எரிமலை அருகே பறந்த வேற்றுகிரகவாசி!!(வீடியோ)

மெக்சிகோவில் எரிமலை அருகே பறக்கும் குதிரையை பெண் ஒருவர் படம்பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ சிட்டியில் இருந்து 300 மைல் மேற்கே உள்ள கோலிமா என்ற எரிமலை கடந்த வாரம் வெடித்தது.

தற்போதும் புகையை கக்கிக்கொண்டிருக்கும் அந்த எரிமலைக்கு அருகே பறக்கும் குதிரை போன்று தோற்றமளிக்கும் உருவம் ஒன்றை லயோலா (24) என்ற பெண் பார்த்துள்ளார். அப்போது அந்த காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோவாக தனது கமெராவில் பதிவு செய்துள்ளார்.

ஆனால் அதை உற்றுப்பார்த்தபோது குறுகிய மேல்பாகம் பருத்த மத்திய பாகம் கூர்மையான கீழ்பாகம் இருந்ததாகவும் நிச்சயமாக அது பறவை இல்லை என்றும் காரணம் அந்த உருவத்தில் எந்த அசைவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும் சில நிமிடங்களில் அது அவரது பார்வையிலிருந்து மறைந்துள்ளதால், அது நிச்சியம் வேற்றுகிரக வாசி தான் என இணையத்தில் வீடியோவை பார்த்தவர்கள் திட்டவட்டமாய் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய வேற்றுகிரக வாசிகளின் ஆர்வலர் கராஸ்கோ, எரிமலை ஏலியன்களை ஈர்க்கக்கூடிய ஒரு இடமாகவே இருக்கிறது என்றும் அவர்கள் நம் கிரகத்திலிருந்து சாம்பிள் எடுத்துச்செல்வதற்காக வந்திருக்கலாம் எனவும் பேசியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் வேற்றுகிரகவாசிகள் குறித்த மர்மமாக இருக்கப்போவதாக கூறப்படுகிறது.

1 2 3

ஆணாகப் பிறந்து இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் : மருத்துவ துறையில் அதிசய சம்பவம்!!

பிரித்தானியாவில் பிறப்பால் ஆணாக பிறந்த பெண் நபர் ஒருவர், அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது மருத்துவ துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பெட்ஃபோர்ட் நகரில் வசித்து வரும் ஹைலி ஹயனாஸ் (28) என்பவர் பிறப்பால் மரபணு ரீதியாக ஆண் ஆவார். இவர் பிறக்கும்போதே, பெண்களுக்குரிய கர்பப்பை, இனப்பெறுக்க உறுப்பு இல்லாமல், ஆண்களுக்கு இருக்க கூடிய XY குரோமோசோம்களுடன் பிறந்துள்ளார்.

இவரது, 19 வயதில் மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையில், இவரால் கர்ப்பம் தரிக்க முடியாது என தெரிவித்ததால், மனமுடைந்து இவர், விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.

இருப்பினும் நம்பிக்கையை இழக்காத இவர், பல தொடர் பரிசோதனைகளை மேற்கொண்டார். கடைசியாக பிரித்தானியாவில் உள்ள ரோயல் டெர்பி மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அவரது வயிற்றிற்குள் புதிதாக ‘மில்லி மீற்றர்’ அளவுள்ள கர்ப்பபை வளர்வதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

மில்லி மீற்றர் அளவுள்ள கர்ப்பப்பை மேலும் வளர வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, சுமார் 4 வருடங்கள் கர்ப்பபை ஆரோக்கியமாக வளர காத்திருந்தார்.

அதன் பிறகு IVF என்று அழைக்ககூடிய ‘ஆணின் உயிரணுக்களை பெண்ணின் கர்ப்பப்பையிற்குள் செலுத்தி குழந்தை பெறும் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட அவர் சுமார் 10,500 பவுண்டுகளை சைப்ரஸில் நடந்த IVF சிகிச்சைக்கு செலவிட்டார். இந்த சிகிச்சையில் ஹய்லே ஹய்நேஸ் குழந்தை பெறுவதற்கு 60 சதவிகித வாய்ப்பு மட்டுமே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

சில மாதங்களுக்கு பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கர்ப்பபையிற்குள் இரண்டு குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதாக தெரிவித்தனர்.

