இன்றைய கால காட்டத்தில் கணனியின் பங்களிப்பு இல்லாத வேலைகள் இல்லை என்றே கூறலாம்.இதன்படி ஒரே கணனியினைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வேலைகளை செய்யும்போது அவற்றில் தேங்கும் தற்காலிக கோப்புக்கள், மென்பொருட் கோப்புக்களில் ஏற்படும் வழுக்கள் போன்றவற்றினால் காலப்போக்கில் கணனியின் செயற்திறன் குறைந்து கொண்டே செல்லும்.
இவ்வாறான பிழைகளை சரிசெய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் Cloud System Booster எனும் மென்பொருள் புதிதாக இணைந்துள்ளது. இம்மென்பொருள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும் கோப்புக்களை முற்றாக நீக்குவதுடன், நிறுவப்பட்டுள்ள மென்பொருட்கள் தொடர்பான கோப்புக்களில் காணப்படும் வழுக்களையும் நிவர்த்தி செய்கின்றது.
இதனால் கணனி வேகமாக செயற்படக்கூடியதாக இருப்பதுடன், சிறந்த பரிமாரிப்பை உடையதாகவும் காணப்படும்.
விண்கற்கள் மோதாமல் தடுக்க நாசா விஞ்ஞானி 402 யோசனைகளை முன்வைத்துள்ளனர். விண்வெளியில் சுற்றி திரியும் எரிகல் என்று அழைக்கப்படும் விண்கற்கள் பூமிக்கு பெரும் சவாலாக திகழ்கின்றன. சில வேளைகளில் இவை காற்று மண்டலத்துக்குள் புகுந்து பூமியை தாக்குகின்றன.
அதை தடுக்க அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் 402 விதமான யோசனைகள் வைத்துள்ளனர். அவற்றில் ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்பி பூமியின் அருகே சுற்றிதிரியும் சிறிய விண்கற்களை வேறு இடத்தில் நகர்த்தி வைக்கும் எதிர்கால திட்டமும் உள்ளது.
இந்த தகவலை நாசாவின் நிர்வாகி பில் கிரஸ்டன்மேர் தெரிவித்தார்.
பூமிக்கு அருகில் சுற்றி ஆபத்தை விளைவிக்கும் விண்கற்களை கண்டுபிடிப்பது மற்றும் மிகப்பெரும் ஆபத்தை உருவாக்கும் விண் கற்களை கண்டுபிடிப்பது போன்றவையும் இந்த திட்டத்தில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்த கருத்தரங்கு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாடு அரியலூரில் பள்ளி ஆசிரியையும் தலைமை ஆசிரியையும் திட்டியதால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் பள்ளக்காவேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் சாந்தினி, அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பி இருக்கிறார்.
வீட்டில் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தூங்கி எழுந்த சாந்தினி திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்னையை தனது உடலில் ஊற்றி கொண்டு தீ வைத்து கொண்டுள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோரும் அருகில் இருந்தவர்களும் எவ்வளவோ காப்பாற்ற முயற்சி செய்தும் சாந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த சாந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சாந்தினி தற்கொலை செய்துகொள்வதற்கு முன் கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில் நான் நேற்று பள்ளியில் இருந்தபோது வகுப்பு ஆசிரியை என்னை சக மாணவியர்கள் முன் அவமானப்படும்படி திட்டிவிட்டார். அதேபோல் தலைமை ஆசிரியையும் என்னை திட்டியதோடு நீ நாளை பள்ளிக்கு வரும்போது உன் பெற்றோரை அழைத்து வரவேண்டும் என்று கூறினார்கள்.
இதனால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன் என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அந்த கடிதத்தை காவல்துறையினர் எடுத்து சென்றுவிட்டதாகவும் அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஜேர்மன் நாட்டில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்னுக்கு 6 கிலா எடையுடன் கூடிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஜேர்மனியின் கிழக்கு நகரமான லேய்பிஜிக்(Leipzig) பகுதியில் ஏராளமான குழந்தைகள் சுகப்பிரசவ முறையில் பிறக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து லேய்பிஜிக் பல்கழைக்கழக மருத்துவமனையில் ஜேஸ்லின் என்ற பெண்னுக்கு 57.7 நீளமும் 6.11 கிலோ எடையுடன் கூடிய பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையானது ஜேர்மனியில் பிறந்த மிகப்பெரிய குழந்தையாக கருதப்படுகின்றது.
