மனைவியின் கண்கள், கன்னங்களை கடித்து துப்பிய கணவன்!!

கர்நாடகாவில்..

கர்நாடகா மாவடத்தில் ஷிஷிலா கிராமத்தில், குடிபோதையில் கணவர் ஒருவர் மனைவி மற்றும் மகளை, கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சுரேஷ் கவுடா ஷிஷிலா கோட்டேபாகிலுவில் வசித்து வருகிறார்.

இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியை அடிப்பது வழக்கமான ஒன்றாகி இருந்தது. இதனால் கணவன் மனைவியிடையே தினமும் சண்டை, சச்சரவு, தகராறு தான். வழக்கம் போல் அன்றும் குடித்துவிட்டு முழு போதையில் இருந்தார்.

கணவன் மனைவிக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் சுரேஷ் கவுடா மனைவியின் கண் மற்றும் கன்னத்தை கடித்து சதையை கடித்து துப்பி விட்டார். அலறித்துடித்த மனைவியை கட்டையால் அடித்து கொடூரமாக தாக்கினார். இதனால் மனைவியின் இடது கண் முற்றிலும் சேதமடைந்தது.

தாயின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது மகள் இதனை தடுக்க வந்தாள் . போதையில் இருந்த சுரேஷ் கவுடா மகளின் தலை மற்றும் கண்களிலும் தாக்கியுள்ளார். உயிரைக் காப்பாற்றுவதற்காக தந்தையிடம் இருந்து தப்பிச் சென்ற அவர், அக்கம்பக்கத்தினரிடம் விசயத்தைக் கூறி தாயை காப்பாற்ற உதவி கோரினார்.

அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்ததால் கணவர் சுரேஷ் கவுடா பின்வாசல் தோட்டம் வழியாக தப்பி குதித்து ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த தாயும், மகளும் மீட்உஜிராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் தப்பி ஓடிய சுரேஷ் கவுடாவும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

643 முறை மீறல்… 30000 மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 3.22 லட்சம் அபராதம்!!

இந்தியாவில்..

‘தலைக்கவசம் உயிர்கவசம்’ என்ற வாசகம் அனைவருக்கும் பொருந்தும். வாகனங்களில் செல்வோர் தங்கள் உயிரை பாதுகாக்கும் விதமாக அதற்கு தேவையான பாதுகாப்பு கவசத்தை அணிய வேண்டும்.

பைக்கில் செல்வோர் ஹெல்மெட், காரில் செல்வோர் சீட் பெல்ட் உள்ளிட்டவை கட்டாயம் அணிய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்கள் உயிருக்கு மட்டுமின்றி அடுத்தவர் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அதனை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்கள் இந்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல், அதி வேகமாக செல்வோர் உள்ளிட்டவை யாரேனும் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு மக்கள் சாலை விதிகளை மீறுவதால், அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும் சிலர் இந்த தவறை மறுபடி மறுபடி செய்கின்றனர். இதனால் இந்தியா முழுவதுமுள்ள அந்தந்த மாநில அரசுகள் இதற்கு அண்மைக்காலமாக கெடுபிடி வைக்கின்றது.

மேலும் யாரேனும் அதீத வேகத்தில் சென்றாலோ அல்லது சிக்னலை மதிக்காமல் சென்றாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் ஏதேனும் சாலை விதிகளை மீறி சென்றாலோ அவர்களை அந்தந்த ட்ராபிக் சிக்னலில் இருக்கும் கேமராக்கள் காட்டி கொடுத்துவிடும். அதன்படி அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இதில் சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது. இதனால் பெரிதாக யாரும் தப்பிக்க இயலாது. தமிழ்நாட்டிலும் ஹெல்மெட், லைசன்ஸ் இல்லாமல் செல்வோருக்கு, சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இது கர்நாடகத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது கங்காநகர். இங்கு வசிக்கும் மாலா என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தனது ஸ்கூட்டியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார்.

