வவுனியாவில் தொடர்ந்து மழை, மக்கள் சிரமம்!!

rainவவுனியாவில் கடந்த நான்கு தினங்களாக மதியத்தின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் போது கடும் காற்றுடன் மின்னல் தாக்கமும் இடம்பெறுகிறது.

வவுனியாவில் பரவலாக மழை பெய்து வருகின்ற போதும், மூன்று முறிப்பு, செட்டிகுளம், வெளிவட்டவீதி, காத்தான் கோட்டம் எனப் பல பகுதிகளில் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்துள்ளன.

பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதுடன், மின்சாரமும் தடைபட்டுள்ளது. மின்சாரத்தை வழமைக்கு கொண்டுவர மின்சாரசபை ஊழியர்கள் சிரத்தை எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.

பலத்த இடியுடன் கூடிய மழையினால் குழுமாட்டுச்சந்தி, கணேசபுரம், காத்தான் கோட்டம், தாஸ்நகர் ஆகிய பகுதிகளில் திடீர் என அதிகமாக மின்சாரம் வந்தமையால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி , றேடியோ போன்ற மின்சார உபகரணங்கள் செயலிழந்து விட்டதாகவும் இதனால் தமக்கு பெரும் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை கடந்த புதன் கிழமை யாழ் வீதியில் உள்ள அரச விவசாய பண்ணையில் மின்னல் தாக்கி 40 வயதுடைய மகேந்திரம் பராசக்தி என்ற குடும்ப பெண் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழர்கள் உள்பட இந்திய வம்சாவழியினரை காப்பாற்ற வேண்டும் : நரேந்திர மோடி!!

modiஇலங்கை தமிழர்கள் போன்று பல்வேறு நாடுகளில் துன்பப்படும் இந்திய வம்சாவளிகள் பாதுகாக்கப்படல் அவசியம் என்று பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையைக் கடுமையாகத் தாக்கி பேசினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மோடி தொடர்ந்து பேசியதாவது..

இந்திய கலாசாரம், உறுதித்தன்மை, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

அத்துடன் வெளிநாட்டுக்கொள்கை வகுக்கப்படும் போது இந்தியாவில் உள்ள மாநிலங்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

ஒரு நாடு தங்களின் குடிமக்களை பாதுகாப்பதுடன் இதர நாடுகளில் உள்ள நம் மக்களையும் பாதுகாக்க வேண்டும். அவர்கள் வேறு நிறத்தில் உள்ள கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கலாம். ஆனால் நமது இரத்தத்தின் நிறம் ஒன்றுதான்.

இலங்கை தமிழர்கள் உள்பட அயல்நாடுகளில் வாழும் இந்திய வம்சாவழியினரை நாம் காப்பாற்ற வேண்டும். என்று அவர் பேசினார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைய விரும்பினால் கெஹலியவால் தடுக்க முடியாது : முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!

vigneswaranவடக்கும், கிழக்கும் இணைந்து செயற்பட விரும்பினால் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. கெஹலிய என்ன சொன்னாலும் இரு மாகாண சபைகளும் இணைய விரும்பினால் இணைத்துத்தான் ஆக வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வலி.மேற்குப் பிரதேச சபையின் கட்டடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

முழு நாட்டையும் நாடாளுமன்றம் நிர்வகிக்கும் போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானோர் ஒரு குறிப்பிட்ட இனத்தையும் மதத்தையும் மொழியையும் கொண்டவர்களாக இருந்து மற்றைய இனங்களை, மதங்களை, மொழிகளை அசட்டை செய்யும் விதமாக நடந்து கொண்டதாலேயே அதிகாரங்கள் மத்திய அரசிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறிய அலகுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோ­சம் எழுந்தது.

அந்த வகையில் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ளூர் அதிகார சபைகள் மத்திய அரசின் முகவர்கள் போலத்தான் செயற்பட்டு வந்தன. பங்குதாரர்களாக அல்ல. 1980 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கச் சட்டத்தால் அபிவிருத்திச் சபைகள் கொண்டுவரப்பட்டன.

இவை மாவட்ட மட்டத்தில் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆனால் போதுமானதாக அந்தப் பகிர்வு அமையவில்லை. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கப் பிரதேச சபைகள் சட்டம் ஓரளவு அதிகாரப் பகிர்வை பிரதேச மட்டத்தில் மக்களுக்கு அளிக்க முன்வந்தது.

