பட்டுப் போன்று மேனியைப் பாதுகாக்க….

faci

தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? இதைப் படியுங்கள் முதலில்!

தண்ணீர் மருந்து

ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை!

வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.

எலுமிச்சை உடம்புக்கு நல்லது!

குளிப்பதற்கு முன் – ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக எலுமிச்சை கலந்த தண்ணீரில் குளியுங்கள்.

இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தேமலை விரட்டுங்க!

நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் அரித்து எடுத்தது , ஒருபாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பசை மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!

மெருகுக்கு பப்பாளி!

நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.

 

பஸ் எழுந்து நடந்து வந்தால் எப்படியிருக்கும்?

 

செக் குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல சிற்பி டேவிட் செர்னி. சர்ச்சை மன்னனான இவர் பழைய டபுள் டெக்கர் பஸ்சுக்கு எந்திர கைகளை பொருத்தி வியக்க வைத்துள்ளார்.

1957ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த டபுள் டெக்கர் பஸ்சில் ஹைட்ராலிக் முறையில் இயங்கும் வகையில் இரண்டு கைகளை பொருத்தப்பட்டுள்ளது. அந்த கைகளை வைத்து அந்த பஸ் மேலும், கீழும் நகர்வது எழுந்து நடந்து வருவது போன்று இருப்பதால் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

லண்டன், இஸ்லிங்டன் நகரில் ஒலிம்பிக் போட்டிகளின்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த பஸ்சை கீழே காணலாம்..

 

bus6
bus5
bus4
bus3
bus2
bus1

இந்தச் குட்டீஸ்களின் நடனத்தைக் கொஞ்சம் பாருங்களேன்!!

 

உறங்காத இரவுகளுக்குப் பின்னே நிஜமான கனவு……

ஒவ்வொரு மாதமும்
கலைந்து போயின
எதிர்பார்ப்புகள்…..

எட்டு வருடங்களாக
நுகரவில்லை நாசி
பால் மணம் வீசும்
மழலையின் நறுமணத்தை…..

குருதியோடு சேர்ந்து
கரைந்து ஓடின கனவுகள்…

கடவுள்களும் மருந்துகளும்
அன்றாட அவசியங்கள்…

கிழித்தும் நிருத்தும்
பார்த்தாகிவிட்டது உடலின்
அத்தனை செல்களையும்…..

ஏதோ ஒரு அற்புத கணத்தில்
கிட்டியிருக்கக்கூடும்
தேவதையின் கருணை…….

இன்னும்
மாதங்கள் இருக்கின்றன
ஒரு பிஞ்சு பிரபஞ்சத்தை
மார்பணைத்து மகிழ …!!!

இன்றைய விஞ்ஞானம்

எதை தேடிச் செல்கிறது
இன்றைய விஞ்ஞானம்…

மருந்தறியா நோய்களோடு
அல்லாடும் மக்கள் தீர்வு தேடி..

ஆணென்றும் பெண்ணென்றும் அறியாமல்
வாழ்வோடு போராடும் திருநங்கைகள்..

இன்னும் இன்னும் ஏராளமாய்..

ஆடம்பரமாக பகட்டு வாழ்விற்கு ஆதரவாய்..
வியாபார நோக்கில்
விலை கொடுத்து வாங்கும் பொருளாய்
விஞ்ஞானம் இன்று எதையோ தேடிக்கொண்டு..

-kavitha-

கண்டேன் = கொண்டேன்

தோகையில்லா
மயில்
ஒன்றை கண்டேன்
கூண்டில் சிக்காத
பறவை
என்று எண்ணிக்கொண்டேன் !

சிறகில்லா
அன்னப்பறவை
ஒன்றை கண்டேன்
சிற்பியால் செதுக்கப்பட்ட
சிற்பம்
என்று எண்ணிக்கொண்டேன் !

வண்ணமில்லா
ஓவியம்
ஒன்றை கண்டேன்
பெண்ணாய் வந்த
வான்நிலவோ
என்று எண்ணிக்கொண்டேன் !

நுரையில்லா
அலை
ஒன்றை கண்டேன்
நுரையீரலின் துடிப்பே
அவள் தான்
என்று எண்ணிக்கொண்டேன் !!!
-சௌமியாசுரேஷ்-

அழகுத் தெய்வம்

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னுந் தெய்வந்தான் அதுவென்றே யறிந்தேன்.

யோகந்தான் சிறந்ததுவோ தவம்பெரிதோ என்றேன்;
யோகமேதவம் தவமே யோகமென வுரைத்தாள்.
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ என்றேன்;
இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள்.
தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ
தாகத்தின் துயர்மழைதா னறிந்திடுமோ வென்றேன்
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவதோ வேறாமே என்றாள்.

காலத்தின்விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியா மென்றாள்.
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலா மென்றாள்.
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை யென்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்கா ணென்றாள்
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.

