பாலுமகேந்திராவின் நடிகர் அவதாரம்..!

balumahendra_01

 

ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்ற அடையாளத்தோடு இயங்கிக் கொண்டிருந்த பாலுமகேந்திரா இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் அவதாரம் எடுக்கின்றார்.

இவர் ஒரு உன்னதக் கலைஞன். நீங்கள் கேட்டவை, அழியாத கோலங்கள், மூடுபனி, ரெட்டை வால் குருவி, வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, வண்ண வண்ணப்பூக்கள், மறுபடியும், அது ஒரு கனாக்காலம் என்று காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த இயக்குநர்.

வீடு, சந்தியா ராகம் என்ற இரு படங்களை மட்டும்தான் என்னால் சமரசம் இல்லாமல் எடுக்க முடிந்தது என்று உண்மையை உரக்க்ச் சொன்னவர்.

“பொன்மேனி உருகுதே” பாடலை மூன்றாம் பிறையில் வைத்தது கூட தேவையில்லாதது என்று தன் படம் குறித்து தானே விமர்சனம் செய்பவர்.

பாலா, ராம், வெற்றிமாறன், சீமான், சீனுராமசாமி, நா.முத்துக்குமார் என்று பல படைப்பாளிகள் உருவாகக் காரணமாக இருந்தவர் இப்போது தலைமுறைகள் படம் இயக்குகிறார்.

சசிகுமார் தயாரிக்கும் இப்படத்தில் பாலுமகேந்திரா இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் அவதாரம் எடுக்கின்றார்.

 

வீடு திரும்பினார் மனோரமா!

Manorama-back-singam2

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை மனோரமா சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார்.

1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கின்னஸ் சாதனை படைத்தவர் மனோரமா.

70 வயதை அண்மையில் நிறைவு செய்த அவர் கடந்த சில வருடங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் உணவு ஒவ்வாமை மற்றும் வயிற்றுக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமையன்று(மே 31) மனோரமாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலை வீடு திரும்பினார்.

தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இடி- மின்னல் எச்சரிக்கை!

தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்குத் தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் சில மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம்- இடி- மின்னலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களை அறிவுறுத்துகின்றது.
இதேவேளை- புத்தளம் – யாழ்ப்பாணம் வரையிலான கடற் பிரதேசங்களிலும் காலி- ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற் பிரதேசங்களில் மழையுடன் கூடிய காற்று வீசும் எனவும் கடல் கொந்தளிப்பு காணப்படுமெனவும் வானிலை அவதான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறிப்பாக காலி – ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வ
ரையிலான கடற் பிரதேசத்தில் 50 மற்றும் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேல்- சப்ரகமுவ- மத்திய மாகாணங்களிலும் குருநாகல்- புத்தளம் மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யுமெனவும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளைஇ நேற்றும் மேல் மாகாணத்தில் சீரற்ற காலநிலையால் தொடர்ந்து காலை முதல் மழை தொடர்ந்தது. கடந்த இரண்டு தினங்களாக மழை- வெள்ளம்- மின்னல் உள்ளிட்ட இயற்கை அனர்த்தத்தினால் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கிரிவுல்ல பகுதியில் பாடசாலையொன்றின் மீது மின்னல் தாக்கியதில் மாணவர்கள் 14 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் யக்கலமுல்ல என்ற இடத்தில் சிவப்பு மழை பெய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.(எம்.ரி.-977)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் வீசிய மினி சூறாவளியினால் 41 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் தெனியாய பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் 16 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

 

மாணவர்கள்மீது கண்ணீர் புகைப் பிரயோகம்!

teargas_200_159

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கையை பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டு கலைத்துள்ளனர்.

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன பகுதியை மறித்து மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் மாணவர்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கான உரிமையை வழங்குமாறு கோரி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதுகுவலி குணமாக வேண்டுமா?

பொதுவாக எல்லா நோய்களும் வயதானவர்களையே குறி வைத்துத் தாக்கும். ஆனால், இளம் மற்றும் நடுத்தர வயதினரைக் குறி வைத்துத் தாக்கக் கூடிய ஒருசில நோய்களில் முதன்மையானது முதுகுவலி. வலிக்கான காரணமாகப் பலரும் சொல்வது டிஸ்க் எனப்படுகிற முதுகெலும்பு சவ்வில் உண்டாகிற கோளாறு. அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என சொல்லப்பட்ட இந்தப் பிரச்னையிலிருந்து அறுவையின்றி மீள முடியும்.