இதன் பின்னர் தான் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டமானது 13 ஆவது திருத்தத்துடன் கொண்டு வரப்பட்டது. கொண்டு வரப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண சபைகள், சட்டத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் வடக்கு மாகாண சபையும், கிழக்கு மாகாண சபையும் சேர்ந்து இணங்கி இயங்க முற்பட்டால் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது.

இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய அப்படி எதுவுமே செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இது சட்டம் சம்பந்தமான விடயம். அதை அவர் ஏதோ தான் நினைத்தது சரியயன்று சொல்லியிருக்கிறார்.

முழு நாட்டையும் நாடாளுமன்றம் தனது எண்ணத்துக்கேற்ப நிர்வகித்த காலம் போய் மாகாண சபைகள் மாகாண மட்டத்தில் நிர்வகிப்பதையும் பிரதேச சபைகள் பிரதேச மட்டத்தில் நிர்வகிப்பதையும் அறிமுகப்படுத்தினர்.

இது மற்றைய மாகாணங்களுக்குத் தேவைப்படாமல் இருந்தபோதும் தமிழ் பேசும் மக்களுக்கு நாம் எதனையும் அதிகபடியாக வழங்கவில்லை என்று ஒரு கருத்தை அரசியல் ரீதியாகச் சிங்கள மக்களுக்கும் எடுத்துரைக்கும் வண்ணமாக மாகாண சபைகள் என்பது மாகாணங்களுக்கும் ஏற்புடையதாக்கப்பட்டன.

ஒன்றுபட்ட நாட்டினுள் அதிகாரப் பகிர்வு என்று கூறும் போது மத்திய அரசு தானாக முன்வந்து போதிய அதிகாரப் பகிர்வை பிரதேசங்களுக்கும் கொடுக்க முன்வந்தாலன்றி, ஒன்று மற்றொன்றின் செயற்பாடுகளில் சதா காலமும் குறுக்கீடு செய்து கொண்டேயிருக்கும்.

இதனால்தான் நாங்கள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வைக் கோரி நிற்கின்றோம். எமது இளைஞர்கள் ஆயுதமெடுத்து, பிரித்துக் கொடுங்கள் என்று கேட்டுப் பிரிவினை பெறப்படாமல் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில் தான் மீண்டும் சமஷ்டி அலகைத் தமிழ் மக்கள் தமது தேர்தல் ஊடாக வழங்கக் கோரியுள்ளார்கள் என்றார்.

கார் விபத்தில் உயிர் தப்பிய தமழக கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக்!!

muraliதமிழகத்தில் பிறந்து இந்தியக் கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக இடம் பெற்ற முரளி கார்த்திக் தற்போது தனது மனைவி ஸ்வேதாவுடன் டெல்லியில் வசித்துவருகின்றார்.

இவர் நேற்று அதிகாலை மத்திய டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து கிரீன் பார்க் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

சாணக்கியபுரியில் உள்ள போலந்து நாட்டுத் தூதரகத்தின் அருகே உள்ள இணைப்பு சாலையில் நிதி மார்க் நோக்கி கார்த்திக் தனது காரை ஒட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது டெல்லி விமான நிலையத்திலிருந்து மயூர் விஹார் நோக்கி சென்றுகொண்டிருந்த மற்றொரு சைலோ வேனுடன் மோதியதில் கார்த்திக்கும், அவரது மனைவியும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

வேனில் பயணித்த சுதீப் என்பவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.வேன் சாரதிக்கும் மற்றொருவருக்கும் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அடிபட்ட சாரதியை காசியாபாத்தில் உள்ள புஷ்பாஞ்சலி கிராஸ்லே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கார்த்திக் அவருக்கு மருத்துவ உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

காலை நான்கு மணி வரை அவரிடம் விசாரணை நடத்திய பொலஸார் பின்னர் அவரை வீட்டிற்குச் செல்ல அனுமதித்தனர்.
விபத்து நடந்ததிற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

மருத்துவமனையில் உள்ள வேன் சாரதியின் தகவல் அறிக்கை பெற்ற பின்னரே விபத்து குறித்த அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கமுடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பாகங்களிற்கு இன்று மழை!!

heavy_rainநாட்டின் பல பாகங்களில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்புக்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் அதேவேளை பலமான காற்றும் வீசும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

காலநிலை தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கும் அதேவேளை கடலுக்குச் செல்வோர் எச்சரிக்கையாக செயற்படுமாறும் அந்நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

காதலிக்காமல் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!!

