25 வருடங்களுக்கு முன் பிரிந்த தாயை தேடிக் கண்டுபிடித்த இளைஞர்!!

joinசிறுவயதில் காணாமல் போய் கமாண்டோ படை வீரர் ஆனவர் 25 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

இந்தியாவின் மராட்டிய மாநிலம் தானே நகர பொலிஸ் கமாண்டோ படை பிரிவில் பணியாற்றி வருபவர் கணேஷ் ரகுநாத் தாங்குடே(31). விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள இவர் முதலில் தானே நகர பொலிஸ் படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்து படிப்படியாக விளையாட்டு திறமையால் கமாண்டோ படைக்கு முன்னேறினார்.

கமாண்டோ படை வீரர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பணியாற்றுவது வழக்கம். ஒரு குழுவிற்கு அதிகாரி ஒருவர் தலைமை வகிப்பார். கணேஷ் ரகுநாத் தாங்குடே குழுவிற்கு ஷோன்டே என்பவர் பொறுப்பு அதிகாரி ஆவார். ஷோன்டே தன்னுடைய குழுவில் உள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரத்தை கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒவ்வொரு வீரர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய பெயர் விவரங்களை தெரிவித்தனர். அப்போது கணேஷ் ரகுநாத் தாங்குடேவிடம் கேட்டபோது எனக்கு யாரும் இல்லை. நான் ஒரு அனாதை என்று சோகத்துடன் தெரிவித்தார்.

ஆனால் கணேஷ் ரகுநாத் தாங்குடேவின் வலது கையில் மந்தா ஆர்.தாங்குடே என்று மராத்தி மொழியில் பச்சை குத்தியிருந்தது.
இதனை பார்த்ததும் ஷோன்டேவிற்கு கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கும் பெற்றோர் இருப்பார்கள் என்ற நம்பிக்கை அடி மனதில் வேரூன்றியது.

உடனே மந்தா என்ற பெண் தொடர்பான விவரங்களை பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிணாமங்கள் மூலமாக தேடத்தொடங்கினார். மேலும் கணேஷ் ரகுநாத்திடம் பெற்றோரை கண்டுபிடித்து தருவதாகவும், விரைவில் பெற்றோரை தேடி பிடித்துவிடலாம் என்றும் கமாண்டோ படை அதிகாரி ஷோன்டே மற்றும் சக வீரர்கள் ஆறுதல் கூறினர்.

இதனையடுத்து தன்னுடைய பெற்றோரை எப்படியாவது தேடி பிடிக்கவேண்டும் என்ற ஆசை கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கு தோன்றியது. உடனே தானே நகரில் கடந்த 30 ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாக சேகரித்தார்.

அதில் துரதிருஷ்டவசமாக கணேஷ் ரகுநாத் தாங்குடேவின் பெயர் விவரம் இல்லை. இருந்தாலும் முயற்சியை கைவிடவில்லை.
கணேஷ் ரகுநாத் தாங்குடே பாலர் பருவத்தில் ஒர்லியில் உள்ள அனாதை ஆசிரமம் ஒன்றில் தங்கியிருந்து 7ம் வகுப்பு வரையிலும் படித்தார்.

அந்த அனாதை ஆசிரமத்திற்கு சென்று அங்கு பல வருடங்களாக சமையல்காரராக பணியாற்றி வரும் சம்ருதீன் என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் சில தகவலகளை தெரிவித்தார். மேலும் முதியவர் ஒருவர் மந்தா என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மாமா பாஞ்சா மசூதி அருகில் வசித்து வருவதாக கணேஷ் ரகுநாத்திடம் தெரிவித்தார்.

கடந்த 4ம் திகதியன்று பல்வேறு தேடல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதியவர் கூறிய வீட்டிற்கு கணேஷ் ரகுநாத் சென்றார். அங்கு இருந்த பெண்ணிடம் நாங்கள் பொலிஸ் உங்கள் வீட்டில் சில வருடங்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போயிருக்கிறதா என்று கேட்டார்.

அதற்கு ஆமாம் என்று கூறிய அந்த பெண் தன்னுடைய மகன் கையில் என்னுடைய பெயர் மந்தா ஆர்.தாங்குடே என்று பச்சை குத்தியிருக்கும் என்றார்.