-பாரதியார்-

அறிஞரின் மகன் – சிறுகதை

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

கடவுள் வரம்

காலம் வரும் எனக்
காத்திருந்தால் நம்முடைய
இளமை போய்விடும் …!

பலன் கிடைக்கும் எனக்
காத்திருந்தால் நம்முடைய
முயற்சி போய்விடும் …!

எதையும் யாரையும்
எதிர்பார்த்துக் கொண்டிருந்தால்
நம் திறமைகள் அனைத்தும் போய்விடும் …!

நம்பிக்கையோடு நம்முடைய
பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தால்
இனிதான பயணம் வெற்றியாய் முடியும்…!

சிறுகதையான வாழ்வைத்
தொடர்கதையாக்க நாம் நம்பிக்கையோடும் உறுதியோடும் கடமையைச் செயலாற்றுவதே
கடவுள் தந்த வரமாம் …!

-ஜெய ராஜரெத்தினம்-

காதல்…… என்னவென்று கூற

மாதம் பன்னிரெண்டும்
எனை மதியாது கழிந்தோட,
ஈகைப் பண்புள்ள வெறுமையோ
நாளும் எனை வாட்ட,
நித்திரைப் பொழுதில்
நிசப்த்த நாளங்கள்,
ஒத்திகை நடத்துதே
என் விழியோர ஈரங்கள்..

நேசம் வீசி
நாடி வந்தேன்,
உன் சுவாசம் தேடி
ஓடி வந்தேன்,
என் பாதைகள் என்றும்
உன் பாதங்கள் தேட,
என் வீதிகள் முடியுமிடம்
என்றும் உன் வீடு தானே..

தனியொரு நாளில்
தவிப்புகள் நிறைய,
துணையிவள் வந்தால்
ஏக்கங்கள் கழிய,
விடையொன்று சொல்லிவிட்டு
வீடு செல்லு தளிரே,
நடைபிணம் நானுன்னை
நாளும் நாடுகிறேனே..

வீசும் காற்றுக்கு
விலைதான் என்னவோ,
வாடிய பயிராய்
வீதியில் நிற்கிறேன்,
எனை ஏசும் உன் விழிக்கு
என்னதான் கோபமோ,
அது சாடிய என்னுயிரும்
உடலிடத்தே பிரிந்தது..

எதுகை மோனையில்
போட்டி போட்டு,
ஏட்டுக் கவிதை வடிக்க
நான் வரவில்லை,
பதுமையிவள் பேசும்
மௌன மொழி கேட்டு,
மனப் பிதற்றலைத்
தீர்க்க வந்துள்ளேன்..

-பிரதீப்-

தோழி

இனையம்
நம்மை
இணைத்தது
உன் முகம் பார்க்காமல்
தொடங்கிய நட்பு
இன்று நம் முகவரிகள்
கூட மனனமானது

விருப்பம் விடுகதை
கவிதை கதை
பரிசுகள்
பகிர்ந்தோம்
கண்ணியமாய்
கைகோர்த்து நடக்கிறோம்
நட்பின் எல்லைகளில்

என்றோ ஒருநாள்
முகம் சந்திப்போம்
அட!
பேச ஒருவிஷயம்
கூட இல்லாமல்
சத்தமிட்டு சிரிப்போம்:)

-nandhalala-

 

நட்பில் நான்கு

cute-little-friends

 

நட்பில் நாற்பது இருக்கட்டும்
நமக்கோ ! நான்கு தான் தேவை !
அவைகள்
1.அக நட்பு
2.முக நட்பு
3. யுக நட்பு
4. சக நட்பு
உன்னை அன்பு செய்தல் – அகமாக !
மற்றவரை அன்பு செய்தல் – முகமாக !
உலகை அன்பு செய்தல் – யுகமாக !
நம் சொந்தங்களை அன்பு செய்தல் – சகமாக !
எனும் நான்கில் மனம் மகிழ்வோம் !!

எழுதியவர் : சி.எம்.ஜேசு

என் உயிர் தோழி

எனக்கு உயிரை கொடுத்து
உலகை பரிசாக காட்டிய
எனது முதல் உயிர் தோழி
என் ” அன்னை”

உலகை பரிசாக கொடுத்த
என் அன்னைக்கு அடுத்து
என் உள்ளத்தை எப்போதும்
குழந்தையாய் வைத்திருப்பவள்
நீயடி…

நீ என்ன இயற்கையின் அவதாரமோ
உன் அருகில் இருந்தால் மட்டும் சோகம்
என்ற எதிரி எட்டிபார்க்க
கூட தயங்குகிறது,

சண்டைகள்தான் நமது இனிய
மொழியோ ,
சங்கீதம் போல் தினமும்
ஒலிக்கிறது ,

வாழ்கையில் வழிகாட்ட பல
நண்பர்கள் இருந்தாலும்
என் வலிகளை நீக்க நீ
ஒரு தேவதை போதுமடி,

இறந்துபோ என்று சொல்
இன்பமாக இறந்து விடுவேன்
ஆனால்
பிரிந்து போ என்று சொல்லி
விடாதே
இறுதி வரை
என் நட்பை!