Enjoying the sunகாதல் செய்துவிட்டு ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. ஏனெனில் காதலில் விழுந்துவிட்டால், ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும். ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப்பார்கள். குறிப்பாக பெண்கள் நிறையவே யோசிப்பார்கள்.

மேலும் காதல் செய்துவிட்டு, காதல் செய்யாமல் இருப்பவர்களைப் பார்த்தால் சிலருக்கு பொறாமையாக இருக்கும். ஏனெனில் காதலில் விழாமல் இருந்தால் ராஜா-ராணி போல் இருக்கலாம். வாழ்க்கையை சந்தோஷமாக விருப்பத்திற்கேற்றவாறு வாழலாம். அதுவே காதலில் விழுந்துவிட்டால் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும் காதலன்-காதலியிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

எனவே திருமணம் செய்வதற்கு முன் காதலில் விழாமல் இருந்தால் பிடித்த அனைத்தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு ஜொலியான வாழ்க்கையை வாழலாம். அதிலும் பெண்கள் வெட்கப்பட்டு அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம் எப்போதோ மாறிவிட்டது. தற்போது பெண்களும் அனைத்தும் அவர்களது விருப்பத்துடன் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். எப்படி ஆண்கள் காதலில் விழாமல் இருந்தால் சந்தோஷமாக இருக்கலாமோ பெண்களும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

குறிப்பாக தற்போதுள்ள பெண்களுக்கு சுதந்திரம் அவசியமாகிவிட்டது. அவர்களுக்கும் ஆண்களைப் போன்றே ஒருசில ஆசைகள் உள்ளன. அத்தகைய ஆசைகள் காதலில் விழுந்துவிட்டால் நடக்காது. எனவே தற்போதுள்ள பெண்கள் மிகவும் உஷாராக இருக்கின்றனர். இப்போது பெண்கள் காதலில் விழாமல் இருந்தால் எந்த மாதிரியான சந்தோஷத்தை அடையலாம் என்று அனுபவசாலிகள் கூறுவதைக் கொஞ்சம் கேளுங்கள்..

சுதந்திரப் பறவை

காதல் செய்யாமல் இருந்தால் எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. நினைத்ததை எந்நேரத்திலும் பயமின்றி தடையின்றி செய்யலாம்.

சந்தோஷமாக ஷொப்பிங் செய்யலாம்

பெண்களுக்கு ஷொப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்களுக்கு அதுவே பொழுதுபோக்காக இருக்கும். எனவே தனி ஒரு பெண்ணாக இருந்தால்,எந்நேரமும் சந்தோஷமாக ஷொப்பிங்கிலேயே இருக்கலாம்.

வேலையில் கவனம் செலுத்தலாம்

காதல் செய்யாமல் இருந்தால் அலுவலகத்தில் நல்ல ஆர்வத்துடன் வேலை செய்யலாம். அதிலும் அலுவலகத்தில் கொடுத்துள்ள இலக்கை அடைய எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்யலாம்.

நண்பர்களுடன் நேரம் செலவழிக்கலாம்

காதல் வந்துவிட்டால் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே முடியாது. ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால், நண்பர்களுடன் எங்கு வேண்டுமானாலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவழிக்கலாம்.

ஆண் நண்பர்களுடன் பேசலாம்

சில ஆண்கள் தங்களது காதலியை அவர்களது ஆண் நண்பர்களுடன் பேசவே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், அதுவே தனி ஆளாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும், ஆண் நண்பர்களுடன் பேசலாம்.

எந்நேரமும் பணம் இருக்கும்

தனி ஒரு பெண்ணாக இருந்தால் பொறுப்புக்களானது மிகவும் குறைவு. மேலும் வாங்கும் சம்பளத்தை சேமிப்பதோடு விருப்பப்பட்டவாறு செலவழிக்கலாம். குறிப்பாக எந்நேரமும் கையில் பணம் இருக்கும்.

