பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது.
சர்வதேச கல்விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மிகவும் முன்னேறிய நாடுகளில், குறிப்பாக கணினி மற்றும் தொலைக்காட்சிகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு இந்த தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அத்தகைய நாடுகளில் உள்ள பள்ளிப் பிள்ளைகளின் கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறன் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
பொஸ்டன் கல்லூரியால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அமெரிக்காவிலேயே அதிகமான குழந்தைகள் தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அங்கு 9 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளில் 73 வீதத்தினருக்கு ஒழுங்கான தூக்கம் கிடையாது என்றும், 13 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளில் 80 வீதத்தினருக்கு தூக்கம் சரியாக இல்லை என்றும் கூறப்படுகிறது.
உலக சராசரியைவிட இது மிகவும் அதிகமாகும்.
இதேபோன்று நியூசிலாந்து, சவுதி அரேபியா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது.
நல்ல தூக்கம் இருப்பதால், கணிதம், விஞ்ஞானத்தில் அதிக பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களை கொண்ட நாடுகளாக அஜர்பைஜான், கசகஸ்தான், செக் குடியரசு, ஜப்பான் மற்றும் மோல்ட்டா ஆகிய நாடுகள் திகழுகின்றன.
ஆசிய மாணவர்கள் இந்த கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறனில் முன்னணியில் திகழ்கின்றனர்.
சரியான நித்திரை இல்லாத பிள்ளைகள் ஆசிரியர்களின் உத்தரவுகளை கடைப்பிடிப்பதிலும் சோர்வு காண்பிப்பதாகக் கூறப்படுகின்றது.
தூக்கம் குறைவான நிலைமையில் மூளை புதிய விசயங்களை உள்வாங்க தடுமாறுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கணினியில் விழித்திருத்தல், நண்பர்களுக்கு அதிகமாக மெசேஜ்களை அனுப்புவர்கள் ஆகியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.
பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்று நாசா கூறுகிறது.
உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா எச்சரித்துள்ளது.
கியூரியாசிட்டி ரோவர் விண்ணூர்தியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் இதனை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாயின் தரையில் ஊர்ந்துசென்று ஆய்வு நடத்திய ஒரு கார் அளவிலான இந்த ரோபோ- ஊர்தியை அங்கு கொண்டுசெல்லும் அரை-பில்லியன் கிலோமீட்டர் தூர பயணத்துக்கு 8 மாதங்களுக்கும் அதிககாலம் எடுத்துள்ளது.
இந்தப் பயணத்தை கிழமைகள் கணக்கில் விரைவு படுத்துவதற்கு போதுமான உந்துசக்திக்கான தொழிநுட்ப வசதி இன்னும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.
மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.
வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.
இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.
பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.
சிறுவர்களுக்கு நாடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், பாலைவனங்கள், தீவுகள், கண்டங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் அதிகம்.சிறுவர்களுக்கான பொதுஅறிவுத் தகவல்கள், அவர்கள் கற்கும் பாடங்களுடன் தொடர்புடையதாக அமைந்தால் கற்றலுக்காக கற்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.
இவ்வாறான பொதுஅறிவு வினா-விடைகள் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வவுனியா-நெற் இணையத்தில் வெளியிடப்படும்.
1 .உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது?
வத்திகான்
2. உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
ரஷ்யா
3 .உலகிலேயே மிகப் பெரிய தீவு எது?
கிரீன்லாந்து
4. உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது?
தீபெத் பீட பூமி
5. உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
சுவிட்சர்லாந்து
6. உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது?
சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)
7. உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?
ஆடகாமா பாலைவனம் (சிலி)
8. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா)
9. உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது?
நயாகரா நீர்வீழ்ச்சி
10. உலகிலேயே மிக நீளமான நதி எது?
நைல் நதி (6695கி.மீ)
11. உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)
12 . உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
மெக்சிகோ வளைகுடா
13. உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
ஆசியாக் கண்டம்
14. உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
சவுதிஅரேபியா
15. உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
பின்லாந்து
பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார்.
தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப் பார்த்து ” அடடா நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேன் ” என்றான்.
” தொழுகை நேரத்தில் நீ பேசியதானல் என் பிரார்த்தனையைக் கலைத்து விட்டாய். அதனால் நீ மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் ” என்றான் அவன்.
