வடிவேலுவும், கவுண்டமணியும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்கள். வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புது படங்களில் நடிக்கவில்லை. சொத்து தகராறு வழக்குகள் என சர்ச்சைகளில் சிக்கியதால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
தற்போது அவற்றில் இருந்து விடுபட்டு பல வருடங்களுக்கு பிறகு ஜகஜால புஜபல தெனாலிராமன் என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதில் நாயகியாக மீனாட்சி தீட்சீத் நடிக்கிறார். யுவாஜ் இயக்குகிறார். இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் போல் சரித்திர காமெடி கதையாக தயாராகிறது.
கவுண்டமணி வாய்மை என்ற படம் மூலம் மீண்டும் சினிமாவில் மறு பிரவேசம் எடுக்கிறார். கவுண்டமணி சினிமாவை விட்டு விலகி பல வருடங்கள் ஆகிவிட்டது. நிறைய பட வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது வாய்மை என்ற படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்யும் முதல் கட்ட நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற விவாதங்கள் இன்று கோட்டே நாடாளுமன்ற மைதானத்தில் பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற மைதானத்தில் பாரிய தொலைக்காட்சித் திரையொன்று பொருத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.00 மணி முதல் நாடாளுமன்ற மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள பெரிய திரையில் விவாதங்களை மக்கள் நேரடியாக பார்வையிட முடியும்.
இதன் இரண்டாம் கட்டமாக நாடாளுமன்ற விவாதங்களை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சென்னை, கேளம்பாக்கத்தில் கல்லூரி பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் எப்சிபா(59). இவர் கல்லூரி பேராசிரியை.
இவருடைய கணவர் இறந்து விட்டதால் மகன் கிப்சனுடன் தங்கி இருந்தார். கிப்சன் மறைமலை நகரில் உள்ள கணனி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 17ம் திகதி இரவு கிப்சன் வேலை முடித்து வீட்டிற்கு வந்த போது அறையில் எப்சிபா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்து இருந்த 10 பவுன் நகை, கைப்பேசி, 5 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது.
இது தொடர்பாக கேளம்பாக்கம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீட்டில் வேலை செய்த அதே பகுதியை சேர்ந்த பிரமிளா தனது கள்ளக்காதலன் முருகனுடன் சேர்ந்து பேராசிரியை எப்சிபாவை நகை, பணத்திற்காக கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பிரமிளா அளித்த வாக்குமூலத்தில், கடந்த ஜனவரி மாதம் எப்சிபா மகனுடன் இங்கு குடியேறினார். அவர் வந்தது முதல் நான்தான் வீட்டு வேலைகளை செய்து வந்தேன்.
எனது கணவர் அன்புவை பார்ப்பதற்காக அவரது நண்பர் புதுப்பாக்கத்தை சேர்ந்த முருகன் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அப்போது எங்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இருவரும் ஜாலியாக இருந்து வந்தோம். இதனால் அதிகமாக செலவு ஏற்பட்டதால் பணம் இல்லாமல் தவித்தோம்.
இந்நிலையில் பேராசிரியை எப்சிபா அதிக நகை அணிந்து இருந்ததை கண்டேன். எனவே அவற்றை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ கள்ளக்காதலன் முருகனிடம் கூறினேன். இதனைத் தொடர்ந்து கடந்த 17ம் திகதி காலை நான் வழக்கமாக வேலைக்கு சென்றேன். கதவை தட்டியதும் எப்சிபா கதவை திறந்து வீட்டிற்குள் சென்று விட்டார்.
அப்போது வெளியில் மறைந்து நின்ற முருகன் நைசாக சமையல் அறைக்குள் சென்று பதுங்கி கொண்டார். சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்ததை பார்த்த எப்சிபா நீ யார், எப்படி உள்ளே வந்தாய் என அவரிடம் கேட்டார்.
உடனே நாங்கள் இருவரும் சேர்ந்து எப்சிபாவை தாக்கியபோது திமிறியதால் அவரது தலையை முருகன் சுவற்றில் மோதினார். இதில் மயக்கமடைந்து கீழே விழுந்தவுடன் நாங்கள் அவரது கழுத்தை நெரித்து கொன்றோம் என்றும் எப்சிபா இறந்தது உறுதியானவுடன் நகை மற்றும் பீரோவில் இருந்த பணத்தையும் திருடி சென்று விட்டோம் எனவும் கூறியுள்ளார்.
