வெனிசுலா நாட்டில் அதிகரித்து வரும் கூந்தல் திருடர்கள்!!

hairநமது நாட்டில் வசதிக்காகவும் சொகுசான வாழ்க்கைக்காகவும் திருடுகிறார்கள். பெரும்பாலும் தங்க நகைகள், பணம் போன்றவைதான் அவர்களின் இலக்கு.

ஆனால் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பெண்களின் கூந்தலை திருடுகிறார்கள். வெனிசுலாவில் நீளமான கூந்தல் கொண்ட பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. மேலும் நீளமான கூந்தல் கொண்டவர்கள்தான் அழகானவர்கள் என்று அங்குள்ள ஆண்கள் கருதுகிறார்கள்.

இதனால் கூந்தலை நீளமாக வளர்ப்பது அங்குள்ள பெண்களுக்கு பிடித்தமான விஷயம். அதுபோல நீளமாக வளர்க்க முடியாத பெண்கள் சவுரிமுடியை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட கூந்தல் அங்குள்ள கடைகளில் ரூ.2,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அதுவே இயற்கையான கூந்தல் என்றால் அதன் தரத்தை பொறுத்து ரூ.50 ஆயிரம் வரை விலை போகிறது. இதனால் அங்குள்ள திருடர்கள் தனியாக செல்லும் பெண்களை பிடித்து அவர்களது கூந்தலில் ஒரு கிளிப்பை போட்டு மொத்த கூந்தலையும் கத்தரித்து எடுத்துச்சென்று விடுகிறார்கள்.

வெனிசுலாவில் தனியாக செல்லும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு என்பது கிடையாது. ஆனால் நீளமான தலைமுடியுடன் இருப்பதுதான் அவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது. ஆண்கள் மட்டுமின்றி அவர்களுடன் பெண்களும் கூட்டணி சேர்ந்து கூந்தலை திருடும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த கூந்தல் திருட்டு தொடர்பாக ஏராளமான புகார்கள் அங்குள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் பலன் இல்லை. இதனால் தற்போது நீளமான கூந்தல் கொண்ட பெண்கள் தனியாக எங்கும் செல்வதில்லை. அப்படி சென்றாலும் உடன் ஒரு பட்டாளமே இருக்கும்.

சிசுவின் சடலத்துடன் கடைக்கு வந்த இளம்பெண்கள் கைது!!

babyஅமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் விக்டோரியாஸ் சீக்ரெட் என்ற உள்ளாடைக் கடை உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் திருடர்களை கண்காணிப்பதற்கென்று தனி காவலர்கள் பணியாற்றி வந்தனர்.

நேற்று மதியம் சுமார் 17 வயதுடைய இரண்டு இளம்பெண்கள் இந்தக் கடைக்கு வந்து துணிகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண் வைத்திருந்த கைப்பையில் இருந்து துர்நாற்றம் வருவதைக் கண்ட அந்தக் காவலர் சந்தேகத்தில் அவர்களது பைகளை வாங்கிப் பிரித்துப் பார்த்தார்.

அதில் பச்சிளம் சிசு ஒன்று இருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோன அவர் பொலிஸாரை அழைத்துள்ளார். அந்தப் பெண்களில் ஒருவர், ஒரு நாள் முன்னதாகத்தான் இதனைப் பிரசவித்ததாகவும் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் இவ்வாறு கையில் தூக்கிக்கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளார். அந்தக் குழந்தை பிறந்தபோது உயிருடன் இருந்ததா என்பது குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை.

அவர் கொடுத்த முகவரியில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டபோது அந்த எண்ணுக்குரியவர்களிடமிருந்து இதுகுறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

மற்றொரு பெண் கொடுத்த முகவரியில் தொலைபேசி எண் கொடுக்கப்படவில்லை. இந்த இரண்டு பெண்களும் களவு மற்றும் திருடப்பட்ட சொத்தினை தகாதமுறையில் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரசவித்ததாகக் கூறப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பையில் இருந்த சிசுவின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இறப்பிற்கான காரணம் தெரிந்தபின்னரே இதற்கான அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூயோர்க் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நவீன சந்தையில் தண்ணீருக்குப் பஞ்சம்!!

