அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் 15 வயதை குறைத்து பேஸ்புக்கில் இணைந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள அன்னா ஸ்டோஹெர் (anna stoehr) என்ற 113 வயது பாட்டிக்கும் பேஸ்புக்கில் சேர வேண்டும் என்ற ஆசை உண்டானது.
எனவே, தானும் பேஸ்புக்கில் சேர்வது என அன்னா முடிவு செய்தார்.
ஆனால், 1905ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களால் மட்டுமே பேஸ்புக்கில் சேர முடியும் என்பது நிபந்தனை. எனவே, தனது வயதை மாற்றி பதிவு செய்து கணக்கைத் தொடங்கினார்.
1900ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிறந்த அன்னா, வரும் 15ம் திகதி தனது 114வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். ஆனால், பேஸ்புக் கணக்குப் படி தனது வயதை 15 வருடங்கள் குறைத்துப் பதிவு செய்தார்.
114வது வயதை நெருங்கும் வேளையில், ஃபேஸ்புக்கில் இணைந்தது தனக்கு உற்சாகம் ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.
தனது 15 வயதைக் குறைத்துப் பேஸ்புக்கில் இணைந்துள்ள அன்னாவை, சமூக வலைதளங்களில் வயதான இளையதலைமுறை (oldest teenager) என மற்றவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு நடிகைகள் பாத்திமா பாபு, சரஸ்வதி, குயிலி, வாசுகி ஆகியோர் சென்றனர்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 15 நாட்களாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், நடிகர்–நடிகைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் பழனியப்பன், முக்கூர் சுப்பிரமணியன், சம்பத், ஜெயபால் மற்றும் நடிகைகள் சரஸ்வதி, குயிலி, பாத்திமா பாபு, வாசுகி மற்றும் எம்.பி.க்கள் அசோக்குமார், இளவரசன், ஹரி, அருண்மொழித்தேவன் உள்பட ஏராளமானவர்கள் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றனர்.
பிணை வழக்கில் ஆஜராகும் வக்கீல்கள் குழுவை தவிர சிறையில் ஜெயலலிதா இதுவரை யாரையும் சந்தித்து பேசவில்லை.
வழக்கம்போல் இன்று சென்றவர்களும் சிறை வாசலில் சிறிது நேரம் இருந்துவிட்டு திரும்பி சென்றனர்.
அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே சிறை கட்டிடத்தின் முன் பகுதி வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் தொண்டர்கள் ஒசரோடு சந்திப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஒசரோடு சந்திப்பில் இரும்பு தடுப்பு வேலி போடப்பட்டு பொலிசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். சிறையில் உள்ள ஜெயலலிதாவை பார்க்க வருகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் பாதுகாப்பில் ஈடுபடும் பொலிசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு உள்ளது.
ஐசிசி மக்கள் விருப்ப விருதுக்கு மகளிர் அணியின் அணித்தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ், அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜோன்சன், இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் தென் ஆபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
வன்னியின் வாதச்சமர் 2014 இன் வவுனியா மாவட்ட போட்டிகளின் இறுதிப் போட்டி நேற்று (11.10) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
04.10.2014 அன்று ஆரம்பமான போட்டிகள் நேற்று இடம் பெற்ற வவுனியா மாவட்ட மாபெரும் இறுதிச்சமருடன் நிறைவெய்தியது.
வன்னியின் வாதச்சமர் 2014 இல் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் வருமாறு..
1. இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம்.
2. புதுக்குளம் மகா வித்தியாலயம்
3. கோமரசங்குளம் மகா வித்தியாலயம்
வெற்றியீட்டிய அணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, இது போன்ற பாடசாலை மாணவர்களுக்கு பயனுள்ள சிறந்த ஒரு நிகழ்வை திறம்பட நடாத்தி முடித்த தமிழ் மாமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் வவுனியா கல்விச் சமூகம் சார்பாகவும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
வன்னியின் வாதச்சமர் 2014 – வவுனியா மாவட்ட போட்டிகள் முழு விபரம்..
தமிழ் மாமன்றம் நடாத்துகின்ற வன்னியின் வாதச்சமர் 2014 எனும் வவுனியா, மன்னார் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் விவாதப் போட்டியின் வவுனியா மாவட்ட போட்டிகள் கடந்த 04.10.2014 அன்று ஆரம்பமாகியது.