” நீயுந்தான் இப்போது என்னுடன் பேசி பிரார்த்தனையைக் கலைத்துக் கொண்டாய். நீயுந்தான் மீண்டும் தொழுகையில் ஈடுபட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் ” என்றான் மற்றவன். அவர்கள் உரையாடலைக் கேட்டு முல்லா மெல்லச் சிரித்தார்.
” ஏன் சிரிக்கிறீர் ” என அந்த இருவரும் கேட்டனர்.
” பொதுவாக மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. மனிதன் தான் ஒழுங்காக முறையாகப் பிரார்த்தனையில் ஈடுபடுவதைவிட மற்றவன் ஒழுங்காகப் பிரார்த்தனை செய்கிறானா என்பதைக் கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறான் ” என்றார் முல்லா. அந்த இரண்டு பேரும் வெட்கமடைந்து தலைகுனிந்து கொண்டார்கள்.
ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள்.
விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு “இது போன்ற விருந்து உடலுக்கும் உள்லத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது” என்றார்.
இதைக் கேட்ட தெனாலிராமன் அவரை சீண்டிப்பார்க்க தீர்மானித்தார். “உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில் தான் தனிச் சுகம்
இருக்கிறது” என்றார் தெனாலிராமன். ராஜகுருவோ சற்று முறைப்பாக “ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! இது போன்ற விருந்தை
உண்பதே தனி சுகம் தான்” என்றார்.
தெனாலிராமனோ “கொண்டதை விட கழிப்பதில் தனிசுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்” என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.
ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். உள்ளேயிருந்த குருவுக்கு மலம்
கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.
அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து ராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவரை நோக்கி ஓடினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கப் பேசினார். “அப்பாடா! ராமா! கழிப்பது தனிசுகம் தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விபரீத விளையாட்டை இனிமேல் செய்யாதே” என்றார்.
தெனாலிராமன் தான் சொன்னதை செய்துகாட்டிவிட்டதை நினைத்து இருவரும் அடக்க முடியாமல் சிரித்தனர்.
நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி – ஸ்ரீ அன்னை
2. பெருந்தன்மையே முதல் படி
1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.
– சீனப் பழமொழி
3. பயப்படாதீர்கள்
நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!
தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
– நெப்பொலியன் ஹில்
4. மூன்று ஆயுதம் நம்மிடம்
தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
– கன்ஃப்யூஷியன்
5. துணிவே துணை
ஜூலியஸ் சீசர் போல ரோமப்பேரரசராக உயர வேண்டுமா? அல்லது உங்களுக்குள்ளேயே சிறைப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவுகளும், வெற்றிகளும் உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறது. எதைத் தேர்வு செய்து தன்முனைப்புடன் உங்களை நீங்களே வழி நடத்திச் செல்கிறீர்களோ, அது போலவே – நீங்கள் எண்ணியது போலவே – உருவாகி விடுவீர்கள். துணிச்சலுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப்பொழுதும் முன்னோக்கியே செல்லுங்கள்.
-ஸர் டி.ப்ரௌன்
6. வெற்றிக்கு முதல்படி எது?
மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
– டாக்டர் ஜான்சன்
( உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் சாமுவேல் ஜான்சன் 33 ஆண்டுகள் கடின உழைப்பில் வெளிவந்தது. ஆனால் இவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தே முதல் பதிப்பு வெளியானது )
7. அன்பின் நோக்கம்
உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு, உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்
– ஸ்ரீ அன்னை
8. விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம்
ஒவ்வொரு மனிதனும் விதக்கிறாள். ஒருவன் வாய்ச் சொற்களால் விதக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.
எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த பண்பு விதைகளுக்கு ஏற்ப கோதுமைப் பயிராகவோ அல்லது களைச் செடியாகவோ வளர்கிறார்கள்.
எதைப்பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு எந்தச் செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.
செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே ‘வெற்றி’ என்னும் நற்கனிகளைப் பெற்றவனாவன்.
பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர்.
நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள்.
நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.
– பார்பர்
9. அஞ்சா நெஞ்சம் வேண்டும்
கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
– சுபாஷ் சந்திரபோஸ்
10. நல்ல எண்ணெய் எது?
மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும் ‘துணிவு’ என்ற எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும் அப்போது தான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.
– அய்டா
11. ஓய்வு எடுங்கள்
‘திடும்’ எனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இதுபோல், வாழ்க்கைப் போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
– டப்ஃபீல்டு
12. எளிமைதான் முன்னேற்றம்
எளிமையாக இருங்கள். எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.