அவ்வாறு அவர் செல்லும்போதெல்லாம் ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மீறியும் சென்றுள்ளார். இதனால் அவருக்கு ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்பட்டது.

அவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம் தற்போது ரூ.3.22 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. KA 04 KF 9072 என்ற பதிவு எண் கொண்ட அந்த வாகனம் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்போது, அதில் சென்ற நபர் சாலை விதிகளை மீறியுள்ளார்.

இதனை ஒவ்வொரு ட்ராபிக் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சி பதிவு செய்து, பொருத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களைப் பயன்படுத்தி அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத தொகையானது, அந்த வாகனத்தின் தொகையை விட அதிகமானதாகும். அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும்.

அவர் கட்ட தவறினால், அது மேலும் மேலும் சேர்ந்துகொண்டு போகும். இறுதியில் அந்த பெண் அபராதத்தை கட்டவில்லை என்றால், அதிகாரிகளால் வண்டி பறிமுதல் செய்யப்படும்.

தற்போது இந்த நபருக்கு இதுவரை சாலை விதிகளை 643 முறை மீறியதாக ரூ.3.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களைப் பயன்படுத்தி வழங்கப்பட்டன. இந்த நிகழ்வால் தற்போது அந்த நபர் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் இளைஞர் ஒருவர் 146 முறை ஹெல்மெட் அணியாமல் டிராபிக் கேமராவில் சிக்கியதால் அவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒவ்வொரு முறையும் அபராதம் கட்டாமல் இருந்து வந்ததால், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அவரது பைக்கை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1000 ரூபாய் கடனை திரும்பக் கேட்டதால் ஆத்திரம் கத்திரிக்கோலால் குத்தி நண்பனை கொன்ற இளைஞன்!!

வேளச்சேரியில்..

மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில்நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 130வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (22). அதே குடியிருப்பில் 106வது பிளாக்கில் வசித்து வருபவர் ராஜேஷ் (22). நண்பர்களான இவர்கள், சென்ட்ரிங் வேலை செய்து வந்தனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன், கார்த்திக்கிடம், 1000 ரூபாயை ராஜேஷ் கடனாக பெற்றுள்ளார். ஆனால், இந்த பணத்தை கார்த்திக் பலமுறை கேட்டும், திருப்பி கொடுக்காமல் ராஜேஷ் அலைக்கழித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு 9.30 மணியளவில், அதே பகுதி 26வது பிளாக்கில் வசிக்கும் தினேஷ் என்பவருடன், ராஜேஷ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக், ‘‘மது வாங்க பணம் இல்லை. அதனால், என்னிடம் கடனாக பெற்ற 1000 ரூபாயை திரும்பி கொடு,’’ என்று ராஜேஷிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ராஜேஷ், ‘‘என்னிடம் பணம் இல்லை’’, என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக், ராஜேஷை ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, உடனிருந்த நண்பர் தினேஷ், இருவரையும் சமாதானம் செய்துள்ளார். பின்னர், ராஜேஷை அங்கிருந்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.

ஆனாலும், ஆத்திரம் தீராத கார்த்திக், சிறிது நேரத்தில் தினேஷ் வீட்டிற்கு சென்று கதவை தட்டினார். நீண்ட நேரத்திற்கு பிறகு தினேஷ் கதவை திறந்து, ‘‘ஏன் இப்படி கதவை தொடர்ந்து தட்டுகிராய்,’’ என கேட்டுள்ளார்.