உடனே, அவர் தன்னுடைய அம்மாதான் என்று கணேஷ் ரகுநாத் தாங்குடேவிற்கு தெரிந்ததும் நான்தான் உங்களுடைய மகன் என்று கூறி தன்னுடைய கையில் பச்சை குத்தியிருந்ததையும் காண்பித்தார். இதனையடுத்து மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓட இருவரும் கட்டித்தழுவினர்.

சூழல் மாசடைவதற்கு எடுத்துக்காட்டாக மாறிவரும் வவுனியா குளம்!!

vavuniya kulam

சூழல் மாசடைதல் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டாலும் அது தொடர்பான தெளிவின்மை தொடர்ந்தும் காணப்பட்டே வருகின்றது . அந்த வகையில் சூழல் மாசடைவதில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையாக உள்ளது .

இவ்வாறு பிளாஸ்டிக் பொரு ட்களின் பாவனையால் இன்று ரம்மியமான பல இடங்களும் அசுத்தமாகிப் போகும் துர்ப்பாக்கிய நிலை உள்ளது . இவ்வாறான ஓர் நிலையிலேயே வவுனியா மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 120 ஏக்கர் வயல் காணிகளை தன்னகத்தே கொண்டமைந்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான வவுனியா குளம் காணப்படுகின்றது .

வவுனியாவில் உள்ள பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இக் குளத்தின் நீரேந்து பிரதேசங்கள் உட்பட குளத்தின் நீர் பகுதியிலும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்கள் அதிகளவில் காணப்படுவதனால் இப்பகுதி அழகற்றுக் காணப்படுவதுடன் இக் குளத்தினை நம்பி ஜீவனோபாயத்தை நடத்தும் பலரும் பெரும் அசெளகரியத்தை எதிர்கொள்கின்றனர் .

வவுனியா நகரசபை மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பன நகர்ப்பகுதியில் இருந்து வரும் கழிவான நீரை சுத்திகரித்து குளத்தில் விடுவிக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள பகுதியை சூழ அழகுபடுத்தும் செயற்றிட்டத்தை உள்வாங்கி எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று இக்குளம் நகர்ப்பகுதியில் சூழல் மாசடைவதற்கு எடுத்துக்காட்டான பிரதேசமாக மாறியிருக்கின்றது .

இங்கு அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நீர்த் தொட்டிகளினுள் நீண்ட காலமாக சுத்திகரிக்கப்படாது தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் இதனுள் காணப்படும் பொருட்கள் நீர்ப்பாசன குளத்திற்கு செல்வதனால் நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் தமது விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் விவசாயிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் .

இத்துடன் இப்பகுதியில் உள்ள கால்நடைகள் பெலித்தீன்களை உண்பதனால் இறக்கும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர் . குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களினால் மீன்கள் இறப்பு வீதம் அதிகரித்துள்ளமையும் நீர்ப்பாசனம் செய்யும் போது வயல் நிலங்களுக்குள் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் என்பன நீருடன் வருவதனாலும் விவசாய நிலங்கள் பயிர்ச்செய்கைக்கு ஒவ்வாத நிலங்களாக மாறி வருவதாகவும் விவசாயிகளும் மீன்வர்களும் கவலை தெரிவிக்கின்றனர் .

இதேவேளை இக் குளத்தின் அயலில் உள்ளவர்களால் இக் குளத்தினுள் கொட்டப்படும் குப்பைகளினால் அதிகளவில் இக்குளம் மாசடைந்து வருவதாக தெரிவிக்கும் விவசாயிகள் இப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கவனம் செலுத்தாத காரணத்தால் மழைக் காலங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் சுகாதார வைத்திய அதிகாரி இவ் விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதுடன் வவுனியா நீர்ப்பாசன திணைக்களமும் வவுனியா நகரசபையும் தம் பராமரிப்பிலுள்ள இக்குளத்தை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர் .

இளம் பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சிறுவன்!!

abuseஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை கடத்தி மூன்று நாட்களாக சிறுவன் ஒருவன் உள்ளிட்ட ஐவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.

ராஜ்கோட் அருகேயுள்ள மபாடியா பாரா என்ற இடத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட 20 வயது பெண் ஒருவர் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். திருமணமான இவர் மனநிலை பாதிப்படைந்ததால் இவர் கணவரைவிட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்துவருகிறார்.