– ஜே.ஆர்.லோவெல்
13. அன்பை அனுப்புங்கள்
அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள். மாமிசம் சாப்பிடாத பழக்கம் உங்கள் அன்பிலிருந்து மலர்ந்திருந்தால் அது ஓர் அற்புதமான விஷயம். அகிம்சை, அன்பின் காரணமாக மலர்ந்தபோது பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து ஒரு சம்பிரதாயத்தை ஏற்று மலர்ந்ததென்றால், அது ஒரு தர்மமல்ல! ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள். உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.
ஒருவரது கண்களைச் சந்திக்கும்போது உங்கள் கண்களில் உங்கள் இதயம் முழுவதையும் கொட்டி விடுங்கள்.
கண்கள் மந்திரம் மாயம் அடைந்து ஒருவருடைய இதயத்தை அசைத்து விடுவதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.
உங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடலாம்.
சரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத் துவங்கிவிடும்!.
– ஓஷோ ரஜனீஷ்
14. சூரிய ஒளி போல
யாருடன் பழகினாலும் அந்தஸ்து பார்க்காமல் ஒரே மாதிரியான அணுகுமுரையுடன் உள்ளன்பு குறையாமல் பழகுங்கள்.
– ரீடர்ஸ் டைஜஸ்ட்
15. வாய்மை வெல்லும்
தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு
மனித சக்தியும் நிற்க முடியாது! (எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்).
– ஸ்ரீ அன்னை
16. பிரார்த்தனை செய்யலாமா?
இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது
– மாட்டிகாஸ் பெரீன்
17. நல்ல எண்ணமே சிறந்தது
நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.
– ஸ்ரீ அன்னை
18. எல்லா உயிர்களையும் நேசியுங்கள்
அன்பு நிறைந்த ஒருவர், மனிதர் படும் துன்பங்களைக் காட்டிலும், விலங்குகள் படும் துன்பத்தைச் சகித்துக் கொள்ளமாட்டார்.
– ரோமெயின் ரோலந்து
( தெரு நாய்களுக்கு உணவளித்து உங்களைச் சுற்றி எப்போதும் அன்பான அதிர்வுகளையே பாதுகாப்பாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஆத்மாவாக எளிதில் உயர்வீர்கள்)
19. இயற்கை நமது நன்பன்
மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக் கூடக் கண்டுபிடித்து விடுகிறான்
– அலெக்ஸாண்டர் ஃப்ளெயிங்
( தியானம் செய்யும் பழக்கத்தால் இந்த சக்தி நமக்குக் கிடைக்கிறது)
20. சிந்தனைக்கு
நாம் அறிந்துள்ளவைகளுக்கு அப்பால் ஒரு அறியும் சக்தி நம்முள் உள்ளது. நமது சிந்தனைகளை விட நாம் உயர்ந்தவர்கள்.
– ஸ்ரீ அன்னை
( எனவே, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நேர்வழியில் வாழ்வோம்)
21. அன்பை வெளிப்படுத்துங்கள்
அன்பு விஸ்வமயமானது. நித்தியமானது. அது, என்றும் தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. அது ஒரு தெய்வ சக்தியாகும். அதன் புறவெளிப்பாட்டின் அடையாளங்கள் எல்லாம் அதன் கருவிகளைச் சார்ந்தவை. அன்பு எங்கும் வியாபித்திருக்கிறது. அதன் இயக்கம் தாவரங்களிலும் காணப்படுகிறது. விலங்குகளிடத்திலும் அது செயல்படுகிறது. கற்களிலும் அதைக் காண முடியும்.
– ஸ்ரீ அன்னை
22. வாழ்வின் வெற்றி
வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொறுத்தது.
– ஸ்ரீ அன்னை
23. தரமே தங்கக்குணம்
முதல் விதியாக இலட்சியத்தில் உறுதியில்லாமல் இருக்கலாம். ஆனால், இலட்சிய உறுதி வேண்டுமெனில் முதல் தரமான மூன்று அம்சங்கள் தேவை. அஞ்சாமை, துணிவு, விடாமுயற்சி எனும் இந்த மூன்றும் இருந்தால் முதல் விதி நம்மிடம் இருந்து இலட்சியத்தை வெற்றிபெறச் செய்யும்.
– ஸ்ரீ அன்னை
24. எது உயிர் மூச்சு?
நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும்.
– நார்மன் வின்சென்ட்டில்
25. அன்பின் சக்தி
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
– புனித பைபிள் கொரிந்தியர் 1:13
26. அன்பு மயமாக இருங்கள்
அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்
– ஓஷோ ரஜனீஷ்
27. மனஉரம் வேண்டும்
கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.