பிடித்ததை செய்யலாம்

பொதுவாக காதல் வந்தால் காதலரைப் பற்றிய நினைவே அதிகம் இருக்கும். தமக்கு பிடித்ததை மற்றும் தம்மைப் பற்றி யோசிக்கவே நேரம் இருக்காது. ஆனால் தனி நபராக இருந்தால், தம்மைப் பற்றி அதிகம் யோசிக்கலாம். பிடித்தவாறு நேரத்தை செலவழிக்கலாம்.

மேற்கூறிய அனைத்தும் ஆண்களுக்கும் பொருந்தும்.

பிணை முடிந்துவிட்டதால் பவர் ஸ்டாரை சுற்றி வளைத்த பொலிஸ்!!

powerபிணை முடிந்து விட்டதால் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சிவகாசி பொலிசார் நேற்று சுற்றி வளைத்துள்ளனர்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். பிரபல நடிகர் என்பதால் தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கடன் வாங்கித்தருவதாக கூறி அதற்கான கமிஷன் தொகை பெற்று அந்த தொகையை படம் எடுக்க முதலீடு செய்துள்ளார்.

ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடிக்கணக்கில் அவர் மோசடியில் ஈடுபட்டார். இதுகுறித்த புகார்களின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட மோசடி புகார்கள் குவிந்தன. புகாரின் அடிப்படையில் டெல்லி பொலிசார் பவர் ஸ்டாரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்குகளில் ஜாமீன் பெற்ற இவர் தற்போது அண்ணாநகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் 2001ம் ஆண்டு அவர் மீது சிவகாசி பொலிசில் ஒரு வழக்கு இருந்தது. பவர் ஸ்டாரின் காரில் இருந்த நம்பர் பிளேட்டுக்கும், ஆவண எண்களுக்கும் வித்தியாசம் இருந்ததால் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் அவர் முன்ஜாமீன் பெற்றார். தற்போது அந்த காலக்கெடு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிவகாசி எஸ்.ஐ மூர்த்தி தலைமையிலான தனிப்படை பொலிசார் நேற்று சென்னை சென்று பவர் ஸ்டாரை சுற்றி வளைத்துள்ளனர்.

இது தொடர்பாக அவரின் வழக்கறிஞர் பொலிசாரிடம் பேச்சுவார்தை நடத்தி வருகின்றார்.

பாடசாலையில் தீக்குளித்தது ஏன் : 6ம் வகுப்பு மாணவி பரபரப்பு வாக்குமூலம்!!

sneha_studentபாடசாலையில் தீக்குளித்தது ஏன் என்று 6ம் வகுப்பு மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி சினேகா(11).

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு பள்ளியில் உள்ள பாத்ரூமில் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த சினேகாவுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலச்சந்திரன், தாசில்தார் தங்கவேலு மற்றும் முதன்மை கல்வி அலுவலர் சாந்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்று சினோகா அளித்த வாக்குமூலத்தில் 5ம் வகுப்பு வரை மெட்ரிகுலேசனில் படித்தேன். தற்போது 6ம் வகுப்பில் அரசு பள்ளியில் சேர்த்து விட்டனர். என் தோழிகள் வெவ்வேறு பள்ளிகளில் படிக்கின்றனர்.

இந்த பள்ளியில் என்னுடன் படிக்கவந்த தோழிகளை வேறு பிரிவிற்கு மாற்றிவிட்டதால் எனக்கு வருத்தம் ஏற்பட்டது. இதனால் ஆரம்பம் முதலே இந்த பள்ளியில் படிக்க பிடிக்கவில்லை.

மேலும் காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் ரேங்க் கார்டில் தந்தை கையெழுத்து போட மறுத்து விட்டார் என்றும் இது உறுத்தியதால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பக்ரீத் விடுமுறைக்கு பின் நேற்று பள்ளி திறக்கப்பட்டது. அனைத்து மாணவிகளின் பைகளையும் ஆசிரியர்கள் முழுமையாக சோதனை நடத்திய பின்னரே வகுப்பறைக்குள் அனுமதித்தனர்.

