழுப்பி இருக்கலாம்.

அதிதீவிரவாத தமிழ்த்தேசியத்தால் இலங்கை அரசியலையும் சமூகத்தையும் பொருளாதார வளங்களையும் சீரழித்தது போதாதென்று, இவர்கள் இப்போது தமிழ்நாட்டு இசைத்துறையையும் நாசம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

விஜய் தொலைகாட்சி நிர்வாகம், சுப்பர் சிங்கர் விளம்பரதாரர்கள், அனந்த் வைத்தியநாதன், சுப்பர் சிங்கர் நடுவர்கள் மற்றும் தமிழ்நாட்டு இசைத்துறையினர், இந்த நாசகாரச்சக்திகள் சுப்பர் சிங்கர் போன்ற இசை நிகழ்ச்சியில் புகுந்து தில்லுமுல்லுப் பண்ணுவதை உடனடியாக தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.

எந்தவொரு இசையின் வளர்ச்சிக்கும் அதனை சந்தைப்படுத்தல் என்பது முக்கியமானதாயினும், அது இசைத்துறையில் திறமை வாயந்தவர்கள் முன்வருவதை, இசைத்துறையை வளர்த்தெடுப்பதை மழுங்கடிக்க அனுமதிக்கக் கூடாது.

சுப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் இறுதியில் யசிக்காவிற்கு இரண்டாமிடம் வழங்கப்பட்ட பின்னர், முகத்தில் எந்தவித சலனமும் காட்டாது ஹரிப்பிரியா, ஸ்ரீஷா, பரத், அனுஷ்சியா ஆகியோர் அரங்கில் இருந்ததை பாராட்டாமலிருக்க முடியாது. அடுத்துவரும் சுப்பர் சிங்கர் போட்டியில் ஒரு போட்டியாளருக்கு ஒரு வாக்குத்தான் அளிக்க முடியும் என்பதை கட்டுப்பாடாக விஜய் தொலைக்காட்சி வாக்களர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

– சிவசண்முகமூர்த்தி சுந்தரம்-
Email: [email protected]

வவுனியா மாணிக்கம் பண்ணையில் பாரதி முன் பள்ளி திறந்து வைப்பு!!

வர்த்தக ,வாணிப அமைச்சர் ரிசாத் பதியுதினின் நிதி உதவியுடன் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) படிவம் 02 இல் நிர்மாணிக்க பட்ட பாரதி முன்பள்ளி 02.03.2015 அன்று திறந்து வைக்க பட்டது

பிரதம விருந்தினராக மாணிக்கம் பண்ணை கிராம சேவையாளர் திரு எஸ்.ரஜிந்தனும், சிறப்பு விருந்தினர்களாக தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திரு.தஸ்கீர், திரு செ.மதிவதனனும்,

கௌரவ விருந்தினர்களாக தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், படிவம் 1,2,3,4 இன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், மாதர் சங்க தலைவி திருமதி ம.ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

DSCN4715 DSCN4719DSCN4727 DSCN4743 DSCN4746 DSCN4819 DSCN4896

மத்தள ராஜபக்ச விமானநிலையம் இன்று முதல் இரவில் மூடப்படுகின்றது!!

Mattala

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால், அம்பாந்தோட்டையில் தனது பெயரில் அமைக்கப்பட்ட, மத்தள சர்வதேச விமான நிலையம் இரவில் மூடப்படவுள்ளது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட, இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அரசாங்கத்துக்கு வருமானத்தை அளிக்காததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்

மத்தல விமான நிலையத்தை இரவு நேரத்தில் மூடுவது குறித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம்.

இந்த விமான நிலையத்தின் பராமரிப்புக்காக அரசாங்கம் 250 மில்லியன் ரூபாவைச் செலவிட வேண்டியுள்ளது. வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்தே, இந்த விமான நிலையம் பராமரிக்கப்படுகிறது.

இந்த விமான நிலையத்தை முற்றாக மூடுவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மில்லியன் கணக்கான டொலரை சீனாவிடம் இருந்து பெற்று இந்த விமான நிலையத்தை இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிர்மாணித்திருந்தார்.

மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம் வழியான சேவைகளை கடந்த ஜனவரி மாதம், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.