விபத்தில் இழந்த கைகளை மீண்டும் பொருத்தி மருத்துவர்கள் சாதனை!!

Hand

வீதி விபத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவரின் கைகள் ரயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த 30 வயது நபருக்கு கேரளாவில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

விபத்துக்களில் இறந்தவர்களின் கண், இருதயம், சிறுநீரகம், நுரையீரல், எலும்பு போன்ற உறுப்புகளை தானம் செய்வதை போல கையையும் தானம் செய்யலாம்.

உலக அளவில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளில் இதுவரை 110 பேருக்கு கை மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதல்முறையாக கொச்சியில் அம்ரிதா மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையின் பிளாஸ்டிக் சேஜரி பிரிவின் தலைமைமருத்துவர் சுப்ரமணிய ஐயர் தலைமையில் மனு என்பவருக்கு கை மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது

20 மருத்துவர்களுடன் 16 மணிநேரம் நடந்த இந்த சிகிச்சையில், ரயில் விபத்தில் இழந்த இரண்டு கைகளையும் திரும்ப பெற்றுள்ளார்.

மனுவை அறுவை சிகிச்சை முடிந்தபின் செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்த மருத்துவர் சுப்ரமணிய ஐயர் பேசுகையில், பிறவியிலோ, வாகன விபத்திலோ, இயந்திரத்தில் சிக்குவதாலோ மணிக்கட்டு பகுதியை ஒருவர் இழந்துவிட்டால் எந்த வேலையையும் செய்ய இயலாது.

அவருக்கு “ரி பிளான்டேஷன்’ என்ற முறையில் கையை பொருத்தலாம். இதற்கு துண்டான கையை பிளாஸ்டிக் கவரில் சுற்றி, ஐஸ் பெட்டிக்குள் வைத்து கொண்டு வரவேண்டும்.

மற்றொன்று “டிரான்ஸ் பிளான்டேஷன்’ என்ற முறையில், கையை தானமாக பெற்றும் பொருத்த முடியும்.

இதற்கு “மைக்ரோ சேஜரி’ என்ற தொழில்நுட்பம் உதவுகிறது. ரத்தம், சிறுநீரகம் போல கை தானமாக கிடைத்தால் போதும்.

மேலும்,மூளைச் சாவு அடைந்தவரின் கையை எடுத்து, தேவைப்படுவோருக்கு பொருத்துவதன் மூலம், அவருக்கு “புதிய கை’ கிடைக்கிறது. இதனால் கையை இழந்தவர்கள் பெரிதும் பயனடைவர் என்று தெரிவித்துள்ளார்.

கையில் தேசிய கொடியுடன் பாரத மாதா தோற்றத்தில் தோன்றிய குஷ்பூவால் வெடிக்கும் சர்ச்சை!!

kushbu

மதுரையில் நடிகை குஷ்பூவை பாரத மாதா போன்ற தோற்றத்தில் சித்தரித்து வைக்கப்பட்ட பனருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 26ம் திகதி மதுரை உத்தங்குடி பேருந்து நிறுத்தம் அருகே காங்கிரஸ் சார்பில் பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.

அந்த பேனரில், இந்திய வரைபடத்திற்குள், சிங்கத்தின் மேல் குஷ்பூ பாரத மாதா உருவத்தில் கையில் தேசிய கொடியுடன் இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டு இருந்துள்ளது.

இத்தனை நாட்களாக இந்த பனரில் இருப்பது குஷ்பூதான் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், நேற்று இது குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, தேசிய சின்னம் மற்றும் தேசிய கொடியை அவமதித்ததற்காக காங்கிரஸ் கட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க. துணைத்தலைவர் ஹரிகரன் புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

பின்னர், இந்த புகாரையடுத்து, சர்ச்சைக்குரிய பேனரை காவல்துறையினர் தற்போது அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

kushbu1

யுவதியை கொலை செய்து தண்டவாளத்தில் தலைவைத்து சந்தேகநபர் தற்கொலை!!

track

27 வயது திருமணம் முடித்த யுவதியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து நபர் ஒருவர் ரயிலில் மோதுண்டு தற்கொலை செய்து கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காலி, தடுல்ல, மஹமுதலி பகுதியில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதியின் கணவரது சிறிய தந்தையே இவ்வாறு கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிங்தொட்ட பாலத்திற்கு அருகில் ரயில் பாதையில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தலை பகுதியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலின் போது யுவதியின் மூத்த சகோதரர் மற்றும் தாய் காயமடைந்துள்ளதுடன் காலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப்பரீட்சை திகதிகள் அறிவிப்பு!!

vembadi-al-exam

2015ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப்பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி பரீட்சை ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.

கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை ஆகஸ்ட் 4ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவில் வீட்டுக்குள் புகுந்த விசித்திர உயிரினம்!!

முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியில் நேற்றிரவு ஒருவரின் வீட்டுக்குள் வித்தியாசமான உயிரினம் ஒன்று புகுந்துள்ளது. அதனை இனம் கண்டுகொள்ளாத வீட்டுக்காரர் அயலவர்களுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த பொலிஸார் அது அணுங்கு (Pangolin) என்ற உயிரினம் என கண்டுகொண்டனர். சுமார் 3 அடி நீளமான இந்த அணுங்கை மீண்டும் காட்டில் பொலிஸார் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

M M2

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!!(படங்கள்)

காணாமல் போனோரின் உறவுகள் இன்று செவ்வாய்கிழமை (03.02.2015) வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் நாங்கள் இயக்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் பிரஜைகள் குழுவின் தலைவர் எஸ். தேவராஜா தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தது.

இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.தியாகராஜா, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சி. பாஸ்கரா, வவுனியா நகரசபையின் முன்னாள் உபதலைவர் சிந்திரகுலசிங்கம், வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை உப தவிசாளர் ரவி, உறுப்பினர் க.பரமேஸ்வரன், தர்மலிங்கம் மற்றும் மனியத உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்படல் வேண்டும். அரசியல் கைதிகள் எனும் சொற்பிரயோகமே இலங்கையில் புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளும் மறுப்பேச்சின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும். இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர் பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் குடிமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

குறித்த இரகசிய முகாம்கள், இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்பட்டன. அவற்றை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார் என்பனபற்றியெல்லாம் நாட்டின் குடிமக்களுக்கு வெளிப்படுத்தப்படல் வேண்டும். கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறப்படல் வேண்டும். மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நீதி மற்றும் இழப்பீடுகள் வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

V1IMG_6111IMG_6115IMG_6116IMG_6118IMG_6119IMG_6120IMG_6122IMG_6125IMG_6129IMG_6131IMG_6132

மலேசியாவில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா!!(படங்கள்)

தைப்பூசமான இன்று (03.02.2015) அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்புப் பூசைகளும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.

உலகப் புகழ் பெற்ற மலேசியா முருகன் ஆலயத்திலும் மிகச் சிறப்பாக தைப்பூச நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இலட்சக் கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டுள்ளதுடன், முருகப் பெருமானுக்கு பல்வேறுபட்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதை காணக் கூடியதாகவுள்ளது.

-திவாகரன்-

image-0a91398605f801b4a824926ed3870fb265c2ce98ffca44d665cd0f3a9bcace49-V image-1c208044a02adaeb8c6ca0b491c9f086204a2398af6779dd85225972057bd9af-V image-2d577b512513524d35cbd69d7961d9ab8414060b8f04cb5a6cedc7ef97cb96bf-V image-8e2607db4cd9601eb3336fd9049bd596ad401e10dadd5cc69de019e279dce19a-V image-83ff6c4723d768246a83f02b2c8e9ef94f471f70b29befbf3b6aa3fa4e34fb8e-V image-91a94d668631179656128ae699ad36c47af2c4ca3c40989f92c9ddfdd734f04c-V image-308ec6fa585d464e5236d4f91f56fcf440504fbb71d93c2ac2bcd46e3a2bbbba-V image-987f3128dad6a946c3061046852fa15e5d23c63486e8ff99efa680dcb58d41b3-V image-8538c343f14beebfea75b088c2daaaa7f38885289ac70fb9099702b6204acfb4-V image-15453a331c805ea605ac061feb0eafabaa4f8bc3cc70d9bd88bd3faf6db9fdf6-V image-b1e03b74fb6e5c1e5762025fd8a474e0412315e9c21fa11de9e5de6add114469-V image-c330a00dca4be5da556992310bd73176be8f27bb7140c670fc48bb25f066f081-V image-dbf3276d120ae63d04d0f63c3995e02467c7a2d7b92c9002acf21b0f2a682771-V

வவுனியாவில் மரக்கடத்தலில் ஈடுபட்ட 9 பேர் கைது!!

வவுனியா விளாகத்திக்குளத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்ட 9பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக விசேட அதிரடிப்படையினர் நேற்று (02.02) தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

விளாத்திக்குளம் புதுவெளிக்குளம் காட்டுப்பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலின்போதே வெட்டி வீழ்த்தப்பட்ட 90 அதிகமான மரங்களும் அதற்காக பயன்படுத்தப்பட்ட கருவிகளும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மரக்கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் அப்பிரதேச காடுகளில் நின்ற 9 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைத செய்யப்பட்டு மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

11 12 13

சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை!!

jaffna

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

பிரதானமான 28 வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வரும் 75 வயதுக்கும் அதிகமான கைதிகளைத் தவிர்ந்த ஏனைய சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச் செயல்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் 75 வயதுக்கும் அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

அபராதப் பணத்தை செலுத்த முடியாது தண்டனை அனுபவித்து வரும் கைதிகளும் நாளை விடுவிக்கப்பட உள்ளனர்.

மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது தண்டனை அனுபவித்து வரும் சகல கைதிகளினதும் தண்டனை காலத்தில் ஒரு வார காலத் தண்டனை குறைப்பினை மேற்கொள்ள சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியாவிற்கு பாப்பரசரின் பிரதிநிதி விஜயம்!!

பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கைக்கான அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பியரே நியு ஜென்வன் ரொட் நேற்று வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திற்கு அண்மையில் வைத்து அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டதுடன் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் சூழ ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதனையடுத்து கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் முயற்சியால் அமைக்கப்பட்ட அந்தோனியார் திருவுருவத்தை திறந்து வைத்து விசேட ஆராதனைகளை மேற்கொண்ட பேராயர் இந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுத்திருந்தார்.

இந் நிகழ்வுகளில் மன்னார் ஆயர் இராயேப்பு ஜோசேப் ஆண்டகை உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

pop  Pop3 Pop4Pop2

வவுனியா ஓமந்தையில் இனி சோதனை நடவடிக்கை இல்லை!!

Omanthai

வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பேரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைள் இன்று நண்பகல் முதல் தளர்த்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அங்கிருக்கும் சோதனைச் சாவடி அகற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சோதனைச் சாவடி ஊடாக பயணிக்கும் வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மற்றும் பயணிகளை சோதனையிடும் நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

இருந்தும் வடபகுதியிலிருந்து இரும்பு கொண்டு செல்லும் வாகனங்களின் விவரம் தொடர்ந்து பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டுப் பிரஜைகள் வடபகுதிக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரில் நாளை 4மணி நேர நீர் வினியோகத் தடை!!

Water

வவுனியா நகரை(Town) அண்டிய பகுதிகளுக்கு நாளை (03.02) செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 12 மணி வரை நீர் வினியோகம் தடை செய்யப்படவுள்ளதாக வவுனியா நீர் வடிகாலமைப்புச் சபையில் பொறுப்பதிகாரி திரு.ராகுலன் வவுனியா நெற் இணையத்திற்குத் தெரிவித்தார்.

அவசர திருத்த வேலைகளின் காரணமாக 4 மணிநேரம் நீர் வினியோகம் தடை செய்யப்படவுள்ளதாகவும், வவுனியா நகரை அண்டிய பொதுமக்கள் முன்னேற்ப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.

நாளையும் மற்றும் நாளை மறுதினங்களில் மதுபான கடைகள் மூடப்படும்!!

Closed

பௌர்ணமி மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள சகல மதுபான கடைகளும் மூடப்பட உள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் வசந்த ஹபுவாரச்சி அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாட்டின் சகல கலால் திணைக்கள பொறுப்பதிகாரிகளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என வசந்த ஹபுவாரச்சி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!!

Parli

பொது மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேச சபை தலைவர் தியாகரட்ன அல்விஸ் மீது பிரதேச சபை மாதாந்த கூட்டத்தின் போது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் தொடர்பு இருப்பதாகவும் அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர உள்ளதாகவும் அவர் கூறினார். இன்று பிற்பகல் பாராளுமன்றம் கூடிய போதே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, மொஹான் பீரிஸ் தொடர்பான விசேட விவாதம் தற்போது பாராளுமன்றில் இடம்பெற்று வருகிறது. இரவு 8 மணிவரை இவ்விவாதம் இடம்பெறும்.

இதனை முன்னிட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்தவாறு பாராளுமன்றில் அமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கைது : 11ம் திகதி வரை விளக்க மறியலில்!!

Thissa

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக அவருக்கு சுகாதார அமைச்சர் பதவியும் கிடைக்கப்பெற்றிருந்தது. சுமார் இரண்டு வாரங்கள் வரை அவர் சுகாதார அமைச்சர் பதவியில் செயலாற்றியிருந்தார்.

இக்காலப்பகுதியில் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் அவ்வாறான ஒரு ஆவணம் ஒன்றையும் அவர் வெளிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் குறித்த ஒப்பந்தம் போலியானது என்றும், அவ்வாறான ஒரு ஒப்பந்தம் நடக்கவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி விளக்கமளித்திருந்தது. அத்துடன் இது தொடர்பாக பொலிசிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிசார், தமது விசாரணைகளை தொடர்வதற்கு வசதியாக திஸ்ஸ அத்தநாயக்கவை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்க 11ம் திகதி வரையில் விளக்க மறியலில்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தநாயக்கவை குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று காலை கைது செய்திருந்தனர்.

பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க தேர்தல் பிரச்சாரக் காலத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பிலான ஆவணங்களையும் அத்தநாயக்க சமர்ப்பித்திருந்தார். குறித்த ஆவணம் போலியானது எனவும் அதற்கான ஆதாரங்கள் உண்டு எனவும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நடத்துவதற்காக திஸ்ஸவை விளக்க மறியலில் வைக்குமாறு குற்ற விசாரணைப் பிரிவினர் கோரியுள்ளனர்.

வட மாகாண பிரதம செயலாளர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்!!

வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக ஏ.பத்திநாதன் இன்றைய தினம் தனது கடமைகளை திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆட்சியமைத்ததன் பின்னர் வடமாகாணத்திற்கான ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பேசி நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் ஆகியோர் உத்தியோகபூர்வமாக தங்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ஆளுநர் பலியகார காலை 9.20 மணிக்கு யாழ்.பழைய பூங்கா வளாகத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் பின்னர் காலை 10.20 மணியளவில் பிரதம செயலாளராக பத்திநாதன் யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

1 2 3