கவர்ச்சியில் தாய் சரிகாவை மிஞ்சிய சுருதிஹாசன்!!

Sruthi Hasanகவர்ச்சியில் தாய் சரிகாவை சுருதிஹாசன் மிஞ்சி விட்டதாக மும்பை பத்திரிகைகளும், இணையதளங்களும் செய்தி வெளியிட்டு உள்ளன.

சுருதிஹாசன் முதன் முதல் அறிமுகமான லக் இந்தி படத்திலேயே நீச்சல் உடையில் வந்து பரபரப்பு ஏற்படுத்தினார். டிடே இந்தி படத்தில் விலை மாது கரக்டரில் நடித்தார். இப்படத்தில் அரைகுறை உடையில் படுக்கையில் இருப்பது போன்ற படங்கள் இணைய தளங்களில் பரவி திரையுலகத்தினரை ஆச்சரிய படவைத்தது.

கவர்ச்சியில் துணிச்சலாக நடித்து இருந்தார். பொது நிகழ்ச்சிகளுக்கும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது ஆங்கில பத்திரிகையொன்றுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் எந்த நடிகையும் சுருதிஹாசன் போல் இந்த அளவு கவர்ச்சி காட்டியது இல்லை என்கின்றனர். சுருதிஹாசன் தாய் சரிகா நிறைய இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடித்தவர். அவரை சுருதிஹாசன் கவர்ச்சியில் பின்னுக்கு தள்ளிவிட்டார்.

சினிமாவில் இருந்து நடிகை விலகும் ரிச்சா!!

Richaசினிமாவை விட்டு நடிகை ரிச்சா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிச்சா தமிழில் தனுஷ் ஜோடியாக மயக்கம் என்ன சிம்புவுடன் ஒஸ்தி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். தற்போது ரிச்சாவுக்கு படவாய்ப்புகள் குறைந்துள்ளன. இதனால் நடிப்பதை நிறுத்தி விட்டு வெளிநாட்டுக்கு படிக்க செல்கிறார். இது குறித்து ரிச்சா அளித்த பேட்டி வருமாறு..

கடந்த ஒரு வருடமாக சினிமாவில் தொடர்ந்து நடிப்பதா, அல்லது அமெரிக்காவுக்கு படிக்கச் செல்வதா, என்று யோசித்து வந்தேன். தற்போது படிக்கச் செல்வதென முடிவு செய்துள்ளேன். பாய் என்ற தெலுங்கு படத்தில் கடைசியாக நடித்தேன். அப்படத்துக்கு பிறகு புதுப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. படிக்க செல்வதால் சினிமாவில் நடிப்பதை நிறுத்துவிட்டேன்.

நிறைய படவாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை. படிப்பை முடித்து விட்டுதான் மற்றதெல்லாம். சினிமாவுக்கு முழுக்கு போட்டு அதில் இருந்து விலகி விட்டதாக கருத வேண்டாம் என்று ரிச்சா கூறினார்.

ஹன்சிகாவை ஓரங்கட்டி மீண்டும் லட்சுமிமேனனை ஜோடியாக்கிய விஷால்!!

Visalகும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் லட்சுமி மேனன். தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது விஷால் நடிப்பில் பாண்டிய நாடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர மஞ்சப்பை, சிப்பாய், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

விஷாலுடன் இவர் நடித்த பாண்டிய நாடு படம் வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இப்படத்திற்கு பிறகு விஷால் நடிக்கும் புதிய படத்திலும் லட்சுமி மேனனே நடிக்கவிருக்கிறாராம். விஷாலை வைத்து தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர் ஆகிய படங்களை எடுத்த திரு இப்படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தையும் விஷாலே தயாரிக்கிறார்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் ஹன்சிகாவைத்தான் ஒப்பந்தம் செய்ய முடிவெத்திருந்தார்கள். ஆனால் பாண்டிய நாடு படத்தில் லட்சுமி மேனனின் நடிப்பை பார்த்து வியந்து போன விஷால் தன்னுடைய அடுத்த படத்திலும் லட்சுமி மேனன்தான் நடிக்கவேண்டும் என்று விடாபிடியாக இருந்தாராம். இதையடுத்தே இப்படத்தில் லட்சுமி மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ்ப் பெண்!!

