மூத்த பொதுவுடமைவாதியும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் முன்னோடியுமான கே.ஏ.சுப்பிரமணியத்தின் “தோழர் மணியம் நினைவுகள்” நுால் வெளியீட்டு விழா!!

மூத்த பொதுவுடமைவாதியும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் முன்னோடித் தோழருமான கே.ஏ.சுப்பிரமணியத்தின் 25 வது ஆண்டு நினைவும் தோழர் சி.கா.செந்திவேல் அவர்களால் எழுதப்பட்ட “தோழர் மணியம் நினைவுகள்” என்ற நுால் வெளியீடும் தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பணிமனையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

DSC_4681DSC_4652 DSC_4663 DSC_4665
DSC_4692

சூரிக்கு ஜோடியாக நடிக்கும் ஆண்ட்ரியா!!

Soori

தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட் கொடுத்தால் போதும், பிறகு திறமை இருந்தால் உச்சத்தை தொட்டு விடலாம். அந்த வகையில் பரோட்டா காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சூரி. இவர் கையில் தற்போது அரை டசின் படங்களுக்கு மேல் உள்ளது.

மேலும் சந்தானத்திற்கு கடும் போட்டி கொடுத்து வருகிறார்.இந்நிலையில் ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இல்லை, சூரிக்கும் ஜோடி உள்ளதாம்.

இதற்காக இயக்குனர் ஆண்ட்ரியா என்ற வெளி நாட்டு பெண்ணை இவருக்கு ஜோடியாக்கியுள்ளார். ஆனால், இவர் தமிழ் சரளமாக பேசக்கூடியவர். இதனால் இவருடன் நடிக்க சூரிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லையாம்.

அஜித் படத்தால் அதிர்ச்சியடைந்த தனுஷ்!!

Ajith

அஜித் படம் வருகிறது என்றால் வேறு எந்த படங்களும் ரிலிஸ் செய்யவே தயங்குவார்கள். இவர் நடிப்பில் என்னை அறிந்தால் இந்த வாரம் வெளிவருவதாக இருந்தது, இதனால் இப்படம் ரிலிஸான இரண்டு வாரம் கழித்து அனேகன் படத்தை ரிலிஸ் செய்யலாம் என்று தனுஷ் முடிவெடுத்திருந்தார்.

ஆனால், என்னை அறிந்தால் பிப்ரவரி 5 தள்ளிப்போனதால், அடுத்த வாரம் அனேகன் ரிலிஸ் ஆனாலும் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அனேகன் பிப்ரவரி 20ம் திகதி வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மதுக்கடையில் பியர் வாங்கும் காட்சியில் நடிப்பதா : நயன்தாராவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு!!

Nayan

நயன்தாரா டாஸ்மாக் மதுக்கடையில் பியர் பாட்டில்கள் வாங்குவது போன்ற வீடியோ படம் இணையத்தளங்களில் பரவியது. வட்ஸ்அப்களிலும் வந்தன. நிஜமாகவே பீர் வாங்கினாரா என்று பலரும் படத்தைபார்த்து விவாதிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் இடம் பெறும் காட்சி என்று தற்போது தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்குகிறார். தனுஷ் தயாரிக்கிறார்.

இந்த படத்துக்காக டாஸ்மாக் கடையில் நயன்தாரா பியர் வாங்குவது போன்ற காட்சியை படமாக்கினார். அதனை யாரோ திருட்டுதனமான மொபைல் கமராவில் பதிவு செய்து இணையத்தில் பரப்பியுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

நயன்தாரா பியர் வாங்கும் காட்சிக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல இந்து மக்கள் கட்சி செயலாளர் வீரமாணிக்கம் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில்..

தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மதுவின் தீமைகளை விளக்கி பேரணிகளை நடத்துகிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா மதுக்கடைக்கு போய் பியர் வாங்குவது போன்ற காட்சியில் நடித்து இருப்பது மதுவுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போல் அமைந்து உள்ளது.

பெண்களை மது குடிக்க தூண்டுவது போன்றும் இக்காட்சி இருக்கிறது. தமிழகத்தில் மது குடித்து செத்து போன ஆண்களால் 20 லட்சம் பெண்கள் விதவையாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தற்போது பெண்களும் மது குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் கணவன், மனைவி மற்றும் குடும்ப உறவுகள் சிரழிகின்றன.

