பூச்சி, மீன்களை சாப்பிட்டு17 நாட்கள் காட்டில் வாழ்ந்த பெண்!!

Lady

அவுஸ்திரேலியாவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் மாட்டிக் கொண்ட பெண் ஒருவர், 17 நாட்கள் கழித்து உயிருடன் திரும்பியுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் வட-கிழக்கு பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் சன்னோன் பிரேசர்(30) என்ற பெண் சிக்கிக் கொண்டார்.

இதனையடுத்து பொலிசார் மற்றும் அவசர சேவை அதிகாரிகள் ஹெலிகொப்டர் மற்றும் பைக்கில் தேடுதல் வேட்டை நடத்தியதில் 17 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிஸ் அதிகாரி நீயூடன் கூறுகையில், அதிசயங்கள் பற்றி கவலைப்படவதில்லை என்றும், ஆனால் இவ்வாறு 17 நாட்கள் வாழ்வது மிகவும் கடினமானது எனவும் தெரிவித்துள்ளார்.

மீன்களையும், பூச்சிகளையும் தின்று உயிர் வாழ்ந்து வந்த சன்னோன், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சன்னோன் தொலைந்தது குறித்தும், மீட்புக் குழுவினரின் கண்ணில் தென்படாதது ஏன் என்பது குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சன்னி லியோனால் பெரும் சங்கடத்திற்கு ஆளான படக்குழு!!

Sunny Leone

இந்திய திரையுலகமே சன்னி லியோனின் ஒரு நாள் கால்ஷிட்டிற்கு காத்திருக்கிறது. அவர் ஒரு பாடலுக்கு தலையை காட்டினாலே படம் சூப்பர் ஹிட் தான்.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தெலுங்கு பதிப்பான கரன்ட் டீகா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், ஒரு பாடலுக்கும் குத்தாட்டம் போட்டுள்ளார். சமீபத்தில் தான் இந்த படம் சென்ஸார் சென்றது.

இப்படத்தில் இடம் பெற்ற சன்னி லியோன் பாடலுக்கு கடும் எதிர்ப்பு வந்துள்ளது. அப்பாடலை தூக்கினால் தான் யு சான்றிதல் கொடுப்போம் என்று கூறியுள்ளனர். ஆனால், இப்பாடலுக்காக ஏறக்குறைய 2 கோடி வரை செட் போட்டுள்ளதால், படக்குழு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறதாம்.

5 வயதில் தொழிலதிபரான சிறுவன்!!

அமெரிக்காவில் சிறுவன் ஒருவன் 5 வயதிலேயே மிகச் சிறந்த தொழிலதிபராய் உருவெடுத்துள்ளான். அமெரிக்காவின் நியூஜேசி மாகாணத்தை சேர்ந்த சிறுவன் நிவேஸ் கோரி(10).

தினமும் பள்ளிக்கூடத்திற்கு தனது தாய் காரில் அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக, 5 வயதில் இருந்தே பிஸ்கெட்டுகளை விற்க தொடங்கியுள்ளான்.

தற்போது வாரத்திற்கு 1000க்கும் மேற்பட்ட பிஸ்கெட்டுகளை விற்று வரும் கோரி, சிறந்த தொழிலதிபராய் உருவெடுத்துள்ளார்.

மேலும் குறிக்கோளுடன் இப்பொழுதில் இருந்தே உழைத்து வரும் கோரி, பிரன்ஸ்டன் பல்கலைகழகத்தில் சேருவதற்காக தற்போதே பணமும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

இதுமட்டுமின்றி சிறந்த நடிகராயும் உருவெடுத்துள்ள கோரிக்கு, சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

B1 B2 B3 B4 B5

அஜித் உண்மையான சூப்பர் ஸ்டார் : அருண் விஜய்!!

Ajith

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இதுவரை கதாநாயகனாக நடித்து வந்த அருண் விஜய் இப்படத்தில் முதன் முதலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜித்துடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய், அஜித் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்று கூறியிருக்கிறார்.