Uma Kumaranபிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் உமா குமரன் என்ற இலங்கைத் தமிழ்ப் பெண் போட்டியிடவுள்ளார்.

உமா குமரனின் பெற்றோர் இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போரினால் லண்டனுக்கு குடிபெயர்ந்தனர். லண்டனில் பிறந்த உமா குமரன் ஹரோ தொகுதியில் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

லண்டன் குயின்ஸ்மேரி பல்கலைக்கழகத்தில் அரசியலில் பட்டம் பெற்ற உமா குமரன் பொதுக் கொள்கையில் முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். தமிழ், சிங்களம்,ஆங்கிலம், பிரெஞ், ஜேர்மன் ஆகிய ஐந்து மொழிகளைப் பேசும் திறன் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

uma

இலங்கை விஞ்ஞானி ஒருவரின் புதிய கண்டுபிடிப்பு!!

handவிபத்துக்களின் போது கைகளை இழக்கும் நபர்களுக்கு உறுப்பு மாற்று அடிப்படையில் சத்திரசிகிச்சை மேற்கொண்டு கைகளை பொருத்தும் அதி நவீன முறை ஒன்றை இலங்கை விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் குறித்த இலங்கை விஞ்ஞானி இந்த ஆய்வினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். வைத்திய கலாநிதி துசித ஜயமான என்ற மருத்துவ விஞ்ஞானியின் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.

எலிகளைக் கொண்டு கை உறுப்பு மாற்று சத்திர சிகிச்சை குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பேர்ண் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அநேகமாக கை உறுப்பு மாற்று சிகிச்சையின் போது ஏற்படும் பிரதான சிக்கலான நோய் எதிர்ப்பு சக்தி பொறிமுறைமையை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நவீன முறைமையின் மூலம் மீளப் பொருத்தப்படும் கையின் நோய் எதிர்ப்பு சக்தி பொறிமுறைமை உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பொறிமுறைமையுடன் இயைபொத்து தொழிற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மரத்தன் போட்டியில் பரிசு வென்ற நாய் மரணம்!!

Marathon dogஉலகிலேயே முதன்முறையாக மரத்தன் போட்டியில் பங்கேற்று பரிசு வென்ற அமெரிக்காவைச் சேர்ந்த நாய் பூகி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது.
இம்மாதம் 5ஆம் திகதி தனது உரிமையாளர் வீட்டில் இருந்து காணாமல் போன 10 வயது பூகி இண்டியானாவில் மரத்தன் போட்டி நடைபெற்ற இவான்ஸ்வில்லி என்ற இடத்துக்கு வந்தது.

மரத்தன் போட்டியாளர்களைப் பார்த்து ஆவலுடன் தானும் கலந்துகொண்டது. உரிமையாளரின் துணையின்றி 20.9 கி.மீ தூரத்தை 2 மணி 15 நிமிடங்களில் கடந்து மரத்தன் பரிசை வென்று ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றது.

இதைத்தொடர்ந்து விலங்குகள் காப்பகத்திற்கு அந்த நாய் எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பிறகே, நாயின் உரிமையாளர் ஜெர்ரி பட்ஸஸக்கு, தனது நாய் மரத்தனில் பங்கேற்று பரிசு பெற்றது தெரியவந்தது.

இந்நிலையில் உலகின் கவனத்தைக் கவர்ந்த பூகி என்ற அந்த நாய், கடந்த 15ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தது.
இது குறித்து அதன் உரிமையாளர் ஜெர்ரி பட்ஸ் பேஸ்புக் இணையத்தில் பூகியின் ஒவ்வொரு நிமிட அசைவையும் நேசித்தேன் என்று அதன் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளதாக நியூயார்க் டெய்லி நியூஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

காந்தி பயன்படுத்திய ராட்டை 60 லட்சத்துக்கு ஏலம்!!

