வவனியா தமிழ் மாமன்றம் நடாத்துகின்ற வன்னியின் வாதச்சமர் 2014 இன் காலிறுதி அரையிறுதிப் போட்டிகள்!!

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்துகின்ற வன்னியின் வாதச்சமர் 2014 எனும் மாபெரும் விவாதப் போட்டியின் வவுனியா மாவட்ட போட்டிகள் கடந்த 04.10.2014 ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. 04.05.2014 மற்றும் 05.10.2014 ஆகிய தினங்கிளில் இடம் பெற்ற தகுதிகாண் சுற்றின் அடிப்படையில், தர வரிசையில் முதல் 8 நிலைகளைப் பெற்ற பாடசாலை அணிகள், நேற்று (08.10.2014) இடம் பெற்ற காலிறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன.

08.10.2014 புதன்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய போட்டியில், காலிறுதியில் கனகராயன்குளம் மகா வித்தியாலயம் எதிர் புதுக்குளம் மகா வித்தியாலயம், விபுலானந்த கல்லூரி எதிர் கந்தபுரம் வாணி வித்தியாலயம், பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயம் எதிர் இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் எதிர் கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் சமர் செய்தன.

இவற்றில் வெற்றி வாய்ப்பை பெற்று, புதுக்குளம் மகா வித்தியாலயம், விபுலானந்த கல்லூரி, இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம், கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகியன அரையிறுதிக்குள் நுழைந்தன.

அரையிறுதிச் சுற்றில் இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் எதிர் விபுலானந்த கல்லூரி, புதுக்குளம் மகா வித்தியாலயம் எதிர் கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகியன சமர் செய்தன.

இவற்றில் வெற்றி வாய்பை பெற்று இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் மற்றும் புதுக்குளம் மகா வித்தியாலயம் ஆகியன இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த விபுலானந்த கல்லூரி மற்றும் கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிகிடையே, வவுனியா மாவட்டத்தின் மூன்றாம் நிலை வெற்றியாளரை தீர்மானிக்கின்ற போட்டி இடம் பெற்றது.

தமிழ் சினிமாவின் தற்காலப் போக்கு இளைஞர்களின் வாழ்வை வழிப்படுத்துகிறது இல்லை என்ற தலைப்பில் இடம் பெற்ற சுவரஸ்யமிக்க இவ் விவாதத்தில், கோமரசங்குளம் மகாவித்தியாலயம் வெற்றி வாய்ப்பை பெற்று, வன்னியின் வாதச்சமர் 2014 இன் வவுனியா மாவட்ட மூன்றாம் நிலை வெற்றியாளராக தெரிவாகியது.

இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் மற்றும் புதுக்குளம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிக்கிடையிலான, வவுனியா மாவட்ட முதல் மற்றும் இரண்டாம் நிலை வெற்றியாளரை தீர்மானிக்கின்ற மாபெரும் இறுதிச் சுற்று எதிர்வரும் 11.10.2014 சனிக்கிழமை இடம் பெறவுள்ளது.

10347065_1710736865817987_1585639814025742316_n 10409786_1710735442484796_1703347170300138932_n 10505527_1710735525818121_871103038137894526_n 10703782_1710736519151355_1025325365463188125_n 20141008_091502 20141008_094446 20141008_100225 20141008_100231 20141008_102843 20141008_113256 20141008_114251 20141008_114258

வவுனியா இந்துக்கல்லூரியின் ஆசிரியர் தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா!!

வவுனியா இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தின விழா பாடசாலையின் அதிபர் திருமதி நடராஜா தலைமையில் 07.10.2014 காலை 10.00 மணியளவில் வெகு சிறப்பாக நடை பெற்றது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ இ.இந்திரராசா வடமாகாண சபை உறுப்பினர் மற்றும் கௌரவ விருந்தினராக பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கௌரவ இ.இந்திரராசா வடமாகாணசபை உறுப்பினருக்கு நினைவுப் பரிசிலும் வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நடைபெற்றதுடன் நடனம், கவிதை மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

01 3 4 5 6 07 08

மேலும் இரு வீரர்களுக்கு பந்து வீசத் தடை!!

Bow

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சயீத் அஜ்மலின், பந்துவீச்சு சட்டவிரோதமாக இருப்பதாக கூறி அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்காலிக தடை விதித்தது.

அவரைத் தொடர்ந்து சிம்பாவே சுழந்பந்து வீரர் பிராஸ்பா உத்செயா, பங்களாதேஷ் சுழற்பந்து வீரர் சோஹக் காஜி ஆகியோர் பந்துவீச தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்த இருவரது பந்து வீச்சும் சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களது பந்துவீச்சு முறை ஆய்வு செய்து பார்க்கப்பட்டது.

இருவரும் ஐ.சி.சி. நிர்ணயித்த அளவைவிட 15 டிகிரி அளவில் கூடுதலாக பந்து வீசுவது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்களது பந்துவீச்சு சட்டவிரோதமானது என்று ஐ.சி.சி. அறிவித்து, தற்காலிக தடை வித்துள்ளது.

இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஓகஸ்ட் மாதம் நடந்த 3வது ஒருநாள் போட்டியின் போது உத்செயா பந்துவீச்சு பற்றியும், அதே மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது காஜியின் பந்துவீச்சு பற்றியும் புகார் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே பந்து வீச்சாளர்கள் விதிமுறைப்படி வீசுங்கள் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!!

gas

சமையல் எரிவாயு விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார்.

நாளைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கேஸ் விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

களனியில் இடம்பெற்ற ஓய்வூதியம் பெறுவோரின் தினத்தை அனுஸ்டிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபை தேர்தலுக்கு முன் சீன ஜனாதிபதி இலங்கை வந்தபோது மின் கட்டணம் மற்றும் எரிபொருள்களின் விலையை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா புளியங்குளத்தில் புராதனப் பொருட்களுடன் இருவர் கைது!!

A6

புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றை கனடாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த இருவர் வவுனியா – புளியங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை புளியங்குளம் பகுதியில் வைத்து வழிமறித்த பெரியமடு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை செய்துள்ளனர்.

அதன்போது குறித்த முச்சக்கர வண்டியில் இருந்து 5 சங்குகள் உள்ளிட்ட புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புராதன பொருட்களுடன் புளியங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு மாயமான இளைஞனை தேடும் பொலிஸார்!!

abuse

15 வயது பாடசாலை மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ள கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரை மாரவில பொலிஸார் தேடி வருகின்றனர்.

கட்டுனேரிய – கல்பொக்கவத்த பகுதியைச் சேர்ந்த 11ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு கர்ப்பமாகியுள்ளார்.

15 வயது மாணவி சுகயீனமுற்றிருந்தபோது பெற்றோர் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற வேளை மாணவி கர்ப்பமாகியுள்ள விடயம் தெரியவந்தது.

2012 ஏபரல் மாதம் இரவில் பெற்றோருக்குத் தெரியாமல் மாணவியின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞன் முதற்தடவையாக மாணவியுடன் உறவு கொண்டுள்ளார்.

அதன்பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெற்றோருக்குத் தெரியாமல் மாணவியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் உறவில் ஈடுபட்டதாக குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

மாணவி தற்போது மாரவில வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில்வே ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பினால் வெறிச்சோடிய ரயில் நிலையங்கள்!!

சம்பள முரண்பாடுகளை உட்பட சில கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நாட்டின் சகல ரயில் நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கொழும்பு கோட்டை, மருதானை, கண்டி, காலி, ஹற்றன் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் சில ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அது பொதுமக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அலுவலக ரயில் இன்று காலை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இடநெரிசல் காரணமாக பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கொழும்புக்கு வரும் பிரதான வீதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அனைத்து ரயில் நிலையங்களில் சன நடமாட்டமற்று வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

1 2 3 4 5

விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்!!

Srilankan

இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் அவசரமாக அதே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எயார் பஸ் ரகத்தை சேர்ந்த ஏ 320 என்ற இந்த விமானம் நேற்று மாலை 4.15 அளவில் திருச்சி விமானநிலையத்தில் இருந்து 142 பேர் பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்டு சுமார் 70 மைல் தூரம் வரை பயணித்த பின்னர் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அறிந்துள்ளார். இதனையடுத்து திருச்சி விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து அறிவித்த விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

இந்திய அணி படுதோல்வி!!

WI

இந்திய அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் வேய்ன் பிராவோ, வேய்ன் சுமித் களமிறங்கினர்.

வேய்ன் பிராவோ 17 ஓட்டங்களில் சமி பந்தில் தவானிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சுமித் 46 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் டேரன் பிராவோ 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் இதனையடுத்து மார்லன் சாமுவேல்ஸ், தினேஷ் ராம்தின் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.

தினேஷ் ராம்தின் 61 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்க, மறுமுனையில் மார்லன் சாமுவேல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இவர் 116 பந்துகளில் 126 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் 50 ஓவர் முடிவில் மேற்கிந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் குவித்துள்ளது.

322 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 41 ஓவர்களில் 197 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியில் முன்னதாக களமிறங்கிய ரஹானே 24 ஓட்டங்களும், தவான் 68 ஓட்டங்களும் எடுத்தனர், பின்பு களமிறங்கிய கோஹ்லி, ராயுடு, ரெய்னா மற்றும் டோனி சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

ஜடேஜா 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், மேற்கிந்திய தீவுகள் அணி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் இ.போ.ச பஸ் மீது தாக்குதல்!!

CTB

யாழ் – கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கண்டி நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த பேருந்தின் மீது யாழ். மீசாலை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கல்வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பற்றைக்குள் மறைந்திருந்த இனம் தெரியாத நபர்களே பேருந்தின் மீது கற்களை வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன், பேருந்து தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள முடியாததால் பயணிகள் இறக்கப்பட்டு வேறு பேருந்தில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

சேதமடைந்த பேருந்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

50 வருடங்களுக்கு பின் மீண்டும் திருமணம் செய்து கொண்ட தம்பதி!!

50

50 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்த கணவனும் மனைவியும் மீண்டும் இன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று அனுராதபுரம் நகரில் நடைபெற்றது.

