கடந்த பெப்ரவரியில் ஒஸ்கார்பிஸ்ட்டோரியஸ், அவரது காதலி ரீவா ஸ்டீன்காம்பை சுட்டுக்கொன்றார். குளியலறையில் இரத்த வெள்ளம் தேங்கியிருப்பதையும் கதவின் பிடிக்கு அருகே துப்பாக்கி ரவைகள் பாய்ந்த இரண்டு ஓட்டைகள் காணப்படுவதையும் அந்தப் படங்களில் காணமுடிகிறது.
அதேபோல படுக்கையறை, இரத்தக்கறை படிந்த படிக்கட்டுகளைக் காட்டும் படங்களும் காணப்படுகின்றன. தவறுதலாக சுட்டுவிட்ட நிலையில், இறந்துகொண்டிருந்த தனது காதலியை அவர் தூக்கிவந்ததை அந்தப் படங்கள் காட்டுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஸ்கை நியூஸ் செய்திச் சேவைக்கு அந்தப் படங்கள் எவ்வாறு கசிந்தன என்பது தெரியாது என்று காவல்துறை கூறுகிறது.
அடுத்த இரண்டு வாரங்களில் பிஸ்ட்டோரியஸ் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். ஆனால், அவரது வழக்கின் முழுமையான விசாரணைகளுக்கு நீண்டகாலம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2012-2013 நிதியாண்டில் மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வீழ்ச்சி இதுவென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர
கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாகவே இருந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் இது 4.8 வீதமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாகவே தக்கவைத்து வந்திருக்கிறது.
ஆனால் கடந்த பல மாதங்களாகவே பொருளாதாரத்தில் இந்த இறங்குமுகம் தென்படுகிறது. தற்காலிகமானது என்கிறார் பிரதமர்
கட்டுமான, சேவைத் தொழிற்துறைகளில் ஏற்பட்ட மந்தகதியே இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தின் கடுமையான வீழ்ச்சிக்கும் காரணம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புள்ளிவிபரத்துறை அமைச்சின் தகவல்களின்படி, இந்திய தயாரிப்புத் துறையின் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.6 ஐ தாண்டவில்லை. அத்தோடு விவசாய- பண்ணை உற்பத்திகள் 1.4 வீதத்தாலேயே வளர்ந்துள்ளன.
எனினும் இந்த குறைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா கடந்த ஆண்டுக்கான அதன் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 5 வீதமாக குறைத்துக் கொண்டுள்ளதாக கடந்த பெப்ரவரியில் அறிவித்திருந்தது.
இந்திய பொருளாதாரத்தின் இந்த இறங்குமுகம் ‘தற்காலிகமானது தான், விரைவில் 8 வீதமாக உயரும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த மாதம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆனால், பணவீக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலையில் இந்திய வர்த்தக சமூகம் பலத்த கவலைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்கள வீட்டை விட்டு வெளியேறினால் அவர்களை மானப்பங்கப்படுத்துமாறு சவுதி அரேபிய எழுத்தாளர் ஒருவர் ஆண்களை ஊக்குவித்து வருகிறார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல்லா முகமது அல் தாவுத். பல நூல்களை எழுதியுள்ளார். அவருக்கு ட்விட்டரில் 97,000 ரசிகர்கள் உள்ளனர். அவர் ட்விட்டரில், சவுதியில் உள்ள பலசரக்கு கடைகளில் பணியாற்றும் பெண்களை மானப்பங்கப்படுத்த ஆண்களை தூண்டிவிட்டு வருகிறார்.
அவ்வாறு மானப்பங்கப்படுத்தினால் பெண்கள் வீட்டோடு இருப்பார்களாம். அவர்களின் கற்பும் பாதுகாப்பாக இருக்குமாம். எழுத்தாளர் தான் இப்படி ஆண்களை தூண்டிவிடுகிறார் என்றால் நாட்டில் மேற்கத்திய கலாச்சாரத்தை புகுத்தும் அரசுக்கு எதிரான சிறந்த போராட்டம் இது என்று இதை சிலர் பாராட்ட வேறு செய்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டில் இருந்து தான் பெண்கள் பொதுத் துறை நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. காலித் இப்ராஹிம் அல் சகாபி என்ற மத குரு எழுத்தாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தொழிலாளர் நல அமைச்சர் ஆண்களை விட்டுவிட்டு பெண்களுக்கு வேலைத் தேடிக் கொடுப்பதில் அக்கறையாக இருக்கிறார் என்று காலித் விமர்சித்துள்ளார்.
