நான் ருத்ராட்ச மாலையில் தாலி அணியவில்லை, காட்ட வேண்டிய அவசியமில்லை : குஷ்பு ஆவேசம்!!

Kushboo

நான் ருத்ராட்ச மாலையில் தாலி அணியவில்லை என்று நடிகை குஷ்பு மறுத்துள்ளார். குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் வெளிவந்தன.

துறவிகளும், ஆன்மீக வாதிகளும் அணியும் ருத்ராட்ச மாலையை அவர் இழிவுபடுத்தி விட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின.

மேலும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த தாலி சர்ச்சைக்கு தற்போது அவர் விளக்கம் அளித்த குஷ்பு கூறியுள்ளதாவது, நான் அணிந்தது ருத்ராட்ச மாலை அல்ல. பாரம்பரியமிக்க நகையின் ஒரு பகுதிதான் அது.

நகரம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அந்த நகையை கழுத்தில் அணிந்து இருந்தேன். அது பார்க்க அழகாக இருந்தது. அதை ருத்ராட்ச மாலை என நினைத்து பலரும் என்னிடம் கேட்டார்கள்.
நான் விளக்கம் சொன்னேன். ஆனால் இப்போது பத்திரிகைகளில் அந்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நான் உண்மையான ருத்ராட்ச மாலையை தாலியாக செய்து அணிந்துள்ளதாக செய்தி வெளியிட்டு விட்டார்கள். இதை உண்மை என்று நம்பி ஒருவர் எனக்கு எதிராக வழக்கும் போட்டு விட்டார்.

ருத்ராட்சம் தெய்வீகமானது என்றும், முனிவர்கள், யோகிகள் அணியக்கூடியது என்றும் படித்து இருக்கிறேன். ருத்ராட்ச மாலை அணிவதால் நல்ல பலன்கள் உண்டாகும் என்றும் கேள்விப்பட்டு உள்ளேன்.

ஆனால் ருத்ராட்ச மாலைக்கும் நான் கழுத்தில் அணிந்த மாலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தாலி அணிவது நமது சம்பிரதாயம். நான் என்ன வகையான தாலி அணிந்துள்ளேன் என்று மற்றவர்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

கார் வாங்க 6 லட்ச ரூபாயை சில்லறைகளாக கொடுத்து அதிர்ச்சியளித்த நபர்!!

சீனாவில் நபர் ஒருவர் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்குவதற்காக, மொத்த பணத்தையும் முழுவதும் சில்லறைகளாக கொடுத்து வாங்கியுள்ளார்.

சீனாவில் ஹீபே பிராந்தியத்தில் உள்ள ஷீஜியாஜுவாங் பகுதியை சேர்ந்த வாங் ஜுபே (48) என்ற விவசாயி புது கார் வாங்க திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து அருகில் இருக்கும் கார் ஷோரூமுக்கு சென்ற அவர், 6 லட்சம் மதிப்புள்ள புதிய மொடல் கார் ஒன்றை தெரிவு செய்துள்ளார்.

பின்னர் 4 மூட்டைகளில் எடுத்து வந்த காருக்கான பணத்தை அவர் கார் நிறுவன ஊழியர்களிடம் கொடுத்துள்ளார்.

மூட்டையை திறந்துபார்த்த அவர்கள் முழுவதும் சீனாவின் யுவான் நாணயங்களாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மதியம் 12 மணியளவில் 6 ஊழியர்கள் நாணயங்களை எண்ணத் தொடங்கி, மறுநாள் அதிகாலை வரை எண்ணி முடித்துள்ளனர்.

4 மூட்டைகளிலும் சுமார் 51,800 சீன யுவான் நாணயங்கள் இருந்துள்ளது. மேலும், மீதித் தொகையை, 3 நாட்களுக்குள் கொடுத்து காரை எடுத்து செல்கிறேன் என்று வாங் ஜுபே சொல்லி விட்டு வெளியேறியுள்ளார்.

C1 C2

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு முடக்கம் : வெளிநாடு செல்லத் தடை!!

Aluth

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டு மூன்று மாத காலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை வெளிநாடு செல்ல முடியாதபடி அவரது கடவுச்சீட்டு இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன ஆகியோர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!!