அனுராதபுரம் புனித ஜோசப் தேவாலயத்தில் இவர்கள் சம்பிரதாயபூர்வமாக இன்று திருமணம் செய்து கொண்டனர்.

இலக்கம் 05 பிரிமன் வீதி அனுராதபுரம் என்ற முகவரியில் வசித்து முன்னாள் நகர உருவாக்கல் கலைஞரான 82 வயதான டப்ளியூ.பி. பெர்ணான்டோ, 71வயதான அவரது மனைவி ரீட்டா மாலினி ஆகியோர் 50 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இவ்வாறு திருமணம் செய்து கொண்டனர்.

அனுராதபுரம் ஆயர் வணக்கத்திற்குரிய நோபட் அந்ராதி புனித ஜோசப் தேவாலயத்தின் பங்கு தந்தை ஜோய் பெர்ணான்டோ ஆகியோரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் இந்த திருமணம் நடைபெற்றது.

4 பிள்ளைகளின் பெற்றோரான இவர்களுக்கு பேரன், பேத்திகள் 7 பேரும் கொள்ளு பேரன்களும் கொள்ளு பேத்திகளும் உள்ளனர்.

கசிப்பு விற்பனையை பிடிக்க சென்ற பொலிஸ் அதிகாரியை கடித்து காயப்படுத்திய பெண்!!

Police

புத்தளம் பொலிஸ் பிரிவின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மீது மதுரங்குளி – ஜயசிறிகம பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று முற்பகலில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் சம்பவத்தில் மோசடி தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகரான நசீம் சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.
அத்துடன் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த பொலிஸ் அதிகாரிகள் ஜயசிறிகம பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபடும் பெண்ணொருவரை கைது செய்ய சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கசிப்பு விற்பனையில் ஈடுபடும் பெண்ணின் மகள் மோசடி தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகரின் கையை கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன் அவருடன் சென்றிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிகளில் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். மோட்டார் சைக்களில் மோதிய இளைஞர் சந்தேக நபரான பெண்ணின் மகன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உப பொலிஸ் பரிசோதகரை கடித்து காயப்படுத்திய 25 வயதான யுவதி மற்றும் அவரது தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தப்பிச் சென்றுள்ள இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர். முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் பெண் கொள்ளைக் கும்பல் கைது!!

A6

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மற்றும் உடையார்க்கட்டு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையிட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பெண்கள் கொள்ளையிட்ட பொருட் தொகை ஒன்று புதுக்குடியிருப்பு பிரசேதத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

மின்சார தளபாட விற்பனை நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் போன்றவற்றை உடைத்து, இந்த பெண்கள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

வவுனியா ஊடாக பளை உள்ளிட்ட தபால் ரயில் சேவைகள் இரத்து!!

Train

பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வவுனியா, பளை ஆகிய பிரதேசங்களுக்கான இரவுநேர தபால் ரயில் சேவைகள் இன்று (08.10) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்ற 4 வயது சிறுமி!!

Kanja

அமெரிக்காவில் 4 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கூடத்தில் போதைப்பொருள் விற்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் டெல்வேர் நகரைச் சேர்ந்த அஷ்லே துல் 4 வயது சிறுமி கிண்டர்காடன் பள்ளிக்கூடம் ஒன்றில் பயின்று வருகிறார்.
இவர் தனது சக மாணவிகளிக்கு இனிப்பை தருவது போல் ஹெராயின் பொட்டலங்களை விநியோகம் செய்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தை காப்பாளர்கள் பொலிசாரிடம் அளித்த புகாரின் போல் சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து குழந்தையிடம் மேற்கொண்ட விசாரணையில், மொத்தம் 249 பையில் 3.7 கிராம் போதை பொருள் இருந்ததும், போதைப்பொருளை தவறுதலாக எடுத்து வந்து சிறுமி அனைவருக்கு தந்ததும் தெரியவந்துள்ளது.

தற்போது குழந்தையின் தாயை கைது செய்துள்ள பொலிசார், போதைப்பொருளை உட்க்கொண்ட மாணவிகளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சனத் ஜெயசூரியவின் அணியை வீழ்த்தியது பிரையன் லாராவின் அணி!!

c1

ஜெயசூரிய தலைமையிலான ஆசிய லெவன் அணியை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லாரா தலைமையிலான உலக லெவன் அணி.

கட்டார், டோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் கிரிக்கெட் அரங்கத்தில் முன்னாள் ஜம்பவான்களான லாரா, ஜெயசூரிய ஆகியோரின் அணிகள் கண்காட்சி T20 கிரிக்கெட் போட்டியில் விளையாடினர்.

இந்த போட்டியை காண 10000க்கும் அதிகமான ரசிகர்கள் அரங்கத்தில் கூடினர். இவர்கள் இரு அணிகளுக்கும் தங்களது ஆதரவை அளித்தனர். இதனால் அரங்கமே அதிர்ந்தது.

நாணய சுழற்சியில் வென்ற உலக லெவன் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 161 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய ஆசிய லெவன் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இந்த அணி 20 ஓவருக்கு 8 விக்கெட்டுகள் இழந்து 156 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் உலக லெவன் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 44 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்த லாரா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.