திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபர்..!

BoilingWater

திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய வாலிபரை பொலிசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் நீது ஜெய்சிங்கானி 21 என்ற பெண்ணை வீதி ஓரத்தில் சாப்பாடு கடை நடத்தும் அமீத் தல்ரேஜா என்பவர் திருமணம் செய்ய விரும்பினார்.

தன் விருப்பத்தை அந்தப் பெண்ணிடமும் தெரிவித்தார். முதலில், திருமணத்திற்கு சம்மதித்த அந்தப் பெண் பின், தன் மனதை மாற்றிக் கொண்டார். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த அமீத் தல்ரேஜா, கடந்த சனியன்று இரவு நீது பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்று அவரின் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.

பலத்த காயமடைந்த நீது, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவான, தல்ரேஜாவை பொலிசார் தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் பொலிஸ் மாதிரி நடித்து 300 கைதிகளை விடுவித்த தாலிபான் தீவிரவாதிகள்..!

taliban

பாகிஸ்தானில் பொலிஸ் சீருடையில் சென்று சிறைக் காவலர்களுடன் சண்டையிட்டு மின்மாற்றியை தகர்த்து சிறையில் இருந்த 300 கைதிகளை அதிரடியாக விடுவித்துள்ளனர் தாலிபன் தீவிரவாதிகள்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதி பாகிஸ்தானின் பழங்குடியினர் வாழும் தெற்கு வரிசிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்குள்ள சிறைச்சாலை ஒன்றில் சுமார் 5000 கைதிகள் உள்ளனர்.

அவர்களுள் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள். நேற்று மாலை அச்சிறைக்கு பொலிஸ் சீருடையில் வந்த 150க்கும் மேற்பட்ட தாலிபன் தீவிரவதிகள் உள்ளே வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அவர்களின் அதிரடித் தாக்குதலால் சிறையின் வெளிப்புறத் தடுப்புச் சுவர் சுக்கு நூறானது.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறைக்காவலர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். போதாக்குறைக்கு ராணுவத்தினரையும் உதவிக்கு அழைத்துள்ளனர். ஆனால், இறுதியில் சிறையில் இருந்த 300 கைதிகளை விடுவித்து சென்றுள்ளது தாலிபன் குழு.

இக்கொடூரத்தாக்குதல் சம்பவத்திற்கு டெஹ்ரீக் இ தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்கொலைப்படையினர் 300 சென்றதாகவும், 300 கைதிகள் விடுவிகப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பின் தகவல் தொடர்பு அதிகாரியான ஷாஹிதுல்லா ஷாஹித் தெரிவித்துள்ளார்.

300க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பியுள்ளதை சிறைத்துறையின் ஆலோசகர் மாலிக் காசிம் கட்டாக் உறுதி செய்துள்ளார். மேலும், இத்தாக்குதலில் ஏராளமான கைதிகளும், நான்கு சிறைக்காவலர்களும், இரண்டு போராளிகளும் இறந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் முன்யோசனையாக சிறைக்கு மின்சாரம் அளிக்கும் இரண்டு மின்மாற்றிகளையும் குண்டு வீசித் தாக்கி சிறைச்சாலையை இருட்டாக்கியுள்ளனர். தப்பிச்செல்லும் போது காவலர்கள் தங்களை துரத்தி வர இயலாதவாறு வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

16 வயது சிறுமியை 58 முறை குத்திக் கொன்று பிணத்துடன் உறவு கொண்ட கொடூரன்..!

rape

இங்கிலாந்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒரு 16 வயது சிறுமியை சரமாரியாக குத்திக் கொன்ற 23 வயது இளைஞர் அந்தப் பெண்ணின் பிணத்துடன் உறவு கொண்டு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளார்.

லண்டன், பிளாக்பூல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான சாஷா மார்ஸ்டன். இவர்தான் இந்தக் கொடுமைக்குள்ளாகி பரிதாபமாக உயிரைப் பறி கொடுத்துள்ளார். குற்றவாளியின் பெயர் டேவிட் மின்டோ.

23 வயதான இந்த நபர் பேஸ்புக் மூலம் சாஷாவிடம் நட்பாகியுள்ளார். பின்னர் உனக்கு எனது தோழியின் ஹோட்டலில் நல்ல வேலை பார்த்துத் தருகிறேன் என்று அழைத்தார். அதை நம்பி சாஷாவும் வந்துள்ளார். வந்த சிறுமியை ஹோட்டலுக்குக் கூட்டிப் போனார் டேவிட் அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.

ஆனால் சாஷா அனுமதிக்கவில்லை. இதையடுத்து கத்தியை எடுத்து சாஷாவை குத்த ஆரம்பித்தார். சாதாரணமா இல்லை, தலையில் மட்டும் 58 முறை கொடூரமாக குத்தினார். இதில் சாஷா உயிரிழந்தார். அதன் பின்னர் தனது வெறி அடங்காமல் சாஷாவின் இறந்த உடலுடன் உறவு கொண்டார்.

பின்னர் சாஷாவின் உடலில் தீவைத்தார். அதில் சாஷாவின் உடல் பாதி எரிந்து போனது. அதன் பின்னர் எரிந்த உடலை ஒரு பெரிய துணியில் கட்டி பார்சலாக்கி கிராப்டன் ஹோட்டல் அருகே போட்டு விட்டார்.

அதன் பின்னர் போலீஸார் வந்து விசாரணை நடத்தி டேவிட்டைக் கைது செய்தனர். தற்போது விசாரணை முடிந்து டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது அவர் சிறையில் கிட்டத்தட்ட 35 வருடங்களைக் கழிக்க வேண்டியிருக்கும்.

இளவரசன் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு..!

ilavarasan

தமிழகத்தின் தர்மபுரி இளவரசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணைகுழு முன்பு ஆஜராக திவ்யா மற்றும் இளவரசனின் தந்தை இளங்கோவுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

தர்மபுரி நத்தம் கொலனியை சேர்ந்த இளவரசன் – திவ்யா இருவரும் கடந்த ஆண்டு காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின் தர்மபுரியில் கலவரம் ஏற்பட்டது. இந்தநிலையில், கடந்த 4ம் திகதி இளவரசன் அங்குள்ள ரயில்வே தண்டவாளம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இளவரசனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை இளங்கோ நீதிமன்றத்தில் மனு செய்தார். இதன் பேரில் தர்மபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இளவரசன் உடலை, டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்கள் மறுபிரேத பரிசோதனை செய்தனர்.

இதற்கிடையில் இளவரசன் மரணம் குறித்து விசாரித்து அறிக்கை தர ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலுவை கொண்ட ஒரு நபர் ஆணைகுழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்த ஆணைகுழு விசாரணை நடத்தி வருகிறது. இப்போது திவ்யா, இளவரசனின் தந்தை இளங்கோவுக்கும் நேற்று சம்மன் வழங்கப்பட்டது. சென்னை கல்லூரி சாலையில் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு கமிஷன் முன்பு நாளை ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இளவரசன் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வவுனியா நகரம் ஐக்கியத்தின் குறியீடாக அமைந்துள்ளது : ஜே.வி.பி..!

Somawansa

வவுனியா நகரம் ஐக்கியத்தின் குறியீடாக அமைந்துள்ளது என ஜே.வி.பி கட்சி குறிப்பிட்டுள்ளது. தேசிய ஐக்கியத்தின் குறியீடாக வவுனியா நகரம் காணப்படுகின்றது என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரில் துண்டுப் பிரசுர விநியோக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வவுனியா நகரை ஏனைய பகுதி மக்கள் முன்னுதாரணமாகக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள, முஸ்லிம் தமிழ் மக்கள் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சுதந்திரமாக வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டின் எதிர்காலத்தை சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் தூங்கினால் உடல் குண்டாகுமா??