அப்போது, ‘‘என்னிடம் கடனாக வாங்கி பணத்தை ராஜேஷ் திருப்பி கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வேன்,’’ என கார்த்திக் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை வீட்டினுள் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ராஜேஷ் ஆத்திரமடைந்து, அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்து கார்த்திக் மார்பு மற்றும் விலா பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

இதையடுத்து ராஜேஷ், தினேஷ் மற்றும் சக நண்பர்கள் சேர்ந்து மயங்கிய நிலையில் இருந்த கார்த்திக்கை மீட்டு, ஆட்டோவில் ஏற்றிகொண்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து, ஆட்டோவில் கார்த்திக் உடலை ஏற்றிக்கொண்டு பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த ராஜேஷ், ஆட்டோவை காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தினார். பின்னர் காவல் நிலையத்திற்குள் சென்று அங்கிருந்த போலீசாரிடம், ஆத்திரத்தில் தனது நண்பன் கார்த்திக்கை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்துவிட்டேன்.

அவரது உடல் காவல் நிலையத்தின் வெளியில் நின்றுள்ள ஆட்டோவில் உள்ளது,’’ என்று கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக வெளியே சென்று ஆட்டோவில் பார்த்தனர்.

அதில், கார்த்திக் சடலம் இருந்தது. இதனையடுத்து, கார்த்திக்கின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலையில் கல்லை போட்டு மனைவி படுகொலை : சொந்த ஊருக்கு தப்ப முயன்ற கணவன்!!

தாம்பரத்தில்..

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குத்தனூர் பகுதியில் அரசு விவசாய ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்குள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீஷ் கைலாஷ் (30), பிரியங்கா குமாரி (25) என்ற தம்பதி கடந்த 15 நாட்களாக தங்கி அப்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் பிரியங்கா குமாரி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

பிரதீஷ் கைலாசுக்கும், பிரியங்கா குமாரிக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த பிரதீஷ் கைலாஷ், மனைவி பிரியங்கா குமாரியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு ரயில் மூலம் தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து ரயில் மூலம் சொந்த ஊருக்கு தப்பிச் செல்ல முயன்ற கைலாஷை மணிமங்கலம் போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விசாரிக்கின்றனர்.

பாடசலை மாணவன் கழுத்து அறுபட்டு சடலமாக மீட்பு… கதறித் துடித்த பெற்றோர்!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பல்லவாடா கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சுரேஷ் சிந்துமதி. இவர்களின் மகன் அனீஸ். இவர் 4ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி சென்ற இச்சிறுவன் திடீரென மாயமானான். 2 நாட்களுக்கு பிறகு மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அனீஸ் 2 நாட்களுக்கு முன் சிறுவன் திடீரென காணாமல் போன நிலையில் போலீசார் சிறுவனை மீட்பதில் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

அப்பகுதியில் வசித்து வருபவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . கடைசியாக பைக்கில் சிறுவனை அழைத்து சென்ற ரேகாவை காவல்துறையினர் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, ஆந்திர மாநிலம் வருதையபாளையம் காட்டுப்பகுதியில் சிறுவன் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. சிறுவனின் சடலத்தை கண்ட பெற்றோர் கதறித் துடித்தனர்.

யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் 300க்கும் மேற்பட்ட கற்கள் : அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!

தாய்வானில்..

யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ள சம்பவம் ஒன்று தாய்வானில் பதிவாகியுள்ளது.

தாய்வானில் சியோ யு என்ற 20 வயது யுவதியின் சிறுநீரகத்தில் இருந்தே 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி நீர் அருந்துவதற்கு பதிலாக வேறு பானங்களை அதிகமாக அருந்தியதன் காரணத்தினால்,

அவரது சிறுநீரகத்தில் அதிகமாக கற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் அறுவை சிகிச்சையின் மூலம் கற்கள் அகற்றப்பட்ட நிலையில் , சியோ யு தற்போது நலமுடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம் பெண் வெட்டிக்கொலை… முகமூடி நபர்கள் வெறிச்செயல்!!

அம்பத்தூரில்..