முதுகுவலியால் அவதிப்படுகிற இளம் மற்றும் நடுத்தர வயதினரில் 40 சதவிகிதம் பேருக்கு முதுகெலும்பு சவ்வில் உண்டாகிற கோளாறே காரணமாக இருக்கிறது. அறுவை சிகிச்சைதான் தீர்வு என்றால் என்ன செய்வது என மருத்துவரிடமே போகாமல், வலியைப் பொறுத்துக் கொண்டு, ஒரு கட்டத்தில் அதைத் தீவிரமாக்கிக் கொண்டு வழி தெரியாமல் நிற்கிறவர்களே அதிகம்.

முதுகெலும்பு சவ்வு தவறாக உபயோகப்படுத்தப்படுவது, அந்தப் பகுதியில் நீர் தன்மை குறைவது, இரண்டு முதுகெலும்புகளுக்கு இடையிலிருந்து சவ்வானது விலகி, நரம்புப் பகுதியை அழுத்துவது போன்றவையே இதற்கான காரணங்கள். ஆரம்பக் கட்டத்தில் சிறியதாக உண்டாகிற வலி, நாள்பட, நாள்பட அதிகமாகி, நிரந்தர முதுகுவலியை உண்டாக்குவதோடு, கால் வலியையும் சேர்த்துக் கொடுக்கும்.

முன்பு இருந்த மாதிரி இந்த வகையான முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு எனப் பயப்பட வேண்டாம். மிகவும் முற்றிய நிலையில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட முதுகுவலி சவ்வுப் பிரச்னைக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும்.

ஊசியின் மூலம் ஓஸோன் செலுத்தி சவ்வை சுருங்க வைப்பது, ரேடியோ கதிர்களைச் செலுத்தி, சவ்வை அகற்றுவது என பலமுறைகளில் குணப்படுத்த முடியும். சிகிச்சை முடிந்து 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே மருத்துவமனையில் இருந்தால் போதும்.

அன்றிரவே சாதாரண வேலைகளைச் செய்யலாம். ஓய்வோ, கடுமையான கட்டுப்பாடுகளோ தேவையிருக்காது. எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட சவ்வுப் பிதுக்கம் உள்ளவர்களுக்கு, அறுவை சிகிச்சையிலிருந்து தப்பிக்க இது மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்..

சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது இந்தியா..

சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் அபாரமாக துடுப்பெடுத்தாடி 50 ஓவர் நிறைவில் 3 விக்கட்டுகளை இழந்து 333 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அதிகபட்சமாக தில்ஷான் 84 ஓட்டங்களையும் குஷால் பெரேரா 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இந்திய அணி சார்பாக புவநேஷ் குமார், இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஒரு ஓவர் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பாக விராத் கோலி மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 3 சிக்ஸ்சர் அடங்கலாக 120 பந்துகளில் 144 ஓடங்களையும் தினேஷ் கார்த்திக் 81 பந்துகளில் 2 சிக்ஸ்சர் அடங்கலாக 106 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.இலங்கை அணி சார்பாக எரங்க 2 விக்கெட்களையும் திசார பெரேரா சேனாநாயக்க தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்

இன்றைய போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுதாடினாலும் பந்துவீச்சு களத்தடுப்பு இரண்டிலும் தங்கள் திறமையை காட்ட தவறினர். இன்றைய போட்டியில் விட்ட தவறுகளை சரிசெய்து இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவார்களா என பொறுத்திருந்து பார்போம்.

~கேசா~

IPL தலைவர் பதவியில் இருந்து ராஜிவ் சுக்லா ராஜினாமா!

ஐபிஎல் ஆட்ட நிர்ணய விவகாரத்தில் மிகப் பெரிய விக்கெட்டாக அதன் தலைவர் ராஜிவ் சுக்லா வீழ்த்தப்பட்டிருக்கிறார். அவர் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். ஐபிஎல் ஆட்ட நிர்ணய விவகாரத்தில் வீரர்கள், புக்கிகள், பாலிவுட் நடிகர் இதற்கும் மேல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் என பலரும் சிக்கி கைதாகினர்.

இன்னும் எத்தனை தலைகள் உருளுமே என்ற நிலைமையும் உள்ளது. குருநாத் மெய்யப்பன் கைதானால் அவரது மாமனாரான பிசிசிஐ தலைவர் சீனிவாசன் ராஜினாமா செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் அனேகம் நாளை ராஜினாமா செய்யக் கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனிவாசனுக்கு முன்பாக ஐபிஎல் தலைவரான ராஜிவ் சுக்லா இன்று தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஐபிஎல் ஆட்ட நிர்ணய சர்ச்சைகளைத் தொடர்ந்து தாம் பதவியில் இருந்து விலகுவதாக ராஜிவ் சுக்லா அறிவித்துள்ளார். அவர் ஏற்கெனவே அடுத்த ஆண்டு ஐபிஎல் தலைவர் பதவியில் இருக்கமாட்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பியன்ஸ் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அபாரம்.