Gandhiகாந்தியடிகள் புனே சிறையில் பயன்படுத்திய ராட்டை, லண்டனில் அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. காந்தியடிகள் சுதந்திர போராட்ட காலத்தில் சுதேசி பொருட்களை பயன்படுத்தும் படி தொண்டர்களிடம் வலியுறுத்தி வந்தார்.

இதன் ஒரு பகுதியாக பருத்தி ஆடைகளை பயன்படுத்துவதற்காக அவர் ராட்டையை இயக்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
வெள்ளையனே வெளியேறு´ இயக்கத்தில் ஈடுபட்டதற்காக அவர் புனேயில் உள்ள எர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் எளிதில் கொண்டு செல்லக் கூடிய வகையில் மடக்கும் வகையிலான ராட்டையை பயன்படுத்தினார்.

இந்த ராட்டையை பின்நாளில் அமெரிக்க கிறித்துவ மத போதகர் பிளாய்டுக்கு அன்பளிக்காக கொடுத்தார். தற்போது இந்த ராட்டை, லண்டனில் உள்ள முல்லக் ஏல நிறுவனத்திற்கு வந்துள்ளது.

அடுத்த மாதம் 5ஆம் திகதி இந்த ராட்டை மற்றும் அவர் எழுதிய கடிதங்கள், புத்தகங்கள் உள்ளிட்டவையும் திப்பு சுல்தான் பயன்படுத்திய பொருட்களும் பஞ்சாபை ஆண்ட, ரஞ்சித் சிங் மன்னர் பயன்படுத்திய பொருட்களும் ஏலம் விடப்பட உள்ளன.

காந்தி பயன்படுத்திய ராட்டை 60 லட்ச ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3500 ஆண்டு பழமை வாய்ந்த கல்லறை கண்டுபிடிப்பு!!

imagesதமிழ்நாடு, உடுமலை அருகே 3500 ஆண்டு பழமை வாய்ந்த கல்லறை உட்பட பல வரலாற்று சின்னங்கள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரத்தில் கோவை, பி.எஸ்.ஜி. கல்லூரி கல்வெட்டியல் படிப்பு மாணவர்கள் பேராசிரியர் ரவி தலைமையில் ஆய்வு நடத்தினர்.

இதில் பழமை வாய்ந்த, கல்லறைகள் கண்டறியப்பட்டன. விவசாயி செல்வராஜ் தோட்டத்திலும் கோவில் தோட்டம் எனப்படும் பகுதியிலும் விவசாயி தம்பியின் தோட்டத்து கிணற்றின் பக்கவாட்டு சுவரிலும் இவை கண்டுபிடிக்கப்பட்டன.

இதே கிராமத்து விளைநிலத்தில் 20 அடி உயர நடுகல்லையும் மாணவர்கள் ஆராய்ச்சி செய்தனர். பழங்கால மக்கள் இரும்பை உருக்கி ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் தயார் செய்ததற்கான இரும்புக் கசடுகள் மேற்பரப்பு ஆய்வில் கிடைத்தன.

சாம்பல் மேடு பகுதியில் அக்கால மக்கள் பயன்படுத்திய சிறிய மண்கலம், கருப்பு, சிவப்பு வண்ணப்பூச்சு உடைய மண்பாண்ட ஓடுகள் கண்டறியப்பட்டன. மசராயன் கோவில் பின்பகுதியில் மனித எலும்புகளும் முழுமை பெற்ற மண்கலங்களும் இருந்துள்ளன.

இது குறித்து கல்வெட்டியல் பேராசிரியர் ரவி கூறும்போது, கொங்கல்நகரம் கிராமத்தில் இனக்குழு காலகட்ட நாடோடி வாழ்க்கை முதல் வாழ்விடத்தை அமைத்து பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதில் கண்டறியப்பட்டுள்ள கல்பதுக்கை எனப்படுவது இறந்தவர் நினைவாக மூன்று கற்களை கொண்டு கல்லறை எழுப்பி அதை வணங்கும் முறை.