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி நந்தினி (27). பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் சதீஷ் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் நந்தினியின் உறவினரான மதன் என்பவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று மாலை நந்தினி, அம்பத்தூர் தொழிற்பேட்டையை அடுத்த ஐ.சி.எப்.காலனிக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென நந்தினியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியுள்ளார்கள். இதில் படுகாயம் அடைந்த நந்தினி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அந்த கும்பல் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார், நந்தினி உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பாலாஜி கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் அவரது கூட்டாளிகள் சதீஷின் மனைவியான நந்தினியை வெட்டிக்கொன்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முகமூடி கும்பலை தேடி வருகிறார்கள். உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த இளம்பெண் அம்பத்தூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நண்பர்களிடம் பேசிய காதலி.. ஆத்திரமடைந்த காதலன் செய்த செயல்!!

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிரா தானேயில் மூத்த அதிகாரி ஒருவரின் மகன் தனது காருடன் காதலி மீது இடிக்க சென்றதால் 26 வயது பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். ப்ரியா சிங் என்ற பெண், தனது காதலன் தன்னை அடித்ததாகவும், கழுத்தை நெரிக்க முயன்றதாகவும், பின்னர் தனது டிரைவரிடம் தன்னை வெட்டச் சொன்னதாக தெரிவித்துள்ளார்.

தானேயில் உள்ள ஹோட்டல் அருகே திங்கள்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது, மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் கெய்க்வாட்டின் மகன் அஸ்வஜித் கெய்க்வாட் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுமார் 5 வருடங்களாக காதலித்து வரும் அஸ்வஜித்திடம் இருந்து செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனக்கு ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்ததாக பிரியா கூறுகிறார்.

“அங்கு சென்றதும் சில நண்பர்களைச் சந்தித்தேன், என் காதலன் வினோதமாக நடந்துகொள்வதைக் கண்டேன். அதனால் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன், நாங்கள் தனிமையில் பேச வேண்டும் என்று வற்புறுத்தினேன்,” என்று அவர் கூறினார்.

ப்ரியா விழாவிலிருந்து வெளியேறி, அஸ்வஜித்திடம் பேசி பதற்றத்தைத் தணிக்கலாம் என்ற நம்பிக்கையில் காத்திருந்தாள். ஆனால் அவர் தனது நண்பர்களுடன் வெளியே வந்து அவளைத் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

“எனது காதலனும் அவனது நண்பனும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி, என்னைக் காப்பாற்றும்படி என் காதலனைக் கேட்டேன், துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம், இது என் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒன்றைத் தொடங்க வழிவகுத்தது.

என் காதலன் என்னை அறைந்தார், என் கழுத்தை நெரிக்க முயன்றார், நான் அவரைத் தள்ள முயன்றேன். என் கையை கடித்து, என்னை அடித்தார், என் தலைமுடியை இழுத்தார், மற்றும் அவரது நண்பர் என்னை தரையில் தள்ளினார், “என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் எழுதினார்.

ஆனால் அது அங்கு முடிவடையவில்லை. அவர் தனது காரிலிருந்து தனது தொலைபேசி மற்றும் பிற பொருட்களை எடுக்க முயன்றபோது, ​​அஷ்வஜித் தனது டிரைவரை அவளை வெட்டச் சொன்னார் என்று போலீசார் தெரிவித்தனர்.

“இந்தச் சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கோட்பந்தர் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்தது, அங்கு அந்தப் பெண் அஸ்வஜித் கெய்க்வாட்டைச் சந்திக்கச் சென்றிருந்தார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பாதிக்கப்பட்டவர் தனது காரில் இருந்து தனது பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறத் தொடங்கினார். வாகனத்தை ஓட்டிச் சென்றவர் அவளை இடித்துள்ளார், இதனால் அவர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

அஸ்வஜித் தனது தொலைபேசியைத் திருப்பித் தராததால், ஒரு வழிப்போக்கர் நிறுத்தி உதவிக்கு அழைத்ததற்கு, கிட்டத்தட்ட அரை மணி நேரம், வலியுடன் சாலையில் கிடந்ததாக ப்ரியா கூறுகிறார்.அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

“எனது வலது கால் உடைந்துவிட்டது, நான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது, என் உடல் முழுவதும் காயங்கள், என் கைகள், என் முதுகு மற்றும் என் வயிற்றில் ஆழமான காயங்கள் உள்ளன, நான் படுத்த படுக்கையாக இருப்பேன். குறைந்தபட்சம் 3-4 மாதங்கள் மற்றும் அதன் பிறகு, இன்னும் 6 மாதங்கள் நடக்க நான் முயற்சிப்பேன். “என்று பிரியா சிங் மருத்துவமனையில் போலீசாரிடம் கூறினார்.