இவர்களிடமிருந்து 10 பவுண் நகை, 5 ஆயிரம் பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா மேல் நீதிமன்றத்தால் நேற்று முன்தினம் குற்றவாளியாக காணப்பட்ட ரணவீரகே ஜானக ரணவீர என்பவருக்கே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆயுதமுனையில் செக்கடிப்புலவு செல்வாநகரை சேர்ந்த மருதமுத்து புண்ணியமூர்த்தி என்பவரை ஆயுதமுனையில் அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையடித்தமை சம்பந்தமாக நடைபெற்ற வழக்கினை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விசுவலிங்கம் இத் தீர்ப்பினை வழங்கியிருந்தார்.
இருப்பினும் குறித்த குற்றவாளி 7 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருவதனை கருத்தில் கொண்டு நீதிபதி குறித்த குற்றவாளிக்கு 6 வருடங்களும் 6 மாதங்களும் சிறைத்தண்டனையை அனுபவித்தல் போதுமானதென்றும் மேலும் தீர்ப்பளித்திருந்தார்.
இவ் வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நிசாந் நாகரட்ணம் வழக்கை நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் கால்பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். காமெடி நடிகராக இருந்து கதாநயாகனாக உயர்ந்தவர். தற்போது கொலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக இருக்கிறார்.
இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது மான் கராத்தே படத்தில் ஹன்சிகா மொத்வானியுடன் நடித்து வருகிறார்.
இவருக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த ஆர்த்தி மதுரையில் உள்ள தனது தாய் வீட்டில் பிரசவத்திற்காக சென்றிருந்தார். இந்நிலையில், ஆர்த்திக்கு பிரசவ வலி ஏற்பட்டு மதுரை ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். சிவகார்த்திகேயன் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மும்பையில் உள்ள லோகந்த்வாலா வணிக வளாகத்திற்கு இங்கிலாந்தை சேர்ந்த 27 வயது இளம் பெண் வந்தார். இவரிடம் மூன்று பேர் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது.
இதனையடுத்து குறித்து பெண் ஒஸிவாரா பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் கவுரவ்குப்தா(36) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
வவுனியா வடக்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவச செயலமர்வுகளை வவுனியா வடக்கு கல்வி வலயமும் ஸ்மயில் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்களின் பெறுபேற்றின் அளவை அதிகரிக்கும் முகமாக செயற்படுத்தப்படும் இச் செயலமர்வில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களுக்கான செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 10 செயலமர்வு நிலையங்களில் இடம்பெற்று வரும் இச் செயலமர்வுகளை புலம்பெயர்ந்தோர் அமைப்பான ஸ்மயில் (புன்னகை) அமைப்பு வவுனியா வடக்கு கல்வி வலயத்துடன் இணைந்து செயற்படுத்தி வருகின்றது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த சுமதி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளியாக காணப்பட்ட பஞ்சலிங்கம் கோகிலன் அல்லது ரமேஸ் என்பவருக்கே இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர் தொடர்பில் விளக்கம் நடைபெற்று 2007.05.30 ஆம் திகதி அன்று வவுனியா மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரணதண்டனை விதித்து குற்றவாளிக்கு பிடிவிறாந்தும் பிறப்பித்திருந்தது.
இந் நிலையில் இன்டபோல் பொலிஸாரினால் கைத செய்யப்பட்டு குற்றவாளி 2012ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் குறித்த குற்றவாளி வவனியா மேல் நீதிமன்றத்தில் தன் மீது சுமத்தப்பட்ட தண்டனை தீர்ப்பை இரத்து செய்யுமாறும் புதிதாக விளக்கத்திற்கு கட்டளையிடுமாறும் கோரி ஒரு மனுவும் சத்தியக்கடதாசியும் அணைத்திருந்த நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் அரச சட்டவாதி நிசாந் நாகரட்ணம் தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தார்.
இதனை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் குற்றவாளி மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை உறுதிப்படுத்தி கட்டளையிட்டதுடன் சம்பிரதாய முறைப்படி மரணதண்டனை தீர்ப்பினை விதித்தார்.
இவ் வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நிசாந் நாகரட்ணம் ஆஜராகியிருந்தார்.
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நடிகர் ஆர்யா தற்போது கோடிகளில் புரண்டு வருகிறார். தான் சம்பாதித்த பணத்தில் ஹோட்டல் பிஸ்னஸை ஆரம்பித்து சென்னையில் பல இடங்களிலும் நிறுவியுள்ளார். தற்போது மேலும் மற்றொரு பிஸ்னஸ் செய்யலாம் என்று யோசித்து வந்தவர் தற்போது ரியல் எஸ்டேட் பிஸ்னஸில் களமிறங்கியுள்ளார்.