vavuniya1வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள நவீன சந்தையில் தண்ணீர் வசதி செய்து தரப்படவில்லை வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி மேலும் தெரிய வருவதாவது

வவுனியா நவீன சந்தை பகுதியில் 100 க்கு மேற்பட்ட கடைகள் காணப்படுகின்றன இதனால் பல தொழிலாளிகள் இச் சந்தையில் பணி புரிகின்றனர். இவர்கள் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்

இது பற்றி வர்த்தகர் ஒருவர் குறிப்பிடுகையில் கடும் வரட்சியான காலத்தில் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் குடி நீருக்கு பல சிரமங்களுக்கு உட்பட்டிருந்தோம் மலசலத்துக்கு கூட செல்ல வேண்டுமாயின் தண்ணீர் இல்லை பிறிதொரு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை எனவும் குறிப்பிட்டார்

மற்றொருவர் கூறுகையில் மலசல கூடத்திற்கு கதவிற்கு பூட்டு இல்லை தண்ணீர் பைப்புக்க்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது நகர சபையினால் தண்ணீர் வழங்குவது குறைவு ,நகர சபையினால் மலசல கூடம் நகர சபையினால் சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகின்றது இதனால் பொருட்களை வாங்க வருபவர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர் என கூறினார்

இது குறித்து நகர சபையினருக்கு பல தடவை எடுத்து கூறிய போதும் இதுவரை எது வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதே போன்று சுகாதாராப்பிரிவினரிடமும் பலதடவை எடுத்து கூறிய போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என வர்த்தகர்கள் குற்றம் சாட்டினர்.

புதுப்படங்களில் நடிக்க திரிஷா திடீர் மறுப்பு : விரைவில் திருமணம்!!

Trishaதிரிஷா புதுப்படங்களில் நடிக்க மறுத்து வருகிறார். அடுத்த வருடம் துவக்கத்தில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திரிஷா 2002ல் சினிமாவில் அறிமுகமானார். பத்து வருடங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது அவருக்கு 30 வயது கடந்துள்ளது.

திரிஷாவுடன் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. எனவே திரிஷாவுக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க அவரது தாய் மாப்பிள்ளை தேடிவந்தார். இதற்கிடையில் திரிஷாவையும் தெலுங்கு நடிகர் ராணாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன.

இருவரும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வந்தார்கள். குடும்ப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்கள். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த பட விழாவுக்கு ஜோடியாக சென்று நெருக்கமாக நடனமாடிய படங்கள் இணையத்தில் பரவின.

எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தெலுங்கு, தமிழ்பட உலகில் செய்திகள் பரவி உள்ளன. இதனை இருவரும் மறுக்கவில்லை. இந்த நிலையில் புதுப்படங்களில் நடிப்பதை திரிஷா தவிர்க்கிறார். பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்கும்படி அவரை அணுகிய போது மறுத்துவிட்டாராம்.

தற்போது ஜெயம்ரவி ஜோடியாக பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை மற்றும் தெலுங்கில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கிறார். இதில் பூலோகம் முடிந்துவிட்டது. மற்ற படங்களையும் முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்கிறார். அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் திருமணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சின் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்!!

sachinதனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ள சச்சின், பயிற்சி பெறும் விதமாக ரஞ்சி கிண்ண போட்டியில் விளையாட உள்ளார்.

அரியானா- மும்பை அணிகள் மோதும் ரஞ்சி கிண்ண லீக் ஆட்டம் லாஹ்லி பன்சிலால் மைதானத்தில் வருகிற 27ம் திகதி தொடங்குகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ள சச்சின் அதற்கு பயிற்சி பெறும் விதமாக இந்த ரஞ்சி கிண்ணப் போட்டியில் விளையாட உள்ளார்.

மும்பை அணிக்காக சச்சின் விளையாடும் கடைசி போட்டி இது என்பதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியை 8 ஆயிரம் ரசிகர்கள் இலவசமாக கண்டுகளிக்க அரியானா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

முதலில் வரும் 8 ஆயிரம் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தனது 199வது டெஸ்ட் போட்டியை கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் சச்சின் விளையாட உள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டி நவம்பர் 6ம் திகதி முதல் 10ம் திகதி வரை நடக்கிறது. இந்நிலையில் சச்சினை பெருமைப்படுத்தும் விதமாக இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளில் அவரது படத்தை அச்சிட மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்காக இந்திய கிரிக்கெட் சபையிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளது.

