இலங்கையில் தங்க நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி!!

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 163,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 176,500 ரூபாவாக காணப்படுகிறது.

அதேவேளை 22 கரட் தங்கப்பவுணொன்று 163,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 22,062.50 ரூபாவாகவும்,

22 கரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 20,412.50 ரூபாவாகம் காணப்படுகிறது. இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 350 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் சொகுசு பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு (25.03.2024) இடம்பெற்றுள்ளது.

சொகுசு பேருந்தொன்று வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார்சைக்கிளை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சின்னராசா சுதன்ராஜ் (வயது 40) என்பவராவார்.

சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை வந்த கப்பலால் அமெரிக்காவில் சுக்குநூறான முக்கிய பாலம் : 20 பேரை தேடும் மீட்புக் குழு!!

இரண்டாம் இணைப்பு

சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த டாலி (Dali) என்ற பெயரிலான சரக்கு கப்பல் பால்டிமோர் வழியாக இலங்கைக்கு பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் பாலத்தின் ஊடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாலம் இடிந்து வீழ்ந்ததில் 20 பேர் ஆற்றில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முதல் இணைப்பு

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பெல்ட்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பாரிய கப்பல் ஒன்று பாலத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலம் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளமையினால் பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அப்போது பாலத்தில் சுமார் 4 வாகனங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மீட்புக் குழுக்கள் கடுமையாக போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் பெல்ட்டிமோர் மேயர் M. Scott தெரிவித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பாலம் Patapsco ஆற்றின் குறுக்கே செல்கிறது. இது ஒரு பயங்கரமான அவசரநிலை என பெல்ட்டிமோர் தீயணைப்புத் துறையின் தகவல் தொடர்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இப்போது எங்கள் கவனம் இந்த மக்களை மீட்டு மீட்கும் முயற்சியில் உள்ளதென குறிப்பிட்டுள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக பலர் உயிரிழந்திருக்கலாம் என மீட்பு குழுவினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

திருவிழா கூட்டத்தில் தவறி விழுந்த குழந்தை… தேர் சக்கரம் ஏறி உயிரிழந்த சோகம்!!

கேரள மாநிலம், கொல்லம் அருகே சமயவிளக்கு திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 5 வயது பெண் குழந்தை தேர் சக்கரத்தில் சிக்கி பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கரா தேவி கோயிலில் சமய விளக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் ஆண்கள், பெண்களை போன்று வேடமிட்டு விளக்குகள் ஏந்தி அம்மனை வழிபடுவர்.

சமய என்றால் ‘அலங்காரம்’ என்று பொருள். ஆண்கள், பெண்களை போல் அலங்காரம் செய்து, விளக்குகள் ஏந்தி வந்து வழிபடுவதால் இது ‘சமயவிளக்கு’ திருவிழா என அழைக்கப்படுகிறது.

இந்த நாளில் தேவி, தனது பக்தர்களை கண்டு, ஆசி வழங்குவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இந்த திருவிழாவில் திருநங்கைகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அம்மனை வழிபடுகின்றனர்.

நேற்று இரவு, இந்த திருவிழாவுக்கு ராமேசன் – ஜிஜி ஆகிய தம்பதியினர் தங்களது மகள் ஷேத்ராவுடன் (5) வந்திருந்தனர். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ராமேசன் கையில் இருந்த ஷேத்ரா தவறி விழுந்தார்.

அப்போது விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த தேர், குழந்தையின் மீது ஏறியது. இதில், படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆயினும் குழந்தை ஷேத்ரா பரிதாமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சவாரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பரில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஒரு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 மாணவர்கள் பலியானதுடன் 60 மாணவர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஸு காலமானார் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிரபல நக்கைசுவை நடிகர் லொள்ளு சபா சேஸு மருத்துவமவ்னியில் சிகிறை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் செஷூ. 2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த இவர், சன் டிவியின் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்திருந்தார். சின்னத்திரையில் நடித்துக்கொண்டே வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கிய சேஷூ நடித்திருந்தார். அண்மையில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்திலும் இவரது நடிப்பில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் சேஷுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானில் 100 ஆண்டுகளுக்கு பின் இன்று நிகழும் அபூர்வ நிகழ்வு… இந்த நாடுகளில் காணலாம்!!

வானில் 100 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வ சந்திரகிரகணம் இன்றையதினம் முதன் முறையாக நிகழ்கிறது. முன்னதாக இப்படியொரு சந்திர கிரகணம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். இந்த சந்திர கிரகணத்தை இலங்கை மற்றும் இந்தியா காணமுடியாது.

