தமிழ்தேசிய கூட்டமைப்பு வவுனியாவில் இன்று வேட்பு மனு தாக்கல்!! (படங்கள்)

வடமாகாணசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வவுனியா மாவட்டத் தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்று மதியம் 12 மணியளவில் வவுனியா கச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முன்னதாக வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சிந்தாமனி பிள்ளையார் ஆலயத்தில் வழிபட்டு சிறப்பு பூசைகளிலும் ஈடுபட்டனர். வவுனியா மாவட்டத்திலிருந்து 6 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் விபரம்
இலங்கை தமிழரசுக்கட்சி
1. எம்.எம்.ரதன் ஆசிரியர் (பதில் தலைவர் – நகரசபை வவுனியா)
2. வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம்
ரெலோ
3. செந்தில்நாதன் மயூரன் (வர்த்தகர்)
4. துரைச்சாமி நடராஜசிங்கம் (துணை தவிசாளர் வவுனியா பிரதேசசபை)
ஈ.பீ.ஆர்.எல்.எப்
5. எம்.நடராஜா (முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர்)
6. ஆர்.இந்திரராஜா (முன்னாள் பிரதிகல்விப்பணிப்பாளர்)
7. எஸ். தியாகராஜா (ஓய்வு பெற்ற கிராம அலுவலர்)
புளொட்
8. ரீ.லிங்கநாதன் ((வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர்)
9. க.சந்திரகுலசிங்கம் (வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர்)

vavuniya-e2 vavuniya-e1

புதிய விதிமுறையால் ஓட்டங்கள் சேர்ப்பது கடினம் : தவான்!!

Shikhar-Dhawan

சிம்பாவே அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் சதம் அடித்து முத்திரை பதித்தார். இந்த ஆண்டில் அவர் 3 சதம் அடித்து முன்னிலையில் உள்ளார். இதேபோல ஒருநாள் போட்டி ஓட்டங்கள் குவிப்பிலும் (637 ஓட்டங்கள்) அவர் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் புதிய விதிமுறைகளால் ஒருநாள் போட்டியில் ஓட்டங்களை குவிப்பது கடினம் என்று தவான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் ஒருநாள் போட்டியின் புதிய விதிமுறை காரணமாக இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது முதல் ஓவரில் ஒரு புதிய பந்து பயன்படுத்தப்பட்டால் அடுத்த ஓவரில் மற்றொரு பந்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் பந்து அதிக அளவில் சுழல் ஆகின்றன.

தற்போதுள்ள நிலையில் முதல் 10 ஓவரில் தொடக்க வீரர்களால் மிகப்பெரிய அளவில் ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை. மிகவும் கவனமாக விளையாட வேண்டி உள்ளது. தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்துவிடாமல் இருப்பதற்கு எந்த வகையான ஷொட் அடிப்பது என்பது முக்கியமானது.

சம்பியன் கிண்ண , மேற்கிந்திய தீவுகளில் நடந்த 3 நாடுகள் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றதோடு அணி வீரர்களின் ஒற்றுமையே காரணம். இளம் வீரர்கள் அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். களத்தடுப்பிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அனைத்து விடயங்களில் சரியான பாதையில் இருப்பதாக உணர்கிறேன்.

நாம் அண்ணன் தங்கையா.. மனம் உடைந்த காதலர்கள் தற்கொலை!!

couple

அண்ணன் தங்கை உறவு வரும் இருவர் காதலித்துள்ளனர். இந்தப் பொருந்தாக் காதலுக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

மங்களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பாபு. அதே ஊரைச் சேர்ந்தவர் 16 வயதான பாண்டியம்மாள். இருவரும் உறவினர்கள், உறவு முறையில் அண்ணன் தங்கை ஆவார்கள்.