இதைப்பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில், அஜித்தை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் நெருங்கி பழகினது இல்லை. அவருடன் பழகியதில் அவர் ஒரு ரியல் சூப்பர் ஸ்டார். அவர் எதையும் போலியாக செய்ய மாட்டார். அவருடைய ஒவ்வொரு செயலையும் நான் நேசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஜித், 3, 4 கெட்-அப்களில் நடித்து வருகிறார். படத்தின் டிரைலர்களையும், பாடல்களையும், படத்தின் பெயரையும் விரைவில் அறிவிக்க உள்ளனர். பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் பரவும் ஷாருக்கான் மகன்–அமிதாப்பச்சன் பேத்தி ஆபாசப் படம்!!

sharuk

சமீபகாலமாக ஆபாச படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவது அதிகரித்து வருகிறது. நடிகைகளின் கவர்ச்சி படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஷாருக்கான் மகன் ஆர்யனும் அமிதாப்பச்சன் பேத்தி நவ்யாவும் நெருக்கமாக இருப்பது போன்ற படமும் தற்போது வெளியாகி மும்பை பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமிதாப்பச்சன், ஷாருக்கான் மத்தியில் நல்ல நட்புறவு நிலவுகிறது. குடும்பத்தினரும் தொடர்பில் இருக்கிறார்கள். மும்பை விருந்து நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்கின்றனர்.

ஷாருக்கான் மகன் ஆர்யானுக்கும் அமிதாப்பச்சன் பேத்தி நவ்யாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருப்பதாக அரசல் புரசலாக கிசுகிசுக்கள் வந்தன. அது உண்மையல்ல என்ற ரீதியில் குடும்பத்தினர் நம்பாமல் இருந்தார்கள்.

இந்த நிலையில்தான் இருவரின் ஆபாச படம் வெளியாகி அவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இருவரும் அறை நிர்வாண நிலையில் கட்டிப்பிடித்தபடி முத்தமிட்டுக் கொண்டு இருப்பது போல் இந்த படங்கள் இருந்தன.

ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலான இணையத்தளங்களில் பரவிய இப்படங்கள் தற்போது ஆயிரக்கணக்கான இணைய தளங்களில் பரவி இருக்கிறது. படத்தில் இருப்பது ஷாருக்கான் மகன், அமிதாப்பச்சன் பேத்திதான் என்று பலர் உறுதிபடுத்தி உள்ளனர்.

இலங்கைக்கு தப்ப முயன்ற பெண், சிறுமி உட்பட அறுவர் கைது!!

ind

இராமேஸ்வரம் அருகே, இலங்கைக்கு படகில் தப்ப முயன்ற பெண் ஒருவர் உட்பட ஆறு பேரை, கியூ பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் வசமிருந்து 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் தெற்கு கடற்கரை பகுதியில், கியூ பிரிவு பொலிசார் நேற்று அதிகாலை கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது படகில் இலங்கைக்கு செல்வதற்காக கடற்கரையில் காத்திருந்த சிவசுதர்சன் (26), அவரது 6 வயது மகள், மாமியார், மாமனார் உட்பட ஆறு பேர் சிக்கினர்.

இவர்களை ஊடுருவல் தடுப்பு சட்டத்தில் பொலிசார் கைது செய்தனர். 8 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றதாகவும் வழக்குப் பதியப்பட்டது.

இதுகுறித்து கியூ பொலிசார் கூறியதாவது: இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்தவர் சிவசுதர்சன். மனைவி சுமித்ராவுடன் ஏற்பட்ட தகராறில், 6 வயது மகளுடன், செப்டம்பர் 14ல் சட்டவிரோதமாக படகில் இராமேஸ்வரம் வந்தார். அங்கிருந்து திருச்சி, பவானிசாகர் அகதி முகாமுக்கு சென்று, உறவினர்களுடன் தங்கினார்.

தாயை பார்க்க வேண்டும் என மகள் கூறியதால், இலங்கையில் உள்ள மனைவியை, சிவசுதர்சன் தொடர்பு கொண்டார். மகளை இலங்கைக்கு அழைத்து வருமாறு கூறிய சுமித்ரா, ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து படகு ஒன்றை ஏற்பாடு செய்தார். இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த பிரசாத் படகை ஓட்டி வந்தார். சிவசுதர்சனின் மாமனார் மாணிக்கம் உடன் வந்தார்.

பாம்பனில் இருந்து அகதிகள் இலங்கைக்கு தப்புவதாக கிடைத்த தகவல்படி, அக்டோபர் 1ம் திகதி இரவு, பாம்பன் குந்துகால் கடற்கரையில் காத்திருந்தோம். ஆனால், சிவசுதர்சன் உட்பட நான்கு பேரும் தங்கச்சிமடம் கண்ணுப்பாடு கடற்கரையில் காத்திருந்தனர். இரவு, 10:45 மணிக்கு படகு புறப்பட இருந்த நிலையில் இன்ஜின் பழுதானது.