இவை 3500 ஆண்டு பழமை வாய்ந்ததாக இருக்கலாம். ஒரே கிராமத்தில் இத்தகைய பல கட்ட வரலாற்று சான்றுகள் கிடைப்பது அரிது. உப்பாறுபடுகை எனப்படும் பகுதியில் மண்பாண்டம் மற்றும் இரும்பு பயன்பாட்டு காலத்திற்கான பல்வேறு சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

300 ஏக்கர் பரப்பில் கொங்கல்நகரம் கிராமத்தில் இத்தகைய வரலாற்றுச் சான்றுகள் அதிகளவு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையில் மீண்டும் மலேரியா!!

malariaமலேரியாவிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையில் மீண்டும் அந்நோய் தலையெடுக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக புதிய தகவல்கள் கூறுகின்றன. நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த விடயத்தில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தொடர்ச்சியாக உள்நாட்டில் 3 வருடங்கள் மலேரியா காய்ச்சல் நோயாளிகள அடையாளம் காணப்படாத நிலையில் கடந்த 2012ம் ஆண்டு மலேரியாவிலிலிருந்து விடுவிக்கப்பட்ட நாடாக இலங்கை தன்னை அறிவித்து கொண்டது. இதன் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனத்தில் மலேரியா இல்லாத நாடு என்ற அந்தஸ்த்தையும் இலங்கை பெற்றது.

ஆனால் களனி பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கிழக்கு மாகாணத்திலுள்ள கரையோர பிரதேசங்களில் காணப்படும் நீர்நிலைகளில் மலேரியா நோய்க் காவியான அனோபிலஸ் நுளம்பு காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளதால் இது தொடர்பாக மீண்டும் ஆய்வுகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

களனி பல்கலைக்கழகத்தினால் மட்டக்களப்பு வாவியை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி அனோப்பிலஸ் நுளம்பு உவர் நீரில் காணப்பட்டுள்ளது.

அனோப்பிலஸ் நுளம்பு உவர் நீரில் காணப்படுவது வழமைக்கு மாறானது என்று மட்டக்களப்பு பிராந்திய மலேரியா தடுப்பு நடவடிக்கைக்கான வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.எம். பரீத் அஹமட் கூறுகின்றார்.

2012 ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையைச் சேர்ந்த மலேரியா நோயாளிகள் என எவரும் அடையாளம் காணப்படவில்லை. ஆனால் ஓரிருவர் நோயாளர்கள் என அடையாளம் காணப்பட்டாலும், அவர்கள் தென் ஆபிரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிலிருந்து வந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவை அதிகாரிகள் குறிப்பிடுகின்றார்கள்.

கோஷ்டி மோதலால் பொலிஸ் நிலையம் சென்ற இயக்குனர்கள் குடும்பம்!!

murgadas_rameskannaஅடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பு கோரி இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ரமேஷ்கண்ணா, பேரரசு ஆகியோரின் குடும்பத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை விரும்பாக்கம் பொலிஸ் நிலையம் அருகில் சியாமளா காடன் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சினிமா இயக்குனர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் 24ம் திகதி நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் 4 கார்களில் வந்த கும்பல் அங்கிருந்த காவலாளியை தாக்கிவிட்டு வன்முறையில் ஈடுபட்டது. இது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் விருகம்பாக்கம் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

அதில், எங்களது குடியிருப்பில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் சரியாக செயல்படாததால் அவர்களை மாற்றிவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்தோம்.

இதனால் ஆத்திரம் அடைந்த பழைய பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக விருகம்பாக்கம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரையும் அவரது மகனையும் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இயக்குனர்கள் ஏ.ஆர். முருகதாசின் மனைவி ரம்யா, ரமேஷ் கண்ணாவின் மனைவி ஷோபா, பேரரசுவின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட 50 பேர் இன்று மதியம் வேப்பேரியில் உள்ள புதிய பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரண்டனர்.

தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் எனவே உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த மாதம் 24ம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக எங்களது குடியிருப்பில் வசிக்கும் மாறன் என்பவரது வீட்டுக்கு சிலர் சமாதானம் பேச சென்றுள்ளனர்.