ஆனால் இருவரும் காதல் கொண்டனர். உறவு முறை பற்றிக் கவலைப்படாமல் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இரு குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது பொருந்தாக் காதல் என்று கண்டித்தனர். இதனால் மனம் உடைந்தனர் இருவரும். வாழ்க்கையில் இருவரும் சேரவே முடியாது என்ற நிலையை உணர்ந்த அவர்கள் விஷம் குடித்து உயிரிழந்தனர். போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 5இல் ஆரம்பம்..!

vavuniyaகல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

இப்பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.

நாடு முழுவதிலுமுள்ள 2,164 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார்.

பேஸ்புக்கில் இணைந்தார் தனுஷ்..!

dhanushதன்னுடைய நெருங்கிய நண்பர்களான சிவகார்த்திகேயன், சதீஷ், அனிருத் கூட்டணியோடு தனது 30வது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினார் தனுஷ்.
தனுஷ் தனது பிறந்தாளில் இருந்து ஃபேஸ்புக் இணையத்திலும் இணைந்திருக்கிறார்.

அதுமட்டுமன்றி, பிறந்த நாள் அன்று ஒளிப்பதிவாளரை இயக்குனராகவும் அறிமுகம் செய்து வைத்தார்.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, தற்போது ‘நய்யாண்டி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வரும் வேல்ராஜை இயக்குனராக்கி படம் தயாரிக்கத் திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ்.

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் அமலா பால். முதலில் இக்கூட்டணி ‘3’ படத்திலேயே நடிப்பதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் அமலா பால் விலகிவிடவே ஸ்ருதிஹாசன் நடித்தார்.

தற்போது மீண்டும் இக்கூட்டணியை இணைத்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் அனிருத்.

தனுஷ் தனது ‘வுண்டர்பார் நிறுவனம்’ மூலம் தயாரிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் FIRST LOOK வெளியிடப்படும் என்று அறிவித்து இருக்கிறார் தனுஷ்.

‘நய்யாண்டி’ படத்தின் பாடலுக்காக லண்டனில் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல இருக்கிறார் தனுஷ். ‘நய்யாண்டி’ படத்தினை முடித்துவிட்டு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வேங்கைசாமி’, வேல்ராஜ் இயக்கும் படம், ‘Raanjahnaa’ இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் படம் என்று வரிசையாக தனுஷின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது.

https://www.facebook.com/dhanushchannel – இதுதான் தனுஷின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம்.

சீமானின் திருமண திகதி அறிவிப்பு!!

seeman

நாம் தமிழர் கட்சித் தலைவரும், இயக்குனருமான சீமானுக்கு வருகிற செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற உள்ளது.
மறைந்த முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான பா. காளிமுத்துவின் மகள் கயல்விழியை சீமானுக்கு திருமணம் செய்ய பேசி நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமையன்றுதான் முறைப்படி பெண்கேட்டு நிச்சயிக்கப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை நந்தனம் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள இந்த திருமணத்தை தமிழர் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமை வகித்து நடத்துகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். மேலும் பல தமிழ் தேசிய அமைப்புகள் வெளிநாட்டு வாழ் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும், தமிழ் திரையுலக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் இத்திருமணத்தில் பங்கேற்க உள்ளனர்.

மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி 20-20 தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!!

Pakistani cricketers celebrating after the dismissal of a Indian player during the India-Pakistan 2nd Twenty20 International cricket match at Sardar Patel Stadium, Motera, Ahmedabad. (Photo: IANS)

பாகிஸ்தான் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை எடுத்தது. உமர் அக்மல் 36 பந்தில் 46 ஓட்டங்களும் தொடக்க வீரர் அகமது சேஷாத் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் சுனில் நரின் 3 விக்கெட்டும் பத்ரி 2 விக்கெட்டும், டேரன் சேமி, பொலாட் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 136 ஓட்ட இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி பின்னர் களம் இறங்கியது.

பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணியால் இலக்கை நோக்கி முன்னேற முடியவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டரன் பிராவோ 35 ஓட்டங்களும் , சுனில் நரேன் 28 ஓட்டங்களும் எடுத்தனர். சோகைல் தன்வீர், சுல்பிதார் பாபா, அஜ்மல் தலா 2 விக்கெட்டும், ஹபிஸ், அப்ரிடி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 2–0 என்ற கணக்கில் 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. நேற்று முன்தினம் நடந்த முதலாவது 20 ஓவர் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது. ஒருநாள் தொடரையும் பாகிஸ்தான் அணி 3–1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகள் அணி தனது சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரையும், 20-20 தொடரையும் இழந்தது.

நடித்து கொண்டே படிப்பை தொடரும் நஸ்ரியா!!

nasriya

கேரளத்து வரவான நஸ்ரியா நஸீம் படங்களில் நடித்துக் கொண்டே பி.கொம் படிப்பை தொடர இருக்கிறார். நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா.

தன்னுடைய நடிப்பாலும் அழகாலும் எளிதாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார். அத்துடன் படவாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடிப்புடன் சேர்த்து தனது கல்லூரி படிப்பையும் தொடர உள்ளாராம் நஸ்ரியா.

இதுகுறித்து அவர் கூறுகையில் சிறுவயதிலேயே நடிக்க வந்து விட்டதால், படித்து கொண்டே நடிக்கவும் செய்தேன். பிளஸ் 2 படித்த போது ஒரு மலையாள படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது.

தற்போது பல படங்களில் நடிப்பதால், ரொம்பவே பிஸியாகி விட்டேன்.
நடிப்பை போன்றே, படிப்பிலும் மிகுந்த ஆர்வம் உள்ளதால் தற்போது பி.கொம் படித்து வருகிறேன். முடிந்தவரை படிப்பு பாதிக்காத வகையில் படங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் 100 அடி பள்ளத்தில் பேருந்து விழுந்து விபத்து: 36 பக்தர்கள் பலி!!

Italy Bus Plunges

இத்தாலியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகினர். இத்தாலியில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து நேற்று இரவு அவெல்லினோ பகுதியில் சென்று கொண்டிருக்கையில் போக்குவரத்து அதிகமுள்ள நெடுஞ்சாலையில் செல்கையில் மலைப் பகுதியில் உள்ள பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளத்தில் விழும் முன்பு அந்த வழியாக சென்ற கார்கள் மீது பேருந்து மோதியது. 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த பேருந்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 36 சடலங்களை எடுத்தனர். மேலும் காயம் அடைந்த 11 பேரை மீட்டனர். இறந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் அடக்கம்.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது தான் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் அமரலாம். அந்த பேருந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனிதத்தலமான தென்கிழக்கு பக்லியா பகுதிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்புகையில் தான் இந்த விபத்து நடந்துள்ளது.

மலைப் பகுதியில் பேருந்து மிதமான வேகத்தில் தான் சென்றது என்றும், ஆனால் திடீர் என்று அவ்வழியாக சென்ற கார்களை இடித்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

எங்கள் அணி சூதாட்டத்தில் ஈடுபட்டதா? பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மறுப்பு!!

pakistan

மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் சூதாட்டம் நடந்திருப்பதாக வந்த செய்தியை, லத்திப், மோயின் கான் உள்ளிட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் மறுத்துள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் பாகிஸ்தான் அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.

இத்தொடரின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக, இங்கிலாந்தில் வெளியாகும் “டெய்லி மெயில்’ நாளிதழில் செய்தி வெளியானது. இதில், போட்டியின் குறிப்பிட்ட ஓவரில் ஓட்ட வீதம் வித்தியாசமானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தவிர ஒரு சூதாட்டம் தொடர்பான இணையதளத்தில் மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அதிக அளவில் பணப்பரிமாற்றம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் போது அல்லது தொடரை கைப்பற்றும் போது இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகள் வெளியாகின்றன. இது அணியில் உள்ள வீரர்களிடம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். வீரர்கள் தொடர்ந்து போட்டியில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்திப் கூறுகையில்

இவ்விஷயத்தை ஐ.சி.சி அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கவனமாக கையாள வேண்டும். இல்லையென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும். இவ்விவகாரத்தை சட்ட பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் மோயின் கான் கூறுகையில்

