தமிழர் பகுதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் செய்த மோசமான செயல்!!

திருகோணமலையில்..

திருகோணமலையில் தனது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் 32 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்களை திருடியதாக ஆசிரியை ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.இது தொடர்பில் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஒகஸ்ட் ஆகிய ஐந்து மாதங்களில் இந்த திருட்டு நடந்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.திருகோணமலை மாணிக்கவாசகர் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிலேயே திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.தனது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்போது வேறு திருமணம் செய்துள்ளதாக 60 வயதுடைய ஆசிரியர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலில் திருகோணமலை பொலிஸில் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்திருந்தார். நீதி கிடைக்கவில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்கவை ஆசிரியர் சந்தித்துள்ளார்.இதனையடுத்து, இது தொடர்பான விசாரணைகளை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர் கிள்ளிவெட்டி பிரதேசத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஒரு தொழிலதிபர் என்று கூறப்படுகிறது.திருடப்பட்ட தங்க நகைககளை திருப்பிக் கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தயாராகி வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழில் ஹெரோயினால் இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞர் ஒருவர் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்திய பரிசோதனையில் இளைஞர் கிருமித் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும், போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.

இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (28.08.2023) உயிரிழந்துள்ளார்.அதேவேளை இன்னுமொரு இளைஞரும் போதைக்கு அடிமையான நிலையில், உடலில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள பெண்: வீட்டுக்குள் நடக்கும் கொடுமை!!

தென்னிலங்கையில்..

காலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெருந்தொகையான மக்களுக்கு அதிக இலாபம் தருவதாகக் கூறி ஏமாற்றி வந்த பெண் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிரோஷா நிஷாந்தி, காலியிலுள்ள அவரது இல்லத்திற்கு செல்ல சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மக்களை ஏமாற்றி பெற்ற பணத்தில் கட்டியதாக கூறப்படும் வீட்டை சட்டவிரோதமாக விற்க தயாராகி வருவதாக கிடைத்த தகவல் காரணமாக அந்த வீட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களிடம் பணம் கேட்டு திரும்பி வரும்போது பணம் கொடுத்தவர்களை இந்த பெண் மிரட்டுவதும் தெரியவந்துள்ளது.

தன்னிடம் பணம் கேட்டு வரும் ஆண்களை வீட்டிற்குள் அழைத்து வந்து கட்டிப்பிடித்து, பின்னர் முழுவதையும் வீடியோ எடுத்து அந்த நபர்களை பயமுறுத்துவது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், பணம் கொடுத்த பல ஆண்கள் அவர் மீது முறைப்பாடு கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த பெண் செய்த மோசடிகளுக்கு ஊழல் நிறைந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பல ஊழல் அதிகாரிகளும் துணை நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பெண்ணிடம் 2 முதல் 3 கோடி ரூபாய் முதலீடு செய்து பலர் சிக்கியுள்ளனர்.இதற்கிடையில் தென்பகுதியில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற விகாரையின் கப்புவா என்ற நபரும் இணைந்து செயற்படுவதாக கூறப்படுகிறது.

கனடாவில் அதிகரிக்கும் போலி வேலைவாய்ப்பு மோசடி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கனடாவில்..

கனடாவில் போலி வேலை வாய்ப்பு மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய மோசடி தவிர்ப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிப்டோ கரன்சி மோசடி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இவ்வாறு போலி வேலை வாய்ப்புகள் வழங்கும் பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இணைய வழியில் சுயாதீன பணிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இவ்வாறு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை எனவும் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி இவ்வாறு மோசடி மேற்கொள்ளப்படுவதோடு நட்புறவாக பழகி அதன் மூலமாக பண மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மக்கள் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கனேடிய மோசடி தவிர்ப்பு நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டில் இதுவரை 32000 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கடந்த ஆண்டு மோசடிகள் மூலம் 531 மில்லியன் டொலர்களை மக்கள் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்வு!!

எயிட்ஸ்..