அனைத்து மாகாணங்களிலும் சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலைகள்!!

Sri-Lankas-presidentபிரபல பாடசாலைகள் என்பதை தவிர்த்து நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் சகல வசதிகளுடனும் கூடிய பாடசாலைகளை உருவாக்குவதே அரசின் வேலைத்திட்டம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நகர்புற மாணவர்களைப் போல கிராமப்புற மாணவர்களும் தற்போது கல்வியில் முன்னேறி உலகை வெற்றி கொள்ள முன்னோக்கி வருவதையிட்டு தாம் பெருமையடைவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுளளார்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த புலமைப் பரிசில் பரிட்சையில், அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை நேற்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பதின்ம வயதினருக்கான கட்டுப்பாடுகளை பேஸ்புக் நீக்கியது!!

Facebook-Under-Age-13பதின்ம வயதினர் தங்கள் கருத்துகளை வெளியிட விதித்திருந்த கட்டுப்பாடுகளை பேஸ்புக் இணையதளம் நீக்கியுள்ளது. இதன் மூலம் அனைவரும் பார்க்கும் வகையில் பதின்ம வயதினர் கருத்துகளை வெளியிட முடியும்.

இதற்கு முன்னர் நண்பர்களுக்குள் மட்டுமே கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் 13 முதல் 17 வயது வரையிலானவர்களுக்கு பேஸ்புக் கட்டுப்பாடு விதித்திருந்தது.

இளைஞர்களிடம் பேஸ்புக் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் ஏற்கெனவே யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை அனைவரின் பார்வைக்கும் வெளியிடும் வகையிலான வசதி உள்ளது.

மகன் முன் மனைவியை கொடூரமாக கொன்று விட்டு நிம்மதியாக உறங்கிய நபர்!!

knifஇந்தியாவின் ராஜஸ்தானில் மனைவியை கோடரியால் கொடூரமாக தாக்கி கொன்று விட்டு எதுவும் நடக்காதது போல் தூங்கச் சென்றுள்ளார் ஒருவர்.

இந்த சம்பவம் அவர்களது 6 வயது மகன் முன்பே நடத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்தார்மல் இவரது மனைவி கோத்தி. தனது மனைவிக்கு வேறொரு நபருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகித்த சர்தார்மல் கோத்தியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.

இந்நிலையில் இவர்களது வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்தப்போது கோத்தியை சர்தார்மல் தாக்க முயற்சித்தார்.
அவரிடமிருந்து தப்பிக்க வீட்டில் இருந்த கோடாரியை கையில் எடுத்து அவரது கணவரை கோத்தி மிரட்டியுள்ளார்.

கோத்தியின் இந்த செயலால் ஆத்திரமடைந்த சர்தார்மல் அவரிடமிருந்து கோடாரியை பிடுங்கி மனைவியை சரமாரியாக முகத்தில் தாக்கினார்.

மனைவி இறந்தது தெரிந்தும் தொடர்ந்து அவரை வெறித்தனமாக தாக்கிய சர்தார்மல் இச்சம்பவம் அவரது 6 வயது மகன் கண் முன் நடக்கிறது என்பதைக்கூட கவனிக்கவில்லை.

இத்தகைய கொடூரத்தை செய்துவிட்டு ஒன்றும் நடக்காததுபோல் சர்தார்மல் தூங்கச் சென்றுள்ளார். பின்னர் அடுத்த நாள் காலை சர்தார்மல்லின் உறவினர் ஒருவர் தகவல் அளித்தப்பிறகுதான் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

விசாரணையில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சர்தார்மல் வெகுநாட்களாக வரதட்சணை கேட்டு அவரது மனைவியை துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வவுனியா கோவில்குளத்தில் நடைபெற்ற பயிர்ச் சிகிச்சை முகாம்!!

vavuniyaவவுனியா, கோவில்குளம் கமநலகேந்திர நிலையத்தில் விவசாயிகளுக்கான பயிர்ச் சிகிச்சை முகாம் கடந்த 17ம் திகதி மேற்கொள்ளப்பட்டது. பெருமளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு தாம் பயிர்ச் செய்கையில் எதிர்நோக்கும் நோய்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் சார் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

இவ் நிகழ்வை நடத்திய வவுனியா விவசாய திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சகிலாபானு தெரிவிக்கையில்..