எனவே பெண்களை குடிக்க தூண்டுவது போல் உள்ள நயன்தாரா பியர் வாங்கும் காட்சியை படத்தில் வைக்க கூடாது. அக்காட்சியை நீக்க வேண்டும். இல்லா விட்டால் நயன்தாராவையும் அக்காட்சி இடம் பெறும் படத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

முடங்கி கிடக்கும் 200 புதுப்படங்களை திரையிட நடவடிக்கை : திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்!!

Dhanu

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் சென்னையில் நடந்தது. இதில் தலைவராக கலைப்புலி எஸ். தாணு வெற்றி பெற்றார். துணைத் தலைவர்களாக தேனப்பன், கதிரேசன் ஆகியோரும் பொருளாளராக டி.ஜி.தியாகராஜனும் தேர்வானார்கள்.

செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வானார்கள்.
தலைவராக தேர்வான கலைப்புலி எஸ்.தாணு அளித்த பேட்டி வருமாறு..

தயாரிப்பாளர் சங்கம் அறவழியில் அமைதி வழியில் இழந்த பெருமையை மீட்டு இருக்கிறது. நம் முன்னோர்கள் ஏ.வி. மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், டி.ஆர். சுந்தரம், எல்.வி.பிரசாத், நாகிரெட்டி, ஏ.எல்.சீனிவாசன், டி.ராமானுஜம், டி.வி.எஸ். ராஜு போன்றோரால் காலம் காலமாக கட்டி காப்பாற்றப்பட்ட திரையுலகினரின் மாண்பினை புதிதாக தேர்வு பெற்றுள்ள நிர்வாகிகளாகிய நாங்கள் பேணி காத்திடுவோம்.

தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கும் மனுக்களை திரும்ப பெற்றவர்களுக்கும் போட்டியிட்டு வெற்ற வாய்ப்பை இழந்த சகோதரர்களுக்கும் சங்கத்தில் பொறுப்பினை தந்து ஒரு சேர கலையுலகை காப்போம்.

எதிர் காலத்தில் தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து செயல் திட்டங்களையும் செயல் படுத்த நாளும் பணியாற்றுவோம். வெளிவராமல் முடங்கி கிடக்கும் 200க்கும் மேற்பட்ட படங்களை திரையிட நடவடிக்கை எடுத்து தயாரிப்பாளர் நலனை பாதுகாப்போம்.

இதுவரை யாரும் செய்திராத சாதனைகளை செய்து சிறு பட தயாரிப்பாளர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருப்போம். உலகில் உள்ள அனைத்து திரையுலக சங்கங்களுக்கும் முன்னோடி முதன்மை சங்கம் என பெயர் எடுக்க உழைப்போம். எங்கள் காலம் தமிழ் திரையுலகின் பொற்காலம் என சொல்லத்தக்க வகையில் பணியாற்றுவோம்.

தயாரிப்பாளர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்கு நூற்புசாலையில் உள்ள ராதா பார்க் இன் ஹோட்டலில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு திரையுலகின் மாண்பினை பேணி காத்திடவும் ஒன்று படவும் சபதம் ஏற்போம் என்று அவர் கூறினார்.

மார்பில் பந்து தாக்கியதால் உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்!!

Ball

பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கி, வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கராக்கி அருகேயுள்ள ஓரங்கி நகரில் கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் வீசிய பந்து, 18 வயது இளம் வீரர் ஜீஷன் முகமதுவின் மார்பகப் பகுதியை தாக்கியது.

அதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மற்ற வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கிரிக்கெட் வீரரை மிரட்டிய பேய் : அலறியடித்து ஓடிய வீரர்!!

Devil

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் கிரைஸ்ட்சேச் நகரில் உள்ள ஒரு ஹொட்டலில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கியுள்ளனர்.

அந்த அணி வீரர்களில் ஒருவரான ஹரிஸ் சொகைல், ரிட்ஜஸ் லாட்டிமர் ஹொட்டலில் உள்ள தனது அறையில் படுக்கையின் மீது படுத்துக்கொண்டிருந்தபோது, இயற்கைக்கு முரணாக படுக்கை தானாக ஆடியது.