வவுனியா சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து பௌத்த பிக்குவிடம் விசாரணை!!

monkவவுனியாவில் சிறுவர் காப்பகத்தில் உள்ள ஆண் பிள்ளை ஒருவரை துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அக்காப்பகத்தை நடத்தும் பௌத்த பிக்கு ஒருவர் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

இந்த சிறுவர் காப்பகத்தில் 10 முதல் 18 வயதுடையவர்கள் தங்கியுள்ளனர். இந்தநிலையில் 18 வயதான ஒருவரே தாம் பௌத்த பிக்குவால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளானதாக பொலிஸில் முறையிட்டுள்ளார்.

எனினும் பொலிஸார் இது குறித்த உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து தற்போது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் இந்த விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பௌத்த பிக்குவின் கண்காணிப்பில் இருந்த 22 பிள்ளைகளும் களுத்துறையில் உள்ள காப்பகம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சச்சின் ஏன் அப்படி செய்தார் : பொண்டிங் கேள்வி!!

Ricky-Pontingஹர்பஜன் சிங் விவகாரத்தில் சச்சின் ஏன் உண்மையை மறைத்தார் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என பொண்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்ற இந்திய அணி சிட்னி டெஸ்டில் பங்கேற்றது அப்போது அவுஸ்திரேலிய வீரர் சைமண்ட்சை இனவெறியை தூண்டும் வகையில் ஹர்பஜன் சிங் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து விசாரித்த போட்டி நடுவர் மைக் புராக்டெர், அடுத்த மூன்று போட்டிகளில் பங்கேற்க ஹர்பஜனுக்கு தடை விதித்தார். இதனால் இரு நாட்டு கிரிக்கெட் உறவு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. பின் நடந்த மேல் விசாரணையில் சம்பவத்தன்று மைதானத்தில் ஹர்பஜன் அருகில் இருந்த சச்சினிடம் விசாரிக்கப்பட்டது.

இதில் ஹர்பஜனுக்கு சாதகமாக சச்சின் பேசியதால் அபராதத்துடன் தப்பினார். சச்சினின் செயல் குறித்து சிட்னி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவராக இருந்த பொண்டிங் தனது தி குளோஸ் ஒப் பிளே என்ற புத்தகத்தில், ஹர்பஜன் குற்றவாளி என்பதற்கு போட்டி நடுவர் புராக்டெரிடம் போதிய ஆதாரம் இருந்தது.

விசாரணையின் போது சச்சின் இதை மறைத்து விட்டார் ஏன் இப்படிச் செய்தார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்பிரச்னை காரணமாக நாடு திரும்ப போவதாக இந்திய அணி மிரட்டியது. அணியின் அப்போதைய அணித்தலைவர் கும்ப்ளே நாங்கள் விளையாட்டு உணர்வு இல்லாமல் நடந்து கொள்வதாக தெரிவித்தார். இது பிரச்னையை திசை திருப்பியது.

கிரிக்கெட் ஆர்வலர்கள் எங்களது உள்நோக்கம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு சி.ஏ. நிர்வாகத்தின் தவறும் ஒரு காரணம்.
ஒருவேளை 21ம் நூற்றாண்டில் இந்திய கிரிக்கெட் அடைந்த வளர்ச்சி காரணமாகத்தான் இது நடந்திருக்கலாம் என நினைத்ததாக தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் மீது தமிழக அரசிடம் புகார்!!!

Santhanamஆல் இன் ஆல் அழகுராஜா பட ட்ரைலரில் அரசின் குட்கா எதிர்ப்பு விளம்பரப் படத்தைக் கிண்டலடிப்பது போல சந்தானம் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழக அரசிடம் இதுகுறித்து தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டு கூட்டணி புகார் செய்துள்ளது.

அதில் ஆல் இல் ஆல் அழகுராஜா படத்தின் ட்ரைலரில் குட்காவுக்கு எதிரான விளம்பரத்தை நக்கலடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் தம்மடிக்க வேண்டும் என கார்த்தி கேட்க அதற்கு சந்தானம் குட்கா விளம்பரத்தில் வரும் முகேஷின் குரலை இமிடேட் பண்ணி பேசிக் காட்டுவார்.

பின்னர் கார்த்தி சிகரெட் வேண்டாம் என சொல்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த விளம்பரத்தைக் கிண்டலடிப்பது போலுள்ளதாக தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டுக் கூட்டணி தெரிவித்துள்ளது. மேலும் சந்தானத்துக்கு எதிராக எழுத்துப்பூர்வ மனுவையும் அளித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் அமைப்பாளர் எஸ்.சிரில் அலெக்சாண்டர் கூறுகையில் புகையிலை மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு எதிரான மிக வெற்றிகரமான விளம்பரத்தை சந்தானம் கிண்டலடித்துள்ளார்.

