வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!! (படங்கள்)

வவுனியா வடக்கு வலயத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றான  ஓமந்தை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று  வெள்ளிக்கிழமை (06.03.2015) மாலை 2.00 மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு.சு.திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாணசபையின் சுகாதார அமைச்சர் திரு.எஸ்.சத்தியலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக உப பொலிஸ் உத்தியோகத்தர் திரு.ஆர்.எஸ்.குமார, வட மாகாணசபை உறுப்பினர் திரு.த.லிங்கநாதன்,   திரு.க.சந்திரகுலசிங்கம் , வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவர் திரு.க.சிவலிங்கம், உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.இ.சண்முகலிங்கம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.தா.அமிர்தலிங்கம்,ஆகியோர் கலந்து கொண்டனர் .
மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி தொடர்ந்து  மாணவர்களின் அணிநடை வகுப்பு மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி,கலாசார நிகழ்ச்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.
1977092_1425343917712500_431083440_n 10461431_1601713530043368_7664319766495673610_n 11041705_1601724330042288_1435881361603848300_n 11037638_1601724653375589_8075889012000556814_n 11034303_1601724610042260_5155030907726916631_n 11034274_1601725003375554_6852838299203024570_n
IMG_7256 IMG_7251 11046361_1601724836708904_2675714569147977984_n 11043075_1601725273375527_870068991628611699_n IMG_7267 IMG_7271 IMG_7283 IMG_7301 IMG_7284
 .

வவுனியா விளாத்திக்குளம் சிதம்பரம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!(படங்கள்)!

வவுனிய விளாத்திக்குளம் சிதம்பரம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திருமதி தர்மராணி தலைமையில் 05.03.2015 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் இ.இந்திரராசா, ம.தியாகராசா, வவுனியா வடக்கு ஆரம்பபிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.நவரட்ணம், ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி, ஓமந்தை கிராம சேவையாளர் செல்வி அனுசியா, வர்த்தகர் திரு.சுரேஸ், ஆசிரிய ஆலோசகர் திரு.மகேஸ்வரன், வளவாளர் திரு.பகிரதன், ஓமந்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி யோகேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

1487435_840881355973871_4123565737572362017_n 1504987_840880089307331_6166670616831391382_n 10491217_840880292640644_7875481119627621234_n 11015216_840882572640416_4493092433353233692_n 11025963_840881479307192_17985848121960948_n 11037885_840880392640634_5486713689538905907_n 11043051_840880802640593_8513546395559442467_n 11044571_840881789307161_8424817211156023986_n 11045322_840881925973814_6844533881869879034_n

வவுனியா வைத்தியசாலைக்கு வடமாகாண சபையால் சிறந்த சுகாதார சேவைக்கான விருது-2014(படங்கள்)!

2014 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் சிறந்த சுகாதார சேவை வழங்கியமைக்கு விருது வழங்கும் விழா யாழில் இடம்பெற்ற போது வடக்கு முதலமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.

யாழ் நகரிலுள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் கடந்த 04.03.2015 புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில்   HEALTH EXCELLENT AWARD 2014 என்னும் விருது  சிறந்த சுகாதார வைத்திய சேவையை வழங்கியமைக்காக  வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலைக்கு வழங்கபட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களிற்கு 1300 மில்லியன் ரூபாய் செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் புதிதாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு மாகாணமும் ஏனைய மாகாணங்களைப் போன்று சிறந்த சேவையாற்றி வருகின்ற நிலையில் வடக்கு மாகாணத்தில் இன்றும் அதிகளவான தேவைகள் இருப்பதாகவும் எனினும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் கடந்த காலத்தில் நடைபெற்ற போரின் காரணமாக இங்குள்ள மக்கள் சொத்து மற்றும் உயிரிழப்புக்களை எதிர்நோக்கியிருந்தனர். அத்தோடு இந்தப் போரின் போது அவயங்களை இழந்த, பெற்றோர்களை இழந்த சிறுவர்களும் பெரியவர்களும் தற்போதும் பெரும் கஷ்ரங்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் நாட்டிலுள்ள 9 மாணாகங்களில் வடக்கு மாகாணத்தில் விசேட தேவையுடையோர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் சுகாதாரத் தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறையினர் ஏனைய மாகாணங்களை விட அதிகமாக உழைக்க வேண்டிய தேவை நிறையவே உள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்றாலும் வடக்கு மாகாணத்தின் சுகாதாரக் குறிகாட்டி ஏனைய மாகாணங்களுக்கு நிகராகவே உள்ளது. வடக்கு மாகாணத்தின் விசேட தேவைகளை ஆராய்ந்து ஐந்து வருடத்திற்கான சுகாதாரத் திட்டமொன்றினை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

