மனைவி, மாமியார், இரு பிள்ளைகளை பெற்றோல் ஊற்றி எரித்த நபர் தப்பியோட்டம்!!

Fireகலேவெல பொலிஸ் பிரிவில் கலகிரியாகம பிரதேசத்தில் வசிக்கும் குடும்பப் பெண், அவரது தாய் மற்றும் இரு பிள்ளைகள் ஆகியோருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரால் பெற்றோல் ஊற்றி இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை 01.45 அளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதை அடுத்து கலேவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தீக்காயங்களுக்கு உள்ளான குடும்பப் பெண் அவரது தாய் மற்றும் இரு பிள்ளைகள் ஆகியோர் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்ய கலேவெல பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மாநாட்டில் கனடா பங்கேற்க வேண்டும் : கனடிய முன்னாள் பிரதமர் வேண்டுகோள்!!

Mulroneyஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டை கனடா புறக்கணிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கனேடிய முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி அதனை வலியுறுத்தியுள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இருக்கும் பிரச்சினைகளை ஏனைய நாடுகள் இணைந்து பேசி தீர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கனடா பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளாவிட்டால் கனடாவின் 146 வருட ஜனநாயக பண்புகளை உள்நாட்டிலும் வெளி நாடுகளுடனும் பகிர்ந்து கொள்வது எவ்வாறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1961ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்ற அன்றைய கனடிய பிரதமர் ஜோன் டைபென்பேக்கர் தென்னாபிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக பிரேரணை ஒன்றை முன்வைத்து அதனை நிறைவேற்றியதை கனடிய முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி நினைவுபடுத்தியுள்ளார்.

இதன் காரணமாக தென்னாபிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து விலகி 1990 ஆண்டு நிறைவெறிக் கொள்கை முடிவுக்கு வந்த பின்னரே மீண்டும் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்து கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கனடா இம்முறை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரத்மலானையில் ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை!!

Trainரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயில் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

லுனாவ – மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் நடிக்கவரும் அப்பாஸ்!!

abbasகாதல் தேசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். அறிமுகமான முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால் ஏராளமான ரசிகர்களையும், ரசிகைகளையும் குறுகிய காலத்திலேயே பெற்றவர்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தவர் திடீரென தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். அவ்வப்போது விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

பாரதி, பெரியார் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த ஞானராஜசேகரன் இயக்கிவரும் ராமானுஜன் படத்தில் அப்பாஸ் நடிக்கவிருக்கிறார். கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாரை மையப்படுத்தி உருவாகும் இப்படம் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் உருவாகிறது.

இதுதவிர மலையாளத்தில் லவ் ஸ்டோரி என்ற படத்திலும் நடிக்க அப்பாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை பிரசாந்த் என்பவர் இயக்குகிறார்.

வங்கி அதிகாரியை மணந்தார் நடிகை அனிதா!!

anithaவிக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் வருடம் வெளிவந்த சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் அனிதா. இப்படத்தைத் தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், சுக்ரன் ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழில் சில வருடங்கள் வாய்ப்பில்லாமல் போனதால் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் நடித்தார். பின்னர் ரித்திஷ் நடிப்பில் வெளிவந்த நாயகன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் திரும்பி வந்தார். அதன்பிறகு நாசர் ஜோடியாக மகராஜா படத்தில் நடித்தார். பின்னர் சினிமாவை விட்டு விலகி இந்தி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், இவரும் கோவாவைச் சேர்ந்த ரோஹித் ரெட்டியும் ஒரு வருடமாக காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். முதலில் நட்புடன் ஆரம்பித்த இவர்கள் உறவு பின்பு காதலாகி தற்போது இருவீட்டாரின் சம்மதத்துடனும் திருமணம் செய்துள்ளனர்.

இவர்களது திருமணம் கடந்த 14ம் திகதி கோவாவில் கோலாகலமாக நடந்தது. வைதீகப் முறைப்படி இவர்களது திருமண சடங்குகள் நான்கு நாட்கள் நடந்தது. ரோஹித் ரெட்டி கார்ப்பரேட் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார்.

iOS சாதனங்களுக்கான புதிய பேஸ்புக் அப்பிளிக்கேஷன்!!

facebook3_iPhone_screenமொபைல் சாதனங்களில் இலகுவாக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தக்கூடியவாறு பேஸ்புக் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இந்நிலையில் அப்பிளின் iOS சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதும், மேம்படுத்தப்பட்டதுமான புதிய அப்பிளிக்கேஷன் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் பேஸ்புக் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போஸ்ட், மற்றும் கருத்துக்களை(Comments) எடிட் செய்யும் வசதியும் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

தரவறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்க

இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சச்சின் : டிராவிட் புகழாரம்!!