குட்காவுக்கு எதிரான விளம்பரத்தில் வரும் முகேஷ் நிஜமாகவே புகையிலையால் பாதிக்கப்பட்டு இறந்தவர். அவரது குரலை இமிடேட் செய்வது சரியா, புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை விட்டொழிப்பது கேவலமான செயல் என்பதைப் போல சந்தானத்தின் கிண்டல் அமைந்துள்ளது.

மேலும் இந்த காட்சி நிச்சயம் நீக்கப்பட வேண்டும். புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோரை சந்தானத்தின் இந்த கிண்டல் பாதித்துள்ளது என்றும் இது புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 5க்கு எதிரானதும் எனவும் கூறியுள்ளார்.

நடுரோட்டில் மகளுக்கு கொடூர தண்டனை நிறைவேற்றிய தாய்!! (வீடியோ)

roadபள்ளிக்கு செல்லாமல் ஏமாற்றிய மாணவியை நடுரோட்டில் வைத்து தாய் சவுக்கால் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவானிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றித் திரிந்துள்ளார்.
இதனை பார்த்த மாணிவியின் தாய் அதிர்ச்சியடையவே, நடுரோட்டிலேயே சவுக்கால் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

முதலில் முட்டிங்கால் போடச் செய்து தன்னை தானே அடித்துக் கொள்ளும் படி கூறுகிறார் பின்பு சவுக்கால் மிக கொடுமையை அடிக்கிறார். பொலிஸ் அதிகாரி வந்து தடுக்கும் வரையிலும் இந்த தண்டனை தொடர்கிறது.

பிறகு தந்தையை வரவழைத்து மாணவியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர், எனினும் இச்சம்பவம் தொடர்பாக தாய் கைது செய்யப்பட்டாரா என்ற தகவல் தெரியவரவில்லை.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆண்டு விழா!!

college of eduவவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் 17ஆவது ஆண்டு விழா கோலாகலமாக இன்று கல்லூரி கேட்போர் கூடத்தில் கொண்டாடப்பட்டது.

1993ஆம் ஆண்டு இதே மாதம் 18ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்ட வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கடந்த 17 ஆண்டு காலம் சுமார் மூவாயிரம் வரையிலான ஆசிரியர்களை உருவாக்கியுள்ளது என கல்லூரி பீடாதிபதி கே.பேனாட் தனது தலைமை உரையில் குறிப்பிட்டார்.

மூவினத்தையும் சேர்ந்த மாணவர்கள் தேசியரீதியில் உள்வாங்கப்பட்டு ஆசிரியர்களாக வெளியேறுகின்றனர் எனவும் அவர் சொன்னார்.

ஆரம்பகல்வி, உடற்கல்வி, விஞ்ஞானம் ஆகிய பயிற்சி நெறிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட வவுனியா தேசிய கல்வியியற்கல்லூரி இப்போது பத்து பயிற்சி நெறிகளையும் மும்மொழிகளிலும் நடத்தி வருவதாகவும் பீடாதிபதி குறிப்பிட்டார்.

என்ரிப் திட்டப் பணிப்பாளர் எஸ் சிவகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த வைபவத்தில் மூத்த கல்விமான்கள் எட்டுபேர் கௌரவிக்கப்பட்டனர். உள்ளக ஆசிரியர்களினதும் பாடசாலை மாணவர்களினதும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மீண்டும் அரசியல் ஆர்வத்தில் நடிகர் விஜய்!!

Vijayநடிகர் விஜய் தனி கட்சி அமைக்கும் நோக்கத்துடன் கேரளாவில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் கொஞ்ச காலமாகவே அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தனி மேடை போட்டு அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

பின் அவருக்கும் ஆளும்கட்சி தலைமைக்கும் சில முரண்பாடுகள் ஏற்பட அவருடைய தந்தையான இயக்குனர் சந்திரசேகரன் மூலம் மறைமுக அரசியலில் இறங்கினார்.