மோட்டார் சைக்கிளிற்கு சகோதரன் பெட்ரோல் ஊற்றும்போது தங்கைக்கு நேர்ந்த சோகம்!!

கர்நாடகவில்..

கர்நாடக மாநிலத்தில் பைக்கிற்கு அண்ணன் பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருக்கும் போது மெழுகுவர்த்தி பிடித்துக் கொண்டிருந்த தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், எடியூரு என்ற பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மணா. இவருக்கு, 10ஆம் வகுப்பு படித்து வந்த ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த 8 -ம் திகதி இரவு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பைக்கிற்கு கேன் மூலம் அண்ணன் பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்தார்.அப்போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால், பெட்ரோல் கீழே சிந்தாமல் இருக்க தங்கை சௌந்தர்யா மெழுகுவர்த்தி மூலம் வெளிச்சம் காண்பித்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் மற்றொரு கையில் வேறொரு பெட்ரோல் கேன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், திடீரென மின் இணைப்பு வந்துள்ளதால் கையில் இருந்த பெட்ரோல் கேனையும், மெழுகுவர்த்தியையும் பதற்றத்தில் சிறுமி கீழே போட்டுள்ளார். அப்போது, பெட்ரோல் ஓடிய இடமெல்லாம் தீ மளமளவென பரவியது. இதில் சிறுமியின் மீதும் தீ வேகமாக பற்றியது.

இதனிடையே, வீட்டுக்கு பக்கத்திலேயே மளிகை கடை ஒன்றை லஷ்மணா நடத்தி வருகிறார். அவர் கடையும் இந்த தீ விபத்தில் சேதமடைந்துள்ளது. இதில், காயமடைந்த சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில், லஷ்மணா தனது மளிகைக்கடையில் சட்டவிரோதமாக கேன் மூலம் பெட்ரோல் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

புலம்பெயர் தேசத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு இளைஞன்!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் இணைந்து மட்டக்களப்பு செட்டிபாளையத்தை பூர்விகமாக கொண்ட இளைஞன் மிக இளவயதில் சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தை சேர்ந்த தற்போது அவுஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்துவரும் ஹரி பிரதீபன் என்ற இளைஞன் அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் அதிகாரியாக இணைந்து கொண்டான்.

ஹரி பிரதீபனின் தாயார் செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்.இவர்கள் தற்போது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.தற்போது மெல்பனில் வசிக்கும் குறித்த ஹரி பிரதீபன் எனப்படும் இளைஞன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரி பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுவயதில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படைக்கு தெரிவாகியுள்ள ஹரியை அவுஸ்திரேலிய படை பிரதானிகள் விருது வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பரவும் ஆபத்தான கோவிட் வைரஸ் இலங்கையிலும் நுழைந்துள்ளதாக எச்சரிக்கை!!

இந்தியாவில்..

இந்தியாவில் பரவி வரும் ஒமிக்ரோன் JN1 கோவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தாம் நம்புவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவந்தேர தெரிவித்துள்ளார்.