எனினும், அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, பிரித்தானியா, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காண முடியும்.

இந்த கிரகணம், இலங்கை நேரப்படி காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 03:02 வரை 4 மணி 36 நிமிடங்கள் வரை நீடிக்கும். இலங்கையில் இது பகல் பொழுதில் நிகழ்வதால் நம்மால் பார்க்க இயலாது.

மேலும் சூரிய கிரகணத்தைதான் வெறும் கண்களில் பார்ப்பது மிகவும் ஆபத்தானது. ஆனால், சந்திர கிரகணத்தை பார்க்கலாம். உயரமான மேகமூட்டம் எதுவும் இல்லாத இடத்தில் நின்று பார்த்தால் தெளிவாக சந்திரனை கிரகணம் காணலாம் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முகநூல் நட்பால் பதின்ம வயது சிறுமி வன்புணர்வு : நால்வரை தேடும் பொலிஸ்!!

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சகோதரர்கள் உட்பட நான்கு சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை சந்தேக நபர்கள்,சிறுமியுடன் முகநூல் மூலம் அறிமுகமானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் இரு ஆண்களுக்கு ஒரே மனைவி : ஒரே வீட்டில் வாழும் அதிசயம்!!

இலங்கையில் பெண் ஒருவர் இரு கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் சம்பவம் பலருக்கு வியப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அந்த சம்பவத்தின் பின்னனி நெகிழவைப்பதாக அமைந்துள்ளது.

தமிழர் பிரதேசம் ஒன்றில் 2015 ஆம் ஆண்டு திருமணமாகி 10 நாட்களில் கணவர் , கட்டாருக்கு வேலைக்கு சென்ற நிலையில் , அங்கு சென்று ஆறு மாதத்தில் திடீரென ஏற்பட்ட விபத்தில் கணவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

கட்டாரில் கோமா நிலைக்கு சென்ற கணவரை அவருடன் கூட இருந்த நண்பர் அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்துள்ளார். கோமாவில் இருந்து மீண்ட கணவன், பக்கவாத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டுக்கு திரும்பி வருகின்றார்.

இலங்கை வந்த அவருக்கு மனைவியை பார்த்து மிகவும் வேதனையாகி விட்டது. தீர யோசித்த கணவர், தனது கட்டார் நண்பரிடம் தனது மனைவியை திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில் நண்பனின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அவர் , நண்பனின் மனைவியை திருமணம் செய்து இலங்கையில் வசித்து வருகின்றார். முதல் கணரும் அவர்களுடனேயே வசித்து வருவது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது மனைவிக்கு விவாகரத்து கொடுத்து நணபரை திருமணம் செய்த வைத்த பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவரை, மனைவியும் நண்பரும் மிக கவனமாக கவனித்துகொள்கின்ற சம்பவம்தான் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன் நம்பி வந்த பெண்ணின் வாழ்க்கை வீணாகி விடக்கூடாதே என்ற கவலையில், தன் நண்பரையே மனைவிக்கு திருமணம் செய்துவத்த முன்னாள் கணவரும், இவரை எதற்கு பார்க்கவேண்டும் என எண்ணாமல் தன் முதல் கணவரை தாங்கும் இந்த குடும்பத்தின் செயலும் சமுக வலைத்தள வாசிகளை நெகிழவைத்துள்ளது.

பேஸ்புக்கில் யுவதிக்கு பாலியல் லஞ்சம் கேட்ட 21 வயது இளைஞன் கைது!!

பேஸ்புக்கில் போலி கணக்குகளை உருவாக்கி ராகம யுவதி ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய 21 வயது இளைஞனை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் சுமார் 50 போலி முகநூல் கணக்குகளை வைத்திருப்பதாகவும் அதன் மூலம் பல இளம் பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ராகம பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய யுவதியின் முகநூல் கணக்கில், சுமார் 2 வருடங்களாக நண்பராக இருந்த இளைஞன் ஒருவர், பல சந்தர்ப்பங்களில் காதல் உறவைத் தொடங்குமாறு தெரிவித்திருந்த நிலையில் அவர் அந்த அழைப்பை நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை அந்த இளம்பெண் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்து ஆத்திரமடைந்த இளைஞன், இளம்பெண்ணுக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய இணையதள இணைப்புடன் போலி பெண் பேஸ்புக் கணக்கு மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த பெண் அந்த லிங்கை ஓபன் செய்யாததால் அதை சரிபார்க்குமாறு காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவரது காதலன் இணைப்பைத் திறந்தபோது சந்தேகத்திற்குரிய இளைஞனின் பேஸ்புக் கணக்கை பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் சந்தேகமடைந்த இளைஞன், காதலனுக்கும், காதலிக்கும் இடையே நடந்த உரையாடலில் ஈடுபட்டு, இருவரும் பரிமாறிக் கொண்ட பெண்ணின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து, நிர்வாணப்புகைப்படங்களாக எடிட் செய்துள்ளார். பின்னர், சந்தேகநபர் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை காட்டி, அவரது நிர்வாண வீடியோ காட்சிகளை கேட்டதாக கூறப்படுகிறது.