– ஜார்ஜ் எலியட்
28. யோசனை கூறும் தகுதி
யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே.
– ஜார்ஜ் எலியட்
29. உறுதி
மனிதன் எதை உறுதியாக நினைக்கிறானோ அதுவாகவே அவன் மாறிவிடுவான்.
– புனித பைபிள்
30. உதவி கிடைக்க
நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.
– ஸ்ரீ அன்னை
ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். அதிலும் அனைவருக்குமே, முக்கியமாக பெண்களுக்கு, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால் தங்களின் கண்களை சிறந்த முறையில் பாதுகாக்க விரும்புவர். “நீங்கள் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?” என்று பலரும் உங்களிடம் கேட்பதை விரும்ப மாட்டீர்கள் அல்லவா? ஆனால் பல காரணங்களுக்காக கண்களில் சுற்றி கருவளையமும் வீக்கமும் ஏற்படும். அதில் ஹோர்மோன் மாற்றங்கள், பலதரப்பட்ட அலர்ஜிகள், நஞ்சுக்கள், தூசிகள், தண்ணீர் தேங்குதல் அல்லது பரம்பரை காரணங்களால் கண்கள் சோர்வாக ஆகலாம். அதனால் முகமும் கலையிழந்போகும்.
மேலும் நம்மில் பல பேர் தூக்கத்தை இழப்பதால் மற்றும் போதிய தூக்கம் இல்லாததால், கண்கள் வீங்கிய நிலைக்கு போகும். மேலும் அயர்ச்சியையும் ஏற்படுத்தும். தூக்கமே கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கும், வீக்கத்திற்கும் சிறந்த இயற்கை வைத்தியமாகும். வாழ்க்கை முறை போதிய தூக்கத்தை அளிக்கவில்லை என்றால் இதற்கு வேறு சில எளிய வைத்தியங்களும் உள்ளன. இந்த பாட்டி வைத்தியங்களை கடைப்பிடித்தால் கண் அயர்ச்சியும், கருவளையமும் ஓடியே போகும்.
குளிர்ந்த வெள்ளரிக்காய்கள்:
கண்ணில் வரும் கருவளையங்களுக்கு ஒரு மிகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது மிகவும் குளிர்ந்த வெள்ளரிக்காய்கள். வெள்ளரிக்காய்களில் உள்ள அதிகமான நீர்ச்சத்து வீங்கிய கண் பட்டைகளுக்கு எதிராக இயற்கை பாதுகாவலாக விளங்கும். இது கண் வீக்கத்தை குறைத்து முகத்திற்குப் பொலிவைக் கொடுக்கும். அதிலும் ஓய்வெடுக்கும் வேளையில், தலையை பின்னால் நன்கு சாய்த்து, நல்ல தடிமனான வெள்ளரித் துண்டுக்களை எடுத்து, கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்த துண்டுகள் வெப்பம் ஆகும் வரை கண்களின் மேலே அது இருக்கவும் வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த குளிர்ந்த ஸ்டோபரி :
குளிர்ந்த ஸ்டோபரியில் அதிக அளவு அல்ஃபா- ஹைட்ராக்ஸி உள்ளதால், அவை கண்களின் கருவளையங்களை குணப்படுத்த பெரிதும் உதவும். இயற்கை பொருளான இந்த அல்ஃபா ஹைட்ராக்ஸி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைக்க உதவும். அதனால் தான் முகத்திற்கு தடவும் விலை உயர்ந்த பல க்ரீம்களில் இந்த அல்ஃபா ஹைட்ராக்ஸி கலக்கப்பட்டிருக்கிறது. ஆகவே கண்களின் கருவளையம் நீங்கி, கண்கள் ஜொலிக்க செய்ய வேண்டியதெல்லாம், குளிர்ந்த பெரிய அளவிலான ஸ்டோபரி தோல்களை நீக்கி, 3 மி.மீ தடிமானத்தில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஓய்வெடுக்கும் வேளையில், இந்த துண்டுகளை கண்களின் மேல் சில நிமிடம் வைத்து விட்டு, பிறகு முகத்தை கழுவுங்கள்.