எமது மாகாணத்தைப் பொறுத்தவரையில் சுகாதாரத்துறையில் ஆளணிப்பற்றாக்குறை நிறையவே காணப்படுகிறது. குறிப்பாக மாகாணத்திலுள்ள 101 வைத்தியசாலைகளில் 37 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையே இருக்கின்றது. இந்த நிலைமையானது நாட்டிலுள்ள மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் மட்டுமே காணப்படுகின்ற பிரதான குறைபாடாகும் என்றார்.

வடக்கில் பல ஆயிரக்கணக்கான விசேட தேவையுடையோர், கணவனை இழந்த பெண்கள் என எப்போதுமே பிரச்சனைகளின் மத்தியில் பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களினது நலனிலேயே வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் அக்கறை கொண்டு சேவைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் சத்தியலிங்கம் கேட்டுக் கொண்டார்.

1509017_606402022780981_198147470_n 10405428_788904077864107_49396337368443886_n 10408541_788904244530757_3190883160169083045_n 11046772_788904131197435_7516806130636907587_n 11046928_788904204530761_3243469308312245643_n IMG_4366-600x450 IMG_4381-600x450

சிறுநீரை அதிகமாக அடக்கி வைக்கக்கூடாது : ஏன் என்று தெரியுமா?

urine

சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுவது இயல்பான ஒன்று. ஆனால், பலரும் சூழ்நிலை காரணமாக பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள், குறிப்பாக பெண்கள், பயணம் மேற்கொள்ளும் போது மோசமான கழிவறை மற்றும் பல்வேறு காரணங்களால் சிறுநீரை அடக்குகிறார்கள்.

இது ஆபத்தானது. ஆண்களை விட பெண்களே அதிகளவில் சிறுநீரை அடக்குகிறார்கள். பொதுவாக மனிதனின் சிறுநீர்ப்பையின் கொள்ளளவு 350 முதல் 500 மி.லி. வரைதான் இருக்கும். எப்போதுமே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் சிறுநீர் கழித்து விடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக அடக்கி வைக்கக்கூடாது.

அதிலும் பெண்கள் சிறுநீரை அடக்க கூடாது. இதனால் பலவிதமான பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சிறுநீரை அடக்கக்கூடாது. இதனால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஒரு நாளில் காலை தொடங்கி இரவு வரை 5 முதல் 7 முறை சிறுநீர் கழிக்க வேண்டும்.

மூன்று மணி நேரத்துக்கு மேல் சிறுநீரை தேங்க விடக்கூடாது. சிறுநீர்ப்பையின் கொள்ளளவை மீறி சிறுநீர் தேங்குவதால் நிறைய விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சிறுநீர்ப்பை அதிகமாக விரிவடைவதால் சிறுநீர்ப்பையில் உள்ள அழுத்தம் கொடுக்க வேண்டிய திசுக்கள் காலப்போக்கில் பாதிப்படைந்து விடும்.

இந்த திசுக்கள்தான் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்ததுமே அதை வெளியேற்றத் தூண்டுகின்றன. இத்தகைய திசுக்கள் பாதிப்படைவதால் சிறுநீர்ப்பை செயலிழந்து போகும். சிறுநீர் முழுவதுமாக வெளியேற்றப்படாமல் உள்ளே தேங்கிவிடும் நிலை ஏற்படும்.