04.10.2014 மற்றும் 05.10.2014 ஆகிய இரு தினங்களும் நான்கு கட்டங்களாக நடாத்தப்பட்ட தகுதிகாண் சுற்றின் அடிப்படையில், தர வரிசையில் முதல் 8 இடங்களைப் பெற்ற பாடசாலை அணிகள் காலிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன.
1. இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம்
2. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
3. புதுக்குளம் மகா வித்தியாலயம்
4. பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயம்
5. கந்தபுரம் வாணி வித்தியாலயம்
6. விபுலானந்த கல்லூரி
7. கனகராயன்குளம் மகா வித்தியாலயம்
8. கோமரசங்குளம் மகா வித்தியாலயம்
இவற்றிற்கிடையேயான காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் கடந்த 08.10.2014 அன்று இடம்பெற்றது. காலிறுதியில் கனகராயன்குளம் மகா வித்தியாலயம் எதிர் புதுக்குளம் மகா வித்தியாலயம், விபுலானந்த கல்லூரி எதிர் கந்தபுரம் வாணி வித்தியாலயம், பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயம் எதிர் இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் எதிர் கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் சமர் செய்தன. இவற்றில் வெற்றி வாய்ப்பை பெற்று, புதுக்குளம் மகா வித்தியாலயம், விபுலானந்த கல்லூரி, இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம், கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகியன அரையிறுதிக்குள் நுழைந்தன.
அரையிறுதிச் சுற்றில், இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் எதிர் விபுலானந்த கல்லூரி, புதுக்குளம் மகா வித்தியாலயம் எதிர் கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகியன சமர் செய்தன. இவற்றில் வெற்றி வாய்பை பெற்று இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் மற்றும் புதுக்குளம் மகா வித்தியாலயம் ஆகியன இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.
அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த விபுலானந்த கல்லூரி மற்றும் கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிகிடையே, வவுனியா மாவட்டத்தின் மூன்றாம் நிலை வெற்றியாளரை தீர்மானிக்கின்ற போட்டி இடம் பெற்றது. இச் சமரில் கோமரசங்குளம் மகாவித்தியாலயம் வெற்றி வாய்ப்பை பெற்று, வன்னியின் வாதச்சமர் 2014 இன் வவுனியா மாவட்ட மூன்றாம் நிலை வெற்றியாளராக தெரிவாகியது.
வவுனியா மாவட்ட இறுதிச் சமர் கடந்த 11.10.2014 சனிக்கிழமை, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தினுடைய ஐயாத்துரை மண்டபத்தில் நடைபெற்றது. தர்மத்தின் வழி நின்றதிலும், தர்மத்தை போதித்ததிலும் சிறந்து நிற்பது, இராமவதாரா? கிருஸ்ணவiதாரமா? என்ற தலைப்பில் இடம் பெற்ற சுவரஸ்மான சமரில், இராமவதாரம் என புதுக்குளம் மகா வித்தியாலயமும், கிருஸ்ணவதாரம் என இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயமும் சமர் செய்தன. ஓன்றுகொன்று சளைக்காத அணிகள், காரசாரமாய் விவாதித்துக் கொண்டன.
வன்னியின் வாதச்சமர் 2014 இனுடைய வவுனியா மாவட்ட வெற்றியாளராக இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயமும் தெரிவானது. இரண்டாம் நிலை வெற்றியாளராக புதுக்குளம் மகா வித்தியாலயமும் தெரிவுசெய்யப்படது.
இவ் இறுதிச் சமரில் நோக்குனர்களின் கருத்துக்கணிப்பும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நோக்குனர்களின் கருத்துக்கணிப்பில், இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் 60% ஆன வாக்குகளையும், புதுக்குளம் மகா வித்தியாலயம் 40% ஆன வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விரைவில் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட போட்டிகள் இடம் பெறவுள்ளது. ஆப் போட்டிகளைத் தொடர்ந்து, மூன்று மாவட்டத்திலும் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையிலான, மாபெரும் இறுதிச்சமர் இடம் பெறவுள்ளது.