ஒலிவ் எண்ணெயில் ஊற வைத்த குளிர்ந்த தேநீர் பை:
இது மிகவும் எளிய முறை என்றாலும் கூட, கண்களின் கருவளையம், வீங்கிய கண் பட்டைகள் மற்றும் கண் அயர்ச்சி போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. ஈரமான தேநீர் பையை குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஃப்ரீசரில் வைக்கவும். பின் அவைகள் நன்கு குளிர்ந்த நிலைக்கு வந்த பின்பு, சிறிய அளவிலான பஞ்சு உருண்டையை ஒலிவ் எண்ணெயில் நனைத்து, அந்த எண்ணெய்யை கண் பட்டையில் தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஃப்ரீசரில் இருந்து தேநீர் பையை எடுத்து கொண்டு, ஓய்வெடுக்கும் போது தலையை நன்கு பின்புறம் சாய்த்து, கண்களின் இமைகளின் மேல் இந்த தேநீர் பையை ஒரு பத்து நிமிடம் வைக்கவும். பின் அதனை எடுத்துவிட்டு, மோய்ஸ்சரைசரை தடவிக் கொள்ள வேண்டும்.
மின்சாரம் செலுத்தாமல் கையில் பிடித்தபடியே செல்போன் ‘சார்ஜ்’ செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடுவழியில் செல்லும் போது உங்களின் செல்போன் சார்ஜ் தீர்ந்து off ஆகி விட்டதா? இனி கவலை வேண்டாம். அதற்கு மீண்டும் சார்ஜ் செய்ய மின் வசதி இருக்கும் இடத்தை தேடி ஓடி அலைய வேண்டியதில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே கையில் பிடித்தபடியே சார்ஜ் செய்ய முடியும்.
‘நானோ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உடல் வெப்பம் மின்சாரமாக மாறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகச்சிறிய காபன் டியூப்கள், மிக சிறிய பிளாஸ்டிக் பைபர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வகை செல்போனை சார்ஜ் செய்ய மின்சாரம் தேவையில்லை. அவற்றை கையில் பிடித்தாலோ அல்லது அதன் மீது உட்கார்ந்தாலோ போதும், உடல் வெப்பம் மின்சாரமாக மாறி செல்போன் ரீசார்ஜ் ஆகும். இது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் கிண்ணத்தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர் வரும் ஜூன் 6ல் துவங்குகிறது. அன்று, இந்திய அணி முதல் போட்டியில், தென் ஆப்ரிக்காவை சந்திக்கவுள்ளது. இதற்காக தோனி தலைமையிலான இந்திய வீரர்கள் லண்டனுக்கு சென்றுள்ளனர்.
அணியின் மனேஜராக, கடந்த 2011 உலக கோப்பை வென்ற போது இருந்த ரஞ்சிப் பிஸ்வால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஒன்றரை ஆண்டுகள் இந்த பதவியில் இருந்த இவர், எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், உள்ளதை உள்ளபடி அப்படியே அறிக்கையாக கொடுத்துவிடுவாராம்.
கடந்த 2010ல் வெஸ்ட் இண்டீஸ் பொது விடுதியில் நடந்த சண்டை குறித்தும், வீரர்களின் நடத்தை குறித்தும், பிஸ்வால் கடுமையான அறிக்கை கொடுத்தார். இதன் பின் தான் இந்திய வீரர்களுக்கு கடுமையான விதிகள் கொண்டு வரப்பட்டன.
‘பார்ட்டிக்கு’ தடை
இதனால், இங்கிலாந்தில் இந்திய அணி வீரர்களுக்கு மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இரவு பார்ட்டிகளுக்கு தடை, நள்ளிரவில் வெளியே செல்ல அனுமதி கிடையாது.
முன் அனுமதி இன்றி தங்கியிருக்கும் ஹோட்டலை விட்டு வீரர்கள் வெளியே செல்லக் கூடாது. யாரிடம் இருந்தும் பரிசுப் பொருட்களை பெறக்கூடாது. வீரர்களின் மொபைல் எண்கள் முழுவதும் கண்காணிக்கப்படும்.
ஏற்கனவே உள்ளது:
இந்த விதிகள் ஏற்கனவே உள்ளது தான் என்றாலும், 2011ல் உலக கோப்பை வென்ற பின், யாரும் இதை ஒழுங்காக பின்பற்றவில்லை. இம்முறை, சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணிக்கு எந்த பிரச்னையும் வராமல் பார்த்துக் கொள்ளுமாறு, பிஸ்வாலை கேட்டுக் கொண்டுள்ளனர்.
தவிர, இத்தொடருக்குப் பின் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணிக்கும் இவர் மானேஜராக இருக்க சம்மதித்துள்ளார். ஆனால், அணியுடன் இணைந்து செல்லாமல் தனியாகத் தான் போகப் போகிறாராம்.