அப்போது சமாதானமாக செல்லலாம் என்று கூறி இருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர்கள் விருகம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் குடியிருப்பு வாசிகள் தாக்கிவிட்டதாக பொய் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரிக்காமலேயே குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் எங்கள் குடியிருப்பு முன்பு வந்து சிலர் கோஷம் எழுப்பி சென்றுள்ளனர். எனவே எந்த நேரத்தில் எது நடக்குமோ என்று எங்களுக்கு பயமாக உள்ளது என்றும் குடியிருப்புக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதுடன் நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கையும் பொலிசார் ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா!!

China_flagஉலக ஆயுத சந்தையில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா தனக்கென ஒரு இடத்தை பிடிக்க ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கி வரும் துருக்கி போன்ற நாடுகள் தற்போது சீனாவின் பக்கம் சாய ஆரம்பித்துள்ளது.

இதனால் அமெரிக்க ஆயுத வியாபாரிகள் கவலை அடைய ஆரம்பித்துள்ளனர். அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணையை பல காலமாக நம்பியிருந்த துருக்கி, தற்போது சீனாவின் சீன பிரிசிஷன் மெஷினெரி எக்ஸ்போர்ட் இம்போர்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் நீண்ட தூர ஏவுகணையை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ரஷ்யாவும், ஐரோப்பிய யூனியனும் தாங்கள் ஏவுகணைகளை தருவதாக கூறியும் நிராகரித்து விட்டு சீனாவிடம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாம் துருக்கி. இதிலும் குறிப்பாக ஒப்பந்தம் போட்டிருக்கும் சீன பிரிசிஷன் நிறுவனத்திற்கு ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதற்கு காரணம் இந்த ஆயுதங்கள் ஈரான், சிரியா, வட கொரியாவுக்கு உதவக் கூடும் என்பதால் இந்தத் தடையை அது விதித்துள்ளது.

ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை முறியடிக்கும் வகையில் துருக்கிக்காக இந்த ஏவுகணைகளை 3 கோடி டொலருக்கு வழங்க சீனநிறுவனம் முன்வந்துள்ளது. முன்பெல்லாம் சீனாவின் சிறிய ரக ஆயுதங்கள்தான் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது பெரிய ரக ஆயுதங்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றையும் அது விற்பனைக்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளது, குறிப்பாக வளரும் நாடுகளை அது இலக்காகக் கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆயுத விற்பனையில் 8வது இடத்தில் இருந்த சீனா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக ஆயுத விற்பனையில் அமெரிக்காதான் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஒட்டுமொத்த உலக ஆயுத விற்பனையில் அதன் பங்கு மட்டும் 39 சதவிகிதமாகும்.

தற்போது சீனாவிடமிருந்து அதிக அளவிலான ஆயுதங்களை வாங்கும் நாடு பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பஹரேனில் போதை பொருள் விற்ற இலங்கை, இந்தியருக்கு 5 வருட சிறை!!

prisonபஹரேனில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இலங்கையர் உள்ளிட்ட இருவருக்கு ஐந்து வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இவர்கள் பஹரேன் மேல் நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யப்பட்ட போது நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது.

41 வயதுடைய இந்திய முகாமையாளர் ஒருவரும் இலங்கை சாரதியுமே இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவர்களுக்கு 3,000 தினார் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பஹரேனில் தடை செய்யப்பட்ட மெத்தாம்பேடேமைன் என்ற போதை மருந்தை இவர்கள் விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வயிற்றில் வளரும் சிசுவை கொல்லும் கொடூரம் : வெற்றி பெற்றால் சிகரெட்டுகள் பரிசு!!

syria_deadசிரியாவில் உள்நாட்டு போருக்கு மத்தியில் அரங்கேறும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.

இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளதுடன் மில்லியன் கணக்கானவர்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவர் டேவிட் நாட் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது, தாயின் கருவில் வளரும் சிசுவை சுட்டுக் கொன்றால் சிகரெட்டை பரிசாக பெற்றுக் கொள்ளலாம் என்ற போட்டி நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், சிரியாவில் போர் நடைபெறும்போது அப்பாவி மக்கள் பலர் பரிதாபமாக பலியாகின்றனர்.