இப்படி உள்ளே சிறுநீர் தேங்குவதால் அடிக்கடி சிறுநீர்ப்பாதை அடைப்பு ஏற்படவும் சிறுநீர்ப்பையில் கல் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. நாட்கள் செல்லச் செல்ல சிறுநீரகங்கள் வீக்கமடைந்து செயல்இழந்து போகும் வாய்ப்பும் உண்டு. அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் சிலருக்கு வயிறு வீங்கிவிடும். சிறுநீர் கழித்து முடிந்ததும், அது சகஜ நிலைக்கு வந்து விடும். சிறுநீரை கட்டுப்படுத்தாமல் அவ்வப்போது வெளியேற்றுவது தான் ஆரோக்கியமான உடல் நலத்துக்கு நல்லது.

ஏ9 வீதியில் நடந்த வாகன விபத்தில் ஐவர் காயம்!!

முல்லைத்தீவு முறிகண்டி ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். முறிகண்டியிலிருந்து பரந்தனிற்கு குறுந்தூர சேவையில் ஈடுபட்டு வரும் பேரூந்துடன், கொழும்பிலிருந்து வந்த லொறி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் பேரூந்தில் பயணம் செய்த ஐவர் காயமடைந்துள்ளனர். மோதிய வாகனம் பேருந்துடன் மோதி குடை சாய்ந்ததுடன், பேருந்து வீதியை விட்டு விலகி சென்றுள்ளது.

வீதியினருகின் உள்ள பனை மரத்துடன் இரண்டு வாகனங்களும் மோதியுள்ளன.
விபத்து தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

A1A2

ஒரு மணிநேரம் காத்திருந்து லண்டன் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

Maithri

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஈ.கே. 651 என்ற விமானத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.13க்கு டுபாய் ஊடாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஜயந்தி சிறிசேன, ஜனாதிபதி ஆலோசகர் டாக்டர் கிறிஸ் நோனிஸ் உள்ளிட் 6 பேர் லண்டன் புறப்பட்டனர்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் சாதாரண பயணிகளைப் போன்று ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்குச் சென்று காத்திருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வெதுப்பகம் திறந்து வைப்பு!!(படங்கள்)

வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்ட வெதுப்பகம் அமைக்கப்பட்டு அந்த கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு நேற்று(06.03) வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக திறக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெதுப்பகமானது 1.5 மில்லியன் ரூபாய் செலவில் அந்த கிராம மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் பிரதான நோக்கோடு அமைக்கப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் , சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் ,வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜி.டி.லிங்கநாதன் மற்றும் திரு.தியாகராஜா , வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.மோகநாதன் ,செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அப்பகுதியின் கிராம சேவகர் ஆகியோர் இணைந்து குறித்த வெதுப்பகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்து பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

21 22 2324 25 26 27 28

வவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்!!(படங்கள்)

வவுனியா மாவட்டத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் செயற்திட்டம், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் நேற்று (06.03) வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், மற்றும் ந.சிவசக்தி ஆனந்தன்,

வடமாகாண சபை உறுப்பினர்களான திரு.ஜி.டி.லிங்கநாதன், திரு.தியாகராஜா, திரு.இந்திரராஜா, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.மோகநாதன் மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளர் திரு.பெலிசியன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 06 மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு பாத்திரப் பொருட்களும், அலுவலக தளபாடங்கள், கதிரைகள் என்பனவும், சுமார் 25 பெண்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

11 12 13 14

யாழில் இடம்பெற்ற இளம் காதல் ஜோடியின் வினோதத் திருமணம்!!

யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வித்தியாசமான முறையில் படகில் அமைக்கப்பெற்ற அலங்காரப் பந்தரில் காதல் ஜோடியின் திருமணம் ஒன்று மாலை இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த யாழ். கல்லூரி ஒன்றில் உயர்கல்வியை மேற்கொண்டு வரும் சாம்ஜெயவேல் பானுமதி ஆகிய காதல் ஜோடியினருக்கே இந்த வினோத திருமணம் யாழ். வல்வெட்டித்துறையில் ரேவடி கடற்பரப்பில் இடம்பெற்றது.

குறித்த இந்த நிகழ்வு மாலை 5 மணியளவில், உல்லாச பயணிகளுக்கென யாழில் வடிவமைக்கப்பட்டு, வல்வை கடலில் சேவையிலீடுபடும் “Valvai Blues Boat” என்னும் சிறிய உல்லாசப் படகில் இடம்பெற்றது. குறித்த இந்த வினோத திருமணம் சுற்றத்தவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

1 2 3 4

அமெரிக்க நியூயோர்க் நகரில் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்து!!