இலங்கையில் 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கடந்த 2009 ம் ஆண்டிற்கு பின்னர் 2023 ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த விபரங்களை தேசிய எஸ்டிடி – எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் வெளியிட்டுள்ளது. இரண்டாவது காலாண்டு பகுதியில் 181 புதிய எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 26 ஆண்களும் 3 பெண்களும் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் .ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேவேளை இதேகாலாண்டு பகுதியில் எயிட்சினால் 13 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜகுமாரி மரணம் : பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!!

கொழும்பில்..

காவலில் வைக்கப்பட்டிருந்தபோது வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரி மரணமடைந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் இன்று செவ்வாய்க்கிழமை (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பதுளையைச் சேர்ந்த 41 வயதான ராஜகுமாரி, தனது தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகக் கூறி, அவரது எஜமானரும் பிரபல தயாரிப்பாளருமான சுதர்மா நெத்திகுமார செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மே 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.அதன் பின்னர் வெலிக்கடை பொலிஸாரின் தடுப்பிலிருந்தபோது ராஜகுமாரி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் நடுவீதியில் திடீரென தீப்பற்றிய வாகனத்தால் பரபரப்பு!!

யாழில்..

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போதே குறித்த வாகனம் இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம் : அம்மாவுக்காக வேலையை துறந்த மகன்!!

புத்தளத்தில்..

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் தனது தாயைப் பார்க்க அனுமதி வழங்கப்படாமையால் சேவையை விட்டு வெளியேறிய பொலிஸ் அதிகாரி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பயிலுனர் கான்ஸ்டபிள் ஒருவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் பணியிலிருந்து விலகியுள்ளார்.

பொலன்னறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் வசிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிளே இந்த முடிவை எடுத்துள்ளார். பணிக்கு வந்து 60 நாட்களாகியும் விடுமுறை எடுக்காமல் தனது கடமைகளை செய்ததாகவும், அதன்போது தனது தாய் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து விடுமுறைக்கு விண்ணப்பித்தும் விடுமுறை வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை அவர் பொலிஸ் தகவல் புத்தகத்திலும் பதிவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலைமையினால் தனது கடமைகளை மேற்கொள்ள மனதளவில் தயார் இல்லையெனவும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தாயை தரதரவென இழுத்து செல்லும் இளைஞர்.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்.!!

உத்தரபிரதேசத்தில்..

இந்த காலத்தில் யாரும் பெற்றோர்களை மதிப்பதே இல்லை. பாலூட்டி, சோறூட்டி வளர்த்த தாய் தந்தையரை கண்டு கொள்வதே இல்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் பாக்பத் அருகேயுள்ள குஹார் கிஷன்பூர் பரால் கிராமத்தில் வசித்து வருபவர் .

தனது வயதான தாயை வீட்டில் வைத்து பராமரிக்காமல், தெருவில் தரதரவென இழுத்துச் சென்றார். அக்கம் பக்கத்தினர் அவரை தட்டிக் கேட்டனர். ஆனாலும் இந்த கேவலமான அடாத செயலை நிறுத்தாத இளைஞர் மேற்கொண்டு தாயை தெருவில் இழுத்துச் சென்றார்.

தன்னை விட்டு விடுமாறு அந்த தாய் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் தெருவில் அவர் தாயை இழுத்துச் சென்றார். ஊரின் கடைசியில் கொண்டு போய் தள்ளியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் தகவல் அளித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது. விரிவான விசாரணைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தாய்க்கு மகன் செய்த இந்த கொடுமை அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது.

வவுனியா வந்த பேருந்துக்குள் பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு!!

யாழ்ப்பாணத்தில்..

அரச பேருத்தில் பயணிகளுடன் பாம்பு ஒன்றும் பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற பேருந்திலேயே இவ்வாறு பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (28.08.2023) யாழில் இருந்து வவுனியா சென்ற அரச பேருந்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பேருந்தில் பாம்பை கண்ட பயணிகள் பதறியடுத்து அச்சம் கொண்டனர்.