அஜித்துடன் இவர் நடித்த ஆரம்பம் படத்திற்கு முதலில் இவருக்கு நான்கு கோடி சம்பளமாக பேசப்பட்டது. அதன்பின் படத்தில் இவருக்கு நெகட்டிவ் ரோல் என்பதால் சம்பளத்தை ஏற்றித்தருமாறு முரண்டு பிடித்தார். இறுதியில் அவருக்கு அப்படத்தில் நான்கரை கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது.
அந்த பணத்தை கேரளாவில் கொச்சின் அருகில் நிலத்தை வாங்கி அதில் முதலீடு செய்துள்ளாராம். கொச்சின் அருகில் உள்ள இடங்களுக்கு தற்போது மதிப்பு அதிகமாம். ஆறு மாதத்திற்கு முன்பு ஒரு கோடிக்கு வாங்கிய நிலம் இப்போது நான்கு கோடி வரை விலை போகிறதாம். அதனால் தமிழ்நாட்டில் சம்பாதிக்கும் பணத்தை தனது சொந்த மாநிலமான கேரளாவில் முதலீடு செய்து பிஸ்னஸை வளர்த்து வருகிறார் ஆர்யா.
தலிபான்களுக்கு எதிராக போராடும் மலாலாவுக்கு பேய் என்றால் பயம் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்த மலாலாவை தலிபான்கள் சுட்டனர்.
இதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய மலாலாவுக்கு லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது பூரணமாக குணமடைந்துள்ளவர் பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.
இந்நிலையில் மலாலா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் பேய் என்றால் தனக்கு பயம் என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் பேய் என்றால் சிறிது பயம் தான். நாங்கள் பேயை பீடியான் என்றே அழைப்போம். அது இருட்டான இடங்களில் வரும் என அஞ்சுபவள் நான். தலிபான்கள் எங்களைப் பார்த்துப் பயப்படுகிறார்கள் பெண்களைப் பார்த்து அஞ்சுகிறார்கள். பெண் என்பவள் மாபெரும் சக்தி.
அத்தகைய பெண்கள் கல்வியறிவு பெற்றால் அவளது சக்தி இன்னும் பலமடங்கு அதிகமாகும் என அஞ்சுகிறார்கள். எனவே தான் சமூகத்தில் பெண்கள் அங்கம் வகிப்பதையோ, சமூக முன்னேற்றத்தில் பங்கு பெறுவதையோ அவர்கள் விரும்புவதில்லை.
பெண்களின் பணி சமையல் செய்வது, குடும்பத்திற்கு உணவு பரிமாறுவது, குழந்தைகள் பெறுவது, அவர்களை வளர்ப்பது என்பது மட்டும் தான் என நினைக்கிறார்கள் தலிபான்கள்.
எதிர்காலத்தில் பாகிஸ்தானின் பிரதமராக ஆசைப்படுகிறேன், நாட்டின் கல்வி, ஆரோக்கியம் போன்ற வளங்களை அதிகப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போது அதே பழைய மலாலா தான், பெண் கல்விக்காகப் போராடும் அதே மலாலா தான் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மலாலாவை கொல்லாமல் விடமாட்டோம் என தலிபான்கள் தொடர்ந்து மிரட்டி விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே எந்தவித பேஸ்புக் தொடர்புகளும் இருக்க கூடாது என அந்நாட்டு கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேற்கு ஜேர்மனியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே எந்தவித பேஸ்புக் தொடர்பும் இருக்க கூடாது என கல்வி அமைச்சர் ரீன்லாண்ட் பாலடினேட் புதிய சட்டமொன்றை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாநில தரவு கமிஷனர் எட்கர் வாக்னர் பள்ளிகளில் பேஸ்புக் பயன்படுத்துவது என்பது வணிக ரீதியில் பொருந்தும் என்றும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே இந்த தொடர்புகள் வேறு வழிகளில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
மேலும் மற்ற ஜேர்மன் மாநிலங்களில் இந்த தொடர்பானது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். ஜேர்மனில் ரீன்லாண்ட் ஆட்சியில் தான் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே நட்பு தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஆசிரியரை சுட்டுக் கொன்ற மாணவன் தானும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே வடமேற்கு நிவாடாவில் ஸ்பார்கஸ் என்ற பாடசாலை அமைந்துள்ளது. நேற்று பாடசாலை தினவிழா என்பதால் மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவன் ஒருவன் திடீரென தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மற்ற மாணவர்களை நோக்கி சரமாரியாக சுடத்தொடங்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், அங்கும் இங்கும் ஓடத்தொடங்கினர். ஆனால் அவன் விடாமல் விரட்டி விரட்டி சுட்டுக்கொண்டிருந்தான்.