இது குறித்து மகப்பேறு மருத்துவர் ஹோல்கர் ஸ்டீபன் கூறுகையில், அப்பெண்மணி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கர்ப்பகாலத்தின் ஆரம்ப நிலையில் தான் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தை பிறந்தவுடன் இன்சுலின் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2011ம் ஆண்டில் பெர்லின் நகரில் ஜிகாத்(Jihad) என்ற குழந்தையானது 6 கிலோ எடையுடன் சுகப்பிரசவ முறையில் பிறந்துள்ளது என கூறியுள்ளார். தற்போது பிறந்துள்ள இக்குழந்தையானது எதிர்காலத்தில் அதிக உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.
இந்திய நாட்டின் புதிய மாநிலமாக உதயமாகிறது தெலுங்கானா. ஆந்திராவைப் பிரித்து 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லியில் இன்று மாலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய லோக் தளத் தலைவர் அஜீத்சிங் ஆகியோர் இப்புதிய மாநில உருவாக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான், தெலுங்கானாவுக்கும் ஆந்திர மாநிலத்துக்கும் பொதுதலைநகராக 10 ஆண்டுகாலத்துக்கு ஹைதராபாத் நீடிக்கும் என்றார்.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி ஒப்புதல் தெரிவிக்க மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெலுங்கானா தனி மாநிலம் உதயமாவதால் சீமாந்த்ரா எனப்படும் கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அங்கு துணை ராணுவப் படையைச் சேர்ந்த 1200 பேர் ஏற்கெனவே குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேலும் 1000 பேரை கொண்ட துணை ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா ஆயுதப் படை பொலிசார், தமிழக ஆயுதப் படை பொலிசார் ஆகியோரும் ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி கிண்ணத்தை கைப்பற்றும் என அணித்தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் அணித்தலைவர் டோனி கூறுகையில், உலக கிண்ணத் தொடரை சந்திக்க ஆவலாகவும் ஆர்வமாகவும் உள்ளேன். இந்த போட்டிகளில் இந்தியா சிறப்பாக விளையாடி, கிண்ணத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.
சமீபத்தில் நடந்த ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரை இந்தியா வென்ற விதம் அனைவருக்கும் தெரியும். இந்த நம்பிக்கையும் அனுபவங்களும் கிண்ணத்தை வெல்ல பெரும் உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் குடியேற விண்ணப்பம் செய்த சுமார் 100 பேர், போர் குற்றத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா, ருவாண்டா, செர்பியா மற்றும் இலங்கையைச் சேரந்த சுமார் 100 பேர், போர் குற்றங்களோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களில் பலர், ஏற்கனவே பிரிட்டனில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
போர் குற்றவாளிகளுக்கு புகலிடம் கொடுக்கும் நாடாக பிரிட்டன் மாறக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் போர் குற்றங்கள் தொடர்பில் சந்தேகிக்கப்படுபவர்களை வழக்கு விசாரணைக்காக அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுப்பவதிலும் பல சிக்கல்கள் உள்ளன.
பல சமயங்களில, திருப்பி அனுப்பப்படும் நபர்கள் சித்ரவதைக்குள்ளாகலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவை நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், சந்தேக நபர்கள் மீது பிரிட்டனிலேயே வழக்கு விசாரணைகளை நடத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் கோருகின்றனர்.
கடந்த ஜனவரி 2012 ஆம் ஆண்டில் இருந்து 15 மாதங்களுக்கு, போர் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 800 பேர் குறித்து உள்துறை அமைச்சு ஆய்வு நடத்தியது.
இதில் பிரிட்டிஷ் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்த 99 பேரின் விண்ணப்பங்களை நிராகரிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டுக்கும் 2012 ஆம் ஆண்டுக்கும் இடையே போர் குற்றத்தோடு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 700 பேர் பிரிட்டனின் குடிவரவு அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஐக்கிய ராஜ்ஜியதக்தில் இருக்கும் போர் குற்றவாளிகள் தொடர்பில் அரசு இன்னமும் தகவல்களைத் தரவேண்டும் என்பதைத்தான் இந்தச் செய்தி உணர்த்துவதாக இனப் படுகொலையை தடுப்பதற்கான பாராளுன்றக் குழுவின் தலைவரான மைக்கேல் மெக்கான் கூறியுள்ளார்.
அதே நேரம் போர் குற்றம் தொடர்பிலான வழக்குகளை விசாரிக்க தமக்கு கூடுதல் வளங்கள் தேவை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ருவாண்டாவில் வழக்கு விசாரணைக்காக அனுப்பப்படவிருந்த 4 பேரை, உயர் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது. அவர்கள் அங்கே போனால், நியாயமான விசாரணை கிடைக்காமல் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக நீதிமன்றம் கூறியது.
இது போன்ற வழக்குகளில் நாடுகடத்தும் நடவடிக்கைகள் தோற்றால், சந்தேக நபர்களுக்கு எதிராக ஐக்கிய ராஜ்ஜியத்தில் வழக்குகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பாடுபடும் ஏஜிஸ் அமைப்பின் ஜேம்ஸ் ஸ்மித் கேட்டுள்ளார்.
மங்காத்தா வெற்றியைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் புதிய படம் பிரியாணி. இப்படத்தில் கார்த்தி, ஹன்சிகா மொத்வானி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது இவர் இசையமைக்கும் 100வது படமாகும்.
யுவனின் 100வது படத்திற்கு மெருகூட்டும் விதமாக ஐந்து இசைமைப்பாளர்கள் ஒருங்கிணைந்து இப்படத்தில் ஒரு பாடலை அமைத்து இருக்கிறார்களாம். அதன்படி விஜய் அண்டனி, இமான், ஜீ.வி.பிரகாஷ், தமன் ஆகியோர் யுவனுடன் சேர்ந்து ஒரு பாடலை அமைத்து இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவிலேயே முதன்முதலாக ஒரு பாடலுக்கு ஐந்து முன்னணி இசைமையப்பாளர்கள் ஒன்றாக இணைந்து ஒரு பாடலை அமைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், இசைஞானி இளையராஜா குடும்பத்தில் இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரைத் தொடர்ந்து 100 படங்களுக்கு இசையமைத்த பெருமையும் இந்த படத்தின் மூலம் யுவனுக்கு கிடைத்துள்ளது.
இதுபோன்று இசையமைப்பாளர்கள் கூட்டு முயற்சியுடன் இணைந்து செயல்படுவது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கும் என சினிமா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
விளையாட்டு மருத்துவத்துக்கான சென்னை ராயப்பேட்டையில் ஆர்தோமெட் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் விளையாட்டு வீரர்களுக்கான இலவச மருத்துவ திட்டத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
விளையாட்டு வீரர்கள் காயத்தை எளிதாக நினைக்காமல் உடனடியாக அதற்கு சிகிச்சை பெற வேண்டும். மேலும் காயத்துக்கு வைத்தியர்களின் ஆலோசனை இல்லாமல் மாத்திரை சாப்பிட்டால் ஊக்க மருந்து பிரச்சினைக்கு உள்ளாக நேரிடும்.
விளையாட்டுச் சங்கங்கள் தொழில்முறை ரீதியாக செயல்பட வேண்டும். அப்படி செயல்படுவதால் தான் வெளிநாடுகளில் திறமையான வீரர்கள் அதிக அளவில் உருவாகிறார்கள் என்று தெரிவித்தார்.
எப்போதுமே ஒரு படத்தினை விளம்பரப்படுத்த வேண்டும் என்றால், ரஜினிக்கு திரையிட்டுக் காட்டிவிட்டு உடனே ரஜினி பாராட்டி விட்டார் என்று விளம்பரப்படுத்துவார்கள்.
இதனால் ஒருகட்டத்தில் படம் பார்ப்பதையே தவிர்த்து விட்டார் ரஜினி. எப்போதாவது படம் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் வீட்டிலேயே பார்த்து வந்தார்.
போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்குப் பின்புறம் உள்ள வீட்டை வாங்கி அங்கு சிறிய அளவில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு திரையரங்கம் ஒன்றை வடிவமைத்து இருக்கிறாராம் ரஜினி.
QUBE தொழில்நுட்பத்தில் அமைந்து இருக்கிறது அந்த திரையரங்கம்.
சமீபத்தில் அவர் பார்த்த படம் மரியான். ஏ.ஆர்.ரஹ்மான், பரத்பாலா, மாப்பிள்ளை தனுஷ் என மூவர் கூட்டணியில் வெளியான படம் அது.
தனது மகளின் அறைக்குள் அதிரடியாக நுழைந்த தாய் ஒருவர், கட்டிலுக்குக் கீழே பதுங்கியிருந்த ஆசிரியரை கையும் களவுமாக பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த சம்பவம் இங்கிலாந்தின் போல்டன் நகரில் நடந்துள்ளது. அந்த மாணவியின் வயது 16. கணித ஆசிரியரின் வயது 35. கடந்த சில நாட்களாக தனது மகள் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வருவதைப் பார்த்தார் தாயார். இதனால் அவருக்கு மகள் மீது சந்தேகம் வந்தது.
ஒரு நாள் மகளுக்காக காத்திருந்தார் தாயார். மகளும் வழக்கம் போல தாமதமாக வந்தார். மகளுக்குத் தெரியாமல் காத்திருந்த தாயார், தடாலடியாக மகளின் அறைக்குள் புகுந்தார். அறை முழுவதும் தேடினார். கட்டிலுக்குக் கீழே குணிந்து பார்த்தபோது அதிர்ந்தார். அங்கு மகளின் கணித ஆசிரியர் இருந்தது தெரியவந்தது.
உடனடியாக அவர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார். பொலிஸார் வந்து வாத்தியாரைக் கைது செய்து கூட்டிச் சென்றனர். தினசரி தாயாருக்குத் தெரியாமல் தனது ஆசிரியரை வீட்டுக்குக் கூட்டி வந்துள்ளார் அந்த மாணவி. இது தனது தாயாருக்குத் தெரியாது என்றும் நினைத்துள்ளார்.
ஆனால் மகள் மீது சந்தேகமடைந்த தாயாரின் அதிரடி நடவடிக்கையால் இருவரும் சிக்கினார்கள். அந்த ஆசிரியர் மீது தற்போது பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களத்தில் அளவுக்கு அதிகமாக ஆக்ரோஷமாக செயல்படுவதை விராத் கோஹ்லி தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த சிம்பாவேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் இந்தியாவின் விராத் கோஹ்லி ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்தில் இருந்த நடுவர்களிடம் வீணாக வாக்குவாத்தில் ஈடுபட்டார். இது குறித்து அசாருதீன் கூறியது..
இந்திய அணியின் எதிர்கால தலைவராக விராத் கோஹ்லி கருதப்படுகிறார். மிகச் சிறந்த வீரரான இவருக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. இதற்கேற்ப இவர் நடந்து கொள்ள வேண்டும். ஆக்ரோஷமாக இருப்பது நல்லது தான். இது மனதிற்குள் இருக்க வேண்டும். மாறாக அனைவரும் அறியும் வகையில் வெளிப்படையாக காட்டுவது தேவையில்லாதது.
நடுவர் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறை வீண் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த அளவுக்கு நடுவர்கள் அச்சத்துடன் உள்ளனர். என்னை பொறுத்தவரை களத்தில் இருக்கும் நடுவர்களுக்கு தான் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று அசாருதீன் கூறினார்.
இரண்டாம் உலகம் படத்தில் இணைந்து நடித்துள்ள ஆர்யா, அனுஷ்கா இருவரும் காதலிக்கிறார்கள் என்பது தான் கோடம்பாக்கத்தின் தற்போதைய கிசுகிசு.
ஆர்யா, அனுஷ்கா இருவருமே இணைந்து நடித்துள்ள முதல் படம் இரண்டாம் உலகம். ஜோர்ஜியா நாட்டில் சுமார் 45 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்றது. அதிலிருந்தே இருவரும் நெருக்கம் காட்டி வருகிறார்களாம்.
சமீபத்தில் நடைபெற்ற சூர்யாவின் சிங்கம்-2 விருந்தில் கலந்து கொள்ள இருவருமே ஒன்றாக ஹைதராபாத்தில் இருந்து இணைந்தே வந்தார்களாம். அந்த விருந்தில் அனைவருமே ஆச்சர்யப்படும் வகையில் இருவருமே மிகவும் நெருக்கம் காட்டினார்களாம்.
எனவே விரைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அதுமட்டுமன்றி ஆர்யாவோ பூஜா, அமலா பால், பத்மப்ரியா, த்ரிஷா, எமி ஜாக்சன் மற்றும் தற்போது நயன்தாரா என அனைவரோடும் கிசுகிசுக்கப்பட்டவர்.
அந்த வரிசையில் தற்போது அனுஷ்காவும் இணைந்து இருக்கிறாராம்.
ஹைதராபாத்தில் ராணி ருத்ரமாதேவி, பாஹுபாலி ஆகிய படங்களுக்காக தீவிரமான வாள் சண்டை, குதிரை ஏற்றப் பயிற்சிகளில் இருக்கும் அனுஷ்காவோடு தனக்கு படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் கலந்து கொண்டு வருகிறாராம் ஆர்யா.