வவுனியா மாவட்ட விவசாயிகளின் பயிர்ச் செய்கை தொடர்பான பிரச்சனைகளை தீர்த்து அவர்களது உற்பத்தியை ஊக்கிவிக்கும் நோக்கில் பயிர்ச் செய்கை முகாம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நோய் தாக்கங்கள் காராணமாக அவர்களது விளைச்சலின் அளவும் குறைவடைந்து அதை நம்பி வாழும் குடும்பங்களின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது.

இப் பிரச்சனைகளை இலகுவாக தீர்க்கும் பொருட்டு மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை தொடக்கம் எமது பகுதியில் உள்ள 10 விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலும் தொடர்ச்சியாக இந்த பயிர்ச் செய்கை முகாமினை நடத்தி வருகின்றோம் எனத் தெரிவித்தார்.

ஆட்டை விழுங்கியதால் 3 நாளாக அசைய முடியாது தவிக்கும் மலைப்பாம்பு!!

snakதமிழகத்தில் சுமார் 20 கிலோ நிறையுடைய ஆட்டை விழுங்கியதால் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நகர முடியாதபடி அதே இடத்தில் உள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பருவமலை வனப்பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த பாலவிநாயகம் (42), நேற்று முன்தினம் பகலில் செம்மறி ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.

மாலை 5 மணியளவில் சற்று தூரத்தில் மேய்ந்த ஒரு ஆட்டை காணவில்லை. இதனால் பாலவிநாயகம் தேடிச்சென்றார்.
அங்கு சுமார் 20 கிலோ எடையுள்ள ஒரு ஆட்டை 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு விழுங்கி கொண்டிருந்தது. அதைபார்த்த பாலவிநாயகம் ஊருக்குள் சென்று வன அலுவலர்களை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றார்.

வனத்துறையினர் பாம்பை பிடிப்பதற்காக பெரியவலை மற்றும் கம்புகளை கொண்டு சென்றனர். பாம்பு நகர முடியாமல் கிடந்ததால் திரும்பி சென்றனர். இந்த நிலையில் நேற்றும் காட்டுப் பகுதிக்குள் சென்று வனத்துறையினர் மலைப்பாம்பை பிடிக்கவில்லை.

எனவே பாம்பை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 3வது நாளாக பாம்பு அங்கேயே கிடக்கிறது. பொதுமக்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். சுமார் 20 கிலோ எடையுள்ள ஆட்டை மலைப்பாம்பு விழுங்கி இருப்பதால் அதனால் அந்த இடத்தில் இருந்து நகரமுடியாது.

மேலும் ஆட்டை விழுங்கி உடல் பெருத்த நிலையில் மலைப்பாம்பு இருப்பதால் அதனை வலையைக் கொண்டோ அல்லது கம்புகளைக் கொண்டோ தூக்கி எடுக்க முடியாது.

மீறி தூக்கினால் மலைப்பாம்பு கிழே விழுந்து அதன் எலும்புகள் முறிந்து இறக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும் இந்த மலைப்பாம்பு 30 முதல் 35 கிலோவரை எடை இருக்கும். தவிர ஆட்டின் எடையும் 15 கிலோ வரை உள்ளது. எனவே மலைப்பாம்பை தூக்கினால் அதன் உயிருக்கு ஆபத்துதான் ஏற்படும்.

விழுங்கிய ஆட்டை மலைபாம்பு ஜீரணிப்பதற்கு சில நாட்களாவது ஆகும். அது அசையாமல் கிடந்தால் மட்டுமே இரை ஜீரணமாகும். எனவே இன்னும் 2 நாட்களுக்கு அந்த மலைப்பாம்பை பிடிப்பது சரியானதாக இருக்காது. படிப்படியாக ஆட்டை ஓரளவு ஜீரணித்த பின்புதான் பாம்பை பிடிக்க முடியும் என வனதுறையினர் தெரிவித்தனர்.

