முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட பூ பனி புகைப்படங்கள் : வெளியாகியுள்ள தகவல்!!

இலங்கையில்..

இலங்கையின் நுவரெலியாவில் பல பகுதிகளில் நேற்றைய தினம் (22.12.2023) அதிகாலை பூ பனி பெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், குறித்த புகைப்படங்கள் இந்தியாவில் உள்ள ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் பூ பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பூ பனி பொழிவு காணப்பட்டது.

மேலும் இன்று அதிகாலை நுவரெலியாவின் வெப்ப நிலை 14 பாகை செல்சியஸாக காணப்பட்டதால் அதிகம் குளிரான நிலையை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.இந்தநிலையிலேயே வெளியான குறித்த புகைப்படங்கள் ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவை என்று முகப்புத்தகத்தில் வேகமான பகிரப்பட்டு வந்தது.

இலங்கையில் கொரோனாவின் புதிய திரிபு : மீண்டும் முகக்கவசம் அணியும் நிலை!!

இலங்கையில்..

JN1 Omicron துணை வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸின் புதிய திரிபு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் ஒரு குறிப்பைச் சேர்த்த அவர், கொவிட் பரிசோதனை மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், தற்போது அதன் பரவலின் நிலைமை குறித்து அறிவியல் அறிக்கையை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மீண்டும் முகமூடி அணிவதை நாடுவதே மிகவும் பொருத்தமானது என்று அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் இன்னும் செயலில் உள்ளன, மேலும் ஆபத்தில் உள்ள குழுக்கள் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்று பேராசிரியர் சந்திம ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்கிறது : 64 குளங்கள் உடைப்பு!!

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவந்த மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால், பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றது.

குறிப்பாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 620 குளங்களில் 456 குளங்களும், மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 17 குளங்களும், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 06 குளங்களும் வான் பாய்கின்றதாக மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை பாலிக்குளம், சின்னசிப்பிகுளம், தேகக்கம்குளம், பிரமநாலங்குளம், பரயநாலங்குளம் உட்பட 64 குளங்கள் உடைப்பெடுத்த நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்களம், இராணுவம், கிராமமக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இணைந்து குளத்தினை மறுசீரமைத்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரப்பகுதியில் உள்ள ஆபத்தான மரங்கள் வெட்டியழிப்பு!!

வவுனியா நகரப்பகுதியில் உள்ள ஆபத்தான மரங்கள் நேற்றையதினம் (21.12.2023) வெட்டி அகற்றப்பட்டது. வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள ஆபத்தான மரங்கள் பாதுகாப்புகருதி ன்றையதினம் வெட்டிஅகற்றப்பட்டது.

அந்தவகையில் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாகவும், காமினி மகாவித்தியாலம், பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மரங்களே இவ்வாறு அகற்றப்பட்டது.

குறித்த மரங்கள் மிகவும் பழமையானதாக காணப்படுவதுடன், அதன் கிளைகள் அண்மையில் வீசிய காற்றின் போது முறிந்து விழுந்திருத்தது. இதனையடுத்து இம்மரங்களை அகற்றுமாறு பல்வேறு தரப்புக்களால் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பாதுகாப்பு கருத்தி குறித்த மரங்களின் ஆபத்தான கிளைகள் மரக்கூட்டுத்தாபனத்தில் நேற்றையதினம் வெட்டி அகற்றப்பட்டது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழக மாணவன் பலி!!

இலங்கையில்..

கம்பளை – கண்டி பிரதான வீதியில் வெலிகல்ல நகரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தவுலகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஓஷத பந்துல பண்டார அலஹகோன் என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தைந்து வயதுடைய ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேற்று(21) அதிகாலை இரண்டு மணியளவில் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் ஹெரொயின் போதைப் பொருளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது!!

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (22.12) தெரிவித்தனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கு அமைய வவுனியாவில் நேற்று (21.12) இரவு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள வியாபார நிலையம் ஒன்றில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், குறித்த வியாபார நிலையத்தின் உரிமையாளரது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீ்டிலும் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வியாபார நிலையத்தின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகள்கள் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி : 20 சதவீதமாக அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்!!

இலங்கையில்..