இந்த செய்தியை கேட்டதும் தான் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றதாகவும், ஒரு முழு தாய்மையை உணர்வதாகவும், மேலும், தனது 9 வருட மன உளைச்சலிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது 28 வயதாகும் ஹய்லே ஹய்நேஸ் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து, அவர்களுக்கு அவரி மற்றும் டார்சி என பெயர்கள் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

L L1 L2

முத்தரப்பு தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி கிண்ணம் வென்ற அவுஸ்திரேலிய அணி!!

Aus

இங்கிலாந்து அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா 112 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கடைசியாக நடந்த லீக் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. இதைத் தொடர்ந்து பெர்த்தில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை சந்தித்தது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் மோர்கன் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அவுஸ்திரேலிய அணி 50 ஓவர் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவுஸ்திரேலிய அணி சார்பாக மக்ஸ்வெல் 90 ஓட்டங்களையும், மிச்சல் மார்ஸ் 60 ஓட்டங்களையும் புலுங்க்னர் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

279 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 39.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களில் சுருண்டது. இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 112 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் மெக்ஸ்வெல் தெரிவானதுடன், தொடர் நாயகனாக மிட்செல் ஸ்டார்க் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மரத்தில் நிர்வாணமாக தொங்கவிடப்பட்ட 3 வயது பெண் குழந்தை : காரணம் என்ன?

Hang

பீகார் மாநிலத்தில் 3 வயது பெண் குழந்தை மரணத்தில் நிர்வாணமாக தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் தர்பாங்கா மாவட்டத்தில் பெண் ஒருவர் கடந்த வியாழனன்று, தனது 3 வயது பெண் குழந்தையுடன் தயானந்த மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். தாயும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்தபோது அங்கிருந்த அறிமுகம் இல்லாத நபர் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து சொக்லெட் வாங்கித் தருவதாக சொல்லிவிட்டு குழந்தையை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் குழந்தை திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த அப்பெண் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து பொலிசார், குழந்தையை தீவிரமாக தேட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மதுபானி மாவட்டத்தின் பங்கா கிராமத்தில் உள்ள மரத்தில் ஆடைகள் இல்லாமல் சுயநினைவற்ற நிலையில் அந்த பெண் குழந்தை தலைகீழாக தொங்க விடப்பட்டிருப்பதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலியல் ரீதியாக குழந்தை துன்புறுத்தப்பட்டதா என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு வெளியான பின்பு தான் என்ன நடந்தது என்று தெரியவரும் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செல்ஃபி மூலம் மனநிலையை கண்டுபிடிக்கும் புதிய மென்பொருள்!!

Selfie

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி வீடியோக்கள் மூலமாக மனநிலையை அறிந்து கொள்ளும் புதிய அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் மோன்ரோ கவுண்டியில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணினியை மையமாகக்கொண்ட அப்ளிகேஷன் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

இது சமூக வலைதளங்களில் பதிவேற்றும் செல்ஃபி வீடியோவை ஆய்வு செய்து அதை பதிவேற்றிய ஆண் அல்லது பெண்ணின் மன நிலையை தெளிவாக கூறுகிறது. இந்த அப்ளிகேஷன், கணனி மற்றும் போன் பயன்படுத்துகையில் நமது நடத்தைகளை தொடர்ந்து உற்று நோக்குகிறது.

நமது நெற்றியில் ஏற்படும் வண்ண மாற்றங்கள், இதயத்துடிப்பு, கண் இமைகளின் துடிப்பு, தலையின் அசைவு, டிவிட்டரில் வெளியிடும் டிவிட்டுகள், கணனி அல்லது போனில் தட்டச்சு செய்யும் வேகம், மவுஸ் ஸ்க்ரோல் செய்யும் வேகம் போன்றவற்றையும் கண்காணித்து உங்கள் மனநலம் எவ்வாறு உள்ளது என்று தெளிவாகச்சொல்கிறது.

இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் மன நிலையை சொல்லவோ, தகவல்களை அளிக்கவோ அல்லது சிறப்பு ஹெட்செட் எதுவும் அணியத்தேவை இல்லாததே இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சமாக உள்ளது.

27 பங்கேற்பாளர்களைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு டெக்சாஸின் தலைநகர் ஆஸ்டினில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா கூமாங்குளத்தில் மூத்த பிரஜைகள் கௌரவிப்பு நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா கூமாங்குளம் வித்திவினாயகர் வித்தியாலயத்தில் மூத்த பிரஜைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(31.01) நடைபெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் ப.உதயராசா, சமுர்த்தி பணிப்பாளர் திருமதி சந்திரகுமார், கூமாங்குளம் வித்திவினாயகர் வித்தியாலய அதிபர் திரு.தர்மகடாசம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களான திரு ப.தர்மலிங்கம், திரு.ஜோர்ச் வாஷிங்டன், வைத்தியர் மதிதரன் உட்பட பெருந்திரளான பிரதேச மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது பிரதேசத்தைச் சேர்ந்த பல மூத்த பிரஜைகள் கௌரவிக்கப்பட்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 2 - Copy 1 - Copy

வவுனியாவில் காணாமல் போனனோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!!

v

அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர் தொடர்பான தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் ‘நாங்கள்’ அமைப்பு ஆகியன இணைந்து நடத்தவுள்ளது. இது தொடர்பில் அவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு..

இலங்கை தனது 67 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி விட்டது. தன்னை ஒரு ஜனநாயக நாடாகவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும், அவற்றைப் பேணிப் பாதுகாக்கும் கனவான்களின் நாடாகவும், காட்டிக்கொள்ள வழமை போலவே இந்த வருடமும் முயற்சிக்கின்றது. ஆயினும் முன்னைய வருடங்களைப் போல அல்லாது, இம்முறை இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது.

ஆனால் இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைகளினதும் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவும், இலங்கையிலுள்ள அனைத்து குடியினங்களாலும் நிராகரிக்கப்பட்டதாகவும் உள்ள ‘பயங்கரவாத தடைச்சட்டம்’ நீக்கப்படவில்லை. சிவில் சமூகத்துக்கும் பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்கும், சவால் விடுவிக்கும் இந்தச் சட்டம் ஒன்றே, இலங்கையில் இன மொழி சமய கலாசார வேறுபாடின்றி, பல ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளின் எதிர்காலத்தை சூனியமாக்கியது.

எவ்விடத்திலும் எவ்வேளையிலும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்’என்ற நமட்டுத்துணிச்சலையும் அசட்டு அதிகாரத்தையும் கொடுத்த இக் கொடுஞ்சட்டம், ஊழலை எதிர்த்தவர்கள் மீதும், எதிர்க்கேள்வி கேட்டவர்கள் மீதும், சமூக அநீதிகளுக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீதும் கூடப் பாய்ந்தது. கொடுமையிலும் கொடுமை, அதிகார வர்க்கத்தின் சிற்றின்பங்களுக்கும் பாலியல் இச்சைகளுக்கும் உடன்பட மறுத்தவர்கள் மீதும் கூடப்பாய்ந்ததுதான். அது சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் என்று எத்தகைய வகைப்படுத்தல்களையும் காட்டவில்லை.

இதனால் பல ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள், தடுப்புக் காவல்களுக்கும் சிறைக்கூடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். கொண்டு செல்லப்பட்டவர்களில் பலர் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள். மனித உரிமைப் பிரகடனங்களை வழித்தொடரும், மனித மாண்புகளுக்கு கௌரவிப்பளிக்கும் நாடாக இலங்கை தன்னை அடையாளப்படுத்த விரும்புகிறது எனில், ‘பயங்கரவாத தடைச்சட்டம்’ எத்தகைய காலதாமதங்களும் இன்றி இரத்துச்செய்யப்படல் வேண்டும்.