இதனால் படகை சவுக்கு மரப் புதருக்குள் பதுக்கி வைத்து, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சென்று தங்கினர். இதற்கிடையே மற்றொரு படகை ஏற்பாடு செய்து அனுப்புமாறு சுமித்ராவிடம், சிவசுதர்சன் கூறினார். மறுநாள் இரவு கண்ணுப்பாடு சென்றபோது படகு வரவில்லை.

இதனால் பழுதான படகை சரி செய்ய முயன்றனர். சரி செய்ய முடியாததால் சென்னை சென்று விட்டனர். பழுதான படகு பொலிசில் சிக்கியது. இந்நிலையில் மற்றொரு படகை ஏற்பாடு செய்து தப்ப முயன்ற போது, நேற்று எங்களிடம் சிக்கினர். இவ்வாறு பொலிசார் கூறினர்.

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளத்தில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய தமிழ் விருட்சம் அமைப்பு!!

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் சர்மிளாவின் வேண்டுகோளுக்கு அமைவாக வறிய 41 மாணவர்களுக்கு தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்க பட்டன .

பெரியகுளம் பொது நோக்கு மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன், சமுர்த்தி உத்தியோகத்தர் சர்மிளா உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்வில் உரையாற்றிய மாணிக்கம் ஜெகன் அவர்கள் மாணவ செல்வங்களே கல்வியே எம் இனத்தின் விடிவு காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக மாறி வரும் இவ் வேளையில் நீங்களும் நன்றாக கற்று நல்ல நிலைக்கு வருவதுடன் நல்ல பிரஜை ஆகவும் இதே போல் இன்னொருவருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் வர வேண்டும் எண்டு கேட்டு கொண்டார் .

பின்னர் கற்றல் உபகரணங்கள் ஆண்டு 1 தொடக்கம் உயர்தரம் வரை கற்கும் 41 மாணவர்களுக்கு வழங்கி வைக்க பட்டன. இறுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர் சர்மிளாவின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

DSC06685 DSC06688 DSC06689 DSC06691 DSC06692 DSC06693 DSC06694 DSC06697 DSC06698 DSC06699 DSC06700 DSC06701

உலக அழகுராணிப் போட்டியில் அசத்தும் ஈழத்துப் பெண்!!

world - Copy

ஈழத்தை சேர்ந்த தமிழ் பெண் முதல் முறையாக உலக இளவரசி பட்டம் என்ற பட்டத்தை சுவீகரிக்க உள்ளார். உலக நாடுகளில் நடைபெற்று வரும் உலக அழகி போட்டிக்கு அடுத்த படியாக வருடந்தோறும் நடத்தப்படும் உலக இளவரசி போட்டி நடைபெறும்.

இம்முறை 40 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட அபிஷேகா லயோட்சன் என்ற பெண்ணும் போட்டியிடுகிறார்.

முதல் முறையாக ஒரு தமிழ் பெண் உலக அளவிலான பட்டத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. போட்டியில் எல்லா சுற்றுகளும் முடிந்து விட்ட நிலையில், இறுதி சுற்றாக மக்களிடம் யாரை தேர்ந்தெடுப்பது என இணையம் மூலம் வாக்கு நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என உலக தமிழர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அபிஷேகா லயோட்சன் ஏற்கனவே இளம் வயதினருக்கான மிஸ் கனடா பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

world

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வெளிநாட்டவர் கைது!!

Abuse

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் ஸ்கொட்லாந்து பிரஜை ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தில் வசித்து வரும் இந்த நபர் சிங்கள பெண்ணொருவரை மணமுடித்துள்ளார். சந்தேக நபர் நேற்று உறவினரான பாடசாலை மாணவியுடன் பல் சிகிச்சை நிலையம் ஒன்றுக்கு சென்றுள்ளார். இதன் போதே அவர் இந்த குற்றச் செயலில் ஈடுபட முயற்சித்துள்ளார்.

பல் சிகிச்சை நிலையத்தில் இருந்தவர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

55 வயதான இந்த சந்தேக நபர் மனநோயாளி எனக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவச் சான்றிதழ் ஒன்றை பொலிஸாரிடம் வழங்கியுள்ளனர்.

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது!!

Train

தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளைமுதல் பணிக்கு சமூகமளிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் “அரசே தாயையும் மகளையும் பிரிக்காதே” எனக் கோரி போராட்டம்!!

நீண்ட காலமாக வழக்குகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் ஜெயக்குமாரியை விடுவிக்க கோரி வவுனியாவில் இன்று (10.10) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம் வவுனியா நீதிமன்ற வளாகம் வரை சென்றபோது, நகரசபை பிரதான விதியில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

எனினும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் சென்றமையினால் அவர்களை நீதிமன்றம் வரை செல்ல பொலிஸார் அனுமதித்திருந்தனர்.