பாம்பை பிடித்து அமிர்திவன பூங்காவுக்கு கொண்டு செல்ல ஆலோசனை செய்து வருகின்றனர்.

காமெடி நடிகர் ஜெயமணியின் மகன் கதாநாயகனாகிறார்!!

Jeyamaniதிருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, சிங்கம், வேங்கை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி காட்சிகளில் கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக் ஆகியோருடன் சேர்ந்து நடித்தவர் ஜெயமணி. இவர் காமெடியனாக இருந்தாலும் தன்னுடைய மகனை கதாநாயகனாக உருவாக்கியுள்ளார்.

இவருடைய மகன் வர்ஷன் அது வேற இது வேற என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். முழு நீள நகைச்சுவை படமாக உருவாகி வரும் இப்படத்தில் கஞ்சா கருப்பு, சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட காமெடி நடிகர்களும் நடிக்கின்றனர். இவருக்கு ஜோடியாக சானிய தாரா நடக்கிறார்.

இப்படத்தை சுந்தர்.சி.யின் உதவியாளரான திலகராஜன் என்பவர் இயக்குகிறார். நடிகர் வர்ஷன் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் மாஸ்டர்களிடம் நடனம் மற்றும் சண்டை பயிற்சியும் கற்றுக் கொண்டுள்ளார். கூத்துப்பட்டறையில் நடிப்பும் கற்று தேர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து வர்ஷன் கூறும்போது அது வேற இது வேற முழு நீள நகைச்சுவை படம். காமெடி கதைகள் கண்டிப்பாக ஜெயிக்கும், மக்கள் மனதில் நீங்க இடம்பெறும் என்பதால் காமெடி படத்தில் கதாநயாகனாக அறிமுகமாகியுள்ளேன். தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வித்தியாசமான கதாநாயகனாக நடிக்க தயாராகி வருகிறேன் என்று அவர் கூறினார்.

வர்ஷனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியது குறித்து ஜெயமணி கூறும்போது என் மகன் வர்ஷன் பி.இ. கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்து முடித்தார். ஒரு பெரிய ஐ.டி. கம்பெனியில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.

ஆனால் அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியுடன் இருந்தார். நான் காமெடியனாக இருந்தாலும், என் மகன் கதாநாயகனாக அனைத்துத் தகுதிகளுடன் இருந்ததால் கதாநாயகனாக்கி விட்டேன் என்றார்.

வட மாகாண சபை வவுனியா உறுப்பினர் இந்திரராஜா முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!!

1வடமாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் இ.இந்திரராஜா முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்ற பின்னர் அமைச்சரவை பங்கீடு தொடர்பாக பங்காளிக் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக ஈபிஆர்எல்எப், ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளைச் சோந்த 9 உறுப்பினர்கள் கடந்த 11 ம் திகதி யாழில் இடம்பெற்ற சத்தியபிரமாண நிகழ்வைப் புறக்கணித்து இருந்தனர்.

அதன் பின் அவர்கள் முள்ளியவாய்க்கால், யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா ஆகிய பகுதிகளில் சத்தியப்பிரமாண நிகழ்வை மேற்கொண்டிருந்தனர்.

ஈபிஆர்எல்எப் கட்சி உறுப்பினர்கள் வவுனியாவில் சத்தியப் பிரமாண நிகழ்வை மேற்கொண்ட போது அதில் கலந்து கொள்ளாத ஈபிஆர்எல்எப் சார்பாக வவுனியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இ.இந்திரராஜா இன்று முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் முன்னிலையில் யாழில் புதிதாக அமைக்கப்பட்ட வலிவடக்கு பிரதேசசபை மண்டபத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வை செய்து கொண்டார்.

 

பாதாள அறையில் அடைத்து ஊனமுற்ற இளம்பெண் பலாத்காரம் : 84 வயது முதியவர் கைது!!

abuseஇங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரை சேர்ந்தவர் இலியாஸ் அஸ்கார் (84). இவர் பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது சிறுமியை இங்கிலாந்துக்கு கடத்தி வந்தார். அவள் ஊனமுற்றவள். காது கேளாத, வாய் பேச முடியாதவள். அவளை தனது வீட்டில் பாதாள அறையில் அடைத்து வைத்தார்.