‘அரசியல் கைதிகள்’ எனும் சொற்பிரயோகமே இலங்கையில் புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளும் மறுபேச்சின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும். இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப் பிழைத்திருப்போர்’ பெயர் விபரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் குடிமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

குறித்த இரகசிய முகாம்கள், ‘இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயற்பட்டன. அவற்றை நிர்வகித்துக் கொண்டிருந்தவர்கள் யார்’ என்பன பற்றியெல்லாம் நாட்டின் குடிமக்களுக்கு வெளிப்படுத்தப்படல் வேண்டும். ‘கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள்’ தொடர்பில் பொறுப்புக்கூறப்படல் வேண்டும்.

‘மனிதத்துவத்துக்கு எதிரான வன்முறைகள் குற்றங்களினால்’ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள்’ வழங்கப்படல் வேண்டும். இவ்வாறு இலங்கை மக்களின் நெஞ்சை அழுத்தும், குரல்வளையை நெரிக்கும் சமகாலப்பிரச்சினைகளுக்கு பதிலளிக்குமாறும், தீர்வளிக்குமாறும் இலங்கை அரசை வலியுறுத்தி, ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’வினருடன் இணைந்து, வடக்கு கிழக்கில் செயற்பாட்டு வலயமைப்பைக் கொண்டுள்ள ‘நாங்கள்’ இயக்கத்தினர் கவனயீர்ப்பு நிகழ்ச்சியை நாளை மறுதினம் செவ்வாய் கிழமை, வவுனியா நகரசபை மைதானத்தில் நடத்த இருக்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபவன் காலத்தில் நீதித்துறை வலுவடைந்து முன்னேறும் : சி.வி. விக்னேஸ்வரன்!!

CV

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ள கே. ஸ்ரீபவனின் காலத்தில் நாட்டின் நீதித்துறை வலுவடைந்து நல்ல நிலையை நோக்கிச் செல்லும் என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இலங்கையின் நீதித்துறை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுவந்தது. இந்த சூழ்நிலையிலேயே, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் நாட்டின் 44வது பிரதம நீதியரசராக கே.ஸ்ரீபவனை நியமித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த நீதியரசர் என்ற ரீதியில் கே. ஸ்ரீபவனுக்கு பிரதம நீதியரசர் பதவி கிடைத்திருப்பதை வரவேற்பதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் பிபிசியிடம் கூறினார்.

இலங்கை சட்டக்கல்லூரியில் கே. ஸ்ரீபவன் தனது மாணவராக கல்வி கற்றவர் என்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாகவும் விக்னேஸ்வரன் கூறுகின்றார்.

எனினும், நீண்டகால பிரச்சினைகளை ஒரேநாளில் தனியொரு நபரினால் தீர்த்துவிட முடியாது என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து நீதித்துறைக்கு முறைப்படி வந்தவர் ஸ்ரீபவன் என்றும் கூறிய விக்னேஸ்வரன், ஆனால் மற்றவர்களும் அவ்வாறே கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் முன்னேற வேண்டியவர்களை தடுத்து மேலே கொண்டுவரப்பட்டவர்கள் என்றார் விக்னேஸ்வரன்.

சில நீதியரசர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஆக்கப்பட்டு, சிறிதுகாலத்தில் உயர்நீதிமன்றத்துக்குள் புகுத்தப்பட்டவர்கள் என்றும் முன்னாள் நீதியரசர் சுட்டிக்காட்டினார்.

எனினும், ஸ்ரீபவன் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் இருந்து, தனக்கு உரிய காலம் வந்தபோதே உயர்நீதிமன்ற நீதிபதியாக முறைப்படி நியமனம் பெற்றுவந்தவர் என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா இராஜினாமா!!

faizer-mustapha

விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வௌிநாடு சென்றுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில விடயங்களை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சின் கீழ் இணைத்து வர்த்தமானியில் உள்ளடக்கியுள்ளமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

எதுஎவ்வாறு இருப்பினும் சட்டத்தரணியாக முழுநேரம் செயற்பட வேண்டும் என்பதற்காகவே அவர் அமைச்சுப் பதவியில் இருந்து விலக உத்தேசித்துள்ளதாகவும் பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தனிப்பட்ட காரணங்களுக்காகவே பைசர் முஸ்தபா சிங்கப்பூர் சென்றுள்ளதாக அவரது பிரத்தியேக செயலாளர் கூறியுள்ளார்.