Sleep-Better

உடல் எடையை குறைக்க பலர் கடுமையாக போராடுகின்றனர். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை என பலவித நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அப்படி இருந்தும் தாங்கள் விரும்பியபடி உடல் எடை கணிசமான அளவு குறையவில்லையே என வருத்தப்படுகின்றனர்.

இதனால் இரத்த அழுத்தம் , சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. இதனைத் தடுப்பதற்காக உலகளவில் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. உடல் குண்டாவதை தடுக்க உணவு கட்டுப்பாட்டு முறையை கையாள வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உடல் எடையை அதிகரிக்காமல் குறைக்க அயர்ந்த தூக்கமே நல்ல மருந்து என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் உடல் குண்டாவதற்கு மரபணு கோளாறே காரணம் என தெரியவந்தது. அவற்றின் நடவடிக்கைகளை செயல் இழக்க செய்ய இரவில் தினமும் 9 மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்க வேண்டும். குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

40 000 ரூபாயில் ஹெலிகப்டர்..இந்திய மெக்கானிக் சாதனை..!

heli

இந்திய மாநிலம் ஒரிசாவை சேர்ந்த அபுமன்யூ சமால் என்னும் 40 வயது மெக்கானிக் தனியாளாக ஒரு ஹெலிகப்டரை உருவாக்கியுள்ளார்.

இரண்டு வருட கடின உழைப்பில் இதனை உருவாக்கியுள்ள இவர் இதற்காக செலவு செய்தது வெறும் 40 000 இந்திய ரூபாய்கள் மட்டுமே.

இருசக்கர வாகனத்திற்கு பயன்படும் எஞ்சினை பயன்படுத்தி இந்த அபூர்வ ஹெலிகப்டரை வடிவமைத்துள்ளார். இதன் எரிபொருள் கொள்ளளவு 5 லீட்டர் ஆகும். இந்த ஹெலிகப்டர் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது.

இவரது இந்த அபூர்வ தயாரிப்பை கேள்விப்பட்ட மக்கள் திரளாக வந்து பார்வையிடுவதுடன் இவரை பாராட்டிச் செல்கின்றனர்.

டோனி உட்பட இந்திய வீரர்கள் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும்: பிசிசிஐ அதிரடி உத்தரவு..!

BCCI

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சொத்து கணக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அணியின் முன்னணி வீரர்களான சுரேஷ் ரெய்னா ஜடேஜா, ஓஜா ஆகியோரை விளம்பரம் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஒப்பந்தம் செய்துள்ள Rhiti Sports நிறுவனத்தில் டோனிக்கு 15% பங்கு இருப்பதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இடைக்கால தலைவர் டால்மியா இந்திய வீரர்கள் தங்களது சொத்து கணக்கை வெளியிட வேண்டும் என்று கூறினார்.

நிறுவனங்களுடான ஒப்பந்தங்கள் குறித்து விரைவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று டால்மியா தெரிவித்தார்.
ஐ.பி.எல் போட்டிகளில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட வீரர்கள் மீது கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு பிரிவு விரைவில் விசாரணையை தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைவாவுக்கு அதிகபட்ச தியேட்டர்கள்.. சின்னப் படங்கள் இன்னும் 2 வாரங்கள் காத்திருக்க வேண்டும்!

thalaiva

விஜயின் தலைவா படத்துக்கு அதிகபட்சமாக தியேட்டர்களை ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதால் சிறிய பட்ஜெட் படங்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை.

விஜய் நடித்துள்ள தலைவா வரும் ஆகஸ்ட் 9ம் திகதி ரம்லான் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்தப் படத்துக்கு நகரங்களில் அதிகபட்ச மல்டிப்ளெக்ஸ் ஸ்க்ரீன்களும், கிராமம் சார்ந்த நகரங்களில் இருப்பதிலேயே நல்ல தியேட்டர்களையும் ஒதுக்கியுள்ளனர்.

அதிகபட்ச அரங்குகளை ஒதுக்கு முதல் வாரத்திலேயே வசூல் பார்க்க இந்த யுத்தி (படம் குறித்து எதிர்மறை பேச்சு நிலவுவதால்). தலைவா அதற்கு அடுத்த வாரமே ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் வருகிறது.

பொதுவாக இந்த நாளில் பண்டிகைக்கு வெளியாவது போல நான்கைந்து படங்கள் வருவது வழக்கம். இந்த முறையும் 6 படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. ஆனால் தலைவாவுக்கே அதிக தியேட்டர்கள், அதுவும் இரண்டு வாரங்களுக்கு தரப்பட்டுள்ளதால், மற்ற படங்களுக்கு போதிய அரங்குகள் இல்லை.

எனவே தேசிங்கு ராஜா மற்றும் ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்கள் மட்டும் இருக்கும் தலைவாவுக்கு ஒதுக்கியது போல மிச்சமிருக்கும் தியேட்டர்களில் வெளியாகின்றன. தங்க மீன்கள், ரகளபுரம் போன்றவை இந்த முறையும் தியேட்டர்களின்றி காத்திருக்கின்றன.

தேவதாசிகளைப் புகழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை.!!

sornamalya

கடவுளின் மனைவியர் என்பதாக தேவதாசிகள் புனிதர்களாகத் திகழ்ந்தனர் என்று கல்லூரி விழாவில் தேவதாசிகளுக்கு ஆதரவாக பேசி நடிகையும் நாட்டிய கலைஞருமான ஸ்வர்ணமால்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியின் நாட்டியத் துறை நடத்திய விழாவொன்றில் இரு நாட்களுக்கு முன்பு பேசிய நடிகை ஸ்வர்ணமால்யா பெண்ணியத்தின் கண்ணியம் தகர்த்த தேவதாசி முறைக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடவுளின் மனைவியர் என்பதாக தேவதாசிகள் புனிதர்களாகத் திகழ்ந்தனர் என்று அந்த விழாவில் பேசியுள்ள நடிகை தேவதாசி முறையை ஒழித்த மூவாலூர் ராமமிருதம் அம்மையார், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஆகியோர் அரசியல் இலாபம் கருதியே இதனை என்று விமர்சித்துள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவராக இருந்த சத்திய மூர்த்தி தேவதாசி முறை ஒழிப்புக்கு எதிராக வாதித்த கருத்துகளையும் நினைவு கூர்ந்த ஸ்வர்ணமால்யா தேவதாசி முறையை மிகவும் மெச்சியபடி கொண்டாடினார்.

அது கடவுளுக்கான அர்ப்பணிப்பு என்றும் தேவதாசிகள் அதை மனமுவந்து செய்தார்கள் என்றும் நாட்டியத்தில் ஈடுபாடுள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே முன்வந்து தேவதாசிகளானார்கள் என்றும் அவர் பேசியுள்ளார்.

முன்னதாக “தேவதாசி முறைமையும் பரதநாட்டியமும்” (Devadasi System and BharathaNattiyam) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு பெண்ணிய எதிர்ப்பாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக “பரதநாட்டியத்தின் பரிணாமங்கள்” (Evolution of Bharatha Nattiyam) என்று மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்த உதவியதும் மேலாதிக்க சாதி மனப்பான்மையின் கொடூர வடிவாகவும் திகழ்ந்த பெருந்தீமை ஒன்றை ஒரு பெண்ணாக இருக்கும் நடிகையே ஆதரித்து வலியுறுத்திப் பேசியிருப்பதற்கு பெண்ணியவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காதலியை கல்லாலேயே அடித்துக் கொன்ற வாலிபர்..!!

dead

இந்திய தமிழகத்தில் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய காதலியை இளைஞன் ஒருவர் கல்லால் தாக்கி கொன்றுள்ளார்.  கடந்த 25ம் திகதி தமிழகத்தின் சூளைமேடு கூவம் ஆற்றில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சடலமாக கிடந்தார்.

சூளைமேடு பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரச பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் பற்றி பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவரை பற்றி எந்தவித தகவலும் தெரியாமல் இருந்தது. இதனால் கொலை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை பொலிசார் திக்கு தெரியாமல் தவித்தனர்.

இந்தநிலையில் பொலிசாரின் தீவிர விசாரணையில் கூவம் ஆற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் பூந்தமல்லி ஏரிக்கரையை சேர்ந்த 20 வயதான நீலாவதி என்பது உறுதி செய்யப்பட்டது.

அவரை கொலை செய்தது யார் எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து நீலாவதியின் கையடக்கத் தொலைபேசியில் பதிவான இலக்கங்களை அடிப்படையாக வைத்து விசாரணை முடுக்கி விடப்பட்டது.

நீலாவதியிடம் கடைசியாக பேசிய 10 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சூளைமேடு வினோபாஜி தெருவில் உள்ள லேத்பட்டறையில் வேலை செய்து வந்த அருண் என்ற 25 வயது நபர் சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் வெளியூரில் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

சொந்த ஊரான விருதாச்சலத்தில் பதுங்கி இருந்த அவரை பொலிசார் நேற்று முன்தினம் இரவு சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நீலாவதியை கொலை செய்து கூவம் ஆற்றில் வீசியதை ஒப்புக் கொண்டார்.

பின்னர் அருணை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். நீலாவதியை கொலை செய்தது ஏன் என்பது பற்றி அருண் அளித்த பரபரப்பு வாக்குமூலம் பற்றி பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

சூளைமேடு சுப்பாராவ் நகரில் உள்ள பாட்டி வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அங்கு வாடகைக்கு குடியிருந்த நீலாவதிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பார்த்த முதல் நாளே நெருக்கம் ஏற்பட்டது. இரண்டு நாட்களில் காதலர்களாக மாறினோம். எனது வேலையை நான் மறந்தேன். தொடர்ந்து இருவரும் விடிய விடிய பேச ஆரம்பித்தோம்.

3வது நாளிலேயே உல்லாசமாக இருக்க ஆரம்பித்தோம். அதன்பின்னர் 4 நாட்கள் தொடர்ந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தோம். ஒருவாரம் இது தொடர்ந்தது.

இந்தநிலையில் திருமணம் செய்து கொள்ளும்படி நீலாவதி என்னை நச்சரிக்க ஆரம்பித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்தேன். ஒரே வாரத்தில் நம்முடன் நெருக்கமாக பழகியவர் வேறு வாலிபருடன் பழக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்று சந்தேகித்தேன்.

எனவே அவரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் நீலாவதி எனது வீட்டிற்கே வர ஆரம்பித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

அவர் இருந்தால் நிம்மதியாக வாழ முடியாது. எனவே தீர்த்துக்கட்டி விடவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன். சம்பவத்தன்று கத்தி ஒன்றை கடையில் வாங்கிக் கொண்டேன். திருமணம் பற்றி பேச வேண்டும். சூளைமேடு கூவம் ஆறு அருகில் வரும்படி அவரிடம் தொலைபேசியில் கூறினேன். அவரும் ஆற்றங்கரைக்கு வந்தார்.

நைசாக அவருடன் பேச்சு கொடுத்தேன். குத்தி கொலை செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால், நீலாவதி சுதாரித்து விடக்கூடாது என்பதற்காக பேசிக் கொண்டு இருந்தபோதே அருகில் கிடந்த கல்லால் அவர் முகத்தில் மின்னல் வேகத்தில் தாக்கினேன்.

நிலை குலைந்த அவரது தலையில் பெரிய கல்லை எடுத்து போட்டு கொன்றேன். பின்னர், கூவத்திலேயே சடலத்தை வீசி விட்டு ஒன்றும் தெரியாதவன் போல் சென்று விட்டேன்.

இறுதியில் பொலிசாரின் வலையில் சிக்கி விட்டேன். இவ்வாறு அருண் வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பாடசாலை கூரையின் மீது ஏறி றோயல் கல்லூரி ஆசிரியை போராட்டம்..!!

sri lankan school teachers

கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை ஒருவர் பாடசாலை கூரையின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்யாணி திசாநாயக்க என்ற ஆசிரியையே தனக்கு கடந்த 17ம் திகதி வழங்கப்பட்ட இமாற்றத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை.!!

tsunami

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை ஒன்றினை இன்று மாலை மூன்று மணிக்கு மேற்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் 14 கரையோர பிரதேசங்களை தெரிவு செய்து இவ் ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

சுனாமி அனர்த்தம் ஒன்று ஏற்படுமாயின் அதன் போது செயற்படும் விதம் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாகவும் சுனாமி ஒத்திகை நடவடிக்கைகள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டது.!!

ICC_World_Cup_2015

11வது உலக கிண்ண ஒருநாள் போட்டியை சர்வதேச கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் சபைகள் இணைந்து நடாத்தவிருகின்றன. இந்தப் போட்டிகள் 2015ம் ஆண்டில் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது.

14 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியின் லீக் மற்றும் நொக்-அவுட் ஆட்டங்கள் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சரிசமமான எண்ணிக்கையில் நடைபெறும்.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் இடம் பெறும் பிரிவுகள், அணிகள் மோதல் அட்டவணை, ஆட்டங்கள் நடைபெறும் இடம் ஆகியவை குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட் சபைகள் இன்று கலந்தாலோசித்து முடிவு செய்துள்ளது.

இந்த நிகழ்வில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் நிர்வாகிகள், இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர்.

குழு  A

இங்கிலாந்து
அவுஸ்திரேலியா
இலங்கை
பங்களாதேஷ்
நியூசிலாந்து
மற்றும் தகுதிகான் போட்டிகளில் 2ம் மற்றும் 3ம் இடத்தை பிடிக்கும் அணிகள்.

குழு  B

தென்னாபிரிக்கா
இந்தியா
பாகிஸ்தான்
மேற்கிந்திய தீவுகள்
அயர்லாந்து
மற்றும் தகுதிகான் போட்டியில் 4ம் இடத்தை பிடிக்கும் அணி.

ICC Cricket World Cup 2015 Official Launch In Melbourne

 

தீவிரவாதிகளின் கொலை சதி முயற்சியிலிருந்து விபத்து என்னை காப்பாற்றியது : இம்ரான்கான்..!

imran khan

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் தெக்ரிக்– இ–இன்சாப் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
அக் கட்சி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றி பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த நிலையில் மே 7ம் திகதி தேர்தல் பிரசாரத்தின் போது கராச்சியில் 24 அடி உயர மேடையில் லிப்ட் மூலம் ஏறிய இம்ரான்கான் விபத்துக்குள்ளானார். அதில் அவர் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்து கடும் போராட்டத்துக்கு பின் உயிர் தப்பினார்.

குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ள அவர் இங்கிலாந்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது “விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் தங்கியிருந்த போது என்னை அப்போதைய உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் என்னை சந்தித்தார்.
அப்போது விபத்து நடந்த மறுநாள் என்னை கொல்ல தீவிரவாதிகள் சதி செய்து இருந்ததாக தெரிவித்தார்.

பாகிஸ்தானில் தலிபான்கள் உள்ளிட்ட 25 தீவிரவாத அமைப்புகள் உள்ளன. அவர்களில் ஒது சிலர் மூலம் எனக்கு கொலை மிரட்டல்கள் இருந்து வந்தது.