சந்தேக நபரிடம் நிர்வாண வீடியோ அனுப்பாவிட்டால், அவரது எடிட் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதன்படி, குறித்த யுவதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதன் பின்னர் பொலிஸாரின் அறிவுறுத்தலின் பிரகாரம் சந்தேகநபரை பிடிக்க பிலியந்தலைக்கு வருமாறு பெண் ஊடாக சந்தேக நபருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

சந்தேகநபர் யுவதியை சந்திப்பதற்காக கடந்த சனிக்கிழமை பிலியந்தலை பேருந்து நிலையத்திற்கு வந்த போதே பிலியந்தலை பொலிஸாரால் குறித்த நபரை கைது செய்ய முடிந்தது. ஹிக்கடுவ, கோனாபினுவல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இப்படி ஒரு மனிதரா? தள்ளாத வயதிலும் வியக்கவைத்த முதியவர்!!

கண்டியை சேர்ந்த 83 வயதான பியசேன எனும் முதியவர் தள்ளாத வயதிலும் தனது உழைப்பால் பலரையும் வியக்க வைத்துள்ளார். இந்த வயதிலும் கணியில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து வியாபாரம் செய்கின்றாராம் இவர். சோம்பேறிகளுக்கு இப்படிப்பட்ட வியாபாரிகள் முன்னுதாரண புருஷர்களாகத் திகழ்கின்றனர்.

அதுமட்டுமல்லாது சிறு வயதில் உடலில் பலமிருந்தும் யாசகம் கேட்பவர்களுக்கு இப்படிப்பட்ட மனிதர்கள் சிறந்த உதாரணம் என சமூக வலைத்தளத்தில் 83 வயதான இந்த முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

இவர் விற்கும் துடைப்பம் 200 ரூபா மட்டுமேதானாம். இவரை காண்பவர்கள் முதியவரின் உழைத்து வாழவேண்டும் எனும் அவரது முயற்சியை பாராட்டி அவர் விற்கும் துடைப்பத்தை வாங்கி உதவலாமே.

கோர விபத்தில் பெண் உட்பட இருவர் பரிதாபமாக பலி!!

மாத்தளை மாவட்டம் வரக்காமுறை பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தொன்றில் பெண் ஒருவரும் இளைஞன் ஒருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்றையதினம் (25.03.2024) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதன்படி, மோட்டார் சைக்கிளில் பயணித்த 31 வயதுடைய பெண் ஒருவரும் 26 வயதுடைய இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

81 வயதில் இடம்மாறிய கர்ப்பம் : அறுவை சிகிச்சையை எதிர்கொண்ட மூதாட்டி!!

இடம்மாறிய கர்ப்பத்தினால் 81 வயதில் அறுவை சிகிச்சையை எதிர்கொண்ட மூதாட்டி ஒருவர் சிகிச்சையின் பின்னர் அவருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக தெரிய வருகையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த 81 வயதான டேனிலா வேரா என்பவருக்கு திடீரென அடிவயிற்றில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது.

சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டேனிலாவுக்கு 3டி ஸ்கேன் எடுத்ததில் அவரது அடி வயிற்றுப் பகுதியில் இறந்த குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.

டெனிலாவுக்கு, கரு கர்ப்பப்பையில் உண்டாகாமல், கருப்பைக்கு வெளியில் உண்டாகியுள்ளது. இது இடம்மாறிய கர்ப்பம் (Ectopic pregnancy) எனப்படுகிறது.

டேனிலா முதன் முதலாக கருவுற்றிருந்தபோது இந்த இடம் மாறிய கர்ப்பம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. கருப்பையை விட்டு வெளியே வளரும் கருவானது, போதிய வளர்ச்சியின்றி இறந்துவிடும். இறந்த கருவானது சில நாட்களில் கல் குழந்தையாக மாறிவிடும்.

அத்துடன், இதற்கு முன்பு அவர் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வயிற்றில் இன்னொரு இறந்த கரு இருப்பதை அறியாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்று சிகிச்சைக்காக முதலில் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டார்.

இவ்வாறிருக்க, 56 வருடங்களாக வயிற்றிலிருந்த கல் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வைத்தியர்கள் நீக்கியுள்ளனர். ஆனால், அவருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இந்த அபூர்வ ‘கல் குழந்தை’ மூதாட்டியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பாடசாலை மாணவி விபரீத முடிவால் உயிரிழப்பு!!

வவுனியாவில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா மாதர்பணிக்கர் மகிழங்குளம் பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியே உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (23) மாலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் சிறிதரன் அனார்த்தினி வயது 16 என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவியின் மரணத்திற்கு காதல் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மாதவிடாய் கோளாறு : பரிதாபமாக பலியான பல்கலைக்கழக மாணவி!!

களனிப் பல்கலைக்கழக கலைப்பிரிவு இறுதியாண்டு மாணவி ஒருவர் மாதவிடாயால் ஏற்பட்ட வயிற்று வலிக்கு தாமதமாக சிகிற்சை மேற்கொண்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதாந்த மாதவிடாய் சுழற்சி தினங்களில் ஏற்படும் கடுமையான வயிற்று வலியைக் கவனிக்காமல், முறையான வைத்திய சிகிச்சையைப் பெறாத காரணத்தினால் உயிரிழக்க நேரிட்டதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சம்பவத்தில் பதுளை , மஹியங்கனை, திபுலபலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் லக்மினி இனோகா திஸாநாயக்க என்ற 25 வயதுடைய யுவதியே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் அகால மரணமடைந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி கடந்த 2019 இல் களனி பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் மாணவி கடந்த இரண்டு வருடங்களாக மாதாந்திர மாதவிலக்கு நாளன்று வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், அந்த வலியை சகஜம் போல் தாங்கி கல்வி கற்று வந்துள்ளார்.

அதேவேளை இறுதியாண்டு மாணவி லக்மினியின் பட்டமளிப்பு விழாவும் இம்மாதம் 25ம் திகதிதான். தனது பட்டப்படிப்பு சான்றிதழுக்காக கடந்த 19ம் திகதி போட்டோ எடுத்திருந்தார்.

அன்றையதினம் மாதவிடாய் வயிற்றுவலி தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததால், சிகிச்சை பெறுவதற்காக நெருங்கிய தோழி ஒருவருடன் கிரிபத்கொட வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியிருந்ததால் ராகம வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி லக்மினியின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை ராகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கடந்த 22ம் திகதி மாலை 6.58 மணியளவில் லக்மினி உயிரிழந்தார். உயிரிழந்த லக்மினி அவரது குடும்பத்தில் உள்ள ஒரே பெண் குழந்தை என கூறப்படுகின்றது.

உயிரிழந்த லக்மினியின் பிரேத பரிசோதனை ராகம வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் ரமேஷ் அழகியவண்ணவினால் மேற்கொள்ளப்பட்டு திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன் ராகம வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி எஸ். எஸ். திஸாநாயக்க பிரேத பரிசோதனையை மேற்கொண்டுள்ளார். லக்மினியின் இறுதிக் கிரியைகள் நேற்று (25) மாலை உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

மாணவியின் துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக வலி கொடுத்தும், குறிப்பிட்ட நோயை அலட்சியப்படுத்தியதே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணம்.

மேலும் இதுபோன்ற அகால மரணங்கள் நமது பெற்றோர், பெரியவர்கள், சமுதாயத்திற்கு பெரும் பாடம் என்றும், உங்கள் குழந்தை ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், தாமதிக்காமல் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் அரிவுறுத்தியுள்ளனர்.

ஃபேஸ்புக் பழக்கம் இரட்டை கொலையில் முடிந்தது… ஓராண்டுக்குப் பின் குற்றவாளி கைது!!

ஃபேஸ்புக் மூலம் பழகிய இளம்பெண் மற்றும் அவரது மகனை கொலை செய்தவர் ஓராண்டுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர் ஸ்ருதி. இவரது மகன் ரோஹன்(13). இந்த நிலையில், விஜயபுராவைச் சேர்ந்த சாகர் நாயக் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டது.