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்குள் நுழைவதே எமது முதல் இலக்கு என இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்கான மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை குழாம் இங்கிலாந்து சென்றுள்ளது.
மெத்தியூஸ் அணித்தலைமையை ஏற்றதன் பின்னர் இலங்கை அணி களமிறங்கும் முதலாவது முக்கிய தொடர் இதுவாகும்.
இந்நிலையில் இத்தொடர் குறித்து கருத்துத் தெரிவித்த மெத்தியூஸ்,
தொடரின் அரையிறுதிக்குள் நுழைவதே எமது முதல் இலக்கு. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இம்முறை இலங்கை அணிக்கு உள்ளது.
அனுபவ வீரர்களும் இளம் வீரர்களும் இணைந்து சிறந்த அணியாக இத் தொடரில் களமிறங்கவுள்ள நாம் ஏனைய அணிகளுக்கு சவாலாக இருப்போம்.
தொடரின் அரையிறுதியே எமது முதல் இலக்கு. குழுநிலைப்போட்டிகளில் சிறப்பான வெற்றிகளைப்பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவதையே எமது முதல் இலக்காக கொண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) சார்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படும்.
இதுவரை 10 உலகக் கிண்ணத் தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக 2010-11ல் இந்தியா, வங்கதேசம், இலங்கை நாடுகள் இணைந்து நடத்தின. வரும் 2015ல், 11வது உலக கிண்ணம் தொடரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.
இந்நிலையில், வரும் 2019ல், 12வது உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பு இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் 5வது முறையாக இங்கிலாந்தில் உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது.
முன்னதாக 1975, 79, 83, 99ல் நடந்தது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும். ஐ.சி.சி., தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகள் நேரடியாக தகுதி பெறும்.
மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு தகுதிச் சுற்று நடத்தப்படும். இத்தொடருக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இ.சி.பி.,) தெரிவித்தது.
இது குறித்து இ.சி.பி., தலைமை செயல் அதிகாரி டேவிட் கூலியர் கூறுகையில், இங்கிலாந்தில் வரும் 2019ல் உலகக் கிண்ணத் தொடரை நடத்த இருப்பதில் பெருமை அடைகிறேன்.
ஏற்கனவே நான்கு முறை நடத்தி உள்ளதால் இம்முறையும் சிறப்பாக நடத்தப்படும் என்று நம்புகிறேன். இத்தொடர் மூலம், இங்கிலாந்தில் கிரிக்கெட் போட்டியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம் என்றார்.
டெஸ்ட் அந்தஸ்துள்ள ஒவ்வொரு நாடும் குறிப்பிட்டளவு எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளை ஒவ்வொரு வருடமும் விளையாட வேண்டும் என சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயற்குழு பரிந்துரைத்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளை எதிர்காலத்தில் பாதுகாக்கும் முகமாக இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயற்குழுவிற்கு லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் சர்ச்சைக்குரிய விதத்தில் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக இடம்பெற்ற இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், இந்தப் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
4 வருடம் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஸ் காலகட்டத்தில், ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அணியும் ஆகக்குறைந்தது 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்ற வேண்டுமெனவும், அதன்படி அந்த 16 வருடக் காலகட்டத்தில் ஒவ்வொரு அணியும் ஆகக்குறைந்தது 16 போட்டிகளில் பங்குபற்ற வேண்டிய நிலை காணப்படுகிறது.
அண்மைக்காலமாக இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் போன்ற கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் தொடர்களை இரத்துச் செய்து, அவற்றிற்குப் பதிலாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளைக் கொண்ட தொடர்களை ஏற்பாடு செய்து வரும் நிலையில் இந்தப் பிரேரிப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
செப்டெம்பர் 2009ம் ஆண்டு முதல் செப்டெம்பர் 2013 வரையிலான காலகட்டத்தில் இங்கிலாந்து அணி அதிகபட்சமாக 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் என்பதோடு குறைந்த டெஸ்ட் போட்டிகளாக வங்கதேச அணி 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும்.
ஜிம்பாப்வே அணி 2011ம் ஆண்டிலிருந்தே மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற ஆரம்பித்துள்ள நிலையில், அவ்வணி 8 போட்டிகளில் பங்குபற்றியிருக்கும்.