இதைக்கண்ட அப்பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் மைக்கல் லேண்ட் பெர்ரி(45) அம்மாணவனை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது அவன் சுட்டதில் குண்டு பாய்ந்து அதே இடத்தில் அவர் உயிரிழந்தார்.
மேலும் இதில் 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் ஒருவருக்கு தோளிலும், மற்றொருவருக்கு அடி வயிற்றிலும் குண்டு பாய்ந்து. இவர்களுக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதற்கிடையே துப்பாகியால் சுட்ட மாணவன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் தனது பெற்றோரிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்தது தெரியவந்தது. அவன் எதற்காக துப்பாக்கியால் சுட்டான் என்ற விவரங்கள் தெரியவில்லை.
இச்சம்பவம் காரணமாக நிவாடர் பகுதியில் உள்ள தொடக்க மற்றும் ஆரம்ப பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
சமீபகாலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவது குறிப்படத்தக்கது.
தமிழில் பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா, நடிகர் சித்தார்த்துடன் காதல் வயப்பட்டதாகவும், இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் அன்றாடம் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாத சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் சத்தமே இல்லாமல் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீப காலமாக ஒரு அழகிய மோதிரம் ஒன்றை தனது இடது கையில் அணிந்து வருகிறாராம். இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பினால் அதற்கு மௌனத்தையே பதிலாக கூறுகிறாராம்.
ஆனால் கொலிவுட் வட்டாரத்தில் இவர் அணிந்திருக்கும் அந்த மோதிரத்தை அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அன்பளிப்பாக கொடுத்திருக்கமாட்டார்கள். அவருடைய காதலர் அளித்த அன்பு பரிசாகவோ அல்லது சமந்தாவின் நிச்சயதார்த்த மோதிரமாகவோ இருக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.
கழுத்து வெட்டப்படும் காட்சி உள்ளிட்ட மோசமான வன்முறைகளை வெளிப்படுத்தும் வீடியோ பதிவுகளை வெளியிடுவதற்கும் அவற்றை பகிர்ந்துகொள்ளவும் மீண்டும் அனுமதிக்கும் விதத்தில் சமூக இணைய வலைத்தளமான பேஸ்புக் தனது விதிகளை மாற்றிக்கொண்டுள்ளது.
இவ்வாறான வீடியோ காட்சிகள் நீண்டகால உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று வந்த முறைப்பாடுகளை அடுத்து, அமெரிக்காவை தலைமையகமாக கொண்டியங்கும் பேஸ்புக் வலைத்தளம் கடந்த மே மாதம் அவற்றுக்கு தற்காலிக தடைகளை அறிவித்திருந்தது.
ஆனால் தமது வலைத்தள பாவனையாளர்கள் அவ்வாறான வீடியோக்களை பார்ப்பதற்கும் அவற்றைக் கண்டிப்பதற்கும் சுதந்திரம் இருக்க வேண்டும் என்று பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
எனினும் வீடியோ காட்சிகளில் முன்கூட்டிய எச்சரிக்கைக் குறிப்புகளை சேர்ப்பது பற்றி ஆராய்ந்து வருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த முடிவை தற்கொலைகளை தடுப்பதற்கான தன்னார்வ அமைப்பு உள்ளிட்ட பல தொண்டு நிறுவனங்கள் கண்டித்துள்ளன.
சிறார்களின் மனதில் சிறுவயதிலேயே வன்முறை எண்ணங்களைத் தூண்ட இவ்வாறான வீடியோ காட்சிகள் காரணமாகும் என்று அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
13 வயதுக்கு மேற்பட்ட எவரும் பேஸ்புக்கில் உறுப்பினராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொகவந்தலாவ, போனோகோட் தோட்டத்தில் பெண் ஒருவருக்கும் ஆண் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக வெட்டுசம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை 03 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.
ஒரே தோட்டத்ததைச் சேர்ந்த திருமணமான ஒரு ஆணுக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் இருந்த தகாத உறவு அப்பெண்ணின் கணவனுக்கு தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த பெண்ணிண் கணவர் குறித்த நபரை கத்தியால் வெட்டி உள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வெட்டு காயங்களுக்கு உள்ளான குறித்த ஆணும் பெண்ணும் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் இதுவரை கைது செய்யபடவில்லை.
மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.