மீனா வேண்டாம் : கமல் அதிரடி முடிவு!!

Kamal

மலையாள படமான த்ரிஷ்யமின் தமிழ் ரீமேக்கில் தனக்கு ஜோடியாக மீனா வேண்டாம் என்று கமல் ஹாஸன் தெரிவித்துவிட்டாராம்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த மலையாள படமான த்ரிஷ்யம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.

மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தை எடுத்த ஜீத்து ஜோசபே அதை தமிழில் கமலை வைத்து ரீமேக் செய்கிறார். த்ரிஷ்யம் படத்தில் மீனா இரண்டு பெண்களின் அம்மாவாக, இல்லத்தரசியாக நடித்திருந்தார்.

அவரது நடிப்பை பார்த்த அனைவரும் அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று பாராட்டினர். மலையாளத்தை அடுத்து தமிழ் ரீமேக்கிலும் மீனாவே கதாநாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின.

மீனாவும், கமலும் சேர்ந்து ஏற்கனவே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் மீனா வேண்டாம் என்று கமல் தெரிவித்துவிட்டாராம். இதையடுத்து அவருக்கு வேறு ஒருவரை ஜோடியாகப் போடுகிறார்களாம்.

கமல் அனைத்து தென்னிந்திய நடிகைகளுடனும் நடித்துள்ளார். ஆனால் அவர் நதியாவுடன் மட்டும் நடிக்கவில்லை. அதனால் தான் அவரை த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது என்று கமலுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.

த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கில் கமல் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அதில் அஜய் தேவ்கன் நடிக்கவிருக்கிறாராம். த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கில் மோகன்லால் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா தான் நடிக்கிறார். மீனா வெங்கடேஷுடன் ஜோடி சேர்வது இது முதல் முறை அல்ல.

 

இப்படி பண்ணிட்டயே காஜல் : கடுப்பில் ஸ்ரேயா!!

Kajal

சினிமாவிலிருந்து ஸ்ரேயா ரிட்டயர்டு ஆகட்டும் என்று காஜல் கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஜல் அகர்வால், விஜய்க்கு ஜோடியாக ஜில்லா படத்தில் நடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த காஜலிடம், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் தற்போது ஓய்வு பெற வேண்டும் என்றால் யார் பெயரை சொல்வீர்கள் என்றதற்கு உடனடியாக ஸ்ரேயா பெயரை குறிப்பிட்டுள்ளாராம்.

இந்த பதிலானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் ஸ்ரேயா, காஜலின் கருத்தால் அதிர்ச்சியடைந்துள்ளாராம்.

 

நஸ்ரியா – பஹத் காதலர் தினத்தில் பிரிந்திருக்க முடிவு!!

Nasriya

நய்யாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நஸ்ரியா நாசிமுக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த 8ம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி திருமணம் நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது காதல் திருமணம் அல்ல. இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நடக்கும் திருமணம் என்று ஏற்கனவே நஸ்ரியா கூறி வந்தார். ஆனால் ஒரே படத்தில் நடித்து வரும்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

காதல் திருமணமாக இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்பு அடிக்கடி தனிமையில் சந்திப்பது, வெளியிடங்களுக்கு சுற்றுவது போன்ற செயல்கள் கண்டிப்பாக கூடாது என இருவரின் குடும்பத்தாரும் உத்தரவிட்டுள்ளார்களாம்.

இந்நிலையில் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நஸ்ரியாவும், பஹத்தும் பிரிந்திருக்க முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி நஸ்ரியா கூறும்போது, விரைவில் நான் கன்னடத்தில் அஞ்சலி மேனன் இயக்கும் பெங்களூர் டேஸ் என்ற படத்தில் நடிக்க புறப்படுகிறேன். சில நாட்களில் அதன் படப்பிடிப்பு முடிந்துவிடும்.

எனவே காதலர் தினமான 14ம் திகதி நானும், பஹத்தும் வெவ்வேறு இடங்களில் பிரிந்து இருப்போம். இதற்கு காரணம் இருவரும் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதுதான் என்றார்.

 

யுவனுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் சிம்பு!!

SImbu

இசைஞானி இளையராஜாவுக்கு, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என 2 மகன்கள், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. திரையுலகில் பிஸியாக இருந்தாலும் யுவன் சங்கர் ராஜா வாழ்க்கையில் மட்டும் கசப்பான சம்பவங்கள் நடந்தேறின. சுஜாயா என்ற பெண்ணுடன் யுவனுக்கு திருமணம் நடந்தது.

கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்ததுடன் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். இதையடுத்து ஷில்பா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார். அவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென்று சில வாரங்களுக்கு முன் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

இதுபற்றி தனது தந்தை இளையராஜாவிடம் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதை யுவனே தனது இணைய தளப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் யுவனுக்கு முஸ்லிம் பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. யுவன் மதம் மாறியது பற்றி அறிந்த சிம்பு அவருக்கு தனது ஆதரவை இணையதள பக்கமான டுவிட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார்.

என்ன என்பது விஷயம் கிடையாது. என்னுடைய ஆதரவும், அன்பும் எப்போதும் யுவனுக்கு உண்டு என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

அஜித் குமாருக்கு செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை!!

Ajithஆரம்பம் படத்தில் நடித்தபோது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அஜித் குமார் வரும் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்.

அஜித் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்தபோது ஆக்ஷன் காட்சி ஒன்றில் டூப் போட மாட்டேன் என்று அடம்பிடித்து தானே நடித்தார். ஆர்யா காரை ஓட்ட அஜித் காரின் முன்பகுதியில் நின்று செல்லும் காட்சியை படமாக்கியபோது விபத்து ஏற்பட்டது.

அந்த ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தில் அஜித்தின் காலில் காயம் ஏற்பட்டது. முதலுதவி பெற்ற பிறகு அவர் நடிப்பை தொடர்ந்தார்.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு அஜித் கட்டாயம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரோ ஆரம்பம், வீரம் படங்களின் படப்பிடிப்பு முடியட்டும் பார்க்கலாம் என்று தெரிவித்துவிட்டார்.

ஆரம்பம் படம் வெளியாகி, வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கடந்த டிசம்பர் மாதமே அஜித் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் வீரம் படத்தை முடித்துவிட்டு குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய அவர் இந்த மாத இறுதியில் தொடங்கும் கௌதம் மேனன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் முதல் முறையாக அனுஷ்கா ஜோடி சேர்கிறார்.

இத்தனை மாதங்களாக அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்ட அஜித் ஒரு வழியாக வரும் செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறாராம். இந்த முறையாவது அறுவை சிகிச்சையை தள்ளிப்போடாமல் இருக்கட்டும் என்று அவரது இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

வவுனியாவில் ரயிலில் ஒருவர் மோதுண்டு ஒருவர் பலி!!

Trainவவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது..

கொழும்பிலிருந்து வவுனியா ஊடாக கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் வவுனியா குருமன்காட்டை சேர்ந்த கே.செல்வராஜா(55) என்பவரே மோதுண்டு பலியாகியுள்ளார்
இறந்தவரின் உடல் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தற்காலிக பணிநீக்கம்!!

Indian Lok Sabhaஇந்தியப் பாராளுமன்றத்தில் இன்றும் தெலுங்கானா பிரச்சினையால் கடும் அமளி ஏற்பட்டது. சீமாந்திரா பகுதி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களை எதிர்த்து தெலுங்கானா எம்.பி.க்கள் பதில் கோஷம் போட்டனர்.

பயங்கர அமளி ஏற்பட்டு ஆந்திர எம்.பி.க்கள் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவான சமயத்தில் விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால், மிளகு பொடி ஸ்பிரேயை பாராளுமன்றத்தில் அடித்தார்.

இதனால் சில எம்.பி.க்களுக்கு இருமல், கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது. 3 எம்.பி.க்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சில எம்.பி.க்கள் மிளகு பொடி ஸ்பிரேக்கு பயந்து சபையில் இருந்து வெளியேறினர்.

ராஜகோபால் எம்.பி. மிளகு பொடி தூவியதுடன் கண்ணாடி டம்ளர்களையும் வீசினார். அவரை எம்.பி.க்கள் பிடித்துக் கொண்டு சூழ்ந்து நின்று தாக்கினார்கள்.

நிலைமை மோசமானதால் பாராளுமன்ற ஊழியர்களும், சபை காவலர்களும் ஓடி வந்து அவரை மீட்டனர். தெலுங்கு தேசம் எம்.பி. வேணுகோபால் ரெட்டி பாராளுமன்ற செயலாளர் மேஜையில் இருந்த மைக்கை உடைத்தார்.

இந்த மோதலுக்கு இடையே இந்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்தார். அதன்பின்னரும் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டதாக ராஜகோபால், தெலுங்கு தேசம் கட்சியின் கிறிஸ்தப்பா நிம்மலா, கொணகல்லா நாராயண ராவ், நம நாகேஸ்வர ராவ், வேணுகோபால் ரெட்டி, நரமல்லி சிவபிரசாத், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி, மேகபதி ராஜமோகன் ரெட்டி உள்ளிட்ட 16 எம்.பி.க்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது சபை விதி 347ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் 5 நாட்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என்றும் சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.