திருமணமான ஸ்ருதியுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் சாகர் நாயக்கிற்கு காதலமாக மாறியது. இதையடுத்து அவர்களது பழக்கம் நெருக்கமானது. இந்த நிலையில், ஸ்ருதியின் நடத்தையில் சாகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

இதனால் கோபித்துக் கண்டு விஜயபுராவில் உள்ள சிந்தகி சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு சாகர் வந்தார். ஆனால், அவரை பிரிய மனமில்லாத ஸ்ருதி, தனது மகன் ரோஹனுடன் சாகரைத் தேடி விடுதிக்கு 2023 மார்ச் 13 அன்று வந்தார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஸ்ருதியை கழுத்தை நெரித்து சாகர் கொலை செய்தார்.

இதை நேரில் பார்த்த ரோஹன் வெளியே சொல்லி விடுவானோ என்ற அச்சத்தில் அவனையும் சாகர் கொலை செய்தார். இதன்பின் அவர்கள் இருவரது உடல்களையும் துணி மூட்டையில் கட்டி மகாராஷ்டிரா எல்லையில் உள்ள சித்தாபூர் கிராமத்தின் எல்லையில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு சாகர் தலைமறைவானார்.

இதன்பின் ஒரு வாரம் கழித்து, பைகள் கிணற்றில் மிதந்தன. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த திருக்கோட்டை போலீஸார், இரண்டு சடலங்களை கண்டெடுத்தனர். ஆனால், உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ருதியும், அவரது மகனும் காணவில்லை என்று அவரது உறவினர்கள் மைசூரில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

மைசூருவில் காணாமல் போகும் போது ஸ்ருதி, ரோஹன் அணிந்திருந்த உடைகள் கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட உடல்களில் இருந்த உடைகளும் ஒன்றாக இருந்தன.

இதையடுத்து ஸ்ருதியின் உறவினர்கள், இறந்த உடல்களைக் அடையாளம் கண்டு பிடித்தனர். இதனால் ஸ்ருதியின் செல்போன் தொடர்புகளை தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் ஸ்ருதிக்கு சாகர் நாயக் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை பிடித்து போலீஸார் விசாரித்த போது உண்மை தெரிய வந்தது. அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த ஊரக போலீஸார், சாகரை நேற்று இரவு கைது செய்தனர்.

ஃபேஸ்புக் மூலம் பழகிய பெண்ணையும், அவரது மகனையும் கொலை செய்த வாலிபர் ஒரு வருடத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண் எதிரே கிணற்றில் குதித்த காதலி… காப்பாற்றாமல் தப்பிச் சென்ற காதலன்!!

பொருந்தா காதல் 30 வயதேயான இளம்பெண்ணின் வாழ்வையே பறித்துக் கொண்டுள்ளது. ஏற்கெனவே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாய் நிற்கிறது.’

30 வயதேயான மதுபிரியா, தன்னுடைய கள்ளக்காதலன் தொடர்ந்து 2வது திருமணத்திற்கு வற்புறுத்தியதால், மன உளைச்சலில் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்து கொண்டது சோகம் என்றால், கண் எதிரே கிணற்றில் குதித்ததைப் பார்த்தும், காப்பாற்றாமல் அப்படியே தப்பி ஓடிச் சென்றவனை என்ன சொல்வது?

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மது பிரியா (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில், கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மதுபிரியா கடந்த 2 வருடங்களுக்கு முன் கணவரைப் பிரிந்து ஆலங்காயம் காமராஜர் நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மதுபிரியா நிம்மியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நிம்மியம்பட்டு அருகே உள்ள கிணற்றில் குதித்து திடீரென மதுபிரியா தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியடைய செய்தது. இது தொடர்பாக தகவல் அறிந்து சென்ற ஆலங்காயம் போலீசார், வழக்குப்பதிவு செய்து அதேப் பகுதியை சேர்ந்த சரத்குமார் (34) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், மதுபிரியா தற்கொலைச் செய்து கொண்ட சம்பவத்தன்று சரத்குமார், மது பிரியாவை வற்புறுத்தி அருகே உள்ள மராட்டிபாளையம் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் அந்தப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே தனிமையில் பேசிக்கொண்டிருந்த போது, சரத்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மதுபிரியாவை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனஉளைச்சலுக்கு ஆளான மது பிரியா, சரத்குமாரின் கண் எதிரிலேயே திடீரென ஓடிச் சென்று அருகில் இருந்த கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், கண் எதிரே மதுபிரியா கிணற்றில் குதித்ததைப் பார்த்தும், அவரை காப்பாற்றாமல் சரத்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

மது பிரியாவுக்கு திருமணம் ஆகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால் இது குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நர்ஸ் தற்கொலைக்கு காரணமாக இருந்த சரத்குமாரை கைது செய்தனர்.