இதற்கிடையில் தலைவா படம் வெளியாக வேண்டிய தருணம் வந்தது. நடிகர் விஜய்யும், அவருடைய அப்பாவும் அரசியல் ரீதியாக செய்த மறைமுக கலாட்டாக்களால் கோபமடைந்திருந்த ஆட்சி தலைமை படம் வெளியாவதற்கு சில தடைகளை மறைமுகமாக ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் படம் ஒருவழியாக வெளியானது. இருந்தாலும் தலைவா படம் தமிழகத்தில் தோல்வியை சந்தித்தது. கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் படம் ஓரளவுக்கு வெற்றியடைந்தது.

தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் ஜில்லா படம் கிட்டதட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர் மீண்டும் அரசியலில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

தன் ரசிகர் நல நற்பணி மன்றத்தை மீண்டும் வேகப்படுத்தி அரசியல் களத்தில் பரபரப்பாக செயல்பட வைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.

ஜில்லா பட படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்திருக்கிறது. அப்போது தனக்கு மிகவும் நம்பகமான சில மாவட்டத் தலைவர்களை அழைத்து, தன்னுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசாரம் பாபு சிறுமிகளுடன் உறவு வைத்தது ஏன் : திடுக்கிடும் உண்மைகள்!!

Asaram bapuஆன்மீகப் போர்வையில் வளைய வந்த அசாரம் பாபு பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார் அவரது அகமதாபாத் ஆசிரமத்தில் பணியாற்றிய முன்னாள் சேவகர் ஒருவர்.

13 வயது முதல் 16 வயதுடைய இளம் பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் அது தன் ஆயுளையும் காமசக்தியையும் கூட்டும் என அசாரம் பாபு நம்பினாராம்.

இது குறித்து ஹிந்தித் தொலைக்காட்சி ஒன்றில் வெளியிடப்பட்ட செய்தியில் அவர் தனது பெயரை தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிரமத்திலேயே சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அசாரம் பாபு என்கிறார் இவர்.

தான் இதனை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் காரணம் அவர் ஆசிரமத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏகப்பட்ட உளவாளிகளை வைத்திருந்தார் எனவே யார் அவருக்கு எதிராக செயல்பட்டாலும் அவரை உடனடியாக தாக்குவதுதான் பாபுவின் ஸ்டைல் என்கிறார்.

தினமும் இரவு காமசூத்ராவை படிப்பாராம். மேலும் பவ பிரகாஷ் ஆயுர்வேத என்ற ஒரு வடமொழி நூலின் மொழிபெயர்ப்பை அவர் படிப்பார் என்கிறார் இவர்.

அதில் 2வது ஸ்லோகத்தில் 13 முதல் 16 வயதுடைய பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள் பற்றி கூறப்பட்டுள்ளதாம் அதை பாபு தினமும் படிப்பார் என்று கூறுகிறார் அந்த பெயர் கூற விரும்பாத முன்னாள் பக்தர்.

அகர்கர் ஓய்வு பெற்றது ஏன்?

Cricket - ODI , Australia v Indiaஇந்திய அணி வீரர் அகார்கர் ஓய்வு பெற முடிவு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்திய அணியின் சகலதுறை வீரர் அகர்கர் கிரிக்கெட் அரங்கிலிருந்து நேற்று முன்தினம் விடை பெற்றார்.

இவர் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதன் பின் இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ரஞ்சி தொடரில் மும்பை அணியின் அணித்தலைவராக விளையாடினார்.

இந்நிலையில் ஓய்வு பெற்றது குறித்து அகார்கர் கூறுகையில் கடந்த 17 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விட்டேன் என்றாவது ஒருநாள் ஓய்வு பெற்றுத்தான் ஆகவேண்டும்.

இந்திய அணிக்காக விளையாட மீண்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால் ஆட்டத்தை தொடர்ந்திருப்பேன். இது நடக்காது என தெரிந்தவுடன் ஓய்வை அறிவித்து விட்டேன். இது உடனடியாக எடுக்கப்பட்ட முடிவு இல்லை இந்த ஆண்டு உடற்தகுதியிலும் சிறப்பாக இருக்க முடியவில்லை.

வேகப்பந்துவீச்சிலும் திறமை வெளிப்படுத்த முடியவில்லை. இது தான் கிரிக்கெட் விளையாடியது போதும் என்ற மனநிலைக்கு வர காரணமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.