நான் இதுவரை 20 ஆண்டுகள் போர் நடக்கும் பகுதிகளில் மருத்துவராக பணியாற்றியுள்ளேன். ஆனால், இங்குதான் கர்ப்பிணி பெண்களை தாக்கி கொலை செய்வதை பார்க்கிறேன்.

மறைந்திருந்து தாக்கும் சிலர் அவர்களது பயிற்சிக்காக அப்பாவி பெண்களையும், குழந்தைகளையும் சுடுகின்றனர்.

இதில் மிக கொடூரமாக கர்ப்பிணிகளின் வயிற்றில் இருக்கும் சிசுவை சுட்டு கொல்பவர்களுக்கு சிகரெட்டுகள் வழங்கப்படும் போட்டியும் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

சச்சின் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி!!

Sachinசச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்கிந்திய தீவுகள் விளையாட உள்ளது.

இவ்விரு அணிகளுக்கான டெஸ்ட் போட்டிகள் மும்பை வாங்கடே மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறுகின்றன. ஈடன் கார்டனில் நடக்கும் போட்டி தான் சச்சின் விளையாடும் கடைசி போட்டியாகும்.

இதனை சிறப்பான போட்டியாக மாற்ற பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு வெறும் 5000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம் பல்வேறு கிளப் உறுப்பினர்கள், பிரபலங்களுக்காக 67,000 இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது. இதனை காண பொலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு தோல்விக்காக வீரர்களை நீக்கமுடியாது : டோனி!!

Dhoniமொஹாலி ஒருநாள் போட்டியில் இஷாந்த் சர்மா மோசமான முறையில் பந்து வீசி இந்தியாவைத் தோற்கடித்து விட்டதால் ரசிகர்கள் பெரும் கோபத்துடனும், ஆதங்கத்துடனும் உள்ளனர்.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக மறைமுகமாக அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

ஓரிரு போட்டிகளின் முடிவுகளை வைத்து யாரையும் அணியிலிருந்து நீக்குவது சரியாக இருக்காது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் அடிக்கடி அணியில் மாற்றம் செய்தால் அது பாதிப்பையே தரும். ஓரிரு போட்டிகளில் சரியாக விளையாடாமல் போவதை வைத்து அவர்களை நீக்குவது என்பது நியாயமாக இருக்காது.

தோல்வி என்பது எதிர்பாராததுதான். எனவே அந்தத் தோல்விக்கு சரியாக விளையாடாத வீரர்களை மொத்தமாக குற்றம் சாட்டி வெளியேற்றுவது சரியாக இருக்காது. அது அணிக்கு நல்லதும் அல்ல.

அவர்களுக்கு அனுபவம் கிடைக்க உதவ வேண்டும். அப்போதுதான் அவர்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும். அதற்கு அவர்களும் அணியில் இருப்பது அவசியம்.

அவர்கள் உண்மையில் சிறந்தவர்கள்தான். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார் டோனி.

இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கெதிரான மீதமுள்ள 4 போட்டிகளில் இஷாந்த் சர்மா நீக்கப்பட வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது

அந்தக் காலத்தில் அரிசி 100 ரூபா, தேங்காய் 80 ரூபா : மஹிந்த ராஜபக்‌ஷ!!

Mahinda-Rajapaksaயுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம் நாட்டிற்கு சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவும் யுத்த காலத்தில் ஒரு கிலோ அரிசி 100 ரூபாவாகவும் ஒரு தேங்காய் 80 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

ஹோமாகம பிட்டிப்பனவில் இலங்கையின் முதலாவது நனோ தொழில்நுட்ப ஆராய்ச்சிமையம் மற்றும் நனோ விஞ்ஞான பூங்காவினை திறந்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அநேகமான பிள்ளைகள் வைத்தியர்கள், ஆசிரியர்களாக வரவே விரும்புவதாகவும் விஞ்ஞானிகளாக வர விரும்பும் பிள்ளைகள் குறைவு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

30 வருடமாக நாட்டில் நிலவிய போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பாரிய வீதிகள், விமான நிலையம், துறைமுகம் என பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மஹிந்த சிந்தனையின் படி வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய நானோ தொழிநுட்ப ஆராய்ச்சிமையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.