Rahul-Dravidகிரிக்கெட்டில் எனது வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தவர் சச்சின் என முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு குறித்து முன்னாள் அணித்தலைவர் டிராவிட் கூறுகையில், சச்சின் தனக்கென தனி தர முத்திரையை நிர்ணயித்துக் கொண்டு அதில் இருந்து கொஞ்சமும் கீழே இறங்கிவிடாமல் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியவர்.

கடந்த 24 ஆண்டுகளாக பல கோடி இளம் வீரர்களுக்கு முன்னுதாரண நாயகனாக விளங்கி வருகிறார். நாமும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகத்தை என்னுள் விதைத்து தூண்டுகோலாக இருந்தவர்.

அவர் இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் இயற்கை அதற்கு ஒத்துழைக்காது என்பதையும் உணர்ந்துள்ளேன் இதுதான் வாழ்க்கை.

அவரது சாதனைகளைக் கொண்டாடுவதற்கு இதுதான் சரியான தருணம். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவருக்கு சிறப்பான வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்.

எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் அனுபவித்து விளையாட வேண்டும்.
அவரது குடும்பத்தினருக்கும் இது அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கின் பரபரப்பான வீதிகளில் 100 இளம்பெண்களை மேலாடையின்றி புகைப்படம் எடுத்த புகைப்படக்கலைஞர்!!

top lessஅமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரத்தின் பரபரப்பான வீதிகளில் 100 இளம்பெண்களை மேலாடையின்றி நிற்க வைத்து புகைப்படம் எடுத்து சாதனை புரிந்திருக்கின்றார் பிரபல புகைப்படக்கலைஞர் ஒருவர்.

நியூயோர்க்கின் பிரபல புகைப்படக்கலைஞர் ஜோர்டன் மட்டேர் என்பவருக்கு நியுயோர்க் நகரத்தின் பல பரபரப்பான வீதிகளில் மேலாடையின்றி பெண்களை நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும் வேலை ஒன்று அவருடைய விளம்பரக்கம்பெனியில் இருந்து கொடுத்திருந்தனர்.

இந்த வேலையை வேறு யாரும் ஏற்காத நிலையில் இதை ஒரு சவாலாக எடுத்து இணையதளங்களில் விளம்பரங்கள் கொடுத்து 100 இளம்பெண்களை வரவழைத்து அவர்களை நியூயோர்க்கின் பிஸியான வீதிகளில் மேலாடையின்றி நிற்க வைத்து விதவிதமாக புகைப்படம் எடுத்து சாதனை புரிந்துள்ளார். இந்த திட்டத்துக்கு அவர் வைத்த பெயர் அன்கவர்ட் . (UNCOVERED) என்பதாகும்.

மேலும் நியூயோர்க்கில் பெண்கள் மேலாடையின்றி வெளியே வரலாம் என்று சட்டப்படி இருப்பதால் அவர் சட்டரீதியாக எவ்வித சிக்கலையும் சந்திக்கவில்லை. ஆனால் சில இடங்களில் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு கூடிவிட்டதால் போக்குவரத்து தடைபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஒருசிலர் மேலாடையின்றி போஸ் கொடுத்த பெண்களிடம் அத்துமீறி நடந்ததாகவும், அவர்களை அவர் கண்டித்து அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

நடிகை ஷில்பா ஷெட்டியின் வீட்டில் கணணி திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!

chilbaபொலிவுட்டில் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டி மும்பையின் ஜூஹூ பகுதியில் தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர்கள் தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டு தளங்கள் இவர்களுக்கு சொந்தமானது. கீழ் தளத்தை உடற்பயிற்சி கூடமாகவும், மேல் தளத்தை வீடாகவும் உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில் கீழ்தள உடற்பயிற்சி கூடத்தில் வைத்திருந்த ஐபாட் இசைக்கருவி மற்றும் ஐபேட் கம்ப்யூட்டரும் திடீரென காணாமல் போய்விட்டது. அதில் முக்கியமான தகவல்கள் அடங்கியிருப்பதால் அந்த பொருட்கள் காணாமல் போனதது குறித்து ஷில்பா ஷெட்டியின் முகாமையாளர் பொலிசில் புகார் செய்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அங்கிருந்த கண்காணிப்பு கமராவின் மூலம் பொருட்களை திருடிய மர்ம நபர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். ஆனால், அதன்மூலம் திருடியவர்கள் யார் என்பதை அறிய முடியவில்லை. குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை ஷில்பா ஷெட்டி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 கோடிக்கு ஆசைப்பட்டு 50 லட்சம் ரூபாயை இழந்த நடிகர்!!