சம்பியன்ஸ்  கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இன்றைய போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதுகின்றன. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதற்கேற்ப முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் அபாரமாக துடுப்பெடுத்தாடினர். 50 ஓவர் நிறைவில் 3 விக்கட்டுகளை  இழந்து 333 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். அதிகபட்சமாக  தில்ஷான்  84 ஓட்டங்களையும் குஷால் பெரேரா  82 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

 

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக சீனிவாசன் 4 நிபந்தனைகள்!

IPL ஆட்ட நிர்ணய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமெனில் 4 நிபந்தனைகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று என்.சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். ஆட்ட நிர்ணய விவகாரத்தில் தமது மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால் என்.சீனிவாசன், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பலரும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பிசிசிஐ செயற்குழு நாளை காலை சென்னையில் கூடுகிறது. முன்னதாக தாம் பதவி விலக வேண்டுமெனில் சீனிவாசன் முன்வைத்திருக்கும் 4 நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.
1) இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தாம் பிரதிநிதியாக இருக்க வேண்டும்
2) தனது செயலர், பொருளாளரை தாமே தேர்வு செய்ய வேண்டும்
3) பிசிசிஐ தலைவர் என்பவர் அமைப்பை சாராதவராக இருக்கக் கூடாது
4)தமக்கு எதிராக ராஜினாமா செய்த ஷிர்கே மற்றும் ஜத்காலே ராஜினாமாவை திரும்பப் பெறவே கூடாது என்பதுதான் சீனிவாசன் விதித்த நிபந்தனைகளாகும்.

நாளைய சென்னை கூட்டத்தில் இந்த நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது. இதில் சீனிவாசனின் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளபட்டால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.

பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடர்ந்த பொங்கல் விழா 2013

nara

 

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடர்ந்த பொங்கல்  எதிர்வரும் 15-06-2013 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

அன்றைய தினம் இரவு நிகச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் என்பனவும் இடம்பெறும்.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாநெற் இணையத்தளக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நேரடி ஒளிபரப்பினை www.vavuniyanet.com இன் ஊடாக பார்க்க முடியும்.

 

இது தொடர்பாக ஆலய பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்ட பிரசுரம்.

notice

 

 

வவுனியா பிரதேச விளையாட்டு விழா 2013

Sports2

வவுனியா பிரதேச செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 2013ம் ஆண்டுக்கான வவுனியா பிரதேச விளையாட்டுப் போட்டிகள் நேற்றைய தினம் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.

வருடம் தோறும் நடைபெற்று வரும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் இவ்வருடத்திற்கான சம்பியன்களாக வவுனியா யங்ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் தெரிவானது. இரண்டாவது இடத்தினை வவுனியா நியூலைன்ஸ் விளையாட்டுக் கழகம் கைப்பற்றியது.

11 விளையாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில், சிறந்த மெய்வல்லுனர் கள வீரராக என். சர்மிளனும், சிறந்த மெய்வல்லுனர் கள வீராங்கனையாக வை. மயூரியும் தெரிவு செய்யப்பட்டனர்.

சிறந்த மெய்வல்லுனர் தடகள வீரராக B. பிரசாந்தும், , சிறந்த மெய்வல்லுனர் தடகள வீராங்கனையாக கே. லேகாஷினியும் தெரிவு செய்யப்பட்டனர்.

அதிசிறந்த திறமையை வெளிப்படுத்திய மெய்வல்லுனர் வீராங்கனையாக கே. லோகஷினி தெரிவு செய்யப்பட்டார்.

 

வவுனியா சன் டிவி மீள் ஒளிபரப்பு நிலையம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

SUN-TV

வவுனியாவிலிருந்து இயங்கிய சன் டி.வி மீள் ஒளிபரப்பு நிலையம் வவுனியா நீதிமன்றத்தினால் தடை செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்தவாரம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் யூலை 23ம், 24ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப் பட்டது.

