
யாழ். பல்கலைகழகத்தில் தற்காலிக அடிப்படையில் சேவையாற்றி வந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைகழகத்திற்கு முன்னால் நேற்று காலை 8 மணி முதல் இடைநிறுத்தப்பட்ட 17 ஊழியர்களும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். ஆறு அம்ச கோரிக்கையை முன் வைத்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் யாழ். பல்கலைக்கழக பதிவாளர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் இன்று மாலை 5 மணியுடன் கைவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ம் திகதி பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் கூட்டத்தில் இவர்களது பிரச்சினை தொடர்பில் பேசப்படும் எனவும் நியாயமான தீர்வு முன்வைக்கப்படும் எனவும் பதிவாளர் கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.
இவ் ஊழியர்களது பெயர் விபரம் உயர் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பதிவாளர் வாக்குறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் 26ம் திகதி தமக்கான தீர்வு முன்வைக்கப்படாவிடில் உண்ணாவிரத போராட்டத்தை தொடரவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.

வவுனியா – முல்லியடி பிரதேசத்திலிருந்து துப்பாக்கி மற்றும் ஒரு தொகுதி ரவைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது.
அமெரிக்கா திரைக்கதை எழுத இந்தியா இயக்குநராக செயற்பட விக்கினேஸ்வரன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் எடுக்கப்படும் போது தான் இலங்கை அரசாங்கத்திற்கு தலைசுற்றும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார்
தமிழ்நாடு, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இராமியம்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் ஆனந்தன் (40). திருமணமான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
அமெரிக்காவின் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு பிரபல இயற்பியல் விஞ்ஞானி அல்பட் ஐன்ஸ்டீன் எழுதிய இரு கடிதங்கள் 4 லட்சம் டொலர் வரை ஏலம் போகும் என நியூயோர்க் போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
உலகின் செசினோ சூதாட்ட மன்னன் என அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர்ஸ் க்ரவுன் மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கல் கிளார்க் ஆகியோருக்கு இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.


இறக்குவானையில் தெமுவாவத்த கிவுல்எல்ல பிரதேசத்தில் நேற்று காலை 6.45 மணியளவில் சிவப்பு மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழ் மக்களின் வெற்றியல்ல என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆங்கில இணையம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையமான நாசாவுக்கு போட்டியாக சீனா ஒரு மனித ரோபோவை தயாரித்துள்ளது.
திருப்பூர் நகரிலுள்ள சுண்டமேடு குப்புசாமி காம்பவுண்டை சேர்ந்தவர் அசோக் (28). இவரது மனைவி கவிதா (25). அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த இவர்கள் இருவருக்கும், 4 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது.