ஜெய்பூர் மகாராணியின் 70வது பிறந்த நாள் விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்பு!!

Amitabh-Bachchan

ஜெய்பூர் மகாராணி பத்மினி தேவியின் 70வது பிறந்த நாள் விழாவில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் பங்கேற்றார்.
ஜெய்பூரின் முன்னாள் மகாராஜா ராஜேந்திர பிரகாஷ் – மகாராணி இந்திரா தேவி தம்பதியரின் மகள் மகாராணி பத்மினி தேவி.

ஜெய்பூர் அரச வம்சத்தை சேர்ந்த பிரிகேடியர் பவானி சிங் என்பவரை மகாராணி பத்மினி தேவி 1966ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பவானி சிங் கடந்த 2011ம் ஆண்டு மரணமடைந்தார்.

இந்நிலையில் ஜெய்பூர் மகாராணி பத்மினி தேவியின் 70வது பிறந்த நாள் விழா நேற்று ஜெய்பூர் அரண்மனையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தனிவிமானம் மூலம் ஜெய்பூர் வந்த நடிகர் அமிதாப் பச்சன் மகாராணியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அமிதாப் பச்சன் ஜெய்பூருக்கு வரும் தகவல் கடைசிவரை ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் பாலியல் குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை!!

stopviolenceagainstwomen

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இந்த குற்றச் செயல்களுக்கு பொதுமக்கள் முன் பிரம்படி தண்டனை வழங்குவது தொடர்பான யோசனையை முன்வைக்க எண்ணியுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை காண முடிவதாக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.

முன்னர் பல சந்தர்ப்பங்களில் இந்த போக்கை தடுத்து நிறுத்த கடுமையான சட்டங்களை அமுல்படுத்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. பிரச்சினைகள் காரணமாக அவற்றை கொண்டு வர முடியாமல் போனது.

பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்குவது பற்றிய யோசனைகள் முன்மொழியப்பட்டன.

மரண தண்டனையை அமுல்படுத்துவது உணர்வு பூர்வமான பிரச்சினை என்பதால் இந்த குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை வழங்கும் யோசனை முன்மொழியப்பட உள்ளது.

இந்த யோசனை நாடாளுமன்றத்திற்கும் நீதியமைச்சுக்கும் வழங்கப்படும். அதேவேளை பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பில் ஊடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் யோசனை ஒன்றையும் முன்வைக்க உள்ளேன்.

ஊடகங்கள் இந்த சம்பவங்கள் தொடர்பில் வரம்பை மீறி செய்திகளை வெளியிடுகின்றன. அவற்றை தடுக்கும் நோக்கங்கள் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்படும் என்றார்.

பாகிஸ்தானில் சகோதரிகள் இருவர் கொடுரமாக கற்பழித்து கொலை!!

murder

பாகிஸ்தானில் சகோதரிகள் இருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவில் குஜ்ரான்வாலா என்ற ஊர் உள்ளது.

இங்கு வசித்து வந்த 16 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் இருவர் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 26ம் திகதி கல்லூரிக்கு சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து உறவினர்கள் தேடிய போது 2 சகோதரிகளின் உடலும் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டு புறநகரிலுள்ள கால்வாயில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் இருவரும் கற்பழிக்கப்பட்டு பிறகு சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் 5 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

டோனியை பார்த்து மிரண்டு ஓடிய விளம்பர நிறுவனம்!!

dhoni

பெரிய தொகை கேட்டதால் விளம்பர நிறுவனம் ஒன்று டோனியை விட்டுவிட்டு வேறொரு நபரை ஒப்பந்தம் செய்துள்ளது.

பிரபல சூட் நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிக்க பிராண்ட் அம்பாசிடராக இருக்குமாறு கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனியை அணுகியுள்ளது.

அவரோ 10 கோடி சம்பளம் கேட்கவே பெரிய தொகை என கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டதாம். இதையடுத்து பொலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அணுகியபோது அவரோ டோனி கேட்டதில் மூன்றில் ஒரு பங்கு தொகையையே அதாவது 3 கோடி சம்பளமாக கேட்டுள்ளார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த நிறுவனம் சைஃப் அலி கானை தங்கள் பிராண்ட் அம்பாசிடராக நியமித்து ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது.

விளம்பர படங்களின் மூலம் டோனி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் போனஸ் ஆசனங்கள் விபரம் வெளியானது!!

TNA-logo

இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலில் கிடைத்த இரண்டு போனஸ் இடங்களில் ஒன்றை சுழற்சி முறையில் முதலாவதாக ஒரு பெண்மணிக்கு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

வடமாகாண சபைக்குரிய போனஸ் இடங்களில் ஒன்றை பல்வேறுபட்ட சமூக நலன்களைக் கருத்திற்கொண்டு வருடாந்த சுழற்சி முறையில் அளிப்பது என்று கூட்டமைப்பு இன்று அதிகாரபூர்வமாக முடிவெடுத்துள்ளது.

அதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்ட மேரி கமலா குணசீலன் என்பவருக்கு முதலாம் ஆண்டு அந்த இடத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இரண்டு போனஸ் இடங்களில் ஒன்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தபடி மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட அஸ்மின் அயூப் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசிய கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மாகாண அமைச்சர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது தொடர்பான முடிவுகள் பின்னர் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாகாணசபையின் முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் எங்கு வைத்துப் பதவிப் பிரமாணம் செய்வது என்பது குறித்தும் பின்னர் கூடித் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொள்ளவில்லை. அதேவேளை மாகாணசபை அமைச்சுக்கள் குறித்து கூட்டமைப்பு எதிர்வரும் 2ஆம் திகதி கொழும்பில் கூடி பேசவுள்ளது.

மாகாணாசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஆனந்த சங்கரிக்கு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படாத அதேவேளை சுழற்சி முறையிலும் அவரை உள்வாங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கணவன் குடும்பதாரின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட மனைவி!!

revenge.png

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், கணவரின் குடும்பத்தாரின் படங்களை ஆபாசமாக வெளியிட்ட மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பொறியாளரின் மனைவி அவரது கணவரின் குடும்பத்தை அவமானப்படுத்தும் நோக்கில் அவர்களது புகைப்படங்களை பேஸ்புக்கில் ஆபாசமாக வெளியிட்டுள்ளார்.

இதற்கு அப்பெண்ணின் தந்தையும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.இந்நிலையில் இதனால் பாதிப்படைந்த அந்த பொறியாளர் அவரது மனைவி மீதும் மாமனார் மீதும் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிசில் மன்னிப்பு கேட்ட அப்பெண்ணும் அவரது தந்தையும் இதுபோல் இனி நடந்துக்கொள்ளமாட்டோமென தெரிவித்துள்ளனர்.

ஆனால் சில நாட்களில் மீண்டும் இவர்கள் பொறியாளரின் குடும்பத்திற்கு தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பொறியாளர் காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் அவரது மனைவியையும், மாமனாரையும் கைது செய்துள்ளதாக தெரிகிறது.

இறந்த நேரத்தை துல்லியமாக காட்டும் கடிகாரம்!!

death

விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

ஆனால் தற்போதுள்ள முறையில் இறந்த நேரம் உத்தேசமாகவே ‌கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இறந்த நேரத்தை துல்லியமாக கணக்கிட உதவும் வகையில் ஒரு கடிகாரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில் இறந்தவரின் உடலில் ஏற்படும் பக்டீரியாக்களின் மாற்றத்தை கொண்டு அவர் இறந்த நேரத்தை துல்லியமாக அறிய முடியும்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கடிகாரத்தில் அதி நவீன தொழில் நுட்பம் மூலம் ஜீன்களை பகுத்தாய்வு செய்ய முடியும் என்றும் அதன் மூலம் 48 மணி நேரத்தில் இருந்து நான்கு நாட்கள் வரையிலான கால கட்டத்திற்குள் இறந்த நேரத்தை கண்டறிய முடியும் எனவும் கூறினார்.

காதலனை கழற்றிவிட்டு தூது போனவனை மணம் முடித்த ஆசிரியை!!

marriage

தமிழ்நாட்டில் காதலனை கைகழுவி விட்டு காதலுக்கு தூது சென்ற விவசாயியை ஆசிரியை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா செட்டிப்புலத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் சுரேஷ்(28). விவசாயி. அதே ஊரைச்சேர்ந்த வீரப்பன் மகள் ஜெயலட்சுமி(25).

இருவரும் 2004ம் ஆண்டு காதலித்து வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அருகில் உள்ள பன்னாள் கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி(25). அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.

இவர் தஞ்சை கல்லூரியில் படிக்கும் போது ஒரு வாலிபரை காதலித்தார். இருவரையும் சேர்த்து வைக்கும்படி தனது உறவுக்காரரான சுரேஷிடம் கூறியுள்ளார். அவருக்கு உதவ சென்ற சுரேசுக்கும் சித்தி முறையுள்ள ரேவதிக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 18ம் திகதி தனது மனைவி ஜெயலட்சுமியிடம் ரேவதியை காதலனுடன் சேர்த்து வைக்க செல்வதாக கூறி சுரேஷ் சென்றுள்ளார்.

சில நாட்களுக்கு பிறகு சுரேஷ் கோவையில் இருந்து மனைவி ஜெயலட்சுமிக்கு போன் செய்து, நான் ரேவதியை திருமணம் செய்துகொண்டதாக கூறி மொபைலை நிறுத்தி வைத்துள்ளார்.

இதனால் ஜெயலட்சுமியும் மகன்களும் அதிர்ச்சியடைந்தனர். வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பொலிசார் வழக்கு பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.

பிரான்ஸ் பெஷன் ஷோவில் கருப்பின பெண்கள் நிராகரிப்பு!!

fashion show

பாரிஸ் பெஷன் ஷோக்களில் கருப்பின பெண்கள் நிராகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெறும் பெஷன் ஷோவில் பல நாட்டு பெண்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் கலந்து கொள்ளும் பெண்களில் கறுப்பு இன பெண்களை அழகியாக தெரிவு செய்வதில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டிற்கு அந்நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் கூறுகையில் நாங்கள் நிகழ்ச்சியில் வெள்ளை நிற பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார்.

மற்றொரு வடிவமைப்பாளரான டாமிரா டொமா தான் கலரின் அடிப்படையில் தீர்மானிப்பது கிடையாது என்றும் சரியான நபரை மட்டுமே தெரிவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இனரீதியாக பார்ப்பதில்லை என்றும் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படுகிறது என்றும் பெஷன் ஷோ பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சச்சின் ஓய்வு பெற்றதற்கு சீனிவாசன் தான் காரணம் : பரபரப்பு குற்றச்சாட்டு!!

sachin

சீனிவாசனின் வலியுறுத்தலை அடுத்து தான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதாக பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்யா வர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சூதாட்டத்தில் குருநாத் மெய்யப்பன் சிக்கியது தொடர்பாக பீகார் கிரிக்கெட் சங்கத்தின் ஆதித்யா வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் சீனிவாசன் தேர்தலில் போட்டியிடலாம் ஆனால் வெற்றி பெற்றால் தாங்கள் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுப்பேற்கக் கூடாது என்றது.

இதையடுத்து ஆதித்யா வர்மா கூறுகையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. இது என் சொந்த சண்டை அல்ல கடந்த 13 ஆண்டுகளாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பீகாருக்கான சண்டை.

சீனிவாசனின் வலியுறுத்தலால் தான் சிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டியதாகிவிட்டது. தெரிவாளர்கள் சச்சினிடம் பேசினார்கள் அதன்பின்பே ஓய்வை அறிவித்தார்.

சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பெயரை கெடுத்துவிட்டதாகவும் தான் நீதிக்காக போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரே செடியில் தக்காளி, உருளைக் கிழங்கு பிரிட்டன் நிறுவனம் சாதனை!!

veg

ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று சாதனை படைத்துள்ளது.

பிரிட்டனை சேர்ந்த தொம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

அதன்படி உருளைக் கிழங்கையும் தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு கூறுகையில் இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம்.

மரபியல் மாற்றங்களை செய்து இதற்கு முன் இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல் இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை ஒரே செடியில் முதல் முறையாக விளைவித்துள்ளோம்.

இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன. இதன் பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் தொடங்கின வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது.

சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது. இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் கைது..!

arrest1அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 6 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு அண்ணாசதுக்கம் பின்புறம் நின்று கொண்டிருந்தவர்களை பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது முன்னுக்குப் பின் முரண்பாடாக பேசியதால் அவர்களை கைது செய்தனர் போலீசார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்,

மட்டக்களப்பில் வீதியில் வீசப்பட்ட நிலையில் கைக்குழந்தையின் தலை, மார்புப் பகுதி மீட்பு (படங்கள்)

மட்டக்களப்பு ,வாழைச்சேனை பொலிஸ் பிரிவுற்குட்பட்ட கொண்டையன்கேணி முருகன் கோயில் வீதியிலேயே கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை ஒன்றின் சடலத்தை இன்று வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சடலத்தில் தலையும் மார்புப் பகுதியும் மாத்திரம் உள்ள நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.00 மணியளவில் தனது வீட்டுக்கு முன்பாக கைக்குழந்தை ஒன்றின் சடலத்தை நாய் உட்கொள்வதைக் கண்ட பெண்மணி ஒருவர் அயலவர்களின் உதவியுடன் இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்ற வாழைச்சேனை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இந்த நிலையில் சடலத்தை பார்வையிட்ட வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி.எம்.ஹுஸைன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணித்தார்.

இதனைத் தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தக் கைக்குழந்தையின் தலையும், மார்புப் பகுதியுமே உள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள இந்தச் சடலத்தின் கால்கள் மற்றும் கைகளை விலங்குகள் உட்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

b2b1

வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!!

vavuniya

வவுனியா அல் காமியா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த 18ம் திகதி மாலை 5.00 மணி தொடக்கம் காணமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கார்த்திகேசு நிருபன் (38) என்னும் ஆசிரியரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதாகக் கூறி, புறப்பட்ட இவர் இன்று வரை வீடு வந்து சேரவில்லை என அறியக்கிடைத்துள்ளது.

மற்றைய மாகாணங்கள் போன்று வடக்கிற்கும் நிதி ஒதுக்கப்படுமா : பான் கீ மூன்!!

mahinda

ஏனைய மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதைப் போன்று புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைக்கு உரிய முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வினவியுள்ளார் என்று அரச உயர் மட்ட வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் 68 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ­ உள்ளிட்ட அரச தூதுக்குழுவினருடன் கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே பான் கீ மூன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளதாக அறியமுடிகிறது.

ஐ.நா செயலாளரின் கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, போர் முடிவடைந்த 4 வருட காலப்பகுதிக்குள் வட மாகாண அபிவிருத்திக்காக 300 கோடி அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் அறிய முடிகின்றது.

இதற்கமைய எதிர்காலத்தில் ஏனைய மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதைப் போன்றே வடக்கு மாகாணத்துக்கும் ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் எனத் தெரிய வருகின்றது.

இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் தான் அனைத்து மாகாண சபைகளுக்கும் சம அளவிலான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் ஐ.நா செயலாளர் பான் கீ மூனிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் நிர்வாணமாக செல்வேன் : பிரதியமைச்சர் சவால்!!

deputy_minister

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் நிர்வாணமாக வீதியில் உலவுவதாக மின்வலு பிரதியமைச்சர் பிரேமலால் ஜயசேகர சவால் விடுத்துள்ளார்.

தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான காணியில் ஒரு அங்குலத்தையேனும் அபகரித்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் ரத்தினபுரி நகரில் நிர்வாணமாக செல்வேன்.

தேயிலைத் தோட்டமொன்றின் மூன்று ஏக்கரை அபகரித்துள்ளதாக போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது.
பரம்பரைச் சொத்தைப் பயன்படுத்தியே அரசியல் நடத்துகின்றேன்.

எனக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்வோருக்கு இடி விழ வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். நிக்கவரெட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.