-முத்து ஸ்ரீ-

 

இறக்கமுடியாத சிலுவைகள்- வைரமுத்து

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!…
வானம் நட்ஷத்திரங்களையும்!…
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?…

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?…
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

-வைரமுத்து-

 

நவயுக நட்பு

முல்லை மொட்டுக்களாய்…
பள்ளிச் சிட்டுக்களாய்…
பகை மறந்து,
பை சுமந்து,
சென்றோமே பள்ளிக்கு….!!!
பதின் ஒரு வருடங்கள்.
பசுமையான வருடல்கள்.
மறக்க முடியா மங்கள நினைவுகள்.
தனிமையில் மீடிப்பர்த்தேன்.
என் இளமை அழுகிறது…!!!
நாங்கள் அடி வாங்காத ஆசிரியர் இல்லை
எங்களின் பகிடி வதைக்கு பலிஆகத
ஆட்களும் இல்லை…!!!
நாங்கள் அங்கு செய்யாத சேட்டையும் இல்லை….!!!
பராமுகமுடன் படித்தோம்,
பக்க விளைவை எதிர் கொள்ள
முடியாமல் தவித்தோம்…!!!
பரீட்சை குறுக்கிட்டது
எங்களின் படிப்புக்கே
முற்றுகை இட்டது.
பெறுபேறும் வந்தது…!!
ஆனந்தத்துடன் இருந்தனர் சிலர்,
அழுகையுடன் இருந்தனர் இன்னும் சிலர்,
மரமாய் இருந்த எம் நண்பர் கூட்டம்
இன்று செடியாய் மாறியது.
உயிர் தோழி மூவருடன்
உயர் தரத்தில் தடம் பதித்தோம்.
புதுப்புது முகங்கள்…
சற்றே ஆறுதலடைண்டன அகங்கள்…
மீண்டும் ஆரம்பம்,
எங்கள் அன்பின் போராட்டம்.
பழைய ஜாபகங்கள் படர்ந்தன.
பிரிந்த தோழிகளின்
நினைவலைகள் நீண்டன…!!!
எமது பாடசாலை
வாகை மரத்திடம் கேட்டுப்பார்,
நாங்கள் செய்த சேட்டைகளை
அது மொழிபெயர்க்கும்…!!!
இதற்குள் உயர்தர வாழ்க்கை
உருண்டோடி விட்டது…!!!
இதை தனிமையில் நினைக்கையிலே
இதயம் சோக கீதம் பாடுது…!!!
அதற்குள் சிலர்,
திருமணமும் முடித்திருப்பார்!
சிலர் பல்கலைக்கழகமும்
சென்றிருப்பார்……!!!
கண்ட இடத்தில் ஒரு புன்னகை
வருடத்துக்கு ஒரு முறை
வாழ்த்து மடல்…..!!!

“கவிக்குயில்”
-F arika Ansar-

 

புதிய ஆத்திசூடி – மகாகவி பாரதியார்

பரம்பொருள் வாழ்த்து

ஆத்தி சூடி.இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உயர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே:அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிக்கொள்
ஒற்றுமை வலிமையாம்.
ஓய்தல் ஒழி.
ஓளடதம் குறை.
கற்றது ஒழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல்.
கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமர்ந்து நில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்.
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டுவாழ்
கவ்வியதை விடேல்.
சரித்திரச் தேர்ச்சி கொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்.
சைகையில் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தளை யிகழ்.
சௌரியம் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று
ஞிமறென இன்புறு.
ஞெகிழ்வது அருளின்.
ஞேயம் காத்தல்செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்று வாழ்.
தீயோர்க்கு அஞ்சேல்.
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என் றுணர்.
தேசத்தைக் காத்தல் செய்.
தையலை உணர்வு செய்.
தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியில் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினை செய்;
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்.
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்.
நெற்றி சுருக்கிடேல்.
நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு.
பாட்டினில் அன்பு செய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி இழந்திடேல்.
பெரிதினும் பெரிது கேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
கொய்மை இகழ்.
போர்த் தொழில் பழகு.
மந்திரம் வலிமை.
மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங் கொடேல்.
மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.
யவனர்போல் முயற்சிகொள்.
யாரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.
ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொல்.
ரோதனம் தவிர்.
ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பியற்சி செய்.
லீலை இவ் வுலகு.
(உ)லோக நூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வான நூற் பயிற்சி கொள்.
விதையினைத் தெரிந்திடு.
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமை செய்.
வையத் தலைமை கொள்.
வௌவுதல் நீக்கு.