அமெ­ரிக்கா நியூயோர்க் நக­ரி­லுள்ள லாகார்­டியா விமான நிலை­யத்தில் பய­ணிகள் விமா­ன­மொன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வேலியில் மோதி வியா­ழக்­கி­ழமை விபத்­துக்­குள்­ளா­னதில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவின் பெரும்­பா­லான பகு­தி­களில் வீசி வரும் பனிப்­புயல் கார­ண­மா­கவே இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது.மேற்­படி விபத்­தை­ய­டுத்து விமா­னத்­தி­லி­ருந்த 127 பய­ணி­களும் 5 விமான ஊழி­யர்­களும் உட­ன­டி­யாக வெளி­யேற்­றப்­பட்­டனர்.

அவர்­களில் 24 பேருக்கு சிறி­ய­ள­வான காயங்கள் ஏற்­பட்­டி­ருந்­தா­கவும் எவரும் பார­தூ­ர­மான காயங் ­க­ளுக்கு உள்­ளா­க­வில்லை எனவும் கூறப்­ப­டு­கி­றது.

காய­ம­டைந்­த­வர்­களில் இருவர் மட்டும் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளனர்.அட்­லான்­டா­வி­லி­ருந்து நியூ­யோர்க்­கிற்கு பய­ணத்தை மேற்­கொண்ட ‘டெல்ற்றா 1086’ விமா­னமே இவ்­வாறு விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. இந்த விபத்தால் விமா­னத்தின் முன் ­ப­கு­தியும் இறக்­கை­யொன்றும் சேத­ம­டைந்­துள்­ளன.

F1 F2

வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்திற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வர்ணப்பூச்சு கையளிப்பு!!(படங்கள்)

வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் கட்டடங்களின் புனரமைப்புக்காக பாடசாலை அதிபர் திரு.எஸ்.வரதராஜா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வர்ணப்பூச்சு நேற்று வெள்ளிக்கிழமை (06.03) காலை 10.00 மணியளவில் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து பாடசாலையின் பௌதீக வளர்ச்சி தொடர்பாகவும் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இவ் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பாடசாலை அதிபர் திரு.எஸ்.வரதராஜா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஊடக இணைப்பாளர் திரு.ம.சஞ்சீவன், செயலாளர் திரு.ஸ்ரீ.கேசவன், பொருளாளர் திரு.த.நிகேதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

30 31 32 33 34 35 36

காலிறுதிக்கு இந்தியா முன்னேறிய இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!!

IND

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது 4வது லீக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், தொடர்ந்து 4 லீக் போட்டிகளிலும் வென்று 8 புள்ளிகளுடன் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது.

இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலக கிண்ண போட்டியின் 28வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதிக்கொண்டன. இதில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஹோல்டர் 57 ஓட்டங்களை பெற்றார். இந்நிலையில் 44.2 ஓவர்களில் மேற்கிந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக முஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

வெற்றிக்கு 183 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 39.1 ஓவர்கள் நிலையில் 6 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

ஜெயலலிதாவின் 22 ஆண்டு கால வழக்கு முடிவுக்கு வந்தது!!

Jeyalalitha

ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான டான்சி நில வழக்கு 22 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் அரசு நிறுவனமான தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்துக்குச் (டான்சி) அமைந்துள்ளது. அந்த தொழிற்பேட்டைக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை 1992ம் ஆண்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த ஜெயா பப்ளிகேஷனுக்காக வாங்கியதில் அரசுக்கு 2.76 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2000ம் ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தாலும், தண்டனையை ரத்து செய்யவில்லை.

பின்னர் 2003ம் ஆண்டு இவ்வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுவித்து டான்சி சொத்தை திருப்பித் தர வேண்டும். என்று 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

முன்னதாக 1993ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆலந்தூர் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்றது சட்டவிரோதம் என்பதால், அந்த விற்பனைப் பத்திரத்தை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இந்த வழக்கு கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட குழு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது டான்சிக்கு சொந்தமான சொத்து அந்த நிறுவனத்துக்கே திருப்பித் தரப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டதோடு இந்த வழக்கு அவசியமற்றது என்று வாதிடப்பட்டது.