ஆதாரமற்ற இந்த செய்தி குறித்து ஐ.சி.சி சார்பில் இதுவரை எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்த செய்தியும் சந்தேகத்தின் பேரில் வெளியானது. இது பாகிஸ்தான் வீரர்களை வருத்தமடைய செய்யும். எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

15 நிமிடத்தில் மடிக்கணணியை கழற்றி மாற்றி சாதனை படைத்த 8 வயது சிறுமி!!

lap

தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 15 நிமிடத்தில் மடிக்கணினியை கழற்றி மாட்டி சாதனை படைத்துள்ளார்.

கோவை சாய்பாபா கொலனியை சேர்ந்த பிரபு மகாலிங்கம் என்பவர் கணினி சேல்ஸ் விற்பனை மற்றும் பழுதுபார்த்தல் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஆதர்ஷினி.8 வயதான இவர் 4ம் வகுப்பு படிக்கிறார்.

கோடை விடுமுறையில் அப்பாவின் கடைக்கு சென்றிருந்த ஆதர்ஷினி கணினியை பிரித்து அப்பா பழுதுபார்ப்பதை உன்னிப்பாக பார்த்தார். மகளின் ஆர்வத்தை கவனித்த பிரபுமகாலிங்கம் அவருக்கு தொடர்ந்து 15 நாட்கள் கணினியை கழற்றி மாற்றுவது குறித்து பயிற்சி அளித்தார்.

அதன் பின்பு கடையில் இருந்த மடிக்கணினியை சிறுமி தானே கழற்றி மாட்டி அசத்தினார். மாணவியின் திறமையை கண்டு பள்ளி ஆசிரியர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

இந்நிலையில் அரியானா “இந்தியா புக் ஒப் ரெக்கொட்ஸ்” நிறுவனத்துக்கு ஆதர்ஷினி பெயரை பள்ளி நிர்வாகம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவன பொறுப்பாளர் விவேக்ராஜா சிறுமியின் தாத்தாவும் முன்னாள் துணை மாவட்ட ஆட்சியருமான மகாலிங்கம் பள்ளி அதிபர் அசோக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் 18.47 நிமிடத்தில் ஒரு மடிக்கணினியை கழற்றி மாற்றினாள் ஆதர்ஷினி.

அதைவிட குறைவான நேரத்தில் சிறுமியால் இதனை செய்ய முடியும் என்ற அவளது தன்னம்பிக்கையை பாராட்டி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தது சாதனை நிறுவனம். இதனை தொடர்ந்து 15.23 நிமிடத்தில் மடிக்கணியை கழற்றி மாட்டி சாதனை படைத்ததன் மூலம் “இந்தியா புக் ஒப் ரெக்கொட்ஸ்”ல் ஆதர்ஷினி இடம் பிடித்தாள்.

இது குறித்து சிறுமி கூறுகையில் கணினியை அப்பா பழுது பார்ப்பதை பார்த்து எனக்குள் ஆர்வம் ஏற்பட்டது. 15 நாட்கள் இடைவிடாது முயற்சி செய்து அதன் நுட்பத்தை தெரிந்து கொண்டு இந்த சாதனையை படைத்துள்ளேன்.

தற்போது செய்த சாதனையை விட மிக குறைவான நேரத்தில் செய்து மற்றொரு சாதனை படைப்பேன் என கூறினார்.

கூட்டமைப்பு இன்று வேட்புமனுத் தாக்கல்: வேட்பாளர் பட்டியல் விபரம்!!

TNA-logo

வடமாகாண சபைத் தேர்தலில் ஐந்து மாவட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நேற்று மாலை வேட்பாளர்கள் தேர்தல் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று நண்பகல் வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளது.

வேட்பாளர் விவரம்,

யாழ். மாவட்டம்

சி.வி.விக்னேஸ்வரன் (முதன்மை வேட்பாளர்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன்
எம்.கே.சிவாஜிலிங்கம்
பாஷையுரைச் சேர்ந்த இ.ஆனல்ட்
சாவகச்சேரியைச் சேர்ந்த சட்டத்தரணி ச.சயந்தன்
வடமராட்சியைச் சேர்ந்த பொறியிலாளர் சிவயோகன்
யாழ். மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்
யாழ். மாநகர சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி
யாழ். மாநகர சபை உறுப்பினர் சி.வி.கே.சிவஞானம்
விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறைப்
பொறுப்பாளராக இருந்தவரான எழிலனின் ஆனந்தி
தமிழரசுக் கட்சி இளைஞர் அணி யாழ். மாவட்டத் தலைவர் பா.கஜதீபன்
காரைநகரைச் சேர்ந்த தம்பிராசா
கரவெட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம்
வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்
என்.வி.சுப்பிரமணியம்
வர்த்தக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரம்
பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனின் சகோதரர்
சர்வேஸ்வரன்
சூழலியாலாளர் பொ.ஐங்கரநேசன்
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குகதாசன்
வடமராட்சியைச் சேர்ந்த ச.சுகிர்தன்

வவுனியா மாவட்டம்

எம்.எம்.ரதன்
செந்தில்நாதன் மயூரன்
எஸ்.தியாகராஜா எம்.பி.நடராஜா எஸ்.ரவி
ஜி.ரி.லிங்கநாதன்
எஸ்.மோகன்
ஆர்.இந்திரராஜா
வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம்

மன்னார் மாவட்டம்

அந்தோணி சூசைரட்ணம் சிறிமோ சாய்வா சு.சிவகரன்
ஞானசீலன் குணசீலன்
இருதயநாதன் சார்ள்ஸ் நிர்மலநாதன்
திரிசோத்திரம் நிமலசேகரம்
ஜோசப் ஆனந்த குரூஸ்
பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன்
அய்யும் அஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டம்

ரி.ரவிகரன் எம்.அன்ரனி ஜெயநாதன்
க.சிவநேசன் (பவான்)
ஜு.கனகசுந்தரசுவாமி
வைத்தியர் சிவமோகன்,
கமலேஸ்வரன்
திருமதி குணசீலன் மேரிகமலா
உடையார் கட்டைச் சேர்ந்த ஆண்டிஐயா புவனேஸ்வரன்

கிளிநொச்சி மாவட்டம்

வீ.ஆனந்த சங்கரி,
ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர்கள் தம்பிராசா குருகுலராஜா,
பசுபதி அரியரத்தினம்
சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை,
திருலோகமூர்த்தி,
பூபாலசிங்கம் தர்மகுலசிங்கம்,
திருமதி மினுபானந்தகுமாரி கேதுரட்ணம்

யாழ். மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வவுனியா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முல்லைத் தீவு மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வர் என கட்சி அறிவித்துள்ளது.

யூடியூப் வீடியோக்களை தொடர்ந்து பார்க்க பயனுள்ள குறிப்புகள்!!

youtube

நீங்கள் யூடியூபில் வீடியோ பார்ப்பவரா? உங்களுக்குப் பிடித்த பாடல்கள், படங்கள், வித்தியாசமான வீடியோக்கள், கல்வித் தொடர்புடைய வீடியோக்கள் இப்படி உங்களுக்குத் தேவையான வீடியோக்களை நீங்கள் யூடியூப் மூலம் பார்க்கும்போது அது முடிந்தவுடன் மீண்டும் பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் மீண்டும் Play செய்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு Play செய்யும்போது வீடியோவானது மீண்டும் Load ஆகிதான் திறக்கும். வீடியோவானது அதிகநேரம் ஓடக்கூடியது என்றால் வீடியோ திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும் பார்த்த வீடியோவை மீண்டும் தொடர்ந்து பார்க்கவும் ஒரு வழி உள்ளது.