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டம் ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 20 சதவீதம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, தொலைபேசிகள், சோலார் பேனல்கள், பிக்மி (Pick me) மற்றும் ஊபர் (Uber) போக்குவரத்து சேவைகள், எரிபொருள் மற்றும் தங்க நகைகள் முக்கிய இடத்தைப் பெறும் என்று கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக நாட்டில் எரிபொருளின் விலையில் பாதிப்புகள் ஏற்படாது எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் (காற்று/சூரிய சக்தி) மின்சார உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பேசப்பட்டாலும், சோலார் பேனல் ஒன்றின் விலை இரண்டு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் செயலாளர் லக்மால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நழுவப்போவதாகவும், அடுத்த ஆண்டும் அதிக விலையுள்ள எரிபொருள், நிலக்கரி போன்றவற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டிய நிலையே ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா பாவற்குளத்திற்கு இளைஞருடன் சென்ற இளம் யுவதி நீரில் முழ்கி மரணம்: சடலத்தை பார்வையிட்ட பதில் நீதவான்!!

வவுனியா, பாவற்குளம் நீர்த்தேக்கத்திற்கு இளைஞருடன் சென்ற இளம் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் இன்று (22.12) தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பாவற்குளம் நீர்த்தேக்கமானது வான் பாய்ந்து வரும் நிலையில் குறித்த குளத்திற்கு இளைஞர் ஒருவருடன் இளம் யுவதி அங்கு சென்றுள்ளார்.

குறித்த நீர்த்தேக்கம் பகுதியில் நின்ற போது யுவதி நீரில் வீழ்ந்துள்ளார். சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு யுவதியை மீட்டு, பாவற்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த யுவதியின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்போது, வவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜன்சிகா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இந்நிலையில் இன்று (22.12) மதியம் குறித்த சடலத்தை பார்வையிட்ட வவுனியா பதில் நீதவான் தி.திருஅருள்,

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன், குறித்த மரணமானது யுவதி நீரில் மூழ்கியமையால் ஏற்டபட்டது என தெரிவித்துடன், உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்க கட்டளையிட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகள மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற சித்துவிலி சித்தம் ஓவியப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு!!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான சித்துவிலி சித்தம் ஓவியம் சுவரொட்டி மற்றும் கேலிச்சித்திரப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய சிறுவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று 22.12.2023 வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.S.நந்தசீலன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு P.A.சரச்சந்திர(அரச அதிபர் -வவுனியா) அவர்களும் திருமதி.தாட்சாயினி (பிரதிக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்வி அலுவலகம் வவுனியா தெற்கு) திருமதி சுபாலினி வசந்தகுமார் (ஆசிரிய ஆலோசகர் வலயக் கல்வி அலுவலகம் வவுனியா வடக்கு) திரு.திருலிங்கநாதன்(மாவட்ட கலாசார உத்தியோகத்தர் வவுனியா) திருமதி.S. ஜெயசித்ரா (பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் வவுனியா)பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

மரண அறிவித்தல் : திருமதி செல்வரட்ணம் ருக்மணி!!

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் ருக்மணி அவர்கள் 22.12.2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,மனோகர், மோகனசுந்தர், காஞ்சனா, சேகர்(கனடா), மகேந்திரன்(கனடா), டக்சினி, சதீஸ்குமார்(லிபியா), ரவிசங்கர்(கனடா), புவிரஞ்சினி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சியாமளா, வளர்மதி, நகுலேஸ்வரன், கமலேஸ்வரி, கௌசலா, மதிவண்ணன், மஞ்சுளா, துசிமளா, ரஞ்சன், சுதா ஆகியோரின் பாசமிகு மாமியும்,வினோபாஜி, சங்கீதா, கயல்விழி,

பிரதீபன், ஜெனிதா, கஜித்திரி, சௌதமன், லோஜனா, சஞ்சிகா, நேருசன், சஜீவ், சந்துசன், மிதுசனா, பிரஷாந், லக்சிகரன், சஜீவன், நிருஷாந், கிருஷிகா, கிஷாந், யதுசனா, கவிசனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துஷாந்தன், டினுஷா, லதுசன், துலக்சன், அட்சரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 24.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் இல. 80/11, பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சேகர் – மகன்
Mobile : +19057816263

மகேந்திரன் – மகன்
Mobile : +14168067255

சதீஸ்குமார் – மகன்
Mobile : +94774933604

ரவிசங்கர் – மகன்
Mobile : +19057821405

செல்வகுமார் – மகன்
Mobile : +94770021001

கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

திருப்பதியில்..