இதைக்கண்டு மிரண்ட அவர் ரூமை விட்டு அலறியடித்து வெளியே ஓடியுள்ளார். உடனடியாக பயிற்சியாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சொகைல் படுக்கை தானாக ஆடியது குறித்து கூறியுள்ளார்.

அவர் அந்த ரூமுக்கு விரைந்து வந்து பார்த்த போது, சோகைல் நடுக்கத்துடன் நின்றிருந்தார். அப்போது அவருக்கு லேசாக காயச்சலும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

தனது படுக்கை ஆடியதற்கு காரணம் பேய் தான் என சொகைல் கூற, ஹொட்டல் நிர்வாகமோ அங்கு பேய் நடமாட்டம் எதுவும் இல்லை என்று கூறியது. சொகையிலின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவ குழுவினர், தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பூமியை நெருங்கி வரும் விண்கல்!!

Vinkal

சந்திரனை விட மூன்று மடங்கு பெரியதான விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நியூ மெக்சிகோவில் உள்ள Lincoln Near-Earth Asteroid Research (LINEAR) தொலைநோக்கி புதிய விண்கல் ஒன்றை கண்டுபிடித்தது.

சந்திரனை விட மூன்று மடங்கு பெரிதான விண்கல்லுக்கு, ‘2004 பிஎல் 86’ (2004 BL86) என பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில் தற்போது குறித்த விண்கல் பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது.

தற்போது பூமியில் இருந்து 745,000 மைல் (12 லட்சம் கிலோ மீட்டர்) தூரத்தில் உள்ள இந்த விண்கல், வெகு விரைவில் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற விண்கல் பூமியை 200 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கடக்கும் என்றும், அதே நேரத்தில் பூமியில் மோதாமல் கடந்து செல்லும் எனவும் நாசா மையத்தின் ஜெட் புரோ புல்சன் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

முகமது நபியை அவமதிப்பதா : பேஸ்புக் பக்கத்தை உடனடியாக நீக்க பேஸ்புக் நிறுவனத்திற்கு துருக்கி அரசு உத்தரவு!!

FB

முகமது நபியை அவமதிக்கும் பேஸ்புக் பக்கத்தை உடனடியாக நீக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

நபியை அவமதிக்கும் குறிப்பிட்ட பக்கங்களை நீக்காவிட்டால், நாடு முழுவதும் பேஸ்புக் சமூகவலைத்தளம் தடை செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று விமர்சனத்துக்கு உள்ளான சில பேஸ்புக் பக்கங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

இருப்பினும் முகமது நபியை அவமதிக்கும் பக்கங்கள் உபயோகத்தில் இருப்பதாகவும், அவைகளை உடனடியாக நீக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

பாரிஸ் பத்திரிக்கை அலுவலகத் தாக்குதலை தொடர்ந்து, இணையதளங்களில் முகமது நபியை அவமதிக்கும் வகையில் செய்திகள் பரப்பப்படுன்றனவா என விசாரிக்க துருக்கி நாட்டு வழக்கறிஞர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் முடிவாக பேஸ்புக் பக்கங்களில் முகமது நபியை பற்றி அவதூறான செய்திகள் வருவதை கண்டறிந்து அவற்றை நீக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தனர்.

இதன் விளைவாகவே நபிகளை அவமதிக்கும் பக்கங்களை நீக்க பேஸ்புக் நிறுவனத்திற்கு துருக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க சேவை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

Doctor

அரசாங்க வைத்தியர்கள் அரசாங்க சேவையில் கடமை புரியும் சந்தர்ப்பங்களில் தனியார் வைத்திய நிலையங்களில் சேவை செய்தால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நெறிமுறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் வைத்தியர்கள் தொடர்பாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கேபி.யை என்ன செய்வது : சட்டமா அதிபரிடம் நீதிமன்றம் ஆலோசனை!!

Kumaran-Pathmanathan

கேபி எனப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு ஜேவிபி தாக்கல் செய்துள்ள மனு மேன்முறையீட்டு நீதிமன்ற இரண்டு நீதியரசர்கள் கொண்ட குழு முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்டது.

இதனையடுத்து கேபி தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கருத்து முன்வைக்குமாறு சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் விஜித் மல்லகொட ஆகிய நீதிபதிகள் மனுவை விசாரித்து மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளனர்.