அத்துடன் பேருந்தில் பாம்பு இருந்ததை அவதானிக்காது பயணிகளை ஏற்றிய நடத்துனர் மற்றும் சாரதி தொடர்பில் பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் பெரும் சோகம் : பரிதாபமாக உயிரிழந்த 20 வயது இளைஞன்!!

நுவரெலியா – லிந்துலை..

நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகு தேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றைய தினம் (27.08.2023) தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் எல்ஜின் ஓயாவில் இடம்பெற்றுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் கீழ் பிரிவைச் சேர்ந்த 20 வயதுடைய பிரபாகரன் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த தோட்டத்தில் உள்ள மேலும் இரண்டு இளைஞர்களுடன் இணைந்து இவர் விறகு தேடச்சென்றுள்ளார்.

அவ்வேளையில் எல்ஜின் ஓயாவில் சிலர் குளித்துக்கொண்டிருந்த போது குறித்த இளைஞனும் ஓயாவில் இறங்கியுள்ளார்.இதன்போதே நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து தேடி மீட்டனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் போதனா வைத்தியசாலை சாதனை : ஒரே பிரசவத்தில் பிறந்த 3 சிசுக்கள்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) பிறந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர்.

மேலும் மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருமண வீட்டில் திடீரென உயிரிழந்த யுவதி : மரணத்திற்கான காரணத்தை வெளியிட்ட தாய்!!

ஹொரணையில்..

ஹொரணையில் திருமண நிகழ்வொன்றில் நடனமாடிக் கொண்டிருந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியொருவர் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளார்.வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 வயதுடைய மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.“என் மகளால் பருப்பு, கொண்டைக்கடலை சாப்பிட முடியாது.

அவற்றை சாப்பிடும் போது ஒவ்வாமை ஏற்படுகிறது. அவற்றை சாப்பிட்டால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதனால்தான் என் மகள் அந்த உணவை எடுத்துக் கொள்ள முடியாது” என மஞ்சரியின் மரணம் தொடர்பான விசாரணையில் சாட்சியமளித்த அவரின் தாயார் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண் ஹொரணையில் உள்ள கோணபொல நிகழ்வு மண்டபத்தில் தான் பணிபுரியும் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரின் திருமண வைபவம் ஒன்றிற்கு வேறு நபர்களுடன் சென்றுள்ளதுடன், அங்கிருந்த குழுவினருடன் உல்லாசமாக நடனமாடியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் மேலும் இரு யுவதியுடன் நடனமாடிவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹொரணையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், ஹொரணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியசாலையின் வைத்தியர்கள் அறிவுறுத்தியதாகவும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

யுவதியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் போது சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், யுவதியின் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாகும், அவர் உண்ட உணவு சுவாச பாதைக்குள் நுழைந்து சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தியதாக ஹொரண ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சமாதான நீதிவான் சுமேதா குணவர்தன தீர்மானித்துள்ளார்.

ஹொரணை ஆதார வைத்தியசாலையின் நிபுணர் சட்ட வைத்தியர் பணித்த செனவிரத்ன பிரேத பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.அங்கு சாட்சியமளித்த இறந்த யுவதியின் தாயார் மேலும் கூறியதாவது,“எனது மூத்த மகள் இறந்து விட்டார். அவர் 1998ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 14ஆம் திகதி பிறந்தார். என் மகளுக்கு 25 வயதாகின்றது.

என் மகள் தினமும் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு 7 மணிக்கு மேல் வீட்டுக்கு வருவார்.இறந்த மகளுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்தது. திடீரென ஏற்படும். அந்த நேரத்தில் அவர் இன்ஹேலரைப் பயன்படுத்துகிறார். அவர் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ளவில்லை. தேவைப்படும் போது இன்ஹேலர்கள் பயன்படுத்துவார்.