கனடாவின் வடக்குப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அல்பர்ட்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 400 ஆண்டுகளுக்கு முன்பாக அழிந்துவிட்டதாக கருதிய தாவரம் ஒன்று துளிர் விட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். வடதுருவத்தில் அமையப் பெற்றிருக்கும் கனடாவின் வட பகுதியில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் அப்பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பனிமலைகள் வெப்பமயமாதலின் விளைவாக உருகியது தெரிய வந்தது. பனி மலைகள் உருகிய காரணத்தால், அப்பட்டமாக தெரிந்த தரைப்பகுதியில் பாசி போன்ற தாவரங்கள் வளர்ந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டனர். ஆராய்ச்சியில் அவை 400 ஆண்டுகளுக்கு முந்தைய தாவரங்கள் என்பதும், பனியால் உறைந்து போய் விட்டதும் கண்டறியப்பட்டது.
அவை முற்றிலும் அழிந்து போயிருக்கும் என எண்ணிய விஞ்ஞானிகள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் விட்டனர். காரணம் பனி விலகியதால் தற்போது புத்துயிர் பெற்றிருக்கின்றன அத்தாவரங்கள். இதனைக் குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
2013ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி கனடா போட்டியில் டெனிஸ் காரிடோ என்பவர் வெற்றி பெற்றதாக கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தவறுதலாக டெனிஸ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டதாக மறுநாள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்டாரியோ பிரான்ட்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் டெனிஸ் காரிடோ(26). அவர் கடந்த 2008ம் ஆண்டில் பிரபஞ்ச அழகி கனடா அழகிப் பட்டமும், 2010ம் ஆண்டில் உலக அழகி-கனடா பட்டமும் வென்றார்.
இதையடுத்து பிரபஞ்ச அழகி கனடா அழகிப் பட்டம் வெல்வதை தனது லட்சியமாக வைத்திருந்தார். அதன்படி அழகிப் போட்டியில் கலந்து கொண்டார்.இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றார். கடந்த சனிக்கிழமை இறுதிச் சுற்று நடந்தது.
இறுதிச் சுற்றின் முடிவில் டெனிஸ் காரிடோ ” பிரபஞ்ச அழகி” கனடாவாகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு கிரீடமும் அணிவிக்கப்பட்டது. தனது கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டார் டெனிஸ்.
மறுநாள் பிரபஞ்ச அழகி கனடா போட்டியை நடத்திய இயக்குனர் டெனிஸிடம் மதிப்பெண்களை கூட்டி கணனியில் ஏற்றுகையில் தவறு ஏற்பட்டுவிட்டது என்றும், அவர் 4வது இடத்தை தான் பிடித்துள்ளார் என்றும் தெரிவித்தார். இதையடுத்து அன்றே பட்டத்தை திரும்பப் பெற்றனர்.
டெனிஸிடம் இருந்து திரும்பப் பெறப்பட்ட பட்டம் உண்மையான வெற்றியாளர் ரீஸா சான்டோஸுக்கு(26) வழங்கப்பட்டது.
பழம்பெரும் நடிகை மனோரமாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனைப் படைத்தவர் மனோரமா.
திரையுலகினரால் ஆச்சி என்று அழைக்கப்படுபவர். இப்போதும் கூட நடித்து வருகிறார். சமீப காலமாக அடிக்கடி உடல் நலக் குறைவுக்குள்ளாகி சிகிச்சை் பெற்று வருகிறார். முன்பு மாடிப்படியில் தவறி விழுந்து அவருக்கு பலத்த அடிபட்டது. பின்னர் முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இதிலிருந்து ஓரளவு தேறிவந்த அவருக்கு ரஜனி கமல் உள்ளிட்டோர் போனிலும் நேரிலும் ஆறுதல் கூறினர். ஓரிரு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த அவர், சமீபத்தில் தன் பேரன் திருமண அழைப்பிதழை மூத்த அரசியல் தலைவர் கருணாநிதியைச் சந்தித்து வழங்கினார்.
இந்த நிலையில் அவருக்கு இன்று மீண்டும் உடல்நிலை மோசமானது. அவரை தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மனோரமாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தோசை என்றாலே நமக்கெல்லாம் ஒரே குஷிதான்.. அதிலும் கார தோசை என்றால்வேண்டாம் கேட்கவே வேணாம்.. சரி, காரதோசை செய்வது எப்படியென பார்க்கலாமா….