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சிகுருவாட கிராமம் ஒய்எஸ்ஆர் காலனியை சேர்ந்தவர் கோவிந்த். இவருக்கும் சித்தூர் மாவட்டம் புஷ்கனிவாரி பள்ளியை சேர்ந்த மானசா என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் இருவரும் சிகுருவாடாவில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் மானசா, தன் கணவன் கோவிந்திடம் தனிக் குடித்தனம் போகலாம் என்று கேட்டுள்ளார். இதையடுதது மனைவியின் ஆசைப்படி பத்து நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனிக் குடித்தனம் சென்றுள்ளனர்.

இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி கோவிந்தின் அண்ணன் பாஸ்கருக்கு பதட்டத்துடன் போன் செய்த மானசா, உங்கள் தம்பிக்கு என்னவோ ஆகிவிட்டது. கீழே விழுந்து கிடக்கிறார் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து தகவல் அறிந்த பாஸ்கர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அங்கு சென்ற போது கோவிந்த் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எப்படி நடந்தது என்று கோவிந்த் குடும்பத்தினர் மானசாவிடம் கேட்டுள்ளனர். அப்போது கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று மானசா தெரிவித்துள்ளார்.

அவருடைய பேச்சை உண்மை என்று நம்பிய கோவிந்த் குடும்பத்தினர் உடலை சொந்த ஊரான வெதுருகுப்பத்திற்கு கொண்டு சென்றனர்.அப்போது கோவிந்த் கழுத்தில் காயம் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த பாஸ்கரன், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மானசாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது அதில், கடந்த 15 ஆம் தேதி கோவிந்த் வீட்டிற்கு ஒரு இளைஞர் வந்து சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக மானசாவிடம் விசாரித்த போது, ”மதனப்பள்ளியை சேர்ந்த இளைஞர் சிம்மாதிரியும் நானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்கள் காதலை விரும்பாத பெற்றோர் கோவிந்துக்கும் எனக்கும் திருமணம் செய்து வைத்து விட்டனர்.

இந்த திருமண பந்தத்தில் இருந்து விடுபட முடிவு செய்து என் காதலனை வரவழைத்து தூங்கிக் கொண்டிருந்த கோவிந்த் கழுத்தை இரண்டு பேரும் சேர்ந்து நெரித்து கொலை செய்தோம்” என்று மானசா கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மனைவியின் கண்கள், கன்னங்களை கடித்து துப்பிய கணவன்!!

கர்நாடகாவில்..

கர்நாடகா மாவடத்தில் ஷிஷிலா கிராமத்தில், குடிபோதையில் கணவர் ஒருவர் மனைவி மற்றும் மகளை, கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சுரேஷ் கவுடா ஷிஷிலா கோட்டேபாகிலுவில் வசித்து வருகிறார்.

இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியை அடிப்பது வழக்கமான ஒன்றாகி இருந்தது. இதனால் கணவன் மனைவியிடையே தினமும் சண்டை, சச்சரவு, தகராறு தான். வழக்கம் போல் அன்றும் குடித்துவிட்டு முழு போதையில் இருந்தார்.

கணவன் மனைவிக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் சுரேஷ் கவுடா மனைவியின் கண் மற்றும் கன்னத்தை கடித்து சதையை கடித்து துப்பி விட்டார். அலறித்துடித்த மனைவியை கட்டையால் அடித்து கொடூரமாக தாக்கினார். இதனால் மனைவியின் இடது கண் முற்றிலும் சேதமடைந்தது.

தாயின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது மகள் இதனை தடுக்க வந்தாள் . போதையில் இருந்த சுரேஷ் கவுடா மகளின் தலை மற்றும் கண்களிலும் தாக்கியுள்ளார். உயிரைக் காப்பாற்றுவதற்காக தந்தையிடம் இருந்து தப்பிச் சென்ற அவர், அக்கம்பக்கத்தினரிடம் விசயத்தைக் கூறி தாயை காப்பாற்ற உதவி கோரினார்.

அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்ததால் கணவர் சுரேஷ் கவுடா பின்வாசல் தோட்டம் வழியாக தப்பி குதித்து ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த தாயும், மகளும் மீட்உஜிராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் தப்பி ஓடிய சுரேஷ் கவுடாவும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

643 முறை மீறல்… 30000 மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 3.22 லட்சம் அபராதம்!!

இந்தியாவில்..