இதனையடுத்து நீதிமன்றத்திற்கு முன்பாக கூடியவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியாக சிறிது நேரம் நின்றதன் பின்னர் மீண்டும் நகரசபை மைதானத்தை வந்தடைந்தனர்.

இதன்போது ஜெயக்குமாரியை விடுவிக்க வேண்டும், நிபந்தனை இன்றி அரசியல் கைதிகளை விடுதலை செய், சிறிலங்கா அரசே தாயையும் மகளையும் பிரிக்காதே, நீதி வேண்டும் நீதி வேண்டும் அரசியல் கைதிகளுக்கு நீதி வேண்டும், எமது வாழ்வு எமது கைகளில் அந்நியரிடமில்லை, போடாதே போடாதே பெய் வழக்கு போடாதே போன்ற வாசகங்களை ஏந்தியிருந்தனர்.

இப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோதராதலிங்கம், ஈ.சரவணபவன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், தென்னிலங்கை மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பாதிரிமார், காணாமல் போனோரின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

1 2 3 4 5 6 8

வெள்ளவத்தையில் நிர்க்கதியாகியுள்ள யாழ். இளைஞர்கள்!!

Wellawatte

யாழ்.குடாநாட்டிலிருந்து அரபு நாட்டுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக அனுப்பி வைப்பதாக கூறி 25 பேரிடமிருந்து பணம் பெற்ற முகவர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பணம் கொடுத்த இளைஞர்கள் கொழும்பில் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 25 இளைஞர்கள் டுபாய் நாட்டுக்கு அனுப்புவதாக கூறிய முகவர் ஒருவரிடம் தலா 60ஆயிரம் ரூபா வீதம் வழங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் யாழ்.குடாநாட்டிலிருந்து கொழும்புக்கு ஏற்றிச் செல்லப்பட்டு கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் நேற்றைய தினம் இரவு அவர்களுக்கான விமானம் செல்லவுள்ளதாகவும் அதற்கான தயார்படுத்தல்களுடன் இருக்குமாறும் முகவர் இவர்களுக்கு கூறியுள்ளார்.

அதற்கமைய அவர்கள் தயாராகியிருந்த நிலையில் இன்று மாலை வரையில் முகவர் அவர்களிடம் வராததுடன், முகவரின் தொலைபேசியும் வேலை செய்யவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் தங்கியிருந்த விடுதியிலேயே இருந்துவிட்டு இன்றைய தினம் மாலை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

இலங்கையில் ஹுட் ஹுட் சூறாவளித் தாக்கம் : வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!!

sooravali

வங்காள விரிகுடாவில் மையங் கொண்டுள்ள ஹுட் ஹுட் (HUD HUD) என அழைக்கப்படும் சூறாவளிப் புயல் காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஹுட் ஹுட் சூறாவளிப் புயலானது வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. விசாகப் பட்டணத்திலிருந்து தென்கிழக்காக 610 கிலோமீற்றர் தூரத்திலும் கோபாலூரிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 630 கிலோமீற்றர் தூரத்திலும் இப்புயல் மையங் கொண்டுள்ளது.

இந்த சூறாவளிப்புயலானது தொடர்ந்தும் வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து, மீண்டும் வலுவடைந்து மிகவும் வலுவான சூறாவளிப் புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் பின்னர் இச்சூறாவளியானது, வட ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டிணம் அருகே 12ம் திகதி ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூறாவளியினால் நேரடியான பாரிய தாக்கம் எதுவும் இலங்கையில் அல்லாதபோதும், இலங்கையிலும் தீவைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களிலும் பலமான காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். இது பின்னர் வடமேற்கு பிராந்தியத்திற்கும் பரவும்.

அத்துடன் ஊவா, கிழக்கு முற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் இடியுடன்கூடிய மழை காணப்படும். இந்த இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் காற்று பலமானதாக வீசும்.

புத்தளம் முதல் மன்னார் ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியம் மற்றும் காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் தொடக்கம் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசுவதனால் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியை தமிழக முதல்வராக்குவதற்கு மோடி தீவிரம்!!

rajani

நடிகர் ரஜினியை பாரதீன ஜனதா கட்சிக்கு கொண்டுவருவதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஹைதரபாத்தில் தங்கியிருக்கும் ரஜினியிடம் பாஜக தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் இரகசிய கருத்து கேட்பு நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். இதேவேளை அவர் பாஜகவில் சேர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி என்று அந்தக் கட்சியின் நிர்வாகிகள் வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர்.

