பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு மாநாடு நிறைவில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு பொதுநலவாய அமைப்பின் தலைமை தீர்மானிக்கப்படவுள்ளது.
தலைமை பதவிக்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் முன்மொழியப்படவுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு சர்வதேசத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைக்கு நியூசிலாந்து பசுமைக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த வரிசையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கை அமர்வுகளின் நிகழ்ச்சி நிரல் குறித்த இன்றும் நாளையும் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாடடில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது,
இலங்கைக்கு தலைமைப் பதவி வழங்குவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளை பாதுகாப்பது தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஓர் நாட்டுக்கு தலைமைப் பதவி வழங்குவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடுமென தெரிவித்துள்ளது.
உரிமை மீறல்களில் ஈடுபடும் நாட்டின் உறுப்புரிமையை ரத்து செய்யும் அதிகாரம் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லாட்சியை ஏற்படுத்தவும் பொதுநலவாய நாடுகள் அமைப்பு கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அகதிகளாக இருந்து இலங்கை திரும்பியவர்கள் கடன் மற்றும் தேர்தல் பிரச்னை காரணமாக மீண்டும் தமிழகத்திற்கு செல்கின்றனர். இது குறித்து கியூ பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட இலங்கை குடும்பம் ஒன்றுக்கு மீண்டும் சுவிஸ்லாந்து வருவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தின் போது தன் சகோதரனை பிரிந்த ஐந்து வயது சிறுவன் 26 ஆண்டுகளுக்குப் பின் கூகுள் ஏத் இணையதளம் உதவியுடன் தன் வீட்டை அடைந்தார். இதனால் தொலைந்த சிறுவனின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் புளோரிடா லேக்லேண்டை சேர்ந்த மாணவி ரெபெக்கா அன்னா செட்விக். 7ம் தரத்தில் படித்து வந்த இந்த மாணவி கடந்த 5 வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் செயல்படாத சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டாள்.
குளவி தாக்குதலுக்கு உள்ளான பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 36 பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கம்–2 படத்துக்குப்பின் கெளதம் மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இதற்காக 5 கோடி முற்பணம் வாங்கினார். ஆறு மாதங்களாகியும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. கவுதம்மேனன் திருப்தி அளிக்கும் வகையில் முழு கதையையும் தயார் செய்யவில்லை என்று கூறி அப்படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார்.
அக்கரைப்பற்று – அட்டாளச்சேனை பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். தனது வீட்டின் பின்புறம் குறித்த சிறுவன் இவ்வாறு தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.
ஒட்டிசுட்டான் பகுதியில் இருந்து 17 வயது யுவதி ஒருவரை தவறான நோக்கதுடன் அழைத்து வந்தவர் வவுனியாவில் பிடிபட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
இந்தியாவால் இனிமேல் கவாஸ்கர், டெண்டுல்கர் போன்ற வீரர்களை உருவாக்க முடியாது என்பது நிச்சயம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை ரம்பா. தொடையழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ரம்பா உழவன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

சினிமா படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் சி.டி. வெளியீட்டு விழாக்களுக்கு வர மறுக்கும் நடிகைகளுக்கு சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் முன்னணி நடிகைகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.