வெற்றி பெற்ற அணிகளுக்கான, கேடயம், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள், தமிழ் மாமன்றத்தின் வருடாந்த இயல் விழாவில் வைத்து வழங்கப்படும்.
சுமார் 24 வருடங்களின் பின்னர் யாழ் தேவி புகையிரத சேவை நாளை யாழ்ப்பாணம் வரை தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
இந்திய அரசின் உதவியுடன் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ இதனைத் திறந்து வைக்கவுள்ளார்.
தற்போது கொழும்பில் இருந்து பளை வரைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை நாளை முதல் யாழ்ப்பாணம் வரை பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று சனிக்கிழமை யாழ் தேவி புகையிரதத்தின் இறுதிக் கட்ட பரீட்சார்த்த சேவை இடம்பெற்றது. பளையில் இருந்து மாலை 04.00 மணியளவில் இந்த இறுதிக்கட்ட பரீட்சார்த்த சேவை ஆரம்பிக்கப்பட்டு, 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினை சென்றடைந்தது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் தியாகராசா, இந்திரராசா ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் (CCTMS) நுழைவாயில் கடந்த 10.10.2014 அன்று திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் திருமதி தர்மகுலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர்களான தியாகராசா, இந்திரராசா ஆகியோரும், வவுனியா வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, வவுனியா தெற்கு கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா, பொருளியலாளர் எஸ்.சிவகுமாரன், பிரதிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி மாணிக்கவாசகம், கணேசலிங்கம், வலய பிரதிநிதி வசந்தி குலராசா, பாடசாலையின் பிரதி அதிபர் ஜெரோம் பிரதாபன் ஆகியோரும் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரி 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (10.10) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐந்து சதவீதத்துக்கும் கூடிய மதுசாரம் அடங்கிய ஒரு லீற்றர் பியரின் வரி 15 ரூபாவினாலும் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான மதுசாரம் அடங்கிய ஒரு லீற்றர் பியரின் வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொத்மலையில் 9 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கொத்மலை கட்டுக்கிதுல, ஹெல்பொடகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் வீட்டின் கூரை வழியாக, வீட்டிற்குள் இறங்கிய நபரொருவர் 9 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
அதன் போது சிறுமியின் சத்தம் கேட்டு, நித்திரையில் இருந்த உறவினர்கள் எழும்பியதும் சந்தேக நபர் தப்பி சென்றுள்ளார்.
தரம் 4 இல் கல்வி பயிலும் சமோதியா விதுமி சந்தன என்ற சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். உறவினர்கள் பொலிஸாருக்கு கொடுத்த அவரச அழைப்பினையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பப் பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா, இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் தேர் இன்று அதிகாலை இனந்தெரியாதவர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் பின் பகுதியில் பாதுகாப்பான முறையில் கட்டிடமொன்றினுள் நிறுத்தி வைக்கப்பட்ட தேரே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை பிரார்த்தனைக்கு வந்தவர்கள், தேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் கதவு திறந்திருப்பதை கண்டதுடன் அதனுள் இருந்து புகை வருவதையும் அவதானித்துள்ளனர்.
பின்னர் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். எனினும் தேரின் அதிகளவான பகுதி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் ஆலயத்தின் நிர்வாகம் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வவுனியா – மன்னார் வீதி கலைமகள் விளையாட்டு கழக மைதானம் அருகில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என வவுனியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக பயணித்த உழவு இயந்திரம் ஒன்று உள் வீதியில் திருப்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றது.
இதில் மோட்டார் சைக்கிள் சாரதியான வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த எஸ்.முரளி (35) என்பவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த 111 வயது பாட்டி ஒருவர் உலகின் வயதான திருமணமாகாத பெண் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்க முயற்சித்து வருகிறார்.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் வசித்து வரும் குஞ்சன்னம், இளம் பருவத்திலேயே பெற்றோரை இழந்து விட்ட குஞ்சன்னம், தனது தோள்களில் குடும்ப பாரத்தை ஏற்றிக் கொண்டதால் திருமணமே செய்து கொள்ளவில்லை.
தனது உடன் பிறந்தோரைப் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்துள்ளார். தற்போது அவர்கள் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
ஏற்கனவே, உலகிலேயே திருமணமாகாத வயதான பெண்மணி என லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். வரும் ஜனவரி மாதம் இதற்கான அதிகாரப்பூர்வமாக சான்றிதழை லிம்கா வழங்க உள்ளது.
