புத்தளத்தில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய 30 அடி நீளமுடைய புள்ளிச் சுறா!!

புத்தளத்தில்..

புத்தளம் உள்ள தொடுவா கடலில் மீனவர் ஒருவரின் வலையில் பாரிய புள்ளிச்சுறா ஒன்று சிக்குண்டு உயிருடன் கரையொதுங்கியுள்ளது. இச்சம்பவம் புத்தளம் மதுரங்குளி தொடுவா பகுதியில் இன்றைய தினம் (21.12.2023) நண்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த மீனவர் ஒருவரின் வலையில் சுமார் 30 அடி நீளமுடைய புள்ளிச்சுறா மீனொன்றே சிக்கியுள்ளது. இதனையடுத்து, குறித்த புள்ளிச் சுறா மீனை மீனவர்கள் பாரிய பிரயத்தனத்திற்கு மத்தியில் இயந்திரப்படகு உதவியுடன்,

மீண்டும் கடலில் விடுவிட்டதாக மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த சுறா மீன் சுமார் 30 அடி நீளமுடையது எனவும் சுமார் 2000 கிலோவிற்கும் அதிக எடையுடையதாக காணப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இங்கிலாந்தில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞர்!!

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் 31 வயதான ஓஷத ஜயசுந்தர என்ற பல்கலை மாணவரே உயிரிழந்துள்ளார்.

மாணவர் வீதியில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் ஒன்றினால் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக 27 வயதான காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5 வயது சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கிய விரிவுரையாளருக்கு நேர்ந்த கதி!!

மாத்தறையில்..

மாத்தறையில் சிறுமியொருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் குறித்து ருஹுனு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளர் ஒருவர் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தத்தெடுக்கப்பட்ட ஐந்தரை வயது சிறுமி ஒருவரே, விரிவுரையாளரால் கொடூரமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விரிவுரையாளர் சிறுமியை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தியதாக கடந்த வெள்ளிக்கிழமை (15.12.2023) பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, சம்பா தினத்தன்றே சிறுமியை ​பொலிஸ் காவலில் எடுத்து சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். மேலும், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி தாக்குதலுக்கு மற்றும் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது.

வடக்கு, கிழக்கு தொடர்பில் சிரேஸ்ட விரிவுரையாளர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!!

கனமழை..

நாட்டின் வடக்கு – கிழக்கு மாகாணம் உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு கிடைத்து வருகின்ற கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியாகும். குறித்த காற்று சுழற்சியானது,

மேற்கு நோக்கி, இலங்கைக்கு கீழாக நகர்ந்து அரபிக்கடலை சென்றடைந்ததால் நாட்டில் இந்த நிலையில் உருவாகியுள்ளதாக என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,இந்த சுழற்சி காற்றானது நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கையில் இருந்து முழுமையாக விடுபட்டு அரபிக் கடலுக்கு செல்வதன் காரணமாக நாளை இரவு முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் படிப்படியாக மழை வீழ்ச்சி குறைவடைவதற்கான சந்தர்ப்பம் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் பெய்ந்து வருகின்ற கனமழை காரணமாகவும் வடக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பரப்பு நீர் நிலைகள் அவற்றினுடைய உவர்நீரை பல்வேற்றுவதன் காரணமாகவும் பல்வேறு பகுதிகள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளன.

குறிப்பாக முல்லைத்தீவில் உள்ள பல பகுதிகளும், கிளிநொச்சியின் கிழக்குப் பகுதியும், வவுனியா மாவட்டத்தினுடைய வடக்கு பகுதியும், மன்னாரில் உள்ள மாந்தை மேற்கு, நானாட்டான், முசலி போன்ற பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கிடைக்கின்ற கனமழை மற்றும் மேலதிக மேற்பரப்பு நீர் காரணமாகவும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற 54 நடுத்தர மற்றும் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டங்கள் அவற்றினுடைய உவர் நீரை வெளியேற்றுவதற்றுவதன் காரணமாகவும், தொடர்ச்சியாக 100 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பல பிரதேசங்களில் பதிவாகி இருப்பதன் காரணமாகவும் வடக்கு மாகாணத்தினுடைய பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்திற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

வெள்ள அர்த்தத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், குறிப்பாக வடக்கு மாகாணத்தினுடைய தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள், ஆற்றங்கரை ஓரம், குளங்கள் மற்றும் வான் பாய்கின்ற பகுதிகளுக்கு அண்மித்திருக்கின்ற மக்கள் முன்னேற்பாடாக முதலே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக, ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான நிலைமைகள் காணப்படுகின்றன.