‘தலைக்கவசம் உயிர்கவசம்’ என்ற வாசகம் அனைவருக்கும் பொருந்தும். வாகனங்களில் செல்வோர் தங்கள் உயிரை பாதுகாக்கும் விதமாக அதற்கு தேவையான பாதுகாப்பு கவசத்தை அணிய வேண்டும்.

பைக்கில் செல்வோர் ஹெல்மெட், காரில் செல்வோர் சீட் பெல்ட் உள்ளிட்டவை கட்டாயம் அணிய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்கள் உயிருக்கு மட்டுமின்றி அடுத்தவர் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே அதனை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்கள் இந்திய அரசால் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல், அதி வேகமாக செல்வோர் உள்ளிட்டவை யாரேனும் செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு மக்கள் சாலை விதிகளை மீறுவதால், அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

எவ்வளவு விழிப்புணர்வு செய்தாலும் சிலர் இந்த தவறை மறுபடி மறுபடி செய்கின்றனர். இதனால் இந்தியா முழுவதுமுள்ள அந்தந்த மாநில அரசுகள் இதற்கு அண்மைக்காலமாக கெடுபிடி வைக்கின்றது.

மேலும் யாரேனும் அதீத வேகத்தில் சென்றாலோ அல்லது சிக்னலை மதிக்காமல் சென்றாலோ அல்லது ஹெல்மெட் அணியாமல் ஏதேனும் சாலை விதிகளை மீறி சென்றாலோ அவர்களை அந்தந்த ட்ராபிக் சிக்னலில் இருக்கும் கேமராக்கள் காட்டி கொடுத்துவிடும். அதன்படி அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இதில் சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுகிறது. இதனால் பெரிதாக யாரும் தப்பிக்க இயலாது. தமிழ்நாட்டிலும் ஹெல்மெட், லைசன்ஸ் இல்லாமல் செல்வோருக்கு, சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இது கர்நாடகத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது கங்காநகர். இங்கு வசிக்கும் மாலா என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தனது ஸ்கூட்டியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார்.

அவ்வாறு அவர் செல்லும்போதெல்லாம் ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மீறியும் சென்றுள்ளார். இதனால் அவருக்கு ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்பட்டது.

அவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம் தற்போது ரூ.3.22 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. KA 04 KF 9072 என்ற பதிவு எண் கொண்ட அந்த வாகனம் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும்போது, அதில் சென்ற நபர் சாலை விதிகளை மீறியுள்ளார்.

இதனை ஒவ்வொரு ட்ராபிக் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சி பதிவு செய்து, பொருத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களைப் பயன்படுத்தி அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத தொகையானது, அந்த வாகனத்தின் தொகையை விட அதிகமானதாகும். அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் மூலம் தெரிவிக்கப்படும்.

அவர் கட்ட தவறினால், அது மேலும் மேலும் சேர்ந்துகொண்டு போகும். இறுதியில் அந்த பெண் அபராதத்தை கட்டவில்லை என்றால், அதிகாரிகளால் வண்டி பறிமுதல் செய்யப்படும்.

தற்போது இந்த நபருக்கு இதுவரை சாலை விதிகளை 643 முறை மீறியதாக ரூ.3.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை நகரின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களைப் பயன்படுத்தி வழங்கப்பட்டன. இந்த நிகழ்வால் தற்போது அந்த நபர் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் இளைஞர் ஒருவர் 146 முறை ஹெல்மெட் அணியாமல் டிராபிக் கேமராவில் சிக்கியதால் அவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒவ்வொரு முறையும் அபராதம் கட்டாமல் இருந்து வந்ததால், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் அவரது பைக்கை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1000 ரூபாய் கடனை திரும்பக் கேட்டதால் ஆத்திரம் கத்திரிக்கோலால் குத்தி நண்பனை கொன்ற இளைஞன்!!

வேளச்சேரியில்..

மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில்நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 130வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (22). அதே குடியிருப்பில் 106வது பிளாக்கில் வசித்து வருபவர் ராஜேஷ் (22). நண்பர்களான இவர்கள், சென்ட்ரிங் வேலை செய்து வந்தனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன், கார்த்திக்கிடம், 1000 ரூபாயை ராஜேஷ் கடனாக பெற்றுள்ளார். ஆனால், இந்த பணத்தை கார்த்திக் பலமுறை கேட்டும், திருப்பி கொடுக்காமல் ராஜேஷ் அலைக்கழித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு 9.30 மணியளவில், அதே பகுதி 26வது பிளாக்கில் வசிக்கும் தினேஷ் என்பவருடன், ராஜேஷ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக், ‘‘மது வாங்க பணம் இல்லை. அதனால், என்னிடம் கடனாக பெற்ற 1000 ரூபாயை திரும்பி கொடு,’’ என்று ராஜேஷிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ராஜேஷ், ‘‘என்னிடம் பணம் இல்லை’’, என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக், ராஜேஷை ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, உடனிருந்த நண்பர் தினேஷ், இருவரையும் சமாதானம் செய்துள்ளார். பின்னர், ராஜேஷை அங்கிருந்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்.

ஆனாலும், ஆத்திரம் தீராத கார்த்திக், சிறிது நேரத்தில் தினேஷ் வீட்டிற்கு சென்று கதவை தட்டினார். நீண்ட நேரத்திற்கு பிறகு தினேஷ் கதவை திறந்து, ‘‘ஏன் இப்படி கதவை தொடர்ந்து தட்டுகிராய்,’’ என கேட்டுள்ளார்.

அப்போது, ‘‘என்னிடம் கடனாக வாங்கி பணத்தை ராஜேஷ் திருப்பி கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வேன்,’’ என கார்த்திக் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை வீட்டினுள் இருந்து கேட்டுக்கொண்டிருந்த ராஜேஷ் ஆத்திரமடைந்து, அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து வந்து கார்த்திக் மார்பு மற்றும் விலா பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.

இதையடுத்து ராஜேஷ், தினேஷ் மற்றும் சக நண்பர்கள் சேர்ந்து மயங்கிய நிலையில் இருந்த கார்த்திக்கை மீட்டு, ஆட்டோவில் ஏற்றிகொண்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து, ஆட்டோவில் கார்த்திக் உடலை ஏற்றிக்கொண்டு பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த ராஜேஷ், ஆட்டோவை காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தினார். பின்னர் காவல் நிலையத்திற்குள் சென்று அங்கிருந்த போலீசாரிடம், ஆத்திரத்தில் தனது நண்பன் கார்த்திக்கை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்துவிட்டேன்.

அவரது உடல் காவல் நிலையத்தின் வெளியில் நின்றுள்ள ஆட்டோவில் உள்ளது,’’ என்று கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக வெளியே சென்று ஆட்டோவில் பார்த்தனர்.

அதில், கார்த்திக் சடலம் இருந்தது. இதனையடுத்து, கார்த்திக்கின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜேஷை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலையில் கல்லை போட்டு மனைவி படுகொலை : சொந்த ஊருக்கு தப்ப முயன்ற கணவன்!!

தாம்பரத்தில்..

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குத்தனூர் பகுதியில் அரசு விவசாய ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்குள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீஷ் கைலாஷ் (30), பிரியங்கா குமாரி (25) என்ற தம்பதி கடந்த 15 நாட்களாக தங்கி அப்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் பிரியங்கா குமாரி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

பிரதீஷ் கைலாசுக்கும், பிரியங்கா குமாரிக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த பிரதீஷ் கைலாஷ், மனைவி பிரியங்கா குமாரியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு ரயில் மூலம் தப்பிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து ரயில் மூலம் சொந்த ஊருக்கு தப்பிச் செல்ல முயன்ற கைலாஷை மணிமங்கலம் போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து விசாரிக்கின்றனர்.

பாடசலை மாணவன் கழுத்து அறுபட்டு சடலமாக மீட்பு… கதறித் துடித்த பெற்றோர்!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பல்லவாடா கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சுரேஷ் சிந்துமதி. இவர்களின் மகன் அனீஸ். இவர் 4ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி சென்ற இச்சிறுவன் திடீரென மாயமானான். 2 நாட்களுக்கு பிறகு மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அனீஸ் 2 நாட்களுக்கு முன் சிறுவன் திடீரென காணாமல் போன நிலையில் போலீசார் சிறுவனை மீட்பதில் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

அப்பகுதியில் வசித்து வருபவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . கடைசியாக பைக்கில் சிறுவனை அழைத்து சென்ற ரேகாவை காவல்துறையினர் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, ஆந்திர மாநிலம் வருதையபாளையம் காட்டுப்பகுதியில் சிறுவன் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. சிறுவனின் சடலத்தை கண்ட பெற்றோர் கதறித் துடித்தனர்.