இது குறித்து எச்சரிக்கை விடுத்த அரசு தேர்தல் பிரசாரத்தின் போது எனக்கு மிக அதிகளவில் பாதுகாப்பு கொடுத்தது. அதனால்தான் மேடை ஏறி தீவிரவாதிகள் தாக்க முடியாத அளவுக்கு 24 அடி உயர மேடையை எனது கட்சியினர் அமைத்து இருந்தனர்.

அதன் மீது ஏற அமைக்கப்பட்டிருந்த லிப்ட் அறுந்ததால் கீழே விழுந்து நான் படுகாயம் அடைந்தேன். அந்த விபத்து தான் தீவிரவாதிகளின் கொலை சதியில் இருந்து என்னை காப்பாற்றியுள்து” என்று கூறினார்.

சாதனை படைத்த உலகின் மிக வயதான மூதாட்டி.!(படங்கள்)

பொதுவாக அனைவரும் தங்கள் வயதை குறைத்து சொல்லத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால், சமீபகாலமா நிறைய தாத்தா, பாட்டிகள் நாங்கள் தான் உலகிலேயே வயதானவர்கள் என்று முன்வந்து சொல்கின்றார்கள்.

இதுவரைக்கும் ஜப்பானைச் சேர்ந்த 115 வயது மிசாவேர் ஒக்காவா தான் உலகிலேயே அதிக வயதானவர் என்று சாதனைப் புத்தகமான கின்னஸ்சில் இடம் பிடித்துள்ளார். ஆனால் இல்லை இவர் தான் உலகிலேயே மிகவும் வயதானவர் என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு மூதாட்டியை காட்டுகிறது அந்நாட்டு அரசு.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பேக் நகரின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒரு சிற்றூரில் வாழ்ந்துவருபவர் ஜொஹன்னா மசிபுகோ. தற்போது இவருக்கு 119 வயதாவதால் இவரே உலகில் அதிக வயதானவர் என அறியப்பட்டுள்ளாராம்.

ஜோஹன்னாவின் சான்றிதழ்களில் அவர் மே 11ம் திகதி 1894ம் ஆண்டு பிறந்தவராகக் குறிக்கப்பட்டுள்ளது. இதுவே, இவரது வயது மூப்புக்கான சான்றாக எடுத்துக் கொள்ளப் பட இருக்கிறது.

ஜோஹன்னேயின் உடன் பிறந்தவர்கள் பத்து பேர். ஆனால், இவரே அனைவருக்கும் மூத்தவராம். இவருக்கு மொத்தம் ஏழு பிள்ளைகளாம். அதில் ஐவர் இறந்து விட இவர் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்ற தனது 77 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

இந்தத் தள்ளாத வயதிலும் தானே சமைத்து, துவைத்து என தனக்கான வேலைகளை தானே கவனித்துக் கொள்கிறாராம். இன்னும் கண் பார்வை தெளிவாக இருப்பதால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நன்கு ரசித்துப் பார்க்கிறாராம் ஜோஹன்னே. ஆனால் நீண்ட நேரம் நிற்க மட்டும் முடிவதில்லையாம்

தென்னாப்பிரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக இவரது சான்றிதழ்களை இன்னும் சரிபார்க்காத போதும் பத்திரிக்கைகள் இவர் தான் வயது முதிர்ந்த மூதாட்டி என அடித்துக் கூறுகின்றன்.

இதற்கு முன்னர் அதிக வயதானவராகக் குறிப்பிடப்பட்ட ஜீன் கால்மென்ட் என்ற பிரான்ஸ் தேசத்தவர் தன்னுடைய 122வது வயதில் கடந்த 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி காலமானார்.

சமீபத்தில் இந்திய காஷ்மீரைச் சேர்ந்த பெரோஸ் உன் மிர் என்பவர் தனக்கு 141 வயதாவதாகவும் தனது மனைவி தன்னை விட 60 வயது இளையவர் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

p1

p3

p2