 

சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க தடை!!

Swissசுவிற்சர்லாந்தில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு இலங்கை உள்ளிட்ட நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அந்த நாட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடித்துள்ளது.

அதேவேளை குரோசியா, மொன்ரனிக்ரோ நாட்டவர்களுக்கு ஆயுதங்களை வைத்திருக்க விதிக்கப்பட்டிருந்த தடையை சுவிஸ் அரசாங்கம் நீக்கியுள்ளது.

சுவிசில் ஆயுதங்களை வைத்திருக்கவும் வாங்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உறுப்பு நாடுகளான குரோசிய மற்றும், மொன்ரனிக்ரோ நாட்டவர்களும் விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்று ஆளும் சமஸ்டி சபை தெரிவித்துள்ளது.

மோதல் சூழல் நிலவும் குறிப்பிட்ட நாட்டவர்கள் சுவிசில் மோதிக் கொள்வதை தடுப்பதற்கும், மோதல் பகுதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதற்கு சுவிஸ் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கும், சுவிற்சர்லாந்து அரசாங்கம் இந்த தடையை விதித்திருந்தது.

அல்பேனியா, அல்ஜீரியா, பொஸ்னியா – ஹெர்சகோவினா, கொசோவோ, மெசிடோனியா, சேர்பியா, துருக்கி மற்றும் இலங்கை ஆகிய நாட்டவர்களுக்கே ஆயுதங்களை வைத்திருக்க சுவிஸ் தடை விதித்துள்ளது.

 

அத்துமீறும் காதல் ஜோடிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

Chennai

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் வட சென்னை மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் முகமது சுல்தான், முகமது அலி, கலீல், நிஜாம் உள்பட 15 பேர் இன்று பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில் காதலர் தினத்தன்று பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. காதலர் தினம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட துண்டு பிரசுரம் ஒன்றையும் புகார் மனுவுடன் இணைத்து இருந்தனர்.

அதில் கிறிஸ்தவ போதகர் வலன்டைன் என்பவர் நினைவாக ரோம் பாரம்பரியத்தின் வழியாக வந்ததுதான் இந்த காதலர் தினம். இதனை மேற்கத்திய நாடுகள் வணிக நோக்கத்திலேயே காதலர் தினமாக அறிவித்து உள்ளன.

இதனால் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் காதலால் தற்கொலை செய்து கொள்வதை நினைத்தும் வீட்டை விட்டு ஓடிப்போகும் போதும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

இந்திய பாராளுமன்றில் மிளகுப்பொடி திரவம் அடித்து குழப்பம் : சபை ஒத்திவைப்பு!!

Indian Lok Sabhaதமிழக மீனவர்கள் பிரச்சினை மற்றும் தெலுங்கானா பிரச்சினை காரணமாக இந்திய பாராளுமன்றின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் உறுப்பினர்கள் மீது மிளகுப்பொடி திரவம் அடித்து காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் தாக்குதல் நடத்தினார். இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்களவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திரவத் தாக்குதலில் இருந்து தப்பித்து சென்ற உறுப்பினர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய ராஜகோபால் அண்மையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவராவார்.

மிளகுப்பொடி வீரியம் அதிகமானதால் மக்களவையில் இருந்த பத்திரிகையாளர்கள் இருமிக்கொண்டே இருந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 

கட்டுநாயக்க அதிவேக வீதியில் சென்ற பஸ்ஸில் தீவிபத்து!!

Busகொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் சென்ற பயணிகள் பஸ் ஒன்றில் தீப்பற்றியுள்ளது.

இன்று பகல் 12 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டதாகவும் தற்போது தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டுநாயக்க அதிவேக வீதி நிருவாக பணிப்பாளர் டி.கே.ரணதுங்க தெரிவித்துள்ளார். தீயினால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

 

அடக்கம் செய்யப்பட்டு 7 ஆவது நாளில் உயிருடன் வந்த பெண் : கடவத்தை பிரதேசத்தில் சம்பவம்!!

Womenவிபத்தொன்றில் உயிரிழந்த பெண்ணொருவர் அடக்கம் செய்யப்பட்டு 7ம் நாள் கரும கிரியை நடத்திக் கொண்டிருந்த போது வீட்டுக்கு திரும்ப வந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த சம்பவம் கடவத்தை பிரதேசத்தில் நடந்துள்ளது. கடந்த 8ம் திகதி கடவத்தை ரண்முத்துகல என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் உயிரிழந்த முதிய பெண் தமது தாய் என அந்த பெண்ணின் மூன்று பிள்ளைகள் அடையாளம் காட்டினர்.