கேபி.யை கைது செய்து நீதின்றில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 19த் திகதி ஜேவிபி பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.

அம்மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதி மற்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணம் குறைகிறது!!

Bus

எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணம் குறைக்கப்படும் என உள்நாட்டு போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

ஆகக் குறைந்த 9 ரூபா கட்டணம் 1 ரூபாவால் குறைத்து 8 ரூபாவாக மாற்றப்படும் என உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பஸ் கட்டணம் 8%-10% வரையில் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். பஸ் சங்கங்கள் மற்றும் அமைச்சருக்கு இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யோஷித்த, கோத்தபாய, பஷில் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜே.வி.பி. முறைப்பாடு!!

JVP

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி தொடுக்கும் லஞ்ச ஊழல் மற்றும் அரசியல் சூழ்ச்சி குற்றச்சாட்டுக்கள் நாளுக்கு நாள் தொடர்கின்றது.

நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்சவிற்கு எதிராக பாதுகாப்பு செயலாளரிடமும் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடமும் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஆட்சி மாற்றத்துடன் மக்கள் விடுதலை முன்னணியினர் லஞ்ச ஊழல் குற்றங்களுக்கு எதிராக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் தமது முறைப்பாடுகளில் அதிகமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரின் பெயர்களையும் உள்ளடக்கியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த வாரத்தில் லஞ்ச ஊழல் மற்றும் தேர்தல் சூழ்ச்சிக் குற்றச்சாட்டுக்களை மக்கள் விடுதலை முன்னணி முன் வைத்திருந்தது. இதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் உள்ளிட்ட மேலும் பலரின் பெயர்களை முன் வைத்திருந்தனர்.

அதே போல் நேற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ச இலங்கை கடற்படையில் இணைந்து கொண்ட விதம் குறித்து விசாரணைகளை நடத்த கோரி பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாட்டினை செய்துள்ளது.

யோசித்த ராஜபக்ச இங்கிலாந்தின் டாக்மாத் அரச கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்ற போதிலும் அங்கு தனது பயிற்சி நெறியினை நினைவு செய்யாமலேயே இலங்கை திரும்பி விட்டதாகவும் இலங்கை கடற்படை பயிற்சிகளை நிறைவு செய்யாது எவ்வாறு இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டார் என்பது தொடர்பிலும் உடனடியாக விசாரணை நடத்தக் கோரியும் மக்கள் விடுதலை முன்னணி பாதுகாப்பு செயலாளரிடம் முறையிட்டுள்ளனர்.

அதேபோல் நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் மக்கள் விடுதலை முன்னணியினர் மீண்டும் ஒருமுறை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராகவும் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராகவும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டினை குறித்து லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து உண்மைகளை நாட்டு மக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.

-வீரகேசரி-

உயர்தரத்தில் கற்கையைத் தொடர கணிதப் பாடச் சித்தி கட்டாயம்!!

AL

உயர் தரத்தில் கற்கை நெறியைத் தொடர்பவர்களுக்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணிதப் பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கடந்த அரசாங்கத்தினால் அறிமுகம் செய்த, இரண்டு வருடங்களுக்கு கணிதப் பாடம் கட்டாயமில்லை என்ற விதி செல்லுபடியற்றதாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

க.பொ.த உயர்தரத்தில் கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் கல்வியைத் தொடர உள்ளவர்களே கட்டாயம் கணித பாடத்தில் சித்தியடைய வேண்டும்

64 வயதான பெண்ணை வல்லுறவு கொண்ட இலங்கை இளைஞன் தமிழகத்தில் கைது!!

Rape

பெண் ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த 25 வயதான இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 64 வயதான தலித் இனப் பெண்ணையே குறித்த இளைஞன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பெண் கன்னியாகுமாரி மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த இளைஞனைக் கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆயர்ப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நொதர்ன் பவர் நிறுவனத்தை மூடுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Northern-Power-Company

இலங்கை மின்சார சபையின் நொதர்ன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கை ஆராய்த மல்லாகம் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். நொதர்ன் பவர் நிறுவனத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் செயற்பாடுகளை இடைநிறுத்தி வைப்பதுடன் மறு அறிவித்தல் வரும்வரை தற்காலிகமாக மூடுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.