கிழக்கின் புதிய முதல்வரை விரைவில் அறிவிப்போம் : ரவூப் ஹக்கீம்!!

images

இலங்கையில் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் ஏற்படவுள்ள மாற்றத்தின் அடிப்படையில் அடுத்த ஓரிரு நாட்களில் புதிய முதலமைச்சரை தமது கட்சி அறிவிக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புதிதாக அமையவுள்ள ஆட்சியில் பங்கெடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கு திறந்த மனதுடன் அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறுகின்றார். அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்க பெருன்பான்மை பலம் இல்லாதிருந்த நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெற்று ஆட்சியை அமைத்துக் கொண்டது.

அவ்வேளை 5 ஆண்டு ஆட்சியில் முதலமைச்சர் பதவியின் முதல் இரண்டரை ஆண்டுகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் என உடன்பாடு காணப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது.

அந்த உடன்பாட்டுக்கு அமைய, கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு உறுதியளித்துள்ளதாக ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இடம்பெறும் என்றும் தங்களின் அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணையவேண்டும் என்று விரும்புவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திலும் ஆளுங்கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்த நிலையிலேயே புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.

கிழக்கு மாகாணசபையில் கூடுதலான உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

மூன்று தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் கிழக்கு முதலமைச்சர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இந்நிலையில் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் அவர் கூறினார்.

-பிபிசி-

தத்தெடுத்த குழந்தைகளுக்காக வீடு கட்டும் ஹன்சிகா!!

Hansika-Motwani

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. கைவசம் நான்கைந்து படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் பிசியாக இருந்தாலும் சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர் ஹன்சிகா.

இவர் சிறுவர், சிறுமிகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது நாம் அறிந்த விஷயம். இவர்கள் தங்குவதற்கு தனியாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஹன்சிகாவின் ஆசையாம். அது தற்போது நிறைவேறும் தருவாயில் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு ஹன்சிகா மும்பை அருகே வாடா என்ற இடத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார்.

அழகாகவும் அமைதியாகவும் ஒரு இடம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருந்து அந்த இடத்தை வாங்கியிருக்கிறார். கூடிய விரைவில் அந்த இடத்தில் கட்டிடம் கட்டி தான் தத்தெடுத்துள்ள சிறுவர், சிறுமிகளை தங்க வைக்கவுள்ளாராம்.

சுரேஷ் ரெய்னா சூதாட்ட பெண்ணுடன் தொடர்பு : இலங்கை கிரிக்கெட் சபை மீண்டும் விசாரணை!!

Capture

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா, பெண் ஒருவருடன் இருந்தது தொடர்பான விசாரணைக்கு இலங்கை கிரிக்கெட் சபை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010ல் ஆசியக் கிண்ண போட்டியில் பங்கேற்க இந்திய அணி, இலங்கை சென்றது. அப்போது தம்புள்ளையில் உள்ள ஒரு ஹொட்டலில் தங்கியிருந்த போது, ரெய்னாவுடன் ஒரு பெண் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பத்திரிகையில் செய்தி வெளியாக, இலங்கை கிரிக்கெட் சபை இந்திய கிரிக்கெட் சபையிடம் முறையிட்டது. இதனை இந்திய கிரிக்கெட் சபை மறுத்தது.