மேலும், இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் ஆலந்தூர் பாரதி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ள‌னர்.

பலாத்காரம் செய்த நபரை நடுவீதியில் அடித்தே கொன்ற மக்கள்!!(வீடியோ)

இந்திய மாநிலமான நாகலாந்தில் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபரை பொது மக்கள் இழுத்து வந்து சரமாரியாக தாக்கி கொன்றுள்ளனர்.

வங்கதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து சிமாப்பூருக்கு வந்த சையது என்ற அந்த நபர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் 20 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கடந்த மாதம் 25ம் திக‌தி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிமாப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த‌ பலாத்கார சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சிமாப்பூரில் திரண்ட 4000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக மத்திய சிறைக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டனர்.

பின்னர், சிறையில் நுழைந்த அவர்கள் சையதை வெளியே இழுத்து வந்து நிர்வாணப்படுத்தி அடித்ததில் படுகாயம் அடைந்த அந்த வாலிப‌ர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

11 12 13

 

தென் கொரிய தலைநகரில் அமெரிக்கத் தூதுவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய நபரால் பரபரப்பு!!

Korea

தென் கொரி­யாவின் தலை­நகர் சியோலில் அந்­நாட்­டிற்­கான அமெ­ரிக்கத் தூதுவர் மார்க் லிப்பேர்ட் வியா­ழக்­கி­ழமை நப­ரொ­ரு­வரின் கத்திக் குத்தில் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

சியோல் நகரில் இடம்­பெற்ற காலை விருந்­து­ப­சார நிகழ்ச்­சி­யொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மீது கத்திக் குத்து நடத்­தப்­பட்­டுள்­ளது.தாக்­குதல் நடத்­திய 55 வய­தான கிம் என்ற சுருக்கப் பெயரால் அழைக்­கப்­படும் குறிப்­பிட்ட நபர், “வட கொரி­யாவும் தென் கொரி­யாவும் இணைக்­கப்­பட வேண்டும்’ என கூச்­ச­லிட்­ட­வாறு கத்­தி­யுடன் லிப்­பேர்ட்டை நெருங்கி “போர் பயிற்­சிக்கு இட­மில்லை” எனத் தெரி­வித்­த­வாறு இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

தாக்­கு­தல்­தாரி லிப்­பேர்ட்டின் வலது கன்­னத்­திலும் இடது மணிக்­கட்டுப் பகு­தி­யிலும் கத்­தியால் வெட்­டி­யுள்ளார்.இதனால் அதிர்ச்­சி­யுடன் குருதி பெருக்­கெ­டுத்­தோட லிப்பேர்ட் நின்­றி­ருக்க, பொலிஸார் கிம்மை உட­ன­டி­யாக மடக்கிப் பிடித்துக் கைது­செய்­துள்­ளனர்.

மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட லிப்பேர்ட் அறு­வைச்­சி­கிச்­சை­யொன்று உட்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் அவ­ரது உயி­ருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும் தென் கொரிய அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.கிம், கொரிய தேசி­ய­வாத செயற்­பாட்­டா­ளர்­க­ளுடன் தொடர்­பு­பட்ட ஒருவர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அவர் 2006 ஆம் ஆண்­டிற்கும் 2007 ஆம் ஆண்­டிற்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில் ஆறு தட­வைகள் வட கொரி­யா­வுக்கு பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்­த­தாக புல­னாய்வு அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

2011 ஆம் ஆண்டில் கிம், வட கொரிய மறைந்த தலை­வலர் கிம் – யொங் இல்­லிற்­காக சியோலில் ஞாப­கார்த்த ஸ்தல­மொன்றை அமைக்க முயன்­ற­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்தத் தாக்­கு­த­லா­னது தென் கொரிய, அமெ­ரிக்க கூட்­டி­ணைப்பு மீதான தாக்­குதல் என தென் கொரிய ஜனா­தி­பதி பார்க் கெயுன் – ஹை குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வருடாந்த இராணுவ பயிற்சிகள் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!!

AL

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 31ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் பெப்ரவரி 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. முன்னதாக மார்ச் 6ம் திகதியுடன் (இன்றுடன்) விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தது.

எனினும் இந்தக் கால எல்லை எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.