அதற்கு நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவின் URL-ல் Repeat என்ற வார்த்தையைச் சேர்த்தால் போதும். உதாரணம் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோவின்
URL http://www.youtube.com/watch?v=-Gq1oPg3LT4&feature=plcp

இப்படி இருக்கும். அந்த URL-ல் youtube என்று முடியும் இடத்தில் repeat என்ற வார்த்தையை தட்டச்சிட்டு என்டர் செய்யுங்கள்.

http://www.youtuberepeat.com/watch?v=-Gq1oPg3LT4&feature=plcp என்ற வார்த்தையை சேர்த்தால் போதும்.

உடனே அந்த URL  இந்த தளத்திற்கு ( http://www.listenonrepeat.com/watch/?v=-Gq1oPg3LT4&feature=plcp) redirect ஆகிவிடும். இப்போது இந்த வீடியோவை நீங்கள் தொடர்ந்து பார்வையிடலாம். நீங்கள் நிறுத்தும் வரை வீடியோவானது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.

இப்பதிவை வீடியோவாகவும் நீங்கள் காணலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகமெனில் இந்த வீடியோ உங்களுக்கு உதவும்.

அவதானம்: குடிப்பதற்கு பொருத்தமற்ற தண்ணீர் போத்தல்கள் சந்தையில்!!

bottle

குடிப்பதற்கு பொருத்தமற்ற தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்வோரை தேடும்பணி நாடு முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சில வியாபாரிகள் வெற்று போத்தல்களில் முறையற்ற வகையில் நீரை நிரப்பி முக்கியமான இடங்களில் விற்பனை செய்வதாக முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமையவே, நேற்று முதல் இதற்கான தேடுதல்கள் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்கள் சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.

எனவே, இந்த தேடுதல் நடவடிக்கையின் போது வியாபாரிகள் சுகாதார அமைச்சின் கீழ் பதிவு செய்துள்ளார்களா என்பது பரிசீலிக்கப்படவுள்ளது.
இதேவேளை குடிநீர் மாதிரிகள் சோதனைகளுக்காக பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவு தொடரில் சூதாட்டமா?

West Indies v Pakistan: Group B - ICC Champions Trophy

பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சென்ற பாகிஸ்தான் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

இதில் 3-2 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இப்போட்டிகளில் பெருமளவு சூதாட்டம் நடந்ததாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட கிரிக்கெட் ஊழல் ஒழிப்பு பிரிவு கூறியுள்ளது.

எனவே போட்டிகள் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது!!

sutha rahunathan

சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது மியூசிக் அக்கடமியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான, அக்கடமியின் சங்கீத கலாநிதி விருதுக்கு பிரபல பாடகி சுதா ரகுநாதன் பெயர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

அத்துடன் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் திகதி தொடங்கவுள்ள அக்கடமியின் 87வது இசைவிழா மற்றும் கருத்தரங்கை தலைமையேற்று நடத்தவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி நடைபெறவுள்ள இசைவிழா (சதஸ்) நிறைவு விழாவில் சுதா ரகுநாதனுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுகிறது.

மேலும் இந்த விழாவில் அகாடமியின் சார்பிலான சங்கீத கலா ஆச்சார்யா விருது பாடகர்கள் டி.பசுபதி, கல்யாணி சர்மா ஆகியோருக்கும், டி.டி.கே.விருது புல்லாங்குழல் கலைஞர் டாக்டர் பிரபஞ்சம் சீதாராமன், மிருதங்க கலைஞர் தஞ்சாவூர் ராமமூர்த்தி ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது.

இசை ஆராய்ச்சியாளர் விருது டாக்டர் ஆர்.எஸ்.ஜெயலட்சுமிக்கும், வயலின் இசைக்கலைஞருக்கான பப்பு வெங்கடராமையா விருது எச்.கே.நரசிம்மமூர்த்திக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நாட்டிய கலா ஆச்சார்யா விருது பிரபல பரதநாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரனுக்கு ஜனவரி மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ள நாட்டிய விழாவில் வழங்கப்படும்.

மேற்கண்ட தகவலை மியூசிக் அக்கடமியின் தலைவர் என்.ரவி அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.