இவரும் அவரது மனைவி தால்லட் அஸ்கர் (68) மற்றும் அவர்களது நண்பர்கள் கடுமையாக வேலை வாங்கினர். அவள் தப்பி செல்லாமல் இருக்க வீட்டின் பாதாள அறையில் அடைத்து சிறை வைத்தனர். மேலும் ஊனமுற்ற இவளை காட்டி அரசிடம் இருந்து 30 லட்சம் சலுகைகளை பெற்றுள்ளனர்.

இதற்கிடையே அந்த சிறுமியை இலியாஸ் அஸ்கர் பல தடவை கற்பழித்து சித்ரவதை செய்துள்ளார். அவளை அவரது குடும்பத்தினர் அடித்து உதைத்து துன்புறுத்தினர். தற்போது அந்த சிறுமிக்கு20 வயதாகிறது.

இதற்கிடையே பாதாள அறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்ட அந்த சிறுமி மீட்கப்பட்டாள். அதை தொடர்ந்து இலியாஸ் அஸ்கர், அவரது மனைவி தல்லாட் அஸ்கர், மகள் பாயிஷா அஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது மன்செஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில் இவர்கள் 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

குஷ்புவிடமிருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டுமாம்!!

kushbooசமீபத்தில் ஒரு பட விழாவில் பேசிய இயக்குனர் சங்க தலைவர் கேயார் நடிகை குஷ்புவை வெகுவாக பாராட்டினார்.

படங்களில் நடித்து முடித்ததும் இனி அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று, நடிகர் – நடிகைகள் ஓட்டம் பிடிக்கக் கூடாது. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வேண்டும்.

தற்போதைய நடிகைகள் குஷ்புவிடமிருந்து ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும். நான் இயக்கிய ஆறு படங்களில் குஷ்பு நடித்துள்ளார். குறித்த நேரத்தில் ஸ்பாட்டுக்கு வருவார். தான் நடிக்கும் எல்லா படங்களின் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்வார்.

அதனால் இன்றைய நடிகைகள் குஷ்புவை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் கேயார்.

கள்ளமாக படகில் இலங்கை வர முயன்றவர் தமிழகத்தில் கைது!!

boatவிசா காலம் முடிந்து ஓராண்டாக பொலிஸார் கண்ணில் படாமல் தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். தனுஷ்கோடியில் இருந்து கள்ளப்படகில் இலங்கை செல்ல முயன்ற போது அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மட்டகளப்பு தாட்டான்குடியை சேர்ந்தவர் சுதாகரன்(33). இவர் 27.3.12ல் சுற்றுலா விசாவில் சென்னை வந்தார். 22.9.12 உடன் விசா முடிந்தது.

இலங்கைக்கு திரும்பி செல்லாமல் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதியில் தலைமறைவாக இருந்து, கூலி வேலை பார்த்து வந்தார்.

கள்ளப்படகில் இலங்கை செல்ல திட்டமிட்டு நேற்று மாலை, தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் கடற்கரைக்கு வந்தார். தகவலறிந்த மண்டபம் கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிஸார் சுதாகரனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வட மாகாண சபை ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!!(படங்கள்)

வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏழு உறுப் பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அலரிமாளிகையில் நேற்று பிற்பகலில் இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது.

ஐ.ம.சு. முவின் பட்டியலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், ஈ.பி.டி.பி. சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன், வவுனியா மாவட்டத்தில் வெற்றிபெற்ற ஏ.வி. தர்மபால செனவிரட்ன மற்றும் ஏ.ஜயதிலக்க,

மன்னார் மாவட்டத்தில் தெரிவான ரிப்கான் பதியுதீன், கிளிநொச்சி மாவட்டத்தில் வெற்றிபெற்ற ஈ.பி.டி.பி. உறுப்பினர் வை.நவநாதன், முல்லைத்தீவில் வெற்றிபெற்ற அஹமட் லெப்பை முஹமட் ஜனுபர் ஆகிய ஏழு பேருடன் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற ஹபிபூ முஹமட் ராசிக்குடன் சேர்ந்து எட்டுப் பேர் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களான எட்டுப்பேரும் கடந்த 08 ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க இருந்த போதிலும், அந்த வைபவம் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 2