சமீபத்தில் கொலு விழாவை காரணமாக வைத்து ரஜினி வீட்டுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ரஜினியின் மனைவி லதாவுடன் சுமார் ஒரு மணி நேரம் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து ரஜினி பாஜகவில் சேருவாரா அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா என்பது குறித்து பலத்த விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் தற்போது லிங்கா படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் ரஜினியுடன் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா போனில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த விடயம் குறித்து ஏற்கெனவே அமித்ஷா 3 முறை ரஜினிகாந்திடம் பேசியிருப்பதாகவும் தகவலகள் கூறுகின்றன
எனினும் ரஜினி, தாம் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லவில்லை. காலம் கனியட்டும் என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.

குறிப்பாக, பிரதமர் மோடி இதில் ஆர்வமாக இருக்கிறார். எப்படியும் நீங்களே முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா ரஜினியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து ரஜினியும், படப் பிடிப்பு முடியட்டும் உறுதியான பதில் சொல்கிறேன் என்று கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல்!

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் மீதான தாக்குதல் கொலை முயற்சியே என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை வவுனியா பிரஜைகள் குழு நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் பிரஜைகள் குழுவின் தலைவரை ‘போராட்டத்திற்கு செல்வாயா’ எனக் கேட்டு இனந்தெரியாத சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிரஜைகள் குழுவின் தலைவரான கி.தேவராசாவைத் தாக்கிய பின்னர் அவரை வயல்வெளியொன்றுக்குள் இழுத்துச் சென்றுள்ளனர். அந்த வீதியூடாக வேறு வாகனம் வந்ததால் தாக்குதலாளிகள் தப்பியோடியுள்ளனர். எனவே இது அவரை கொலை செய்வதற்கான முயற்சியாகவே பார்க்கவேண்டியுள்ளது.

இச் சம்பவத்தை கேள்வியுற்றதையடுத்து நெடுங்கேணி வைத்தியசாலைக்கு நானும் வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனும் சென்று அவரைப் பார்வையிட்டோம். அவரை பரிசோதித்த வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளமையால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

இடன்படி பிரஜைகள் குழுவின் தலைவர் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

-நன்றி மலரும் இணையம்-

11 12 13

வவுனியாவில் கொடூரத் தந்தையால் சீரழிக்கப்பட்ட சிறுமி!!

girl

15 வயதான தனது மூத்த மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை வவுனியா பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றச் செயல் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பாடசாலை செல்லும் 15 வயதான இந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்கு செல்லும் இந்த சிறுமிக்கு இரத்த போக்கு அதிகரித்ததால், பாடசாலை ஆசிரியர்கள் சிறுமியை குடும்ப சுகாதர அதிகாரியிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது சிறுமி கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த பல மாதங்களாக தந்தையினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட இந்த சிறுமி குழந்தையை பெற்றெடுக்கும் தருவாயில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகளை தான் வல்லுறவுக்கு உட்படுத்தியமை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட நபர் கடந்த ஜூன் மாதம், அப் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர் கிளிநொச்சி பொன்நகர் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய் சில வருடங்களாக வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும் தனக்கு மூன்று இளைய சகோதர சகோதரிகள் இருப்பதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுமி கூறியுள்ளார்.

தந்தையுடன் உறவு வைத்து கொள்ள மறுத்தால், அவர் 4 வயதான தனது இளைய சகோதரனை கொடூரமான முறையில் தாக்குவதாகவும் தம்பி அடி வாங்குவதை தாங்கி கொள்ள முடியாமல், விருப்பமின்றி தந்தையுடன் அவ்வாறு நடந்து கொண்டதாக சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

பிள்ளைகள் இருக்கும் தாய்மார் பணம் சம்பாதிக்கும் நோக்கில் வெளிநாடுகளுக்கு தொழில் புரிய சென்று விடுவதால், கேட்பாரின்றி இருக்கும் பிள்ளைகள் குறிப்பாக பெண் பிள்ளைகள் வெறிப்பிடித்த தந்தைமார், உறவினர், அயலவர்களினால் இப்படியான அசம்பாவிதங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால், பெற்றோரின் பாசத்தை எதிர்பார்க்கும் வயதில் இந்த பிள்ளைகள் இப்படியான காட்டுமிராண்டிகளிடம் சிக்கி தவிக்கின்றனர்.

இதனை உணர்ந்து குடும்பங்களும் சமூகமும் சீரழிந்து போகாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

வளரும் வயதில் பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த தாய்மார் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதையே இப்படியான சம்பவங்கள் எடுத்து காட்டுகின்றன.