இந்நிலையில் இவரை இம்மாதம் 13ம் திகதி பலகாரம் வாங்கி தருவதாக ஆசைகாட்டி அப்பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு நத்தா கோலி என்பவர் அழைத்து சென்று அங்கு ஏற்கனவே காத்திருந்த மேலும் 5 பேருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

இப்படியே தொடர்ந்து 3 நாட்கள் அந்த வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட அந்த பெண்ணை அவ்வழியாக சென்ற ஒரு சிறுமி பார்த்துவிட்டு பெண்ணின் வீட்டிற்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இக்கொடூரத்தை செய்த ஐந்து பேரில் 15 வயது சிறுவனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் அகர்கர் ஓய்வு!!

Agarkarஇந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரஞ்சிக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 2012 – 2013 ஆம் ஆண்டிற்கான சம்பியன் பட்டத்தை வெற்றிகொண்ட மும்பை அணியை அவர் தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1998 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார்.

26 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் 191 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் நான்கு 20-20 கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடியிருந்தார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 288 விக்கெட்டுக்களையும், டெஸ்ட் போட்டிகளில் 58 விக்கெட்டுக்களையும் அவர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்தும் திருடன் அதிர்ச்சி வீடியோ!!

மும்பை ரயில் நிலையத்தில் CCTV இல் பதிவான குழந்தையை கடத்தும் அதிர்ச்சி வீடியோ காட்சி..

65வது பிறந்த நாள் கொண்டாடிய நடிகை ஹேமமாலினி!!

hemamalini

நடிகை ஹேமமாலினி நேற்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார். 1948ம் ஆண்டு தமிழ்நாட்டில் அம்மன்குடியில் பிறந்தார். 1968ல் சப்னா க சவுதாகர் படத்தின் மூலம் இந்திப் படவுலகில் புகுந்து கலக்கினார்.

ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து முதல் பெண் சூப்பர் ஸ்டாராக அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்தார். நடிகர் தர்மேந்திராவை மணந்தார். 2 மகள்கள் உள்ளனர். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு பாரதீய ஜனதாவில் சேர்ந்து அரசியலில் குதித்தார். எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகில் மூன்று கோடி பேர் அடிமைகளாக!!

slaveஉலகில் அடிமைத் தொழிலாளர்களின் நிலை குறித்த ஒரு புதிய அறிக்கை, உலக அளவில் சுமார் மூன்று கோடி பேர் இன்னும் கொத்தடிமை நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறது.

உலக அடிமைகள் பட்டியல் 2013 என்ற இந்த அறிக்கை, இந்தியாவில் மட்டும் 1.4 கோடி பேர் அடிமை நிலைகளிலும், கடனை அடைக்கக் கொத்தடிமைகளாகவும், கட்டாயமாக வேலை செய்யும் நிலையில் சிக்குண்டும் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.

ஆனால் மௌரேடேனியாவில் மட்டும் இந்தப் பிரச்சினை மிகவும் அதிகமாக நிலவுவதாகக் கூறும் இந்த அறிக்கை, அந்த நாட்டின் மொத்த சனத்தொகையில் நான்கு சதவீதத்தினர் அடிமைகளாகவே வாழ்கின்றனர் என்று கூறுகிறது.

அடிமை முறையை ஒழிக்க அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் நாட்டுக்கு நாடு மாறுபடுவதாக அது கூறுகிறது. அவுஸ்திரேலியாவின் அடிமை முறைக்கு எதிரான அவுஸ்திரேலிய அமைப்பான வோக் ப்ரீ பவுண்டேஷன், இந்த அறிக்கையைத் தயாரித்திருக்கிறது.

புகையிரதப்பாதையில் இளம்பெண் தலை துண்டித்து மரணம், இரண்டு கால்களையும் இழந்த காதலர்!!

Trainஉக்ரைன் நாட்டில் த்ரில் அனுபவத்துக்காக புகையிரதப் பாதையில் உல்லாசம் அனுபவித்த காதல் ஜோடி மீது புகையிரதம் மோதியது. ஜபோரோசி என்ற நகரில் இச்சம்பவம் நடைபெற்றது. காதலனுக்கு வயது 41. காதலிக்கு வயது 30. சம்பவத்தின்போது இருவரும் குடிவெறியில் இருந்தனர்.
புகையிரதம் மோதியதில் காதலி இறந்து விட்டார். காதலனுக்கு இரண்டு கால்களும் துண்டாகி விட்டன. அவர் பொலிசில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் இப்படி செய்து விட்டதாக தெரிவித்தார்.