 

மாத்தளை புதைகுழி பற்றி பத்திரிகை அறிவித்தல்கள்- நீதிமன்றம்

Marked dead bodies are seen at a building site in Matale

மாத்தளை அரச மருத்துவமனை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் காணாமல்போனவர்களின் உறவினர்களைத் தெளிவுபடுத்தும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவித்தல்களை பத்திரிகைகளில் பிரசுரிக்குமாறு மாத்தளை மாவட்ட நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனது வேண்டுகோளின் படி மாத்தளை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக காணாமல்போனோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

1988-89 ஆண்டு காலப்பகுதியில் காணாமல்போயுள்ள 24 நபர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தாம் நீதிமன்றத்தில் மனுக்களை சமர்ப்பித்ததாக அவர் தெரிவித்தார்.

இந்தக் காலப்பகுதியில் மாத்தளைப் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளதாகவும், ஆனால் சட்டவிதிகளின் பிரகாரம் காவல்துறையினர் இந்தப் புதைகுழி தொடர்பாக காணாமல்போனோரின் உறவினர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகை அறிவித்தல்களை இதுவரை வெளியிடவில்லை என்பதையும் தாம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதாகவும் சட்டத்தரணி கூறினார்.

இந்த அறிவித்தல்களை மூன்று மொழிகளிலும் பத்திரிகைகளில் வெளியிடுமாறு மாத்தளை நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை எதிர்வரும் 28-ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையும் தாய்லாந்தும் அரசியல் ரீதியில் வலுப்பெற்று செயற்பட வேண்டும்!

Parliament-Thai-1

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் என்ற அடிப்படையில் இலங்கையும் தாய்லாந்தும் அரசியல் ரீதியில் வலுப்பெற்று செயற்பட வேண்டும் என தாய்லாந்து பிரதமர் யின்லக் சின்வாத்ரா தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (31) இலங்கை வந்த தாய்லாந்து பிரதமர்- இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோNது இவ்வாறு கூறினார்.

தமது உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையும் தாய்லாந்தும் ஜனநாயக அரசாட்சி நடத்தும் இரண்டு நாடுகள் என்றபோதும் இரு நாட்டு ஜனநாயக ஆட்சிக்கும் சில சமயங்களில் அழுத்தங்கள் காணப்பட்டன .

இலங்கையும் தாய்லாந்தும் புத்த தர்மத்தை கடைப்பிடிக்கும் நாடுகள் என்ற காரணத்தினால் புத்த தர்மத்தை வலுவடையச் செய்து அணுகூலமான வாழ்க்கையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக மொத்த சனத் தொகையில் 60 வீத மக்கள் ஆசிய வலயத்தில் வாழ்கின்றனர். இந்த மக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக போக்குவரத்து கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய வேண்டும் என தாய்லாந்து பிரதமர் கூறினார்

சாதனையால் வந்த வேதனை!

உலகின் நெருக்கடியான நகரங்களுக்குள் ஒன்றான ஜெனிவா நகருக்குள் 200 km/h வேகத்தில் மோட்டோர் சைக்கில் ஓடி சாகசம் புரிந்த ஒருவருக்கு 18 மாத மூடிய சிறைவாசம் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் 30 மே 2007 இல் நடைபெற்றுள்ளது.

இவரின் இந்த விபரீத சாகசத்தை கீழேயுள்ள கானொளியில் பாருங்கள்!

 

இன்று நாட்டின் பல பகுதிகளில் காற்றுடன் மழை!

rain_copy_copy

 

 

 

 

 

 

நாட்டில் நிலவும் தென்மேற்குப் பருவக் காற்று பலமடைந் திருப்பதால் நாட்டின் பல பாகங்களில் மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காலநிலை நிலவும். இக்காலநிலை தற்பொழுது பலமடைந்திருப்பதால் மேற்கு- சப்ரகமுவ- மத்திய மற்றும் தென்மாகாணம் ஆகிய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யும் என வளி மண்டலவியல் திணைக்களத்தின் கடமைநேர அதிகாரி தெரிவித்தார்.

புத்தளம்- குருநாகல் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்வதுடன்- மத்திய மாகாணத்தின் தென்சாரல் பகுதிகளில் மழையுடன் கடுமையான காற்று வீசும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்றுக்காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியா லத்தில் லக்ஷபான பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சியாக 82.5 மில்லி மீற்றர் பதிவாகியிருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றுக் காலை கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக பெரும்பாலான வீதிகள் வெள் ளத்தில் மூழ்கியதால் காலை வேளையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்த வாகன நெரிசல் காரணமாக காலையில் வேலைக்குச் செல்பவர்கள் கடும் சிரமங்களுக்கு முகங் கொடுத்ததுடன்- வாகன நெரிசல்களில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி ஏற் பட்டிருந்தது.

இதேவேளை- குருநாகல் கிரியுல்ல இங்கார டவுல்ல மத்திய கல்லூரியில் மின்னல் தாக்கி 14 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.