பூஜா, அமலா பால், பத்மப்ரியா, த்ரிஷா, எமி ஜாக்சன், ஸ்ரேயா, நயன்தாராவைத் தொடர்ந்து கழற்றி விடப்பட்டவர்கள் பட்டியலில் அனுஷ்காவின் பெயரும் இடம்பெறாமல் இருந்தால் சரிதான் என்பது தான் இப்போதைய கோடம்பாக்க பேச்சு.
பிரபல தமிழ் நடிகை கனகா இன்று செவ்வாய்க்கிழமை காலமானார் என அனைத்து இந்திய ஊடகங்களிலும் செய்தி வெளிவந்தபோதிலும், கனகா உயிருடன் இருக்கின்றார் என அவரது சித்தப்பா தகவல் வெளியிட்டுள்ளார்.
கனடா மரணமடையவில்லை- அவரது சித்தப்பா தகவல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் நடிகை கனகா, மரணமடைந்து விட்டதாக சற்று முன்னர் தகவல் வெளியான நிலையில், அதனை அவரது சித்தப்பா மறுத்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணமலைபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குள் கனகா கதவை உள்பக்கமாக பூட்டியபடி இருந்துகொண்டிருப்பதாகவும், எவ்வளவோ கூப்பிட்டும் வெளியே வர மறுப்பதாகவும் அவரது சித்தப்பா ராம ஈஸ்வர லால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தகவலால் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் கனகாவின் வீடு முன்னர் குவிந்துள்ளனர்.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஆட்டநிர்ணய புகாரில் சிக்கி கைதாகி தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள ஸ்ரீசாந்த் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் செய்ததாக கைதாகி தற்போது ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்துள்ளார் ஸ்ரீசாந்த். இந்த நிலையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை, ரசிகர்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தி..
“நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இதற்குக் காலம் பதில் சொல்லும் என்று நிச்சயம் நம்புகிறேன். தொடர்ந்து கடுமையாக பயிற்சி செய்யப் போகிறேன். காத்திருக்கப் போகிறேன். கடவுள் மகத்தானவர்” என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.
தற்போது கேரளாவில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீசாந்த். இந்திய அணியில் தனக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார்.
ஸ்ரீசாந்த் விடுத்துள்ள இன்னொரு ட்விட்டில் “எப்போதுமே நான் சிறந்ததையே கொடுத்துள்ளேன். அதைத் தொடருவேன். என் மீது அனைவரும் நம்பிக்கை வைத்திருங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.
ஆட்டநிர்ணய விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்குள்ளான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் அப்பாவிகள், நல்லவர்கள், ஒன்றுமே செய்யாதவர்கள் என பிசிசிஐ விசாரணைக் குழு ஏற்கனவே கூறியுள்ளது. அதே வழியில் ஸ்ரீசாந்த்தும் விடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரபல நடிகை தேவிகாவின் மகளும், நடிகையுமான கனகா இன்று காலமானார். அவருக்கு வயது 40. சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.
அது அனாதைகள் மற்றும் கவனிப்பாரின்றி அவதிப்படுவோரை பராமரித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாகும். இங்கு புற்று நோயால் அவதிப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நடிகை கனகாவும் சிகிச்சை பெறுவதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்து, விஷயத்தை வெளியில் சொன்னார்.
அதன் பிறகுதான் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரியவந்தது. இந்தநிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை கனகா இன்று பிற்பகலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா, கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கரகாட்டக்காரன் படம் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஓடி வெற்றிவாகை சூடியது. இந்தப் படத்திற்குப் பிறகு, கனகா தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் பிஸியானார்.
தமிழில் ரஜினியுடன் அதிசயபிரவி, விஜயகாந்த்துடன் கோயில்காளை, பிரபு, கார்த்திக், ராம்கி உட்பட முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். கனகா முகேஷ்யுடன் இணைந்து நடித்த காட்பாதர் என்ற படம் கேரளாவில் 200 நாட்களையும் தாண்டி ஓடி சாதனை புரிந்தமை குறிப்பிடத்தக்கது.
கனகா கடைசியாக நடித்தது ஒரு மலையாளப் படத்தில். அது 2004ல் வெளியானது. அதன் பிறகு கனகா பற்றிய எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.