கொவிட் பரிசோதனைகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால் இலங்கையின் பரவல் பற்றிய உண்மைகளை விஞ்ஞான ரீதியாக முன்வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வயதானவர்கள், பல்வேறு நோய்களால் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், அதேபோல் மோசமான காற்றோட்டம் உள்ள நெரிசலான சூழலில் முகக் கவசங்கள் மீண்டும் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் எனன பேராசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

காய்ச்சல், இருமல், வாசனை, சுவை இழப்பு, நீடித்த அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, சாப்பிட இயலாமை மற்றும் வாந்தி உணர்வு ஆகியவை இந்த வகையின் அறிகுறிகளாகும்.இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் செயற்பாட்டில் உள்ளதால், அதிக ஆபத்துள்ள மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வது முக்கியம் என சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் கொச்சி நகரில் காய்ச்சல் போன்ற நோயின் காரணமாக பரிசோதிக்கப்பட்ட நோயாளிகளில் 30 சதவீதம் பேர் இந்த வகை கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குழந்தைகளின் தாயின் விபரீத முடிவு : இளம் பெண் சடலமாக மீட்பு!!

காலியில்..

காலியில் காணாமல் போன இரண்டைக் குழந்தைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பலப்பிட்டிய மங்கட கடற்கரையில் பெண் ஒருவரின் சடலத்தை அஹுங்கல்ல பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையில் இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் ஒருவர் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காலி, அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணே இவ்வாறு சென்றுள்ளார். கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளார்.

திருமணமாகி சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் சில தினங்களுக்கு முன்னர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் என்னால் வலியைத் தாங்க முடியவில்லை, அதனால் இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்ளமுடியவில்லை, எனவே நான் வீட்டை விட்டு செல்கிறேன் என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.

வீட்டை விட்டு செல்லும் போது கையடக்க தொலைபேசியை தவிர வேறு எந்த பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தாயின்றி குழந்தைகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையினால் காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு பொலிஸாரிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டியில் 132 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!!

கண்டியில்..

கண்டி மாவட்டத்தில் கடந்த 3 வருடங்களுக்குள் 16 வயதுக்கு குறைந்த 132 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் பாலித பண்டார சுபசிங்ஹ தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் கண்டி மாவட்ட 17 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் பாலித பண்டார சுபசிங்ஹ, கண்டி மாவட்டத்தில் 17 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில், சுமார் 132 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சிறுமிகளின் பெரும்பாலானோர் தங்களுடைய விருப்பத்தின் பேரிலேயே துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டள்ளமையானது பெரும் அபாயகரமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில், 16 வயதுக்கும் குறைந்த சிறுமிகள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 6 ஆயிரத்து 307 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆசிரியர்களுக்கிடையில் அடிதடி : ஒருவர் வைத்தியசாலையில்!!

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களிற்கிடையில் ஏற்றப்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களிற்கிடையில் இன்றையதினம் முரன்பாடு ஏற்ப்பட்டுள்ளது. அது முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆசிரியர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக குழு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

 

வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்து இளம்பெண் பலி : அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!!

வவுனியா பாவற்குளத்தில் இருந்து இளம்பெண்னின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

இன்று (21.12.2023) மாலை பாவற்குளம் பகுதிக்கு சென்ற இளம்பெண் ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 18-20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே சடலமாக மீட்கப்பட்டதுடன் அவர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

குறித்த சம்பவம் தற்கொலையா அல்லது தவறுதலாக இடம்பெற்றதா என்பது தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மன்னார் நானாட்டான் பகுதியின் 2வது விமானி என்ற பெருமையை படைத்த இளைஞன் : குவியும் வாழ்த்துக்கள்!!!

ஞானேந்திரன் லெக்சன்..

இலங்கையில் விமான ஓட்டியாக தனது விமான பயிற்சி கல்லூரியில் முதலாம் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்து அதற்குரிய சான்றிதழை நானாட்டான் பகுதியை சேர்ந்த ஞானேந்திரன் லெக்சன் என்ற தமிழ் இளைஞன் பெற்றுக் கொண்டுள்ளார்.

மன்னார் – நானாட்டான் மண்ணின் இரண்டாவது விமான ஓட்டி இவர் என்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஞானேந்திரன் லெக்சன் என்ற விமானிக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.