மேலும் அந்தப் பெண் ரெய்னாவின் ஏஜென்ட் என்றும், ரெய்னா உறவினர் ரித்திகா எனவும் கூறப்பட்டன. அதுமட்டுமல்லாது சில வீரர்களுடன் விளம்பர ஒப்பந்தம் சம்பந்தமாக பேச வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இலங்கை கிரிக்கெட் சபை புதிய குழு ஒன்றை நியமித்துள்ளது. இதில் தற்போதைய நிறைவேற்று குழு உறுப்பினர் ஷமி சில்வா, காமினி விக்ரமசிங்க மற்றும் அலுவலக நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ள்னர்.

இது குறித்து ஷமி சில்வா கூறுகையில், இந்த விவகாரத்தில் ஊடகம் தொடர்பான புகார்கள் எழுந்துள்ளன. இலங்கை கிரிக்கெட் சபைக்கு இதனுடன் தொடர்பில்லாத நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சூதாட்ட பிரச்சனை என்பது முக்கியமான விடயமாக உள்ளது. பாதுகாப்பு ஆலோசகராக உள்ள லோரன்ஸ் பெர்னாண்டோ, எந்தவித அறிக்கையும் கொடுக்காத நிலையில் அவரை தொடர்பு கொண்டு இது தொடர்பாக விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

திரைப்படமாகிறது இளவரசன்- திவ்யா காதல்க் கதை!!

Ilavarasan

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவமான இளவரசன்- திவ்யா காதல் கதை சம்பவம் படமாகிறது. வாச்சாத்தி என்ற கிராமத்தில் மக்களுக்கு நடக்கும் கொடுமையை படமாக எடுத்தவர் ஆர்.ரமேஷ்.

இவர் அடுத்து தர்மபுரி இளவரசன்- திவ்யா காதல் கதையை சினிமாவாக எடுக்க போகிறார். இந்தப் படத்துக்கு இலக்கணம் இல்லா காதல் என்று தலைப்பிட்டுள்ளார். இப்படக்கதையில் நாயகன் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா.

இதில் ஆர். ரமேஷ், கவிதா, பாரதி, ராதாரவி, நந்தினி, விஜயகுமார், கெளசல்யா, வி.சி.ஜெயமணி, தேவிகிருபா, போண்டா மணி, ஐஸ்வர்யா, கராத்தே ராஜா, ப்ரியா, பெஞ்சமின், ஜெகதீஸ், விஜய கணேஷ், பழனி, கிங்காங், விஜயகுமார். பி.எஸ். ஆகியோர் நடிக்கிறார்கள்.

வாச்சாத்தி படம் போலவே இப்படமும் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெறும் என ஆர்.ரமேஷ் மற்றும் வி.சி.ஜெயமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். படத்தை கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதிகளில் தான் படமாக்குகிறார்கள்.

பாடசாலை சீருடையுடன் போதையில் மயங்கி கிடந்த மாணவன் பாடசாலையிலிருந்து நீக்கம்!!

student_drink

தமிழ்நாடு, கரூர் மாவட்டத்தில் பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிகிடந்த மாணவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கரூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துவந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர் கடந்த ஜனவரி 27ம் திகதி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

போதையில் நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றார். நண்பர்கள் சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட போதை உச்சத்தில் இருந்த மாணவர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.

பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கி விழுந்ததைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மயங்கி கிடந்த மாணவனை எழுப்ப முயன்றனர். ஆனால் மாணவனால் எழ முடியவில்லை.

இதனிடையே அவனது நண்பர்கள் பெற்றோருக்கு தகவல் அளித்ததன் பேரில் அவரது பெற்றோர் மாணவனை அழைத்து சென்றனர். இதுகுறித்து நாளிதழ்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளியில், போதையில் மயங்கிக் கிடந்த மாணவரிடம் அவரது பெற்றோர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து ஒழுங்காக பள்ளிக்கு வராதது, பள்ளிச்சீருடையில் சென்று மது அருந்தி போதையில் பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்தது ஆகிய ஒழுங்கீன செயல்களுக்காக பள்ளியில் இருந்து அம்மாணவர் வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டார்.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது, மாணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர், மகனின் பள்ளி மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர் என்று கூறியுள்ளார்.