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1/2 கப்
துவரம்பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 முடி
மிளகாய் – 4
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு – 10
உப்பு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறு துண்டு
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.
சென்னை: ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டதை முதல்வர் ஜெயலலிதா துவக்க விழாவில் கூறவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க இருந்ததை வரவேற்றிருந்தேன். ஆனால் தொடக்க விழாவில், வழக்கம்போல் திமுக ஆட்சி மீது முதல்வர் குறை கூறியுள்ளார். 1994-ஆம் (அதிமுக ஆட்சி) ஆண்டு ரூ.350 கோடி மதிப்பில் ஒகேனக்கல் திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டதாகவும், போதிய நிதி உதவி கிடைக்காததன் காரணமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தாமதம் ஏன்? அதிமுக ஆட்சியில் போதிய நிதி திரட்ட இயலவில்லை என்றால் எதற்காக திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும்? இரண்டாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, இந்தத் திட்டத்துக்காக நிதி உதவி கேட்டு மத்திய அரசுக்கு 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-இல் கருத்துரு அனுப்பப்பட்டது என்று முதல்வர் கூறியுள்ளார்.
இரண்டாம் முறையாக அதிமுக ஆட்சி பொறுப்பேற்றது 2001-ஆம் ஆண்டு. ஆனால் 2005-ம் ஆண்டு தான் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. கருத்துரு அனுப்பாமல் 4 ஆண்டுகள் அதிமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு 2008-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது என்று கூறிய முதல்வர், அது திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதை மட்டும் விழாவில் கூறவில்லை. நிறுத்தி வைத்தது ஏன்? இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, கர்நாடகத்தில் பாஜக போராட்டம் நடத்தியது என்று குறிப்பிட்ட முதல்வர், அப்போது நான் (கருணாநிதி) கர்நாடகத்தில் தேர்தல் முடியட்டும், பின்னர் நாம் கலந்து பேசி தேவைப்பட்டால் களம் காண்போம் என்று கூறி திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேரவையில் கேள்வி கேட்க முயன்ற ஜெயலலிதாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஒகேனக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, கர்நாடகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இல்லை. ஆளுநர் ஆட்சி தான் நடைபெற்றது. பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில் பாஜக சார்பில் கர்நாடகத்தில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழர் கடைகள் நாசமாக்கப்பட்டன. பஸ்கள் கொளுத்தப்பட்டன. தமிழ்த் திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளின் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த நேரத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்பு கோரி, சட்டப்பேரவையில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகும், தமிழர்கள் மீதான தாக்குதல் நிற்கவில்லை. கர்நாடக பாஜகவின் செயல்களைக் கண்டித்து சேப்பாக்கத்தில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத் தலைவராக இருந்த கேர்.ஆர்.ஜி. தலைமையில் நடந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் பங்கேற்றனர்.
இந்தப் பிரச்னை காரணமாக இரண்டு மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் உருவானது. இந்த நேரத்தில் கர்நாடகத்தில் ஓர் ஆட்சி அமைய சில நாள்கள் மட்டுமே இருந்த நிலையில், அதுவரை தாற்காலிகமாக அமைதி காப்போம் என்றும், அதற்குப் பிறகும் நிலைமை நீடிக்குமானால் பொறுமையாக இருக்கத் தேவையில்லை என்றும் முதல்வராக இருந்த நான் (கருணாநிதி) அறிக்கை விடுத்தேன் என்பது உண்மைதான். இவ்வாறு நான் அறிக்கை வெளியிடாமல் அமைதியாக இருந்திருந்தால், கர்நாடகத்தில் தமிழர்களுக்குப் பெரும் தீங்கு ஏற்பட்டிருக்கும். தமிழர்களைக் காப்பதற்காக முன்னெச்சரிக்கையாக எடுத்த நடவடிக்கையைத்தான் முதல்வர் ஜெயலலிதா பெரிய புகாராக திட்டத்தையே கைவிட்டதுபோல கூறியுள்ளார். அப்போது நான் எடுத்த முடிவை பத்திரிகைகள் பாராட்டின. மேலும் பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகே உரிமை மீறல், ஒத்திவைப்பு போன்ற பிரச்னைகளை எழுப்ப முடியும். ஆனால் அதிமுகவினர் பேரவை தொடங்கிய உடனேயே பிரச்னையை எழுப்பினர். பேரவை விதி தொடர்பாக தெளிவாக எடுத்துக் கூறியும், அவர்கள் கேட்காமல் வெளிநடப்பு செய்து, பேரவையில் பேசுவதற்கு அனுமதி தரவில்லை என்று பேரவைக்கு வெளியில் அதிமுகவினர் கூறினர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தேவைப்பட்டதை விட அதிக அளவு காவிரி நீரைத் திறந்து விட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் சம்பா மற்றும் குருவை சாகுபடிக்கு காவிரியில் இருந்து போதுமான நீரைத் திறந்துவிடாத கர்நாடக அரசு ரூ.2,500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அதிமுக அரசு தெரிவித்தது.