Akshaye Khannaபொலிவுட் உலகின் முன்னணி நடிகரான அக்ஷய் கண்ணா ஒரு 1 கோடிக்கு ஆசைப்பட்டு 50 லட்சத்தை இழந்துள்ளார்.

மும்பை அந்தேரியில் இன்டேஜ் இமேஜஸ் என்று ஒரு நிறுவனம் உள்ளது.

சக்கரவர்த்தி என்பவர் தன் மனைவி சோனாவுடன் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு இவர் இன்டேக் இமேஜஸ் நிறுவனத்தில் 50 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு 45 நாட்களில் 1 கோடியாக திருப்பித் தரப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனை நம்பி சில பணக்காரர்கள் 50 லட்சம் கொடுத்தனர். பிரபல நடிகர் அக்ஷய் கண்ணாவையும், சக்கரவர்த்தி– சோனா தம்பதி அணுகி 50 லட்சம் முதலீடு செய்யும்படி ஆசை காட்டியுள்ளார்கள்.

45 நாட்களில் பணம் இரட்டிப்பாக கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் அக்ஷய் கண்ணாவும் 50 லட்சம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார்.

45 நாட்கள் கழித்து 1 கோடி வாங்கலாம் என்ற ஆசையில் நடிகர் அக்ஷய் கன்னா இன்டெக் இமேஜஸ் உரிமையாளர் சக்கரவர்த்திக்கு போன் செய்துள்ளார்.

ஆனால் சக்கரவர்த்தி இப்போது 1 கோடி தர முடியாது என்றும் கொஞ்சம் பொறுங்கள் உங்கள் பணத்தை மீண்டும் முதலீடு செய்துள்ளோம். விரைவில் 1.5 கோடியாக தருகிறோம் என 3 வருடங்களாக கூறி வந்துள்ளார்.

இதனால் சக்கரவர்த்தி– சோனாவின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மலபார் ஹில் பொலிஸ் நிலையத்தில் அக்ஷ்ய் கண்ணா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தம்பதியினரை அழைத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உலகில் மோசமான விமான நிலையங்களின் வரிசையில் கொல்கத்தா, சென்னை, மும்பை விமான நிலையங்கள்!!

Chennai2013ம் ஆண்டின் உலக அளவில் மிகமோசமான விமான நிலையங்ளின் வரிசையில் கொல்கத்தா, சென்னை, மும்பை விமான நிலையங்கள் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இதுகுறித்து சமீபத்தில் ஒன்லைன் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் இஸ்லாமாபாத் விமான நிலையத்தையும் சேர்த்து மிக மோசமான விமான நிலையங்களாக கொல்கத்தா, சென்னை, மும்பை விமான நிலையங்களும் இடம்பெற்றுள்ளது.

மேலும் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் 3வது இடத்திலும் இஸ்லாமாபாத் விமான நிலையம் 4 வது இடத்திலும் மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையம் 8வது இடத்திலும் சென்னை சர்வதேச விமான நிலையம் 6வது இடத்திலும் உள்ளன.

இணையதளம் நடத்திய கணக்கெடுப்பில் விமான நிலையத்தின் வசதி, தூய்மை, வாடிக்கையாளர் சேவை,மகிழ்ச்சி போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விஷ ஊசி ஏற்றிக் கொண்டு காதலர்கள் ஒன்றாக தற்கொலை!!

sucideகாதலனும் காதலியும் தமக்குத் தாமே விஷ ஊசி ஏற்றி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வெள்ளவாய பிரதான பாதையின் காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளவாய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, விரைந்த பொலிஸார் மேற்படி இருவரது சடலங்களை மீட்டனர்.

அத்துடன் விஷக் குப்பியொன்றும் ஊசியொன்றையும், அடையாளங்களை உறுதிப்படுத்தும் ஆவணமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மருத்துவமனையில் சேவையாற்றும் தாதி ஒருவரும் கடற்படையில் கடமயாற்றும் கடற்படை வீரர் ஒருவருமே தற்கொலை செய்துகொண்டவர்களென்று ஆரம்ப விசாரணையின் போது தெரிய வந்துள்ளது

தற்கொலை செய்து கொண்ட தாதி சூரியகமை என்ற இடத்தைச் சேர்ந்தவரென்றும், கடற்படை வீரர் பதுளையைச் சேர்ந்த வாசனாகம என்ற இடத்தைச் சேர்ந்தவராவார்.