அதேசமயம் வடக்கு மாகாணத்திற்கு தற்போது கிடைத்து வருகின்ற மழையானது நாளை பிற்பகுதியுடன் படிப்படியாக குறைவடைந்து மீண்டும் 23 ஆம் திகதியளவில் மழை வீழ்ச்சி ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

வங்காள விரிகுடாவில், குறிப்பாக இலங்கைக்கு கிழக்காக எதிர்வரும் 19, 20, 22 ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி உருவாகுவதன் காரணமாக இலங்கையினுடைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மீளவும் ஒரு கனமழையை எதிர்நோக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதியும், 2024ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதியும் மீளவும் காட்டு சுழற்சிகள் தோன்றுவதற்கான வெப்பநிலை சாதகங்கள் வங்காள விரிகுடாவில் காணப்படுவதன் காரணமாக வடக்கு மாகாணம் அடுத்த ஆண்டு நுட்பகுதி வரை தொடர்ச்சியாக கன மழையை எதிர்கொள்வதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே வடக்கு மாகாணங்களில் உள்ள குளங்கள் அவற்றின் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உவர்நீரை தற்சமயம் வெளியேற்றி வருகின்றது. இந்த நிகழ்வு அடுத்த கிழமை வரைக்கும் தொடரும் என்பதனால் 23 முதல் கிடைக்கின்ற கனமழையும், தொடர்ச்சியாக இந்த பிரதேசங்களில் வெள்ள அனர்த்ததை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கும்.

எனவே மக்கள் இந்த நிலைமைகளை உணர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்கூட்டிய மேற்கொள்வதன் ஊடாக தங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை இயலுமான அளவில் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்தி பரபரப்பை ஏற்படுத்திய பெண்!!

கண்டியில்..

கண்டியில் மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்தி பெண் ஒருவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கண்டி ஏ 26 மஹியங்கனை வீதியில் மதுபோதையில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பெண்ணொருவரை போக்குவரத்து பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெல்தெனிய வாகலை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. தெல்தெனிய மாவட்ட ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து அவருக்கான செவிப்புலன் தொடர்பில் அறிக்கையையும் பெற்றுக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் தெல்தெனிய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் 29 வயது இலங்கையர் அரங்கேற்றிய கொடூரம் : பறிபோன உயிர்!!

அவுஸ்திரேலியாவில்..

ஆஸியில் கன்பரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையலறைக் களஞ்சிய அறையில் இளம் பெண்ணான சக ஊழியரைக் கத்தியால் குத்திக் கொன்றதாக இலங்கையைச் சேர்ந்த சமையல்காரர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அவுஸ்திரேலிய ஊடகங்கள் இன்று (19) செய்தி வெளியிட்டுள்ளன. 29 வயதான ஜூட் விஜேசிங்க திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இவரது உடம்பில் சில காயங்கள் காணப்பட்டதாகவும் அவை அவராலேயே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை எனவும் தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் பலியானவர் 29 வயதான பூட்டான் நாட்டவர் என தெரிய வந்துள்ளது.விஜேசிங்க மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை பொலிஸார் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தினர்.

பெப்ரவரி 22இல் ஆரம்பமாகும் வகுப்புக்கள் : கல்வி அமைச்சின் விசேட சுற்றறிக்கை!!

இலங்கையில்..

அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்களை தொடங்கும் காலம் தொடர்பான அறிவிப்புக்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் முதலாம் வகுப்புக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.அன்றைய தினம் புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அத்துடன் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குழந்தைகளை அடையாளம் காணும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.

ஆசிய போட்டியில் சாதனை படைத்த யாழ். இளைஞன்!!

மலேசியாவில்..

மலேசியாவில் நடைபெற்ற ஏசியன் கிளாசிக் பளுதூக்கும் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனைபடைத்துள்ளார்.

இலங்கை தேசிய அணி சார்பில் பங்கேற்ற சற்குணராசா புசாந்தன் குறித்த இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் சுவீகரித்துக்கொண்டார். சற்குணராசா புசாந்தன் யாழ்.தென்மராட்சி – சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்தவராவர்.

தேசிய நிலைப் போட்டிகளில் தனது சாதனையை நிலைநாட்டி வந்த புசாந்தன், தேசிய பளுதூக்கல் அணியில் இடம்பெற்று சர்வதேசப் போட்டிகளிலும் சாதனை படைத்து வருகின்றார்.

பிரான்ஸ் செல்ல ஆசைப்பட்டு இடைநடுவில் உயிரிழந்த கிளிநொச்சி குடும்பஸ்தர் : நாட்டுக்கு வந்த சடலம்!!

கிளிநொச்சியில்..

பிரான்ஸ் செல்ல ஆசைப்பட்டு பெலாரஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று (19) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்சிற்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த நபர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சம்பவத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற 40 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட அவரது சடலம் கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு வட்டக்கச்சியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளது.

பிரான்ஸ் செல்வதற்காக பெலராஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து கடப்பதற்காக ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற போது உடல் நிலை பாதிக்கப்பட்டு பெலராஸ் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருடன் சென்ற ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பெலராஸ் எல்லையில் இருந்து கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் , மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும்,

தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்தாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர். அதுவே அவர் இறுதியாக தமது குடும்பத்தவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தென்னிந்தியாவில் வெற்றி பெற்ற யாழ் கில்மிஷாவிற்கு ஜனாதிபதி தொலைபேசி மூலம் வாழ்த்து!!