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

புதிய ஜனாதிபதியின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு கோரிக்கைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா ஆகியோரின் புகைப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிந்த பதாதைகளில் காணப்பட்டன.

2011, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் கிழக்கு, தென்கிழக்கு, யாழ்ப்பாணம் உட்பட நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலிருந்தும் பட்டதாரிகளாக வெளியேறியவர்களே இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை சம்பவ இடத்துக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், மா.நடராசா,ஞா.வெள்ளிமலை ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகர் ஊடாக பேரணியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் உ.உதயவேந்தன்,

தமது நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாங்கள் இன்று பல துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றோம்.

அவற்றினை கருத்தில் கொண்டும் எமது நிலையின் உண்மைத் தன்மையும் கருத்தில் கொண்டு உடனடியாக புதிய அரசாங்கம் தமது நூறு நாள் வேலைத்திட்டத்தில் எங்களுக்கு அரச நியமனத்தினை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

நாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றோம். உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றது. ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு பின்னர் அது இடைநிறுத்தப்பட்டது என தெரிவித்தார்.

1 2 3 4

யாழ். வலி.வடக்கில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்படும் : அமைச்சர் சுவாமிநாதன்!!

suvaminathan

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இதுவரை பொதுமக்களுக்கு விடுவிக்கப்படாத 6 ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்து, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனிடம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை மீள்குடியேற்றுவது மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து முதலமைச்சருடன், அமைச்சர் சுவாமிநாதன் நேற்று கலந்துரையாடினார்.

இந்த மீள்குடியேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்து தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இதனை செய்து முடிக்க எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தனது பாடலின் மூலம் அரங்கத்தையே அழ வைத்த சிறுமி!!(வீடியோ)

vijay

தனது பாடலின் இறுதித் தருணத்தில் தானும் அழுது, அரங்கத்தையே அழவைத்த இத்தச் சிறுமியின் திறமையை கொஞ்சம் பாருங்கள்..

முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க எளிய இயற்கை சிகிச்சை!!

Pimble

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்துவிடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சருமபிரச்னைகளில் ஒன்று தான் இந்தமுகப்பரு.

உடல் சூட்டினால் பருக்கள் ஏற்படுவதாகவும், எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. சிலருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த பருக்கள் மறைந்துவிடுகிறது. சிலருக்கோ முகத்தின் அழகை சீர் குலைப்பதுபோல் குழிகள் உண்டாகி அவலட்சணத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இருப்பினும், ஒருசில இயற்கைப்பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்கமுடியும். அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை. சரி, இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.

ஆவிப்பிடித்தல்

சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப்பிடிக்க வேண்டும். ஏனெனில்ஆவிப்பிடித்தால், சருமத்துளைகள் திறந்து, சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும்.

இதனால் ஆவிப்பிடித்தப் பின் மென்மையான பஞ்சு கொண்டு, முகத்தை துடைத்தால்,பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்தசெல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்

கராம்பு

கராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும்.அதற்கு கராம்பை நீரில்போட்டு கொதிக்கவிட்டு, குளிரவைத்து,பின் அதனை அரைத்து பருக்கள் உள்ள இடங்களில் தடவி 15அல்லது 20 நிமிடம் ஊறவைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

முகத்தை கழுவவும்

அடிக்கடி முகத்தை கழுவவேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு மற்றும் பிம்பிளை உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.

சந்தனப்பொடி

சந்தனப்பொடியுடன் தயிர், கடலைமாவை மற்றும் சிறிது எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊறவைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.

தேன்

தேனைக்கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊறவைத்து, பால்கொண்டு முதலில் கழுவி, பின்நீரில் அலசினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம்.

யாரையும் எளிதில் எதிர்கொண்டு பேசுவதற்கு கூட கூச்சத்தை ஏற்படுத்தும். இந்த பருக்களை மேற்கூறப்பட்டுள்ள செலவு குறைந்த மருத்துவ குறிப்புக்களை கையாண்டு பருக்கள் இல்லாத முகத்தை நாமும் கொண்டு வருவோம்

இந்தியாவின் 66வது குடியரசு தின விழா!!

Republic day

இந்தியாவில் இன்று 66வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக உள்ள இந்தியாவில் இன்று குடியரசு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று காலை மழை காரணமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் சற்று தாமதமாக தொடங்கியது. முதல் நிகழ்ச்சியாக இந்தியா கேட் பகுதியில் பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முதல் நபராக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அழைத்து வரப்பட்டார், இவர் அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினார்.