தற்போது 111 வயதாகும் குஞ்சன்னத்திற்கு இருமல், சளி தவிர இதுவரை வேறு எந்த உடல் நலக் கோளாறும் வந்ததில்லை என அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர்.
சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வரும் குஞ்சன்னத்திற்கு, தற்போதும் தெளிவான பார்வை மற்றும் கேட்கும் திறன் உள்ளது, தினசரி அவர் நடைபயிற்சி மேற்கொள்கிறார் என கூறியுள்ளனர்.
எபோலா நோய்க்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆபிரிக்காவின் மேற்குபகுதிகளில் பரவி வரும் எய்ட்ஸை விட கொடிய நோயான எபோலாவின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதற்காக உலக சுகாதார நிறுவனமும், பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 8ம் திகதி உலக சுகாதார நிறுவனம் எபோலா நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டது. அதில் 7 நாடுகளை சேர்ந்த 8,399 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 4,033 பேர் இதுவரை இந்நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை உலக சுகதார நிறுவன வெளியிட்ட அறிக்கையின் போது, 8033 பேர் நோயால் பாதிக்கப்பட்டதாக பதியப்பட்டுள்ளதாகவும் 3,865 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா தற்போது தனி ஒருவன், நண்பேண்டா, நானும் ரவுடி தான் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார்.
இதை அறிந்த நித்தியானந்தா ஆசிரமம், நயன்தாரா வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அழைப்புவிடுத்தது. இதை இவர் ஏற்றுகொள்வாரா என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஃபுல் பிஸியாக இருக்கும் நயன்தாராவால், ஆசிரமத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ள நேரம் இல்லை என்று அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக அவுஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் யாழ். இந்த படத்தில் வினோத், டேனியல் பாலாஜி, சசி ஆகியோர் கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாக லீமா, நீலிமா, மிஷா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். அதோடு ஒரு கட் கூட செய்யாமல் படத்திற்கு U சான்றிதழ் அளித்துள்ளனர்.மேலும் இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் மாட்டிக் கொண்ட பெண் ஒருவர், 17 நாட்கள் கழித்து உயிருடன் திரும்பியுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் வட-கிழக்கு பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் சன்னோன் பிரேசர்(30) என்ற பெண் சிக்கிக் கொண்டார்.
இதனையடுத்து பொலிசார் மற்றும் அவசர சேவை அதிகாரிகள் ஹெலிகொப்டர் மற்றும் பைக்கில் தேடுதல் வேட்டை நடத்தியதில் 17 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரி நீயூடன் கூறுகையில், அதிசயங்கள் பற்றி கவலைப்படவதில்லை என்றும், ஆனால் இவ்வாறு 17 நாட்கள் வாழ்வது மிகவும் கடினமானது எனவும் தெரிவித்துள்ளார்.
மீன்களையும், பூச்சிகளையும் தின்று உயிர் வாழ்ந்து வந்த சன்னோன், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சன்னோன் தொலைந்தது குறித்தும், மீட்புக் குழுவினரின் கண்ணில் தென்படாதது ஏன் என்பது குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய திரையுலகமே சன்னி லியோனின் ஒரு நாள் கால்ஷிட்டிற்கு காத்திருக்கிறது. அவர் ஒரு பாடலுக்கு தலையை காட்டினாலே படம் சூப்பர் ஹிட் தான்.
இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தெலுங்கு பதிப்பான கரன்ட் டீகா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், ஒரு பாடலுக்கும் குத்தாட்டம் போட்டுள்ளார். சமீபத்தில் தான் இந்த படம் சென்ஸார் சென்றது.
இப்படத்தில் இடம் பெற்ற சன்னி லியோன் பாடலுக்கு கடும் எதிர்ப்பு வந்துள்ளது. அப்பாடலை தூக்கினால் தான் யு சான்றிதல் கொடுப்போம் என்று கூறியுள்ளனர். ஆனால், இப்பாடலுக்காக ஏறக்குறைய 2 கோடி வரை செட் போட்டுள்ளதால், படக்குழு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறதாம்.