கரீபியன் தீவுகளில் இடம்பெறவுள்ள கரீபியன் பிறீமியர் லீக் டுவென்டி டுவென்டி தொடரில் இலங்கையின் முத்தையா முரளிதரன் – ஜமைக்கா அணி சார்பாகப் பங்குபற்றவுள்ளார். அவ்வணிக்கான நட்சத்திர வெளிநாட்டு வீரராக முத்தையா முரளிதரன் செயற்படவுள்ளார்.
கரீபியர் பிறீமியர் லீக் தொடரின் 6 அணிகளுக்குமான நட்சத்திர வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக முத்தையா முரளிதரன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவ்வீரர்களின் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், 6 வெளிநாட்டு வீரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருந்த அடம் கில்கிறிஸ்ற் உபாதை காரணமாகப் பங்குபற்ற முடியாது போயுள்ளதால், அவருக்குப் பதிலாக சொய்ப் மலிக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி அன்ரிகுவா அணியின் உள்ளூர் வீரராக மார்லன் சாமுவேல்ஸூம், வெளிநாட்டு வீரராக றிக்கி பொன்டிங்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வணியின் பயிற்றுவிப்பாளராக விவியன் றிச்சர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பார்படோஸ் அணியின் உள்ளூர் வீரராக கெரான் பொலார்ட்டும், வெளிநாட்டு வீரராக சொய்ப் மலிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு, பயிற்றுவிப்பாளராக டெஸ்மொன்ட் ஹெய்ன்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கயானா அணியின் உள்ளூர் வீரராக சுனில் நரைனும், வெளிநாட்டு வீரராக மொஹமட் ஹபீஸூம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு, பயிற்றுவிப்பாளராக றொஜர் ஹார்ப்பர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஜமைக்கா அணியின் உள்ளூர் வீரராக கிறிஸ் கெயிலும், வெளிநாட்டு வீரராக முத்தையா முரளிதரனும், பயிற்றுவிப்பாளராக போல் நிக்ஸனும் நியமிக்கப்படுள்ளனர்.
சென் லூசியாவின் உள்ளூர் வீரராக டெரன் சமியும், வெளிநாட்டு வீரராக ஹேர்ச்சில் கிப்ஸூம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதோடு, பயிற்றுவிப்பாளரான அன்டி றொபேர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்ரினிடாட் அன்ட் ரொபாக்கோவின் உள்ளூர் வீரராக டுவைன் பிராவோவும், வெளிநாட்டு வீரராக றொஸ் டெய்லரும், பயிற்றுவிப்பாளராக கோர்டன் கிறீனிஜ் உம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொடர் இன்னும் இரண்டு மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கும், டெல்லியை சேர்ந்த பேஷன் டிசைனர் தான்யா என்பவருக்கும் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையடுத்து, இவர்களுடைய திருமணம், நேற்ரு முன் தினம் நாக்பூரில் நடந்தது. திருமணமான கையோடு, உமேஷ் யாதவ், உடனடியாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்று விட்டார்.
MySQL-ஐ install செய்யும்போது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பின்வருமாறு.
* MySQL-ஐ install செய்வதற்கு நமக்கு அனுமதி இருக்க வேண்டும். பொதுவாக MySQL-ன் ஒரு பிரதியை நமது machine-ல் install செய்து கொள்வது நல்லது. இதை மிகவும் கடினமான விஷயமாக எண்ணி வருந்தத் தேவையில்லை. ஏனெனில் BSD, LinuX, Mac OS X, Solaris மற்றும் windows போன்ற பெரும்பாலான platform-ல் இந்த MySQL-ஆனது எளிதாக install செய்யப்படும்.
* MySQLserver-ஐ அணுகுவதற்கு அனைத்து permissions-ஐயும் கொண்ட ஒரு account இருக்க வேண்டும். பொதுவாக MySQL-ஐ முதன்முதலில் install செய்யும்போது உருவாக்கப்படும் root account இவ்வாறு அனைத்து permissions-ஐயும் கொண்டதாக அமையும்.
* பின்னர் ஒரு MySQLclient தேவை. பொதுவாக MySQL command-line அல்லது MySQL query browser ஆகியவற்றைப் பயன்படுத்துவது சிறந்தது. இந்தப் பகுதியில் உள்ள அனைத்து உதாரணங்களும் MySQL command-line-ஐக் கருத்தில் கொண்டே கொடுக்கப்பட்டுள்ளன.