பின்னர் ராணுவ அணிவகுப்பு நடக்கும் விழா மேடைக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, அவருடைய மனைவி மிச்செல் வந்தனர். இவர்களை வரவேற்று அழைத்து வந்த மோடி, மத்திய அமைச்சர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

தொடர்ந்து சரியாக காலை 10 மணிக்கு குதிரைப்படை அணிவகுக்க அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி வரவேற்றார்.

தேசிய கீதம் ஒலிக்க காலை 10.05 க்கு ஜனாதிபதி தேசிய கொடியேற்றி வைத்தார். ஜனாதிபதி பிரணாப், துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினர் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் எழுந்து நின்று சல்யூட் அடித்து தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

வவுனியா சிவன் முதியோர் இல்லத்து பார்வையற்ற பாடும் திறமை கொண்ட கலைஞர்!!(படங்கள்,வீடியோ)

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் சபையின் கீழ் பராமரிக்கபடும் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களை மிருதங்கம் வாசித்தபடி தன் பாட்டின்மூலம் அவர்களின் துன்பதுயரங்களை மறக்க செய்யும் பணியையும்தன் வயதுமுதிர்ந்த தாயையும் பராமரித்தபடி பாடுகின்ற இந்த கண்பார்வையற்ற கலைஞனது பாட்டுக்கு ஒரு LIKE பண்ணுங்க அத்தோடு நின்றுவிடாமல் SHARE பண்ணி அனைவருக்கும் சிவன் முதியோர் இல்லம் தொடர்பாக தெரியபடுத்துங்கள் …

இந்த கலைஞர் கடந்த 2009 ஆம் ஆண்டு வன்னி இடப்பெயர்வின் போது தனது வயது முதிர்ந்த தாயுடன் இணைந்து சிவன் முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது . சிவன் மதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் இந்த கண்பார்வையற்ற கலைஞர் மிருதங்கம் வாசித்தபடி பாடல் பாடும் அழகே தனி தான் .இவரது பாட்டில் தங்களது துன்பதுயரங்கள் மறந்து போய் ரசித்தபடி பல முதியவர்களும் அன்று சிவன் முதியோர் இல்லத்து புதிய கட்டிடத்திறப்பு விழாவுக்கு வருகைதந்த பிரமுகர்கள் அனைவரது கண்களிலும் நீர் வரும் அளவுக்கு தன்னை மறந்து பாடியதை காணக்கூடியதாய் இருந்தது .

(மேற்படி வீடியோ நேற்றைய 21/01/2015 அன்று சிவன் முதியோர் இல்ல புதிய கட்டிட திறப்புவிழாவின் போது எடுக்கபட்டதாகும் .)


DSC_0142 DSC_0143 DSC_0145

வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாண விவசாய கால்நடை அமைச்சின் உழவர்தின விழா!!(படங்கள், வீடியோ)

வவுனியா மாவட்ட விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சின் உழவர் விழா இன்று 25. 01.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

வட மாகாண விவசாய கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட மாகாணத்தில் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்குபவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது.

இதில் சிறந்த வீட்டுத்தோட்ட பயனாளிகள், கால்நடை, கோழிவளர்ப்பு போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு மாலை மரியாதையும் சான்றிதழ், பணப்பரிசில்களும் வழங்கி வைக்கபட்டன.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், கௌரவ விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உட்பட திணைக்களத் தலைவர்கள் மற்றும் வவுனியா மாவட்டத்தில் விவசாய கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட அலுவலகங்கள், சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

படங்கள் – கஜன்

ulavar ulavar2 ulavar3 ulavar4 ulavar5 12 13 14

முதன்முறையாக குழந்தையை ரசிக்கும் பார்வையற்ற தாய் : நெஞ்சை நெகிழச் செய்யும் ஓர் சம்பவம்!!(வீடியோ)

Baby

கனடாவில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது முதல் குழந்தையை சிறப்பு கண்ணாடி மூலம் முதன்முறையாக பார்த்து வியந்தது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

அமெரிக்காவின் கனடாவில் வசித்து வருபவர் கேத்தி பீட்ஸ் (29). இவர் ஸ்டார்கர்ட் என்றழைக்கப்படும் மரபணுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டதால் இவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த வருடம் கர்ப்பமான இவர் எல்லா பெண்களையும் போலவே தனக்கு பிறக்கப் போகும் குழந்தை எப்படி இருக்கும் என்ற கற்பனையில் மிதந்து வந்தார்.