என் மகளால் பருப்பு, கொண்டைக்கடலை சாப்பிட முடியாது. அவற்றை உண்ணும்போது ஒவ்வாமை ஏற்படுவதுடன் ஆஸ்துமா ஏற்படுகின்றது. அப்போது மருத்துவரிடம் காண்பித்து மருந்துகளை பெற்றுக் கொள்வோம். மற்ற உணவுகளை சாப்பிடும்போது அவ்வாறு நடக்குமா என்று எனக்கு இன்னும் தெரியவில்லை.மகள் மிகவும் நன்றாக இருந்தார்.

காலை 9 மணியளவில் மகள் திருமண நிகழ்விற்கு தனியாக புறப்பட்டார். அங்கு சென்ற பிறகு அவரிடம் பேசவில்லை. மாலை 3.45 மணியளவில் எனது மகள் பணிபுரியும் இடத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மகள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மருத்துவமனைக்குச் சென்று உடலை அடையாளம் காட்டினேன். மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 8 வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் : 15 வயதுச் சிறுவன் கைது!!

வவுனியாவில் 8 வயது சிறுவன் ஒருவனை துஸ்பிரயோகம் செய்ததாக 15 வயதுச் சிறுவன் ஒருவர் வவுனியா பொலிசாரால் இன்று (28.08) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிவடைந்து மேலதிக வகுப்புக்காக வவுனியா, வெளிக்குளம் பகுதிக்குச் சென்ற 8 வயதுச் சிறுவன் ஒருவனை அப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நேற்று (27.08) மாலை 15 வயதுச் சிறுவன் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இதன் பின், 8 வயதுச் சிறுவன் வீடு சென்ற பின் தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த சிறுவன் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் வைத்தியசாலை பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து 15 வயதுச் சிறுவன் வவுனியா பொலிசாரால் இன்று (28.08) கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் சிறுவனை நீதிமன்றில் முற்படுத்த வவுனியா பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

திருமண நிகழ்வில் திடீரென உயிரிழந்த இளம் யுவதி!!

ஹொரணையில்..

ஹொரணை – பதுவிட்ட பிரதேசம், மெகொட உட கெவத்த பிரதேசத்தில் திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து வந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துக்கொண்டு நண்பர்களுடன் நடனமாடியுள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து யுவதி மேலும் இரு யுவதிகளுடன் அங்கிருந்து திடீரென வெளியேறி சுகயீனமடைந்த நிலையில் ஹொரணை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது யுவதியை பரிசோதித்த அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவரை ஹொரணை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஹொரணை வைத்தியசாலைக்கு யுவதியை அழைத்துச் சென்றதையடுத்து, பரிசோதனையின் போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுர பல்கலைக்கழக தமிழ் மாணவன் திடீரென உயிரிழப்பு: கதறியழும் தாய்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பைச் சேர்ந்த அநுராதபுரம் – ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (27.078.2023) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் எமது செய்திப் பிரிவு அநுராதபுரம் – மிகிந்தலை பொலிஸாரை தொடர்பு கொண்டு வினவிய போது, சம்பவத்தில் மட்டக்களப்பு – கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் திலக்சன் (21 வயது) என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன் அவர் அநுராதபுரம் – ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் பயின்று வருபவர் எனவும் குறிப்பிட்டனர். குறித்த மாணவன் நீச்சல் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உயிரிழந்த மாணவனின் தாயார் தெரிவிக்கையில், நண்பர்களுடன் நீராடச் சென்றபோதே மகன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. என்னுடைய மகன் புலமைப்பரிசில் மூலம் பல்கலைக்கழகம் சென்றார்.அவர் கால்பந்து விளையாட்டிலும் இம்முறை தெரிவானார்.

மட்டக்களப்பு புனிதமிக்கல் கல்லூரியின் கல்வி பயின்று ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார். படிப்பே குறிக்கோளாகக் கொண்டு இருந்த எனது மகனின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், முகாமைத்துவ விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் குழுவொன்று நீச்சல் தடாகத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.

அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சஞ்சீவனி கினிகத்தர தெரிவித்துள்ளார்.