தன்னுடைய காதலியுடன் நண்பருடைய மதுவிருந்து ஒன்றில் கலந்துவிட்டு, திரும்பும் வழியில் தங்களுக்கு அடக்க முடியாத உணர்ச்சி ஏற்பட்டதாகவும், ஒரு த்ரில் அனுபவத்தை பெறுவதற்காக ரயில் தண்டவாளத்தில் உறவு வைத்ததாகவும், அந்த நேரத்தில் எதிர்பாராத வந்த ரயில் மோதி தன்னுடைய காதலி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் தானும் தன்னுடைய இரண்டு கால்களை இழந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுபோல், கடந்த 2008ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் புகையிரதப் பாதையில் உறவு கொண்ட ஒரு காதல் ஜோடி புகையிரதம் மோதி இறந்தது குறிப்பிடத்தக்கது.

வவுனியா பிரதேச செயலக கலாச்சார பிரிவால் வெளியிடப்பட்ட பாடல்!!

mullaiman

வவுனியா பிரதேச செயலக கலாச்சார ஆண்டு விழாவை முன்னிட்டு “முல்லைமண்…” என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பிரதேச கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இப் பாடல் முல்லை மண்ணின் சிறப்புகளை எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது.

பாடல் வரிகள் : கவிஞர் மாணிக்கம் ஜெகன்
இசையமைப்பாளர் : சாள்ஸ் சவிரிமுத்து
பாடியவர் : கயிலன்
தயாரிப்பு : கலாச்சாரப் பிரிவு, பிரதேச செயலகம், வவுனியா.

வவுனியாவில் சிறார் இல்லம் மூடப்பட்டது!!

child homeவவுனியா – அட்டமஸ்கட பிரதேசத்தில் விஹாரையில் இயங்கி வந்த சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் பல்வேறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அட்டமஸ்கட சுதர்மாராம விஹாரையில் இந்த சிறுவர் இல்லம், விஹாராதிபதியின் பொறுப்பில் இயங்கி வந்தது. இந்தநிலையில் கடந்த 9 ஆம் திகதி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவரச தொலை பேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே இந்த சிறுவர் இல்லம் மூடப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்லத்தின் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர் ஒருவர் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த முறைப்பாட்டை சிறுவர் அதிகார சபை உறுதி செய்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகார சபை சிறுவர்களை பொறுப்பேற்றுள்ளது.

வவுனியாவில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி!!(படங்கள்)

வவுனியா விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களால்  வவுனியா சர்வோதய நிலையத்தில் இன்று சுயதொழில் முயற்சியாளர்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி இடம்பெற்றது.

சர்வோதய சிரமதான சங்க உறுப்பினர்களுக்கும் தேசோதய சபை உறுப்பினர்களுக்கும் கிராம மட்டத்தில் காளான் வளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்காக இப் பயிற்சிநெறி இடம்பெற்றதாக சர்வோதய நிலையத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எஸ்.உதயகுமாரன் தெரிவித்தார்.

இப் பயிற்சிநெறியில் வவுனியா விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களான எஸ்.யாமினி மற்றும் கே.பிருந்தா ஆகியோர் காளான் வளர்ப்பு சம்பந்தமான செய்முறை விளக்கங்களை அளித்தனர்.

vavuniyavavuniya2 vavuniya3

சி.வி.விக்னேஸ்வரனுக்கு 13 அமைச்சுப் பொறுப்புக்கள்!!

CVVவட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனுக்கு வட மாகாண சபையில் 13 முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வட மாகாண சபையின் நிதி திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் கட்டுமாணம், நீர்பாசனம், நுகர்வோர் அபிவிருத்தி, சமூக சேவை மற்றும் புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், தொழில் மற்றும் விவசாய அபிவிருத்தி, சுற்றுலா, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு விநியோக அமைச்சராக இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த், டளஸ் அழகப்பெரும, அநுர பிரியதர்ஷன யாப்பா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

சமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ்வரன் சிந்திப்பது தவறு : அமைச்சர் ஹெகலிய!