ஆனால், பிரசவ திகதி நெருங்கும் போது பார்வையற்ற தன்னால் தன் குழந்தையை எப்படிப் பார்க்க முடியும் என்று கேத்தி ஏங்கினார்.

குழந்தையை பார்க்க ஏங்கிய கேத்திக்கு சிறப்புக் கண்ணாடி மூலம் தன் முதல் குழந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது முதன்முறையாக குழந்தையைப் பார்த்த அவர் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தார்.

கேத்தியின் இந்த சந்தோஷமான அனுபவத்தை காணொளியாக பதிவு செய்து யூ டியூபிலும் பதிவேற்றியுள்ளனர். கேத்தி தன் குழந்தையைப் பார்த்து அதிசயிக்கும் காட்சி காண்பவரை நெகிழச் செய்துள்ளது.

தன் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளையும் கேத்தி இந்த புதிய தொழில்நுட்ப சாதனம் மூலம் நேரடியாகக் கண்டு களித்து மகிழ்ச்சியில் மூழ்கினார்.

அந்த காணொளியில், நான் பார்க்கும் முதல் குழந்தை எனது குழந்தை தான். இது என்னை சந்தோஷத்தில் மூழ்கடித்துள்ளது என்று கேத்தி கூறியுள்ளார்.

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 70 வயது முதியவர்!!

Abuse

தமிழ்நாடு, சேலம் மாவட்டத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 70 வயது முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள கா.புதூர் கொலனி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (70). இவர் மாடுகளை வளர்த்து அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 1ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமிக்கு இன்று விடுமுறை என்பதால் பள்ளியின் விடுதி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த முதியவர் பெரியசாமி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு வைத்து சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

தற்செயலாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இந்த சம்பவத்தை பார்த்து விட்டனர். அவர்கள் முதியவர் பெரியசாமியை தப்பவிடாமல் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இணையம் (Internet) இல்லாமல் வட்ஸ்அப் : அறிமுகமாகின்றது புதிய சிம்!!

Whatsapp

தற்போது உள்ள காலகட்டத்தில் தகவல் தொடர்பில் வட்ஸ்-அப்பின் பங்கு முக்கியமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் அதே நிலையில், வட்ஸ்-அப்பை பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. வட்ஸ்- அப் இல்லாத ஸ்மார்போன் இல்லை எனலாம்.

இதை பயன்படுத்துவதற்கு இணையம் முக்கியமாக தேவைப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் இணையம் இல்லாமல், இதை பயன்படுத்த முடிந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் வந்திருக்கும்.

அதன்படி உலகம் முழுவதும் பிரபலமான இந்த வட்ஸ்-அப்பை இணையம் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த அபூர்வ சிம்மை ‘ஜீரோமொபைல்’ நிறுவனத்தின் இயக்குனர் மானுவேல் ஜனிலியா கண்டுபிடித்திருக்கிறார்.

இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம். இந்த சிம்மிற்கு ‘வட்ஸிம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

‘வட்ஸிம்’ உலகம் முழுவதிலுமுள்ள 150 நாடுகளில் 400க்கும் மேற்பட்ட மொபைல் சேவையாளர்களுடன் இணைந்து சேவையை வழங்குகிறது.

இதில் ஒருவேளை அருகில் ஏதாவது ஒரு நெட்வேக்கில் ‘சிக்னல்’ நன்றாக இருந்தால் தானாகவே அந்த நெட்வேக்கில் ‘கனெக்ட்’ ஆகிவிடும். இந்த சிம் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

அதைவிட, அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுடன் எந்த தடையும் இல்லாமல் ‘வட்ஸ்-அப்பில் எப்போதும் இணைந்திருக்க முடியும். இதற்கு எந்த ரோமிங் கட்டணங்களும் கிடையாது என்பது கூடுதல் வசதி.