இதனையடுத்து சட்ட விசாரணைகள் முடிவடைந்த பின்னர் சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அவர்கள் சடலத்தை எடுத்துச் சென்று மூன்று நாட்களின் பின்னர் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கான 7ம் நாள் கரும கிரியைகள் இன்று அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளன. இதன்போது உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் உயிருடன் வீடு திரும்பினார்.

தாயின் வருகையை எண்ணி அதிர்ச்சிக்குள்ளாகிய பிள்ளைகள் பின்னரே ஏற்பட்ட தவறை உணர்ந்துள்ளனர். இவர்கள் தமது தாயின் சடலம் எனக் கருதி வேறு ஒரு பெண்ணின் சடலத்தை எடுதது வந்து அடக்கம் செய்துள்ளமை பின்னர் தெரியவந்துள்ளது.

 

பிரபலமடைந்து வரும் இராட்சச மார்பக தலையணைகள்!!

Pillow

தலையணைகள் பல விதம். ஆனால் ஜப்பானிய கடைகளில் மிகவும் புதுமையான தலையணைகள் தற்போது அறிமுகம் ஆகி உள்ளன.

இவற்றை மார்பக தலையணைகள் என்று அழைக்கின்றனர். இவை கட்டி அணைக்கின்றமைக்கான தலையணைகள் என்கிற ரகத்தைச் சேர்ந்தவைதான்.

ஆனால் கட்டி அணைக்கின்றமைக்கான தலையணைகளில் வழமையாக ஜப்பானிய செக்ஸி மங்கா கார்ட்டூன் பெண் உருவம் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இருப்பினும் மார்பக தலையணைகளில் மங்கா கார்ட்டூன் பெண் உருவம் நிர்வாண மார்பகத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

 

பெண்ணாக மாறிய 72 வயது முதியவர்!!

OLD MAN

72 வயதுச் சீன முதியவர் ஒருவர் பெண்களின் ஹீரோவாக மாறி உள்ளார். இவர் எந்தவொரு வீர சாதனைகளையும் செய்து இருக்கவில்லை.

ஆயினும் பேரக் குழந்தைகளுக்கு நூதனமான முறையில் அறிவூட்டலை மேற்கொண்டு இருக்கின்றார். பேரக் குழந்தைகள் கல்லூரிக்கு உடை அணிந்து செல்ல வேண்டிய முறையை காண்பிக்கின்றமைக்காக இவரே ஒரு பெண்ணாக மாறி இருக்கின்றார்.

நவ நாகரிக உடை அணிந்து தோன்றி இருக்கின்றார். இவரது பேரக் குழந்தைகளில் ஒருவர் இத்தோற்றப்பாட்டை புகைப்படங்கள் பிடித்து இணையங்களில் வெளியிட்டமையை அடுத்து தாத்தா உலகப் பிரசித்தி அடைந்து விட்டார். குறிப்பாக பெண்களின் கதாநாயகனாக மாறி உள்ளார்.

 

இரு மூக்குகளைக் கொண்ட அதிசய நாயை வாங்க உலகளவில் போட்டி!!

Dog

ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோ நகரிலுள்ள நாய்களுக்கான டிரஸ் றீகோமிங் நிலையத்திலுள்ள இருமூக்குகளைக் கொண்ட நாயை வளர்ப்புப் பிராணியாக வளர்க்க உலகமெங்குமிருந்து விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

அந்நாய் தொடர்பான வெளியான செய்திகளையடுத்து அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து அந்த நாயை வாங்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் அந்நாயின் புதிய உரிமையாளராக ஸ்கொட்லாந்திலுள்ள கிழக்கு லொதியன் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்நாய் எதிர்வரும் வாரம் முதல் புதிய உரிமையாளரிடம் வளரவுள்ளது.

Dog1

 

நள்ளிரவில் தாயிடம் பால்குடித்து உறங்கிய குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!!

Babyபொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவில் குழந்தை ஒன்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது.

தனது தாயிடம் நேற்று நள்ளிரவு பால் குடித்துவிட்டு குழந்தை விளையாடியதாக தெரியவருகிறது. அதன்பின் நான்கு மணியளவில் தாய் பார்த்தபோது குழந்தை உயிரிழந்து இருந்ததாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தையின் மரணம் குறித்து தாய் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொகவந்தலாவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.