இந்நிலையில் இது குறித்து கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2012-2013ம் ஆண்டில் கர்நாடகாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரிப் பகுதியில் உள்ள பயிர்களை வாடவிட்டுவிட்டு தமிழகத்தின் சம்பா மற்றும் குருவை சாகுபடிக்கு தேவைக்கு அதிகமாகவே காவிரி நீர் திறந்துவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
தமிழ்நாடு நஷ்ட ஈடு கேட்டுள்ளது குறித்து எங்களுக்கு நோட்டீஸ் வந்தால் எங்கள் சட்டக்குழுவை வைத்து எங்கள் பதிலை முறையாக தெரிவிப்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படாததால் பயிர்கள் கருகின.
இதனால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு ரூ.2, 479 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
IPL சூதாட்டம் விவகாரத்தில் BCCI எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் பதவி விலக நெருக்கடி அதிகரித்து வருகிறது. அவர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி BCCI செயலர் ஜக்தாலே, பொருளாளர் அஜய் ஷிர்கே ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
IPL சூதாட்ட விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்ற நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
BCCI பொருளாளர் அஜய் ஷிர்கே மிக மோசமான முறையில் சீனிவாசனை விமர்சித்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினார். இந்த நிலையில் BCCI. பொருளாளர் அஜய் ஷிர்கேயும், செயலாளர் சஞ்சய் ஜக்தாலேவும் தங்கள் பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர். கிரிக்கெட்டில் சமீபத்திய சம்பவங்கள் தன்னை மிகவும் காயப்படுத்தியதால் பதவியை ராஜினாமா செய்ததாக ஜக்தாலே கூறியுள்ளார்.
மேலும், சூதாட்டம் தொடர்பாக குருநாத் மெய்யப்பன், இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட 3 நபர் குழுவில் பணியாற்ற மாட்டேன் என்றும் ஜக்தாலே கூறியுள்ளார். இதே கருத்தை அஜய் ஷிர்கேவும் தெரிவித்திருக்கிறார்.
நமது சமையலில் முக்கிய இடம்பெறும் தேங்காய், நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தலை முதல் பாதம் வரை மென்மை, பளபளப்பை தாராளமாய் அள்ளித்தரும் தேங்காய், நம்மை தன்னம்பிக்கையுடன் நடைபோட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
* வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும்.
* வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முகம் பிரகாசமாகும்.
தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? இதைப் படியுங்கள் முதலில்!
தண்ணீர் மருந்து
ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை!
வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.
எலுமிச்சை உடம்புக்கு நல்லது!
குளிப்பதற்கு முன் – ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக எலுமிச்சை கலந்த தண்ணீரில் குளியுங்கள்.
இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
தேமலை விரட்டுங்க!
நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் அரித்து எடுத்தது , ஒருபாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பசை மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!
மெருகுக்கு பப்பாளி!
நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல சிற்பி டேவிட் செர்னி. சர்ச்சை மன்னனான இவர் பழைய டபுள் டெக்கர் பஸ்சுக்கு எந்திர கைகளை பொருத்தி வியக்க வைத்துள்ளார்.
1957ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த டபுள் டெக்கர் பஸ்சில் ஹைட்ராலிக் முறையில் இயங்கும் வகையில் இரண்டு கைகளை பொருத்தப்பட்டுள்ளது. அந்த கைகளை வைத்து அந்த பஸ் மேலும், கீழும் நகர்வது எழுந்து நடந்து வருவது போன்று இருப்பதால் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
லண்டன், இஸ்லிங்டன் நகரில் ஒலிம்பிக் போட்டிகளின்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த பஸ்சை கீழே காணலாம்..