கில்மிஷா..

தென்னிந்தியாவின் தமிழ் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சி போட்டியில் இலங்கை சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலம் நேற்று(2023.12.18) காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் கில்மிஷாவை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

வவுனியா நரசிங்கர் ஆலயத்தால் இலவசக் கற்றல் வகுப்புக்கள் ஆரம்பம்!!

வவுனியா பூந்தோட்டம் லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயத்தின் கல்வி சமூக அபிவிருத்தி நிதியத்தின் ஏற்ப்பாட்டில் இலவசக் கற்றல் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வு நரசிங்கர் ஆலய கலாசார மண்டபத்தில் நேற்று (17.12) இடம்பெற்றது.

இதன்போது, வறிய குடும்பங்களை சேர்ந்த 125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மேல்வகுப்பு மாணவர்களுக்கான இலவசக் கற்றல் வகுப்புக்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆலயத்தின் தலைவர் கோ.சிறீஸ்கந்தராஜாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக மேலதிக மாவட்டசெயலாளர் தி.திரேஸ்குமார் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவில் இடைவிடாது தொடரும் மழை : வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முத்துஐயன் கட்டுக்குளத்தில் 4 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதுடன் 2 அடி வான் பாய்கிறது.

முத்துஐயன்கட்டு, பேராறு, முத்துவினாயகபுரம், பண்டாரவன்னி வசந்தபுரம் மன்னகண்டல் ஆகிய கிராம ஆகிய கிராம மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று (18.12.2023) அதிகாலை தொடக்கம் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் அவர்களை கிராமத்தில் இருந்து மீட்டு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

111 குடும்பங்களை சேர்ந்த 355 பேரே இவ்வாறு மன்னகண்டல் அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மழை தொடர்ந்து பெய்துவருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.

இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு வான் பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பின் முக்கிய பகுதியில் ஒளிரும் வண்ணமயமான விளக்குகள்!!

இலங்கையில்..

இலங்கையில் எதிர்வரும் நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காலிமுகத்திடல் மற்றும் ஏனைய முக்கிய பிரதேசங்களில் நத்தார் அலங்கார தீப ஒளியேற்றல் நேற்றைய தினம் (17.12.2023) இடம்பெற்றுள்ளது.

பண்டிகைக் காலத்திற்கான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் கொழும்பு காலிமுகத்திடலில் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய நத்தார் மரம் வைக்கப்பட்டுள்ளதுடன், பல நத்தார் அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விவசாயத் துறையில் இலங்கையில் விவசாயி ஒரு கோடி ரூபாவை வருமானமாக பெற்று சாதனை..!

அநுராதபுரத்தில்..

அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் அறுவடை செய்து சுமார் ஒரு கோடி ரூபா வருமானம் பெற்றுள்ளார். இவர் விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மிளகாய்ச் செய்கையின் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரை ஏக்கரில் மிளகாய்ச் செய்கையை ஆரம்பித்துள்ளார்.

முன்னதாக மிளகாய்ச் செய்கையில் அதிக அறுவடை வருமானம் பெற்ற இரண்டு விவசாயிகள் அநுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணத்தில் பதிவாகியிருந்ததுடன் அவர்கள் 50 முதல் 60 இலட்சம் வருமானத்தை பெற்றனர்.

ஆனால் மேற்குறிப்பிடப்பட்ட புளியங்குளத்தை சேர்ந்த பந்துல காமி என்பவர் 10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய மிளகாயின் சந்தை விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஜனவரி மாதம் 14 வரை மிளகாய் அறுவடை செய்ய முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கத்தரிக்காய் களவெடுத்தவருக்கு நேர்ந்த கதி!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் நேற்று (17) இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞரே கைதாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள கத்தரித் தோட்டம் ஒன்றில் கடந்த 07ஆம் திகதி இரவு பெரும் தொகையான கத்தரிக்காய்கள் திருடப்பட்டுள்ளன.

மறுநாள் தோட்ட உரிமையாளர் தோட்டத்திற்கு சென்ற வேளை, கத்திரிச் செடியில் இருந்த மாயமானதை கண்டு அதிர்ந்துள்ளார். இதனையடுத்து திருட்டு சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் பிராகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் ,கத்தரிக்காய் திருடியவர் கைதாகியுள்ளார்.

வெளிநாட்டு கணவனை அடித்து துன்புறுத்திய இலங்கைப் பெண்!!

இலங்கையில்..

தனது மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்து நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் 59 வயதான சைப்ரஸ் பிரஜை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

59 வயதான சைப்ரஸ் பிரஜை 38 வயதான பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் சைப்ரஸில் பணிப்புரியும் போது திருமணம் செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னை மனைவி தாக்குவதாக தெரிவித்து சைப்ரஸ் பிரஜை முறைப்பாடளித்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்