இந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டுகள் செலவாகும். வட்ஸிம்முக்கு மாதாந்திர கட்டணங்களோ, பிக்ஸட் கட்டணங்களோ, எதுவும் கிடையாது. அதுமட்டுமல்ல இது ஒருபோதும் காலாவதி ஆகவே ஆகாது.

மெசேஜை போல மல்டிமீடியா கண்டென்ட்டுகளான போட்டோ, வீடியோ, ஓடியோ பைல்களை இலவசமாக இதில் அனுப்ப முடியாது.

அதற்கு தனியாக நாம் ரீசார்ஜ் செய்துதான் ஆக வேண்டும். எனினும், சில கிரெடிட் பொயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும்.

அதே சமயம் கன்டக்ட் மற்றும் லொகேஷன் ஷேரிங் செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை. அதற்கு எந்தவித கிரெடிட்டுகளும் தேவையில்லை என்பது சிறந்த சேவையாக உள்ளது.

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!!

chennai

மும்பை ஹீரோஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சென்னை ரைனோஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

திரைநட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை- மும்பை அணிகள் இன்று அகமதாபாத்தில் மோதின. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன் படி மும்பை அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் குவித்தது. ராஜா பிர்வானி 49 ஓட்டங்களில் அரைசத்தை தவறவிட்டார். கோச்சஹர் 30 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ரமணா அதிரடி காட்ட 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த விக்ராந் மற்றும் விஷ்ணு அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தனர்.

விக்ராந் 49 பந்துகளில் 63 ஓட்டங்களும், விஷ்ணு 32 பந்துகளில் 52 ஓட்டங்களும் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அதிரடியாக விளையாடிய விக்ராந் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

யாழ். வடமராட்சி கடலில் கரையொதுங்கிய மர்மப்பொருள்!!

Jaffna

வடமராட்சி கிழக்கு, உடுத்துறை கடற்பரப்பில் இன்று காலை மஞ்சள் நிறத்திலான மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ளது. இதனை அவதானித்த பலர் பதற்றத்துடனும் பரபரப்புடனும் காணப்பட்டனர்.

இதனையடுத்த அப்பகுதியில் பொதுமக்கள் கூடி அதனை வேடிக்கை பார்ததனர். அத்துடன் இதுகுறித்து பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த அவர்கள் அந்தப் பொருளை பார்வையிட்டு சென்றனர்.

குறித்த பொருள் சர்வதேச கடல் எல்லைகளை அடையாளமிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் மிதவையென தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா செட்டிகுளத்தில் இஸ்லாமியரின் முதல் கவிதை நூல் அறிமுகம்!!

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் காலாச்சார அபிவிருத்தி பேரவையினால் செல்வன் எஸ்.முஹமட் சர்ஜானின் இருட்டரை மெழுகுவர்த்தி கவிதைத் தொகுப்பின் அறிமுக விழா கடந்த 19.01.2015 திங்கட் கிழமை பி.ப 2.00 மணிக்கு இடம் பெற்றது.

இந்நிகழ்வு பேரவையின் தலைவரும் பிரதேச செயலாளருமான திரு நா.கமலதாசன் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் திரு அந்தோனி ஐயா கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினராக செட்டிகுளம் மத்தியஸ்தர் சபையின் தவிசாளரும் சூடுவெந்தபுலவு அல் இக்பால் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் (கவியாசகன்) சேகு ராஜிது கலந்து கொண்டதுடன் சிறப்புவிருந்தினர்களாக பிரதேச சபையின் எதிர் கட்சித்தலைவர் ஏ.எஸ்.எம்.சரூக் மற்றும் பிரதேசசபை உருப்பினர்களான முஸ்தபா ஸாஜிதீன், ஜெகதீஸ்வரன் செட்டிகுளம் மக்கள் வங்கி முகாமையாளர் ஏ.எச்.எம் அரூஸ் மற்றும் புரட்சிக் கவிஞர் மானிக்கம் ஜெகன் மற்றும் கலைஞரகள், இலக்கிய ஆர்வளர்கள், பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந் நூல் செட்குளம் பிரதேசத்தில் இஸ்லாமியர் ஒருவரால் வெளியிடப்படும் முதலாவது கவிதைத் தொகுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

DSCI0184 DSCI0188 DSCI0190 DSCI0192 DSCI0202 DSCI0209 DSCI0211