இவ்விருவரும் தத்தமது வீட்டாருக்கு தாம் தற்கொலை செய்து கொள்வதாக கடிதங்களையும் அனுப்பியுள்ளனர். அதன் பிறகே விஷ மருந்துடனான ஊசியை ஏற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவ் விருவருக்கும் ஏற்கனவே திருமணம் முடித்து இரு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையிலேயே இருவரும் புறம்பாக காதல் வலையில் சிக்கியிருந்தனர்.

தற்கொலை செய்து கொண்ட தாதி தனது கணவனுக்கும் தற்கொலை செய்து கொண்ட கடற்படை வீரர் தனது மனைவிக்கும் இரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக கடிதங்களை தபாலில் சேர்த்துவிட்டே இவ்விருவரும் விஷ ஊசி ஏற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அசாரம் பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு மையம்!!

asaram bapuஇந்தியாவின் ஜோத்பூரில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அசாரம் பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு மையம் செயலபட்டுவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அசாரம் பாபு மீது தொடர்ந்து பல பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இவர் அவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பல பெண்களை வற்புறுத்தி பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அசாரமின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாக குஜராத் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அசாரமின் சூரத் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் ஒருவர் கூறுகையில் நான் அசாரமின் ஆசிரமத்தில் 1997 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை தங்கியிருந்தேன்.

என்னை அசாரம் 2001 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். அதிலிருந்து என்னை அடிக்கடி உடல் ரீதியாக அவர் துன்புறுத்தியுள்ளார்.

அவரின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் இருந்தது. அசாரமால் கர்ப்பமாகும் பெண்களுக்கு அங்கு கட்டாய கருக்கலைப்பு செய்யப்படும் இதனை ஆசிரமத்தின் மேற்பார்வையாளரான துருவ்பென் கவனித்துக்கொள்வார் எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை: பிசிசிஐ!!

BCCI-Indiaஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் அவுஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

மீதமுள்ள நான்கு போட்டிகள் ராஞ்சி, கட்டாக், நாக்பூர் மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடக்கிறது. இப்போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

இதில் மொகாலியில் நடந்த மூன்றாவது போட்டியில் ஒரே ஓவரில் 30 ஓட்டங்கள் வழங்கி தோல்விக்கு வித்திட்ட வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு இடம் கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் மூன்று போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட அதே வீரர்கள் மீதமுள்ள நான்கு போட்டியிலும் விளையாடுவார்கள் என பி.சி.சி.ஐ தெரிவுக்குழு அறிவித்துள்ளது.

 

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!!

ACCIDENT_logoயாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதி நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் ஒன்றும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் மோதியதில் இவ் விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜா ராணி 25வது நாள் : கமலஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அட்லி!!

Adlyஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய படம் ராஜா ராணி. இப்படம் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தன்னுடைய முதல் படத்திலேயே நல்ல தரமான காதல் படங்களை இயக்குவதில் ஒரு நிபுணர் என்பதை நிரூபணம் செய்துள்ளார் அட்லி. இந்த அறிய வாய்ப்பு எல்லா அறிமுக இயக்குனர்களுக்கும் அமைந்துவிடுவதில்லை. அவர் மீதான இருந்த எதிர்பார்ப்பையும் மீறி மாபெரும் வெற்றியடைந்துள்ளார் அட்லி.

நேற்று படத்தின் 25வது நாளை முன்னிட்டு நடிகர் கமலஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அட்லி. இதுகுறித்து அட்லி கூறும்போது,

ராஜா ராணி படத்தை கமல் சார் தான் துவக்கி வைத்தார். வெற்றி பெற்றதும் அவரிடமே ஆசி பெறவேண்டும், அவருக்கு இந்த வெற்றியை சமர்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னுடைய உழைப்பு மற்றும் அதன் பிரதிபலனாக கிடைத்த வெற்றி ஆகியவை பற்றி விவரமாக கேட்டு அறிந்தவர். படத்தின் சிறு நுணுக்கத்தை விசாரித்த அந்த பொது மனிதரின் திரை உலக ஞானம் எவ்வளவு பெரியது என புரிந்தது.

இந்த உன்னதமான, உற்சாகமான நேரத்தில் எனது தயாரிப்பாளர்கள் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ.ஆர்.முருகதாஸ், நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் ஆகிய நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றிகள். என்னுடைய படத்தில் பணியாற்றிய நடிக, நடிகையர் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி என்று அவர் கூறினார்.