1.3.1 Ubuntu Linux-ல் MySQL-ஐ install செய்தல்
சமீபத்திய உபுண்டு லினக்ஸ் நிறுவும் வழிகளை இங்கு காண்போம். இது debian மற்றும் ubuntu சார்ந்த Linux Mint distribution-களுக்கும் பொருந்தும்.
Terminal-ல் கீழ்வரும் கட்டளையைத் தரவும்.
sudo apt-get install mysql-server mysql-client
இப்போது MySQL-க்குத் தேவையான மென்பொருட்கள் அனைத்தும் repository-ல் இருந்து download ஆகி install செய்யப்படும். இப்போது MySQL-ன் root user-க்கான password கேட்கப்படும். மிகவும் சிக்கலான சொல்லையே password ஆக தர வேண்டும்.
MySQL-ன் செயல்பாடுகளை மேலும் பாதுகாக்க கீழ்வரும் கட்டளையை இயக்கவும்.
sudo mysql_secure_installation
இது பின்வரும் பணிகளைச் செய்கிறது.
1. Anonymous users-ஐ நீக்குதல்
2. localhost-ல் இருந்து மட்டுமே root-ஐ அனுமதித்தல்
3. test database-ஐ நீக்குதல்
மேற்கண்ட கட்டளையைக் கொடுத்த உடன், கீழ்கண்டவாறு வரிசையாக பதில்களைக் கொடுத்து Enter அடிக்கவும்.
By default, a MySQL installation has an anonymous user, allowing anyone to log into MySQL without having to have a user account created for them. This is intended only for testing, and to make the installation go a bit smoother. You should remove them before moving into a production environment.
Remove anonymous users? [Y/n] y
… Success!
Normally, root should only be allowed to connect from ‘localhost’. This ensures that someone cannot guess at the root password from the network.
Disallow root login remotely? [Y/n] y
… Success!
By default, MySQL comes with a database named ‘test’ that anyone can access. This is also intended only for testing, and should be removed before moving into a production environment.
Remove test database and access to it? [Y/n] y
– Dropping test database…
… Success!
– Removing privileges on test database…
… Success!
Reloading the privilege tables will ensure that all changes made so far will take effect immediately.
Reload privilege tables now? [Y/n] y
… Success!
Cleaning up…
All done! If you’ve completed all of the above steps, your MySQL installation should now be secure.
Thanks for using MySQL!
அவ்வளவுதான் MySQL-ஐ நிறுவிவிட்டோம்.
1.3.1.1 Configuration
இப்போது MySQL-ன் பல்வேறு configuration options-ஐப் பற்றிப் பார்ப்போம்.
/etc/mysql என்ற directory-தான் MySQL-ன் config directory ஆகும்.
/etc/mysql/my.cnf என்ற file ஆனது MySQL-ன் மொத்த configuration options-ஐயும் கொண்டுள்ளது.
Log file, port number, ip binding, performance என பல்வேறு options உள்ளன. இதில் சில options பற்றி இங்கே பார்ப்போம்.
port=3306
இது MySQLserver -ஆனது 3306 என்ற port-ல் இயங்குவதைக் குறிக்கிறது.
user=mysql
லினக்ஸில் mysql என்ற user உருவாகி, அதே user-ஆக server இயங்கும். இதனால் லினக்ஸ் server-ன் பாதுகாப்பு அதிகரிக்கிறது.
data dir = /var/lib/mysql
MySQL-ன் database அனைத்தும் இந்த folder-ல் சேமிக்கப்படுகின்றன. Backup செய்யும் போது, இந்த folder-ஐ கண்டிப்பாக backup செய்ய வேண்டும்.
bind-address = 127.0.0.1
எந்த ip address-ல் MySQLserver இயங்க வேண்டும் என இங்கே தரலாம்.
log_error = /var/log/mysql/error.log
Configuration அல்லது connection-ல் பிழை இருந்தால் இந்த file-ல் log செய்யப்படுகிறது.
MySQLserver-ல் அடிக்கடி இயங்கும் select queries-ம், results-ம் cache-ல் சேமித்து வைக்கப்படும். இதனால், server-ன் திறனும் வேகமும் அதிகரிக்கிறது. இதற்கான options பின்வருமாறு.
query_cache_limit = 1m
query_cache_size = 16m
இங்கு m என்பது mb ஆகும். நமது RAM-ன் அளவைப் பொறுத்து இதை அதிகரிக்கலாம். உதாரணம்.
query_cache_limit = 2m
query_cache_size=32m
இந்த my.cnf file-ல் எந்த மாற்றம் செய்தாலும், MySQLserver-ஐ restart செய்ய வேண்டும்.