ஆபாசமாக படத்தை வெளியிட்டதால் தற்கொலைக்கு முயன்ற நடிகை!!

lavanya

பேஸ்புக்கில் தனது, புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை லாவண்யா புகார் அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த லாவண்யா என்பவர், சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து வருகிறார். இவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அவர் நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதுபற்றி லாவண்யா கூறியதாவது, பேஸ்புக்கில் உள்ள ஒரு ஆபாச தளத்தில் என் புகைப்படம் ஆபாசமாக வெளியிடப்பட்டு இருந்தது.

குடும்ப நண்பர் ஒருவர் இதை பார்த்து, கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் திகதி தெரிவித்தார். மனமுடைந்த நான் தற்கொலைக்கு முயன்றேன். கணவர் தடுத்து, எனக்கு ஆறுதல் கூறினார். அடுத்த நாள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தோம். 3 நாட்களில் அந்த ஆபாச பக்கம் முடக்கப்பட்டது.

இந்நிலையில், பேஸ்புக்கில் இன்னொரு ஆபாச தளத்தின் முகப்பு பக்கத்தில் என் புகைப்படம் ஆபாசமாக வெளியிடப்பட்டிருப்பதாக குடும்ப நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு கடந்த 29ம் திகதி தெரிவித்தார்.

பிறகு, நானும் அந்த பக்கத்தை பார்த்தேன். அந்த புகைப்படத்துக்கு பல ஆபாச கமென்ட்கள், லைக்குகள் வந்துள்ளன. இதனால் மனமுடைந்து மீண்டும் தற்கொலைக்கு முயன்றேன், கணவர் தடுத்துவிட்டார். எனக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது. கணவர் நல்லவர் என்பதால், என்னை அவர் சந்தேகப்படவில்லை.

என் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட பேஸ்புக் பக்கத்தை முடக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

உறைந்த நயாகரா நீர்வீழ்ச்சியின் மீது ஏறிய முதல் நபர்!!

கனடாவில் பனியால் மூடிய நயாகரா நீர்வீழ்ச்சியை அளவிட்ட முதல் நபராக கனடாவைச் சேர்ந்த வில் காட் என்ற 47 வயதுடைய நபர் வந்துள்ளார்.

கன்மோர் அல்பேர்ட்டாவை சேர்ந்த வில் காட், இந்தவார ஆரம்பத்தில் நயாகரா ஆற்றின் அடித்தளத்தில் ஆரம்பித்து அமெரிக்க எல்லைக்கு அருகில் ஒடும் பாதையான ஹோசூ வீழ்ச்சியின் வடக்கு முனை வழியாக சுமார் ஒரு மணித்தியாலத்தில் விறைப்பான ஏற்றத்தை ஏறி முடித்துள்ளார்.

சவால்கள் நிறைந்த நயாகரா நீர்வீழ்ச்சி, ஓவ்வொரு நிமிடமும் மணித்தியாலத்திற்கு 110 கிலோமீற்றர்கள் வேகத்தில் 150 தொன்கள் தண்ணீர் கொட்டும் கம்பீரமான மற்றும் சக்திவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளரிடம் இதுபற்றி அவர் கூறுகையில், தனது வாழ்க்கையில் தான் செய்த மிக கடுமையான விடயம் இதுவெனவும் தான் இதுவரை காணாத மிகவும் அழகான விடயம்.

அருவிமீது ஏறியபோது வழியில் தனது பனி கருவிகள் பனியினால் மூடப்பட்டு விட்டதாகவும் தனது கைகளினால் பனியை உருகச்செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மூடுபனி மற்றும் தெளிப்பான மேகத்தின் உள்ளே ஏறிக்கொண்டிருப்பதாக ஒரு கட்டத்தில் உணர்ந்ததாகவும், நீர்வீழ்ச்சி ஒருமுறை இவரின் தோளின் மேல் விழுந்ததாகவும், அந்த நொடி எவரும் எப்போதும் உணர்ந்திருக்க மாட்டார்கள் என தான் உணர்ந்ததாக பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

N2 N3 N4 N1