தானங்களின் பலன்

தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையானபலன் கிடைக்கும்?

நெய் தானம் – பினி நீங்கும்

அரிசி தானம் – பாவம் அகலும்

தேங்காய் தானம் – காரிய வெற்றி

ஆடை தானம் – ஆயுள் விருத்தி

தேன் தானம் – புத்திர விருத்தி

அன்னதானம் – ஆண்டவன் அருள்

 

ராசிகளும், நட்சத்திரங்களும்

astrology_symbol


ராசிகள் நட்சத்திரங்கள்
மேஷம் அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
ரிஷபம் கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரீஷம் 2-ஆம் பாதம்
மிதுனம் மிருகசிரீஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம்
கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம்
சிம்மம் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்
கன்னி உத்திரம் 2-ஆம் பாதம் முதல், அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம்
துலாம் சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம்
விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை
தனுசு முலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
மகரம் உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம்
கும்பம் அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம்
மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி

 

 

திருக்குறள் மின் புத்தகம்

 

thirukural

பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது.

அனைத்து குறள்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்களை தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும்  PDF வடிவத்தில் மின் புத்தகமாக தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்.