Keheliya Rambukwellaவடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாட்டில் நிலவும் சமாதான சூழலுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சிந்திப்பது தவறானது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நேற்று ஊடகங்களில் தெரிவித்துள்ள கூற்றுக்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதனைத் தெரிவித்த போதும் நாட்டின் அரசியலமைப்புக்கு மாறாக எதையும் நடைமுறைப்படுத்த முடியாது என குறிப்பிட்ட அமைச்சர் நாட்டில் நிலவும் சமாதான சூழலுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சிந்திப்பதே தவறானது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்..

நாட்டில் அரசியலமைப்பு உள்ளது. அதற்கிணங்கவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். வடக்கு கிழக்கு இணைப்பானது நாட்டின் நடைமுறைச் சட்டங்களுக்கு அமைய நாட்டு மக்களின் இணக்கப்பாட்டோடு ஏற்படுத்தப்பட்டதாகும்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தாம் நினைத்தவாறு ஒரு ஒழுங்கு முறையின்றி மேலதிக அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு கூறுவாரானால் அது கவலைக்குரிய விடயமாகும்.

நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அன்னியோன்ய நல்லுறவுடன் ஐக்கியமாக வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னிச்சையாக இத்தகைய கருத்துக்களைத் தெரிவிப்பது முறையற்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் வட மாகாணத்துடன் சேர்ந்து செயற்பட எண்ணினால் வட மாகாணத்தின் இணக்கம் அதற்குத் தெரிவிக்கப்படுமானால் அரசாங்கம் அதனை நிறைவேற்றியாக வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன்சிங் பங்கேற்கமாட்டார் : ரைம்ஸ் ஒவ் இந்தியா!!

India's Prime Minister Manmohan Singh speaks during a news conference in Washingtonகொழும்பில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மாகன்சிங் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் இந்தியாவின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி கொழும்புக்கு அனுப்பப்படலாம் என்றும் ரைம்ஸ் ஒவ் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்கேற்பதில் இருந்து விலகிக் கொள்ளலாம்.

பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க திமுக வலியுறுத்தி வருகின்ற நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் இதனை ஆதரிக்கின்றனர்.

இந்தநிலையில் இந்தியாவின் சார்பில் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் பிரதமரும் ஏனைய காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இந்தவிவகாரம் குறித்து கலந்துரையாடியதாகவும் பிரதமர் மாநாட்டில் பங்கேற்பது விரும்பத்தக்கதல்ல என்று தாம் அந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

துணைக்குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியை கொழும்பு மாநாட்டில் பங்கேற்குமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொள்ளக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடைசியாக 2011ம் அண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த பொதுநலவாய மாநாட்டிலும் இந்தியாவின் சார்பில் ஹமீத் அன்சாரியே பங்குபற்றியிருந்தார்.

அதேவேளை தான் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பேன் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் அண்மையில் இலங்கை சென்றிருந்த போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதக் கொள்வனவு செய்ததை ஒப்புக்கொண்டார் மற்றுமொரு தமிழர்!!

canadaதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்ய முயன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கனேடிய தமிழரான பிரதீபன் நடராஜா ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒன்ராரியோ பிராம்டனை சேர்ந்த அவர் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக நீதிமன்றப் பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவருக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் திகதி தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக 1 மில்லியன் டொலர் பெறுமதியான உயர் சக்திவாய்ந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து அனுப்ப பிரதீபன் நடராஜாவும் அவரது சகாக்களும் முயன்றதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவருடன் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இன்னொரு கனேடியத் தமிழரான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா கடந்த ஜுலை மாதம் தன் மீதான குற்றசாட்டுகளை ஒப்புக்கொண்டிருந்தார்.
பிரதீபன் நடராஜாவுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் முன் பாய்ந்து பாடசாலை மாணவி தற்கொலை!!

Colombo Fortபதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலின் முன் பாய்ந்து பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பண்டாரவளை ரயில் நிலையத்தில் இருந்து தியத்தலாவ திசையில் 300 மீற்றர் தூரத்தில் இச்சம்பவம் இன்று காலை 08.10 அளவில் இடம்பெற்றுள்ளது.

வெலிமட மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 18 வயதுடைய ஜே.எம்.நதுஷானி ஷாலிகா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சடலம் பண்டாரவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்